surrender leave salary சார்ந்த FAQ

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


EL%20SURRENDER

1/10/25 முதல் surrender leave salary பெறலாம்...


எல்லோருக்கும் அதிகபட்சமாக 15 நாட்கள் மட்டுமே...


இதற்கு முன் surrender date எதுவோ அதே தேதியில் தான் தற்போதும்...


April 2020 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு

அவர்களின் ஆண்டு ஊதிய உயர்வு தேதியில் surrender செய்யலாம்...


இவை தான் அரசாணை 35 இல் சொல்லப்பட்டவை..


இந்த அரசாணையை தவிர வேறு எந்த ஒரு தெளிவுரையும் இதுவரை வரவில்லை 🙏


இது சார்ந்த FAQ😊


 *1) கடைசியாக 30 நாட்கள் (2019 க்கு முன்) surrender எனில் தற்போதும் 30 நாட்கள் surrender செய்யலாமா* ?


இல்லை

எல்லோருக்கும் தற்போது 15 நாட்கள் மட்டுமே மட்டுமே


 *2) April 2020 க்கு முன் நியமனம்... ஆனால் இதுவரை சரண்டர் செய்யவில்லை எனில் தற்போது surrender செய்யலாமா?* 


இது சார்ந்த குறிப்பு அரசாணையில் இல்லை..


ஆனால் April 2020 க்கு பிறகு நியமனம் பெற்று இதுவரை surrender செய்யாதவர்கள் அவர்களின் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு தேதியில் என இருப்பதால் 


April 2020 முன் நியமனம் ஆனால் இதுவரை இல்லை இது தான் முதல் முறையாக எனில்

ஆண்டு ஊதிய உயர்வு தேதியில் என்று தான் பொருள் கொள்ளப்படுகிறது...


இதுவரை ஒரு முறை கூட சரண்டர் செய்யாதவர்கள் April 2020 முன் நியமனம் எனில் தற்போது 1/10 இல் விண்ணப்பிக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது ( அரசாணையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதால் இந்த இரு வேறு கருத்துகள்) 




 3) *முந்தைய பணியிடத்தில் surrender செய்து உள்ளேன் தற்போது பதவி உயர்வு பெற்ற‌ பதவியில் surrender செய்ய வில்லை..*


*பதவி உயர்வு பெற்ற பணியின் ஆண்டு ஊதிய உயர்வு தேதியில் சரண்டர் செய்யலாமா?*



இல்லை...


ஏற்கனவே எந்த பதவியில் இருந்து இருந்தாலும்... அதே Surrender date இல் தற்போதும் surrender செய்ய இயலும்..



4) *தற்போது due date இல் சரண்டர் செய்யாமல் அடுத்த ஆண்டு due date இல் 30 நாட்கள் சரண்டர் செய்யலாமா?


தற்போதைய அரசாணையில் 30 நாட்கள் சரண்டர் என எந்த ஒரு குறிப்பும் இல்லை...


5) *SLS தொகைக்கு IT கணக்கீடு உண்டா?*


ஆமாம் பணியில் உள்ள போது பெறப்படும் SLS க்கு வருமான வரி கணக்கீடு உண்டு


பணி ஓய்வின் போது TSLS ( EL max 240 days) க்கு வருமான வரி விலக்கு உண்டு


6) *தற்போது std deduction 75000 கழித்த பிறகு எனது ஆண்டு வருமானம் 12,00,000 உள்ளே... வருமான வரி வராது...*

*சரண்டர் செய்தால் 12,01,000 என வருகிறது....* *ஆயிரம் ரூபாய் கூடுதலாக பெற்றதால் 60000+ tax கட்ட வேண்டுமா?*

*WhatsApp இல் சில நாட்களுக்கு முன் வந்த பதிவு SLS தொகையை விட tax தொகை அதிகமாக கட்ட வேண்டும்???*


இது வருமான வரி சார்ந்த சரியான புரிதல் இன்மை...


87A tax rebate, Marginal relief இந்த ஆண்டும் (2025-26) உள்ளது...


75k கழித்தது போக வருமானம் 12,01,000 எனில் கட்ட வேண்டிய வரி 1000+cess மட்டுமே..


 *சரண்டர் செய்ய தகுதி காண் பருவம் முடித்து இருக்க வேண்டுமா?*




இல்லை.


SLS க்கும் சரண்டருக்கும் தொடர்பு இல்லை...


ஓர் ஆண்டு பணியில் நிறைவு செய்தவர்கள்


EL இருப்பில் 15 நாட்கள் உள்ளவர்கள் சரண்டர் செய்யலாம்




8) *தகுதி காண் பருவம் முடிக்காமல் surrender செய்தால் தகுதி காண் பருவம் தள்ளிப் போகுமா?*




தகுதி காண் பருவம் தள்ளிப் போகாது...




தகுதி காண் பருவத்தில் EL விடுப்பு எடுத்தால் மட்டுமே தள்ளிப் போகும்... 




9) *தற்போது பணியாளர் surrender செய்ய என்ன செய்ய வேண்டும்?*




களஞ்சியம் ஆப் வழியாக விண்ணப்பிக்கவும்...




10) *களஞ்சியம் ஆப் எனது மொபைல் போனில் வேலை செய்ய வில்லை?*




Android version check


Software update




11) *களஞ்சியம் ஆப் மட்டும் தான் ஒரே வழியா?*




இல்லை...


Mobile/system/ laptop


Web login வழியாக தங்களின் employee self service மூலம் surrender க்கு விண்ணப்பிக்கலாம்.




Mobile app


Web portal இரண்டு வழிகளில் விண்ணப்பிக்க இயலும் 




12) *நான் களஞ்சியம் ஆப்/ Web portal வழியாக* *விண்ணப்பிக்க இயலவில்லை*


*அல்லது*


*விண்ணப்பித்தேன் ஆனால் எங்கள் அலுவலகத்தில் வரவில்லை என்கிறார்கள்?*



Approval group mapping சரியாக உள்ளதா என்று பாருங்கள்...


கட்டாயம் ஊதிய உயர்வு உடன் சரண்டர் கிடைக்கும்... 

( சரியாக வருகிறது) 


20) *விடுப்பில்/விடுமுறை தினத்தில் due date இருந்தால் surrender செய்யலாமா?*


ஆம் CL/EL/RL/ ML / maternity leave/ holiday இல் due date வந்தாலும் surrender செய்யலாம்.

Foreign service ( அயல் பணியில் இருக்கும் போதும்) surrender செய்யலாம்... 


Selvakumar k


1) EOL without MC ( loss of pay)

2) UEL on PA ( half pay leave) 

3) Suspension period 

இந்த மூன்றில் இருக்கும் போது மட்டுமே surrender செய்ய இயலாது .


21) *surrender pay இல் என்ன என்ன eligible?*


Pay

DA

HRA

CCA

Hill allowance

PP (2000) 


(IFHRMS kalanjium இல் 2000 PP க்கு 1000 SLS எடுத்துக் கொண்டு தான் வருகிறது) ✅


( நேற்று SLS Bill கருவூலத்தில் (PP 1000 உடன் சேர்ந்து)  சமர்ப்பித்த போது அவர்கள்,  PP eligible ஆ என சந்தேகம் எழுப்புகிறார்கள் ) 


22) *SLS surrender DA 58% வருமா?*


தமிழக அரசு 58% அரசாணை வெளியீடு செய்த பிறகு SLS DA 58% எடுத்துக் கொண்டு வரும் .. 

அதுவரை 55%...

(விரைவில் மாற்றம் வரும்) 


23) *individual proceedings ஆக வருகிறது.. SLS bills உம் தனித் தனியே தான் தயாரிக்க வேண்டுமா?*


இல்லை... Proceedings மட்டும் தனித் தனியே தான் வருகிறது...


ஆனால் ஒரு Bill group இல் நான்கு நபர்கள் எனில் அவர்களுக்கு மொத்தமாக ஒரே SLS Bill ஆக தயாரிக்க முடிகிறது..


24) *HM க்கு proceedings CEO/ DEO office தான் வழங்க வேண்டுமா?*


ஆம் high school HM/ 

HM incharge ஆக இருப்பவர்கள் DEO விடம்

HR SEC HM / HM incharge இல் இருப்பவர்கள் CEO விடம் தான் அனுமதி வாங்க வேண்டும்...

( Bill approval group mapping தனியே செய்ய வேண்டும்).


25) *ஒரு பணியாளர் kalanjium app, web portal வழியாக விண்ணப்பிக்க இயலவில்லை/ தெரியவில்லை அவருக்கு சரண்டர் போட இயலாதா?*


1) individual apply

2) web portal apply

Strongly recommended

But


தனிநபர் SLS க்கு எழுத்துப் பூர்வமாக விண்ணப்பிக்கும் போது 


Initiator I'd வழியாக உள்ளே சென்று SLS initiate செய்து Bill preparation செய்ய முடிகிறது..


தகவலுக்காக...

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தமிழ்நாடு காவல்துறை வெடிகுண்டு கண்டிறிதல் குழுவில் வேலை; 59 காலிப்பணியிடங்கள் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு காவல்துறையின் வெடிகுண்டு கண்டறித்தல் மற்றும் Alternate பிரிவுகளில் உள்ள ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமை காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு அக்டோபர் இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 59 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

பணியின் விவரங்கள்

பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்

ஆய்வாளர் (முன்னாள் சுபேதார்/ சுபேதார் மேஜர்) 2

உதவி ஆய்வாளர் (முன்னாள் நாயிப் சுபேதார்) 14

தலைமை காவலர் (முன்னாள் ஹவில்தார்/ நாயக்) 43

மொத்தம் 59

வயது வரம்பு

ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமை காவலர் ஆகிய பதவிகளுகு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 01.07.2025 தேதியின்படி, 50 வயதிற்குக் கீழ்முள்ளவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி

தமிழ்நாடு காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் பிரிவிற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்ச்சியை பெற்றிருக்க வேண்டும். மேலும், CME, புனே அல்லது NSG அல்லது BCASஆல் நடத்தப்படும் 6 வார BDD படிப்பில் குறைந்தபட்சம் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

இவைமட்டுமின்றி, ராணுவம் அல்லது துணை ராணுவப் படைகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி அனுபவம் மற்றும் இந்திய ராணுவத்தின் 261 அல்லது 262 CED பிரிவு அல்லது CME இன் EDD பிரிவு அல்லது NSG இன் BD பிரிவு அல்லது தேசிய வெடிகுண்டு தரவு மையம் - NBDC அல்லது விமான நிலையங்களில் BD பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் நல்ல திறன் மற்றும் நடைமுறை அனுபவம் மற்றும் களப் பொறியியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் BDD-யை பற்றி பயிற்சி அளிக்கும் திறன் மற்றும் மருத்துவ தகுதி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்

ஆய்வாளர் பதவிக்கு ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரை சம்பளம் வழங்கப்படும்.

உதவி ஆய்வாளர் பதவிக்கு ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரை சம்பளம் வழங்கப்படும்.

தலைமை காவலர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.20,600 முதல் ரூ.65,500 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

வெடிகுண்டு நிபுணர்களுக்கான பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்களின் விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தெரிவு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்து மற்றும் நடைமுறை தேர்வுகள் ஆகியவற்றுக்கான அழைப்பு விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு காவல்துறையில் வெடிகுண்டு நிபுணர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள் தங்களில் சுயவிவரங்கள் மற்றும் கல்வி சான்றிதழ்கள், டிஸ்சார்ஜ் புத்தகத்தின் தேவையான பக்கங்கள், ஓய்வூதிய ஆணை, BDD தொடர்பான படிப்பு/ அனுபவச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் நகல்களுடன் கூடுதல் காவல்துறை இயக்குநருக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் தபால் மூலம் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
கூடுதல் காவல்துறை இயக்குநர்,
செயலாக்கம், மருதம்,
எண். 17, போட் கிளப் சாலை,
ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 600 028.

முக்கிய நாட்கள்

விவரம்தேதிகள்
விண்ணப்பிக்க கடைசி நாள்31.10.2025
தேர்வு நடைமுறைபின்னர் அறிவிக்கப்படும்.

சுய விவரங்களுடன் அடங்கிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்னை அலுவலகத்தை அக்டோபர் இறுதிக்குள் சென்றடைய வேண்டும். இந்த பணி வாய்ப்பில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு பின்பற்றப்படும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மாவட்ட சட்ட சேவைகள் பிரிவில் அலுவலக உதவியாளர், சட்ட ஆலோசகர் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலா?

 கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவரா நீங்கள்? உங்களுக்கான வேலைவாய்ப்பு செய்தி இதோ.. மாவட்ட சட்ட சேவைகள் பிரிவில் கீழ் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு செயல்படுகிறது. இங்கு சட்ட ஆலோசகர் உட்பட அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அக்டோபர் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார். இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு நடத்தப்படுகிறது.

பணியின் விவரங்கள்

பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்

தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் 1

துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் 2

உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் 1

அலுவலக உதவியாளர்/ எழுத்தர் 1

மொத்தம் 5

தகுதிகள்

தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு குறைந்தபட்சம் குற்றவியல் சட்டத்தில் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 30 குற்ற வழக்குகளை கையாடு இருக்க வேண்டும். கணினி திறன் அவசியம்.

துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 20 குற்ற வழக்குகளில் வாதாடி இருக்க வேண்டும்.

உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு 3 ஆண்டுகள் வரை குற்ற வழக்குகள் கையாண்டதில் அனுபவம் தேவை. ஆய்வு மற்றும் வரைவு திறன் அவசியம்.

அலுவலக உதவியாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 40 w.p.m வேகத்தில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்ச கணினி திறன் அவசியம்.

சம்பள விவரம்

தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு மாதம் ரூ.70,000 சம்பளமாக வழங்கப்படும்.

துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு மாதம் ரூ.40 ஆயிரம் வழங்கப்படும்.

உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.

அலுவலக உதவியாளர் பதவிக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

கடலூர் மாவட்ட சட்ட சேவைகள் பிரிவில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து பணியிடங்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுவதால், தெரிவு செய்யப்படும் நபர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

கடலூரின் மாவட்ட நீதிமன்றத்தின் https://cuddalore.dcourts.gov.in/ என்ற இணையதளத்தில் இதற்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 2 புகைப்படம், கல்வித்தகுதி, அனுபவம் மற்றும் இதர ஆவணங்களின் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் தபால் வழியாகவோ அல்லது நேரடியாகவோ சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்படும் நிலையில், ஆர்வமுள்ளவர்கள் அக்டோபர் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நேர்காணல் நவம்பர் 8-ம் தேதி நடைபெறும். அறிவிப்பைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

அனுப்ப வேண்டிய முகவரி

தலைவர்/ தலைமை மாவட்ட நீதிபதி,

மாவட்ட சட்ட சேவைகள் (District Legal Services Authority),

மாவட்ட நீதிமன்ற வளாகம்,

கடலூர் - 607 001.

கடலூர் மாவட்ட சட்ட சேவைகள் பிரிவில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து பணியிடங்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுவதால், தெரிவு செய்யப்படும் நபர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


முக்கிய நாட்கள்

விவரம் தேதிகள்

விண்ணப்பிக்க கடைசி நாள் 25.10.2025

நேர்காணல் 08.11.2025 காலை 10 மணி

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு உடனே விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை அலுவலகத்தில் அறிந்துகொள்ளலாம்.

வங்கியில் தங்க நகை மதிப்பீட்டாளராக வேண்டுமா? பகுதி நேர பயிற்சி அளிக்கும் கூட்டுறவு மேலாண்மை நிலையம்

 தங்க நகை சார்ந்த வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. அதில் குறிப்பாக நகை மதிப்பீட்டாளர் பணி வாய்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பகுதி நேர பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள 10-ம் வகுப்பு தகுதி போதுமானது. ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறலாம்.

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

தங்க நகைகளின் தரம் கண்டறித்தல் திறன் மிக அவசியமான ஒன்றாக உள்ளது. இத்திறனை சார்ந்த பணி வாய்ப்புகளும அதிகளவில் உள்ளன. குறிப்பாக நகை வடிவமைப்பு, நகை கடைகள், வங்கிகள் ஆகியவற்றில் நகை மதிப்பீட்டாளர் பணி வாய்ப்புகள் உள்ளன. இதற்கான பயிற்சி பெறுபவர்கள் இப்பணி வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


இந்நிலையில், சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையம் , நகை மதிப்பீடு பகுதி நேர பயிற்சியை அளிக்க உள்ளது. இப்பயிற்சியில் தங்கத்தின் தரமறிய, தங்கத்தின் இன்றைய நவீன தொழில்நுட்பம், நகைக்கடன் வட்டி கணக்கிடுதல், KDM மற்றும் Hall Mark பற்றிய விவரங்கள் தெரிந்துகொள்ளலாம். மேலும் இப்பயிற்சிக்கான உபகரணங்கள் பயிற்சி நிலையத்தின் மூலமே பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும்.

சான்றிதழ் உண்டு

அக்டோபர் மாதம் 15-ம் தேதி முதல் இப்பயிற்சி தொடங்குகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சியை முழுமையாக முடித்து தேர்ச்சி பெறும் நபர்களுக்கு தமிழ்நாடு அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துகொள்ளலாம்.

வேலைவாய்ப்பு உண்டு

முன்னரே தெரிவித்தப்படி, பயிற்சி முடித்தவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தங்க நகை மதிப்பீட்டளராக பணிபுரிய வாய்ப்பு உள்ளது.

யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?

இப்பயிற்சியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண், பெண் என இருபாலரும் கலந்துகொள்ளலாம். வயது வரம்பு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி கட்டணமாக ரூ.4,550 வசூலிக்கப்படுகிறது. உபகரணங்கள் உட்பட வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் இதற்கான விண்ணப்பத்தை 22.09.2205 முதல் 14.10.2025 தேதி வரை சென்னையில் உள்ள சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பெற்றுகொள்ளலாம். விடுமுறை நாட்களில் வழங்கப்படாது. விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.

அலுவலக முகவரி

சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையம் ,

எண்.215, பிரகாசம் சாலை,

பிராட்வே, சென்னை - 1.

இப்பயிற்சி குறித்த மேலும் தகவல்களுக்கு அலுவலகத்திற்கு நேரிலோ சென்றோ அல்லது 044-25360041 மற்றும் 9444470013 என்ற எண்களின் மூலமாகவோ தொடர்புகொள்ளலாம். கூடுதல் திறன் வளர்க்க விரும்புகிறவர்கள் அல்லது வங்கிகளில் பணி வாய்ப்பைப் பெற விரும்புகிறவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாகும். நகை கடன் வட்டி, நவீன தொழில்நுட்ப நுணுக்கங்கள் ஆகியவற்றையும் இப்பயிற்சி மூலம் பெறுவதால், துறை ரீதியான வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.


தண்ணீரில் எரியும் அடுப்பு நடைமுறையில் சாத்தியமா? - தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விளக்கம்

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


தண்ணீரை மட்டும் பயன்படுத்தி அடுப்பு எரிவது சாத்தியமா என்பது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விளக்கம் அளித்துள்ளது. தண்ணீரை மூலப்பொருளாகக் கொண்டு எரியும் அடுப்பை திருப்பூர் தனியார் நிறுவனம் கண்டு பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தண்ணீரை மட்டும் மூலப்பொருளாகக் கொண்டு அடுப்பு எரிவது சாத்தியமா என்பது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விளக்கம் அளித்துள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முதுநிலை விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெட்ரோலுக்குப் பதிலாக ஹைட்ரஜனில் இயங்கும் கார், ரயில்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.


கிரையோஜெனிக் என்ஜின் ராக்கெட்டுகளில் திரவ ஹைட்ரஜன், திரவ ஆக்சிஜனை எரிபொருளாகப் பயன்படுத்தி வருகிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம். எனவே, ஹைட்ரஜன் ஒரு முக்கியமான எரிபொருள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்நிலையில், ‘ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆனால் கார்பன் அற்றது’ என்று பொருள்படும் ‘HONC’ என்ற அடுப்பு மூலம் தண்ணீரைப் பயன்படுத்தி அடுப்பை எரித்து சமையல் செய்ய முடியும் என்ற செய்தி தற்போது ஊடகங்களில் பரவி வருகிறது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் (UPS) இணைவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் (UPS) இணைவதற்கான கால அவகாசம் 30.11.2025 வரை நீட்டிப்பு 30.09.25....

IMG-20251001-WA0004

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 % உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 % உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

அகவிலைப்படி 55 % இல் இருந்து 58 % ஆக உயர்வு : அமைச்சரவை ஒப்புதல்



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

EL SURRENDER UPDATE - களஞ்சியம் மொபைல் ஆப் அல்லது Self Service Portal மூலம் சரண்டர் லீவ் (SLS) விண்ணப்பிப்பது எப்படி?

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

EL%20SURRENDER

 EL SURRENDER UPDATE


களஞ்சியம் மொபைல் ஆப் அல்லது Self Service Portal மூலம் சரண்டர் லீவ் (SLS) விண்ணப்பிப்பது குறித்து


அனைத்து பணியாளர்களும் அறிந்திருக்க வேண்டியது என்னவெனில், 01.10.2025 முதல் Earned Leave Surrender (சரண்டர் லீவ்) விண்ணப்பங்கள் களஞ்சியம் மொபைல் ஆப்பின் மூலமாகவும் (மேலும் Self Service Portal மூலமாகவும்) சமர்ப்பிக்கலாம். பணியாளர்கள் குறிப்பிட்ட கால எல்லைக்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


DDO-க்களுக்கு அறிவுறுத்தல்கள்:


அனைத்து பணியாளர்களின் விடுப்பு இருப்பு (Leave Balance) முறையாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளதைக் உறுதி செய்ய வேண்டும்.


2020 ஏப்ரல் மாதத்திற்கு முன் பணியாளர்கள் பெற்ற சரண்டர் லீவ் விவரங்களை, தேவையான இடங்களில், eSR Part I-ல் பதிவு செய்ய வேண்டும்.


ஒவ்வொரு விண்ணப்பமும் தகுந்த அங்கீகரிப்பு அதிகாரிகளிடம் தாமதமின்றி செல்ல Approval Group-ஐ சரியாக Map செய்ய வேண்டும்.


பணியாளர் ஆன்லைனில் சமர்ப்பிக்கும் விண்ணப்பத்தின் அடிப்படையில் அங்கீகார நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

சிஸ்டம் உருவாக்கும் அனுமதி ஆணையை (Sanction Order) பயன்படுத்தி பில் தயாரித்து, அதன்பின் சரண்டர் லீவ் தொகையை விடுவிக்க வேண்டும்.

அனைவரும் மேற்கண்ட வழிமுறைகளை கடைப்பிடித்து, சரண்டர் லீவ் விண்ணப்பங்களை தடையின்றி செயல்படுத்த வேண்டுகிறோம்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Earned Leave Surrender Application - Covering Letter + New Format

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


EL%20SURRENDER

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு புதிய படிவம் - முகப்புக் கடிதம் + விண்ணப்பம்

EL Surrender New Application Format

👇👇👇👇

Download here

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு EL Surrender - அக்டோபர் மாதத்தில் செய்பவர்கள் KALANJIYAM APP-ல் Request செய்த பிறகு Request எண்ணை  ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்பத்தில் குறிப்பிடவும்...

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

School Calendar - October 2025

 அக்டோபர் --2️⃣0️⃣2️⃣5️⃣


*06-10-2025 -- திங்கள் -- இரண்டாம் பருவம் பள்ளி திறப்பு.


*07-10-2025 முதல் 10-10 -2025 வரை  1-5 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்து பயிற்சி.


*20-10-2025 -- திங்கள் -- தீபாவளி -- அரசு விடுமுறை.


*21-10-2025 -- செவ்வாய் -- தீபாவளி நோன்பு -- RL


     Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)



     Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )