Search

பருவமழையில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 5 அற்புதமான மூலிகைகள்...

 சீரகம், ஓமம், ஏலக்காய், திரிபாலா போன்றவற்றை தினமும் உங்களது உணவு முறையில் சேர்த்துக்கொள்ளும் போது குடல் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.

நம்முடைய குடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். ஒருவேளை குடலில் பாதிப்பு ஏற்பட்டால் உடலில் உள்ள பிற உறுப்புகளுக்கும் பாதிப்பை சந்திக்க நேரிடும். குறிப்பாக வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், பித்தம், அடிக்கடி வாந்தியும் ஏற்படும். இதனால் உடல் சோர்வடைவதோடு மன அழுத்தமும் நமக்கு உண்டாகிறது. குறிப்பாக பருவமழைக்காலங்களில் பாக்டீரியாக்களின் தொற்று அதிகளவில் ஏற்படுவதால் உடல் நலப்பிரச்சனைகள் ஏற்படக்கூடும். 

எனவே இந்நாள்களில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கு உதவும் ஆயுர்வேத மூலிகைகள் என்ன? எப்படி பயன்படுத்த வேண்டும் என அறிந்து கொள்வோம்.

பருவகாலங்களில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஆயுர்வேத மூலிகைகள்:

உடலில் செரிமானம் நன்றாக சீராக இருப்பதற்கு குடல் ஆரோக்கியத்தோடு இருப்பது அவசியம். நமது குடல் சீராக இருந்தால் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி முதல் மன ஆரோக்கியம் வரை பல்வேறு வியாதிகளுக்கு நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். 

குடல் ஆரோக்கியமில்லா நிலையை சந்திக்கும் போது தான், அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு, தோல் எரிச்சல், அதிக தாகம், காய்ச்சல், உயர் இரத்த அழுத்தம், மூட்டுவலி, வறண்ட சருமம் மற்றும் பொதுவான உடல் வலி போன்றவை ஏற்படுகிறது. எனவே குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகளை தினமும் நாம் சாப்பிட வேண்டும்.

மஞ்சள் பூக்கள் கொண்ட மூலிகை, சிறந்த வாய் புத்துணர்ச்சியூட்டி, அமிலத்தன்மையை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை குறைக்கிறது மற்றும் குடல் அழற்சியைக் குறைக்கிறது.

சீரகம், ஏலக்காயை தினமும் தண்ணீரில் கலந்து அருந்தலாம் :

இரைப்பை பிரச்சனைகளால் ஏற்படும் வயிற்று வலியைப் போக்க ஓமம் உதவுகிறது. எனவே வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் ஓமம் சேர்த்து பருகுவது நல்ல தீர்வாக இருக்கும். மேலும் அசாஃபோடிடா பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளது. இது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது மற்றும் இரைப்பையில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது.

வயிறு அல்லது தொப்புளில் விளக்கெண்ணெய் தடவலாம்..

திரிபாலா பொடி- நமக்கு எவ்வித பிரச்சனையும் இல்லாமல் செரிமானம் நடைபெறுவதற்கு திரிபாலா மிகவும் உதவியாக உள்ளது. எனவே திரிபாலா பொடியை தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்னதாக சிறிதளவு சாப்பிடலாம். 

பொடியாக சாப்பிட பிடிக்கவில்லை என்றால், திரிபாலா பொடியை சுடு தண்ணீரில் கலந்து சாப்பிடலாம். பெரும்பாலான ஆயுர்வேத மருத்துவர்கள் செரிமான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இதனை பயன்படுத்துகின்றனர். இதோடு நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் போன்றவையும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உதவுகிறது.

மேலும் மஞ்சள், வால்மிளகு, அதிமதுர வேர், சிலிப்பெரி எர்ம் போன்றவற்றையும் நமது குடல் ஆரோக்கியத்திற்குப் பயன்படுத்தலாம் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்

உணவில் அதிக உப்பு சேர்ப்பவரா நீங்கள்..? உங்களுக்கு ஆயுள் குறைவு... ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!

 உணவில் அதிகளவு உப்பு சேர்ப்பதால் பெண்களுக்கு சுமார் ஒன்றரை ஆண்டுகளும், ஆண்களுக்கு இரண்டு ஆண்கள் என்ற அளவிற்கு அவர்களின் ஆயுள் குறைகிறது என சமீபத்திய ஆராய்ச்சி கூறுகிறது.

“உப்பில்லா பண்டம் குப்பையிலே“ என்ற பழமொழிக்கு ஏற்ப எவ்வளவு விதவிதமாக நாம் உணவுகளை சமைத்தாலும் சிறிதளவு உப்பு குறைவாகிவிட்டால் சுவையே இருக்காது. 

எத்தனை மசாலாக்கள் போன்றவற்றை சேர்ந்தாலும் சரியான அளவு உப்பு இல்லையென்றால் சொல்லவே தேவையில்லை, யாரும் சாப்பிடமார்கள். ஆனால் சுவைக்காக நாம் அதிகளவு உப்பு சேர்த்து சாப்பிடும் போது நம்முடைய ஆயுள் குறைகிறது என அதிர்ச்சியளிக்கும் ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளது.

சுமார் ஐந்து லட்சம் நடுத்த வயது மக்களை வைத்து அமெரிக்காவில் நியூ ஆர்லியன்ஸில் உள்ள துலேன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் அன்ட் டிராபிக் மெடிசின் பேராசிரியர் லு குய் என்பவர் ஆராய்ச்சி நடத்தினார்.

இதில் தேவைக்கு அதிகமாக உப்பு உடலில் சேரும் போது, அதை ஜீரணிக்க நமது சிறுநீரகங்கள் கூடுதலாக வேலை செய்ய வேண்டும். இதனால் பல நேரங்களில் சிறுநீரக செயலிழப்பு உள்பட ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். 

முகம், கை மற்றும் கால்களில் வீக்கம் அதிகரிப்பதற்கும் உப்பு காரணமாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றனர். மேலும் உப்பை அதிகளவில் உணவில் சேர்க்கும் போது, பெண்களுக்கு சுமார் ஒன்றரை ஆண்டுகளும், ஆண்களுக்கு இரண்டு ஆண்கள் என்ற அளவிற்கு அவர்களின் ஆயுள் குறைகிறது என அதிர்ச்சி தரும் வகையில் ஆய்வு முடிவுகள் அமைந்துள்ளது.

மேலும் உப்பைப்பயன்படுத்தாதவர்களுடன் , உப்பு அதிகளவில் சாப்பிடுபவர்களை ஒப்பிடும் போது இவர்கள் சீக்கிரம் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 28 சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. தொடர்ந்து உப்பைச் சேர்க்கும் ஆண்களும் பெண்களும் அவர்களது 50 வயதிற்குப் பிறகு உடலில் பல்வேறு உடல் நலப்பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

உணவில் உப்பு எவ்வளவு சேர்க்க வேண்டும்?

உப்பு அதிகளவில் சாப்பிடுவதால் ஆயுள் காலம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கையில், சரியாக அளவு உப்பை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். 

இது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில், ஒரு நாளைக்கு சராசரியாக 2400 மில்லிகிராம் உப்பை சேர்க்க வேண்டும். அதே சமயம் ஒருவருக்கு குறைவான அளவு உப்பு இருக்கும் பட்சத்தில் கூடுதலாக 1.5 மில்லிகிராம் சாப்பிடலாம். சாரசரியாக ஒரு நாளைக்கு 5 கிராமிற்கு மேல் உப்பை சேர்த்துக்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. 

மேலும் ஒரு நாளைக்கு அரை தேக்கரண்டிக்கு மேல் உப்பு சேர்க்கக்கூடாது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கருவாடு, உப்பு கருவாடு, ஊறுகாய் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்..

சமீப காலங்களில் நடுத்தர வயதினர் பெரும்பாலும் சிறுநீரக செயலிழப்பினால் பலியான சம்பவங்கள் நடக்கிறது. இதற்காக பலமுறை டயாலிசிஸ் செய்து பார்த்தாலும் பலனில்லாமல் போய்கிறது. இறுதியில் உயிரிழக்கும் அபாயமும் நேரிடுகிறது. எனவே “அளவான உப்பே ஆரோக்கியம்“ என்பதை மனதில் வைத்து இனி உணவில் உப்பு சேர்த்து சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் உள்ளோம்….

Click here to join whatsapp group for daily health tip

தினமும் காலை எண்ணெயில் வாய் கொப்பளித்தால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா?

 உலகின் மிகப் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேத மருத்துவத்தில் பெரும்பாலான நோய்களுக்கு சிகிச்சை முறைகள் உள்ளன. 

பருவ நிலைக்கு ஏற்றவாறு உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, மூலிகைகள் என்று சில எளிய பயிற்சிகள் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள ஆயுர்வேத பரிந்துரைகள் உள்ளன. 

அந்த வகையில் ஓரல் ஹெல்து என்று சொல்லப்படும் பற்கள் மற்றும் வாய் ஆரோக்கியத்துக்கான மிகச் சிறந்த பயிற்சியாக எண்ணெய் கொப்பளித்தல் என்ற முறை பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.

ஆயில் புல்லிங் என்று சொன்னால் பலரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். பல் வலி, சொத்தை, ஈறுகளில் வலி, வீக்கம் உள்ளிட்ட பல்வேறு பற்கள் மற்றும் ஓரல் பிரச்சனைகளுக்கு ஆயில் புல்லிங் மிகச் சிறந்த நிவாரணமாக மற்றும் தடுப்பு முறையாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் தினமும் எண்ணெய் கொப்பளிப்பது வாயில் பாக்டீரியா சேரவிடாமல் தடுத்து, நச்சுக்களை நீக்கி, உடலுக்கு தேவையான என்சைம்களையும் வெளியிடுகிறது. 

ஆயில் புல்லிங் வாய் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது மற்றும் எப்படி ஆயில் புல்லிங் வேண்டும் என்பதை பற்றிய முழு விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.

ஆயில் புல்லிங் என்றால் என்ன.?

எண்ணெய் கொப்பளித்தல் என்பது பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் பின்பற்றப்பட்டு வரும் ஆயுர்வேத சிகிச்சை முறையாகும். 30 க்கும் மேற்பட்ட உடலியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆயில் புல்லிங் நிவாரணமாக இருக்கிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது. அது மட்டுமல்லாமல் மேலே கூறியது போல வாய் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சனைகளையும் தடுக்கிறது. ஆயுர்வேதத்தில் எண்ணெய் கொப்புளித்தல் கவாலா-கண்டுஷா என்று கூறப்படுகிறது.

கவாலா என்றால் கொப்புளித்தல் மற்றும் கண்டுஷா என்றால் வாய்க்குள் திரவத்தை வைத்துக் கொள்வது என்று அர்த்தமாகும். சிறிய அளவு எண்ணெயை வாய்க்குள் ஊற்றி, வாய் முழுவதும் படுமாறு சில நிமிடங்கள் வரை கொப்புளிக்க வேண்டும்.

ஆயில் புல்லிங் எப்போது மற்றும் எப்படி செய்ய வேண்டும்.?

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஆயில் புல்லிங் செய்ய வேண்டும்.

ஒன்று அல்லது இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெயை 15 – 20 நிமிடங்கள் வரை வாய்க்குள் வைத்து கொப்பளிக்க வேண்டும்.

எண்ணெய்யின் தன்மை மாறி, வெள்ளை நிறத்தில் லேசான நுரையோடு, பிசுபிசுப்பின்றி மாறும் வரை வாய்க்குள் கொப்பளிக்க வேண்டும். அதன் பிறகு அதை முழுவதுமாக வெளியே துப்பிவிட்டு, வாய்க்குள் தண்ணீர் விட்டு மீண்டும் கொப்பளித்து, சுத்தம் செய்ய வேண்டும்.

இதைச் செய்வதற்கு 10 – 20 நிமிடங்கள் வரை தேவைப்படுவதால் அவசரப்படாமல் நிதானமாக இதற்கென்று கால அவகாசத்தை ஒதுக்கிவிட்டு ஆயில் புல்லிங் செய்யலாம்.

ஆயில் புல்லிங் செய்த பிறகு வாயை நன்றாக தண்ணீர் விட்டு அலசுவது மிக மிக முக்கியம். அதன் பிறகு சில நிமிடங்கள் கழித்து நீங்கள் சூடான பானங்கள் அருந்தலாம் அல்லது உணவு சாப்பிடலாம்.

ஆயில் புல்லிங் செய்த பிறகு உடனே பல் துலக்க வேண்டாம். ஆயில் புல்லிங் செய்த எண்ணைய்யை முழுங்கக் கூடாது, அதை நீங்கள் வெளியே துப்பிவிட வேண்டும்.

ஆயில் புல்லிங் செய்வதற்கு தேங்காய் எண்ணெய் நல்லெண்ணெய் மற்றும் நெய் ஆகிய மூன்றையும் பயன்படுத்தலாம்.

ஆயில் புல்லிங் பற்றிய மற்ற விவரங்கள்

எண்ணையைப் பயன்படுத்தி ஆயில் புல்லிங் செய்யும் பொழுது உங்களுக்கு செல் டேமேஜ் நீங்கும். அதுமட்டுமல்லாமல் பற்களில் மற்றும் வாயில் இருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நுண் கிருமிகள் அழிக்கப்படும். 

ஓரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் முழுவதுமாக நீங்கும். அது மட்டுமல்லாமல் இந்த எண்ணெய் பற்கள் மற்றும் ஈறுகளில் கோட்டிங் செய்வதால் பிளேக் உருவாக்கம் தவிர்க்கப்படும். வாய் துர்நாற்றத்திற்கு மிகச் சிறந்த தீர்வாக அமையும். மேலும் இதழ்கள் உலர்ந்து போவது, தொண்டை வலி, வறட்சி ஆகியவற்றுக்கும் நிவாரணமாக அமையும்.

தொடக்கத்தில் ஆயில் புல்லிங் செய்யும் பொழுது குமட்டுவது போல உணர்வு தோன்றும். ஆனால் நான்கைந்து நாட்கள் மட்டும் தான் இவ்வாறு இருக்கும். அதன் பிறகு பழகி விடும். ஆயில் புல்லிங் ஓரல் ஹெல்த்க்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது. 

முகத்திற்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, சருமத்தை இறுக்கமாக்கி இளமையான தோற்றத்தைத் தருகிறது. ஆயில் புல்லிங் ஓரல் ஹெல்த் சம்பந்தமான பிரச்சினைகளை தடுப்பதற்கு உதவுகிறதே தவிர இது நோய்க்கு சிகிச்சை கிடையாது.

Click here to join whatsapp group for daily health tip

Assistant Manager in Grade ‘A’ -National Bank for Agriculture and Rural Development- Apply Now

Assistant Manager in Grade ‘A’ -National Bank for Agriculture and Rural Development- Apply Now 



Important Dates / Timelines

Online Application Registration and Payment of Online Fees/Intimation Charges :18 July 2022 to 07 August 2022

Phase I (Preliminary) – Online Examination: 07 September 2022

(Tentatively)@

@ NABARD reserves the right to make change in the dates of the examinations

Qualification Details:

Agricultural Engineering: 

Bachelor’s Degree in Agriculture Engineering with 60% marks (ST/PWBD applicants – 55%) in aggregate OR Post graduate degree in Agriculture Engineering with a minimum of 55% marks (ST/PWBD applicants – 50%) in aggregate from a recognised University / Institution.

Agriculture Marketing/Agri.Business Management: 
Bachelor’s Degree in Agriculture Marketing/ Agriculture Business Management with 60% marks (SC/PWBD applicants – 55%) in aggregate or Two years full time Post Graduate Degree/ Post Graduate Diploma/MBA in Agriculture Marketing/ Agriculture Business Management with a minimum of 55% marks (SC/PWBD applicants – 50%) in aggregate from a recognised University / Institution

Environmental Engineering/Sciences
Bachelor’s degree with Environmental Science / Environmental Engineering with 60% marks (SC/PWBD applicants - 55%) in aggregate or Post graduate degree in Environmental Engineering or Environmental Science with 55% marks (SC/PWBD applicants - 50%) in aggregate from a recognized University/Institution

Fisheries
Bachelor’s degree in Fisheries Science from a recognized University/Institution with 60% marks (ST/PWBD applicants 55%) in aggregate OR Post graduate degree in Fisheries with 55% marks (ST/PWBD applicants 50%) in aggregate.
Forestry
Bachelor’s degree in Forestry from a recognized University/Institution with 60% marks (PWBD applicants - 55%) in aggregate OR Post graduate degree in Forestry with 55% marks(PWBD applicants - 50%) in aggregate.

Land Development-Soil Science:
Bachelor’s Degree in Agriculture / Agriculture (Soil Science/Agronomy) with 60% marks (SC/PWBD applicants - 55%) in aggregate OR Post Graduate degree in Agriculture / Agriculture (Soil Science/Agronomy) with a minimum of 55% marks (SC/PWBD applicants - 50%) in aggregate from a recognised University / Institution.

Plantation/Horticulture
Bachelor’s Degree in Horticulture from any recognized University with a minimum of 60% marks (SC/PWBD applicants - 55%) in aggregate OR Post Graduate degree in Horticulture with a minimum of 55% marks (SC/PWBD applicants - 50%) in aggregate.

  • Candidates can apply only ON-LINE on NABARD website www.nabard.org between 18 July 2022 and 07 August 2022.





MANAGE-Samunnati Agri Startup Awards 2022 last date to apply 31st July

 



Competition Eligibility

  1. Participating entities must be 2- to 7-year-old Agri-Tech/Ag-Aligned start-ups.
  2. Participating entities permit MANAGE and Samunnati to use its name, URL, photos and videos for promotional purposes
  3. Submission of false information subjects the concerned entity to elimination
  4. Participating entities will not be offered any travel allowance
  5. Jury’s decision is final and binding
  • Important Dates:
  1. Application open : 1st June 2022
  2. Application Close: 31st July 2022
  3. Award Event : 26th August 2022

Click here to Register 

More details check Official Website

காலையில் பச்ச தண்ணியில் குளித்தால் இவ்வளவு நன்மைகளா?

 இரவு தூங்கி காலை எழுந்ததும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கம் இருக்கும், சிலருக்கு காலையில் சூடாக காபி குடிப்பது, சிலருக்கு உடற்பயிற்சி செய்வது, சிலருக்கு ஏதேனும் ஆரோக்கிய பானம் அருந்துவது என்று எதையாவது ஒன்றை முதல் வேலையாக வைத்திருப்பார்கள்.  

ஆனால் இவை அனைத்தையும் விட உங்களது உடலை மிகவும் சுறுசுறுப்பாகவும், உடலுக்கு நல்லதையும் தருவது என்னவென்றால் காலி நேரத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது தான்.  காலையிலேயே குளிர்ந்த நீரில் குளிப்பது என்பது பெரும்பாலான நபர்களுக்கு பிடிக்காத ஒன்று, குளிர்ந்த நீரில் குளிப்பது நமக்கு உடல் சுறுசுறுப்பு ஏற்படுகிறது, நமது மெட்டபாலிசத்தை தூண்டுகிறது மற்றும் மன அமைதியையும் தருகிறது.

காலை வேளையில் சூடாக காபி அருந்துவது எப்படி உங்களை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது என்று நினைக்கிறீர்களோ அதேபோல தான் காலை நேர குளியலும், குளிர்ந்த நீரில் நீராடுவது உங்களது மூளையை விழிப்பாக இருக்க செய்கிறது.  

குறிப்பாக குளிர் காலங்களில் காலை நேரத்தில் கொஞ்சம் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதை தான் பலரும் விரும்புவார்கள், அந்த சமயத்தில் யாரும் குளிர்ந்த நீரில் குளிப்பதை விரும்பமாட்டார்கள். 

 ஆனால் இது உங்கள் உடம்பில் நோயெதிர்ப்பு சக்தையை உண்டு பண்ணுகிறது, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.


மேலும் குளிர்ந்த நீரில் குளிப்பதால் காலையில் நீங்கள் முழு ஆற்றலுடன் சுறுசுறுப்பாக செயல்படலாம், உடற்பயிற்சிகளிலிருந்து விரைவாக மீட்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடலை சுத்திகரிக்கவும் உதவுகிறது.  இதுதவிர, மனநிலை மற்றும் மன உறுதியை மேம்படுத்த, நாள்பட்ட வலியைக் குறைக்கவும், மன அழுத்தத்தின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.

அறிகுறிகளின்றி தாக்கும் ‘சைலன்ட் மாரடைப்பு’ - ஒரு அலர்ட் பார்வை

 சமீப காலமாக எவ்வித அறிகுறிகளும் இன்றித் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுப் பலரும் சட்டென்று மரணித்துவிடுகிறார்கள். இப்படித் தாக்குவது அமைதியான மாரடைப்பு (Silent heart attack) எனப்படுகிறது.

மாரடைப்புடன் தொடர்புடைய அறிகுறிகளோ லேசான அறிகுறிகளோகூட இதில் இருக்காது. எனவே, மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதன் மூலமாகவே அமைதியான மாரடைப்பைத் தடுக்க முடியும்.

முக்கிய ஆபத்துக் காரணிகள்

சர்க்கரை, உப்பு, கொழுப்பு சேர்ந்த உணவை அதிகமாகச் சாப்பிடுவது இதயத்தைப் பாதிக்கும் நோய்களைப் பெருமளவில் ஏற்படுத்துகிறது.

நோய்த் தடுப்புக்கான ஆலோசனை பெறுவதில் சுணக்கம்

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு ஆகியவை இதயத்திற்கு ஆபத்தானவை. இருப்பினும், பெரும்பாலான நோயாளிகள் இந்த நிலைமை முற்றும்வரை சிகிச்சை எடுக்காமல் விட்டுவிடுகிறார்கள்.

உடல் உழைப்பு அற்ற வாழ்க்கை முறை

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆய்வின்படி, இந்தியர்கள் ஒரு நாளைக்கு 4,297 காலடிகள் மட்டுமே நடக்கிறார்கள். இதய ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மிதமான நடைப்பயிற்சியைவிட இரண்டு மடங்கு அதிகமான நடைப்பயிற்சியை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மன அழுத்தம்

அழற்சி ஹார்மோன்களை வெளியிடுவதன் மூலம் மன அழுத்தம் இதயத்தை நேரடியாகப் பாதிக்கலாம். மேலும், மன அழுத்தம் மோசமான உணவு, வாழ்க்கை முறை ஆகிய தேர்வுகளுக்கு வழிவகுத்து, இதயத்தை மறைமுகமாகவும் பாதிக்கலாம்.

கோல்டன் ஹவர்

கோல்டன் ஹவர் என்றும் அழைக்கப்படும் மாரடைப்புக்குப் பிறகான முதல் 60 நிமிடங்கள் முக்கியமானவை. அந்த 60 நிமிடத்துக்குள் ரத்த விநியோகத்தை விரைவில் மீட்டெடுக்க வேண்டும். அது இதயத் தசையைக் காப்பாற்றவும் மரணத்தைத் தடுக்கவும் உதவும்.

புகை பிடித்தல்

அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக அறிக்கையின்படி, புகைப்பிடித்தல் தொடர்பான 5 இறப்புகளில் ஒன்று இதய நோயால் ஏற்படுகிறது. 16 முதல் 64 வயதுக்கு உட்பட்ட 25 கோடி புகைப்பிடிப்பவர்களுடன் உலகளவில் இரண்டாவது இடத்தில் இந்தியா இருப்பதாகச் சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

மாரடைப்பு வந்தால் என்னசெய்ய வேண்டும்?

# தீவிர சோர்வு, நெஞ்சு வலி போன்ற எச்சரிக்கை அறிகுறிகளைப் புறக்கணிக்கக் கூடாது. மூச்சுத் திணறல், தலைச்சுற்றல் அல்லது கைகளில் வலி ஏற்பட்டாலும் அவற்றை லேசாக எடுத்துக்கொள்ளக் கூடாது

# இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை மீட்டெடுக்கவும் தசை சேதத்தைக் குறைக்கவும் கூடிய விரைவில் மருத்துவமனைக்குச் செல்வது முக்கியம். வாகனத்தை ஓட்ட வேண்டாம். ஆம்புலன்ஸை அழைப்பது நல்லது அல்லது வாகனத்தை ஓட்டுவதற்கு அருகிலுள்ள ஒருவரை அழைக்க வேண்டும்.

# ரத்த உறைவைத் தடுக்க, ஆஸ்பிரின் மாத்திரையை (Ecosprin, Sprin, Aspro, Eprin, Delisprin என்ற பிராண்ட் பெயர்களிலும் கிடைக்கும்) எடுத்துக்கொள்ள வேண்டும். நெஞ்சு வலி இருந்தால், வலி நிவாரணிகளைக் கொடுக்கலாம். மருத்துவரை நேரடியாகத் தொடர்புகொள்ள முடிந்தால், நிலைமையை நேரடியாக விளக்கித் தகுந்த ஆலோசனையை அவரிடம் பெறலாம்.

# சில நிமிடங்களுக்கு மேல் வலி நீடித்தால், மருத்துவரிடம் விரைந்து செல்லுங்கள். தொடர்ச்சியான வலி, ஆரோக்கியமான அறிகுறி அல்ல. ஒருவேளை அது இதய நோய் இல்லை என்றால், வேறு ஏதோ ஓர் ஆபத்தை உணர்த்தும் அறிகுறி என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

அமைதியான மாரடைப்பைப் பொறுத்தவரை முன்னெச்சரிக்கையும் அது பற்றிய விழிப்புணர்வும் முக்கியமானது. அந்த வகையில் கவனமாக இருந்தால் அமைதியான மாரடைப்பைத் தடுக்கலாம்.

இந்த செயல்கள் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும்...

 

உடலில் உள்ள உள் உறுப்புகளுள் மூளையின் செயல்பாடு முக்கியமானது. மூளை ஆரோக்கியமான இருந்தால்தான் சிந்தனை திறன் மேம்படும். சுறுசுறுப்பாக செயல்படவும் முடியும். 

இரவு நேர பார்ட்டிகளில் கலந்து கொண்டு தாமதமாக தூங்குவது, கடும் வேலைப்பளு, துரித உணவுகளை சாப்பிடுவது போன்ற பழக்கங்கள் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். புகை பிடிக்கும் பழக்கமும் மூளைக்கு பங்கம் விளைவிக்கும். புகைப்பழக்கத்திற்கு அடிமையாகும்போது கொழுப்பின் அளவு அதிகரிக்கும். ரத்தத்தில் கெட்ட கொழுப்பு கலந்து மூளையின் செயல்பாட்டுக்கு அச்சுறுத்தலாக மாறும்.

மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு நேரும்போது ரத்தம் உறைந்து பக்கவாத பாதிப்பு உருவாகிவிடும். அதிகமாக சர்க்கரையை பயன்படுத்துவதும் மூளைக்கு தீங்கு விளைவிக்கும். 

ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இல்லாவிட்டால் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு நேர்ந்து மூளையையும் பாதிக்கும். மன அழுத்தம் ஏற்படுவதற்கும் வழிவகுத்துவிடும். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும் மூளையின் செயல்பாடுகளுக்கு இடையூறை ஏற்படுத்தும். 

தமனியின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டு இறுதியில் மூளைக்கு ஆபத்து நேரும். அதிகமாக சாப்பிடுவதால் உடல்பருமன் போன்ற மேலும் பல உடல்நல பாதிப்புகளும் உண்டாகும். நீண்ட நேரம் தொடர்ச்சியாக வேலை பார்ப்பதும் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். 

அதன் மூலம் அறிவாற்றல் குறையும் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சிலர் கெட்டியான போர்வையால் தலையை மூடிக்கொண்டு தூங்குவார்கள். அப்படி தூங்கும்போது சுவாசத்தில் கலக்கும் ஆக்சிஜனுக்கு இடையூறு ஏற்பட்டு மூளையின் இயக்கம் குறையும்.அது பல்வேறு விதமான உடல்நல பிரச்சினைகளுக்கு காரணமாகும்.

MANAGE VACANCY FOR THE POST OF MANAGE CONSULTANT - 29th July, 2022

 MANAGE VACANCY FOR THE POST OF MANAGE CONSULTANT



 MANAGE  invites eligible candidates for Walk in Interview for “MANAGE Consultant” on contract basis for a period of SIX MONTHS at 11.00 a.m. on 29th July, 2022 in MANAGE, Hyderabad. 

Eligible candidates may attend interview with relevant documents. Please visit MANAGE website: www.manage.gov.in for details.






Agricultural Current Affairs From Jan 2022 to June 2022

 

Agricultural Current Affairs From Jan 2022 to June 2022



Click here to download pdf file 

ICAR AIEEA 2022: NTA Begins Registration Process For UG, PG & PhD Courses

 "National Testing Agency (NTA) has been entrusted with the responsibility of conducting the ICAR Entrance Examinations [AIEEA (UG), AIEEA (PG), & AICE-JRF/SRF(Ph.D)]-2022 for admission to the Undergraduate, Post Graduate, and Doctoral Degree Programs of the Indian Council of Agricultural Research (lCAR) for the academic session 2022-23."


ICAR AIEEA Application Form 2022: The National Testing Agency (NTA) has started the registration process for the Indian Council of Agricultural Research (ICAR) Entrance Examinations-2022. Interested candidates can apply online through the Official website, icar.nta.nic.in.

According to the official announcement the last date to fill out the ICAR 2022 application form is August 19, 2022. "National Testing Agency (NTA) has been entrusted with the responsibility of conducting the ICAR Entrance Examinations [AIEEA (UG), AIEEA (PG), & AICE-JRF/SRF(Ph.D)]-2022 for admission to the Undergraduate, Post Graduate, and Doctoral Degree Programs of the Indian Council of Agricultural Research (lCAR) for the academic session 2022-23." For More Details Read the Official Notification.

ICAR AIEEA 2022: Important Dates

  • Submission of Online Application Form through Official Website: 19 July to 19 August 2022

  • Last Date of Pay Exam Fee through Credit/Debit Card/Net Banking/UPI: 19 August 2022

  • Correction in Details of Application Form through Official website only*: 21 August to 23 August 2022

  • Exam Date: Will be announced later on the NTA website 

Mode of Exam: Computer Based Test (CBT Mode)

Paper Language

English and Hindi for AIEEA-(UG)

English only for AIEEA (PG) and AICE JRF/SRF (Ph.D.)

Time Limit

150 minutes for AIEEA (UG)

120 minutes for AIEEA (PG) AICE JRF/SRF (Ph.D.)

How to Apply for ICAR AIEEA 2022?

  • Visit the official website - https://icar.nta.nic.in/

  • Click the registration link on the webpage that matches your course.

  • Then click on the Registration link for ICAR AIEEA (UG) - 2022 page for undergraduate courses.

  • Register by filling in the necessary information.

  • Login again using the application number and password generated by the system.

  • Complete the AIEEA application.

  • Upload the required scanned documents.

    • Fill out the application and pay the fee.

    • Download the ICAR AIEEA application form and take a hard copy after for your future records.

    Note: Candidates can contact the NTA Help Desk Number 011-40759000/011-6922770 or send an email to icar@nta.ac.in for any queries or clarifications.

TSPSC Recruitment 2022: Apply for Food Safety Officer Post, Salary Up to Rs. 1,15,270/-

Telangana State Public Service Commission (TSPSC ), in its latest notification has announced several vacancies for the position of Food Safety Officer. 

Telangana State Public Service Commission (TSPSC) has invited online applications for the position of Food Safety Officer at the Telangana Institute of Preventive Medicine Public Health Laboratories & Food (Health) Administration. Eligible individuals can apply for the positions on the official website beginning July 29.

The deadline for submitting online applications is August 26 at 5:00 PM. The hall ticket will be available seven days before the examination. The examination (objective kind) will most likely take place in November.

Vacancy Details

Name of the Post- Food Safety Officer In the Institute of Preventive Medicine Public Health Laboratories & Food (Health) Administration

Pay Scale- Rs. 42,300- 1,15,270/-

Required Educational Qualification- 

  • A degree in Food Technology Dairy Technology Biotechnology Oil Technology Agricultural Science Veterinary Sciences or Bio-Chemistry Microbiology or Master’s Degree in Chemistry or Degree in Medicine from a recognized University. 

  • Any other equivalent / recognized qualification notified by the Central Government.

Age Limit-The candidates should possess a minimum of 18 years & Maximum of 44 years. 

  • Minimum Age (18 years): An Applicant should not be born after 01/07/2004.

  • Maximum Age (44 years): An applicant should not be born before 02/07/1978.

Fee: 

  • Application Processing Fee: Each applicant must pay Rs. 200/- (Rupees Two Hundred Only) towards Online Application Processing Fee. 

  • Examination Fee: The applicants have to pay RS. 80/- (Rupees Eighty Only) towards Examination Fee. 

However, 

  1. a) All unemployees are exempted from payment of examination fee, and 

  2. b) All Employees of any Government (Central / State / PSUs / Corporations / Other Government sectors) have to pay the prescribed examination fee.

Required Documentation

  • Aadhar Card /Voter ID / Pass Port / Driving License / Service ID Cards with (Photograph issued by Central/State/PSU/Public Limited Companies) / Passbook with (photograph by Bank / Post Office) / PAN Card. Educational Qualifications i.e., SSC, Intermediate, Degree, Post Graduation, etc., 

  • Study (Bonafide) / Residence Certificate (1st to 7th Class period). 

  • Community Certificate (SC/ST/BC), Non-Creamy Layer Certificate in case of BCs issued by the competent authority of Telangana Government.

  • Income certificate for the Financial Year prior to the year of application issued by the competent authority of the Telangana Government for claiming EWS reservation. 

  • Certificates claiming Sports & PH reservation, and age relaxation for Ex-Servicemen. 

  • Read the official notification to know more.

Indian Institute of Spices Research Receives ‘Sardar Patel Outstanding ICAR Institution Award’

 ICAR-Indian Institute of Spices Research in Kozhikode has been awarded the ‘Sardar Patel Outstanding ICAR Institution Award’ for the year 2021. The award was presented to C. K. Thankamani, Director of the Institute, by Narendra Singh Tomar, Union Minister of Agriculture and Farmers Welfare in New Delhi.



This award was given based on the institute's performance over the last five years. It consists of a Rs10 lakh cash award, a citation, and a plaque.

This award is given to institutes based on several criteria, including significant output/outcome from research activities, the number, and quality of research publications, technologies licensed/commercialized, infrastructure developed, and capacity-building efforts. This is the third time that the IISR has received this honour.

"The award is a timely recognition for the institute's hard work and dedicated efforts in developing several cutting-edge technologies for advancing spice farming and addressing the real challenges faced by the spice farming community," Thankamani said.

Bindu Joseph, a young Kozhikode farmer, was awarded the Pandit Deendayal Upadhyay Antyodaya Krishi Puruskar. The award honours the contributions of marginal, small, and landless farmers to the development of integrated and sustainable agricultural farming models.

About ICAR- Indian Institute of Spices Research

The Indian Institute of Spices Research (IISR), Kozhikode (Calicut), is a major Institute devoted to spice research and is a constituent body of the Indian Council of Agricultural Research (ICAR). It began as a Regional Station of the Central Plantation Crops Research Institute (CPCRI), Kasaragod, engaged in spice research in 1976.

In 1986, the former Regional Station of CPCRI in Kozhikode and the Cardamom Research Centre in Appangala, Karnataka merged to form the National Research Centre for Spices, with headquarters in Kozhikode, Kerala. Recognizing the significance of spice research in India, the Research Centre was renamed Indian Institute of Spices Research on July 1, 1995.

கழுத்து வலி பாடாய்ப்படுத்தும் போது..

 நன்றாக தூங்கி, அடுத்த நாளை தொடங்க ஆவலுடன் படுக்கையில் இருந்து எழும்போது வில்லன் போன்று தோன்றி பாடாய்ப்படுத்துகிறது கழுத்து வலி. அது அன்றைய முழுபொழுதையும் அவஸ்தையாக்கிவிடும். கழுத்து வலி வரும், போகும் என்றாலும் அதை சாதாரண விஷயமாக நினைத்து தள்ளிவிடவும் முடியாது.



 செய்யும் வேலையின் பாதிப்பு, காயங்கள், தசை-எலும்பின் ஆரோக்கிய குறைபாடு, முதுகெலும்பு டிஸ்க் பிரச்சினைகள், எலும்பு தேய்மானம் போன்ற பல்வேறு காரணங்களால் கழுத்து வலி ஏற்படுகிறது. வாழ்வியல் முறை மற்றும் சிலவிதமான உடற்பயிற்சிகளால் ஓரளவு வரை கழுத்து வலியை கட்டுப்படுத்தலாம்.


உட்கார்ந்த நிலையிலே அதிக நேரம் செய்யக்கூடிய வேலையாக இருந்தால் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒருமுறையும் இருக்கையில் இருந்து எழுந்து சிறிது தூரம் நடந்து செல்லுங்கள்.

 கழுத்தை லேசாக அசைத்து கழுத்து தசைகளை இலகுவாக்குங்கள். எப்போதும் நிமிர்ந்த நிலையில் இருக்க பழகிக்கொள்ளுங்கள். நிமிர்ந்த நிலையில் இருக்க துணைபுரியும் குஷன் அல்லது தலையணையை அதற்காக பயன்படுத்துங்கள். 

கம்ப்யூட்டரில் வேலைபார்க்கும்போது கண்களுக்கு நேராக ஸ்கிரீன் வரும்விதத்தில் மானிட்டரை அமைத்திருங்கள். கம்ப்யூட்டரை அதிக நேரம் பயன்படுத்தினால், இடை இடையே கண்களுக்கும், கழுத்திற்கும் லேசான பயிற்சி கொடுங்கள்.



தூங்கும்போது உயரம் குறைந்த தலையணையை பயன்படுத்துங்கள். அதிக நேரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்தால், தலையை ஒருபுறமாக சாய்த்துவைக்கும் நிலையை தவிர்த்திடுங்கள். படுத்துக்கொண்டு டெலிவிஷன் நிகழ்ச்சிகளை பார்க்காதீர்கள். 

பஸ்சிலோ இதர வாகனங்களிலோ நீண்ட நேரம் பயணிக்கும்போது `நெக் காலர்' பயன்படுத்துங்கள். வேலை பார்க்கும் நேரங்களில் ஒவ்வொரு மணி நேரத்தை கடக்கும்போதும் கழுத்தை நான்கு முறை வட்டமாக சுற்றுங்கள். 

தலையை குனிந்து தாடை நெஞ்சில்படும் விதத்தில் பத்து வினாடிகள் வையுங்கள். இடது பக்க காதை இடது தோளில் சாயுங்கள். 10 வினாடிகள் அப்படியே வைத்திருந்துவிட்டு, அதுபோல் வலது பக்க காதை வலது தோளில் சாய்த்து செய்யுங்கள்.


செல்போனில் பேசி முடித்ததும் தலையை வலது, இடது புறமாக சில தடவை திருப்புங்கள். தலையை மெதுவாக வட்டத்தில் சுற்றுங்கள்.

 வலியை கட்டுப்படுத்தும் வழிகள்: 

* கழுத்து வலிக்கும்போது அந்த இடத்தில் சுடுநீர் நிரப்பிய பேக்கைவைத்து ஒத்தடம் கொடுங்கள். வலி கட்டுப்படும்.

 * காட்டன் துணியை சுடுநீரில் முக்கிப் பிழிந்து கழுத்தை சுற்றி இலகுவாக கட்டிவைத்தாலும் வலி குறையும். 

* நேராக பார்த்தபடி தலையை மட்டும் முடிந்த அளவு பின்னோக்கி கொண்டு வாருங்கள். 

* தலையின் பின்னால் இரு கைகளையும் கட்டியபடி தாடை நெஞ்சில் படும் அளவுக்கு குனியுங்கள்.

 * முடிந்த அளவு தலையை உயர்த்தியும், பின்பு தாழ்த்தியும் பத்து முறை செய்யுங்கள். சில நேரங்களில் வேறு நோய்களின் அறிகுறியாகவும் கழுத்து வலி தோன்றும். அதனால் எலும்பு சிகிச்சை நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுவதும் நல்லது.


Click here to join whatsapp group for daily health tip


நாக்கின் நிறமும்... நோய் அறிகுறியும்..

 அறுசுவைகயான இனிப்பு, உப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு போன்ற சுவைகளை நாம் உணர்வதற்கும் நாக்கு பயன்படுகிறது. உண்ணும் உணவில் தன்மைக்கேற்ப நாக்கில் பாக்டீரியா, வைரஸ் ம்ற்றும் பூஞ்சை போன்ற தொற்று கிருமிகள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. இவற்றை தடுக்க நாக்கை எப்போதும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். 

ஆரோக்கியத்தை காட்டும் கண்ணாடியாக விளங்கும் நாக்கை வைத்தே உடல் பிரச்சனைகளை கண்டு பிடித்து விடலாம். நாக்கின் நிறமும்... நோய் அறிகுறியும்... 



* நாக்கு இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று அர்த்தமாகும்.



* அடர் சிவப்பு நிறத்தில் இருந்தால் தொற்று நோய் மற்றும் அலர்ஜி ஏற்பட்டுள்ளதை குறிக்கும். 

* சிவப்பு நிறத்தில் நாக்கு இருந்தால் இதயம் மற்றும் ரத்தம் சம்பந்தமான நோய்க்கான அறிகுறியாகும். இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி 12 குறைபாட்டின் காரணமாகவும் இவ்வாறு ஏற்படலாம். 

* நாக்கு நீல நிறத்தில் இருந்தால் சிறுநீரகத்தில் பாதிப்பு இருப்பதை உணர்த்தும். 

* மஞ்சள் நிற நாக்கு வயிறு அல்லது கல்லீரலில் பிரச்சனை, மஞ்சள் காமாலை நோய்க்கான அறிகுறிகளை உணர்த்துகிறது. 

* நாக்கு வெள்ளை நிறத்தில் காட்சியளித்தால் நோய்த்தொற்று இருப்பதை குறிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதையும் சுட்டிக்காட்டும்.

* சாம்பல் நிறத்தில் இருந்தால் செரிமானம் மற்றும் மூலநோய் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

 * நாக்கில் காப்பி நிறத்தில் பதிவு இருந்தால் நுரையீரல் பாதிப்பை குறிக்கும். 

* நாக்கில் ஆங்காங்கே வெள்ளை புள்ளிகள் இருந்தால் நாக்கின் உராய்வுத்தன்னை குறைவதையும், எரிச்சல் தன்மை இருந்தால பயன்படுத்தும் பற்பசை நாக்கில் அலர்ஜியை ஏற்படுத்துவதையும் உணர்த்தும். நாக்கி சுத்தமாக பராமரிக்க.. 

* காலை மாலை இருவேளையும் பற்களை சுத்தம் செய்வது போல் நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும். 

* வாரம் ஒருமுறை வேப்பங்குச்சியை பயன்படுத்தி பல் துலக்க வேண்டும். இது வாயில் உள்ள நுண்கிருமிகள், பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் உருவாகுவதை தடுக்கும் குணம் கொண்டது. 

* அதிக சூடான மற்றும் குளிர்ச்சியான உணவு சாப்பிடுவதை தவிர்க்கலாம். 

* சாப்பிட்டு முடித்தவுடன தண்ணீர் ஊற்றி, நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். 

* தினமும் நல்லெண்ணெய்யில் ஆயில் புல்லிங் செய்வது நல்ல பலனை தரும். 

* அவ்வப்போது இளம் சூடான நீரில் கல் உப்பு சேர்த்து வாயை கொப்பளிக்கலாம். 

* இவ்வழிமுறைகளை பின்பற்றினால் நாக்கின் ஆரோக்கியத்துடன் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.

தினமும் 30 நிமிடம் சைக்கிள் ஓட்டுவது உடலுக்கும் உலகுக்கும் நன்மை... எப்படி?

 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் குறைந்து ஒரு சைக்கிள் ஆவது இருக்கும். காலப்போக்கில் இரண்டு சக்கர மேட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லச் செல்ல வீட்டுக்கு இரண்டு மேட்டார் வாகனங்கள் என்ற நிலை உருவானது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் சைக்கிளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சென்னையில் அதிகாலையில் பலர் சைக்கிள் ஓட்டிச் செல்லும் காட்சியை காண முடிகிறது. வார இறுதி நாட்களில் குழுக்களாக இணைந்து இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலையில் சைக்கிள் ஓட்டிச் செல்கின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரம் கிடைக்கும்போது எல்லாம் இசிஆர் சாலைகளில் சைக்கிள் ரைடு செல்கிறார். இவ்வாறு நாடு முழுவதும் சைக்கிள் பயன்பாடு தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இவ்வாறு சைக்கிள் ஓட்டும் பழக்கம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த ஜூன் 3 உலக சைக்கிள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

பசுமை இல்ல வாயு: காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கையில் மிக முக்கியமானது பசுமை இல்ல வாயுக்களை குறைப்பது ஆகும். வரும் 2030-ஆம் ஆண்டுக்குள், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை பாதியாகக் குறைக்க வேண்டும் என்றும் ஐபிசிசி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகத்தில் வெளியாகும் கார்பனில் 24 சதவீத கார்பன், மேட்டார் வாகனங்களில் இயக்கத்தில் இருந்து வெளியிடப்படுகிறது. எனவே, இதற்கு மாற்றான போக்குவரத்து முறையை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்திர வாகனம் இல்லாத போக்குவரத்து: கார்பன் அளவை குறைக்க இயந்திர வாகனம் இல்லாத போக்குவரத்து திட்டங்களை அனைத்து நாடுகளும் செயல்படுத்தி வருகிறது. இதன்படி நகரங்களில் சைக்கிள் ஓட்டுவதற்கான வசதிகளை ஏற்படுத்துதல், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதைத் தவிர்த்து மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, பொது போக்குவரத்து பயன்பாட்டை ஊக்குவிப்பது உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுளளது.

உலக சைக்கிள் தினம்: ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 3-ம் தேதி உலக சைக்கிள் தினம் கொண்டாப்படுகிறது. உடல் நலம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனைத்திற்கும் ஏற்ற போக்குவரத்து முறை சைக்கிள் என்பதால் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க ஆண்டுதோறும் சைக்கிள் தினம் கொண்டாடப்படும் என்று 2018-ம் ஆண்டு ஐ.நா பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்று முதல் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

150 கிராம் கார்பன்: சைக்கிளில் இருந்து எந்த வாயுவும் வெளியாவது இல்லை. ஒருவர் தனது காரை விட்டு விட்டு சைக்கிளை பயன்படுத்துகிறார் என்றால், அவர் ஓரு கிலோ மீட்டருக்கு 150 கிராம் கார்பன் வெளியாவதை தடுத்துள்ளார். 7 கி.மீ சைக்கிள் ஓட்டினால் 1 கிலோ கார்பன் வெளியாதை தடுக்கிறார். எனவே, கார்பன் வெளியாதை தடுப்பதில் சைக்கிள் பயன்பாடு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

தொற்றா நோய்கள்: வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றம் காரணமாக மனிதர்கள் உடற்பயிற்சி செய்வது குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக இதய நோய்கள், சர்க்கரை நோய்களின் பாதிப்பு அதிகரித்து கொண்டே உள்ளது. எனவே, உலகம் முழுவதும் உடற்பயிற்சி அவசியத்தை உணர்த்த உலக சுகாதார நிறுவனம் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. 2030-ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் சைக்கிளிங் உள்ளிட்ட உடல்பயிற்சிகளை அதிகரிப்பதற்கான செயல் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, நீங்கள் தினசரி 30 நிமிடம் சைக்கிள் ஓட்டினால் வாரத்திற்கு 1,000 கலோரிகளை எரித்து உடல் நலத்துடனும், 1 கிலோ கார்பனை குறைத்து சுற்றுச்சூழல் நலமாக இருக்க உதவுவோம்.