Search

உங்களுக்கு செரிமான பிரச்சனை இருந்தால் கணைய புற்றுநோய் பாதிப்பு இருக்கலாம் : உடனே செய்ய வேண்டியது என்ன?

 இன்றைய வாழ்க்கை முறையில் பலவித நோய்கள் நம்மை பாதிக்கின்றன. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது நாம் பின்பற்றும் உணவு முறை என்று ஆய்வுகள் சொல்கின்றன. இதனால் பல நேரங்களில் நமக்கு செரிமான கோளாறுகள் ஏற்படுகிறது. இதை நாம் சாதாரண ஒன்றாக கருதிவிடுகிறோம்.



ஆனால், இது உங்களின் கணையத்தில் ஏற்பட்ட பெரும் பாதிப்பாக கூட இருக்கலாம். கணையம் என்பது வயிற்றில் உள்ள ஒரு முக்கிய உறுப்பு ஆகும். இது வயிற்றின் கீழ் பகுதிக்கு பின்னால் உள்ளது. இது செரிமான செயல்முறைக்கு உதவும் நொதிகளை வெளியிடுகிறது மற்றும் ரத்த சர்க்கரையை நிர்வகிக்க தேவையான ஹார்மோன்களை இது உற்பத்தி செய்கிறது.

இந்த உறுப்பில் தான் செரிமான பாதிப்புகளின் அறிகுறியாக கணைய புற்றுநோய் ஏற்படுகிறது. இந்த வகை புற்றுநோயின் அபாயங்கள் பல்வேறு காரணிகளால் ஏற்படகிறது. வயது, புகைபிடித்தல், அதிக எடை, கணைய புற்றுநோயின் குடும்ப வரலாறு மற்றும் சர்க்கரை நோய் போன்ற பல காரணிகளால் கணைய புற்றுநோய்க்கான வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும் என்பதற்கான சான்றுகள் உள்ளன.

கணைய புற்றுநோய் அறிகுறிகள் பொதுவாக ஆரம்ப கட்டங்களில் ஏற்படாது, ஆனால் புற்றுநோய் செல்கள் வளரும் போது இதற்கான அறிகுறிகள் தென்படும். எனவே உங்களுக்கு ஏதேனும் புதிய அறிகுறிகள் இருந்தால் மருத்துவரைப் பார்ப்பது அவசியம். கணைய புற்றுநோயால் ஏற்படக்கூடிய அஜீரணத்தின் சில அறிகுறிகள் உள்ளன. அஜீரணம் என்பது பலருக்கு பொதுவான பிரச்சனையாகும், பெரும்பாலானவர்களுக்கு இது புற்றுநோயின் அறிகுறி அல்ல.

இருப்பினும், இது நீண்ட காலமாக தொடர்ந்து இருந்தால் அல்லது மருந்துகளை எடுத்துக்கொண்டாலும் சரியாகவில்லை என்றால், கணைய புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். எனவே நீங்கள் உங்கள் மருத்துவரை அணுக வேண்டும். மேலும் அஜீரணத்தால் நெஞ்செரிச்சல் ஏற்பட கூடும். இது உங்கள் மார்பில் வலி மற்றும் எரியும் உணர்வை தரும். அத்துடன் இது உங்கள் வாயில் கசப்பான, வித்தியாசமான சுவையையும் உண்டாகும். கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஜீரணம், பசியின்மை மற்றும் குமட்டல் ஆகியவை பொதுவானவை.

இந்த புற்றுநோயானது உங்கள் உடலின் உணவை ஜீரணிக்க மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறனை பாதிக்கும் போது இந்த அறிகுறிகள் ஏற்படும். அத்துடன் செரிமான செயல்முறைகளை மெதுவாக்கும் போது இந்த அறிகுறிகள் ஏற்படலாம். அஜீரண கோளாறுகளை தவிர, வலியும் கணைய புற்றுநோயின் பொதுவான அறிகுறியாக உள்ளது. கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 பேரில் 7 பேர் வலியை அனுபவிப்பதால் தங்கள் மருத்துவர்களிடம் செல்வதாக புற்றுநோய் ஆராய்ச்சிகள் கூறுகிறது.

இந்த வலி வயிற்றில் தொடங்கி முதுகிலும் பரவலாம். மேலும் நீங்கள் படுக்கும்போது இந்த வலி மோசமாகிவிடும், நீங்கள் முன்னோக்கி உட்காரும்போது நன்றாக உணரலாம். உங்கள் உணவை சாப்பிட்ட பிறகும் இது மோசமடையலாம். கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு முதுகுவலி மட்டுமே ஏற்படும். இந்த வலி தொடர்ந்து இருக்கும் மற்றும் பெரும்பாலும் முதுகின் நடுவில் உணரப்படும்.

ஒருவேளை வலி இல்லை என்றால், கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு முதலில் மருத்துவர்களைப் பார்க்கச் செல்லும்போது மஞ்சள் காமாலை இருப்பதாக அறியலாம். பித்தத்தில் நிறைய மஞ்சள் நிறமிகள் இருப்பதால் சருமத்தை மஞ்சள் நிறமாக்கும். மேலும் கண்களின் நிறத்தின் மூலம் அறியலாம். கணைய புற்றுநோயின் வேறு சில அறிகுறிகளாக கருதப்படுபவை, மிகவும் சோர்வாக உணர்தல் அல்லது ஆற்றல் இல்லாமை போன்று உணர்வது ஆகும். மேலும், அதிக உடல் வெப்பநிலை, நடுக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல், மலத்தில் ஏற்படும் பிற மாற்றங்கள் ஆகியவையும் இதற்கான அறிகுறியாகும்.

Click here to join whatsapp group for daily health tip

கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பு குறித்து அதிகரிக்கும் வழிப்புணர்வு..

 கொரோனா வைரஸ் ஒருவரின் உடம்பிலிருந்து குறிப்பிட்ட காலத்துக்குள் விலகிவிட்டாலும் அது உடலில் நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இருதயம் மற்றும் நுரையீரல் பாதிப்புகள் அதிகமாக காணப்படுவதாக தொற்று நோய் நிபுணர் ஸ்பூர்த்தி கூறுகிறார்.

மாரடைப்பு, இருதய தசைகள் வலுவிழப்பது, நுரையீரல் தொற்று, நுரையீரல் ரத்த கட்டு, நுரையீரலுக்கு வெளியே காற்று அல்லது நீர் கோர்த்து நிற்பது உள்ளிட்டவை கொரோனாவுக்கு பின் ஏற்படும் பாதிப்புகள் ஆகும் என்கிறார்.

இவை சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகிவிடலாம் என்பதால் கொரோனாவுக்கு பின் உரிய மருத்துவ ஆலோசனைகள் பெறுவது அவசியம் என வலியுறுத்துகிறார்.

நுரையீரலில் உள்ள ஆல்வியோலே என்ற பலூன் போன்ற பகுதி தான் ஆக்சிஜன் நுரையீல் உள்ளே செல்ல வழி செய்கிறத கொரோனா நோயாளிகளில் இந்த பகுதி பாதிக்கப்பட்டு வடு போல் ஆகிவிடுறது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இது போன்ற கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க உரிய மருந்து கிடையாது.

எனவே தசைகளை வலுப்படுத்த சில பயிற்சிகள் செய்யலாம். நுரையீரலில் ரத்த கட்டு இருந்தால் அதை கரைக்க மருந்து கொடுக்கப்படும் என நுரையீரல் சிறப்பு மருத்துவர் சுரேஷ் கூறுகிறார்.

கொரோனா என்ற வைரஸ் நோயை எதிர்த்து உடலின் எதிர்ப்பு சக்தி போராடுகிறது. அது எதிர்த்து போராடும் போது உடலின் பிற உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அப்படி தான் மாரடைப்பு, மூளை பக்கவாதம், சிறுநீரக கோளாறு ஏற்படுகின்றன.

இதுவரை சர்வதேச அளவில் நுரையீரல் பாதிப்புகள் மட்டும் தான் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் பல பாதிப்புகள் நோயாளிகளிடம் காணப்படுகின்றன என நுரையீரல் சிறப்பு நிபுணர் ஜாக்கின் மோசஸ் கூறுகிறார்.

Click here to join whatsapp group for daily health tip

அஜீரண பிரச்சனையை ஓட விரட்ட புதினா இந்த வகையில் பயன்படுத்தவும்

 வயிற்றில் வலி ஏற்படுவதற்கான காரணம், வாயு, மலச்சிக்கல் தான் என பலர் நினைக்கிறார்கள். ஆனால் அஜீரணத்தின் காரணமாகவும் வயிற்று வலி  இருக்கலாம். சொல்ல போனால் ஆஜீரணம் பல வயிற்று பிரச்சனைகளையும், உடல் நல பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. 



அத்தகைய சூழ்நிலையில், இந்த சிக்கலை நீக்க புதினா உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அஜீரண பிரச்சனையை நீக்க புதினா இலைகள் சிறந்த மருந்தாக செயல்படும். இது தவிர, புதினா இலைகள் வயிற்றில் உள்ள வலியை நீக்கவும், அஜீரண பிரச்சனையை சமாளிக்கவும் புதினா உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புதினாவில் உள்ள சத்துக்கள் வயிற்றை பல பிரச்சனைகளில் இருந்து காக்கும்.

அஜீரணத்தை போக்க புதினாவை எப்படி பயன்படுத்துவது என்பது தான் இப்போதைய கேள்வி. எனவே இன்று அஜீரணத்திற்கு புதினாவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இன்று இந்த கட்டுரையின் மூலம்  அறிந்து கொள்ளலாம்.


அஜீரணத்தை போக்கும் புதினா நீர் தயாரிக்கும் வழிகள்

1. முதலில் நீங்கள் அடுப்பில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, தண்ணீரைக் கொதித்த பிறகு புதினா இலைகளை அதில் போடவும். இப்போது 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து, தண்ணீரை வடிகட்டி, எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும்

2. மற்றொரு வழி, 6 முதல் 7 இலைகளைக் கொடுத்து, அவற்றைக் கழுவி நன்கு நசுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். இப்போது இலைகளை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும். இப்படி செய்வதன் மூலமும் அஜீரண பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

3. மூன்றாவது வழி, புதினா இலைகளை நன்கு கழுவி உலர்த்தி, அதில் பொடி செய்து கொள்ளவும். இப்போது அந்த பொடியை தொடர்ந்து பயன்படுத்துங்கள். அதனை அப்படியே சாப்பிடலாம். அல்லது வெதுவெதுப்பான  நீரில் கலந்து சாப்பிடலாம் இவ்வாறு செய்வதன் மூலம் அஜீரண பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
Click here to join whatsapp group for daily health tip 

பாத வெடிப்பை சரிசெய்ய உதவும் மருத்துவ குறிப்புகள் !!

 தொடர்ந்து பராமரிப்பு செய்தால் பாதத்தில் வெடிப்பின்றி அழகாய் கவனித்துக் கொள்ள முடியும்.

















பாத வெடிப்பு உள்ளவர்கள் வெறும் கால்களில் நடப்பதால், பாதத்தில் பிளவு அதிகமாகி வலியை தரும். அதனை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் தொடர்ந்து பராமரிப்பு செய்தால் பாதத்தில் வெடிப்பின்றி அழகாய் கவனித்துக் கொள்ள முடியும்.

கையளவு வேப்பிலையை எடுத்து அதனுடன் சுண்ணாம்பு சிறிது சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். ஓய்வு நேரத்தில் சூடா நீரில் கால்களை 5 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் சுண்ணாம்பும் வேப்பிலையும் கலந்த பேஸ்ட்டை தடவவும். 20 நிமிடங்கள் கழித்து பாதத்தை ஸ்க்ரப் செய்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்தால் போதும். பாதம் மிருதுவாக வெடிப்பின்றி காணப்படும்.

நன்கு மசித்து வைத்த பப்பாளிப்பழத்தை குதிகால்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்து காய்ந்தவுடன் ஸ்க்ரப் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பிளவு ஏற்பட்ட பகுதியில் தோல்கள் ஒன்று சேர்ந்து புதிய தோல்கள் போல தோற்றமளிக்கும்.

தொடர்ந்து ஒருநாள் விட்டு ஒருநாள் கடுகு எண்ணெய்யை பாதங்களில் தேய்க்க வேண்டும். இது உங்கள் பாதங்களை மென்மையாக்கும். மேலும் மசித்த வெந்தய கீரையில் கடுகு எண்ணெய் கலந்து பாதங்களில் தேய்த்து வாருங்கள். வெடிப்பு மறைந்து பாதங்கள் மிளிரும்.

வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செஞ்சு, ஒரு சிட்டிகை தேன் சேர்த்து, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தாலும் பித்தவெடிப்பு சரியாகும். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.

Click here to join whatsapp group for daily health tip 

தமனிகளை அடைக்கும் இந்த 5 உணவுகளுக்கு NO சொல்வது சிறந்தது

 தமனிகளில் அடைப்பு அதிகரிக்கும்போது, ​​உடலில் பல கொடிய நோய்கள் தாக்கும் அபாயமும் அதிகரிக்கிறது. தமனிகளை அடைக்கும் அத்தகைய 5 உணவுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

இதயத்திலிருந்து மூளைக்கு இரத்தம் சரியாகச் செல்லவில்லை என்றால், அது பல பிரச்சனைகளை உண்டாக்கும். இதயம் மற்றும் மூளை தமனிகளில் அடைப்பு ஏற்படுவதால் அதிக ஆபத்து உள்ளது. உடல் உறுப்புகளில் இரத்த ஓட்டம் சரியாக நடக்கவில்லை என்றால், அது உயிருக்கு ஆபத்தானது.

பல நேரங்களில், தவறான உணவுப் பழக்கத்தால், தமனிகளில் கொழுப்பு குவியத் தொடங்குகிறது. அதிக கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம், மூளை பக்கவாதம், மாரடைப்பு முதல் மூளை நரம்புகள் வெடிப்பு வரை அதிக ஆபத்து உள்ளது. இரத்த ஓட்டம் குறைவது பல பிரச்சனைகளை உருவாக்குகிறது.


கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்

சில உணவுகள் மற்றும் பானங்கள் அதிக கொலஸ்ட்ராலை ஏற்படுத்தும். கொலஸ்ட்ரால் தமனிகளில் குவிந்து, கடினப்படுத்துவதன் மூலம் அவற்றை அடைக்கிறது.  ரத்த ஓட்டம் சீராக இருக்க  சரியான பாதையை பெறாதது தான் இதற்கு முக்கிய காரணம். இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, நாளொன்றுக்கு எந்தெந்த பொருட்கள் உங்கள் உடலில் ரத்த தமனிகளை அடைப்புன் ஏற்பட காரணமாகிறது எனலாம்.

தானியங்கள், ரொட்டி, பாஸ்தா மற்றும் பேஸ்ட்ரிகள் போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை நீங்கள் சாப்பிட்டால், இவை உங்கள் தினசரி உணவின் ஒரு பகுதியாக இருந்தால், தமனிகளில் அடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். இந்த விஷயங்கள் தமனிகளில் பிளேக் படிப்படியாக குவிவதற்கு காரணமாகின்றன. இவற்றை உட்கொள்வதால் உடல்நலக் கோளாறுகள் மட்டுமின்றி உடல் பருமன், சர்க்கரை நோய் போன்றவையும் ஏற்படும். அதே தயாரிப்புகளுக்கு பதிலாக ஆரோக்கியமான முழு தானிய பொருட்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.

இனிப்பான உணவுகள்

இனிப்பான உணவுகள் அதிகம் சாப்பிடுவதும் ஒரு அபாய மணிதான். இனிப்புகள், மிட்டாய், குளிர்பானங்கள், இனிப்பு பழச்சாறுகள் மற்றும் குக்கீஸ்கள் போன்ற இனிப்புகள் தமனி மற்றும் நரம்பு ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய எதிரி. அதற்கு பதிலாக, இயற்கை சர்க்கரை வெல்லம் போன்றவற்றை சாப்பிட முயற்சிக்கவும்.

முட்டை

ஒவ்வொரு ஞாயிறு அல்லது திங்கட்கிழமையும் சாப்பிட வேண்டும் என்ற முட்டையின் விதியைப் பின்பற்றினால், நீங்கள் கவனமாக இருப்பீர்கள். முட்டையை மிக அதிகமாக உண்பதால் தமனிகளில் அடைப்பு ஏற்படும். அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் தினமும் ஒரு முட்டை சாப்பிட பரிந்துரைக்கிறது. ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகளை சாப்பிடுவது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

நிறைவுற்ற கொழுப்பு

தமனிகளை அடைப்பதில் நிறைவுற்ற கொழுப்புதான் மிகப் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், அனைத்து நிறைவுற்ற கொழுப்புகளும் ஒரே மாதிரியானவை அல்ல. பால் பொருட்களை விட இறைச்சியிலிருந்து வரும் கொழுப்பு இதய நோய்க்கான அதிக ஆபத்த்தை ஏற்படுத்துகிறது. அதற்கு பதிலாக, நீங்கள் மெலிந்த இறைச்சிகள் மற்றும் குறைந்த கொழுப்பு பால் பொருட்கள் சாப்பிடலாம். எப்போதும் வெண்ணெய்க்குப் பதிலாக ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துங்கள்.

Click here to join whatsapp group for daily health tip 

தயிருடன் எந்த பொருட்களை சேர்த்து சாப்பிடுவது நல்லது...!!

 தயிருடன் எந்த பொருட்களை சேர்த்து சாப்பிடுவது நல்லது என தெரிந்துக்கொள்ளுங்கள்...



தயிர் மற்றும் தேன்: 

தயிருடன் தேன் சேர்த்து சாப்பிட்டால், வாய்ப்புண் சீக்கிரம் குணமாகும். ஏனெனில் இதில் ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள் ஏராளமான அளவில் உள்ளது.

தயிர் மற்றும் ஓமம்: 

தயிருடன் ஓமம் சேர்த்து சாப்பிடுவதன் மூலம், வாய் புண் மற்றும் பல் வலி குணமாகும்.

தயிர் மற்றும் கருப்பு உப்பு: 

இந்த கலவை உடலில் அமில அளவை சீராக பராமரிக்கவும், அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபடவும் உதவும். மேலும் இதில் பொட்டாசியம், மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளதால், இதய பிரச்சனைகள் தடுக்கப்படும்.

தயிர் மற்றும் சர்க்கரை: 

தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். மற்றும் இது சிறுநீரக பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.

தயிர் மற்றும் மிளகு: 

தயிருடன் மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட்டால், அதில் உள்ள புரோபயோடிக் பாக்டீரியாக்கள் மற்றும் பெப்ரைன் மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

தயிர் மற்றும் ஓட்ஸ்: 

ஓட்ஸை தயிர் சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய கால்சியம், புரோட்டீன் மற்றும் புரோபயோடிக்குகள் கிடைத்து, தசைகள் வலிமையடைய உதவும்.

தயிர் மற்றும் சீரகம்: 

தயிருடன் சீரகத்தை பொடி செய்து கலந்து சாப்பிட்டால், அது உடல் எடை குறைய உதவும்.


Click here to join whatsapp group for daily health tip 

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க இதுதான் முக்கிய காரணம்

 உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் எதிர்காலத்தில் சிக்கல் ஏற்படலாம். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்க்க, நீங்கள் முதலில் உங்கள் உணவு முறையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும், ஏனென்றால் சிலரின் மோசமான உணவூ பழக்கத்தின் காரணத்தால் அவர்களின் உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என்ன என்ற கேள்வியும் பலரது மனதில் உள்ளது. அதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு இவையே முக்கியக் காரணம்

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்

முதலில், நீங்கள் எந்த வகையான உணவுகளை எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை கவனிக்க வேண்டும், ஏனென்றால் நீங்கள் சாப்பிடும் உணவுகள் உங்கள் உடலில் அதே விளைவை ஏற்படுத்தும். கொழுப்பு நிறைந்த பொருட்களை அதிகம் சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இந்த விஷயங்களில் இருந்து விலகி இருந்தால் நல்லது. அதற்கு பதிலாக நீங்கள் பச்சைக் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் பலன் கிடைக்கும்.

உடல் பருமன்
உங்கள் எடை அதிகரிக்கும் போது, ​​உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த வழியில் நீங்கள் உடல் எடை அதிகரிக்காமல் பாதுகிக்கொள்ள வேண்டும். கெட்ட கொலஸ்ட்ராலால் பாதிக்கப்படாமல் இருக்க, நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.

மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல்
நீங்கள் மது அருந்துபவராகவும், புகைபிடிப்பவராகவும் இருந்தால் உங்கள் ஆரோக்கியத்துடன் நீங்கள் விளையாடுகிறீர்கள் என்றாக்கும், ஏனென்றால் இவை இரண்டும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய சூழ்நிலையில், இந்த இரண்டு விஷயங்களையும் நீங்கள் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவும் தொடர்ந்து அதிகரிக்கும்.

உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல்
தற்போதைய காலகட்டத்தின் பிஸியான வாழ்க்கை முறையால், மக்கள் உடற்பயிற்சி செய்வதற்கு போதுமான நேரம் கிடைப்பதில்லை, ஆனால் கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்றால், ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது ஒட்டுமொத்த உடற்தகுதியை பராமரிக்கவும் உதவும்.



Click here to join whatsapp group for daily health tip 

இந்த அறிகுறிகள் உள்ளதா... உடலை Detox செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது

 உடலின் உள் உறுப்புகள் தூய்மை என்பது உடலின் வெளிப்புறத் தூய்மையைப் போலவே முக்கியமானது. உடலில் சேரும் அழுக்குகள் பல கடுமையான பிரச்சனைகளை உண்டாக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்க, உடலில் சேரும் அழுக்குகளை, நச்சுக்களை சுத்தம் செய்வது அவசியம்.



துரித உணவுகள், போதிய தண்ணீர் குடிக்காமல் இருப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, சமச் சீரான உணவுகளை எடுத்துக் கொள்ளாதது போன்ற பல கெட்ட பழக்கங்கள் காரணமாக உடலில் நச்சுக்களும் அழுக்குகளும் சேருகின்றன. 

நமது உடலை ஏன்  டீடாக்ஸ்  செய்ய வேண்டும் அதாவது, நச்சுக்களை நீக்க வேண்டும், அல்லது எந்த நேரத்தில் நம் உடலை நச்சு நீக்குவது அவசியம் ஆகிறது, உங்கள் உடலில் அதிகப்படியான நச்சுப் பொருட்கள் இருந்தால், உங்கள் உடல் எந்த விதமான சமிக்ஞையை அளிக்கிறது ஆகியவை தொடர்பாக பலரது மனதில் சாந்தேகங்களும் கேள்விகளும் அடிக்கடி எழுகின்றன.

அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உடலை  டிடாக்ஸ் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை  கீழ்கண்ட அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வாய் மற்றும் உடல் துர்நாற்றம்

உங்கள் வாயிலிருந்து துர்நாற்றம் அல்லது உடல் வியர்வையில் துர்நாற்றம் இருந்தால், உங்கள் உடலில் அதிக அளவில் நச்சுக்கள் அல்லது அழுக்குகள் சேர்ந்து விட்டது என்பதற்கான முக்கிய அறிகுறியாகும். உங்கள் உடலில் நிறைய நச்சுப் பொருட்கள் சேரும்போது, ​​உங்கள் உடல் வியர்வையில் துர்நாற்றம் வீசப்படுகிறது. அதே நேரத்தில், உங்கள் சுவாசத்திலும் துர்நாற்றம் வீசும்.  இந்த பிரச்சனையை அடிக்கடி எதிர்கொண்டால், உங்கள் உடல் இப்போது நச்சுத்தன்மையை நீக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

வயிற்று வலி 

வாய்வு தொல்லை, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளால் பலர் அவதிப்படுகின்றனர்.  இது உங்கள் உடலுக்கு டீடாக்ஸ் தேவை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். ஏனெனில் குடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அழுக்கு மற்றும் நச்சுகள் உங்கள் செரிமானத்தை கெடுத்து வயிற்று பிரச்சனைகளை உண்டாக்கும். உங்களுக்கு வயிற்றில் உபாதைகள் ஏற்பட்டாலோ அல்லது அடிக்கடி செரிமான பிரச்சனைகளை எதிர்கொண்டாலோ, உங்கள் உடலை டீடாக்ஸ் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ஹார்மோன் சமநிலை பாதிப்பு

பெண்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகம் காணப்படுகிறது. உடலில் நச்சுப் பொருட்கள் அதிகரிக்கும் போது, ​​அது அவர்களின் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும். மேலும் மனநிலை மாற்றங்கள், எரிச்சல், வேலையில் ஆர்வமின்மை போன்ற பிரச்சனைகளை பெண்கள் சந்திக்க வேண்டியுள்ளது. உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலையை பராமரிக்க, ஒரு வலுவான வளர்சிதை மாற்றம் இருக்க வேண்டியதுமிகவும் முக்கியம். எனவே, உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலைக்கு, உடலை நச்சு நீக்குவது அவசியம்.

முகத்தில் முகப்பரு மற்றும் புள்ளிகள்

பெரும்பாலான சரும பிரச்சனைகளுக்கு உடலில் உள்ள அழுக்குகளே காரணம். உங்கள் இரத்தம்  தூய்மையாக இல்லை என்றால், தோல் வெடிப்பு, முகப்பரு, புள்ளிகள் மற்றும் பருக்கள் போன்ற பிரச்சனைகள்  ஏற்படுகின்றன. ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு காரணமாக, பல சரும பிரச்சனைகளைகளுக்கு காரணமாக உள்ளன. எனவே, உங்கள் உடலை டீடாக்ஸ் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை புரிந்து கொள்ளுங்கள்

Click here to join whatsapp group for daily health tip 

மஞ்சளில் மறைத்திருக்கும் இத்தனை நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

சரும நிறத்தை மெருகேற்றுவது முதல் கரும்புள்ளிகளை குறைப்பது வரை, பாக்டீரியா தொற்றுகளை கட்டுப்படுத்துவது, அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் வீட்டில் மேற்கொள்ளப்படும் பல வைத்தியங்களுக்கு முக்கிய மூலப்பொருளாக விளங்கும் மஞ்சளில் மறைந்திருக்கும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்...



மஞ்சள் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய மருத்துவ பயன்பாட்டில் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது மற்றும் பண்டைய நூல்களில், மஞ்சள் சருமத்தை அழகாக மாற்றவும், பல்வேறு நோய்களைக் குணப்படுத்தவும், காய்ச்சலை குறைக்கவும் பயன்படுகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற உயிர்வேதியியல் கலவை ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகவும் பயன்படுகிறது.

தோல் நன்மைகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள்:

மஞ்சளில் சருமத்திற்கு தேவையான பல நன்மைகள் மறைந்திருக்கின்றன, ஏனெனில் இது சருமத்தின் நிறத்தைப் பராமரிக்க உதவுகிறது. சருமத்தின் அமைப்பை மேம்படுத்துகிறது, கரும்புள்ளிகளை குறைக்கிறது. சூரியனின் புற ஊதாக்கதிர்களால் ஏற்படும் சரும பண்புகள் மற்றும் கொலாஜன் மாற்றங்களை சரி செய்ய உதவுகிறது. மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு குணங்கள், சருமத்தில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை சீராக்க உதவுகிறது. ஆனால் சில சமயங்களில் நேரடியாக மஞ்சளைப் பயன்படுத்துவது ஒவ்வாமையை ஏற்படுத்தும், எனவே நீங்கள் நேரடியாக முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் முன்கையில் ஒரு சோதனை பேட்ச் செய்வது நல்லது.


வீட்டு வைத்தியம்:

1. கரும்புள்ளிகளை நீக்க:

ஒரு தேக்கரண்டி பால் மற்றும் 1 தேக்கரண்டி அரிசி மாவுடன் ஒரு சிட்டிகை மஞ்சளை கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை காயவிட்டு, குளிர்ந்த நீரில் கழுவவும்.


2. வயதான தோற்றத்தை மறைக்க:

1) ஒரு சிட்டிகை மஞ்சளுடன் ஒரு டீஸ்பூன் நொறுக்கப்பட்ட முட்டை ஓடு தூள் (பயன்படுத்தப்பட்ட முட்டை ஓடுகளை நன்றாக கழுவி மிக்ஸி கிரைண்டரில் நன்றாகப் பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும்) மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் ஆகியவற்றைக் கலக்கவும். ரோஸ்ஷிப் எண்ணெயில் சில துளிகள் சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் பூசிய பிறகு, 10-15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். உங்கள் சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும், உறுதியாகவும், பளபளப்பாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

2) புளித்த தயிருடன் ஒரு சிட்டிகை மஞ்சளைக் கலந்து, சில துளிகள் எலுமிச்சை எண்ணெய் சேர்த்து, நன்றாக பேஸ்ட்டாக மாற்றிக்கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் பூசி 10 முதல் 15 நிமிடங்கள் வரை காய வைத்து, பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு கழுவவும்.


3. முகப்பருவை நீக்க:

ஒரு டீஸ்பூன் வேப்பம்பூ தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் முல்தானி மிட்டியுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து கொள்ளவும். சிறிதளவு ரோஸ் வாட்டர் மற்றும் சில துளிகள் தேயிலை மர எண்ணெயைச் சேர்த்து ஃபேஸ் பேக்கை தயார் செய்து கொள்ளுங்கள். இந்த கலவையை உங்கள் முகத்தில் அப்ளே செய்து, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இதனை தொடர்ந்து செய்தால் முகப்பருக்கள் மறைந்து மிருதுவான சருமம் கிடைப்பதை உணரலாம்.


4. தலைமுடி வறட்சி, பொடு பிரச்சனையை தீர்க்க:

ஒரு சுத்தமான ஸ்ப்ரே பாட்டிலில், தண்ணீர் சேர்த்து ஒரு தேக்கரண்டி இளஞ்சிவப்பு இமயமலை உப்பு மற்றும் சில சிட்டிகை மஞ்சளை கலக்கவும். இந்த கலவையை ஷாம்பு போடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன், தலைமுடி மீது ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். உங்கள் தலைமுடி பளபளப்பாக இருப்பதையும், பொடுகு செதில்கள் இல்லாமல் இருப்பதையும் நீங்களே கண்கூடாக பார்க்கலாம்.

5. இந்த அற்புதமான சமையலறை மூலப்பொருளின் பலன்களைப் பெற மஞ்சள் எண்ணெய் மற்றும் கோல்டன் டர்மரிக் லாட்டி போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.


பெற்றோர், குழந்தைகளிடையே தகவல் தொடர்பு அவசியம்

பல பெற்றோர் குழந்தைகள் 100 சதவீதம் தங்கள் பேச்சைக் கேட்க வேண்டும், என்று எதிர்பார்க்கின்றனர். இதைத் தவிர்க்க வேண்டும். பெற்றோர் குழந்தைகளிடம் பேசும் நேரத்தில், குழந்தைகளுக்கும் பேசும் வாய்ப்பை அளிக்க வேண்டும். இது குடும்பத்தின் தகவல் தொடர்பை அதிகப்படுத்துவதற்கான சிறந்த வழி. 

பரபரப்பாக சுழலும் வாழ்க்கையில், குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்காக பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டியது கட்டாயமாகிவிட்டது. இதனால், இருவருக்கும் இடையேயான நெருக்கமும், தொடர்பும் குறைந்துகொண்டே வருகிறது. இந்த இடைவெளி, கணவன்-மனைவி உறவை மட்டுமில்லாமல், பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இடையிலான உறவையும் பாதிக்கிறது. 

குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே உள்ள தொடர்பும், நெருக்கமும்தான், ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கைக்கான அடித்தளம் என்று உளவியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். அதை அதிகரிப் பதற்கான சில எளிய வழிகள் இதோ...

குழந்தைகள் பெற்றோரின் பிம்பங்களாக இருக்கிறார்கள். பெற்றோரின் செயல் எப்படி உள்ளதோ, அதைப் பொறுத்தே குழந்தைகளின் செயல்பாடுகளும் வெளிப்படும். பெற்றோருக்கிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், அதை குழந்தைகள் முன்னால் காண்பிக்கக்கூடாது. நமக்கு இருக்கும் வேலைப்பளுவை சிறிது நேரம் ஒதுக்கி வைத்துவிட்டு, குழந்தைகளுடன் பொழுதுபோக்கான விஷயங்களில் ஈடுபடலாம். இது அவர்களின் மனநிலையைச் சீராக்கும்.


மனம்விட்டு பேசுதல்: 

பெற்றோர் மற்றும் குழந்தைகள் இடையே, தகவல் பரிமாற்றம் இயல்பானதாக இருக்க வேண்டும். இதற்கு மனம் விட்டுப் பேசுதல் முக்கியமானது. குழந்தைகள் நமது பேச்சை கவனிப்பதற்கு ஏற்றவாறு, நாம் பேசும் முறையைச் சற்று மாற்றிக் கொள்ள வேண்டும். எப்போதும் வார்த்தையை விட, உடல் மொழியைத்தான் குழந்தைகள் அதிகமாக கவனிப்பார்கள். 

உளவியல் வல்லுனர்களின் கூற்றுப்படி, குழந்தைகளிடம் பேசும்போது வார்த்தை 7 சதவீதமும், உடல்மொழி 55 சதவீதமும், குரலின் சத்தம் 38 சதவீதமும் இருக்க வேண்டும். 

குழந்தைகளை பேச வைத்தல்: 

பல பெற்றோர் குழந்தைகள் 100 சதவீதம் தங்கள் பேச்சைக் கேட்க வேண்டும், என்று எதிர்பார்க்கின்றனர். இதைத் தவிர்க்க வேண்டும். பெற்றோர் குழந்தைகளிடம் பேசும் நேரத்தில், குழந்தைகளுக்கும் பேசும் வாய்ப்பை அளிக்க வேண்டும். இது குடும்பத்தின் தகவல் தொடர்பை அதிகப்படுத்துவதற்கான சிறந்த வழி. 

நேரத்தைத் திட்டமிடுதல்: 
ரு நாளில், சில மணி நேரத்தைக் குடும்பத்திற்காக மட்டும் ஒதுக்குங்கள். இந்த நேரத்தில், வெளி வேலைகள், அலுவலக வேலைகள் மற்றும் தேவையற்ற விஷயங்களை ஒதுக்கி வையுங்கள். குழந்தைகளும் இதைத்தான் பெற்றோரிடம் எதிர்பார்ப்பார்கள். 

தினமும் ஒரு வேளையாவது, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுங்கள். இந்த நேரத்தை அனைவரும் வெளிப்படையாகவும், தெளிவாகவும், மனம் விட்டுப் பேசும் வாய்ப்பாக மாற்றுங்கள். 

நடைமுறையை உருவாக்குதல்: 

அலுவலக பணிகளுக்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தைப் பின்பற்றுவதுபோல், குடும்பத்தின் நடைமுறைக்கும் சில வழிமுறைகளை உருவாக்க வேண்டும். படுக்கைக்கு செல்வது, உணவுக்கான நேரம், விளையாட்டு நேரம், பெற்றோருடன் நேரத்தை செலவிடுவது என, முறைப்படுத்த வேண்டும்.

பாராட்டுங்கள்: 

குடும்ப உறுப்பினர்களிடையே நேர்மறையான தொடர்பை வளர்ப்பதற்கும், ஆரோக்கியமான உணர்ச்சிகளை நிர்வகிப்பதற்கும் உதவும் ஒரே வழி ஒருவருக்கொருவர் தொடர்ந்து பாராட்டி ஆதரவளிப்பதுதான். குழந்தைகள் சவாலான விஷயங்களைச் சந்திக்கும்போது, இந்த பழக்கம் அவர்களை ஊக்குவிக்க உதவும்.

Click here to join whatsapp group for daily health tip 

வாழ்வில் வெற்றி பெற உதவும் பேச்சுத் திறமை

 எதிராளியை வசப்படுத்தும் திறன் நம் பேச்சுக்கு உள்ளது. எனவே, அதைச் சரியான இடத்தில், சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். நம் கருத்தை வெளிப்படுத்துவதில் குரல் தொனி, உடல் மொழி, முக பாவனை, நேரம் போன்றவை முக்கியமானவை. சரியான நடையால், சலிப்பூட்டும் கருத்தைக் கூட ஈர்க்கும்படி சொல்ல முடியும். பேசும் சபையை ஆராய்ந்து பேச வேண்டும். நமது பேச்சு, நம் ஆளுமையை வெளிக்காட்டும். 

ஒருவருக்கு சிந்திக்கும் எண்ணம் தெளிவாக இருந்தாலும், அதை வெளிப்படுத்தும் திறன் குறைவாக இருந்தால், அவருக்கு வெற்றி கடினமானதாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் பேசுவதும், தொழில் ரீதியாகப் பிறரிடம் பேசுவதும் வெவ்வேறானவை. பேச்சுத்திறனை எங்கு, எப்படிப் பயன்படுத்த வேண்டும்? என்பது முக்கியமானது. அதைப்பற்றி இங்கு காண்போம். 

கருத்து மற்றும் உச்சரிப்பில் தெளிவு: 

குடும்பத்தைப் பொறுத்தவரை, நம் கருத்தைத் தெரிவிக்க எந்த வரைமுறையும் இல்லை. ஆனால், தொழில் ரீதியாகப் பேசும் போது நாம் பேசும் கருத்தும், நமது உச்சரிப்பும் தெளிவாக இருக்க வேண்டும். உச்சரிப்பு, போதுமான சத்தத்துடன் பேசுதல், சரியான இலக்கணத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். 

பேசும்போது அதிகமாக இடைநிறுத்துவதோ, ஒரே கருத்தை மீண்டும் வெளிப்படுத்துவதோ கூடாது. வார்த்தைகளில் தடுமாற்றமோ வராமல் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கருத்துகளை விரைவாகவோ, தாமதமாகவோ முடிக்காமல், சரியான நேரத்தில் முடிக்கும் திறன் கட்டாயம் தேவை.

ஈர்க்கும் திறன்: 
எதிராளியை வசப்படுத்தும் திறன் நம் பேச்சுக்கு உள்ளது. எனவே, அதைச் சரியான இடத்தில், சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். நம் கருத்தை வெளிப்படுத்துவதில் குரல் தொனி, உடல் மொழி, முக பாவனை, நேரம் போன்றவை முக்கியமானவை. சரியான நடையால், சலிப்பூட்டும் கருத்தைக் கூட ஈர்க்கும்படி சொல்ல முடியும். பேசும் சபையை ஆராய்ந்து பேச வேண்டும். 

தன்னம்பிக்கையை வளர்த்தல்: 
பதற்றமும், தேவையற்ற பயமும்தான் பேச்சுத் திறனுக்கு எதிரான தடைகள். எனவே, நம்மைப் புறந்தள்ளும் விஷயங்களை ஒதுக்க வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப, யாரிடம் எந்த வகையான பேச்சுத் திறனை வெளிப்படுத்த வேண்டும், என்பதை நாமே பயிற்சி செய்து கொள்ளலாம். 
கண்ணாடியின் முன் நின்று, தினமும் 1 மணி நேரம் பேசிப்பழகி பேச்சுத் திறனை வளர்க்கலாம். உச்சரிக்க கடினமான வார்த்தைகளை அடிக்கடி பேசிப் பார்க்கலாம். இதனால், தயக்கம் இல்லாமல் பேச முடியும்.

 விமர்சனத்துக்குத் தயாராகுங்கள்:

நம் பேச்சு எப்படி இருந்தாலும், பார்வை யாளர்களிடமிருந்து பலதரப்பட்ட விமர்சனம் வரலாம். இதை யாரும் தவிர்க்க முடியாது. அந்த விமர்சனத்துக்குப் பயந்து, திறமையைச் சரியான இடத்தில் வெளிப்படுத்தத் தயங்கினால், இழப்பு நமக்குத்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

நம் கருத்துக்கு எதிர் விமர்சனங்கள் எழுந்தாலும், அதையும் நேர்மறையாக எடுத்துக் கொண்டு, தவறுகளை திருத்தி, அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும். பேச்சு என்பது கருத்தை வெளிப்படுத்தும் ஆயுதம் மட்டுமல்ல; நம்மை முழுமையாகப் பிறருக்கு வெளிகாட்டும் சாதனம். அதைச் சரியாக பயன்படுத்தினால், வாழ்க்கையில் மட்டுமல்ல, தொழிலிலும் எளிதாக வெற்றி பெறலாம்.

Click here to join whatsapp group for daily health tip
 

உங்கள் மண்ணீரல் நன்றாக இயங்காவிட்டால்... என்ன பிரச்சனைகள் வரும்...

 மனித உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் அதனதன் பணியைச் சிறப்பாகச் செய்தால்தான் நோயின்றி வாழ முடியும். அப்படி சிறப்பாக செயல்பட வேண்டிய உள் உறுப்புகளில் முக்கியமானது, மண்ணீரல். 

இது கல்லீரலுக்கு அருகில் இருக்கிறது. நிணநீர் உறுப்புகளில் மிகப் பெரிய உறுப்பு மண்ணீரல்தான். இது, ரெட்டிக்குலார் செல்கள் மற்றும் அவற்றின் நார்கள் போன்ற பகுதிகளால் ஆன வலைப்பின்னல் அமைப்புக் கொண்டது. 



முதிர்ந்த ரத்த சிவப்பணுக்களை அழிப்பதே மண்ணீரலின் முக்கியப் பணியாகும். மேலும், ரத்த சிவப்பணுக்களின் செயல்களைச் சீர்ப்படுத்துவதும், இதயத்தின் செயல்பாடுகளைத் தூண்டுவதும், சீராக்குவதும் இதன் வேலைதான்.


மண்ணீரல் பாதிக்கப்பட்டால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும். நுரையீரலின் செயல்பாடுகளிலும் மண்ணீரலுக்குப் பங்கு உண்டு. ரத்தத்தில் உள்ள தேவையற்ற நுண்கிருமிகளை அழித்து, சிறுநீரகத்தின் செயல்பாடுகளை மண்ணீரல் தூண்டுகிறது. அதேபோல் ரத்த ஓட்டப் பாதையில் கிருமிகள் போன்ற வெளிப்பொருட்களை வடிகட்டி வெளியேற்றவும் செய்கிறது. 

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மண்ணீரல் அதிகரிக்கிறது. வியர்வைச் சுரப்பிகளையும் தூண்டி செயல்படவைக்கிறது. 

மண்ணீரல் பாதிப்பின் அறிகுறிகள்:

உடம்பின் எடை அதிகரிப்பது, அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்படுவது, நாக்கு வறண்டு விறைப்புத்தன்மையை அடைவது, வாயுக்களால் உடம்பெங்கும் வலி உண்டாவது, வாந்தி, உடல் பலவீனமடைவது, உடல் பாரமாகத் தெரிவது, கால் பகுதிகளில் வீக்கம், வலி, சாப்பிட்டவுடன் தூக்கம், எப்போதும் சோர்வு, மஞ்சள் காமாலை ஏற்படுவது, ரத்த அழுத்தம் அதிகரிப்பது, சிறுநீர் சரியாகப் பிரியாமல் இருப்பது போன்றவைகள் எல்லாம் மண்ணீரல் பாதிக்கப்பட்டிருப்பதன் அறிகுறியாகும்.


மண்ணீரல் பாதிக்கப்படுவதற்கான காரணங்கள்? 

* அடிக்கடி கோபம், எரிச்சல், மனஅழுத்தம் அடைவோருக்கு மண்ணீரல் பாதிப்படையலாம். 

* மதுப்பழக்கம், புகைப்பழக்கம் போன்றவற்றாலும் மண்ணீரல் பாதிக்கப்படக்கூடும். 

* கல்லீரல், பித்தப்பை, இரைப்பை, சிறுகுடல் பகுதியில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டாலும் மண்ணீரல் பாதிப்புக்கு உள்ளாகும். 

* ரத்தத்தில் பித்தநீர் அதிகரிப்புக் காரணமாகவும் மண்ணீரல் பாதிப்படையலாம். 

* கல்லீரல் வீக்கம், குடல்புண், வயிற்றுப்புண் ஆகியவையும் மண்ணீரலைப் பாதிக்கும். 

* கீரைகள், கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், முள்ளங்கி, புதினா, பூண்டு, தேங்காய், முளைகட்டிய பயறு, சின்ன வெங்காயம் போன்றவை மண்ணீரலுக்கு நலம் பயக்கும். பழவகைகளில் கொய்யா, திராட்சை, ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி, மாதுளை, அத்திப்பழம், ஸ்ட்ராபெர்ரி, பிளம்ஸ் போன்றவை மண்ணீரலுக்கு உகந்தது. 

மகத்துவம் நிறைந்த மண்ணீரல் மீது அதிக அக்கறை கொள்வோம். அதற்கு ஏற்றபடி வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக் கவழக்கங்களை மாற்றிக்கொள்வோம்.


Click here to join whatsapp group for daily health tip 

மைதா உருவாக்கும் நோய்கள்

 கார்போஹைட்ரேட், உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. சர்க்கரை, நார்ச்சத்து, ஸ்டார்ச் ஆகியவற்றை குளுக்கோஸாக பிரித்து உடலுக்கு ஆற்றலாக வழங்குகிறது. அதனால் அன்றாடம் சாப்பிடும் உணவில் 50 முதல் 60 சதவீதம் கார்போஹைட்ரேட் இடம் பெற்றிருக்க வேண்டும்.



 'சிம்பிள்', 'காம்ப்ளக்ஸ்' என இரண்டு வகை கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் கொண்ட உணவுப் பொருட்கள் கொழுப்பை குறைக்க வகைசெய்யும். 

மைதா போன்ற சிம்பிள் கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள் செரிமானமாவதற்கு அதிக நேரம் எடுக்கும். அவற்றை தொடர்ந்து சாப்பிடுவது நீரிழிவு, இதய, நோய், மலச்சிக்கல், கொழுப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளை உருவாக்கலாம். 

 உணவில் சீரான அளவில் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் இடம்பெற்றால், அது கொழுப்பை குறைக்க உதவும். உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பைக் குறைக்க சிம்பிள் கார்போஹைட்ரேட்டுகளுக்குப் பதிலாக காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 

நல்ல கார்போஹைட்ரேட்கள் பொதுவாக பக்க கொழுப்பு எனப்படும் உள்ளுறுப்பு கொழுப்பை குறைக்க உதவும். இந்த கொழுப்புதான் உடலுக்கு மிகவும் ஆபத்தானது. பலவிதமான நோய்களையும் உருவாக்கக்கூடியது. 

ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்களை உணவில் 50 முதல் 60 சதவீதம் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கு மேல் சேர்க்கக்கூடாது. ஏனெனில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்களை அதிகம் எடுத்துக்கொண்டால் அவை கொழுப்பாக மாறிவிடும். 

 உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பை விரைவாக கரைக்க மன அழுத்தம் இல்லாத மற்றும் ஆரோக்கியமான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். ஜிம்முக்கு சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வதால் மட்டுமே கொழுப்பையோ, உடல் எடையையோ குறைத்துவிட முடியாது.

 ஆரோக்கியமான உணவு பழக்கத்தையும் பின்பற்ற வேண்டும். அதே நேரத்தில் உடல் தசையை வலுப்படுத்த விரும்புபவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். அவர்கள் கார்போஹைட்ரேட் உணவுகளையும் சாப்பிடலாம். உடற்பயிற்சிக்கு பிறகு ஹார்போஹைட்ரேட் நிறைந்த பழங்களை உட்கொள்ளலாம். 


பார்லி, பாப்கார்ன், தயிர், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ஓட்ஸ், கோதுமை பிரெட், பீன்ஸ், பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு, பூசணி, புரோக்கோலி, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம் போன்ற காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ஏற்றது. நொறுக்கு தீனிகள், குளிர்பானம், ஜஸ்கிரீம், சாக்லெட் போன்ற சிம்பிள் காம்ப்ளக்ஸ் உண்வுகளை தவிர்த்துவிடுவது நல்லது.



குரூப் - 1, 2 தேர்வு முடிவு ஜூலையில் வெளியாகிறது!

 தமிழக அரசு துறைகளின் பல்வேறு பதவிகளுக்கான, 'குரூப் 1, 2' தேர்வின் முடிவுகள், ஜூலையில் வெளியிடப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில், சார் - பதிவாளர், நகராட்சி கமிஷனர், இளநிலை வேலை வாய்ப்பு அதிகாரி, தொழிலாளர் உதவி ஆய்வாளர் உட்பட, 67 வகை பதவிகளில், 5,529 காலியிடங்களை நிரப்ப, 'குரூப் - 2, 2ஏ' முதல்நிலை தேர்வு, இந்த ஆண்டு மே 21ல் நடந்தது.தேர்வில் 9.95 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கப்பட்டு, விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தேர்வு முடிவு குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பு:இந்த மாதம் வெளியிடப்படுவதாக இருந்த, குரூப் - 2 தேர்வு முடிவுகள், ஜூலையில் வெளியிடப்படும். துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட குரூப் - 1 பதவியில், 66 காலியிடங்களை நிரப்ப, கடந்தாண்டு ஜனவரியில் நடத்தப்பட்ட பிரதான தேர்வின் முடிவுகள், அடுத்த மாதம் வெளியிடப்படும்.மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை - -2 பதவியில், 110 காலியிடங்களை நிரப்ப, 2018ல் நடத்தப்பட்ட தேர்வின் நேர்முக தேர்வு முடிவுகள், நீதிமன்ற வழக்கால் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

குற்றவியல் உதவி வழக்கறிஞர் பணியில், 50 காலியிடங்களை நிரப்புவதற்கு, கடந்த ஆண்டு நவம்பரில் நடத்தப்பட்ட பிரதான தேர்வின் முடிவுகள், ஜூலையில் வெளியிடப்படும்.தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் நிலை - -1 பதவியில், 25 காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு ஏப்ரலில் தேர்வு நடந்தது.இதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், வரும் 29ம் தேதி முதல், ஜூலை 7 வரை சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குடிமைப் பணித் தோ்வுக்கு அரசின் இலவசப்பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்: தலைமைச் செயலாளா்

"யுபிஎஸ்சி நடத்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு அகில இந்திய குடிமைப்பணித் தோ்வுப் பயிற்சி மையத்தில் இலவசப் பயிற்சி வழங்கப்படவுள்ளது

இந்தப் பயிற்சியைப் பெற விரும்புவோா் வெள்ளிக்கிழமை முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.இது குறித்து அண்ணா நிா்வாக பணியாளா் கல்லூரி இயக்குநரும், பயிற்சித்துறை தலைவரும், தலைமைச்செயலாளருமான வெ.இறையன்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னையில் உள்ள பசுமை வழிச்சாலையில் செயல்பட்டு வரும் அகில இந்தியக் குடிமைப் பணித் தோ்வுப் பயிற்சி மையத்தில் பசுமைச் சூழலுடன் வகுப்பறைகள், தங்கும் இடவசதி, தரமான உணவு வழங்கும் விடுதி, சிறந்த நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அமைந்துள்ளன. மாணவா்களுக்கு இங்குக் கட்டணமின்றி உணவு அருந்தவும், அருமையான இயற்கைச் சூழலில் தங்கிப்படிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிறந்த பயிற்றுநா்களைக்கொண்டு பயிற்சி அளிப்பதுடன், மாணவா்கள் தங்களை முதன்மைத் தோ்விற்குத் தயாா்படுத்திக்கொள்ளும் வகையில் மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படுகின்றன. இதுதவிர, முதன்மைத்தோ்வு எழுதும் தோ்வா்களுக்கு மாதம் ரூ.3,000 ஊக்கத் தொகையும் அளிக்கப்படுகிறது.தமிழக மாணவா்கள் எங்கு பயிற்சி பெற்று முதல்நிலைத் தோ்வில் வெற்றி பெற்றிருந்தாலும், இந்தப் பயிற்சி மையத்தில் பயிற்சிபெற அனுமதிக்கப்படுவா்

இந்த மையத்தில், இந்த ஆண்டு 225 போ் தங்கிப் பயிலச் சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அகில இந்தியக் குடிமைப் பணித் தோ்வுப் பயிற்சி மையத்தில் சேர விரும்பும் தோ்வா்கள் ஜூன் 24 முதல் ஜூன் 27-ஆம் தேதி வரையிலான நாள்களில்  இணையத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.ஜூலை 1 முதல் வகுப்புகள்: இடஒதுக்கீட்டின்படி தெரிவு செய்யப்பட்ட தோ்வா்கள் விவரம் ஜூன் 28-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியிடப்பட்டு, ஜூன் 29, 30 ஆகிய இரு நாள்களில் சோ்க்கை நடைபெறுவதோடு ஜூலை 1-ஆம் தேதி முதல் வகுப்புகள்தொடங்கப்படும்.இணையத்தில் பதிவு மேற்கொள்ளும் மாணவா்கள், விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி, வருமானச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தமைக்கான இணைய ரசீதை விண்ணப்பத்துடன் இணைத்தளிக்க வேண்டும்

வருமானம் தொடா்பாக உரிய அலுவலா்கள் அளித்த வருமானச் சான்றிதழினைக் குடிமைப் பணித் தோ்வுப் பயிற்சி மையத்தில் சேரும் போது ஒப்படைக்கவேண்டும். பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலினத் தோ்வா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அரசு விதிகளுக்குட்பட்டுப் பதிவு செய்தவா்களில் 225 தோ்வா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு தங்கும் வசதிகளுடன் குடிமைப்பணி முதன்மைத் தோ்வுக்குப் பயிற்சியளிக்கப்பட உள்ளாா்கள் என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன் என அதில் தெரிவித்துள்ளாா்

 Official website : www.civilservicecoaching.com