Showing posts with label TNPSC Exams. Show all posts
Showing posts with label TNPSC Exams. Show all posts

TNPSC Group 4 Exam: நேரடி கேள்விகள் கம்மி... கட் ஆப் குறைய வாய்ப்பா?

  Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

TNPSC Group-4 Exam Cut Off marks: 2025-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 3,935 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வினாத்தாள் விநியோகம் செய்யப்பட்டு தேர்வு நடந்தது. இந்த நிலையில் தேர்வு எழுதியவர்கள் பகிர்ந்து கொண்டதை பார்க்கலாம்.
இதுகுறித்து தேர்வர் முத்துசாமி கூறுகையில், நான் மூணு வருஷமா தேர்வு எழுதிட்டு வர்றேன். குரூப் 4 எக்ஸாம் பொறுத்தவரைக்கும் மொத்தம் 200 மார்க் கேள்விகள் கேட்கப்படும். அதுல ‌100 மார்க் தமிழ் பாடத்திலையும், கணித பாடத்தில் 25 மதிப்பெண்ணும், பொது அறிவில் 75 மதிப்பெண்ணும் கேட்கப்படும். சமீபத்திய காலங்களில்    தமிழ்நாடோட வளர்ச்சி நிர்வாக முறைகளை பற்றிய கேள்விகள் அதிகம் இடம்பெறுவதாக தெரிவித்தார்.
மேலும் அவர், இந்த ஆண்டு தேர்வில் கூட தமிழக அரசு சமீபத்தில வெளியிட்ட பொருளாதார ஆய்வு அறிக்கைகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டது. பொது அறிவுதாள் தான் கடினமாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், அதற்கு நேர்மாறாக நடந்திருக்கு. இந்த முறை தமிழ்ல கேள்விகள் கொஞ்சம் கஷ்டமா கேட்டு இருக்காங்க. குரூப் 2வ விட குரூப் 4 தமிழ்ல கேள்விகள் கடினமா இருந்ததாகவும் தெரிவித்தார்.

கணக்கு பாடத்துல கேள்விகள் கஷ்டமாவும், ஈசியாவும் இருந்துச்சு.  கலவையான உணர்வு கிடைத்தது. பொது அறிவு ஓரளவுக்கு யூகிக்கிற அளவுல தான் இருந்தது. தமிழ்ல கேள்விகள் கடினமா இருந்ததால இந்த முறை கட் ஆஃப் மார்க் குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

இதற்கு முந்தைய தேர்வுகளில் எல்லாம் நேரடியான கேள்விகள் கேட்கப்படும்.  ஆனால் தற்போது நிறைய ஸ்டேட்மெண்ட் கேள்விகள் கேட்கப்படுகிறது. அதாவது ஏ,பி,சி,ஆப்ஷன் அந்த மாதிரி இல்லாமல். எந்தக் கூற்று சரி போன்ற பதில்கள் கொஞ்சம் குழப்பமடையும் வகையில் கேட்கப்படுகிறது. இது ஒரு விதத்தில் நல்லது என்றாலும் ஏற்கனவே நீண்ட ஆண்டுகளாக படித்தவர்களுக்குத் தான் இது எளிமையானதாக இருக்கும். எனவே நாம் படிக்கும் போதே நல்ல தெளிவாக ஒவ்வொரு விஷயத்தையும் புரிந்து கொண்டு படிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNPSC - குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு - குரூப் 2 (ஏ) தேர்வு முறையில் மாற்றம்

       Education News (கல்விச் செய்திகள்)

IMG-20250715-WA0023

சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 645 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப் 2 மற்றும் குரூப் 2(ஏ) தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. குரூப் 2 (ஏ)-வுக்கான தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, “சார்-பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகளில் 645 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2(ஏ) தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 15-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.


இதற்கான முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறும். தேர்வுக்கு ஆகஸ்ட் 13-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை யுபிஐ வசதி மூலமாக செலுத்தலாம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானது ஆகும்.


அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் காலிப் பணியிடங்கள் பெறப்படு்ம பட்சத்தில் கலந்தாய்வுக்கு முன்பாக மேலும் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மேலும், தேர்வர்களின் நலன் கருதி குரூப்-2 (ஏ) முதன்மைத் தேர்வு முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.


முதல்நிலைத் தேர்வை பொறுத்தவரையில் குரூப்-2, குரூப்-2 (ஏ) இரு தேர்வுகளுக்கும் பொதுவான தேர்வுதான். பொது அறிவு மற்றும் கணிதம் தொடர்பான 100 கேள்விகள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பாடத்தில் 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண். இதில் வெற்றிபெறுவோர் அடுத்த கட்ட தேர்வான முதன்மைத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.


முதன்மைத்தேர்வானது குரூப்-2 பணிகளுக்கும், குரூப்-2(ஏ) பணிகளுக்கும் தனித்தனியே நடத்தப்படும். குரூப்-2 பணிகளுக்கான முதன்மைத் தேர்வில், பொது அறிவு பகுதியில் 300 மதிப்பெண்களுக்கு விரிவாக விடையளிக்க வேண்டும். குரூப்-2 (ஏ) பணிகளுக்கு பொது அறிவு பகுதியில் 150 கேள்விகள், கணிதம் பகுதியில் 50 கேள்விகள் என அப்ஜெக்டிவ் முறையில் 200 கேள்விகள் இடம்பெறும். மொத்த மதிப்பெண் 300.


இது கணினி வழியில் நடத்தப்படும். முன்பு பொது அறிவு பகுதியில் பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் தொடர்பான 60 வினாக்கள் இடம்பெற்றிருந்தது. தற்போது புதிய தேர்வுமுறையில் மொழிப் பாடம் தொடர்பான அந்த பகுதி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. மேலும், விரிவாக பதில் எழுதக்கூடிய கட்டாய தமிழ் மொழித் தகுதித்தாள் தேர்வு குரூப்-2, குரூப் 2-(ஏ) இரு முதன்மைத் தேர்விலும் பொது தேர்வாக இடம்பெறும். இதில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். இந்த தேர்வில் எடுக்கும் மதிப்பெண் ரேங்க் பட்டியல் தயாரிக்க எடுத்துக்கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.


தேர்வர்கள் ஏமாற்றம்: ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2 (ஏ) தேர்வில் குறைந்தபட்சம் 2,000 காலியிடங்களாவது வரும் என டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது வெறும் 645 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது அவர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது. அரசு துறைகளில் லட்சக்கணக்கான காலியிடங்கள் இருப்பதால அரசு ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து கூறி வரும் நிலையில், குரூப்-2 , குரூப்-2(ஏ) தேர்வில் 645 காலியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட இருப்பதால் தேர்வர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

TNPSC : குரூப் 4 - புதிய பாடத்திட்டத்தில் சாதிப்பது எப்படி?

 Education News (கல்விச் செய்திகள்)

newproject99copy-1713964573-1717646041

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய பாடத்திட்டத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும்கூட மதிப்பெண் பகிர்வில் புதிய நடைமுறை பின்பற்றப்பட்டு இருக்கிறது. இது தேர்வர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்திதான்.

எந்தப் பாடத்தில் இருந்து எத்தனை கேள்விகள் வரும் என்றும், கடினமான சில பாடங்களை ஒதுக்கியும்கூடத் தேர்வர்கள் திட்டமிடலாம். எந்தெந்தப் பகுதிக்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்பதைப் புரிந்துகொண்டால் கண்டிப்பாகச் சாதிக்க முடியும்.


திட்டமிடல் அவசியம்: பொது அறிவியல் (5 கேள்விகள்), புவியியல் (5), இந்தியாவின் வரலாறு பண்பாடு - இந்திய தேசிய இயக்கம் (10), இந்திய ஆட்சியியல் (15), இந்தியப் பொருளாதாரம் - தமிழ்நாட்டின் வளர்ச்சி நிர்வாகம் (20), தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு - சமூக அரசியல் இயக்கங்கள் (20) என்று பொது அறிவு பாடத்திட்டத்துக்கு மதிப்பெண் பிரிக்கப்பட்டுள்ளது. திறனறிவுப் பகுதிக்கு 15 கேள்விகளும் காரணவியல் பகுதிக்கு 10 கேள்விகளுமாகப் பிரிக்கப்பட்டுள்ளது.


இதில் பல தேர்வர்கள் கடினமாகக் கருதும் பகுதி அறிவியல் பகுதிதான். அறிவியல் பகுதிக்கு 5 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால், அந்தப் பகுதியை நீங்கள் ஒதுக்கிவிட்டு மற்ற பாடங்களைப் படித்தால்கூடப் போதுமானது.


.


ஆப்டிடியூட் பகுதியைப் பொறுத்தவரை நீங்கள் எந்த ஒரு பயிற்சியையும் தவிர்க்கக் கூடாது. மிகக் குறைந்த பாடத்திட்டத்தில் 25 கேள்விகள் கேட்கப்படுவதால் இந்தப் பகுதி உங்கள் வெற்றிக்குப் பெரிதும் உதவும்.


தமிழ்த் தகுதி - மதிப்பீட்டுத் தேர்வைப் பொறுத்தவரை கட்டாயப் பாடமாக இருக்கிறது. இலக்கணத்திலிருந்து 25 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இலக்கணம் என்றால் பிரித்து எழுதுதல், சேர்த்து எழுதுதல், குறில் நெடில் வேறுபாடு, இன எழுத்துகள், வினா வகை, ஒருமை பன்மை அறிதல், வேர்ச்சொல் அறிதல், பெயரெச்ச-வினையெச்ச சொற்கள், எதிர்ச்சொல் எழுதுதல் போன்றவை அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. அதுபோலத் தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் என்கிற பகுதியிலிருந்து 15 கேள்விகள் கேட்கப்படுகின்றன.


வாசித்துப் புரிந்துகொள்ளுதல், கலைச்சொற்கள், எழுதும் திறன் ஆகிய மூன்று பகுதிகளுக்கும் சேர்த்து 40 வினாக்கள் வருகின்றன. ஒரு பத்தியைக் கொடுத்து அதிலிருந்து கேள்விகள் கேட்கும் புதிய நடைமுறை, வரும் தேர்வில் இருந்து தொடங்குகிறது.


உங்களுக்குத் தேவையான விடைகள், கொடுக்கப்பட்டுள்ள பத்தியிலே இருக்கும். தேடி எழுத வேண்டியதுதான். மேலும் பல துறைகளைச் சேர்ந்த கலைச் சொற்கள் கொடுக்கப்பட்டு, அவற்றுக்கு நேரான தமிழ்ச் சொற்கள் கேட்கப்படும் பகுதி ஏற்கெனவே இருந்தது. தற்போது அந்தப் பகுதியில் வினாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.


சொல் அகராதி என்கிற பகுதியில் இருந்து 15 கேள்விகள் கேட்கப்படும். அதாவது, ஓரெழுத்து ஒரு மொழி, உரிய பொருளைக் கண்டறிதல், ஒரு பொருள் தரும் பல சொற்கள், கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் போன்றவை. இந்தப் பகுதிகளுள் அனைத்துமே எளிமையானவை. எனவே, எளிதாக மதிப்பெண் எடுக்கலாம்.


- கட்டுரையாளர்: போட்டித்தேர்வுப் பயிற்சியாளர்; 

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNPSC - குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு.

    Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250702_185131

குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு ஜூலை 12 ஆம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை இளநிலை உதவியாளர் விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக தேர்வு நடைபெறும் - டிஎன்பிஎஸ்சி

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNPSC - குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதவிறக்கம் செய்வது எப்படி?

 

dinamani%2F2024-06%2F4fd9a1e9-0a11-4fc8-91f7-021307d8b5f2%2Ftnpsc

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது ஒருமுறை பதிவேற்றம்(ஓடிஆர்) மூலமாக விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகிவற்றை இணையதளத்தில் உள்ளீடு செய்து நுழைச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.


தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி முற்பகல் தமிழக அரசில் காலியாக உள்ள 2,540 குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களை நிரப்புவதற்கான கொள்குறி வகையிலான ஒருங்கிணைந்த முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரம் பேர் எழுதினர். இதில் 29 ஆயிரத்து 809 பேர் அடுத்தக்கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றனர்.


அவர்களுக்கு வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி பிற்பகல் முதன்மைத் தேர்வின் தமிழ் தகுதித்தாள் தேர்வும் மற்றும் கொள்குறி வகையில் விடை அளிக்கும் பொது அறிவு மற்றும் பொது திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் தேர்வு நடைபெறும் எனவும், விரிவான விடை அளிக்கும் வகையிலான பொதுஅறிவுத் தேர்வு பிப்ரவரி 23 ஆம் தேதி முற்பகல் நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.


இந்த நிலையில், குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


நுழைவுச் சீட்டை பதவிறக்கம் செய்வது எப்படி?


தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in - இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


விண்ணப்பத்தாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம்(ஓடிஆர்) மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

TNPSC Group - 2 பணியிடங்கள் அதிகரிப்பு!

 



குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதலாக 213 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) காலியாக உள்ள அரசுப் பணிகளுக்கு பல்வேறு நிலை தேர்வுகளை நடத்தி வருகிறது.


அந்தவகையில் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.


குரூப்-2 பணியில் தொழிலாளா் உதவி ஆய்வாளா், துணை வணிக வரி அலுவலா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு உதவியாளா், சென்னை மாநகர காவல் தனிப் பிரிவு உதவியாளா் உள்பட 507 இடங்களும்


குரூப் 2 ’ஏ’ பணியில் தமிழ்நாடு மின்விசை நிதி, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநரின் நோ்முக உதவியாளா், கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளா், உள்ளாட்சி நிதித் தணிக்கை உதவி ஆய்வாளா் என 48 துறைகளில் 1820 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது.


இந்த பணிகளுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற்றது.


தமிழக முழுவதிலும் இருந்து மொத்தமாக 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 5.81 லட்சம் பேர் எழுதினர்.


இந்நிலையில், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை கூடுதலாக 213 சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி இன்று அறிவித்துள்ளது. இதன் மூலமாக தற்போது மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 2,540 ஆக அதிகரித்துள்ளது.


முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வருகிற டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும் இதில் வெற்றி பெறுபவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

TNPSC - குரூப் 4 தேர்வு: கூடுதலாக 2,208 பணியிடங்கள்!

 

dinamani%2F2024-10-09%2Fp4833yp7%2Ftnpsc093852

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,208 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.


கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி 480 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.


கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்றது.


ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 6, 244 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்தத் தேர்வுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.


7,247 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. சென்னையில் 432 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், 1.33 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர்.


குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தமிழ்நாடு TN முக்கியமான திட்டங்கள் PDF

 
தமிழ்நாடு TN முக்கியமான திட்டங்கள் PDF
அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File 


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Rivers in India இந்திய ஆறுகள் – முக்கிய கேள்வி பதில்கள்

 Rivers in India இந்திய ஆறுகள் – முக்கிய கேள்வி பதில்கள்

அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File 


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

6th to 12th ‘கலைச்சொற்கள்’ Compilation PDF

 6th to 12th ‘கலைச்சொற்கள்’ Compilation PDF

அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

TNPSC Group 2/2A TAMIL Book Proof PDF

 TNPSC Group 2/2A TAMIL Book Proof PDF

அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மெயின் தேர்வர்கள் 15-க்குள் கட்டணம் செலுத்த வேண்டும்

 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மெயின் தேர்வர்கள் 15-க்குள் கட்டணம் செலுத்த வேண்டும்

1307683

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


குரூப்-1 மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தேர்வர்கள், அனைத்து அசல் சான்றிதழ்களையும் ஸ்கேன் செய்து செப்.16-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது கட்டண விலக்கு கோராத விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வுக்கான கட்டணம் ரூ.200-ஐ செப்.15-ம் தேதிக்குள் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.


தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் அக்கட்டணத்தை செலுத்திய பின்னரே தங்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய முடியும். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாவிட்டால், அத்தகைய விண்ணப்பதாரருக்கு மெயின் தேர்வெழுத விருப்பமில்லை எனக் கருதி அவர்களின் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group