Search

இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பவரா நீங்கள் ? அப்போ அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..!

 மனிதனுக்கு பொதுவாகவே சரியான தூக்கம் அவசியம்.



சராசரியாக   6 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும். 

அப்படியில்லையெனில் பல உடல், மன நல கோளாறுகள் ஏற்படும் 

அவை என்னவென பார்போம்.

மூட் ஸ்விங்ஸ்:

6 முதல் 8 மணி நேரம் தூக்கமில்லாமல் இருப்பவர்களுக்கு மூட் ஸ்விங்ஸ் எனப்படும் தீவிர மனநிலை மாற்றங்கள் பொதுவானவை . இதனால், எரிச்சல், கோபம், சோர்வு , கவனசிதறல் போன்றவை ஏற்படும்.

மனநலத்தில் பாதிப்பு :

சரியான தூக்கம் இல்லை என்றால் ஒருவர் மன ஆரோக்கியம் சீர்கெடும். சரியாக தூங்கவில்லை எனில் க்ளினிக்கல் டிப்ரஷன் போன்ற மனநிலைக் கோளாறுகள் ஏற்படலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்பு:

தூக்கமின்மை உங்களில் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கும். ஒருவர் தூங்கும் போது தான் நோயெதிர்ப்பு அமைப்பு ஆன்டிபாடிகள் மற்றும் சைட்டோகைன்கள் போன்ற பாதுகாப்பு, தொற்று-எதிர்ப்புகளை உற்பத்தி செய்கிறது அதனால், நோய் எதிர்ப்பு மண்டலம் சரியாக செயல்பட தூக்கம் அவசியம். அதே போல தூக்கமின்மை உடலுறவின் மீதான் ஆர்வத்தை குறைக்கும்.

காலை உணவில் இந்த 4 உணவுகளை சாப்பிடுங்கள், வயிற்று கொழுப்பை ஐஸ் போல் கரையும்

 நீங்களும் வேகமாக உடல் எடையை குறைக்க விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கு பயன்படும். தற்போதைய காலகட்டத்தில், தவறான உணவுப்பழக்கம், மன அழுத்தம் மற்றும் பிஸியான வாழ்க்கை முறை போன்றவற்றால் மக்கள் உடல் பருமனுக்கு இரையாகி வருகின்றனர்.


எடை அதிகரிக்கும் போது, ​​​​அதைக் குறைப்பது மிகவும் கடினம், குறிப்பாக தொப்பையைக் குறைப்பது இன்னுமும் கடினம்.

தொப்பையை குறைக்க சிறந்த காலை உணவு
வயிற்றில் கொழுப்பு சேர்வதால் பல நோய்கள் உண்டாக்கும். மேலும் இதய நோய்கள், பக்கவாதம், சர்க்கரை நோய், இன்சுலின் சுரப்பு தட்டுப்பாடு போன்ற பாதிப்புகளை உண்டாக்கும். எனவே தான் மருத்துவர்கள் வயிற்று பகுதியில் அதிக கொழுப்பு சேராமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். அந்த வகையில் வெறும் உடற்பயிற்சிகளினால் மட்டுமே வயிற்று பகுதியில் சேர்ந்துள்ள கொழுப்புகளை குறைத்து விட முடியாது. சரியான உணவுகளும் இதில் அடங்கும். எனவே சில உணவுகளை காலை உணவில் சேர்த்து வந்தால், தொப்பை விரைவாக குறையும்.


1. எலுமிச்சை மற்றும் தேன்
தொப்பை மற்றும் எடையைக் குறைக்க, தினமும் காலையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து வெறும் வயிற்றில் குடிக்கவும். நீங்கள் விரும்பினால், அதில் ஒரு ஸ்பூன் தேனையும் சேர்க்கலாம்.

2. தயிர்
கால்சியம் மற்றும் புரதம் நிறைந்த தயிர், எடையைக் குறைக்க உதவுகிறது. இதனுடன், இது உடலில் உள்ள புரதத்தின் அளவையும் நிர்வகிக்கிறது. தொப்பையை குறைக்க விரும்புபவர்கள் இந்த நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த தயிரை காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

3. உப்மா
உப்மாவில் உள்ள சிமோலினா உறுப்பு எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது, மேலும் இது நல்ல கொலஸ்ட்ராலை ஊக்குவிக்கிறது. இருப்பினும், உப்மாவை எப்போதும் குறைந்த எண்ணெயில் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4. மூங் தால்
செரிமான நார்ச்சத்து தவிர, மூங் தால் சீலாவில் நல்ல அளவு புரதமும் உள்ளது. காலை உணவுக்கு இது மிகவும் ஆரோக்கியமான விருப்பமாக கருதப்படுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து தொப்பையை குறைக்க உதவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் காலை உணவில் மூங் தால் சீலாவை சேர்த்துக்கொள்ளலாம்.


வயிற்று பகுதியில் சேர்ந்துள்ள கொழுப்பை குறைக்க யோகர்ட்டுடன் சேர்த்து இன்னும் சிலவற்றை பின்பற்றலாம். குறிப்பாக உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். வெறும் வயிற்று பகுதியை மட்டும் குறிக்கோளாக வைத்து செய்ய கூடிய பயிற்சிகளை தொடரலாம். அடுத்து நார்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடலாம்.

அன்றாட உணவில் சின்ன வெங்காயம் சேர்த்துக்கொள்வதால் இத்தனை நன்மைகளா...!!

 மூலநோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்ப்பது நல்லது. நீர்மோர்ல சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடித்தாலும் பலன் கிடைக்கும்.



பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு சின்ன வெங்காயம் நல்ல பலன் தரும்.

தேள் கொட்டின இடத்துல வெங்காயச்சாறை தேய்த்தால் விஷம் ஏறாது. தலை பகுதியிலசொட்டை விழுந்து முடி முளைக்காம இருந்தாலும் சின்ன வெங்காயத்தை தேய்த்து வந்தால் காலப்போக்கில் முடி முளைக்கும். ஆண்களுக்கு மீசை பகுதியில் இப்படி சொட்டை இருந்தாலும், இதே முறையை செய்யலாம்.

வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும். வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

சின்ன வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும். திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும். பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

முதுகெலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் 6 உணவுகள்

 உங்களுக்கு அடிக்கடி முதுகு வலி பிரச்சினை உள்ளதா? அது முதுகெலும்பு ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகி இருப்பதற்கான அறி குறியாக அமையலாம். நமது நாட்டில் சுமார் 25 முதல் 30 சதவீதம் பேர் முதுகெலும்பு பிரச்சினையால் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.



உடல் செயலற்ற தன்மை, உடல் பலவீனம், தவறாக அமரும் தோரணை, அதிக எடை இழப்பு காரணமாக முதுகெலும்பு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஊட்டச்சத்துள்ள உணவுகளை சரியான அளவில் உண்பதன் மூலம் இத் தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

முதுகெலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் 6 வகையான உணவுகள் பற்றி பார்ப்போம்.

1. தாவர புரதம்: விலங்குகளில் இருந்து பெறப்படும் புரதத்தை விட தாவரங்களில் இருந்து கிடைக்கும் புரதம்தான் முதுகு தண்டுவடத்திற்கு நலம் சேர்க்கும். விலங்கு புரதம் முதுகெலும்பில் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும். முதுகெலும்பு பலவீனத்திற்கும் வழிவகுக்கும். சியா விதைகள், பருப்பு வகைகள், பீன்ஸ், பாதாம் போன்றவை முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்களை கொண்டுள்ளன.

2. கடல் உணவுகள்: கடல் உணவுகளில் குறிப்பாக சால்மன் மீன்களில் உள்ள மெலிந்த புரதம் தண்டுவட ஆரோக்கியத்தை வலுப்படுத்தக்கூடியது. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவும். மேலும் திசுக்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். சில குறிப்பிட்ட வகை மீன்களும், கடல் உணவுகளும் முதுகெலும்பு பிரச்சினைகளை சரி செய்ய உதவுகின்றன. இருப்பினும் முதுகுவலி பிரச்சினை கொண்டவர்கள் சால்மன் வகை மீன்களை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

3. பால் பொருட்கள்: முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த பால் பொருட்களை உட்கொள்வது அவசியமானது. ஏனெனில் பெரும்பாலான பால் பொருட்களில் அதிக அளவு பால் உள்ளது. எலும்புகள் கால்சியத்தால் ஆனது. பாலிலும் கால்சியம் இருப்பதால் அதனை உட்கொள்வது முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பால் மட்டுமே உட்கொள்ளாமல் தயிர், பாலாடைக்கட்டி உள்ளிட்ட பிற பால் பொருட்களை உட்கொள்வதன் மூலம் எலும்புகளை பாதுகாக்கலாம். எனினும் பால் பொருட்களை அதிகம் உட்கொள்ளக் கூடாது. அவற்றில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களின் விகிதத்தை சமநிலையற்றதாக மாற்றக்கூடிய பிற ஊட்டச்சத்துக்களும் உள்ளன. குறிப்பாக தயிர், பாலாடைகட்டி போன்றவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டாம்.

4. பழங்கள்: இவைகளில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை முதுகெலும்பு பகுதியை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைத்திருக்க உதவும். இருப்பினும் உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச்செய்யும் தன்மை கொண்டதால் பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளக்கூடாது. பெர்ரி வகை பழங்களை உட்கொள்வது முதுகெலும்புக்கு நலம் சேர்க்கும்.

5. காய்கறிகள்: பொதுவாக காய்கறிகள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவும் காய்கறிகள் ஏராளம் உள்ளன.

காய்கறிகள் மற்றும் அதில் இருந்து பெறப்படும் ஊட்டச்சத்துக்களின் எண்ணிக்கை குறைவதால் முதுகெலும்பு பிரச்சினைகள் ஏற்படலாம். குறிப்பாக பச்சை காய்கறிகள் முதுகெலும்புகளில் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கவும், எலும்பு அமைப்பை வலுவாக்கவும் துணைபுரியும்.

முட்டைக்கோஸ், புரோக்கோலி மற்றும் கீரை ஆகியவை முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டவை. இவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் முதுகெலும்பு தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.

6. மூலிகைகள் மற்றும் மசாலாக்கள்: முதுகெலும்புக்கு வலு சேர்க்கும் பயனுள்ள மூலிகைகள் பல உள்ளன. சுவைக்காகவும், உடல் நலனுக்காகவும் இந்திய உணவுகளில் மசாலாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. மஞ்சள் போன்ற சில மசாலாப் பொருட்கள், சேதமடைந்த திசுக்களை சரிசெய்ய உதவுகின்றன.

இஞ்சி, துளசி, ரோஸ்மேரி, லவங்கப்பட்டை போன்ற மூலிகை மற்றும் மசாலாப் பொருட்கள் முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியவை. சில மருந்துகளில் கூட இவை பயன்படுத்தப்படுகின்றன. மசாலாப் பொருட்கள், மூலிகைகளை பயன்படுத்தி டீ தயாரித்தும் பருகலாம்.

TNPSC - Agri Eng - Old Question paper


  • ASSISTANT ENGINEER(AGRICULTURAL ENGINEERING) IN THE TAMIL NADU AGRICULTURAL ENGINEERING SERVICE - 2017 - AGRICULTURAL ENGINEERING


National Farmers Database

 The Centre has created a National Farmers’ Database with records of 5.5 crore farmers, which it hopes to increase to 8 crore farmers by December by linking it to State land record databases, according to Agriculture Minister Narendra Singh Tomar.

  • Farmers’ database is key to advances in digital agriculture. Agriculture has to be linked with digital technology, scientific research and knowledge.
  • The national database was created by taking data from existing national schemes such as PM-KISAN, soil health cards and the insurance scheme PM Fasal Bima Yojna.
  • So far, 5.5 crore farmers had been identified in this manner.
  • The Minister urged the States to create their own databases using the national database’s federated structure and also allow linkages to the land records maintained by the States.
  • With the help of State governments, a total of eight crore farmers would be included by the end of the year. He also urged to study the Karnataka model for digital agriculture presented at the conference.
  • In July, Mr. Tomar told the Lok Sabha that the database could be used “for targeted service delivery with higher efficiency and in a focussed and time-bound manner” and that it was the core for the proposed Agristack digital agriculture ecosystem.
  • Already, companies such as Microsoft, Amazon and Patanjali had been asked to develop technology solutions for farmers using data from the database.
  • Activists have raised privacy and consent concerns about using farmers’ data in such a way.

Fortified Rice Kernels (FRK)

 Centre government, for the first time issued uniform specifications for Fortified Rice Kernels (FRK) for grade A & Common Rice. The specifications have been issued by the Ministry of Consumer Affairs, Food and Public Distribution.

  • The fortified rice is to be distributed under various government schemes, including the public distribution system (PDS) and midday meals in schools, by 2024.

Rice fortification:

  • The country has high levels of malnutrition among women and children.
  • According to the Food Ministry, every second woman in the country is anaemic and every third child is stunted.
  • India ranks 94 out of 107 countries and is in the ‘serious hunger’ category on the Global Hunger Index (GHI).
  • Malnutrition and lack of essential nutrients in poor women and poor children poses major obstacles in their development.
  • Food fortification is defined as the practice of adding vitamins and minerals to commonly consumed foods during processing to increase their nutritional value.
  • It is a proven, safe and cost-effective strategy for improving diets and for the prevention and control of micronutrient deficiencies.
  • The Food Safety and Standards Authority of India (FSSAI), defines fortification as “deliberately increasing the content of essential micronutrients in a food so as to improve the nutritional quality of food and to provide public health benefit with minimal risk to health”.
  • According to the Food Ministry, fortification of rice is a cost-effective and complementary strategy to increase vitamin and mineral content in diets.
  • According to FSSAI norms, 1 kg fortified rice will contain iron (28 mg-42.5 mg), folic acid (75-125 microgram) and Vitamin B-12 (0.75-1.25 microgram).
  • In addition, rice may also be fortified with micronutrients, singly or in combination, with zinc (10 mg-15 mg), Vitamin A (500-750 microgram RE), Vitamin B1 (1 mg-1.5 mg), Vitamin B2 (1.25 mg-1.75 mg), Vitamin B3 (12.5 mg-20 mg) and Vitamin B6 (1.5 mg-2.5 mg) per kg.
  • Since the nutrients are added to staple foods that are widely consumed, this is an excellent method to improve the health of a large section of the population, all at once.
  • Fortification is a safe method of improving nutrition among people. The addition of micronutrients to food does not pose a health risk to people.
  • It does not require any changes in food habits and patterns of people. It is a socio-culturally acceptable way to deliver nutrients to people.
  • It does not alter the characteristics of the food—the taste, the feel, the look.
  • It can be implemented quickly as well as show results in improvement of health in a relatively short period of time.
  • This method is cost-effective especially if advantage is taken of the existing technology and delivery platforms.

Zero Budget Natural Farming

 Women farmers in the hill State of Himachal Pradesh are gradually turning to non-chemical, low cost “natural farming”, which has not only provided them with a sustainable livelihood but also empowered them better.

  • Launched in 2018, the State’s Prakritik Kheti Khushhal Yojana (PK3Y) is promoting the climate resilient Subhash Palekar Natural Farming (SPNF), also called ‘Zero Budget Natural Farming’.
  • ZBNF is a set of farming methods, and also a grassroots peasant movement, which has spread to various states in India.
  • ‘Zero Budget’ means without using any credit, and without spending any money on purchased inputs. ‘Natural farming’ means farming with Nature and without chemicals.
  • Under ZBNF, neither fertiliser nor pesticide is used. Also, only 10 % of water is to be utilised for irrigation as compared to traditional farming techniques.
  • Basic concept of ZBNF, which is different from organic farming, is to ensure that profit from supplementary crops is enough to cover the cost of production of the main crop.
  • It has attained wide success in southern India, especially the southern Indian state of Karnataka where it first evolved.
  • The movement in Karnataka state was born out of by the efforts of Padma Shri Subhash Palekar in Karnataka.

What are Bioenergy Crops?

 A new study has found that converting annual crops to perennial bioenergy crops can induce a cooling effect on the areas where they are cultivated.

  • The researchers simulated the biophysical climate impact of a range of future bioenergy crop cultivation scenarios. Eucalyptus, poplar, willow, miscanthus and switchgrass were the bioenergy crops used in the study.
  • The study also demonstrated the importance of the crop type choice, the original land use type upon which bioenergy crops are expanded, the total cultivation area and its spatial distribution patterns.

Bioenergy Crops:

  • Crops from which Biofuels are produced or manufactured are called Biofuel crops or Bioenergy Crops. “Energy crops” is a term used to describe biofuel crops.
  • Wheat, corn, main edible oilseeds/edible oils, sugarcane, and other crops are among them.
  • Biofuels have a number of advantages over fossil fuels, including the ability to burn cleaner and emit fewer pollutants and greenhouse gases, such as carbon dioxide, into the sky.
  • They’re also environmentally friendly, and energy corporations frequently mix Biofuels with gasoline.

Crop Diversification

 

Crop Diversification:

 

In the annual Economic Survey, the Department of Economic Affairs said that there is an urgent need for Crop Diversification in view of the severe water stress in areas where paddy, wheat and sugarcane are grown as well as to increase oil seed production and reduce dependency on imports of cooking oil.

  • Crop diversification refers to the addition of new crops or cropping systems to agricultural production on a particular farm taking into account the different returns from value-added crops with complementary marketing opportunities.
  • Cropping System refers to the crops, crop sequences and management techniques used on a particular agricultural field over a period of years.
  • Major cropping systems in India are sequential-cropping, monocropping, intercropping, relay Cropping, mixed-cropping and alley cropping.
  • Many farmers also use the mixed crop-livestock system to increase their standards of living and income.
    Animal husbandry or Animal Agriculture is the branch of science dealing with the practice of breeding, farming and care of farm animals (livestocks) such as cattle, dogs, sheep and horses by humans for advantages.
  • It refers to livestock raising and selective breeding. It is a branch of agriculture.

Greenhouse Horticulture: Important Points

 The India Greenhouse Horticulture market held a market value of USD 190.84 Million in 2021 and is estimated to reach USD 271.25 Million by the year 2030.

  • The market is expected to register a growth rate of 4.19% over the projected period. In 2021, India’s greenhouse horticulture production was 27.71 million tonnes.
  • Greenhouse Horticulture is also known as protected cropping. It is the production of horticultural crops within, under or sheltered by structures for providing modified growing conditions and/or protection from adverse weather, pests, and diseases.
Growth Influencers:
  • Robust increase in population and food demand.
  • Rising entrepreneurship under horticulture due to government intervention.
  • The term horticulture is derived from two Latin words hortus, meaning ‘garden’, and cultura meaning ‘cultivation’ hence meaning, crops cultivated in a garden cultivation.
  • It is a science and art of production, utilisation and improvement of fruits, vegetables, flowers and other plants for human food, non-food uses and social needs.
  • L.H. Bailey is considered the Father of American Horticulture and M.H. Marigowda is considered the Father of Indian Horticulture.

Mission for Integrated Development of Horticulture (MIDH):

  • Centrally Sponsored Scheme for the holistic growth of the horticulture sector covering fruits, vegetables and other areas.
  • Under MIDH, Government of India contributes 60% of the total outlay for developmental programmes in all the states (except North Eastern and Himalayan states where GOI contributes 90%) & 40% is contributed by State governments.
  • It has five major schemes on horticulture-
    • National Horticulture Mission (NHM)
    • Horticulture Mission for North East and Himalayan States (HMNEH)
    • National Horticulture Board (NHB)
    • Coconut Development Board (CDB) &
    • Central Institute of Horticulture (CIH), Nagaland.

National Horticulture Board (NHB):

  • It was set up in 1984 on the basis of recommendations of the “Group on Perishable Agricultural Commodities”, headed by Dr M. S. Swaminathan.
  • Headquartered at Gurugram.
  • Objective is to improve integrated development of Horticulture industry and to help in coordinating, sustaining the production and processing of fruits and vegetables.

இல்லத்தரசிகள் வருமானம் ஈட்டும் எளிய வழிகள்

 ல்லத்தரசிகள் வீட்டில் இருந்தபடியே எளிமையான வகையில் வருமானம் ஈட்டலாம். உங்கள் வருமானத்தின் அளவையும், வழியையும் தீர்மானம் செய்வது நீங்கள் எத்தகைய தொழிலை மேற்கொள்ளப்போகிறீர்கள் என்பதே. பெரும்பாலும் தினசரி பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு தொழில் தொடங்குவது உடனடி வருமானத்தை தரும். சிறிது அதிக உழைப்பு மற்றும் நேரத்தை செலவிடுவதன் மூலம் நீண்ட கால வருமானத்தை ஈட்ட முடியும். அவை குறித்து இங்கே பார்ப்போம்.



உணவுப் பொருட்கள் தயாரிப்பு:

தினசரி பயன்படுத்தக்கூடிய உணவுப்பொருட்களை தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் எளிதாக வருமானத்தை ஈட்ட முடியும். உதாரணமாக தோசை மாவு, இட்லி பொடி, மசாலா பொடி மற்றும் ரெடிமேட் மிக்ஸ், லஞ்ச் பாக்ஸ் என்ற வீட்டு உணவு தயாரித்து விற்பனை செய்யலாம். குறைந்த முதலீடு, நேரம் மற்றும் உழைப்பின் மூலம் தினசரி வருமானம் பெற இது சிறந்தது. தொடர் வாடிக்கையாளர்களை பெற்ற பின்பு அதிக வருமானம் ஈட்ட முடியும்.

ஆன்மிகம் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு:

உங்கள் பகுதியில் உள்ள பெண்கள் அல்லது உங்கள் குடும்பத்தினருடன் இணைந்து விளக்கு திரி, ஊதுவர்த்தி, சாம்பிராணி, கற்பூரம், பன்னீர் மற்றும் குங்குமம் போன்ற ஆன்மிகம் சார்ந்த பொருட்களை நீங்கள் தயார் செய்து விற்பனை செய்யலாம். இது நிரந்தர வருமானம் கிடைக்க சிறந்த வழி. இப்பொருட்களுக்கு என்றும் விலை குறைவு ஏற்படாது. தவிர, இப்பொருட்கள் தினசரி பயன்படுத்தப்படுவதால் இதன் தேவை எப்போதும் இருக்கும். அதேபோல் இத்தொழில் மூலம் உங்களுடன் சேர்ந்து உங்களைச் சார்ந்த அல்லது உங்களுடன் இணைந்து வேலை செய்பவர்களுக்கு நிலையான வருமானத்தைக் கொடுக்கும். மேலும், இவற்றின் முதலீடும் குறைவாகவே இருக்கும்.

இதர பொருட்கள்:

மெழுகுவர்த்தி, மேசை மற்றும் ஷோகேஸ் அழகுப் பொருட்கள், குளியல் மற்றும் துணி சலவை செய்யும் சோப், பவுடர்கள், வீட்டை சுத்தம் செய்ய உதவும் பொருட்கள், கால்மிதி, துடைப்பம், பேனா, வளையல், புத்தகம் மற்றும் பாத்திரங்கள் வைக்கும் ஸ்டாண்டுகள், சருமத்துக்குப் பயன்படுத்தும் லோஷன், எண்ணெய், பவுடர், கிரீம்கள், ஜெல் மற்றும் கூந்தலுக்குப் பயன்படுத்தும் டை, ஷாம்பு மற்றும் கண்டிசனர் போன்றவற்றை தயார் செய்து விற்பனை செய்யலாம். தவிர, ஆடை வடிவமைப்பு, எம்பிராய்டரி, ஆரி மற்றும் இதர தையல் வேலைகள் போன்றவற்றையும் முயற்சி செய்யலாம். இவை தினசரி பயன்பாட்டுக்குத் தேவைப்படுபவையாக இருப்பினும், இதன் பயன்பாடு நீண்ட நாட்கள் வரை வரும். எனவே இத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு பொதுவாக தொழில் தொடங்கி சில காலங்களுக்குப் பின்னரே லாபம் கிடைக்கும். ஆகையால் உங்களுடைய தயாரிப்பு ஒரு நிலையான பெயரை அடையும் வரை காத்திருப்பது அவசியம். 

காய்கறி தோட்டம் அமைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை..

 மாடித் தோட்டம், வீட்டுத்தோட்டம், பால்கனியில் தோட்டம் என வீட்டின் எந்த பகுதியில் தோட்டம் அமைத்தாலும் செடிகளின் வகை மற்றும் தன்மையைப் பொறுத்து அவற்றின் இடம் மற்றும் பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். பலரது வீட்டுத் தோட்டத்திலும் அதிகளவு இடம் பெறுவது காய்கறி செடிகளே. பொதுவாக காய்கறி தோட்டம் அமைக்கும் போது நாம் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அவை:


காய்கறி தோட்டம் அமைப்பதற்கு சிறிது பொறுமையும், அதிக நேரமும் தேவை. அதேநேரம், காய்கறி தோட்டத்தால் நமக்குக் கிடைக்கும் பலன்களும் அதிகம். முதலில் வளர்க்க விரும்பும் காய்கறிகளின் பட்டியலைத் தயார் செய்யுங்கள். பின், அவற்றின் அளவை நிர்ணயம் செய்யுங்கள். வீட்டுக்குத் தேவையான அளவு எனில் அதற்கேற்றவாறு நம் நடவு முறையை மாற்றிக் கொள்ளலாம். முதன் முதலில் தோட்டம் அமைப்பவர்கள் புதினா, கொத்தமல்லி, கீரை, மிளகாய் மற்றும் தக்காளி போன்ற செடிகளில் இருந்து தொடங்கலாம்.

செடியின் வகையைத் தேர்வு செய்த பின்னர், அவற்றுக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்; தேவையான சூரிய ஒளியின் அளவு, இடம் ஆகியவற்றை முன்னரே கணித்து பின் அந்த செடியை வளர்ப்பதற்கான இடத்தை நிர்ணயிக்க வேண்டும். சில காய்கறிச் செடிகள், கீரைச் செடிகளைஅதிக சூரிய ஒளியில் இருந்து காக்க, பச்சை வலையை செடியின் மேல் பொருத்தி, சிறிதளவு நிழலை உருவாக்கலாம். இது மணலை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.

திறந்தவெளியில் தோட்டம் அமைப்பவர்கள், காய்கறி செடிகளுக்கென தனியே ஒரு இடத்தை ஒதுக்கி அதில் மட்டும் காய்கறி செடிகளை வளர்க்கலாம். மாடித்தோட்டம் அமைப்பவர்கள், பெரிய டிரே அல்லது தொட்டிகளில் செடி வளர்ப்பை தொடங்கலாம். ஒரே தொட்டிக்குள் இரண்டு முதல் மூன்று வகைச் செடிகளை வளர்க்கலாம். பால்கனியில் செடி வளர்ப்பவர்கள், அடுக்கு வடிவிலான தோட்ட அமைப்பை பின்பற்றலாம். இது குறைந்த இடத்தில் அதிக செடிகளை வளர்க்க உதவும்.



காய்கறி தோட்டம் அமைக்கும்போதே அதை எளிதாக பராமரிக்கும் வகையிலும், சுத்தம் செய்ய ஏதுவாக இருக்கும் வகையிலும் வடிவமைப்பது அவசியம். காய்கறி செடிகளைச் சுற்றியோ, அருகிலோ பூச்செடிகள் வளர்ப்பதைத் தவிர்க்கலாம். இது காய்கறி செடிகளில் வளரும் களைகளை அப்புறப்படுத்த இடையூறை உண்டாக்கும்.

அடுத்து உரம். செடியைத் தேர்ந்தெடுக்கும்போதே அவற்றுக்குத் தேவையான உரம் குறித்தும் அறிந்து வைத்துக்கொள்வது நல்லது. முடிந்தவரை வீட்டில் உரம் தயாரித்து பயன்படுத்தலாம். உரத்துடன் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் தண்ணீர். காய்கறி தோட்டம் வைத்திருப்பவர்கள் சரியான நேர இடைவெளியில் தண்ணீர் ஊற்ற வேண்டியது அவசியம். இதற்கு சொட்டு நீர் அல்லது மிஸ்டு முறையைக் கூட பின்பற்றலாம். 

தினமும் ரூ95 முதலீடு… ரூ14 லட்சம் வருமானம் – போஸ்ட் ஆபீஸ் மேஜிக் ஸ்கீம்

 

கிராம சுமங்கல் யோஜனா திட்டத்தில் தினமும் ரூ. 95 சேமித்தால் போதும், 14 லட்சத்திற்கு அதிபதியாகும் மேஜிக்கை இங்கே காணலாம்.



தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பான முதலீட்டு சாய்ஸ் மட்டுமின்றி நல்ல வருமானமும் கிடைக்கக்கூடிய திட்டங்கள் ஆகும். இதில் இருக்கும் மிக முக்கியமான திட்டங்களில் இந்த கிராம சுமங்கல் யோஜனா திட்டமும் ஒன்று.

தபால் துறையின் சுமங்கல் அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்டம் என்பது ஒரு எண்டோவ்மெண்ட் பாலிசியாகும். இது கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு திட்டமாகும். இது கிராமப் புறங்களில் வசிக்கும் மக்களுக்குப் பணத்தை திருப்பி தருவதோடு கூடவே காப்பீட்டையும் தருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் இரண்டு வகையான திட்டங்கள் உள்ளன. ஒன்று அஞ்சல் ஆயுள் காப்பீடு, மற்றொருன்று கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு (RPLI) திட்டமாகும்.

இந்தியாவின் கிராமப்புற மக்களுக்காக கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு 1995 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

கிராம சுமங்கல் யோஜனா திட்டம் விவரம்

ஒன்று 15 ஆண்டுகால பாலிசி. மற்றொன்று 20 ஆண்டுகால பாலிசி. இந்த பாலிசியின் நுழைவு வயது 19 வயதாகும். 15 ஆண்டுகள் வரையறையான காலத்திட்டத்தைப் பெற அதிகபட்ச வயது 45 ஆண்டுகள் ஆகும் மற்றும் 20 ஆண்டுகள் கொண்ட பாலிசி பெற அதிகபட்ச வயது 40 ஆண்டுகள் ஆகும்.

திட்டத்தின் பலன்கள்

15 years Policy – 6 ஆண்டுகள், 9 ஆண்டுகள் மற்றும் 12 ஆண்டுகளில் 20-20 சதவீத பணம் திரும்பப் பெறுவீர்கள். முதிர்வு காலத்தில் மொத்த பணத்துடன் மீதமுள்ள 40 சதவீத பணம் போனஸாக வழங்கப்படும்.

20 years Policy – 8 ஆண்டுகள், 12 ஆண்டுகள் மற்றும் 16 ஆண்டுகள் நிறைவடைந்தால் 20-20 சதவீத பணத்தை நீங்கள் பெறுவீர்கள். திட்டம் முதிர்ச்சி காலத்தில் மொத்த பணத்துடன் மீதமுள்ள 40 சதவீத பணம் போனஸாக வழங்கப்படும்.

தினமும் ரூ95 முதலீடு

25 வயதான ஒருவர் 20 ஆண்டு பாலிசியை , ரூ7 லட்சம் உறுதி தொகையுடன் எடுத்திருந்தால், மாதத்திற்கு ரூ .2,853 பிரீமியம் செலுத்த வேண்டும். அதாவது, ஒரு நாளைக்கு ரூ .95 செலுத்த வேண்டும். காலாண்டு பிரீமியம் ரூ .8,449 ஆகவும், அரையாண்டு பிரீமியம் ரூ .16,715 ஆகவும், ஆண்டு பிரீமியம் ரூ .32,735 ஆகும்

14 லட்சம் முதிர்ச்சியில் பெறுவது எப்படி

8, 12 மற்றும் 16 ஆண்டுகளில் 20 சதவீதத்தில் ரூ .1.4 -1.4 லட்சம் பெறுவார். இறுதியாக, 20 ஆம் ஆண்டில்,உத்தரவாதமாக ரூ .2.8 லட்சமும் வழங்கப்படும்.

1000 ரூபாய்க்கு ஆண்டு போனஸ் ரூ48 ஆகும். அதாவது ரூ .7 லட்சம் உறுதி செய்யப்பட்ட தொகைக்கான ஆண்டு போனஸ் ரூ33 ஆயிரத்து 600 ஆகும். இந்த போனஸ் தொகை மொத்த பாலிசி காலத்திற்கு வழங்கப்படும். அதன்படி, 20 ஆண்டு கால பாலிசிக்கு போனஸாக ரூ6.72 லட்சம் வழங்கப்படுகிறது.

20 ஆண்டு கால பாலிசி காலத்தில் மொத்தம் ரூ. 13.72 லட்சம் லாபம் ஈட்டப்படும். இதில், 4.2 லட்சம் விதிமுறைகளின் படி முன்பே வழங்கப்பட்டுவிடும். மீதமுள்ள ரூ .9.52 லட்சம் முதிர்வு காலத்தில் செலுத்தப்படும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் தினமும் ரூ. 95 சேமித்தால் போதும் 14 லட்சத்திற்கு அதிபதியாகலாம்.

இம்யூனிட்டி, இரும்புச் சத்து… தினமும் 6 கருப்பு உலர் திராட்சை சாப்பிடுங்க!

 


உடல ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது சத்தான ஆகாரங்கள் மற்றும் உணவு பொருட்கள். தினமும் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது பல்வேறு உடல் நலக்குறைபாடுகளை தவிர்க்கலாம். இதில் உடலுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை கொடுப்பதும், நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய உலர் திராட்சை முக்கிய பயனை கொடுக்கிறது.

தினமும் இரவில் ஆறு கருப்பு திராட்சைகளை ஊற வைத்து. மறுநாள் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் ஊறவைத்த கருப்பு திராட்சையை சாப்பிடுங்கள். ​​இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் நமது முன்னோர்கள் கருப்பு திராட்சை சருமம் மற்றும் கூந்தலுக்கு சிறந்ததாக இருக்கும் என்று நம்பினர்.

உலர்ந்த கருப்பு திராட்சையை ஊறவைத்தால், முக்கியமாக இரண்டு நன்மைகள் நடக்கும். திராட்சையில் உள்ள அழுக்குகளை கழுவி, அதன் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் உயிர் கிடைக்கும் தன்மையை அதிகரிக்கும். அதில் உள்ள வைட்டமின்களை உங்கள் உடல் நன்றாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

மலச்சிக்கலை எளிதாக்குகிறது மற்றும் குடல் இயக்கத்தை சீராக்குகிறது

கருப்பு திராட்சையை இரவில் ஊறவைத்தால், சாப்பிட்டால் மலமிளக்கியாக செயல்படும். நார்ச்சத்து அதிகம் உள்ளதால், காலையில் உங்கள் குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது. உங்கள் தோல் மற்றும் முடியின் தரம் மற்றும் ஆரோக்கியம் உங்கள் குடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தது.

நீரேற்றம் இல்லாமை, குறைந்த நார்ச்சத்து உட்கொள்ளல், மோசமான உணவுப் பழக்கம், அதிகப்படியான சர்க்கரை, நாள்பட்ட அழற்சி மற்றும் மோசமான குடல் நுண்ணுயிரி காரணமாக பலர் மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளனர். உங்களுக்கு அதிக மலச்சிக்கல் இருந்தால், ஊறவைத்த கருப்பு திராட்சை உங்களுக்கு நல்லது.

உங்களை முழுதாக வைத்திருக்கிறது மற்றும் பசியைக் கட்டுப்படுத்தும்.

நீங்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகள், தவறான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் தவறான உணவுகளை உட்கொள்ளும்போது, ​​​​அவற்றில் நார்ச்சத்து இல்லாததால் மீண்டும் மீண்டும் பசியுடன் உணர்கிறீர்கள். ஆனால், நார்ச்சத்து அதிகம் உள்ள ஊறவைத்த கருப்பு திராட்சை எடுத்துக்கொள்ளும்போது நீங்கள் நீண்ட நேரம் முழுதாக இருக்க உதவுகிறது மற்றும் மனச்சோர்வை தவிர்க்க உதவுகிறது. ஊறவைத்த திராட்சை உங்கள் இரத்த சர்க்கரை அளவை கூடுதல் கலோரிகளை சேர்க்காமல் பராமரிக்க உதவுகிறது. மேலும் இதில் இயற்கையான சர்க்கரைகள் இருப்பதால், அவை ஆரோக்கியமான சிற்றுண்டியாகவும் இருக்கும். இது உங்கள் எடையை நிர்வகிப்பதற்கும் சர்க்கரை பசியைக் கட்டுப்படுத்துவதற்கும் பெரும் பங்கு வகிக்கும்.

உங்கள் கண்களைப் பாதுகாக்கிறது

ஊறவைத்த திராட்சைகளில் பாலிஃபீனால்கள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் என்ற ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இவை உங்கள் கண்களை ஃப்ரீ ரேடிக்கல் சேதம், வயது தொடர்பான மாகுலர் சிதைவு மற்றும் கண்புரை ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதன் மூலம் கண் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் ஒரு பங்கை வகிக்க முடியும்.

இரும்புச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகையை எதிர்த்துப் போராடும்

ஊறவைத்த கருப்பு திராட்சையில், இரும்பு, பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. இரத்த சோகை அல்லது ஹீமோகுளோபின் குறைபாடு அதிகம் உள்ள நம் நாட்டில், ஊறவைத்த திராட்சை சக்திவாய்ந்ததாக இருக்கும். சிவப்பு இரத்த அணுக்கள் (RBCs) உற்பத்தியை ஊக்குவிக்கும் தாமிரம் அவற்றில் உள்ளது.

உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

உங்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் இருந்தால் அல்லது உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊறவைத்த கருப்பு திராட்சையை சாப்பிடலாம் ஊறவைத்த கருப்பு திராட்சைகளில் அதிக அளவு பாஸ்பரஸ் (பெரிய தாது), போரான் (கனிம தாது) மற்றும் கால்சியம் உள்ளது. போரான் மற்றும் கால்சியம் இரண்டும் உங்கள் எலும்பு மேட்ரிக்ஸ் மற்றும் எலும்பு தாது அடர்த்தியின் ஒருமைப்பாட்டை பராமரிக்க அவசியம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

கருப்பு திராட்சைகளில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவாக அமைகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், அவை உங்கள் உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றன. இவற்றில் உள்ள ஃபிளாவனாய்டுகள் தொற்று நோய்களைத் தடுக்கின்றன. இவை இனிமையாக இருப்பதால் உங்கள் குழந்தைகள் அதை விரும்புவார்கள்.

வெயில் வாட்டி வதைக்குதா… உடலை குளிர்விக்கும் இந்த 5 உணவுகள் ட்ரை பண்ணுங்க!

 

உடல் சூட்டை தணித்து குளிர்விக்கும் உணவுகளின் பட்டியலை ஊட்டச்சத்து நிபுணர் அவ்னி கவுல் விளக்குகிறார். அதனை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.



குளிர்பானங்கள், சர்க்கரை கலந்த ஐஸ்கிரீம் போன்றவை உடலுக்கு கெடு விளைவிக்கும் என்பதை அனைவரும் அறிந்திருப்போம். ஆனால், வெயிலை தணிக்க நாம் குடிக்கு ஐஸ் வாட்டர், நம் உடலில் வெப்பத்தை மீண்டும் வரவழைத்து, கூடுதல் வெப்பத்தை உடலில் உருவாக்கும் என்பதை அறிந்திருக்க மாட்டீர்கள்.

எனவே, உடலுக்கு கெடு விளைவிக்காத வகையில், சூட்டை தணித்து உடலை குளிர்விக்கும் உணவுகளின் பட்டியலை ஊட்டச்சத்து நிபுணர் அவ்னி கவுல் விளக்குகிறார்.

தர்பூசணி

தர்பூசணி மிகச் சிறந்த கோடைகால உணவாகும். இதில் கிட்டத்தட்ட 91.45% தண்ணீர் உள்ளதால், உடலின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய உதவுகிறது. மேலும், அதிலிருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், உடலுக்கு அருமையான குளிர்ச்சியை தருகிறது.

வெள்ளரிக்காய்

நார்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காயை கோடை காலத்தில் சாப்பிட்டால் மலச்சிக்கலைத் தடுக்கலாம்.மேலும், அதில் அதிகளவு நீர்ச்சத்தும் உள்ளது.

புதினா இலை

புதினா பிரபலமான மூலிகையாகும். அனைத்து காய்கறி விற்பனையாளர்களிடமும் எளிதாகக் கிடைக்கும். தயிர் அல்லது நீங்கள் பருகும் குடிநீரில் புதினாவை சேர்ப்பது கூடுதல் நன்மைகளை உங்களுக்கு கிடைத்திடும். புதினா உங்கள் உடல் வெப்பநிலையை குளிர்ச்சியாக வைத்திருப்பது மட்டுமின்றி புத்துணர்ச்சியும் அளிக்கிறது.

வீட்டில் தயாரிக்கப்பட்ட தயிர்

வீட்டில் தயாரிக்கப்பட்ட தயிர் ஒரு சிறந்த புரோபயாடிக் ஆகும். , இது குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. உடலை குளிர்விப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தயிரை வெவ்வேறு வகைகளிலும் சாப்பிடலாம். ஸ்வீட் லஸ்ஸி அல்லது ஸ்பைசி மோர் செய்யலாம். மாறாக, ரைத்தாக ரெடி செய்து, சாப்பாட்டுடன் சாப்பிடலாம். தயிர் சாப்பிடுவதை உறுதிச்செய்ய, அத்துடன் சில பருவகால பழங்களைச் சேர்த்துக்கொள்வது ஆகும்.

தேங்காய் தண்ணீர்

உலகம் முழுவதும், தேங்காய் தண்ணீர் சிறந்த கோடைகால பானமாக கருதப்படுகிறது. அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தேங்காய் தண்ணீர், உடலை குளிர்ச்சியாக்கிறது.