தமிழ்நாட்டில் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது

 மாணவர் சேர்க்கை 1 லட்சத்தை கடந்தது

560126

தமிழ்நாட்டில் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது


தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 2026-27ஆம் கல்வி ஆண்டுக்கு 1ஆம் வகுப்புகளில் 97,737 பேர் சேர்ந்துள்ளனர்; 2 முதல் 8ஆம் வகுப்பு வரை 8,178 பேர், மழலையர் வகுப்புகளில் 6,796 மாணவர்கள் என மொத்தம் 1,12,711 பேர் சேர்ந்துள்ளனர் - தமிழ்நாடு அரசு

3வது குழந்தை பிறப்பு மற்றும் அதைத் தொடர்ந்த குழந்தை பிறப்புகளுக்கும் 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு அனுமதித்தல் - DSE செயல்முறைகள்!!!

 3வது குழந்தை பிறப்பு மற்றும் அதைத் தொடர்ந்த குழந்தை பிறப்புகளுக்கும் 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு அனுமதித்தல் - DSE செயல்முறைகள்!!!

இணைப்பு: அரசாணை, அரசுக் கடிதம் மற்றும் நீதிமன்ற ஆணை.👇👇👇

DSE - Maternity Leave 3rd and above Child - Download here

தகவல் தொகுப்பு....

BY N.PALANISELVAM,

PGT, COMMERCE,

GHSS, HIGHWAVYS - 625515

UTHAMAPALAYAM - TK

THENI - DT

பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் - புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் - 2026-27 திட்டச் செயல்பாடு - இயக்குநர் செயல்முறைகள்

 563890

பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் - புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் - 2026-27 திட்டச் செயல்பாடு - இயக்குநர் செயல்முறைகள் 

கற்போர் மதிப்பீடு நாள் 18.10.2026

2026-2027 NILP Circular.pdf

👇👇👇👇

Download here

கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள் வெளியீடு!

 கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள் வெளியீடு!

👇👇👇

DSE - Summer Season Instructions.pdf

Download here

அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறை பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் வெளியீடு

 அரசு பள்​ளி​களில் உள்ள திறன்​மிகு வகுப்​பறை​கள், கணினிகள் ஆகிய​வற்​றின் பாது​காப்​பு, பராமரிப்​புக்​கான வழி​காட்​டு​தல்​களை பள்​ளிக் கல்​வித்​துறை வெளி​யிட்​டுள்​ளது.

தமிழகத்​தில் 22,418 அரசு தொடக்​கப் பள்​ளி​களில் திறன்​மிகு வகுப்​பறை​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன. அதே​போல் 6,992 அரசு நடுநிலைப் பள்​ளி​களில் உயர் தொழில்​நுட்ப ஆய்​வகங்​கள் நிறு​வப்​பட்​டுள்​ளன.

திறன்​மிகு வகுப்​பறைக்​காக ஒலி-ஒளி அமைப்​பு​கள், இன்​ட​ராக்​டிவ் பிளாட் பேனல்​கள், டிஜிட்​டல் கற்​றல் மேலாண்மை அமைப்​பு​கள் (எல்​எம்​எஸ்) பயன்​படுத்​தப்​படு​கின்​றன. அனைத்து பள்​ளி​களுக்​கும் தடையற்ற இணைய சேவை வழங்​கப்​பட்டு வரு​கிறது.


பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள திறன்மிகு வகுப்பறைகள் பாடப் பகுதிகளை வீடியோக்கள், முப்பரிமாண(3-டி) அனிமேஷன் மூலம் எளிமையாகப் புரிந்துகொள்ளவும், மாணவர்களின் கவனத்தை ஈர்க்கவும் உதவுகிறது.


இந்த நிலையில் கோடை விடுமுறையில் திறன்மிகு வகுப்பறைகளின் பாதுகாப்பு, பராமரிப்புக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் உள்ள கணினி, திறன் பலகை ஆகியவற்றை முறையாக ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும். அதேநேரத்தில் ட்ரிப்பர், கண்காணிப்பு கேமரா, யுபிஎஸ், மின் இணைப்பு மீட்டர் ஆகியவற்றின் பொத்தான்களை அணைக்கக் கூடாது.


கோடை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், மழைச் சாரல் திறன் வகுப்பறையில் படாதவாறு கதவு மற்றும் ஜன்னல்கள் முழுமையாக மூடி வைக்க வேண்டும்.


மேலும் இணைய இணைப்பு மற்றும் மோடம் ஆகியவற்றையும் ஸ்விட்ச் ஆஃப் செய்யக் கூடாது. இவை அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு வழிகாட்டுதல்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளது


EMIS - மாணவர்களுக்கு TC வழங்கும் வழிமுறைகள்

 EMIS - மாணவர்களுக்கு TC வழங்கும் வழிமுறைகள்

👇👇👇👇

Download here

NEET UG 2026 - Hall Ticket Download - Direct Link

 2025 இளநிலை நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.




மே 3 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது ; தேர்வர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை




NEET – உதவி எண்கள் (Helpline Numbers) அறிவிப்பு

 நீட் தேர்வு - உதவி எண்கள் அறிவிப்பு.



நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றமின்றி தேர்வை எதிர்கொள்ள தேசிய தேர்வு முகமை (NTA) முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.


உயிரை விட எதுவும் முக்கியம் இல்லை என்று கூறியுள்ள NTA, மிகுந்த மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை உணரும் மாணவர்கள் 14416 அல்லது 1-800-891-4416 ஆகிய உதவி எண்களில் பல மொழிகளில் ஆலோசனை பெறலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.


நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது - Direct Link

 நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது

558176

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.

மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் https://neet.nta.nic.in வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மே 3ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடைபெறுகிறது


முழு ஆண்டுத் தேர்வு மதிப்பெண் ‘எமிஸ்’ தளத்தில் ஏப்.30-க்குள் பதிவேற்றம்

 பள்ளி மாணவர்​களின் முழு ஆண்​டுத் தேர்வு மதிப்​பெண்​களை எமிஸ் தளத்​தில் ஏப்​.30-ம் தேதிக்​குள் பதிவேற்​றம் செய்ய தொடக்​கக் கல்வி இயக்​குநர் நரேஷ் உத்​தர​விட்​டுள்​ளார்.

இதுதொடர்​பாக மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்கு (தொடக்​கக் கல்​வி) அவர் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​: தொடக்​கக் கல்வி இயக்​ககத்​தின்​கீழ் செயல்​படும் அனைத்து அரசு, அரசு நிதி​யுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்​ளி​களில் 3-ம் பருவ மதிப்​பீடு மற்​றும் முழு ஆண்​டுத் தேர்​வு​கள் நடை​பெற்​றுள்​ளன.

இத்​தேர்​வு​களில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையி​லான மாணவர்​களின் மதிப்​பெண்​களை ஆசிரியர்​கள், தலைமை ஆசிரியர்​கள் ஏப்​.30-ம் தேதிக்​குள் ‘எமிஸ்’ தளத்​தில் பதிவேற்​றம் செய்​து, மாணவர் தேர்ச்சி அறிக்​கைக்கு வட்​டாரக் கல்வி அலு​வலர்​களிடம் ஒப்​புதல் பெற வேண்​டும்.

நடப்பு (2025-26) கல்வி ஆண்டில் கற்றல் செயல்பாட்டை நிறைவு செய்யும் மாணவர்களை அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி அளிப்பது. மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணியை மே 11-ம் தேதி முதல் எமிஸ் தளம் மூலம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



ஆண்டு இறுதித் தேர்வு தேர்ச்சி அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் TC பதிவிறக்கம் செய்தல் - DEE Proceedings

 ஆண்டு இறுதித் தேர்வு தேர்ச்சி அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் TC பதிவிறக்கம் செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


30.04.2026 க்குள் மதிப்பெண் தேர்ச்சி அறிக்கைக்கு BEO அவர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

11.05.2026 முதல் மாணவர்களுக்கு T.C வழங்கலாம்



HM Transfer / Retirement - பொறுப்பு ஒப்படைக்கும் தலைமை ஆசிரியர்களின் / பொறுப்பு ஏற்கும் ஆசிரியர்களின் கவனத்திற்கு - Filled Form

 நண்பர்களே வணக்கம் 🙏


பொறுப்பு ஒப்படைக்கும்
 *தலைமை ஆசிரியர்களின்* / பொறுப்பு ஏற்கும் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு* ...

General procedure..
 *HM retirement* ஆகும் போது AHM இடம் ஒப்படைப்பு ( பணி விடுப்பு தேதியில்)

 அடுத்த ஆண்டு புதிய HM வந்த உடன் AHM அப்படியே அதை ஒப்படைப்பு ( பணி ஏற்பு தேதியில்)
இது பொதுவான நடைமுறை 🙏

Charge *handed over taken over form இணைத்துள்ளேன்* ...

ஒரு copy எழுதி.. 
( seal வைக்காமல்)
4 xerox எடுத்து
5இலும் சீல் வைத்து கையெழுத்து போட்டுக் கொள்ளலாம்...

 *5set enough* 

1) Both individual 1+1
2) CEO 1
3) school copy 1+1

 *சரிபார்த்து ஒப்படைக்க/ வாங்க வேண்டியது* ...

1) Special fees A/c
2) PTA A/c
3) HM /NSD / Misc / School A/c
4) scholarship A/c ( சில பள்ளிகளில் இன்னும் இருக்கலாம்) ...
5) *SNA A/c* / SS A/c / Rmsa/SSA A/c (Canara Bank) ( எல்லாம் ஒரே கணக்கு தான்) 
தற்போது SSA/RMSA கணக்குகள் இல்லை 

ஒவ்வொரு கணக்கிற்கும்

 *நான்கு விஷயங்கள்* 

1) Bank passbook ( SNA A/c க்கு இருக்காது)
2) cash book
3) Minutes Note ( தீர்மான நோட்)
4) voucher file/ ஒட்டு file

இவைகள் கட்டாயம் சரிபார்த்து ஒப்படைக்க/ வாங்க வேண்டும் 

+ 5) stock register தனியே இருக்கலாம்....

நீங்க பொறுப்பு *ஒப்படைக்கும்/ ஏற்கும்* நாளில் ( *25/4/26* ) வங்கி கணக்கில் உள்ள தொகை.. ( மறு நியமனத்தில் உள்ளவர்களுக்கு மட்டும்)
 ( April retirement எனில் 30/4/26, May retirement எனில் 31/5/26)

(25/4/26 வங்கிகள் விடுமுறை ( நான்காவது சனிக்கிழமை) எனவே *24/4/26 pass book Entry* போட்டுக் கொள்ளுங்கள் 
Passbook, cashbook tally ஆகிறதா என‌ மட்டும் சரி பார்த்து கொள்ளுங்கள்...)

 *Audit* பொறுத்தவரை உங்கள் *period* க்கு மட்டுமே நீங்கள் பொறுப்பு...

உங்கள் *period Audit* முடித்தால் மட்டுமே *NOC* வழங்க இயலும் 🙏 என்பது நீங்க அறிந்ததே...

 *பகிர்ந்து கொள்ள* வேண்டியது....

1) email/Gmail ID password
2) EMIS I'd password
3) CEO DEO phone number
4) SMC/PTA president pH no

 *மற்றபடி* ...

1) Cycle account (balance male female community wise)
2) laptop ( student laptop இருக்காது) .. CRC laptop/ additional laptop/ PG laptop எண்ணிக்கை சரிபார்த்து கொள்ளுங்கள்
3) உங்கள் மாவட்டத்தில் CUG pH no இருப்பின் அந்த sim....
4) office bureau keys...

சரிபார்த்து வாங்கிக் கொள்ளலாம்...

 *SR count* பொருத்தவரை..
தற்போதைய 
பணியாளர் எண்ணிக்கை சரி பார்த்து வாங்கிக் கொள்வோம்.

அதே போல
Death
Retirement
Employees old SR தனியே சரி பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள் ( staff/ teacher retirement ஆன பிறகு *SR school இல்* தான் இருங்க வேண்டும்)
( HM SR , CEO office இல் தான் இருக்கும்)

தனிநபர் இடம் கொடுக்க கூடாது...

 *Old SSLC*
*HSE original mark sheet* இருந்தால் ( வழங்காமல் விடுபட்டு போனது) அதையும் தனியே சரி பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள் 🙏

 *Cycle* note
மற்றும் cycle balance சரி பார்த்து கொள்ளுங்கள்.

School laptop
HM laptop
CRC laptop
PG laptop ( if vacant)



எண்ணிக்கை* சரி பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்..


பொறுப்பு எடுக்க இருக்கும் மூத்த முதுகலை ஆசிரியர்களுக்கு 👍

நமது தலைமை ஆசிரியரை *அன்புடன்* வழியனுப்ப வேண்டியது நமது கடமை 🤝.
 *Audit* அவர்கள் period க்கு *clear* செய்து விடுவார்கள். கவலை வேண்டாம்...

இந்த மாதம் *25/4/26 க்குள்* மற்ற அனைவருக்கும் pay bill treasury க்கு submission செய்து விடுவார்கள்...  *April* *month salary no issues* ..

அடுத்த May மாதம் மற்றும் வரும் மாதங்களில் ifhrms pay bill preparation dongle/DSC/ e sign பற்றி விரிவாக எழுதுகிறேன்..

 *மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரிய* பணி இடங்களுக்கு தடையின்றி வருடா வருடம் கலந்தாய்வு *பதவி உயர்வு* நடைபெறுகிறது....
எனவே கவலை வேண்டாம்...

 *நம்பிக்கையுடன்* பொறுப்பு எடுங்கள்...

ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்/ஆசிரியர்களின்
உரிய *பணப்பலன்* *விதிகளுக்கு உட்பட்டு* பெற்றுத் தருவோம் அவர்களின் கண்ணியம் காப்போம் 🙏

தகவலுக்காக
 *க.செல்வக்குமார்* 
தலைமை ஆசிரியர்
மதுரை மாவட்டம் 👍






சென்னை பல்கலை.யில் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டம்: இளங்கலை படிப்பில் சேர மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம்

 ஏழை மாணவர்​களுக்​கான இலவச கல்​வித் திட்​டத்​தில் இளங்​கலை படிப்​பு​களில் சேர மே 23-ம் தேதிக்​குள்  என்று சென்னை பல்​கலைக்​கழகம் அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரீட்டா ஜான் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘ஏழை மாணவர்களுக்காக சென்னை பல்கலைக்கழக இலவச கல்வித் திட்டம்’ என்ற சிறப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், வரும் கல்வி ஆண்டில் (2026-2027) இந்த இலவச கல்வித் திட்டத்தின் கீழ் சென்னை பல்கலைக்கழக இணைப்பு அங்கீகாரம் பெற்ற அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர் 2025-2026-ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், தாய், தந்தையை இழந்த மாணவர்கள், குடும்பத்தில் பட்டப்படிப்புக்குச் செல்லும் முதல் தலைமுறை மாணவர்கள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் முழு விவரங்கள் மற்றும் பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ்களின் விவரங்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.unom.ac.in) கொடுக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் (மே 23) விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்து சான்றிதழ்களுடன் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







கோடை விடுமுறைக்காக பள்ளியில் உள்ள திறன் வகுப்பறையில் செய்ய வேண்டியவை:

 கோடை விடுமுறைக்காக பள்ளியில் உள்ள திறன்  வகுப்பறையில் செய்ய வேண்டியவை:


1. கணினி மற்றும் திறன் பலகை முறையாக switch off செய்ய வேண்டும்.

2. பிறகு திறன் பலகையின் கீழ் உள்ள வெள்ளை நிற board ல் உள்ள இரண்டு switch களை off செய்ய வேண்டும்.

3. Tripper switch off செய்யக் கூடாது.

4. CCTV camera அருகில் உள்ள switch off செய்யக் கூடாது. UPS switches off செய்யக் கூடாது.

5. பள்ளி மின் இணைப்பு மீட்டர் அருகில் உள்ள Main board switch off செய்யக் கூடாது

6. திறன் வகுப்பறை கதவு ஜன்னல்களை முழுமையாக மூடி விட வேண்டும்.


7. திறன் பலகை மற்றும் கணினி மேசையை மெல்லிய துணி கொண்டு மூடி விட்டால், இந்த ஒரு மாதத்தில் தூசிகள் படியாமல் இருக்கும்.


8. கோடை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், மழை சாரல் திறன் வகுப்பறையில் படாதவாறு கதவு மற்றும் ஜன்னல்கள் முழுமையாக மூடி வைக்க வேண்டும்.


9. CCTV கேமரா மேல் புறம் பொருத்தப் பட்டுள்ள switch board rack ன் கண்ணாடி கதவு நன்கு மூடப்பட்டுள்ளதா? என்பதை கவனிக்க வேண்டும்.


10. Switch board rack ன் உள்புறம் உள்ள எந்த switch ஐயும் off செய்யக் கூடாது. மேலும் இணைய இணைப்பு மற்றும் மோடம் switch off செய்யக் கூடாது. இவை 24 x 7 அனைத்து நாட்களிலும் on நிலையில் மட்டுமே இருக்க வேண்டும்.




இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க






மாணவர்களுக்கு வழங்க 4.11 கோடி பாடநூல்கள்: பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரம்

 2026-27-ம் கல்​வி​யாண்​டில் 1 முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்​களுக்கு வழங்​கு​வதற்​காக, 4.11 கோடி பாடநூல்​கள் அச்​சிடப்​பட்டு பள்ளி​களுக்கு அனுப்​பும்பணி​கள் முடுக்கி விடப்​பட்​டுள்​ளன.

தமிழக பள்​ளிக் கல்​வித் துறை​யின் கீழ், 44 ஆயிரத்​துக்​கும் அதி​க​மான அரசு மற்​றும் நிதி​யுதவி பள்​ளி​கள் இயங்கி வரு​கின்​றன. இவற்​றில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 70 லட்​சம் மாணவ, மாணவி​கள் படிக்​கின்​றனர். இவர்​களுக்​கான பாடநூல்​கள் அச்​சிடும் பணியை தமிழ்​நாடு பாடநூல் மற்​றும் கல்​வி​யியல் பணி​கள் கழகம் மேற்​கொண்டு வரு​கிறது. அரசு மற்​றும் நிதி​யுதவி பெறும் பள்​ளி​களின் மாணவர்​களுக்கு இலவச​மாக​வும், தனி​யார் பள்​ளி​களுக்கு குறைந்த விலை​யிலும் புத்​தகங்​கள் வழங்​கப்​படு​கின்​றன.

அதன்​படி, வரும் 2026-27-ம் கல்​வி​யாண்​டில் மொத்​தம் 4.11 கோடி பாடநூல்​கள் அச்சிட்டு வழங்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இதில் 88 சதவீதப் பணி​கள் முடிவுற்​றுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: நடப்பாண்டு அரசு, அரசு உதவி பள்ளிகளுக்கு வழங்குவதற்காக 2.71 கோடி புத்தகங்கள், விற்பனைக்காக 1.4 கோடி புத்தகங்கள் என மொத்தம் 4.11 கோடி பாடநூல்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்படவேண்டும். இதில் 1, 2, 3-ம் வகுப்பு தவிர, இதர வகுப்புகளுக்கான பாடநூல்கள் தயாரிக்கப்பட்டு,அந்தந்த மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கிருந்து பள்ளிகளுக்கு விநியோகம் செய்யும் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.


1, 2, 3-ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அவற்றின் பாடநூல்கள் தயாரிப்பு முடியும் தருவாயில் உள்ளது. எனினும், அந்தப் பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்படும் நாளில் அனைத்து வகுப்புகளுக்கும் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும்.

இதுதவிர, தனியார் பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்கள் விற்பனை ஏப்.10-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், அடையாறு பாடநூல் விற்பனை கிடங்கு ஆகியவற்றில் புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.