15 நாட்கள் காலை உணவை தவிர்த்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?

தொடர்ந்து 15 நாட்கள் காலை உணவைத் தவிர்ப்பதால் பல உடல் மற்றும் மன மாற்றங்கள் ஏற்படக்கூடும். அவை என்னென்ன தெரியுமா?

காலை உணவு என்பது ஒரு நாளின் மிக முக்கியமான உணவாகும். ஆனால் இப்போதெல்லாம் பலரும் நேரமின்மை, எடை இழப்பு டயட் என பல்வேறு காரணங்களைச் சொல்லி காலை உணவைத் தவிர்க்கிறார்கள். ஆனால் தொடர்ந்து 15 நாட்கள் காலை உணவைத் தவிர்ப்பதால் பல உடல் மற்றும் மன மாற்றங்கள் ஏற்படக்கூடும். அவை என்னென்ன தெரியுமா? பார்க்கலாம் வாங்க!

தொடர்ந்து 15 நாட்கள் காலை உணவைத் தவிர்க்கும்போது, மூளைக்கு போதுமான குளுக்கோஸ் கிடைக்காமல் போகும். இதனால் மனச்சோர்வு ஏற்பட்டு, கவனச்சிதறல் அதிகம் ஏற்படக்கூடும். மூளைக்கு சக்தி இல்லாமல் போவதால், உடல் எப்போதும் சோர்வாக உணரும். சில நேரங்களில் இதனால் தலைவலி, எரிச்சலும் ஏற்படக்கூடும்.


காலை உணவைத் தவிர்ப்பது, எடை இழப்புக்கு உதவுமென பலர் நினைப்பதுண்டு. ஆனால் இது பல எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வுகள் நிரூபித்துள்ளன. குறிப்பாக காலை பணிக்கு செல்பவர்களுக்கு ஆற்றல் குறையும். இதனால் பசி அதிகரிப்பதால், மதியம் அதிக உணவு சாப்பிடும் நிலை உருவாகும். பெரும்பாலும் மதியம் அரிசி உணவுகளையே நாம் உட்கொள்வதால், கலோரி அதிகமான உணவை உட்கொள்ள நேரிடும். இதேபோல இரவும் அதிக பசி எடுக்கும் வாய்ப்புள்ளது. இவையாவும் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.


இருப்பினும் ஒருசிலருக்கு காலை உணவைத் தவிர்ப்பதால் எடை இழப்பு ஏற்படலாம். ஆனால் அதிலும் ஆபத்து உள்ளது. அதற்கு காரணம் நம் உடலானது, தான் சேமித்து வைத்திருக்கும் கொழுப்பையும் தசையையும் ஆற்றலுக்காகப் பயன்படுத்தும். 15 நாட்களுக்கு காலை உணவைத் தவிர்ப்பது, கொழுப்பை எரித்து எடை இழப்புக்கு வழிவகுக்கும் என்றாலும்கூட போதியளவு புரதம் கிடைக்காததால் தசை இழப்புக்கும் வழிவகுக்கும். இதனால் ஆரோக்கியமற்ற முறையில் எடை இழப்பு நிகழும். அந்த எடை இழப்பு நீண்டகாலத்துக்கானதாக இல்லாமல் குறுகிய காலத்துக்கானதாகவும் இருக்கும்.


அதேபோல 15 நாட்களுக்கு உணவு கிடைக்காத நிலை இருக்கும் என்பதால், உடல் சர்வைவல் நிலைக்கு சென்றுவிடும். இதனால் கலோரிகள் எரிக்கப்படும் வேகம் குறைந்து, நீண்ட கால அடிப்படையில் எடை குறைப்பது கடினமாகிவிடும். முக்கியமாக காலை உணவைத் தவிர்ப்பது ரத்த சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தானது. எனவே நீரிழிவு நோயாளிகள் மருத்துவ அறிவுரையோடு கட்டுப்படுத்தப்பட்ட இண்டர்மிண்டட் ஃபாஸ்டிங் இருக்கலாம்.

சிலர் காலை உணவைத் தவிர்த்தாலும் வெறும் வயிற்றில் காபி அல்லது தேநீர் குடிப்பார்கள். இதனால் அமிலத்தன்மை, வாயு மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதேபோல நீண்ட காலத்திற்கு காலை உணவைத் தவிர்ப்பது, வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும். மேலும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். இது பெண்களுக்கு PCOS மற்றும் தைராய்டு தொடர்பான பிரச்சனைகளை அதிகரிக்க வழிவகுக்கும் என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.



அந்த காலத்திலெல்லாம் 3 வேளை சாப்பிட்டார்களா? நம் உடலுக்கு 3 வேளை உணவு தேவை என்பதெல்லாம் பொய். பசிக்கும்போது சாப்பிட்டால் போதும்’ என சிலர் சொல்லி கேட்டிருப்போம். இது அடிப்படையில் உண்மைதான். ஆனால் அதற்காக எந்தவித புரிதலுமின்றி காலை உணவைத் தவிர்த்துவிடுவது சரியல்ல. நம் உடலில் ஏற்கெனவே என்னென்ன ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ளன, அதையெல்லாம் எப்படி சரிசெய்வது, என்ன உணவுகளை நாம் தவிர்க்க வேண்டும் / தவிர்க்கக்கூடாது என்பதையெல்லாம் நிபுணர் ஆலோசனையோடு அறிந்து வைத்து அதன்பின்னர் உணவுக்கான நேரத்தை வகுத்துக் கொள்ளலாம்.

குழந்தைகள், மாணவர்களுக்கு காலை உணவு மிகவும் முக்கியமானது, ஏனெனில் அது அவர்களின் மூளை வளர்ச்சியையும் படிப்பில் கவனம் செலுத்துவதையும் அதிகரிக்கிறது. போலவே கர்ப்பிணிகளுக்கு கூடுதல் ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்து தேவைப்படும். அதற்கு காலை உணவு கட்டாயம் தேவை. வயதானவர்களுக்கும் காலை உணவு மிக மிக முக்கியமானது. அவர்களின் பலவீனத்தைக் குறைத்து, ஊட்டச்சத்து குறைபாட்டைப் பூர்த்தி செய்ய இது மிகவும் உதவும். இதேபோல நீரிழிவு நோயாளிக்கு, காலை உணவு என்பது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த மிகவும் தேவை. எனவே அதை தவிர்க்க வேண்டாம்.




Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip 

புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கமே வரவில்லையா? படுத்தவுடன் தூங்க இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!


மாறிவரும் உணவுமுறை, வாழ்வியல் மாற்றங்களின் காரணமாக பலரும் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால் உடலுக்கு சரியான ஓய்வு கிடைக்காதபோது, பணியில் சோர்வாகவும் பகல் நேரத்தில் தூக்க கலக்கமாகவும், செய்யும் வேலையில் கவனமின்மையோடும் இருக்க நேரிடும். மட்டுமன்றி தூக்கத்தில் பிரச்சனை வரும்போது, எடை சார்ந்த சிக்கல்களும் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவேதான் உறக்கமின்மையோடு தவிப்பவர்கள், எதனால் உறக்கமின்மை ஏற்படுகிறது என உணர்ந்து, அதை எப்படி தவிர்ப்பது என்பதை அறிய வேண்டும். இதுதொடர்பான விரிவான விவரங்களை வழங்குகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

முதலில் எது தூக்கமின்மை, நமக்கு இருப்பது தூக்கமின்மைதானா என்பதை அறிய வேண்டும். இதனை, இரண்டு கேள்விகளின் மூலம் நம்மால் அறிந்து கொள்ள முடியும். அந்தக் கேள்விகள்: சிலருக்கு படுத்த உடனே உறக்கம் வருவதிலும் / உறக்கம் தொடர்வதிலும் பிரச்சனை இருக்கிறதா? உறக்கம் களைந்து அடுத்த நாள் முழுவதும் சோர்வின்றி புத்துணர்வாக உணர்கிறீர்களா? இந்த இரண்டு கேள்விகளுக்கும் "இல்லை" என்ற பதில் வந்தால், உங்களுக்கு சரியான உறக்கம் கிடைப்பதில்லை / நீங்கள் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றீர்கள் என்பது பொருள்.


அடுத்தபடியாக தூக்கமின்மைக்கான காரணங்களை பார்க்கலாம். ஏற்கனவே இருக்கும் மனநலம் சார்ந்த பிரச்சனைகளின் (பதற்றம், மனத்தாழ்வு நிலை) விளைவாக உறக்கமின்மை ஏற்படக்கூடும். தற்கால சூழ்நிலையில் வரும் திடீர் மாற்றங்களால் உறக்கமின்மை ஏற்படுவதும் உண்டு. ஜெட் லேக், குறட்டை, குழந்தை பிறப்பு, அலர்ஜி, பணியிடம் சார்ந்த அழுத்தம், நெருங்கிய உறவினர்களின் மரணம் போன்றவற்றால் தற்காலிகமாக உறக்கமின்மை ஏற்படக்கூடும். அதேபோல படுக்கைக்கு சென்ற பின்னும் தவறான உறக்கம் சார்ந்த பழக்கவழக்கங்கள் இருந்தால் உறக்கமின்மை ஏற்படக்கூடும் (செல்போன் பார்ப்பது, படுக்கையறையில் டிவி பார்ப்பது போன்றவை).


உறக்கமின்மை அறிகுறிகள் இருப்பவர்களுக்கு நான்கு வகையான பிரச்சனைகள் தோன்றும். அவை, படுத்தவுடன் தூக்கம் வராமல் இருப்பது (படுத்தாலும் நீண்ட நேரம் உறக்கம் ஏற்படாமல் இருப்பது), உறக்கத்தினூடே அதிகமான கனவுகள் மற்றும் இடர்பாடுகள் ஏற்பட்டு சரியான உறக்கம் கிடைக்காதிருத்தல், உறக்கம் சரியான நேரத்துக்கு கிடைத்தாலும் அடுத்த நாள் மிகவும் சோர்வாக இருத்தல், அதிகாலை இரண்டு முதல் நான்கு மணிக்கு கண் விழித்து அதற்குப் பிறகு உறக்கம் கிடைக்காத நிலை போன்றவை.


இவற்றில் உறக்கமின்மையை தோற்றுவிக்கும் காரணிகளை சரிசெய்தால் உறக்கம் தானாக சரியாகிவிடும். சில நேரங்களில் மனத்தாழ்வு நிலை, பதட்ட நோய், அச்ச நோய், பீதி நிலை போன்றவற்றால் உறக்கமின்மை ஏற்படுமாயின் அந்த நோய்களுக்கான முறையான மனநல சிகிச்சை கிடைத்தால் உறக்கமின்மை குணமாகும். அதேபோல பொதுவாக பின் மாலை மற்றும் முன்னிரவு நேரம் தொடங்கி மூளையில் "மெலட்டோனின்" எனும் உறக்கத்திற்கான ஹார்மோன் சுரக்கப்படும். இதில் மெலட்டோனின் சுரப்பு முறையாக நிகழ்வதற்கு குறைவான ஒளி அவசியம். பளீர் என கண் முன் வெளிச்சம் பட்டுக் கொண்டே இருந்தால் மெலட்டோனின் சுரப்பு குறையும். இதனால் உறக்கமின்மை ஏற்படும். எனவே நன்கு இருட்டான இடத்தில் தூங்கினால் எளிதில் உறக்கம் வரும்.

இத்துடன் படுக்கையறையை அமைதியான குறைவான ஒளியுடன் கூடிய இடமாக அமைத்துக் கொள்வது, படுப்பதற்கு வசதியான தலையணை மற்றும் படுக்கை வைத்துக் கொள்வது, படுக்கையறையில் டிவி, ஸ்பீக்கர்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வது, உறங்கச் செல்வதற்கு இரண்டு மணிநேரங்களுக்கு முன்பாவது டிவி/ மொபைல் பார்ப்பதை நிறுத்தி விடுவது போன்றவற்றையும் செய்து வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.


இவை அனைத்துக்கும் பிறகும் படுக்கையறையில் படுத்து 15 நிமிடங்கள் ஆகியும் உறக்கம் வரவில்லையென்றால் வெறுமனே படுத்துக் கொண்டிராமல் எழுந்து வேறு அறைக்கு சென்று விட வேண்டும். அங்கு கட்டாயம் அரை மணிநேரம் முதல் ஒரு மணிநேரம் வரை அமைதியாக இருப்பது, குறைவான ஒளியில் புத்தகம் படிப்பது என்று செலவிட வேண்டும். கட்டாயம் செல் போன் / டிவி பார்க்கக்கூடாது. உறக்கம் வந்ததும் படுக்கையறைக்கு சென்று படுத்துறங்கவும். இந்த வகையில் படுக்கையறையை உறக்கத்துக்கு மட்டும் என்ற வரைமுறைக்கு கொண்டு வர முடியும். இதன் விளைவாக காலப்போக்கில் படுக்கையறைக்குள் சென்று படுத்தால் உறக்கம் தானாக வரும்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip 

நீரிழிவு நோயாளிகளே.. ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, தினமும் இந்தவொரு உடற்பயிற்சியை செய்ங்க!

 சர்க்கரையை ரத்தத்திலிருந்து பிரித்து, உடலின் செல்களுக்குள் கொண்டு செல்லும் 'சாவி' போல இன்சுலின் செயல்படும். அங்கிருந்து சர்க்கரை ஆற்றலாக மாறும். இதுவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு இருக்கும் என்பதால் சர்க்கரை ஆற்றலாகும் சூழல் குறைந்து, சர்க்கரை அளவு ரத்தத்தில் உயர்கிறது.

நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கையும், நீரிழிவுக்கு முந்தைய நிலையிலுள்ளவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க மிக எளிமையான ஒரு உடற்பயிற்சி உள்ளது. அதை அன்றாடம் செய்து வந்தால் நீரிழிவு நோயாளிகளுக்கும், நீரிழிவுக்கு முந்தைய நிலையிலுள்ளவர்களுக்கும் ரத்த சர்க்கரை அளவு சீராக நிர்ணயிக்கப்படும் என்கின்றனர் நிபுணர்கள். அது என்ன பயிற்சி தெரியுமா? நடைப்பயிற்சிதான் அது. நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களின் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை சீராக வைப்பதற்கும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதற்கும் நடைப்பயிற்சி சிறப்பாக உதவுவதாக சொல்கின்றனர் நிபுணர்கள். அது எப்படி, ஏன் என்பது பற்றிதான் இங்கே பார்க்கப்போகிறோம்.

நமது உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவது நாம் உண்ணும் உணவிலுள்ள சர்க்கரை (எ) குளுக்கோஸ்தான். இந்தச் சர்க்கரையை ரத்தத்திலிருந்து பிரித்து, உடலின் செல்களுக்குள் கொண்டு செல்லும் ஒரு 'சாவி' போல இன்சுலின் செயல்படும். அங்கிருந்து சர்க்கரை ஆற்றலாக மாறும்.



இன்னொருபுறம், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு இருக்கும். இது இன்சுலின் உணர்திறன் குறைபாடு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் செல்கள் இன்சுலினுக்கு எதிர்ப்பாகி விடுவதால், சர்க்கரையானது ஆற்றலாக மாறாமல் அப்படியே சேர்ந்துவிடும். இதனால் ரத்த சர்க்கரை அளவுகள் உயரத் தொடங்குகின்றன. இதுவே அன்றாடம் நடைப்பயிற்சி செல்பவர்களுக்கு அவர்களின் தசைகள் ரத்த ஓட்டத்தில் இருந்து குளுக்கோஸை எரிபொருளாக எடுத்துக் கொள்ளும். இதனால் உடனடியாக ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது தடுக்கப்படும். இதனால்தான் நடைப்பயிற்சி மேற்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பயிற்சியாக பார்க்கப்படுகிறது.


எப்போது நடப்பது சிறந்தது? சாப்பாட்டுக்குப் பிறகு சுமார் 15-30 நிமிடங்கள் நடப்பது, குளுக்கோஸ் அதிகரிப்பைக் குறைக்கிறது. 10 நிமிடங்கள் நடந்தால்கூட இது நடக்கும். இதனால் ரத்த சர்க்கரை அளவு உணவுக்குப் பின் உயர்வது தடுக்கப்படுகிறது.

இதேபோல நடைப்பயிற்சியின்போது உடல் தனது ஆற்றல் திறனை அதிகம் பயன்படுத்துவதால், நாள்படும்போது எடைக்குறைப்பு நிகழும். எடை அதிகம் இருப்பது நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கலாம். ஆனால் நடைப்பயிற்சியானது எடை குறைப்பை சாத்தியப்படுத்தி, நீரிழிவுக்கான வாய்ப்பைத் தடுக்கும்.

நடக்க வேண்டும் என்பதற்காக எடுத்தவுடன் 40 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை நடக்க வேண்டாம். 10 நிமிடங்கள் என தொடங்கி பின் அதை நீட்டிக்கொள்ளுங்கள். நீங்கள் அளவுக்கு அதிகமாக நடக்கிறீர்கள் என்பதை உணர்த்த சில அறிகுறிகளும் உள்ளன. அதில் குறிப்பாக தொடர்ச்சியாக சோர்வு அல்லது கால்களில் கனமான உணர்வு, வலி போன்றவை ஏற்படும். இப்படி அதிகம் நடைப்பயிற்சி மேற்கொண்டால், தசைகளுக்கு போதுமான அளவு ஓய்வு கிடைக்காமல் அவை எளிதாக காயமடைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. நீண்ட நேரத்திற்கு சமமற்ற மேற்பரப்புகளில் நடக்கும் பொழுது இடுப்பு குறிப்பாக முட்டி மற்றும் கால்கள் அதிகமாக வலிக்கும். எனவே உங்களால் முடிந்த அளவிற்கு மட்டும் நடங்கள். கொஞ்சம் கொஞ்சமாக தூரத்தையும் நேரத்தையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்.





Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பல் துலக்கிய பின்பும் வாயில் துர்நாற்றம் வர என்ன காரணம்..? இந்த இரண்டு பொருள் உங்க பிரச்சனைக்கு உதவலாம்..!

 பற்களுக்கு இடையில் உணவுத் துகள்கள் குவிவதால் பாக்டீரியாக்கள் வளரக்கூடும். நாக்கில் வெள்ளை பூச்சு படிவதும் துர்நாற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும். மேலும், உடலில் நீர்ச்சத்து குறைதல் (நீரிழப்பு) மற்றும் முறையற்ற செரிமானம் காரணமாக இந்தப் பிரச்சினை ஏற்படலாம்.

எளிதான வீட்டு வைத்தியம்: கிராம்பு மற்றும் ஏலக்காய் துர்நாற்றத்தை உடனடியாக போக்க அற்புதங்களைச் செய்கின்றன. உணவுக்குப் பிறகு, ஒரு கிராம்பு அல்லது ஏலக்காயை உங்கள் வாயில் போட்டு மெல்லுங்கள். இவற்றின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லும். கிராம்பு எண்ணெய் ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

வேறு சில தடுப்பு நடவடிக்கைகள்: நாக்கை சுத்தம் செய்தல்: தினமும் பல் துலக்கும் போது நாக்கை சுத்தம் செய்யும் திரவத்தால் சுத்தம் செய்யுங்கள். இது பாக்டீரியா அடுக்கை நீக்கும். நிறைய தண்ணீர் குடிக்கவும்: உங்கள் வாய் வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடிப்பது உமிழ்நீர் உற்பத்தியை அதிகரித்து உங்கள் வாயை சுத்தமாக வைத்திருக்கும்.

இலவங்கப்பட்டை நீர்: இலவங்கப்பட்டை பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளிப்பது, வாய் துர்நாற்றத்தைக் குறைக்கிறது. தயிர்: உணவில் தயிரை உட்கொள்வது உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் வாய் துர்நாற்றத்தைத் தடுக்கிறது.

பல் துலக்குவதை ஒருவேளைக்கு மட்டும் பழக்கப்படுத்தாமல், காலை , மாலை என இரண்டு வேளையும் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். மேற்கண்ட குறிப்புகளைப் பின்பற்றிய பிறகும் பிரச்சனை குணமடையவில்லை என்றால், அது ஈறு நோய் அல்லது வயிறு தொடர்பான பிரச்சனையாக இருக்கலாம். பிறகு நீங்கள் நிச்சயமாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.







Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ஒவ்வொருவருக்கும் இரத்தப் பிரிவு வெவ்வேறாக இருக்க என்ன காரணம் தெரியுமா..? மருத்துவ அறிவியல் தரும் விளக்கம்..!

 ஒவ்வொரு துளி இரத்தத்திலும் உடலைப் பற்றிய முக்கியமான தகவல்கள் உள்ளன. நோயெதிர்ப்பு அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது? உடல் தன்னை எவ்வாறு பாதுகாத்துக் கொள்கிறது? இரத்தம் இது போன்ற விஷயங்களைப் பற்றி நமக்குச் சொல்கிறது.

நமது உடல்நலம் பற்றி அறிய, மருத்துவர்கள் முதலில் இரத்த பரிசோதனையை பரிந்துரைக்கின்றனர். ஒவ்வொரு துளி இரத்தத்திலும் உடலைப் பற்றிய முக்கியமான தகவல்கள் உள்ளன. நோயெதிர்ப்பு அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது? உடல் தன்னை எவ்வாறு பாதுகாத்துக் கொள்கிறது? இரத்தம் இது போன்ற விஷயங்களைப் பற்றி நமக்குச் சொல்கிறது. இரத்தக் குழுக்கள் சீரற்ற பெயர்கள் அல்ல. அவை இரத்த சிவப்பணுக்களில் உள்ள சிறப்பு குறிப்பான்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.

இந்த இரத்த வகை எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது? சிவப்பு இரத்த அணுக்களில் சிறிய அடையாளங்கள் உள்ளன. இந்த அடையாளங்கள் ஆன்டிஜென்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றை பேட்ஜ்கள் என்று கருதலாம். இரத்த அணுக்களில் உள்ள முக்கிய அடையாளங்கள்: - ஒரு அடையாளச் சின்னம் - AB அடையாளச் சின்னம் - A மற்றும் B அடையாளச் சின்னங்கள் - எந்த அடையாளச் சின்னமும் இல்லை.

இந்த பேட்ஜ்கள் நான்கு முக்கிய இரத்த வகைகளை தீர்மானிக்கின்றன: A, B, AB, மற்றும் O. உங்கள் உடல் இந்த பேட்ஜ்களை ஒவ்வொரு நாளும் சரிபார்க்கிறது. அது அதன் சொந்த இரத்த அணுக்களைத் தாக்குவதில்லை. ஆனால் வேறு குறியுடன் கூடிய இரத்தம் உள்ளே வந்தால் உடனடியாக எதிர்வினையாற்றுகிறது.

நேர்மறை மற்றும் எதிர்மறை என்றால் என்ன? A மற்றும் B குறிப்பான்களுடன், Rh காரணி எனப்படும் மற்றொரு முக்கியமான குறிப்பான் உள்ளது. உங்களிடம் Rh மார்க்கர் இருந்தால், உங்கள் இரத்தக் குழு நேர்மறை. உங்களிடம் அது இல்லையென்றால், உங்கள் இரத்தக் குழு எதிர்மறை. உதாரணமாக, A நேர்மறை, O எதிர்மறை, AB நேர்மறை மற்றும் B எதிர்மறை போன்ற இரத்தக் குழுக்கள் உள்ளன. இரத்தமாற்றம் மற்றும் கர்ப்ப காலத்தில் இந்த Rh காரணி மிகவும் முக்கியமானது. உடல் அறியப்படாத Rh மார்க்கருடன் இரத்தத்தைக் கண்டறிந்தால், அது வலுவாக செயல்படுகிறது. அதனால்தான் மருத்துவர்கள் எப்போதும் (A, B, AB, O) மற்றும் நேர்மறை அல்லது எதிர்மறை மார்க்கர் இரண்டையும் சரிபார்க்கிறார்கள்.

இரத்தம் ஏன் வேறுபட்டது? இரத்த வகைகள் பெற்றோரிடமிருந்து பெறப்படுகின்றன. இரத்த சிவப்பணுக்களில் எந்த குறிப்பான்கள் உள்ளன என்பதை மரபணுக்கள் தீர்மானிக்கின்றன. அதனால்தான் ஒரே குடும்பத்தில் உள்ள சகோதர சகோதரிகள் கூட வெவ்வேறு இரத்த வகைகளைக் கொண்டிருக்கலாம். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு பெற்றோரிடமிருந்தும் வெவ்வேறு மரபணுக்களின் கலவையைப் பெறுகிறது. ஒரே மாதிரியான இரட்டையர்கள் மட்டுமே பொதுவாக ஒரே மரபணுக்களைக் கொண்டுள்ளனர்.

இரத்தக் குழுக்கள் உடலை எவ்வாறு பாதுகாக்கின்றன? உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு ஒரு பாதுகாவலர் போல செயல்படுகிறது. வேறு ஒரு குழுவின் இரத்தம் உள்ளே நுழைந்தால், நோயெதிர்ப்பு அமைப்பு அதைத் தாக்கக்கூடும். இது ஆபத்தானது. அதனால்தான் மருத்துவமனைகள் இரத்தமாற்றத்திற்கு முன் இரத்தக் குழுவைச் சரிபார்க்கின்றன. குறிப்பான்கள் பொருந்தும்போது, ​​எந்தப் பிரச்சினையும் இல்லை. அவை பொருந்தாதபோது, ​​உடல் புதிய இரத்தத்தை ஊடுருவும் நபராகக் கருதுகிறது. அதனால்தான் மருத்துவ அவசரநிலைகள், அறுவை சிகிச்சைகள், இரத்த தானம் மற்றும் பெற்றோர் ரீதியான பராமரிப்பு ஆகியவற்றின் போது இரத்தக் குழு முக்கியமானதாக கருதப்படுகிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

மாணவர்களின் அடைவுத் திறனை BRTEs சோதித்து அறித்தல் - அறிவுரை வழங்குதல் - SPD Proceedings

    



ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பள்ளிகளில் 18.02.2026 மற்றும் 20.02.2026 ஆகிய நாட்களில் மாணவர்களின் அடைவுத் திறனை Google Forms வாயிலாக வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர்கள் சோதித்து அறித்தல் அறிவுரை வழங்குதல் தொடர்பாக


கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மதிப்பீடு பணிகளைப் போன்று இவ்வாண்டும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் பின்வரும் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின் படி மதிப்பீட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.


1)  18.02.2026   1 முதல் 3    தமிழ் ஆங்கிலம் & கணிதம்  குறைந்தபட்சம் ஒரு வகுப்பிற்கு 5 மாணவர்கள்



2)  20.02.2026   4மற்றும் 5    தமிழ் ஆங்கிலம் & கணிதம்  குறைந்தபட்சம் ஒரு வகுப்பிற்கு 5 மாணவர்கள்


பள்ளிகளில் முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் தமிழ் & ஆங்கிலம் வாசித்தல் /திறன் மற்றும் கணக்கு பாடத்தில் கூட்டல், கழித்தல் பெருக்கல் வகுத்தல் ஆகிய அடிப்படைத் திறனறியும் இப்பொருண்மையில் ஆசிரியப் பயிற்றுநர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குறுவளமையங்கள் அல்லாத ஆனால், அதே ஒன்றியத்திற்குள் அமைந்துள்ள பிற குறுவள மைய எல்லைக்குள் இடம்பெறும் பள்ளிகளை மதிப்பீடு செய்வதற்கு உரிய அறிவுரைகளை வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு வழங்கிட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Click Here to Download - மாணவர்களின் அடைவுத் திறனை BRTEs சோதித்து அறித்தல் - அறிவுரை வழங்குதல் - SPD Proceedings - Pdf





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

6, 7, 8th Std - Event IDs For Hi - Tech Lab Assessment

சிறப்பு தகுதி தேர்வுக்கு (TET) DIET வழியாக இணையதளப் பயிற்சி - அரசு முதன்மைச் செயலாளர் கடிதம் - 13.10.2025

    

பார்வையில் காணும் அரசாணையில் தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்காக மட்டும் முறைப்படியான ஆசிரியர் தகுதித் தேர்வுகளுடன், 2026ஆம் ஆண்டில் ஜனவரி 2026, ஜூலை 2026, மற்றும் டிசம்பர் 2026 ஆகிய மாதங்களில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு அனுமதி அளித்து ஆணையிடப்பட்டுள்ளது.

2. எனவே, தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை ஆசிரியர் தகுதித் தேர்வு (Special TET) எழுத தயார் செய்யும் வகையில் அவர்களுக்கு மாவட்டந்தோறும் /வருவாய் வட்டம் / இணையவழியில் (online) மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்(DIETs) அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.






இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

TET தேர்வு எழுதவுள்ள ஆசிரியர்களுக்கு அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வழங்க உத்தரவு

    289059

பயிற்சி வழங்க உத்தரவு


டெட் தேர்வு எழுதவுள்ள ஆசிரியர்களுக்கு அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வழங்க உத்தரவு

மாவட்ட கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயற்சி தர உத்தரவு.

மாவட்டந்தோறும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆணை






இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

NMMS January 2026 - Scholarship Examination Result Published

    

287033

National Means Cum Merit Scholarship Scheme Examination - January - 2026 Result

👇👇👇👇 Check Your Result 

NMMS January 2026 - Scholarship Examination Result - Click here


2025-2026-ம் கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் 10.01.2026 அன்று நடைப்பெற்றது. 

தற்போது தேர்வெழுதிய மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் அரசுத் தேர்வுகள் இயக்கக www.dge.tn.gov.in இணையதளத்தில் 18.02.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.


மேலும் மாணவர் விவரங்களாகிய பெயரில் உள்ள எழுத்துக்கள், பிறந்த தேதி, மாற்றுத்திறனாளி வகை மற்றும் இனம் (Community) ஆகியவற்றில் திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் உரிய ஆதாரங்களுடன் தேர்வு நுழைவுச்சீட்டினை இணைத்து dgedsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு .





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Budget 2026 - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள்

பொதுத் தேர்வு 2026 - ஆலோசனைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து பத்திரிகை செய்தி வெளியீடு!

    

பொதுத் தேர்வு தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்ட ஆலோசனைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து பத்திரிகை செய்தி வெளியீடு!

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முனைவர்.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் மார்ச்/ஏப்ரல் 2026-இல் நடைபெறவுள்ள மேல்நிலை/இடைநிலை பொதுத் தேர்வு தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை மற்றும் அரசுத் தேர்வுத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கல்விசார் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.


Click Here to Download - Public Exam - Press Release - Pdf





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Hitech Lab Assessments குறித்த தகவல்கள் - SOP - Pdf

    



👉6,7,மற்றும் 8 ஆம் வகுப்பு நடு நிலைப்பள்ளி மாணவர்கள்.


Feb 17 to Feb 24.

*👉 அனைத்து வகை அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள கவனத்திற்கு... ,*


💥உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. 💥17 மற்றும் 18 ம் தேதி ஆறாம்  வகுப்பிற்கும், 

💥19 மற்றும் 20ம் தேதி ஏழாம் வகுப்பிற்கும், 

💥23 மற்றும்  24 ம் தேதி எட்டாம் வகுப்பிற்கும் தேர்வு நடைபெற உள்ளது . 


💥பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் உயர் தொழில்நுட்ப ஆய்வகத்திற்கு ஒதுக்கப்பட்ட Nodal  ஆசிரியர் இருவரும் தங்கள் பள்ளிக்குரிய AIS இடம் தகவல் தெரிவித்து இன்று Questions allocation  செய்து முடிக்கவும்.


💥 ஒவ்வொரு பாடத்திற்கும் நான்கு கேள்விகள் வீதம் ஐந்து பாடத்திற்கு 20 கேள்விகளும் 30 நிமிட கால அவகாசமும் ஒதுக்கி கேள்விகளை தயார் செய்யவும். 

💥அனைத்து பாடத்திற்கும் கேள்விகள் தேர்வு செய்த பின்பு submit  செய்யவும் .



💥ஆசிரியர்கள் AIS  இடம் எந்த பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்பதை  அவர்களுக்கு தெரியப்படுத்தவும்.


💥இன்டர்நெட் வசதி இல்லாத பள்ளிகள் question allocation மட்டும் செய்து printout  எடுத்து  practise செய்யவும்


💥இன்று அனைத்து 13 அரசு நடு நிலை  பள்ளிகளிளும் கண்டிப்பாக ஆறாம் வகுப்புக்குரிய assessment question allocation செய்யப்பட வேண்டும்


💥 Feb 17 முதல் Feb24 வரை  அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் assessment நடைபெற உள்ளது.


💥 Internet issues அல்லது system issue ஏதாவது இருப்பின் AIS ன் உதவியுடன் Ticket raise  செய்யவும். Ticket raise செய்து குழுவில் பதிவிடவும்..


💥exams.tnschools.gov.in என்ற தளத்தில் Tr login அல்லது School login அல்லது Hm login ,ல் question allocation செய்யலாம்.


💥17 ம் தேதி முதல் assessment நடைபெறும்.


6th std 17.2.25 and 18.2.26

7th std 19.2.26 and  20.2.26

8th std 23.2.26 and 24.2.26

Click Here to Download - Hitech Lab Assessment - SOP - Pdf





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க