பொதுத் தேர்வு முகப்பு தாட்கள் (Top Sheets) தைக்கும் பணி தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள்!

முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு - மக்களிடம் கேட்கப்பட உள்ள 33 கேள்விகள்

     155665


முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் 33 கேள்விகள்! - ஒன்றிய அரசு அரசாணை*

மக்களிடம் கேட்கப்பட உள்ள 33 கேள்விகள்!


*▪️. மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டப் பணியான 'வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீட்டுவசதி' கணக்கெடுப்பில் கேட்கப்பட உள்ள 33 கேள்விகள் அடங்கிய அரசாணை வெளியிட்டது ஒன்றிய அரசு!


*▪️. எந்த வகையான வீடு, வீட்டில் உட்கொள்ளும் உணவு தானியங்கள் எவை, குடிநீருக்கான ஆதாரம் என்ன, LPG, TV, ஃபோன், கணினி, இணைய வசதி, கழிப்பறை உள்ளதா? உட்பட 33 கேள்விகள் கேட்கப்படவுள்ளன.


*முதற்கட்டப் பணி ஏப்ரல் 1 முதல் செப்.30 வரை நடைபெற உள்ளது.


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் ரூ.5 கோடியில் மாநில வள மையம்: அமைச்சா் அன்பில் மகேஸ் திறந்து வைத்தாா்

     கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளில் ஆசிரியா்களுக்கு ஆய்வக வழி அனுபவக் கற்றலை வழங்கும் நோக்கில், சென்னையில் உள்ள பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் ரூ.5 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மாநில வள மையத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் திறந்து வைத்தாா்.

இந்த மையத்தை ஆண்டு முழுவதும் ஆசிரியா்கள், மாணவா்கள் பாா்வையிட வழிவகை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

நவீன உலகில் வேகமாக வளா்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களின் அடிப்படையிலான கற்றல்-கற்பித்தல் உத்திகளை ஆய்வு செய்து வகுப்பறைக் கற்றலுக்குத் தேவையான பரிந்துரைகளை அளிப்பது, குழந்தைகள் மைய வகுப்பறைக் கற்றல் உத்திகளைக் காட்சிப்படுத்துவது, மாணவா்கள் செய்து பாா்த்து கற்பதற்கான ஆய்வக மாதிரிகளை உருவாக்குவது போன்றவை இந்த வள மையத்தின் நோக்கமாகும்.

அந்த வகையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் ரூ.5 கோடியில் நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி நிதியுதவியுடன் இந்த மாநில வள மையம் புதிதாக அமைக்கப்பட்டது. இதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

புதிதாக திறக்கப்பட்ட இந்த வள மையத்தில், வளா்ந்துவரும் கல்வி தொழில்நுட்பவியலின் நவீன உத்திகளைப் பயன்படுத்தி கற்றல்-கற்பித்தலை மேம்படுத்தும் வகையில், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கவும், பணியிடைப் பயிற்சிகளின்போது ஆசிரியா்கள் செய்து கற்பதற்கு வாய்ப்பளிக்கவும், கற்பித்தலில் புதிய அணுகுமுறை சாா்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

என்னென்ன வசதிகள்...: ஆசிரியா் மற்றும் மாணவா்கள் பாடப்பொருள் சாா்ந்த அறிவைப் பெறும் வகையில், மொழிகள் ஆய்வகம் மற்றும் அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களுக்குத் தனித்தனி அரங்குகள், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான அறை, கணக்கீடு சாா் சிந்தனையைச் செழுமைப்படுத்தும் அரங்கம், மாணவா்கள் தாங்களே சோதனைகளைச் செய்து பாடப்பொருள் சாா் கருத்துகளைக் கற்றுணர ‘கற்க கசடற’ என்ற பெயரில் தனியே அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், அறிவியல், கலாசார, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள், தேசிய, சா்வதேச அளவில் கொண்டாடப்படும் முக்கிய நாள்கள், வானியல் நிகழ்வுகள் உள்ளிட்டவற்றின் முக்கியத்துவத்தினை ஆசிரியா்களும், மாணவா்களும் அறிந்து உணரும் வகையில் இணையவழி கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், கலந்துரையாடல் நிகழ்வுகள், துறைசாா் வல்லுநா்களின் சொற்பொழிவுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை கூடுதல் தலைமை செயலா் பி.சந்தரமோகன், இயக்குநா் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

ஜனவரி 2026 மாத சிறார் திரைப்படம் `அயலி - பாகம் 1` திரையிடல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

     

ஜனவரி 2026 மாத சிறார் திரைப்படம் `அயலி - பாகம் 1` திரையிடல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

DSE - Movie January 2026.pdf

👇👇👇

Download here


உலகமெங்கும் திரைத்துறை வாயிலாக திரைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கங்களும், மாற்றங்களும் ஏராளம். திரைப்படங்களால் மாணவர்களுக்கு அறம் மற்றும் சமத்துவ கருத்துகள் பற்றின புரிதலை, கலந்துரையாடல்களின் வாயிலாக எளிதான வகையில் ஏற்படுத்திவிட முடியும். தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையின் முன்னெடுப்புகளில் அனைவராலும் பாராட்டப்பட்ட மிகவும் முக்கியமான நிகழ்வு சிறார் திரைப்படங்களை பள்ளிகளில் திரையிடுதல். மாணவர்களுக்கு சமூக நீதி, சமத்துவம், அறிவியல் பார்வை ஆகியவற்றைப் பற்றின விழிப்புணர்வு மற்றும் அதன் மீதான பார்வையை ஏற்படுத்துவதற்கும், மாணவர்கள் திரைப்படங்களை பகுத்தறிவுடன் அணுகுதல், தங்கள் வாழும் சூழலை புரிந்து கொள்ளுதல், பல்வேறு கலாச்சாரங்களின் தனித்தன்மையை அறிந்து கொள்ளுதல், தன்னம்பிக்கை, நட்பு பாராட்டுதல், குழுவாக இணைந்து செயல்படுதல், பாலின சமத்துவம் ஆகிய பண்பு நலன்களை அடையாளம் காணுதல், தங்களிடம் உள்ளார்ந்து புதைந்திருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொணர செய்தல் போன்ற நோக்கத்துடன் மாதந்தோறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் திரைப்படம் திரையிடப்படுகிறது.


மேலும் திரைப்படக் கலையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கலையை ரசிப்பதற்கும், கதை, எழுத்து, திரைக்கதை, நடிப்பு, உடையலங்காரம், பின்னணி வடிவமைப்பு, இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பு போன்ற திரைத்துறையின் பிரிவுகளை அறிமுகப்படுத்தவும் இந்நிகழ்வு அடிப்படையாக அமைகிறது.


அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் அனைவரும் கண்டுணரும் வகையில் ஜனவரி மாதம் "அயலி பாகம் 1" திரைப்படத்தை திரையிடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


படத்தின் கதைக் கரு, சுருக்கம், குழந்தைகள் புரிந்துகொள்ள வேண்டியவை, உரையாடவேண்டியவை இணைப்பில் பகிரப்பட்டுள்ளது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

THIRAN Targeted Help for Improving Remediation & Academic Nurturing) இயக்கத்தைப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்.

     156868


பள்ளிக் கல்வி 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு எண் 01 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் மொழிப் பாடத்திறன் மற்றும் கணிதத் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருட்டு "திறன்" (THIRAN Targeted Help for Improving Remediation & Academic Nurturing) இயக்கத்தைப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்...

DEE & DSE Proceedings - Download here


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 3 - ( Set - 4 ) Lesson Plan - T/M & E/M

     

Ennum Ezhuthum Lesson Plan | 2025 - 2026


Term III Lesson Plan

January - 2026

SET : 4

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 3 - ( Set - 4 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 3 - ( Set - 4 ) Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3 - ( Set - 4 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3 - ( Set - 4 ) Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum Lesson Plan | 2025 - 2026

👇👇👇
Full Lesson Plan - Click here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

மாவட்டம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் | Trichy Job Fair 2026

     District Employment Office Tiruchirappalli,

District Administration Tiruchirappalli
மற்றும் தமிழ்நாடு அரசு – தனியார் துறை வேலைவாய்ப்பு சேவைகள் சார்பில்
மாவட்டம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திருச்சி மாவட்டத்தில் நடத்தப்படுகிறது.


🗓️ வேலைவாய்ப்பு முகாம் விவரங்கள்

  • நாள்: 24.01.2026 (சனிக்கிழமை)
  • நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை
  • இடம்:
    Bishop Heber College,
    Vayalur Road, Puthur,
    Tiruchirappalli – 17

⭐ அனுமதி: இலவசம்

முகாமில் பங்கேற்கும் நிறுவனங்கள்

  • 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்
  • 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்
  • IT, Manufacturing, Textile, Sales, Service உள்ளிட்ட பல துறைகள்

📋 வேலைவாய்ப்பு துறைகள்

  • எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை
  • ITI / Diploma / Degree
  • ஜாப், டிப்ளமோ, நர்சிங், பார்மசி, பொரியியல் உள்ளிட்ட துறைகள்
  • Freshers & Experienced Candidates

👨‍🎓 வேலை தேடுபவர்களுக்கு முக்கிய தகவல்

  • வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பது அவசியம்
  • Resume, கல்விச்சான்றிதழ்கள் கொண்டு வருதல் வேண்டும்
  • நேரடி நேர்காணல் (Direct Interview) நடைபெறும்
  • இலவசமாக வேலைவாய்ப்பு பெற வாய்ப்பு

📞 தொடர்புக்கு

  • தொலைபேசி: 0431-2413510
  • மொபைல்: 94990 55901

🌐 ஆன்லைன் பதிவு & கூடுதல் தகவல்

👉 https://www.tnprivatejobs.tn.gov.in
👉 QR Code ஸ்கேன் செய்து முழு விவரங்களையும் பெறலாம்



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

மாவட்டம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் | Tiruppur Job Fair 2026

     

District Employment Office Tiruppur மற்றும்
Tamil Nadu Private Jobs Portal
சார்பில் மாவட்டம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திருப்பூர் மாவட்டத்தில் நடத்தப்படுகிறது.


🗓️ வேலைவாய்ப்பு முகாம் விவரங்கள்

  • நாள்: 24.01.2026 (சனிக்கிழமை)
  • நேரம்: காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை
  • இடம்:
    E.V.P. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
    திருமுருகன்பூண்டி, திருப்பூர்

⭐ அனுமதி: இலவசம்

முகாமில் பங்கேற்கும் நிறுவனங்கள்

  • 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்
  • 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்
  • IT, Manufacturing, Textile, Sales, Service உள்ளிட்ட பல துறைகள்

📋 வேலைவாய்ப்பு துறைகள்

  • எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை
  • ITI / Diploma / Degree
  • ஜாப், டிப்ளமோ, நர்சிங், பார்மசி, பொரியியல் உள்ளிட்ட துறைகள்
  • Freshers & Experienced Candidates

👨‍🎓 வேலை தேடுபவர்களுக்கு முக்கிய தகவல்

  • வேலை தேடுபவர்கள் மாவட்ட தொழில் மையம் / வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்
  • Resume, கல்விச்சான்றிதழ்கள் கொண்டு வருதல் அவசியம்
  • நேரடி நேர்காணல் (Direct Interview) நடைபெறும்

📞 தொடர்புக்கு

  • தொலைபேசி: 0421-2999152
  • மொபைல்: 94990 55944

🌐 ஆன்லைன் பதிவு & கூடுதல் தகவல்

👉 https://www.tnprivatejobs.tn.gov.in
👉 QR Code ஸ்கேன் செய்து முழு விவரங்களையும் பெறலாம்



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

THIRAN - Students Progress & Achievement Report - Teacher's Form

     THIRAN மாணவர்களுக்கு மேற்காண் படிவத்தை நகலெடுத்து  பாட ஆசிரியர்களுக்கு வழங்கி பூர்த்தி செய்து, பெற்று ஆய்வு அலுவலர்கள் வருகை புரியும் போதுமுன்னிலைப்படுத்துமாறு தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த வட்டார கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்


Click Here to Download - Thiran - Students Progress & Achievement Report - Teacher's Form - Pdf


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகம்

     1 முதல் 3ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகம்


💥 தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் கீழ் படிக்கும் 1 முதல் 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வரும் ஜூலை மாதம் புதிய பாடப்புத்தகம் வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

நவீன உத்திகளை பயன்படுத்தி கற்றல் - கற்பித்தலை மேம்படுத்தும் நோக்கிலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கும் வகையிலும் சென்னை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் மாநில வள மையம் (State Resource Centre) உருவாக்கப்பட்டுள்ளது.

💥நவீன உலகில் வேகமாக வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களின் அடிப்படையிலான கற்றல்-கற்பித்தல் உத்திகளை ஆய்வு செய்து வகுப்பறை கற்றலுக்கு தேவையான பரிந்துரைகளை அளிப்பது, குழந்தைகள் மைய வகுப்பறை கற்றல் உத்திகளை காட்சிப்படுத்துவது, மாணவர்கள் செய்து பார்த்து கற்பதற்கான ஆய்வக மாதிரிகளை உருவாக்குவது உள்ளிட்டவை இந்த மாநில வள மையத்தின் முதன்மை நோக்கமாகும்.

💥இந்நிலையில், மாணவர்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை இன்று (ஜன.21) திறந்து வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அவற்றை பார்வையிட்டார்.



💥மாணவர்கள் பல்வேறு வகையான பாடத்திட்டங்களை மகிழ்ச்சியாக கற்க வேண்டும். இதற்காகவே இந்த மாநில வள மையம் திறக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகள் பயமில்லாமல் பாடம் கற்க உதவும். மேலும், குழந்தைகள் வாழ்க்கை பாடத்தின் மூலம் அனைத்தையும் கற்க வேண்டும் என்பதற்காகவும், AI உள்ளிட்ட உயர் தொழில்நுட்பங்கள் மூலம் பாடத்தை கற்கவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.




💥இது மட்டுமின்றி, ஆசிரியர்கள் தமிழ் இலக்கியம் சார்ந்து ஆய்வு செய்யவும், அறிவியல் சார்ந்து கற்றுக் கொள்வது மட்டுமல்லாமல் பிற ஆசிரியர்களுக்கும் சொல்லித் தரும் வகையில் வீடியோ கான்பரன்ஸ் அறை அமைக்கப்பட்டுள்ளது. நேஷனல் டிஜிட்டல் லைப்ரரி அமைக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் இங்கு வந்து தங்களுக்கு தேவையான பல்வேறு ஆய்வுகளைப் படிக்கவும், பிறருக்கு எடுத்துச் சொல்லும் உதவும் வகையில் அமைத்துள்ளோம்” என்றார்.

💥மேலும் பேசிய அவர், “தமிழ்நாடு கல்விக் கொள்கையின் படி, மாநில வள மையத்தில் மாணவர்களுக்கான கல்வி செயல்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 2026-27 கல்வியாண்டில் ஒன்று, இரண்டு, மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை மாதம் புதிய புத்தகம் வழங்கப்படும். தமிழ்நாட்டில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் ஆசிரியர்கள் கற்றுக் கொள்ளும் வகையில் சென்னையில் உள்ளது போல் வள மையம் அமைக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

SSLC NR, Exam Fees & TML Fee - Date Extended

     

SSLC NR, Exam Fees & TML Fee - Date Extended

10ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம  (21.01.2026) வரை நீட்டிப்பு - அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம்

👇👇👇

Click Here To Download PDF 

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Vidyagyan - 5th Standard Scholarship Exam 2026-27

     

Vidyagyan - 5th Standard Scholarship Exam 2026-27

தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் செயல்படும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2025-26ஆம் கல்வியாண்டில் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களில் இருந்து ஓர் ஒன்றியத்திற்கு 16 பேர் வீதம் (ஆண்கள் – 8, பெண்கள் – 8) பெயர் தெரிவு செய்து 10.01.2026ஆம் தேதிக்குள் வழங்க அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இம்மாணவர்களை தெரிவு செய்கையில் 2025-26 கல்வியாண்டின் 

1) முதல் பருவ / காலாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் உயர்நிலையில் இருந்தும்

2) பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாத வகையிலும் 

3) மாணவர்கள்  01.04.2015 முதல் 31.3.2016 வரை பிறந்தவர்கள் மற்றும் மாணவியர்கள் 01.04.2014 முதல் 31.3.2016 வரை பிறந்தவர்களை மட்டும் தெரிவு செய்ய அறவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் இணைப்பில் கண்டுள்ள Excel படிவத்தில் கோரியுள்ள விவரங்களை பூர்த்தி செய்து இதே வாட்ஸ்ஆப் குழுவில் மட்டும் பதிவிடுமாறு தெரிவிக்கப்படுகிறது. 

இத்திட்டம் குறித்த ஏதேனும் கூடுதல் விவரங்கள் தேவைப்படின் திரு.M.பழனிவாசன் 94443 07602 /9841947640 என்ற கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடக்கக் கல்வி இயக்குநருக்காக

ஆ,ஜெய பாண்டி,

உதவிக் கல்வி அலுவலர் (புள்ளியியல்

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க