SERC Chennai Recruitment 2026 – ITI, Diploma Candidates-க்கு Apprentice வேலைவாய்ப்பு! Walk-in Interview மூலம் தேர்வு

 ITI மற்றும் Diploma படித்த candidates-க்கு Chennai-ல் Central Government Research Centre Apprentice வாய்ப்பு! CSIR-Structural Engineering Research Centre சார்பில் Trade Apprentice மற்றும் Technician Apprentice பணிகளுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

SERC Chennai Recruitment 2026 மூலம் மொத்தம் 29 Apprentice காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு online application இல்லாமல், eligible candidates நேரடியாக Walk-in Interview-க்கு செல்லலாம். தேர்வு செய்யப்படும் candidates-க்கு மாதம் ₹10,500 முதல் ₹12,000 வரை stipend வழங்கப்படும்.

கல்வித் தகுதி

Trade Apprentice பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் candidates, சம்பந்தப்பட்ட trade-ல் ITI முடித்திருக்க வேண்டும்.

Technician Apprentice பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் candidates, சம்பந்தப்பட்ட துறையில் Diploma முடித்திருக்க வேண்டும்.

Apprentice training வாய்ப்பை தேடும் freshers மற்றும் technical qualification கொண்ட candidates-க்கு இது நல்ல opportunity ஆக இருக்கும்.

தேர்வு முறை

இந்த recruitment-க்கு candidates Walk-in Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேவையான ஆவணங்கள், educational certificates, ID proof, application form போன்றவற்றுடன் candidates நேரடியாக interview venue-க்கு செல்ல வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

இந்த SERC Chennai Apprentice recruitment-க்கு Application Fee இல்லை. Eligible candidates free-ஆ Walk-in Interview-ல் கலந்து கொள்ளலாம்.

Walk-in Interview தேதி

Walk-in Interview Date: 20.05.2026

Candidates interview date அன்று நேரத்திற்கு முன்பாக venue-க்கு சென்று registration/document verification process-ல் கலந்து கொள்ள வேண்டும்.

Walk-in Venue

CSIR-Structural Engineering Research Centre,
Taramani,
Chennai – 600113.

எப்படி விண்ணப்பிப்பது?

முதலில் candidates official notification-ஐ download செய்து முழுமையாக படிக்க வேண்டும். அதன் பிறகு application form-ஐ print எடுத்து, தேவையான details-ஐ சரியாக fill செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட application form, original certificates, self-attested copies, ID proof மற்றும் notification-ல் குறிப்பிடப்பட்ட documents உடன் 20.05.2026 அன்று Walk-in Interview venue-க்கு நேரில் செல்ல வேண்டும்.

Official Website: https://www.serc.res.in/

APPLICATION FORM: CLICK HERE

OFFICIAL NOTIFICATION: CLICK HERE

👉 இந்த வேலைவாய்ப்பிற்கு Apply செய்ய, 7598 492 290 என்ற எண்ணிற்கு இந்த லிங்கை அனுப்பி “Apply” என்று WhatsApp செய்யவும்.
📲 (Online Apply Option இருக்கும் வேலைவாய்ப்புகள் மட்டும் apply செய்து தரப்படும்)

முடிவு

SERC Chennai Recruitment 2026 என்பது ITI மற்றும் Diploma படித்த candidates-க்கு Chennai-ல் Apprentice training பெற நல்ல வாய்ப்பு. மொத்தம் 29 காலியிடங்கள் உள்ளதால், தகுதியான candidates official notification-ஐ சரிபார்த்து 20.05.2026 அன்று Walk-in Interview-ல் கலந்து கொள்ளலாம்.

டேட்டா சயின்ஸ், ஏரோநாட்டிக்ஸ் பிரிவுகளில் சென்னை ஐஐடியில் ஆன்லைனில் நடத்தப்படும் 4 ஆண்டு பி.எஸ். பட்டப் படிப்புகள்

 டேட்டா சயின்​ஸ், எலெக்ட்​ரானிக் சிஸ்​டம், ஏரோ​நாட்​டிக்ஸ் உள்​ளிட்ட பிரிவு​களில் 4 ஆண்டு ஆன்​லைன் பி.எஸ். பட்​டப் படிப்​பு​களில் மாணவர் சேர்க்​கைக்​கான அறி​விப்பை சென்னை ஐஐடி வெளி​யிட்​டுள்​ளது. பிளஸ்-2 தேர்ச்சி பெற்​றவர்​கள் மே 31-ம் தேதி வரை விண்​ணப்​பிக்கலாம்.

இது தொடர்​பாக சென்னை ஐஐடி நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: அனைத்து தரப்பு மாணவர்​களுக்​கும் உயர்​தரக் கல்வி அளிக்​கும் வகை​யில் டேட்டா சயின்ஸ் அண்ட் அப்​ளி​கேஷன்​ஸ், எலெக்ட்​ரானிக் சிஸ்​டம், மேனேஜ்மென்ட் அண்ட் டேட்டா சயின்​ஸ், ஏரோ​நாட்​டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் டெக்​னாலஜி ஆகிய 4 வித​மான பி.எஸ். பட்​டப் படிப்​பு​களை சென்னை ஐஐடி ஆன்​லைனில் வழங்கி வரு​கிறது.

இவை 4 ஆண்டுக்கால படிப்புகள். மாணவர்​கள் இதை தனி பட்​டப் படிப்​பாகவோ, வழக்​க​மான கல்​லூரி பட்​டப் படிப்​புடன் சேர்ந்தோ படிக்​கலாம். இதற்​கான வகுப்​பு​கள் பெரும்​பாலும் ஆன்​லைனில் நடத்​தப்​படும். நாடு முழு​வதும் பல்​வேறு மையங்​களில் நேரடி தேர்​வு​கள் நடத்​தப்​படும்.

மாணவர்​கள் தங்​கள் வசதிக்கு ஏற்ப படிப்​பைத் தொடரலாம். அவர்​களது படிப்​புக் காலத்​துக்கு ஏற்ப சான்​றிதழ், டிப்​ள​மா, பட்​டம், பி.எஸ். பட்​டம் என வழங்​கப்​படும். இப்​படிப்​பு​களில் சேர, பிளஸ்-2 தேர்ச்சி போதும். வயது வரம்பு கிடை​யாது.

ஜேஇஇ நுழைவுத் தேர்வு தேர்ச்​சி​யும் அவசி​யம் இல்​லை. தகு​தி​காண் நடை​முறை மூலம் மாணவர்​கள் சேர்க்​கப்​படு​வார்​கள்.

இதில் சேர விரும்​புவோர் https://study.iitm.ac.in என்ற இணை​யதளம் வாயி​லாக மே 31-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம். கூடு​தல் விவரங்​களை இணை​யதளத்​தில் விரி​வாக அறிய​லாம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.



CTET 2026 September - notification

 CTET 2026 September - notification  

PUBLIC NOTICE

The Central Board of Secondary Education will conduct the 22nd Edition of Central Teacher Eligibility Test (CTET) on 06th September, 2026 (Sunday) (Paper- I and Paper-II). The online application process will start from 11.05.2026. The last date for submitting the online application is 10.06.2026 (11:59 PM). The test will be conducted in twenty seven languages in 132 cities all over the country.

611302

பிளஸ்-2 முடித்த மாணவர்கள் அரசு திரைப்படக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

 பிளஸ்-2 முடித்த மாணவர்கள் சென்​னை​யில் உள்ள அரசு திரைப்​படக் கல்​லூரி​யில் சேர விண்​ணப்​பிக்​கலாம் என தமிழக அரசு அறி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக, தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழக அரசின் எம்​ஜிஆர் திரைப்​படம் மற்​றும் தொலைக்​காட்சி பயிற்சி நிறு​வனம் சென்னை தரமணி​யில் அமைந்​துள்​ளது.

இக்​கல்​லூரி​யில் ஒளிப்​ப​திவு, டிஜிட்​டல் இன்​டர்​மீடியட், ஒலிப்​ப​திவு, இயக்​கம் மற்​றும் திரைக்​கதை எழுதுதல், எடிட்​டிங், அனிமேஷன் மற்​றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய 6 பாடங்​களில் இளங்​கலை பட்​டப்​படிப்பு (பேச்​சிலர் ஆஃப் விஷுவல் ஆர்ட்​ஸ்) வழங்​கப்​படு​கிறது.

இப்​படிப்​பு​களில் வரும் கல்வி ஆண்​டில் (2026-27) சேரு​வதற்கு விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.

மாணவர்​கள் இதற்​கான விண்​ணப்​பப் படிவம் மற்​றும் விளக்​கக் கையேட்டை www.filminstitute.tn.gov.in என்ற இணை​யதளத்​தில் மே 12 (இன்​று) முதல் பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம்.

பூர்த்தி செய்​யப்​பட்ட விண்​ணப்​பத்தை விண்​ணப்​பக் கட்​ட​ணம் மற்​றும் தேவை​யான ஆவணங்​களு​டன் ஜூன் 2-ம் தேதி மாலை 5 மணிக்​குள் ஆன்​லைனில் பதிவேற்​றம் செய்ய வேண்​டும். மேற்​கண்ட பட்​டப் படிப்​பு​களுக்கு விண்​ணப்​பிக்க பிளஸ்-2 முடித்​திருக்க வேண்​டும் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் காலிப்பணியிட விவரம் கோரி உத்தரவு - Director Proceedings

 உயர்நிலைபள்ளிகளில் காலியாக உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்கள் சார்ந்த விவரம் கோருதல் - சாரபு.


பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு/நகராட்சி உயர்நிலைப்பள்ளிகளில் 01.12.2025 நிலவரப்படி காலியாக உள்ள அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் காலிப்பணியிட விவரங்களை பார்வை 3-ல் காண் இவ்வியக்கக செயல்முறைகளின் மூலம் கோரப்பட்டது. 

தற்சமயம், தற்போதுள்ள நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் காலிப்பணியிட விவரத்தினை (31.05.2026-ல் ஓய்வு பெறும் தலைமையாசிரியர்களின் பணியிடத்தினையும் சேர்த்து) இணைப்பில் குறிப்பிட்டுள்ள படிவத்தில் (படிவம்1 மற்றும் 2) பூர்த்தி செய்து SOFT COPY-யினை c1tndse@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் கையொப்பமிட்ட பிரதியினை 15/05/2026க்குள் இவ்வியக்கத்திற்கு அனுப்பிவைத்திட வேண்டும். 
மேலும், ஒவ்வொரு மாதமும் பிரதி 5ஆம் தேதிக்குள் தங்களது மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் காலிப்பணியிட விவரத்தினை தவறாமல் இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



கண்காணிப்பாளர் பதவியிலிருந்து DEO / JD -ன் நேர்முக உதவியாளர் பதவி உயர்வுக்கு உத்தேச பெயர்ப் பட்டியல் வெளியீடு!

 கண்காணிப்பாளர் பதவியிலிருந்து DEO / JD -ன் நேர்முக உதவியாளர் பதவி உயர்வுக்கு உத்தேச பெயர்ப் பட்டியல் வெளியீடு!

தமிழ்நாடு பொதுப்பணி - மாவட்டக் கல்வி அலுவலரின் / இணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் பதவிக்கு 15.03.2026 அன்றுள்ளவாறு கண்காணிப்பாளர்களின் உத்தேச பெயர்ப்பட்டியல் வெளியிடுதல் - சேர்க்கை. நீக்கம், திருத்தம் கோருதல் -சார்ந்து.

DSE - PA Panel Tentative - Proceeding.pdf

👇👇👇👇

Download here

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடங்கள் எத்தனை? - பள்ளிக்கல்வித் துறை கணக்கெடுப்பு

 அரசுப் பள்​ளி​களில் காலி​யாக​வுள்ள இடைநிலை ஆசிரியர், பட்​ட​தாரி ஆசிரியர் பணி​யிடங்​களின் விவரங்​களை அனுப்​பக் கோரி பள்​ளிக்​கல்​வித் துறை உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

இதுதொடர்​பாக பள்​ளிக்​கல்வி இணை இயக்​குநர் (பணி​யாளர் பிரிவு) அனைத்து மாவட்ட முதன்​மை கல்வி அதி​காரி​களுக்கு அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை​: அரசு, நகராட்​சி, உயர் நிலை, மேல்நிலைப் பள்​ளி​களில் 31.5.2025 நில​வரப்​படி, அனைத்​துப் பாட பட்​ட​தாரி ஆசிரியர்​கள் மற்​றும் இடைநிலை ஆசிரியர்​களின் நிரப்​பத் தகுந்த காலிப்​பணி​யிடங்​களை மே 20-க்குள் பள்​ளிக்​கல்வி இயக்​குநர் அலு​வல​கத்​துக்கு அனுப்ப வேண்​டும்.

அவ்​வாறு காலிப் பணியிட விவரங்களை அனுப்பும்போது 01.08.2025-ல் ஆசிரியர் இல்லாமல் உபரி எனக் கண்டறிந்து இயக்குநரின் பொதுத் தொகுப்புக்கு ஒப்படைக்கப்படும் பணியிடங்களை எக்காரணத்தைக் கொண்டும் காலிப்பணியிடங்களாகக் கருதக் கூடாது.


அதேபோல், கூடுதல் தேவையுள்ள பள்ளிகளின் பெயர்களையும் காலிப் பணியிடங்களாகக் கருதக்கூடாது என்று மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


மேலும், காலிப்பணியிட விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பும்போது தற்போதைய நிலவரப்படி அப்பள்ளிக்கு பூர்த்தி செய்ய ஏதுவாக நிரப்பத் தகுந்த காலியிடங்கள் என்பதையும், இப்பணியிடம் அப்பள்ளியில் ஐஎப்எச்ஆர்எம்-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்த பின்னரே படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்

NEET (UG) 2026 – மறு தேர்வு - முக்கிய அறிவிப்பு

 




இந்த Notice படி, 03.05.2026 அன்று நடைபெற்ற NEET UG 2026 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


NTA மற்றும் மத்திய அரசு இணைந்து எடுத்த முடிவின் அடிப்படையில் மீண்டும் NEET தேர்வு நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 


📝 மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்


1️⃣ NEET 2026 தேர்வு ரத்து

📌 3 மே 2026 அன்று நடந்த NEET Exam தற்போது செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


2️⃣ மீண்டும் தேர்வு நடைபெறும்

📌 Re-NEET (மீண்டும் NEET தேர்வு) நடைபெறும்.

📌 புதிய தேர்வு தேதி பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 


3️⃣ புதிய Registration தேவையில்லை

✅ ஏற்கனவே பதிவு செய்த மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம்.

✅ பழைய Registration Data பயன்படுத்தப்படும். 


4️⃣ கூடுதல் Exam Fee இல்லை

💰 மீண்டும் தேர்வு எழுத எந்த கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது என Notice-ல் கூறப்பட்டுள்ளது. 


5️⃣ புதிய Hall Ticket வழங்கப்படும்

🎫 புதிய Exam Date அறிவித்த பிறகு புதிய Admit Card / Hall Ticket வெளியிடப்படும்.


6️⃣ CBI விசாரணை

🔍 முறைகேடு குறித்த புகார்களை CBI விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 


🌟 மாணவர்களுக்கு முக்கிய ஆலோசனை

❌ பயப்பட வேண்டாம்

❌ Social Media Rumours நம்ப வேண்டாம்

✅ அதிகாரப்பூர்வ Website மட்டும் பார்க்கவும்:

NEET Official Website

NTA Official Website


🎯 இப்போது மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?


✔️ மீண்டும் Revision தொடங்குங்கள்

✔️ Biology NCERT கவனமாக படிக்கவும்

✔️ Mock Tests தொடரவும்

✔️ மனஅழுத்தம் கொள்ள வேண்டாம்

👉 இந்த கூடுதல் நேரம் உங்கள் Rank-ஐ உயர்த்த ஒரு நல்ல வாய்ப்பாக மாறலாம்.

🌸 மாணவர்களே!

ஒரு தேர்வு தள்ளிப்போனது உங்கள் கனவை தள்ளிப்போடாது.

அமைதியாக தயாராகுங்கள். வெற்றி உங்களுக்கே! 💪🎯





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க


BREAKING | கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வுகள் ரத்து

 நீட் தேர்வு ரத்து

 மே 3ஆம் தேதி நடைபெற்ற எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

23 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் நுழைவுத் தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரையடுத்து தேசிய தேர்வு முகமை நடவடிக்கை

ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது

இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த தேசிய தேர்வுகள் முகமை பரிந்துரை

மறுதேர்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனத் தகவல்



முதல் மூன்று வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் தயார்

 தமிழகத்தில், மாநில கல்வி கொள்கையை பின்பற்றி, 1, 2, 3ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் தயாராக உள்ளன. மத்திய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்காததால், மாநில கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்பட்டது. 


அக்குழுவின் பரிந்துரையின்படி, மாநில கல்விக் கொள் கை கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன்படி, எட்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க, கல்வி மற்றும் நிர்வாக குழுக்கள் அமைக்கப்பட்டன. அக்குழுக்கள், மாணவர்களின் மனப்பாடம் செய்யும் சுமையை குறைத்து, ஆளுமைத்திறன், வாழ்க்கை திறன் மற்றும் நேர்மறை சிந்தனையை வளர்க்கும் வகையில், பாடத்திட்டங்களை மாற்ற கருத்துருக்களை வழங்கின. அவை, '

tnschools.gov.in' இணையதளத்தில் வெளியிடப்பட்டு, கல்வியாளர்கள், பெற்றோர், பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.


அதன் அடிப் படையில், இந்த கல்வியாண்டில், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை மாற்றும் பணி தொடங்கியது. அடுத்து படிப்படியாக, ஒவ்வொரு வகுப்புக்கும் மாற்றம் தொடர உள்ளது. தொடக்க கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: வாழ்க்கை திறன், முதலுதவி, பாதுகாப்பு முறைகள், சுய பராமரிப்பு பழக்கங்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி, புதிய பாடத்திட்டங்களை, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கி உள்ளது. 


இந்த புத்தகங்களில், பழையபடி மாணவர்களின் மனப்பாடம் செய்யும் சுமை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது, தேவையான புத்தகங்களை, பாடநுால் கழகம் அச்சிட்டு தயாராக வைத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.




G.O 50 - யாருக்கு 200 / 100 யூனிட் மின்சாரம் இலவசம் - அரசாணை முழு விவரம்

 2 மாதங்களுக்கு ஒருமுறை தங்களது வீட்டு மின் பயன்பாட்டை 500 யூனிட்டுகளுக்குள் வைத்திருக்கும் நுகர்வோருக்கு மட்டுமே மொத்தம் 200 யூனிட்கள் இலவசமாக வழங்கப்படும். ஒரு நுகர்வோர் 2 மாதங்களில் 500 யூனிட்டிற்கும் அதிகமாக மின்சாரம் பயன்படுத்தினால், அவர்களுக்குப் புதிய சலுகை பொருந்தாது. அவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள கட்டண முறையே தொடரும்; அதாவது ஏற்கனவே அமலில் உள்ள 100 யூனிட் இலவச மின்சாரம் மட்டுமே அவர்களுக்குக் கிடைக்கும். 10.05.2026







பள்ளிக் கல்வி துறை அமைச்சர்? பி. வெங்கட்ரமணன் (தவெக) - வாழ்க்கைக் குறிப்பு

 TVK%20-%20Venkatramanan



பி. வெங்கட்ரமணன் (தவெக) - வாழ்க்கைக் குறிப்ப

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான பி. வெங்கட்ரமணன் அவர்களின் விரிவான வாழ்க்கைக் குறிப்பு கீழே தொகுக்கப்பட்டுள்ளது:

1. அடிப்படை விவரங்கள்
முழுப் பெயர்: பி. வெங்கட்ரமணன்
தந்தை பெயர்: பத்மநாபன்
பிறந்த ஆண்டு: 1978 (வயது 48)
சொந்த ஊர்: சென்னை, தமிழ்நாடு
கட்சிப் பதவி: பொருளாளர், தமிழக வெற்றிக் கழகம் (TVK)

​2. கல்வித் தகுதி (Education)
​இவர் சட்டம் மற்றும் வணிகவியலில் பல பட்டங்களைப் பெற்றுள்ளார்:
  • ​M.Com & LLM: அண்ணாமலை பல்கலைக்கழகம்
  • ​LLB (சட்டம்): பெங்களூர் பல்கலைக்கழகம்
  • ​MBA: பெரியார் பல்கலைக்கழகம்

​3. தொழில் மற்றும் விஜய்யுடனான பயணம்
  • ​வழக்கறிஞர்: இவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாகப் பயிற்சி பெற்று வரும் ஒரு வழக்கறிஞர் ஆவார்.
  • ​விஜய்யின் மேலாளர் (Manager): 2000-ஆம் ஆண்டு முதல் (சுமார் 26 ஆண்டுகளாக) நடிகர் விஜய்யின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை மேலாளராகப் பணியாற்றி வருகிறார். விஜய்யின் நிழலாகவும், மிகவும் நம்பத்தகுந்த நபராகவும் அறியப்படுகிறார்.


​4. அரசியல் பயணம் (2026 தேர்தல்)
​நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியைத் தொடங்கியதில் இருந்து, கட்சியின் மிக முக்கியப் பொறுப்பான பொருளாளர் பதவியை வெங்கட்ரமணன் கவனித்து வருகிறார்.

  • ​2026 சட்டமன்றத் தேர்தல்: தவெக சார்பில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டார்.
  • ​வெற்றி: இந்தத் தேர்தலில் 70,070 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் த. வேலுவை (41,098 வாக்குகள்) 28,972 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சட்டமன்ற உறுப்பினராக (MLA) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

​5. குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை
​இவரது மனைவி பெயர் மீனாட்சி. (இவர் 'சாய் விஜய் அறக்கட்டளையின்' அறங்காவலராக உள்ளார்).
​விஜய்யின் பல வருட நண்பராகவும், ஆலோசகராகவும், தற்போது கட்சியின் முக்கியத் தூணாகவும் வெங்கட்ரமணன் செயல்பட்டு வருகிறார்.




100% தேர்ச்சி வழங்கிய பள்ளிகள், தலைமையாசிரியர் பெயர் மற்றும் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 100% தேர்ச்சி வழங்கிய பள்ளிகள், தலைமையாசிரியர் பெயர் மற்றும் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

DSE - 100% Result Circular - Download here





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

+2 / +1 (Arrear) துணைத் தேர்வு 2026 - அட்டவணை வெளியீடு!

 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டுப் பள்ளி மாணவர்களுக்கான துணைத் தேர்வு (Supplementary Exam) அட்டவணைகள் வெளியீடு: 11, 12-ஆம் வகுப்புத் தேர்வுகள்