TN Board Results 2026 - How to Check TN 12th Public Exam Result Link @ www.tnresults.nic.in

 

TN Board Results 2026 - How to Check TN 12th Public Exam Result Link @ www.tnresults.nic.in

TN Board Results 2026 - How to Check TN 12th Public Exam Result Link @ www.tnresults.nic.in

TN 12th Results 2026 - www.tnresults.nic.in

TN 12th Results 2026 - www.tnresults.nic.in

Flash News :  காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.


 Step 1 : 

Click The below Website Link. If the First Server is busy using theOther Websites. Click the Text Named "HSE (+2) Examination Results 2025-2026" in that Official Website

Step 2 : 

Enter Your Register Number which is Given by your school and Date of birth that you had given in your Nominal Roll.

Step 3 : 

Finally Touch the Submit Button . You will get your Mark Like Below TN 12th Std result 2026

Official Websites to Check 12th Standard Public Exam Results :

Tamilnadu 12th result Official website


கீழே 2 லிங்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.ஏதேனும் ஒரு லிங்கை கிளிக் செய்து உங்களுடைய ரிஜிஸ்டர் நம்பர் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து உங்களுடைய பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு மதிப்பெண்களை உங்கள் செல்போனில் நீங்களே பார்க்கலாம்.

 12th Reslut Link 1 :

12th Reslut Link 3 :

HSE(+2) Examination March 2026, Results on Thursday, 8th May 2026 @ 09:30 AM

View the exam results on the above official website

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – 2026


தமிழகத்தில் பிளஸ் 2 (12ம் வகுப்பு) பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி காலை 9:30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

SMS மூலம் முடிவுகளை பெறுவது எப்படி?

* தேர்விற்கு மாணவர்கள் கொடுத்த மொபைல் எண்ணிற்கு மதிப்பெண்கள் செய்தியாக (SMS) அனுப்பப்படும்.



Digilocker மூலம் +2 தேர்வு முடிவுகள் பார்க்க:


1. https://results.digilocker.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
2. “**Tamil Nadu State Board**” என்பதை தேர்வு செய்யவும்.
3. உங்கள் **ரோல் எண் மற்றும் பிறந்த தேதி** ஆகியவற்றை உள்ளிட்டு முடிவுகளை காணலாம்.

Official Mobile App மூலம் +2 தேர்வு முடிவுகளை அறிய :


பள்ளிக்கல்வித்துறை வழங்கிய அதிகாரப்பூர்வ மொபைல் ஆப்பை பயன்படுத்தி, மாணவர்கள் தேர்வு முடிவுகளை உடனுக்குடன் அறியலாம்:

🔗 [ஆப் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யவும்]


---


12th result 2026 | Tamil Nadu 12th Board Result | TN HSC Result 2026 | tnresults.nic.in | 12th Public Exam Result 2026 | TN Plus Two Result Date








12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடு - அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.

 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு பன்னிரண்டாம் வகுப்பு (#HSC) பொதுத்தேர்வு #முடிவுகள் மே 8, 2026 அன்று காலை 9:00 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.


மாணவர்கள் தங்களின் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளங்களான https://tnresults.nic.in மற்றும் https://dge.tn.gov.in ஆகியவற்றில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்திச் சரிபார்க்கலாம்.

Press Release Tamil - Class 12 Results - Download here


01.01.2026ல் தலைமையாசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் கருத்துருக்கள் கோருதல் சார்பான செயல்முறைகள்

 பள்ளிக்கல்வி மேல்நிலைக் கல்விப் பணி 01.01.2026ல் உள்ளவாறு அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் (நிலை-1) /அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் கருத்துருக்கள் கோருதல் சார்பாக தூத்துக்குடி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

HM Panel Instructions - Download here




இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க


பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு வெளியீட்டில் தாமதம்: தேர்வுத் துறை அதிகாரிகள் தகவல்

 தமிழகத்​தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு​கள் வெளி​யீடு தள்​ளிப்​போக வாய்ப்​புள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. தமிழக பள்​ளிக் கல்வி பாடத் திட்​டத்​தில் பிளஸ்-2 பொதுத்​தேர்வு கடந்த மார்ச் 2 முதல் 26-ம் தேதி வரை நடை​பெற்​றது.

இத்​தேர்வை மாநிலம் முழு​வதும் சுமார் 8 லட்​சம் மாணவ, மாணவி​கள் எழு​தினர். இவர்​களின் விடைத்​தாள் மதிப்​பீட்​டுப் பணி​கள் ஏப். 6 முதல் 20-ம் தேதி வரை நடை​பெற்​றது.

தொடர்ந்து தேர்வு முடிவு​களை வெளி​யிடு​வதற்​கான பணி​களை தேர்​வுத் துறை மேற்​கொண்டு வரு​கிறது. இதனால், பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு​கள் ஏற்​கெ​னவே அறி​வித்​த​படி மே 8-ல் வெளி​யாகும் என எதிர்​பார்க்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், தேர்வு முடிவு​கள் வெளி​யீடு சற்று தள்​ளிப்​போக வாய்ப்​புள்​ள​தாக தகவல்​கள் கிடைத்​துள்​ளன. இதுகுறித்​து, தேர்​வுத் துறை அதி​காரி​கள் சிலர் கூறும்​போது, “பிளஸ்-2 விடைத்​தாள் மதிப்​பீடு முடிக்​கப்​பட்​டு, மாணவர்​களின் மதிப்​பெண்​கள் இணை​யதளத்​தில் பதிவேற்​றப்​பட்​டுள்​ளன.

எனினும், தற்​போது ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டுள்​ள​தால் தேர்வு முடிவு​களை வெளி​யிட அரசின் ஒப்​புதலைப் பெற வேண்​டும்.

இதனால், திட்​ட​மிட்​டபடி மே 8-ல் பிளஸ் 2 முடிவு​களை வெளி​யிட முடி​யாது. புதிய அரசு அமைந்​ததும், உரிய ஒப்​புதல் பெற்று தேர்வு முடிவு​களை வெளி​யிட நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டு வருகின்றன’’ என்றனர்.

+2 வணிகவியல் பாடப்பிரிவு உட்பட அனைத்து பாடப்பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடி இரண்டாமாண்டு பட்டயப் படிப்பில் சேரலாம் -தொழில் நுட்பக் கல்வித் துறை உத்தரவு..

 +2 வணிகவியல் பாடப்பிரிவு உட்பட அனைத்து பாடப்பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடி இரண்டாமாண்டு பட்டயப் படிப்பில் சேரலாம் -தொழில் நுட்பக் கல்வித் துறை உத்தரவு..

588174


புதிய பாடத்திட்டம் தொடர்பான மாநில கருத்தாளருக்கான பயிற்சி - இயக்குநரின் செயல்முறைகள்

 590647

பள்ளிக்கல்வி பயிற்சி - 2026 2027ஆம் கல்வியாண்டில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கும் மாநில அளவில் புதிய பாடநூல்களுக்கான புத்தாக்கப் பயிற்சி சென்னையில் நடைபெறுதல் கருத்தாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களை பங்குபெற செய்தல் அறிவுறுத்துதல்-தொடர்பாக இயக்குநரின் செயல்முறைகள்

New Syllabus-State leve trg proceeding.pdf

👇👇👇

Download here





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க


EMIS applications and websites will undergo scheduled maintenance.

 This is to inform all users that, as part of the regular annual data archival and backup process, all EMIS applications and websites will undergo scheduled maintenance.


Maintenance Schedule:


* From: 5th May 2026

* To: 10th May 2026

* Services will resume from: 11th May 2026


Important Information:


* During this period, the EMIS applications and website will be completely unavailable.

* Users are requested to plan their activities such as data entry, report generation, and related work accordingly.

* Services including issuance of Transfer Certificates (TC) and other EMIS-related functionalities will be available only after the maintenance period.

* This downtime is necessary to ensure secure data backup, archival, and improved system performance.


We regret any inconvenience caused and appreciate your cooperation.




இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க


8th Pay commission – முதல் கூட்டம் (28.04.2026) சுருக்கம் - முக்கிய கோரிக்கைகள்

 



8வது ஊதியக் குழு – முதல் கூட்டம் (28.04.2026) சுருக்கம்

8வது மத்திய ஊதியக் குழுவுடன் NC-JCM முதல் கூட்டம் நடைபெற்றது.

பணியாளர் தரப்பு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தது.


முக்கிய கோரிக்கைகள்:

மெமோராண்டம் சமர்ப்பிப்பு காலத்தை நீட்டிக்க வேண்டும்

குறைந்தபட்ச ஊதியம் ₹69,000 ஆக நிர்ணயம்

Fitment Factor 3.83 ஆக உயர்த்த வேண்டும்

ஆண்டுதோறும் 6% ஊதிய உயர்வு

30 ஆண்டுகளில் 5 பதவி உயர்வு வழங்க வேண்டும்

அலவன்ஸ்கள் 3 மடங்கு உயர்த்த வேண்டும்

NPS நீக்கி பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வர வேண்டும்

ஓய்வூதியதாரர்களுக்கு One Rank One Pensionபணிநிலைகள் தொடர்பான கோரிக்கைகள்:

தொலைப்பகுதிகளில் பணிபுரியும் ஊழியர்களின் நிலை ஆய்வு

வட்டி இல்லாத கடன்கள்

விடுப்பு சலுகைகள் அதிகரிப்பு


பாதுகாப்பு & நலன்:

விபத்து மரண நிவாரணம் ₹2 கோடி

காப்பீட்டு தொகை உயர்வு

Compassionate appointment வரம்பு நீக்கம்


குழுவின் பதில்:

மேலும் கூட்டங்கள் நடைபெறும்

அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும்

மெமோராண்டம் கால நீட்டிப்பு விரைவில் முடிவு செய்யப்படும்


மொத்தமாக:

இந்த கூட்டம் ஆரம்ப நிலை ஆலோசனையாக இருந்தது.
அடுத்த கூட்டங்களில் ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.





11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றியமைத்தல் - தெரிவு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு சென்னையில் பணிமனை - SCERT Proceedings

 

11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான கலைத்திட்டம், பாடத்திட்டம் மாற்றியமைத்தல் தொடர்பாக தெரிவு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு சென்னையில் பணிமனை - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!!!

பார்வை 2இல் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணையில் 2026-2027ஆம் கல்வியாண்டில் 1 முதல் 3 வகுப்புகளுக்கான கலைத்திட்டம். பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை மாற்றியமைக்குமாறு இந்நிறுவனத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.


இதனடிப்படையில் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்தினை (State Board) பல்வேறு நாடுகள். மாநிலங்கள் மற்றும் பிற வாரியங்களின் கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்துடன் ஒப்பபீடு செய்யும் பணி இந்நிறுவனத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்தொடர்ச்சியாக 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்தினை மீளாய்வு செய்து இறுதி செய்யும் பணிமனை சென்னை-06. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 11.05.2026 முதல் 15.05.2026 வரை நடைபெற உள்ளது.


எனவே இப்பணிமனையில் கலந்துகொள்ள எதுவாக இணைப்பிலுள்ள மேல்நிலை வகுப்பு பாடங்களுக்கான பல்கலைக்கழக மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களைப் பணிவிடுவிப்பு செய்யுமாறு சார்ந்த அலுவலர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்


அடிப்படை விதிகள் அறிவோம் - வருகைப்பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயர் எழுதும் முறை - Proceedings

தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் கிருஷ்ணகிரி முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அவர்களின் செயல்முறைகள்

தகவல்அறியும் உரிமை சட்டம் - 2005 கீழ் திரு.அமாதையன், அஜ்ஜிபட்டி கிராமம், மானியாக அள்ளி அஞ்சல், நல்லம்பள்ளி வழி, தர்மபுரி மாவட்டம் என்பார் சில தகவல்கள் கோரியது - நகவல்கள் வழங்குதல் - சார்பாக,

திரு.அமாதையன், அஜ்ஜிபட்டி கிராமம், மானியாதஅள்ளி அஞ்சல், நல்லம்பள்ளி வழி, தர்மபுரி மாவட்டம் என்பாரது மனு நாள் 06-04-2015

பார்வையில் காணும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 ன்படி தங்களது மறு பரிசீலிக்கப்பட்டதில் தங்களால் கோரப்பட்ட நான்கு வினாக்களுக்கு சார்பாக கீழ்க்கண்ட தகவல்கள் அளிக்கப்படுகிறது.

ஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயர்கள் அவர்கள் பெறுகின்ற சம்பன ஏற்ற முறையில் உள்ள தர ஊதியத்தின் அடிப்படையில், இறங்கு வரிசையில் எழுத வேண்டும். ஒரு குறிப்பிட்ட பணியில் / பதவியில் ஒன்றுக்கு மேற்பட்டவர் ஒரே நாளில் மற்றும் ஒரே நேரத்தில் (முய? பி.பபு பணியில் சேர்ந்திருந்தால் அவர்களது பெயர்கள் பிறந்த தேதி மற்றும் அகர வரிசை ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்படும். ஒரே நாளில் இருவர் பணியில் சேர்ந்திருந்தால் அவர்களில் வயதில் மூத்தவர் முதலிலும், வயதில் இளைவர் அவர்களுக்கு அடுத்தும் எழுத வேண்டும். இருவருக்கும் பிறந்த தேதி ஒன்றாகவே இருக்குமேயானால் அவர்களது பெயர்கள் அகர யரிசை அடிப்படையில் எழுதப்படும். மேலும் வருகை பதிவேட்டில் பெயர் எழுதப்படுவதற்கு பாடம் சம்மந்தமாக முன்னுரிமை ஏதும் வழங்கப்படுவதில்லை.


மேற்கண்ட தகவல்கள் தங்களால் ஆட்சேபிக்கப்படுமேயானால் இக்கடிதம் கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் கீழ்க்கண்ட அலுவலருக்கு மேல்முறையீடு செய்துக்கொள்ளலாம்.

மேல்முறையீட்டு அலுவலர்:-
மேல்முறையீட்டு அலுவலர் மற்றும் முதன்மைக்கல்விஅலுவலர்,'
முதன்மைக்கல்வி அலுவலகம், கிருஷ்ணகிரி,


Teachers Attendance Name List Order - Proceeding





கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் - 895 மாணவர்கள் தேர்வு - Director Proceedings

 மலை சுற்றுலாத் தளங்களில் கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் - 895 மாணவர்கள் தேர்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


மாணவர்களின் தனித்திறன்களை மெருகேற்றுதல் கோடைக்கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் மலைசுற்றுலாத் தளங்களில் நடத்துதல் மாணவர்களின் பெயர் பட்டியல் பெறப்பட்டது மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று வருதல் பெற்றோர் மற்றும் மாணவர்களின் பாதுகாவலர்களிடமிருந்து விருப்பக் கடிதம் பெறுதல் சார்ந்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்பு.





NEET நுழைவுத் தேர்வு நிறைவு - சுலபமா, கடினமா ? மாணவர்கள் கருத்து

 நாடு முழுவதும் இன்று நடைபெற்று வந்த 2026-27-ஆம் கல்வியாண்டு இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நிறைவுபெற்றது.


நாடு முழுவதும் 22.80 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், தமிழ்நாட்டில் 1.4 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்.

நாடு முழுவதும் 552 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. சென்னையில் 43 மையங்களில் நீட் தேர்வு நடந்தது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் நீட் தோ்வில் தகுதி பெறுபவா்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கும் நீட் தேர்வு மூலமே மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அந்தவகையில் 2026 - 27 ஆம் கல்வி ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது.

நீட் தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்கள் தங்களின் அனுபவம் குறித்து பகிர்ந்தனர்.

அதில், ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு நீட் தேர்வு எளிமையாகவே இருந்ததாகவும், ஆனால், முழுவதும் எளிமை என்று கூற முடியது என்றும் குறிப்பிட்டனர்.

குறிப்பாக வேதியியல், இயற்பியல் கடினமாக இருந்ததாகவும், விலங்கியல் எளிமையாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் 552 நகரங்கள் மட்டுமின்றி துபை, அபுதாபி, மஸ்கட், ரியாத், சிங்கப்பூா் உள்ளிட்ட 14 வெளிநாடுகளில் 5,000 மையங்களில் தோ்வு நடைபெற்றது. தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்களை பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர்.

த.வெ.க - ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அளித்துள்ள முக்கிய வாக்குறுதிகள்

 ஆசிரியர் நலன்

1.  சம வேலை! சம ஊதியம்!
தமிழ்நாடு ஆசிரியர் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு, தற்காலிகமாகப் பணியாற்றும் ஆசிரியர்களில் 5 வருடங்களை நிறைவு செய்திருப்பவர்கள், நிரந்தர ஆசிரியர்களாக மாற்றப்படுவார்கள். 

அதுபோல், தற்காலிக ஆசியர்களாகப் அவர்கள் பணியாற்றும் காலத்தில், நிரந்தர ஆசிரியர்களுக்கு இணையாக தற்காலிக ஆசிரியர்களும் "சம வேலைக்கு சம ஊதியம்” பெறுவது உறுதி செய்யப்படும்.

2. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வெளிநாட்டுப் பயிற்சி
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தகுதியை மேம்படுத்தும் விதமாக தேர்வு செய்யப்படும் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும், பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கும் சிங்கப்பூர் மற்றும் பின்லாந்து நாடுகளில் பயிற்சி பெற அழைத்துச் செல்லப்படுவார்கள்.

3. ஆசிரியர் நியமனம்
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களும் நிரப்பப்படும்.

4. ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை திறன்படக் கற்றுக் கொள்ள ஏதுவாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் கல்வி திறன் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

5. கற்பித்தல் அல்லாத பணிகள் நீக்கம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களை கற்றல்-கற்பித்தல் அல்லாத பணிகளில் ஈடுபடுத்தப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்படும்.


அங்கன்வாடிப் பணியாளர்-ஆஷா பணியாளர் நலன்
1. ஊதிய உயர்வு
அனைத்து அங்கன்வாடி பணியாளர்களும் 'கிரேடு - டி' அரசு ஊழியர்களாக மாற்றப்பட்டு, அதன் அடிப்படையில் அவர்களுக்கு மாதம் 18000 ரூபாய் ஊதியம் வழங்கப்படும். அதுபோல், அங்கன்வாடி உதவியாளர்களுக்கும், சுகாதார விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்ளும் ஆஷா பணியாளர்களுக்கும் மாத ஊதியம் 10,000 ரூபாய் என்பது உறுதி செய்யப்படும்.

2 ஓய்வூதியப் பலன்
20 வருடங்கள் பணி நிறைவு செய்துள்ள அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்கள் 15 லட்சம் ரூபாய் ஓய்வூதியப் பலனாகப் பெறுவது உறுதி செய்யப்படும்.


அரசு ஊழியர் நலன்
1. பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துதல்
தி.மு.க அரசு கொண்டுவந்துள்ள தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஒழிக்கப்பட்டு, அரசு ஊழியர்களின் கோரிக்கைக்கேற்ப முழுமையான பழைய ஓய்வூதியத் திட்டம் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படும்.

2. அரசு ஊழியர் நல வாரியம்
அரசு, போலீஸ் பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களின் நலன்களை உறுதிப்படுத்தவும் ரூ.5,000 கோடி ஒதுக்கீட்டுடன் அரசு ஊழியர் நல வாரியம் அமைக்கப்படும்.

3. தற்காலிகப் பணியாளர் பணி நிரந்தரம்
ஆசிரியர், செவிலியர் உள்ளிட்ட அரசுப் பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட தற்காலிகப் பணியாளர்கள் 5 வருடப் பணி அனுபவம் பெற்றதும், அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக நியமனம் செய்யப்படுவார்கள்.

4. பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலில் வெளிப்படைத்தன்மை
அரசு ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல்கள் நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெறுவது உறுதி செய்யப்படும்.


5. 8ஆம் ஊதியக் குழுவின் உடனடி அமலாக்கம்
ஒன்றிய அரசு அறிவித்தவுடன், அரசு ஊழியர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் 8ஆம் ஊதியக் குழுவை மாநிலத்தில் உடனடியாக த.வெ.க. அரசு அமல்படுத்தும்.



2026 சட்டமன்ற தேர்தலுக்கான த.வெ.க-வின் முழு தேர்தல் அறிக்கை