அரசுப் பள்ளிகளில் பணியில் உள்ள ஆசிரியர்கள் மூன்றாவது மொழி கற்க விருப்பமா! ஆசிரியர்களுக்கு அறிவிப்பு வெளியீடு.

 அரசுப் பள்ளிகளில் பணியில் உள்ள ஆசிரியர்கள் மூன்றாவது மொழி கற்க விருப்பமா! 

Central institute of Indian languages என்ற மத்திய அரசு நிறுவனம் 

Diploma in Language Training 

என்ற படிப்பில் சேர்வதற்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


20 இந்திய மொழிகளில் ஏதாவது ஒரு மொழியை தேர்வு செய்து படிக்கலாம்.

விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களுடைய மாநில மொழி மற்றும் ஆங்கிலம் அல்லாத ஒரு பிற மாநில மொழியை மூன்றாவது மொழியாக கற்பதற்கு விண்ணப்பிக்கலாம். 


படிப்பில் சேர்ப்பவர்களை பணி விடுவிப்பு செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள கல்வித் துறைக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

கட்டாயமாக பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் படிக்க வேண்டும் இன்று சுற்றறிக்கையில் சொல்லப்படவில்லை.


இத்திட்டம் ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் இந்திய மொழிகளைக் கற்க விரும்பும் பொதுமக்களுக்கும் பயிற்சியை வழங்கும் நோக்கத்தில் நடத்தப்படுகிறது. 




இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த குடிமக்களிடையே பன்மொழித் திறனை வளர்ப்பதையும், அதன் மூலம் தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாக உள்ளது.




2026-27 ஆம் ஆண்டிற்கான 10 மாத மொழிக் கல்வி பட்டயப் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் நேரடியாகவோ இணைய ஒளி மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.




ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவப்படி | இனி நேரடியாக வங்கி கணக்குக்கு வந்துவிடும் - ஓய்வூதிய விதிகளில் அதிரடி மாற்றம்

 

மத்திய அரசின் என்.பி.எஸ்., ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் 'நிலையான மருத்துவப்படி' இனி ரசீதுகள் இன்றி தானியங்கி முறையில் வழங்கப்படும். காலதாமதத்தை தவிர்க்கவும், அலைச்சலை குறைக்கவும் மத்திய நிதி அமைச்சகம் இந்த நேரடி பண பரிவர்த்தனை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

கூடுதல் வசதி

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் தங்களின் 'நிலையான மருத்துவப்படி'யை ரத்து செய்துவிட்டு, எப்போது வேண்டுமானாலும் 'சி.ஜி.ஹெச்.எஸ்.,' மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு மாறிக்கொள்ளலாம். ஒருமுறை இந்த திட்டத்தை தேர்வு செய்துவிட்டால், அதன் விதிகளே செல்லுபடியாகும்; அதன் பிறகு மாதாந்திர மருத்துவப்படி வழங்கப்படாது.

ஓய்வூதியதாரர்களுக்கு என்ன லாபம்?

 ஆவணங்களை திரட்டுவதோ, அவற்றை சமர்ப்பிக்க அலுவலகங்களுக்கு அலைவதோ தேவையில்லை 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப்படி நேரடியாக வங்கி கணக்குக்கு வந்து சேரும் மையப்படுத்தப்பட்ட சரிபார்ப்பு முறை என்பதால், பணம் விடுவிப்பதில் ஏற்படும் குளறுபடிகள் மற்றும் கணக்கீட்டு பிழைகள் குறையும்.

முக்கிய மாற்றங்கள்

தகுதியுள்ள ஓய்வூதியதாரர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப்படி நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்செப்டம்பர் - நவம்பர் காலத்திற்கான தொகை டிசம்பர் முதல் வாரத்திலும், டிசம்பர் - பிப்ரவரி காலத்திற்கான தொகை மார்ச் முதல் வாரத்திலும் செலுத்தப்படும்மத்திய ஓய்வூதிய கணக்கு அலுவலகம், தகுதியுள்ள நபர்களை சரிபார்த்து வங்கிகளுக்கு தகவல் அனுப்பும். அதன் பிறகு வங்கிகள் தானாகவே பணத்தை செலுத்திவிடு ம்மருத்துவப்படி தடையின்றி கிடைக்க வேண்டுமானால், ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் தங்களின் 'ஆயுள் சான்றிதழை' சமர்ப்பிக்க வேண்டும்சமர்ப்பிக்க தவறினால், டிசம்பர் மாதம் முதல் மருத்துவப்படி நிறுத்தப்பட ு ம்ஓய்வூதியதாரரின் மறைவுக்கு பிறகு, தகுதியுள்ள குடும்ப உறுப்பினர் (மனைவி/கணவர்) இதை பெறலாம்ஏற்கனவே அனுமதி படிவத்தில் குடும்ப உறிப்பினர்களின் பெயர் இருந்தால், ஓய்வூதியதாரரின் இறப்பு சான்றிதழை மட்டும் கொடுத்தால் போதும்பெயர் இல்லையெனில் புதிய அனுமதி பெற வேண்டும்.

களஞ்சியம் ஆப்பிள் திருமண உதவித்தொகை விண்ணப்பித்தல்

 565783

களஞ்சியம் ஆப்பிள் திருமண உதவித்தொகை விண்ணப்பித்தல்

Marriage Advance Apply Instructions - Download here

பிளஸ் 2 விடைத்தாள் டிஜிட்டல் மதிப்பீட்டில் சிக்கல் இல்லை: சிபிஎஸ்இ விளக்கம்


பிளஸ் 2 விடைத்​தாள் டிஜிட்​டல் மதிப்​பீட்டு பணி​கள் தொடர்​பாக வெளி​யான தகவல்​கள் அனைத்​தும் தவறானவை என்று சிபிஎஸ்இ விளக்​கம் அளித்​துள்​ளது.

மத்​திய இடைநிலைக் கல்வி வாரி​யத்​தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழு​வதும் 29 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பள்​ளி​கள் இயங்கி வரு​கின்​றன. சிபிஎஸ்இ பாடத்​திட்​டத்​தில் 10, 12-ம் வகுப்​பு​களுக்கு ஆண்​டு​தோறும் பொதுத் தேர்​வு​கள் நடத்​தப்​படு​கிறது. அதன்​படி நடப்​பாண்டு 12-ம் வகுப்​புக்​கான பொதுத்​தேர்வு கடந்த பிப்​ர​வரி 17-ல் தொடங்கி ஏப்​ரல் 10-ம் தேதி வரை நடத்​தப்​பட்​டது

இந்த பொதுத்​தேர்வு விடைத்​தாள்​கள் முதன்​முறை​யாக டிஜிட்​டல் முறை​யின் மூலம் மதிப்​பீடு செய்​யப்​பட்டு வரு​கின்​றன. விரை​வில் தேர்வு முடிவு​கள் வெளி​யாகும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இந்​நிலை​யில் சிபிஎஸ்இ டிஜிட்​டல் மதிப்​பிடும் முறை​யில் கோளாறுகள் இருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகின. இதற்கு சிபிஎஸ்இ தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர் ஷன்​யம் பரத்​வாஜ் மறுப்பு தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக அவர் கூறிய​தாவது: புதி​தாக அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்ள விடைத்​தாள்​கள் மதிப்​பிடும் முறை​யில் தொழில்​நுட்ப சிக்​கல்​கள் இருப்​ப​தாக வரும் செய்தி தவறானது. டிஜிட்​டல் முறை மூலம் மதிப்​பிடும் பணி​கள் சீராக​வும், இதற்கு முந்​தைய ஆண்​டு​களை​விட சிறப்​பாக​வும் நடத்​தப்​பட்டு வரு​கிறது.

இந்த மதிப்​பிடும் முறையை செயல்​படுத்​தி​யதற்​காக சிபிஎஸ்இ வாரி​யம் பெருமை கொள்​கிறது. இதுதொடர்​பாக வெளி​யான தகவல்​கள் அனைத்​தும் தவறானவை. எனவே திட்​ட​மிட்ட கால அட்​ட​வணைப்​படி மதிப்​பிடும் பணி​கள் முடிவடை​யும். ஏற்​கெனவே அறி​வித்​த​படி மே 3-வது வாரத்​தில் தேர்வு முடிவு​களை எதிர்​பார்க்​கலாம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

தமிழ்நாட்டில் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது

 மாணவர் சேர்க்கை 1 லட்சத்தை கடந்தது

560126

தமிழ்நாட்டில் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது


தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 2026-27ஆம் கல்வி ஆண்டுக்கு 1ஆம் வகுப்புகளில் 97,737 பேர் சேர்ந்துள்ளனர்; 2 முதல் 8ஆம் வகுப்பு வரை 8,178 பேர், மழலையர் வகுப்புகளில் 6,796 மாணவர்கள் என மொத்தம் 1,12,711 பேர் சேர்ந்துள்ளனர் - தமிழ்நாடு அரசு

3வது குழந்தை பிறப்பு மற்றும் அதைத் தொடர்ந்த குழந்தை பிறப்புகளுக்கும் 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு அனுமதித்தல் - DSE செயல்முறைகள்!!!

 3வது குழந்தை பிறப்பு மற்றும் அதைத் தொடர்ந்த குழந்தை பிறப்புகளுக்கும் 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு அனுமதித்தல் - DSE செயல்முறைகள்!!!

இணைப்பு: அரசாணை, அரசுக் கடிதம் மற்றும் நீதிமன்ற ஆணை.👇👇👇

DSE - Maternity Leave 3rd and above Child - Download here

தகவல் தொகுப்பு....

BY N.PALANISELVAM,

PGT, COMMERCE,

GHSS, HIGHWAVYS - 625515

UTHAMAPALAYAM - TK

THENI - DT

பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் - புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் - 2026-27 திட்டச் செயல்பாடு - இயக்குநர் செயல்முறைகள்

 563890

பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் - புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் - 2026-27 திட்டச் செயல்பாடு - இயக்குநர் செயல்முறைகள் 

கற்போர் மதிப்பீடு நாள் 18.10.2026

2026-2027 NILP Circular.pdf

👇👇👇👇

Download here

கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள் வெளியீடு!

 கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள் வெளியீடு!

👇👇👇

DSE - Summer Season Instructions.pdf

Download here

அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறை பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் வெளியீடு

 அரசு பள்​ளி​களில் உள்ள திறன்​மிகு வகுப்​பறை​கள், கணினிகள் ஆகிய​வற்​றின் பாது​காப்​பு, பராமரிப்​புக்​கான வழி​காட்​டு​தல்​களை பள்​ளிக் கல்​வித்​துறை வெளி​யிட்​டுள்​ளது.

தமிழகத்​தில் 22,418 அரசு தொடக்​கப் பள்​ளி​களில் திறன்​மிகு வகுப்​பறை​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன. அதே​போல் 6,992 அரசு நடுநிலைப் பள்​ளி​களில் உயர் தொழில்​நுட்ப ஆய்​வகங்​கள் நிறு​வப்​பட்​டுள்​ளன.

திறன்​மிகு வகுப்​பறைக்​காக ஒலி-ஒளி அமைப்​பு​கள், இன்​ட​ராக்​டிவ் பிளாட் பேனல்​கள், டிஜிட்​டல் கற்​றல் மேலாண்மை அமைப்​பு​கள் (எல்​எம்​எஸ்) பயன்​படுத்​தப்​படு​கின்​றன. அனைத்து பள்​ளி​களுக்​கும் தடையற்ற இணைய சேவை வழங்​கப்​பட்டு வரு​கிறது.


பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள திறன்மிகு வகுப்பறைகள் பாடப் பகுதிகளை வீடியோக்கள், முப்பரிமாண(3-டி) அனிமேஷன் மூலம் எளிமையாகப் புரிந்துகொள்ளவும், மாணவர்களின் கவனத்தை ஈர்க்கவும் உதவுகிறது.


இந்த நிலையில் கோடை விடுமுறையில் திறன்மிகு வகுப்பறைகளின் பாதுகாப்பு, பராமரிப்புக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் உள்ள கணினி, திறன் பலகை ஆகியவற்றை முறையாக ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும். அதேநேரத்தில் ட்ரிப்பர், கண்காணிப்பு கேமரா, யுபிஎஸ், மின் இணைப்பு மீட்டர் ஆகியவற்றின் பொத்தான்களை அணைக்கக் கூடாது.


கோடை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், மழைச் சாரல் திறன் வகுப்பறையில் படாதவாறு கதவு மற்றும் ஜன்னல்கள் முழுமையாக மூடி வைக்க வேண்டும்.


மேலும் இணைய இணைப்பு மற்றும் மோடம் ஆகியவற்றையும் ஸ்விட்ச் ஆஃப் செய்யக் கூடாது. இவை அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு வழிகாட்டுதல்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளது


EMIS - மாணவர்களுக்கு TC வழங்கும் வழிமுறைகள்

 EMIS - மாணவர்களுக்கு TC வழங்கும் வழிமுறைகள்

👇👇👇👇

Download here

NEET UG 2026 - Hall Ticket Download - Direct Link

 2025 இளநிலை நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.




மே 3 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது ; தேர்வர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை




NEET – உதவி எண்கள் (Helpline Numbers) அறிவிப்பு

 நீட் தேர்வு - உதவி எண்கள் அறிவிப்பு.



நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றமின்றி தேர்வை எதிர்கொள்ள தேசிய தேர்வு முகமை (NTA) முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.


உயிரை விட எதுவும் முக்கியம் இல்லை என்று கூறியுள்ள NTA, மிகுந்த மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை உணரும் மாணவர்கள் 14416 அல்லது 1-800-891-4416 ஆகிய உதவி எண்களில் பல மொழிகளில் ஆலோசனை பெறலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.


நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது - Direct Link

 நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது

558176

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.

மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் https://neet.nta.nic.in வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மே 3ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடைபெறுகிறது


முழு ஆண்டுத் தேர்வு மதிப்பெண் ‘எமிஸ்’ தளத்தில் ஏப்.30-க்குள் பதிவேற்றம்

 பள்ளி மாணவர்​களின் முழு ஆண்​டுத் தேர்வு மதிப்​பெண்​களை எமிஸ் தளத்​தில் ஏப்​.30-ம் தேதிக்​குள் பதிவேற்​றம் செய்ய தொடக்​கக் கல்வி இயக்​குநர் நரேஷ் உத்​தர​விட்​டுள்​ளார்.

இதுதொடர்​பாக மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்கு (தொடக்​கக் கல்​வி) அவர் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​: தொடக்​கக் கல்வி இயக்​ககத்​தின்​கீழ் செயல்​படும் அனைத்து அரசு, அரசு நிதி​யுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்​ளி​களில் 3-ம் பருவ மதிப்​பீடு மற்​றும் முழு ஆண்​டுத் தேர்​வு​கள் நடை​பெற்​றுள்​ளன.

இத்​தேர்​வு​களில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையி​லான மாணவர்​களின் மதிப்​பெண்​களை ஆசிரியர்​கள், தலைமை ஆசிரியர்​கள் ஏப்​.30-ம் தேதிக்​குள் ‘எமிஸ்’ தளத்​தில் பதிவேற்​றம் செய்​து, மாணவர் தேர்ச்சி அறிக்​கைக்கு வட்​டாரக் கல்வி அலு​வலர்​களிடம் ஒப்​புதல் பெற வேண்​டும்.

நடப்பு (2025-26) கல்வி ஆண்டில் கற்றல் செயல்பாட்டை நிறைவு செய்யும் மாணவர்களை அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி அளிப்பது. மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணியை மே 11-ம் தேதி முதல் எமிஸ் தளம் மூலம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



ஆண்டு இறுதித் தேர்வு தேர்ச்சி அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் TC பதிவிறக்கம் செய்தல் - DEE Proceedings

 ஆண்டு இறுதித் தேர்வு தேர்ச்சி அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் TC பதிவிறக்கம் செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


30.04.2026 க்குள் மதிப்பெண் தேர்ச்சி அறிக்கைக்கு BEO அவர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

11.05.2026 முதல் மாணவர்களுக்கு T.C வழங்கலாம்