Search

புதுவைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.25,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

 

புதுவைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.25,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

புதுவைப் பல்கலைக்கழகத்தில் (Pondicherry University) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Guest Faculty பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விருப்பமுள்ள நபர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

புதுவைப் பல்கலைக்கழகம் காலிப்பணியிடங்கள்:

புதுவைப் பல்கலைக்கழகத்தில் Guest Faculty (Hindi) பணிக்கு என 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Guest Faculty கல்வி தகுதி:

Hindi பாடப்பிரிவில் Post Graduate Degree, Ph.D டிகிரியை அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.

Pondicherry University வயது வரம்பு:

இந்த புதுவைப் பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

Guest Faculty மாத ஊதியம்:

Guest Faculty (Hindi) பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.25,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Pondicherry University தேர்வு முறை:

இந்த புதுவைப் பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 07.12.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Guest Faculty விண்ணப்பிக்கும் முறை:

Guest Faculty (Hindi) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Google Form-யை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை departmenthindi23@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (07.12.2023) அனுப்ப வேண்டும்.

Download Notification Link

Online Application Link



🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TCS நிறுவன வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

 

TCS நிறுவன வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

TATA கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (TCS) என்பது மிகப்பெரிய இந்திய பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப (IT) சேவை மற்றும் ஆலோசனை நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்று வேலை தேடும் நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. Oracle SIM Technical Analyst பதவிக்கான தகுதி, அனுபவம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பங்களை செலுத்தும் செயல்முறைகள் குறித்த விவரங்களை விரிவாக காணலாம்.

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இருந்து BACHELOR OF TECHNOLOGY படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பணி அனுபவம்:

4 முதல் 12 ஆண்டுகள் வரை முன் பணி அனுபவம் உள்ளவர்கள் TCS பணியமர்த்தல் செயல்முறைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

விண்ணப்பிக்கும் முறை:
  • TCS ibegin போர்ட்டலில் உள்நுழையவும்.
  • இப்போது TCS ஆஃப் கேம்பஸ் பணியமர்த்தல் செயல்முறைக்கு பதிவுசெய்து விண்ணப்பிக்கவும்
  • இப்போது, நீங்கள் ஏற்கனவே பதிவு செய்த பயனராக இருந்தால் ibegin போர்ட்டலில் உள்நுழைந்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.
  • படிவத்தை சமர்ப்பித்ததும் ‘Apply For Drive’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • ஒருவேளை, நீங்கள் ஒரு புதிய பயனராக இருந்தால் ‘இப்போது பதிவு செய்’ என்பதைக் கிளிக் செய்து ‘IT’ வகையை தேர்ந்தெடுக்கவும்.
  • உங்கள் விவரங்களை நிரப்ப தொடரவும்.
  • இப்போது விண்ணப்ப நிலையை உறுதிப்படுத்த, “உங்கள் விண்ணப்பத்தைக் கண்காணிக்கவும்” என்பதை சரிபார்க்கவும்.

Download Notification 2023 Pdf

Apply Online

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TVS Motor நிறுவனத்தில் அட்டகாசமான வேலைவாய்ப்பு – அப்ளே பண்ண மிஸ் பண்ணிடாதீங்க!

 

TVS Motor நிறுவனத்தில் அட்டகாசமான வேலைவாய்ப்பு – அப்ளே பண்ண மிஸ் பண்ணிடாதீங்க!

TVS Motor நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Associate Data Analyst பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் சிறிதும் தாமதிக்காமல் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TVS Motor பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Associate Data Analyst பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் TVS Motor நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Associate Data Analyst கல்வி விவரம்:

Associate Data Analyst பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

TVS Motor அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 01 ஆண்டு முதல் 03 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருப்பின் முன்னுரிமை தரப்படும்.

Associate Data Analyst பிற தகுதி:
  • SQL
  • Python
  • Data Modeling
TVS Motor தேர்வு செய்யும் முறை:

இந்த TVS Motor நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் Written Test, Interview, Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Associate Data Analyst விண்ணப்பிக்கும் வழிமுறை:

Associate Data Analyst பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification & Application Link


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

SBI Mutual Fund நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலை – எளிமையாய் விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

SBI Mutual Fund நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலை – எளிமையாய் விண்ணப்பிக்கலாம் வாங்க!

IT Cloud Security பணிக்கு என SBI Mutual Fund நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

IT Cloud Security காலியிடங்கள்:

SBI Mutual Fund நிறுவனத்தில் IT Cloud Security பணிக்கு என 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

IT Cloud Security கல்வி:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IT Cloud Security அனுபவ காலம்:

IT Cloud Security பணிக்கு 03 வருடங்கள் முதல் 07 வருடங்கள் வரை பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ள நபர்களும் விண்ணப்பிக்கலாம்.

SBI Mutual Fund ஊதியம்:

இந்த SBI Mutual Fund நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

SBI Mutual Fund தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SBI Mutual Fund விண்ணப்பிக்கும் விதம்:

இந்த SBI Mutual Fund நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Apply பட்டனை கிளிக் செய்ய வேண்டும். பிறகு திரையில் தோன்றும் விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Form Link

தமிழகத்தில் மாதம் ரூ.35,000/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

தமிழகத்தில் மாதம் ரூ.35,000/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

கோயம்புத்தூரில் உள்ள ICAR பருத்தி ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனம் ஆனது Young Professional பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. ICAR-CICR, கோயம்புத்தூர் ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி, ஆர்வமுள்ளவர்கள் 11-12-2023 முதல் 12-12-2023 வரை நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ICAR-CICR, Coimbatore காலிப்பணியிடங்கள்:
  • Young Professional-I – 2 பணியிடங்கள்
  • Young Professional-II – 2 பணியிடங்கள்

என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.

YP கல்வி தகுதி:
  • Young Professional-I – Bachelor Degree in B.Sc in the field of Agriculture or Zoology
  • Young Professional-II – Master Degree in M.Sc in the field of Agricultural Entomology or Life Science or Basic Science or Agricultural Economics
சம்பள விவரம்:
  • Young Professional-I – ரூ.25,000/-
  • Young Professional-II -ரூ.35,000/-
வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 21 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தமிழகத்தில் மத்திய அரசு துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்துடன் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நேர்காணல் ஆனது டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

Download Notification 2023 Pdf

வங்கி துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான HDFC வங்கி வேலைவாய்ப்பு!

 

வங்கி துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான HDFC வங்கி வேலைவாய்ப்பு!

HDFC வங்கியில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Retail Branch Banking – RM Sales Officer பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

HDFC Bank பணியிடங்கள்:

Retail Branch Banking – RM Sales Officer பணிக்கென பல்வேறு பணியிடங்கள் HDFC வங்கியில் காலியாக உள்ளது.

HDFC வங்கி பணிக்கான கல்வி விவரம்:

இந்த HDFC வங்கி பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் ஏதேனும் ஒரு Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

HDFC வங்கி பணிக்கான அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 0 ஆண்டு முதல் 03 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

HDFC வங்கி பணிக்கான ஊதிய விவரம்:

Retail Branch Banking – RM Sales Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் HDFC வங்கி விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

HDFC Bank தேர்வு செய்யும் முறை:

இந்த HDFC வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல், எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

HDFC Bank விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Download Notification & Application Link

கொழுப்பு கல்லீரல் நோயை கட்டுப்படுத்தும் உணவுகள்... உங்க டயட்டை இப்படி மாத்திக்கோங்க..!

 இன்றைக்கு வாழ்வியல் முறைகளால் ஏற்படும் மாற்றங்கள் நமக்கு பல்வேறு உடல் நலப்பாதிப்புகள் ஏற்படுகிறது. சில நேரங்களில் மரணம் வரைக்கூட கொண்டு செல்கிறது. இதுப்போன்ற நோய் பாதிப்பின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஆகிய இரண்டிற்கும் முக்கிய தொடர்பாக உள்ளது நம்முடைய உணவு முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் தான் என்கின்றனர் மருத்துவர்கள். இதுப்போன்ற நோய் பாதிப்புகளில் ஒன்று தான் கொழுப்பு கல்லீரல் நோய். மருத்துவ ரீதியாக கொழுப்பு கல்லீரல் நோய் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.

ஒன்று மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (Non on-alcoholic fatty liver disease- NAFLD) மற்றொன்று மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் கொழுப்பு கல்லீரல் நோய் (alcoholic fatty liver disease – AFLD). குறிப்பாக உலக மக்கள் தொகையில் கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பானது உலக மக்கள் தொகையில் 25 முதல் 30 சதவீதத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றனர். இந்த பாதிப்புகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையானது என்றாலும் இவை இரண்டிற்கும் ஒரே தொடர்பு என்றால் அது உணவு முறைகள் தான். இந்த சூழலில் தான் ஆரோக்கியமான உணவுகளைக் கடைப்பிடித்து நோயின் தாக்கத்தைக் குறைக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இதோ எப்படி? என இங்கே அறிந்துக் கொள்வோம்.

மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD):

உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் எப்பொழுது ஏற்பட்டதோ? அன்றைய நாளிலிருந்து உட்கார்ந்த இடத்திலேயே பல மணி நேரம் பணிபுரியக்கூடிய சூழல் ஏற்படத் தொடங்கியது. இவ்வாறு உட்கார்ந்த இடத்திலேயே பணிபுரியக்கூடிய வாழ்க்கை முறைகள் மற்றும் மோசமான உணவுப் பழக்கங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகள் நிறைந்த உணவுகளால் கல்லீரலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. உடலின் ஒட்டுமொத்த கொழுப்பு உள்ளடக்கத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், NAFLD இன் முக்கிய இயக்கியான இன்சுலின் எதிர்ப்பு எனப்படும் நிகழ்வுக்கு வழிவகுக்கிறது.

உணவு முறை மாற்றங்கள்:

மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பிற்கு என்ன தான் மருந்து, மாத்திரைகளைக் கொண்டு சிகிச்சைகள் அளித்தாலும் உணவு முறையில் நீங்கள் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். குறிப்பாக பழங்கள், காய்கறிகள், சிறு தானியங்கள் மற்றும் புரதங்கள் நிறைந்த உணவுகளை நீங்கள் உட்கொள்ள வேண்டும். இதோடு வழக்கமான உடற்பயிற்சி மூலமும் அதிகரித்த உங்களது உடல் எடையை நீங்கள் குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

News18

மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் கொழுப்பு கல்லீரல் நோய் (AFLD): அதிகப்படியாக மது அருந்துபவர்களுக்கு கல்லீரலில் நச்சுகள் அதிகளவில் சேர்கிறது. இது கல்லீரலில் வீக்கம், மற்றும் கொழுப்புகள் அதிகளவில் படிகிறது. இதனால் மிகுந்த பாதிப்பை உங்களுக்கு ஏற்படுத்தும். எனவே இந்த பாதிப்பைக் குறைக்க வேண்டும் என்றால், மது அருந்துவதை நீங்கள் கண்டிப்பாக நிறுத்தியே ஆக வேண்டும்.

மேலும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது உங்களின் கல்லீரல் பாதிப்பைக் குறைக்க உதவியாக உள்ளது. எனவே கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் இதுப்போன்ற உணவு முறைகளைப் பின்பற்றினாலும் சுய கட்டுப்பாடு முக்கியம் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

🔻 🔻 🔻 

மாரடைப்பின் அறிகுறிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரி இருக்குமா அல்லது வித்தியாசமாக இருக்குமா..?

 உலகம் முழுவதும் அதிகமானோர் இறப்பதற்கு இதய நோயும் முக்கியமான காரணங்களில் ஒன்றாகும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆண், பெண் பேதமன்றி அனைவரும் இதய நோய்களால் பாதிக்கப்பட்டாலும், இது சம்மந்தமாக ஏற்படக்கூடிய அறிகுறிகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சிறிய மாறுபாடு உள்ளது. வழக்கத்திற்கு மாறான வகையில் வியர்வை வருதல், வலிப்பு ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இரு பாலினத்தருக்கும் பொதுவாகவே காணப்படுகிறது.

நெஞ்சு வலி தான் ஆண்களுக்கு வரும் பொதுவான அறிகுறி ஆகும். ஆனால் பெண்களுக்கோ மார்பக வலியோடு சேர்ந்து சோர்வு, குமட்டல், வாந்தி, தாடை வலி, மூச்சுவிடுவதில் சிரமம், அடிவயிற்றில் வலி எனப் பல அறிகுறிகள் ஒரே சமயத்தில் வரும். பெண்களுக்கு வரும் அறிகுறிகள் அனைத்தும் வித்தியாசமாக இருப்பதோடு இவை இதயத்தோடு நேரடி தொடர்புடையதாக இல்லாததாலும், மாரடைப்பாக இருக்காது என இந்த அறிகுறிகளை புறக்கணித்து, மருத்துவ சிகிச்சை எடுக்க தாமதித்து விடுகிறார்கள் எனக் கூறுகிறார் இதய நோய் மருத்துவர் டாக்டர்.நாகமாலேஷ்.

முன்கூட்டியே வரும் மெனோபாஸ், மார்பக புற்றுநோய்க்கு எடுத்துக்கொள்ளும் சிகிச்சை, மன அழுத்தம், பேர்கால சமயத்தில் வரும் ஹைப்பர் டென்சன், எண்டோமெட்ரியோசிஸ் போன்றவை பெண்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக இருக்கக்கூடிய ஆபத்து காரணிகள். பெண்கள் எப்போதும் தங்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை வெறுமனே மார்பகத்தில் அசௌகர்யமாக இருக்கிறது, கனமாகவும் இறுக்கமாகவும் இருக்கிறது எனக் கூறுவார்கள்.

ஆண்கள் போல் நெஞ்சு வலி என்று சொல்ல மாட்டார்கள். பெண்களுக்கு இருக்கக் கூடிய சமூக உளவியல் சார்ந்த அழுத்தமும் இன்னொரு முக்கிய காரணமாகும். இதய நோய்களால் அதிகமான பெண்கள் பாதிக்கப்படுவதற்கு, அவர்களுக்கு இருக்கும் அதிகப்படியான மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் மனக்கவலை ஆகியவையும் முக்கியமான காரணமாகும் எனக் கூறுகிறார் டாக்டர்.நாகமாலேஷ்.


News18

நம்முடைய இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், இதய நோய் வரும் ஆபத்திலிருந்து தற்காத்துக் கொள்ளவும் சில டிப்ஸ்களை தருகிறார் டாக்டர்.நாகமாலேஷ்.

நம்முடைய இதயத்திற்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய உணவுப்பழக்கத்தில் கவனம் செலுத்துங்கள். உதாரணமாக நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான உடல் எடையை பராமரியுங்கள். வெறுமனே உங்கள் உடல் எடையில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக உடல் நிறை குறியீட்டில் (BMI) கவனம் செலுத்துங்கள். உடல் நிறை குறியீடு 25-க்கும் அதிகமாக இருந்தால், நீங்கள் அதிக உடல் எடையோடு இருக்குறீர்கள் என்று அர்த்தமாகும்.

உடலியல் சார்ந்த இயக்கத்தை அதிகப்படுத்துங்கள். தினமும் குறைந்தபட்சம் 30 முதல் 45 நிமிடங்கள் வரை தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.

புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தை கைவிடுங்கள்.


🔻 🔻 🔻 

மழைக்காலத்தில் உடல் சோம்பேறித்தனமாக இருக்கா..? உங்களை சுறுசுறுப்பாக்கும் உணவுகள் இதோ..

 

குளிர்காலத்தில் பொதுவாகவே எனர்ஜி குறைவாக இருக்கும்; இன்னும் கொஞ்ச நேரம் தூங்க மாட்டோமா என்று சோர்வாக இல்லை என்றால் கூட தோன்றும்! இதற்கு பொதுவாக விண்டர் ப்ளூஸ் என்ற பெயர் இருக்கிறது.

இந்த மனநிலை, சிலருக்கு மன அழுத்தமாக மாறும். இதனால் குளிர்காலத்தில் டிப்ரெஷன் ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. மருத்துவ ரீதியாக சீசனல் அஃபெக்டிவ் டிஸ்ஆர்டர் (SAD) என்று கூறப்படுகிறது. அதாவது குளிர்காலத்தில் மட்டும் ஏற்படக்கூடிய ஒரு விதமான மன அழுத்தமாகும். பகல் நேரம் குறைவாக இரவு நேரம் அதிகமாக இருக்கும் காலகட்டத்தில் இந்த நிலை ஏற்படும். ஆனால் உணவில் சில விஷயங்களை மாற்றுவதன் மூலம் குளிர்காலத்தில் கூட சுறுசுறுப்பாக செயல்படலாம்.

ஆர்வமின்மை, மூட் ஸ்விங்க்ஸ், உங்களுக்கு பிடித்த வேலைகளை செய்வதில் கூட ஆர்வமின்மை, சோர்வு, தூங்குவதில் மாற்றம், நீண்ட நேரம் தூங்க வேண்டும் போன்ற உணர்வு, பசி உணர்வில் மாற்றம், கவனம் செலுத்த முடியாமை போன்றவை விண்டர் ப்ளூஸ் அறிகுறிகள்.

News18

உணவுகள் எப்படி இந்த குளிர்கால மன நிலை மாற்றத்தை எதிர்கொள்ள உதவும்

குளிர்காலம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விளைவுகளை ஏற்படுத்தும் இதில் ஒரு சிலர் ஒரு சிலருக்கு குளிர்காலம் மிகவும் பிடிக்கும் அவர்கள் அவர்களுக்கு வின்டர் பூசனைவர்கள் எதுவும் ஏற்படாது ஆனால் இது போன்ற குளிர் காலத்தில் மனநிலை மாற்றத்தால் உன் சால் பாதிக்கப்படுபவர்களுக்கும் ஒரே மாதிரியான பொருந்தாது ஆனால் ஒரு சில விஷயங்களை செய்வதன் மூலம் இந்த அறிகுறிகளை ஓரளவுக்கு குறைக்க முடியும்

  • எந்த காலமாக இருந்தாலும், உடற்பயிற்சி செய்வது உங்களுடைய எனர்ஜி லெவலை அதிகரிக்க உதவும். அது மட்டும் இல்லாமல் சோர்வாக டல்லாக இருக்கும் மனநிலையையும் இது மேம்படுத்தி உற்சாகம் ஆக்கும்.

  • குளிர்காலத்தில் பகல் நேரம் குறைவாக இருக்கும். அதாவது சூரியனின் ஒளி ஒரு சில மணி நேரங்களுக்கு மட்டுமே கிடைக்கும். எனவே உங்களால் முடிந்த அளவு சூரியஒளி உங்கள் மேல் படும்படி வெளிப்புறத்தில் நேரம் செலவிடுங்கள். இது உங்களுடைய மனநிலையை மேம்படுத்தி உடலின் இயற்கையான தூக்கம்-விழிப்பு சுழற்சியை சீராக்கும்.

  • போதுமான அளவு தூங்க வேண்டும். உங்கள் உடலுக்குத் தேவையான அளவு ஓய்வு கிடைக்கும் பொழுது மன அழுத்தம் குறையும்.

  • குளிர் காலத்திற்கு ஏற்றார்போல ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.

News18

விண்டர் ப்ளூஸ் அறிகுறிகளை குறைக்க உதவும் உணவுகள்

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த உணவுகள்: இந்த உணவுகள் மன நிலையை மேம்படுத்தும் மற்றும் அழற்சி-எதிர்ப்பு தன்மை கொண்டவை. கொழுப்பு நிறைந்த மீன் வகைகள், கொட்டை வகைகள் ஆகியவற்றில் ஒமேகா 3 நிறைந்துள்ளது.

வைட்டமின் பி நிறைந்த உணவுகள்: மூளையின் செயல்பாடுகளுக்கும், மனநிலையை சீராக வைப்பதற்கும் வைட்டமின் பி சத்து மிக மிக அவசியம். தானியங்கள், கொட்டை வகைகள் பச்சை காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் லீன் புரதம் ஆகியவற்றில் வைட்டமின் பி நிறைந்துள்ளது.

வைட்டமின் டி உணவுகள்: வைட்டமின் டி உங்களுடைய மனதில் ஏற்படக்கூடிய ஏற்ற இறக்கங்களை சீராக்கி சமநிலையில் வைக்க உதவும். அது மட்டுமல்லாமல் உடலில் இயற்கையாக தூங்கும் மற்றும் விழிக்கும் சைக்கிளை ரெகுலேட் செய்யவும் உதவும். குளிர்காலத்தில் வெயில் குறைவாக இருப்பதால் வைட்டமின் டி செறிவூட்டப்பட்ட பால், முட்டை, காளான் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்; மீன் உணவுகளை சாப்பிடலாம்.

ட்ரிப்டோஃபான்: ட்ரிப்டோஃபான்என்பது ஒரு வகையான அமினோ ஆசிட் ஆகும். இதை உடல் பயன்படுத்தி, மனநிலையை சீரமைக்கும். செரோடொனின் என்ற ஹார்மோனை சுரக்க உதவுகிறது. பால், சீஸ், வெண்ணெய், டர்க்கி, சிக்கன் போன்ற உணவுகளில் ட்ரிப்டோஃபான் அதிகம் இருக்கிறது.


🔻 🔻 🔻 

Day 18 | Fiscal Policy | Indian Economy - 5

 Day 18 | Fiscal Policy | Indian Economy - 5 

Click here to download pdf file