புதிய யோசனை கொண்ட சிறுதொழில்களுக்கு நிதியுதவி..!! விண்ணப்பிக்கம் கடைசி தேதியை வெளியிட்ட தமிழக அரசு..!
EPFO அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – ஓய்வூதியம் குறித்த பல அறிவிப்பு!
EPFO அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – ஓய்வூதியம் குறித்த பல அறிவிப்பு!
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு அந்த நிறுவனங்கள் சார்பாக பிஎப் கணக்கு தொடங்கப்பட்டு மாத சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்து வருகிறது. இந்த தொகை அவர்கள் பெறும் ஊதியத்தை பொறுத்தது. இந்த தொகை பணி காலம் நிறைவடைந்த பின் மொத்தமாக நமக்கு திரும்ப கிடைக்கும். தற்போது தேவைக்கேற்ப தொகையை பணி காலத்திலேயே எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது.
குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை தற்போது இருக்கும் ரூ.1,000 -லிருந்து ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஊதிய வரம்பை ரூ.15,000-லிருந்து ரூ.21,000 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலிக்க தொழிலாளர் அமைச்சகம் சமீபத்தில் நிதி அமைச்சகத்திடம் முன்மொழிந்துள்ளது. EPF Account-ல் இருந்து அவசர காலங்களில் எடுக்கப்படும் தொகைக்கான வரம்பை ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சமாக அதிகரித்தது. மேலும் பணத்தை எடுக்க ஊழியர்கள் 6 மாத சேவை காலத்தை முடித்திருக்க வேண்டும் என்ற விதியும் தளர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
லாபம் தரும் ஸ்பெஷல் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்திருக்கிறீர்களா? கடைசி தேதி இதுதான்!
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, IDBI மற்றும் இந்தியன் பேங்க், பஞ்சாப் மற்றும் சிந்து பேங்க் போன்ற பல்வேறு வங்கிகள் வழங்கக்கூடிய சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான டெட்லைன் செப்டம்பர் 30-ம் தேதியோடு முடிவடைகிறது. FD பாலிசிகளில் அதிக வட்டி விகிதத்தை பெற நினைக்கும் சீனியர் சிட்டிசன்கள் தங்களுடைய பணத்தை இந்த திட்டங்களில் முதலீடு செய்வதை கருத்தில் கொள்ளலாம்.
தங்களுடைய முதலீடுகளில் சிறந்த ரிட்டன்களை பெறுவதற்கான வாய்ப்புகளை சீனியர் சிட்டிசன்கள் மற்றும் வழக்கமான கஸ்டமர்களுக்கு வழங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு இந்த சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை வங்கிகள் அறிமுகம் செய்தன. எனினும் பொதுமக்கள் இந்த திட்டங்களுக்கு கொடுத்த வரவேற்பு காரணமாக முதலீடு செய்வதற்கான கடைசி தேதியை பலமுறை வங்கிகள் மாற்றியமைத்தது.
IDBI உட்சவ் காலபில் ஃபிக்சட் டெபாசிட்
இதற்கான வேலிடிட்டி செப்டம்பர் 30, 2024 வரை நியமிக்கப்பட்டுள்ளது. இதில் 300 நாட்கள் கொண்ட திட்டத்திற்கு வழக்கமான சிட்டிசன்களுக்கு 7.05%, சீனியர் சிட்டிசன்களுக்கு 7.55 சதவீதமும் கொடுக்கப்படுகிறது. 375 நாட்கள் கொண்ட திட்டத்திற்கு வழக்கமான சிட்டிசன்களுக்கு 7.25 சதவீதமும், சீனியர் சிட்டிசன்களுக்கு 7.75 சதவீதமும் வட்டி விகிதம் நியமிக்கப்பட்டுள்ளது. 444 நாட்கள் கொண்ட சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு வழக்கமான சிட்டிசன்களுக்கு 7.35%, சீனியர் சிட்டிசன்களுக்கு 7.85 சதவீதமும் வழங்கப்படுகிறது. இதுவே 700 நாட்கள் கொண்ட திட்டத்திற்கு வழக்கமான சிட்டிசன்களுக்கு 7.20% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 7.70 சதவீத வட்டியும் கொடுக்கப்படுகிறது.
இந்தியன் வங்கி சிறப்பு ஃபிக்சட் டெபாசிட்
இந்தியன் வங்கி வழங்கும் ஸ்பெஷல் இண்டு சூப்பர் 300 நாட்கள் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான கடைசி தேதி 30 செப்டம்பர், 2024 ஆகும்.
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி ஸ்பெஷல் ஃபிக்சட் டெபாசிட்
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அதன் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான கடைசி தேதியாக 30 செப்டம்பர், 2024 ஐ நியமித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கஸ்டமர்கள் 333 நாட்களுக்கு 7.15 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தை பெறலாம்.
SBI அம்ருத் காலா ஃபிக்சட் டெபாசிட்
SBI வழங்கும் அம்ரித் காலா 400 நாட்கள் கொண்ட திட்டத்தில் 7.10 சதவீத வட்டி கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி 30 செப்டம்பர், 2024. சீனியர் சிட்டிசன்கள் மற்றும் ஸ்டாஃப் பென்ஷனர்களுக்கு கூடுதல் வட்டி விகிதம் வழங்கப்படும்.
SBI WECARE டெபாசிட் திட்டம்ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ள எஸ்பிஐ வீ கேர் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டம் 30 செப்டம்பர், 2024 வரை செல்லுபடி ஆகும். இந்த திட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.50 சதவீதம் வரையிலான வட்டி விகிதம் நியமிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
குறைந்த முதலீட்டில் ரூ.7 லட்சம் வருமானம்: போஸ்ட் ஆபிஸின் இந்தத் திட்டம் தெரியுமா?
Post Office Savings Scheme | வங்கிகளை விட தபால் அலுவலகம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல திட்டங்களை வழங்குவதில் முன்னணியில் உள்ளது. அதேநேரத்தில், வங்கிகளை விட தபால் நிலைய திட்டங்களில் அதிக மக்கள் முதலீடு செய்கின்றனர். மேலும், இதில் குறைந்த நேரத்தில் அதிக வருமானம் பெறலாம்.
இந்த நிலையில், போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தைப் பெறலாம். மேலும், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டில் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறலாம்.
தற்போது நாம் போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டம் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்ட வட்டியில்.. முதலீட்டாளர்களுக்கு 7.5 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும். முதலீட்டாளர்கள் வெவ்வேறு கால அவகாசத்துடன் இதில் முதலீடு செய்யலாம்.
முதலீட்டாளர்களுக்கு 1 வருடம், 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள், 4 ஆண்டுகள், 5 ஆண்டுகள் என முதலீடு செய்யலாம். அதாவது, போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் (நேர வைப்புத் திட்டம் தகுதியானது) 1 வருடத்திற்கு முதலீடு செய்தால், உங்களுக்கு 6.9 சதவீதம் வரை வட்டி கிடைக்கும்.
இருப்பினும், 2 அல்லது 3 வருட கால முதலீட்டுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தின் பலன் கிடைக்கும். 5 வருட காலத்திற்கான முதலீடு 7.5 சதவீத வட்டி விகித பலன் கிடைக்கும்.
உதாரணமாக.. நீங்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு டைம் டெபாசிட் திட்டத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் 7.5 சதவீதம் வட்டி கிடைக்கும்.
இதை கணக்கிட்டால் ரூ. 5 லட்சம் மீது ரூ.
2,24,974 வட்டி கிடைக்கும். முதிர்ச்சியின் போது நீங்கள் ரூ.7,24,974
பெறலாம்.
🔻 🔻 🔻
போஸ்ட் ஆபிஸ் ஆர்.டி முதலீடு, லட்சக்கணக்கில் வருமானம்: இதை ட்ரை பண்ணுங்க!
Post Office Scheme | மாறிவரும் காலங்களுக்கு ஏற்ப பல்வேறு முதலீட்டு விருப்பங்கள் தற்போது உள்ளன. ஆனால் பாதுகாப்பான முதலீட்டிற்கான பலரின் முதல் தேர்வாக அஞ்சல் அலுவலகத் திட்டம் உள்ளது.
அஞ்சல் அலுவலக தொடர் வைப்புத் திட்டம் ஒரு சிறந்த மற்றும் வலுவான வருவாய் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் பெரிய வருமானத்தைப் பெறலாம்.
வட்டி விகிதத்தின் பலன்
தபால் அலுவலகத்தின் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை காலாண்டு அடிப்படையில் அரசு தீர்மானிக்கிறது. செப்டம்பர் கடைசி வாரத்தில், சிறுசேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதங்களை அரசு கடைசியாக நிர்ணயித்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், அக்டோபர் மற்றும் டிசம்பர் 2023 க்கு இடையில், தபால் அலுவலகத்தின் 5 ஆண்டு ஆர்.டி. திட்டத்தின் வட்டி விகிதம் 6.70 சதவீதமாக உள்ளது.
முன்னதாக இது 6.50 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், மொத்தம் 20 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த வட்டி விகிதங்கள் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31,
2023 வரை பொருந்தும்.
போஸ்ட் ஆபிஸ் ஆர்.டி. கால்குலேட்டர்
தபால் அலுவலக RD கால்குலேட்டரின் படி, நீங்கள் மொத்தம் 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் முதலீடு செய்தால், இந்தத் திட்டத்தில் மொத்தம் 3 லட்சம் ரூபாய் செலுத்தியிருப்பீர்கள்.
வட்டியாக ரூ.56,830 கிடைக்கும். ஆக உங்களுக்கு ரூ.3 லட்சத்து 56 ஆயிரத்து 830 கிடைக்கும். மேலும், அஞ்சல் அலுவலகத்தின் தொடர் வைப்புத் திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு கடன் பெறும் வசதியும் உண்டு.
மொத்த வைப்புத் தொகையில் 50 சதவீதத்தை கடனாகப் பெறலாம். 3 ஆண்டுகளுக்குப் பிறகுதான் கடனைப் பெற முடியும்.
மேலும், அதன் வட்டி விகிதம் RD திட்டத்தின் வட்டி விகிதத்தை விட 2 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
🔻 🔻 🔻