Search

SSC - Staff Selection Committee Annual Calendar 2023

 பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலை பக்கத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


தேர்வு அட்டவணை:

2023ம் ஆண்டு SSC தேர்வு அட்டவணையின் படி, தேர்வர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் MTS (NonTechnical) Staff, and Havaldar (CBIC & CBN) Examதேர்வு அட்டவணை ஜனவரி 17 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும். மேலும் CGL அறிவிப்பு ஏப்ரல் 1ம் தேதியும், அதற்குரிய தேர்வு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. CHSL தேர்விற்குரிய அட்டவணை மே 9 அன்று வெளியாகும் என்றும் அதற்கான தேர்வு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் என்று அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 SSC - TENTATIVE CALENDAR OF EXAMINATIONS FOR THE YEAR 2023-2024 (PDF)

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – மாதம் ரூ.36,000/-ஊதியத்தில்!

 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – மாதம் ரூ.36,000/-ஊதியத்தில்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆனது Project Associate II, Project Associate I(Finance & Accounts),Project Associate I (Technical), Project Assistant (Tech- I),Project Assistant (Tech – II) பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணியில் 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Project Associate II, Project Associate I(Finance & Accounts),Project Associate I (Technical), Project Assistant (Tech- I),Project Assistant (Tech – II) பணிகளுக்கு என மொத்தம் 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

Anna University கல்வி தகுதி:
  • Project Associate II பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M. E / M. Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Project Associate I(Finance & Accounts) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBA / M. Com பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Project Associate I (Technical) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B. E / B. Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Project Assistant (Tech- I)பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Diploma / Engineering / B.Sc / BCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Project Assistant (Tech – II)பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Civil Engineering / Mechanical Engineering. / Electrical Engineering / Electronics Engineering பாடப்பிரிவில் Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக ஊதிய விவரம்:
  • Project Associate II பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30,000 – ரூ .36,000/-ஊதியமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது .
  • Project Associate I(Finance & Accounts), Project Associate I (Technical) பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.22,000 – ரூ.28,000/- ஊதியமாக வழங்கப்படும்.
  • Project Assistant (Tech- I), Project Assistant (Tech – II) பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,000 – ரூ. 22,000/- ஊதியமாக வழங்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழக தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Skill Test மற்றும் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Anna University விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் online மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது .

Download Notification & Application Link PDF

ரூ.20,000/- ஊதியத்தில் Central Bank of India வங்கி வேலை – தேர்வு இல்லை || உடனே விண்ணப்பியுங்கள்!

 

ரூ.20,000/- ஊதியத்தில் Central Bank of India வங்கி வேலை – தேர்வு இல்லை || உடனே விண்ணப்பியுங்கள்!

Central Bank of India ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Counselor FLCC, Faculty, Office Assistant, Attender/ Sub- Staff பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Central Bank of India காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Counselor FLCC, Faculty, Office Assistant, Attender/ Sub- Staff பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Faculty கல்வி தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு /Graduate / Post Graduate degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 20 ஆண்டுகள் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Central Bank of India வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 35,40 மற்றும் 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Office Assistant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.8,000/- முதல் ரூ.20,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Central Bank of India தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 16.01.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 1
Download Notification PDF 2
Download Notification PDF 3

NHPC நிறுவனத்தில் 400+ காலிப்பணியிடங்கள்- டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பரான வாய்ப்பு!

 

NHPC நிறுவனத்தில் 400+ காலிப்பணியிடங்கள்- டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பரான வாய்ப்பு!

நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் (NHPC) நிறுவனம் ஆனது Trainee Engineer(Civil ),Trainee Engineer(Electrical) Trainee Engineer(Mechanical), Trainee Officer (Finance), Trainee Officer(HR) ,Trainee Officer(Law) பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 401 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NHPC காலிப்பணியிடங்கள்:
  • Trainee Engineer(Civil )பணிக்கு – 136 பணியிடங்களும்
  • Trainee Engineer(Electrical) பணிக்கு – 41 பணியிடங்களும்
  • Trainee Engineer(Mechanical) பணிக்கு – 108 பணியிடங்களும்
  • Trainee Officer (Finance ) பணிக்கு – 99 பணியிடங்களும்
  • Trainee Officer(HR ) பணிக்கு – 14 பணியிடங்களும்
  • Trainee Officer(Law) பணிக்கு – 03 பணியிடங்கள் என மொத்தம் 401 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
NHPC வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 30 ஆக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NHPC கல்வி தகுதி:
  • Trainee Engineer(Civil ),Trainee Engineer(Electrical) Trainee Engineer(Mechanical) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Engineering /Technology பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது 60% மதிப்பெண்களுடன் AMIE பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Trainee Officer (Finance ) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் CA / ICWA / CMA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Trainee Officer(HR) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post Graduate degree / master degree / Post Graduate diploma/ Post Graduate program in management/ MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Trainee Officer(Law) பணிக்கு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
NHPC ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை ஊதியமாக பெறுவார்கள்.

NHPC தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist மற்றும் Merit மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்ப கட்டணம்:
  • General ,EWS,OBC பிரிவினருக்கு ரூ.295/- விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
  • ST /SC /PWBD /EX-servicemen மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
NHPC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் (www.nhpcindia.com) மூலம் விண்ணப்ப படிவம் பெற்று, பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது .


தமிழக வனத்துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.45,000/- || விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

 

தமிழக வனத்துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.45,000/- || விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழ்நாடு வனத்துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Veterinary Assistant Surgeon, Biologist பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Online Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

தமிழக வனத்துறை பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Veterinary Assistant Surgeon, Biologist பணிகளுக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Forest கல்வி தகுதி:

இப்பணிக்கு வ்விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.V.Sc, M.Sc, Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வனத்துறை வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TN Forest ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Veterinary Assistant Surgeon – ரூ.45,000/-
  • Biologist – ரூ. 40,000/-
தமிழக வனத்துறை தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழக வனத்துறை விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.12.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் 10.01.2023ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


 Click here to join WhatsApp group for Daily employment news

டிகிரி முடித்துவிட்டு வேலை தேடுபவரா நீங்கள்? TCS நிறுவனத்தில் காத்திருக்கும் வாய்ப்பு – விவரங்கள் உள்ளே!

 


டிகிரி முடித்துவிட்டு வேலை தேடுபவரா நீங்கள்? TCS நிறுவனத்தில் காத்திருக்கும் வாய்ப்பு – விவரங்கள் உள்ளே!

Power Apps Developer பணிக்கென உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது TCS தனியார் நிறுவனம் ஆனது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாள்(15.03.2023) முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TCS காலிப்பணியிடங்கள்:

TCS நிறுவனத்தில் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி Power Apps Developer பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TCS கல்வி தகுதி:

TCS iBegin நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Power Apps Developer Testing அனுபவ விவரம் :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 03 ஆண்டு முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

TCS திறன்கள் :
  • Ability to design, develop, secure, and troubleshoot Power Platform solutions using Power Apps/Flow and CDS.
  • Strong applied knowledge of Power Platform services. Candidates have an in-depth understanding of their capabilities, boundaries, and constraints
  • In depth knowledge on capabilities of Dataverse (CDS)
  • Basic understanding of DevOps practices for Power Platform.
TCS தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TCS விண்ணப்பிக்கும் முறை :

TCS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.03.2023க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 Click here to join WhatsApp group for Daily employment news

B.E / B. Tech தேர்ச்சி பெற்றவரா? தனியார் வங்கியில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு!

 

B.E / B. Tech தேர்ச்சி பெற்றவரா? தனியார் வங்கியில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு!

Chief Technology Officer பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை ஏற்றுமதி இறக்குமதி வங்கி (Exim Bank) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Exim Bank காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Chief Technology Officer பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chief Technology Officer கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B. Tech Degree/ Bachelor’s degree in Computer Science / Applications/ Post Graduate degree என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Exim Bank வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 45 என்றும் அதிகபட்ச வயதானது 55 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Chief Technology Officer முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 20 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exim Bank ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chief Technology Officer தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ctoeximbank@kornferry.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 24.01.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF


 Click here to join WhatsApp group for Daily employment news

Brain Detox: மூளையில் தேங்கும் ‘நச்சுக்களை’ நீக்க செய்ய வேண்டியவை!

 

Brain Detox: மூளையில் தேங்கும் ‘நச்சுக்களை’ நீக்க செய்ய வேண்டியவை!

ஆரோக்கியமான மூளைக்கான டிப்ஸ்: நாம் சாப்பிடும் உணவுகள் மற்றும் அருந்தும் பானங்கள், நம் உடலின் செயல்பாட்டில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதேபோல், எண்ணங்களையும் உணர்வுகளையும் செயல்படுத்த நமது மூளை தொடர்ந்து செயல்படுகிறது. காலப்போக்கில், இவை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்த ஆரம்பிக்கலாம். இது உடல் மற்றும் மனதின் செயல் திறனை பாதிக்கலாம். உங்கள் சமையலறை அல்லது குளியலறையில் உள்ள குழாய்கள் ஆரம்பத்தில்  தெளிவாக இருப்பதைப் போலவே இதுவும் முதலில் தெளிவாக இருக்கும். இருப்பினும், வழக்கமான பயன்பாட்டிற்குப் பிறகு, குழாயின் உள்ளே அழுக்கு சேரத் தொடங்குகிறது, பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் குழாயில் இருந்து வரும் தண்ணீரின் அளவு குறைந்து விடும்.

நமது சுற்று புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதைப் போலவே, உங்கள் உடலையும் மனதையும் தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும்.  ரீசார்ஜ் செய்யவும் மற்றும் அவர்களின் இயல்பான செயல்பாடுகளுக்கு முன்னெப்போதையும் விட வலுவாக திரும்பவும் உதவுகிறது. உங்கள் மனதையும் மூளையையும் டீடாக்ஸ் செய்து எவ்வாறு தெளிவுபடுத்துவது என்பதை அறிந்து கொள்ளவும்.

1. குறிப்பிட்ட சில நபர்களிடம் இருந்து விலகி இருக்கவும்

உங்களுக்கு அதிகாரம், தகவல் அல்லது உத்வேகம் அளிக்காத நபர்களைப் பின்தொடர வேண்டாம். அவர்களிடம் இருந்து விலகி இருக்க கற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் இதன் மூலம் எதிர் மறை ஆற்றலின் தாக்கம் உங்களுக்கு அதிகரிக்கும்.

2. எழுதத் தொடங்குங்கள்

உங்கள் மனதில் உள்ளவை சில சமயங்களில் வெளிவர வேண்டும். 30 நிமிடங்களுக்கு நேரத்தை ஒதுக்கி, நீங்கள் புகார் செய்ய விரும்பும் விஷயங்கள் அல்லது நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அனைத்தையும் மூளையிலிருந்து வெளியேற்ற முயற்சிக்கவும். அவை வெளியே சென்று அந்த தொல்லை தரும் கவலைகளில் இருந்து உங்கள் மனதை அகற்றட்டும்.

3. உங்களை நீங்களே கேள்வி கேளுங்கள்

என் வாழ்க்கையில் ஒரு உறவு முடிந்துவிட்டதா, இன்னும் நான் அதைப் பிடித்துக் கொண்டிருக்கிறேனா? இனி பயனில்லாத விஷயங்களை அகற்றுவதன் மூலம் எனது வாழ்க்கையின் எந்த அம்சங்களை மேம்படுத்த முடியும்? போன்ற கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக் கொண்டு தீர்வைக் காணவும்.

4. தியானம்

தியானத்தின் போது, ​​நீங்கள் உங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தி, உங்களைச் சுற்றியுள்ள மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கட்டுப்பாடற்ற எண்ணங்களை அகற்றுவீர்கள். இந்த செயல்முறை உணர்ச்சி, அறிவுசார், உடல் மற்றும் ஆன்மீக நல்வாழ்வை அதிகரிக்கும்.

5. ஏற்றுக்கொள்வது அமைதி தரும்

நீங்கள் எவ்வளவு கவலைப்பட்டாலும், உங்கள் எதிர்காலம் மாறாது அல்லது நீங்கள் எவ்வளவு வருத்தப்பட்டாலும், உங்கள் கடந்த காலம் மாறாது. அதை ஏற்றுக்கொள்வதில் அமைதி இருக்கிறது. எனவே அபூரணமான, நிச்சயமற்ற மற்றும் கட்டுப்படுத்த முடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் எதையாவது புரிந்து கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ ​​அல்லது மறக்கவோ தேவையில்லை. ஆனால் நீங்கள் அமைதியை விரும்பினால், நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 Click here to join whatsapp group for daily health tip

செரிமான பிரச்சனையை போக்கும் 4 பழங்கள்!

 


கடுமையான குளிர் காலத்தில், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இத்தகைய சூழ்நிலையில், நம் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும், பருவகால மாற்றங்களுடன் சிறந்த முறையில் போட்டியிடவும், நம் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, ஆண்களுக்கு 90 மில்லிகிராம் மற்றும் பெண்களுக்கு 75 மில்லிகிராம் வைட்டமின்-சி தினசரி தேவைப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், குளிர்காலத்தில் நாம் அத்தகைய சிட்ரஸ் பழங்களை உட்கொள்ள வேண்டும். இதனால் நம் உடலுக்கு வைட்டமின் சி கிடைக்கும் மற்றும் ஸ்கர்வி போன்ற நோய்களின் ஆபத்து குறைகிறது.

அன்னாசிப்பழம் 

அன்னாசிப்பழத்தில் பல சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன. இதில் வைட்டமின்-சி, பி6, பொட்டாசியம், ஃபோலேட், தியாமின், தாமிரம், இரும்பு, ரிபோஃப்ளேவின் மற்றும் ப்ரோமைலைன் உள்ளது. குளிர்காலத்தில் வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை அன்னாசிப்பழம் சாப்பிட்டு வந்தால், உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தானாகவே அதிகரிக்கும். இதனை உட்கொள்வதால் வாயு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று உப்புசம் போன்றவற்றில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

திராட்சை

லுடீன், பீட்டா கரோட்டின், வைட்டமின் சி மற்றும் எலாஜிக் அமிலம் ஆகியவை திராட்சையில் காணப்படுகின்றன, இவை வலுவான ஆன்டி-ஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றன. இது நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரமாகவும் கருதப்படுகிறது. திராட்சையை (குளிர்கால பழங்கள்) தொடர்ந்து சாப்பிடுபவர்கள், அவர்களின் செரிமான அமைப்பு மற்றவர்களை விட சிறப்பாக இருக்கும். இது வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் பல பருவகால நோய்களைத் தடுக்கிறது.

பேரிக்காய் 

கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் பேரிக்காய் சாப்பிட்டு வந்தால், ஒரு நோய் தீர்க்கும் மருந்தாக செயல்படுகிறது. இதைப் பயன்படுத்துவதன் மூலம், இரத்த நாளங்கள் திறக்கத் தொடங்கி, இரத்த ஓட்டம் சாதாரணமாகிறது. இதில் வைட்டமின்-சி அளவு 7 மி.கி. இதனுடன், நார்ச்சத்தும் நல்ல அளவில் காணப்படுகிறது. பேரிக்காயின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய ஆயுதமாக அமைகிறது.

ஆரஞ்சு 

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. குளிர்காலத்தில் தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிட ஆரம்பித்தாலும், வைட்டமின்-சிக்கு வேறு எதையும் சாப்பிட வேண்டியதில்லை. இதை உண்பதால், உடலில் கொலாஜன் என்ற புரதம் உருவாகிறது, இது காயங்களை ஆற்றுவதில் நன்மை பயக்கும். இது செல்களை வலுப்படுத்துகிறது மற்றும் இரத்த சோகை அபாயத்தை நீக்குகிறது.

2023 புத்தாண்டை இப்படி ஹெல்த்தியான பழக்கத்தோடு ஸ்டார்ட் பண்ணுங்க..!

 ஆரோக்கியமான உடல் மற்றும் சாந்தமான மனம், இவை இரண்டும் ஒன்றுசேர பெற்றவர்களின் வாழ்க்கை முறை நிச்சயமாக ஹெல்தியான லைஃப்ஸ்டைலாக இருக்கும். ஆனால், இந்த இரண்டும் உடனடியாக உங்களுக்கு கிடைத்துவிடாது. அதற்காக ஒருசில வழிமுறைகளை கடைபிடித்து உங்களை நீங்கள் முதலில் வடிவமைத்துக்கொள்ள வேண்டும். மனதுக்கும் உடலுக்கு நல்ல செயல்கள் எது என்பதை தேர்ந்தெடுத்து அதனை நாள்தோறும் செய்ய வேண்டும். மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் ஆகியவை உடல் நலனுக்கு மிகவும் தீங்கானது என்பதால், அதற்கு ஒருபோதும் அடிமையாக இருக்கக்கூடாது.ஹெல்தியான லைஃப்ஸ்டைலில் வாழும்போது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் நோய் நோடிகள் உங்களை பாதிக்காது. அந்தவகையில் நாள்தோறும் நீங்கள் கடைபிடிக்க முக்கியமான சில வழிமுறைகளை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.

உடற்பயிற்சி : ஒவ்வொருவரும் அன்றாடம் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். சிலர், நாள்தோறும் கடினமான வேலைகளை செய்வதால் உடற்பயிற்சி தேவையில்லை என நினைக்கின்றனர். ஆனால், அனைவரும் உடற்பயிற்சியை செய்ய வேண்டும். உங்கள் கடினமான வேலையையும் சிறப்பாக செய்ய பிட்னஸாக இருந்தால் மட்டுமே முடியும் என்பதால், உடற்பயிற்சியை செய்வதை தவிர்க்காதீர்கள். காலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வது உங்களின் வாழ்க்கை தரத்தை ஆரோக்கியமானதாக மாற்றும்.

இதையும் படியுங்கள்: உடல் எடையை குறைக்க... ஆரோக்கியத்திற்கு... தினமும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி அவசியம்..?

மன அழுத்தம் கூடாது : அதிகப்படியான மன அழுத்தம் உங்களின் மன நிலையை பாதிக்கும் என்பதால் அவற்றை முடிந்தளவுக்கு தவிர்க்க பழக வேண்டும். உங்கள் மன நிலையை எப்போதும் மகிழ்ச்சியானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். மனநிலை பாதிக்க ஆரம்பித்தால், அவை உடல் நிலை ஆரோக்கியத்திலும பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், மன அழுத்தத்தை குறைக்கும் விதத்தையை நீங்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். யோகா செய்வது, இசை கேட்பது, நீண்ட தூரம் பயணிப்பது, நண்பர்களுடன் உரையாடுவது உள்ளிட்டவை மன அழுத்தங்களை குறைக்கும்.

காலை உணவு தவிர்க்காதீர் : காலை உணவை ஒருபோதும் தவிர்க்க கூடாது. எத்தகைய சூழ்நிலைகளிலும் காலை உணவை எடுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். இது உங்களின் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியம். காலை நேரத்தில் எடுத்துக்கொள்ளும் உணவில் இருந்து தான் உடலுக்கு தேவையான சத்துகள் அதிகளவில் உறிஞ்சப்படுவதால், இதில் எப்போதும் கூடுதல் கவனமாக இருங்கள்.

இதையும் படியுங்கள்: நீங்கள் அடிக்கடி காலை உணவை தவிர்த்தால் என்ன நடக்கும்..? பிரபல நிபுணரின் விளக்கம்

ஆழ்ந்த தூக்கம் : ஆழ்ந்த தூக்கம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படையான ஒன்று. ஒரு சிலர் கண்மூடி தூங்கினால் மட்டுமே போதும் என நினைக்கின்றனர். அப்போது, மனதில் பல வகையான சிந்தனைகள் மனதில் ஒடிக்கொண்டு இருக்கும். அதனை தவிர்த்து, எந்த சிந்தனைகளும், யோசனைகளும் இல்லாத ஆழ்ந்து தூங்குவதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், மனநிலை மற்றும் உடல் நலனில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, இரவு நேரத்தில் விழித்திருப்பதை தவிர்த்து, தூங்க பழகிக்கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான உணவு : ஹெல்தியாக இருக்க வேண்டுமென்றால் ஹெல்தியான உணவுகளை உண்ண வேண்டும். கீரை, பழங்கள், பயிறு வகைகள் என உணவுகளை பட்டியலிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு உணவுகளை உண்ணும்போது, நம் உடலுக்கு தேவையான சத்துகள் போதுமான அளவில் கிடைத்து, ஆரோக்கியமாக இருக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். எண்ணெய் பலகாரங்கள், சில்லி சிக்கன் போன்றவற்றை முடிந்தளவுக்கு தவிர்ப்பது நல்லது.நோய்களை வரும்முன் காப்பது சாலச்சிறந்தது. இல்லையென்றால் நோய்களால் பாதிக்கப்பட்டு, அதனால் கடுமையான அவதிகளை எதிர்கொள்ள நேரிடும்.


 Click here to join whatsapp group for daily health tip

உடலின் எல்லா பகுதிகளுக்கும் நன்மை தரும் ஏரோபிக் உடற்பயிற்சி

 துள்ளல் இசையோடு நடனமாடுவது போல உடற்பயிற்சி செய்வது ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி. உற்சாகம், குதூகலத்துடன் உடற்பயிற்சி செய்வது ஏரோபிக்ஸ் பயிற்சியின் சிறப்பம்சமாகும். மற்ற பயிற்சிகள் உடலை உறுதி செய்ய, உடலின் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் என்று செய்யப்படும் பயிற்சிகளாக இருக்கின்றன. 

ஏரோபிக் இவற்றிலிருந்து மாறுபட்டு இதயம், நுரையீரல் மற்றும் உடலின் எல்லா பகுதிகளுக்குமான பயிற்சியாக அமைகிறது. ஏரோபிக் பயிற்சி செய்யும் போது மூளையில் எண்டார்ஃபின் என்ற ஹார்மோன் சுரப்பு நிகழ்கிறது. இதுதான் நமக்கு உற்சாகம் தரும் டானிக். மகிழ்ச்சியுடன் உடற்பயிற்சி செய்ய இது உதவுகிறது. இதன் காரணமாக உடல் ஃபிட் ஆவதுடன் மன அழுத்தம் போன்ற பிரச்னையும் நீங்குகிறது.


ஏரோபிக் பயிற்சிகள் இதயத்தை பாதுகாக்கிறது. இதய தசைகளை வலுவாக்குகிறது. உடல் முழுவதும் ரத்தம் பாய்வதை அதிகரிக்கிறது. இதன் மூலம் ரத்த அழுத்தம் இயல்பு நிலைக்கு வருகிறது. நல்ல கொழுப்பு அளவு அதிகரிக்கிறது. தொடர்ந்து ஏரோபிக் பயிற்சி செய்யும்போது ரத்த சர்க்கரை அளவு குறைகிறது. இதன் காரணமாக உடல் எடை குறைகிறது. ஏரோபிக் பயிற்சிகள் ஆஸ்துமா பாதிப்பைக் குறைக்கிறது.

 ஆஸ்துமா நோயாளிகள் மருத்துவர் ஆலோசனை பெற்று ஏரோபிக் பயிற்சியில் இறங்குவது நல்லது. ஏரோபிக் பயிற்சியின் போது மரப் பலகையின் மீது ஏறி இறங்கி நடன அசைவுக்கு ஏற்ப பயிற்சி செய்வதால் இடுப்பு, தொடை, முழங்கால் எலும்புகள் வலுப்பெறுகின்றன.

குத்து சண்டை போடுவது போல டம்பெல்ஸ் பயிற்சி ஏரோபிக்ஸில் வழங்கப்படுகிறது. இது கை, தோள்பட்டைப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைத்து தசைகளை உறுதிப்படுத்துகிறது. உற்சாகத்துடன் உடற்பயிற்சி செய்வதால் இரவில் ஆழ்ந்த தூக்கம் வரும்.

 இதயம் வேகமாக துடிப்பதால் உடல் முழுக்க ரத்த ஓட்டம் சீராக சென்று சேர்கிறது. இதன் காரணமாக நச்சுக்கள் வெளியேற்றப்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மூளை செல்கள் மனிதனின் 30 வயதுக்குப் பிறகு குறைய ஆரம்பிக்கின்றன. உடலை இசைக்கு ஏற்ப வளைத்து ஆடுவது, ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் மூளை செயல்திறன் மேம்படுகிறது. இதன் காரணமாக அறிவாற்றல் திறன் மேம்படுகிறது.

 Click here to join whatsapp group for daily health tip

மூக்கடைப்பு, சளித்தொல்லை போன்ற பனிக்கால நோய்களை விரட்டுவது எப்படி?

 பனிக்கால நோய்களில் இருந்து உடலை காக்க சித்த மருத்துவ முறைகள் குறித்து இம்ப்காப்ஸ் இயக்குனரும், வேலூரை சேர்ந்த சித்த மருத்துவருமான டி.பாஸ்கரன் கூறியதாவது:- 

பொதுவாக பனிக்காலம் என்பது (முன்பனி, பின்பனி) மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்களில் வரக்கூடியது. இந்த பனிக்காலத்தில் மூக்கடைப்பு, சளி, இருமல் போன்ற நோய்கள் ஏற்படும். இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டுமானால் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு போன்ற பண்டங்களை உட்கொள்ள வேண்டும்.

 நீரை கொதிக்க வைக்கும்போது ஒரு டீஸ்பூன் மிளகு அல்லது லவங்கம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். காலையில் எழுந்து மூச்சுப்பயிற்சி செய்து துளசி, மிளகு, வெற்றிலை மற்றும் தேன் சேர்த்த பானத்தை அருந்தினால் மூச்சுப்பாதை சீராகி கோழையினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் வராமல் தடுக்கப்படும். அத்துடன் உடலுக்கு குளிரைத் தாங்கும் சக்தி ஏற்படும்.

 மேலும் பருவ மாற்றத்தால் ஏற்படக்கூடிய சுரம் (காய்ச்சல்), சளித் தொல்லையைப் போக்க திரிகடுகு சூரணத்தை தேன் சேர்த்துச் சாப்பிடலாம். நெஞ்சில் சளி கட்டுதல், தொண்டையில் டான்சில் வீக்கம், ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் நோய்கள் வர வாய்ப்பு உள்ளதால் கிராம்பு, ஏலக்காய், லவங்கப்பட்டையை நீரில் சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்து வருவது நல்லது. 

பனிக்காலத்தில் காற்றில் பிராணவாயு குறைவாக இருப்பதால் சுவாசிப்பதில் பாதிப்பு வர வாய்ப்புள்ளது. இதற்கு கல்யாண முருங்கை இலையை வடை அல்லது அடை செய்து சாப்பிட்டு வருவது நல்ல தீர்வைத் தரும். சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் முற்றிய முருங்கை விதையைச் சாப்பிட்டு அந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடலாம். 

சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் சளி, இருமல் மட்டுமின்றி மலக்கட்டினையும் தடுக்கலாம். மேலும் இந்த காலக்கட்டத்தில் எப்போதும் குளிர்ந்த சூழல் நிலவுவதால் அந்த குளிர்ந்த காற்றை சுவாசிக்கும்போது ஜலதோஷத்துடன் தும்மல், மூக்கடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இந்தச் சூழலில் வாய் வழியாக சுவாசிக்க நேர்வதால் மூச்சுக்குழாய்க்குள் கிருமிகள் எளிதாக நுழைந்துவிடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. 

நொச்சி, வேப்பிலை, நுணா போன்றவற்றை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடிப்பது மூக்கடைப்பிலிருந்து விடுபட உதவும். 

மிளகை தீயில் எரித்து அதன் புகையை சுவாசித்தால் மூக்கடைப்பு விலகும்.

 கற்பூரவல்லி, தூதுவளை போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் சளித்தொல்லையை   மட்டுமல்ல மூட்டு வலியையும் தவிர்க்கலாம்.

 மூட்டு வலி உள்ளவர்கள் அவ்வப்போது முடக்கத்தான் கீரையை தோசை செய்து சாப்பிடுவது, ரசம் வைத்து சாப்பிட்டு வருவது நல்லது. பனிக்காலத்தின்போது வாரத்தில் இரண்டு நாட்கள் சுக்கு மற்றும் நொச்சித் தைலத்தை உடல் முழுவதும் தடவ வேண்டும். 

முக்கியமாக எல்லா மூட்டுகளிலும் இந்த தைலங்களைத் தடவி குளித்தால் மூட்டுவலி நன்றாகக் குறையும். அத்துடன் உடல் வறட்சியும் குறையும். உடல் வறட்சி அதிகம் உள்ளவர்கள் குளிப்பதற்கு 10 நிமிடத்துக்கு முன் உடலில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.

 பனிக்காலத்தில் காலை எழுந்ததும் வரும் அடுக்குத் தும்மல், மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்சினைகளுக்கு ஒரு டம்ளர் பாலில் 10 பூண்டுப்பற்களை உரித்துப்போட்டு நன்றாக வேகவைத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், கால் டீஸ்பூன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால் தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


 Click here to join whatsapp group for daily health tip

சத்து குறையாமல் காய்கறிகளை சாப்பிட...

 இன்றைய காலக்கட்டத்தில் ரசாயன கலப்பு மற்றும் ஊட்டச்சத்து உணவு குறைபாடு காரணமாக வளர் இளம்பெண்கள் ரத்த சோகையினாலும், பிற நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். இதனை தவிர்க்க கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றலாம். 

* காய்கறிகளை வெட்டுவதற்கு முன்பு நல்ல தண்ணீரில் 10 முதல் 20 நிமிடங்கள் ஊற வைத்து கழுவ வேண்டும். அப்போது தோலில் உள்ள பூச்சி மருந்துகளின் தாக்கம் குறையும்.

 * காய்கறிகளை வெட்டிய பிறகு எக்காரணம் கொண்டும் கழுவக்கூடாது. 

* கருணைக்கிழங்கு தவிர, பிற கிழங்கு வகைகளை குறைவாக பயன்படுத்த வேண்டும். 

* மாவுச்சத்து மிகுந்த, கடினமான காய்கறிகளை மட்டும் அதிக நேரம் வேக வைக்கலாம். கொடிக்காய்கள், நீர்ச்சத்து மிகுந்த காய்களை 3 அல்லது 5 நிமிடங்கள் வேக வைத்தால் போதுமானது. 

* காய்கறிகளை எண்ணெய்யில் வதக்குதல், பொரித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். 

* ஈரமான பருத்தித்துணி அல்லது மண்பானை, பிரிட்ஜ் ஆகியவற்றில் காய்கறிகளை பாதுகாக்கலாம்.

 * கேரட், தக்காளி, வெள்ளரி, தேங்காய், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை சமைக்காமல் பயன்படுத்த வேண்டும். 

* காய்கறிகளை வேக வைக்க தேவையான அளவு தண்ணீர் பயன்படுத்த வேண்டும். அந்த தண்ணீரை வீணாக்காமல் பருகலாம்.

* ஒவ்வொரு பருவகாலங்களிலும் விளையும் காய்கறிகளை மட்டும் பயன்படுத்துவது மிக சிறந்தது ஆகும்.


 Click here to join whatsapp group for daily health tip

சாதாரண பல் சொத்தை பிரச்சனை ஆபத்தாக மாறுமா?

 காரைக்குடி மணீஸ் பல் மருத்துவமனை டாக்டர் மணிகண்டன் விளக்கம் பொதுவாக இருதய நோய் உள்ளவர்களுக்கு ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு பெரும் பாதிப்பை தரும். மேலும் பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ளாதவர்களுக்கு பாக்டீரியா என்ற நுண் கிருமிகள் ஈறு நோயை உண்டாக்கும். அதன் மூலம் கிருமிகள் நமது ரத்தக்குழாயில் கலந்து இருதயத்தில் அடைப்பு உண்டாகும். 

Atherosclerosis இந்த பிரச்சினை உள்ள நிறைய பேருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் இருதய நோய் உள்ளவர்கள் பல் மருத்துவரை அணுகும் போது இருதய நோய் உள்ளவர்கள் தாங்கள் எடுக்கும் மாத்திரைகள் குறித்த விவரங்களை மருத்துவர்களிடம் தெளிவாக எடுத்து கூற வேண்டும்.

 ஈறுகளில் உள்ள கிருமிகளை உண்டாக்கும் இன்பக்‌ஷன் மூலமாக நமது மூளையில் இருக்கும் செல்கள் பாதித்து நமக்கு ஞாபக மறதி மற்றும் அல்சீமர் போன்ற நோய்களை உண்டாக்கும். இப்படியும் ஆகுமா என பலருக்கும் தெரிவதில்லை. அதனாலேயே பலரும் பல் பிரச்சினையை அலட்சியமாக எடுத்துக்கொள்கின்றனர். 

நீரழிவு நோய் உள்ள ஒரு சிலருக்கு எவ்வளவு மாத்திரை எடுத்துக்கொண்டாலும், சாப்பாடு திட்டமாக எடுத்துக்கொண்டாலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையவே குறையாது. ஏன் என்றால் அவர்களின் ஈறுகளில் உள்ள கிருமிகள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த விடாது. எனவே நமது பற்களை பாதுகாத்து பாதுகாப்பான வாழ கற்றுக்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

 Click here to join whatsapp group for daily health tip

உணவு மூலமே தைராய்டு பிரச்சனையை சரி செய்ய முடியுமா..? எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம்..?

 ஹைப்போதைராய்டிசம் என்பது உடலில் தைராய்டு சுரப்பிகள் தேவைக்கு குறைவாக சுரப்பதனால் உண்டாகும் ஒரு உடல்நல கோளாறு ஆகும். உடலின் வளர்ச்சிதை மாற்றங்கள் செல்களை சரி செய்வது செல்களின் வளர்ச்சி மற்றும் சில முக்கிய உடல் உறுப்புக்களின் செயல் இருக்கும் தைராய்டு சுரப்பிகள் முக்கிய பங்காற்றுகின்றனர். ஹைப்போதைராடிசம் குறைபாடு உள்ளவர்கள், தலை முடி உதிர்தல், மயக்கம், உடல் எடை கூடுதல், மனதளவில் ஏற்படும் மாற்றங்கள், மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் தென்படும்.

இதன் காரணமாக எப்போதும் ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். முக்கியமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் போன்ற உடலுக்கு கெடுதல் தரும் உணவு பொருட்களை உட்கொள்வதை தவிர்ப்பதன் மூலமே தைராய்டு பிரச்சனை ஏற்படாமலும், அப்படியே தைராய்டு பிரச்சினை இருந்தாலும் அதனை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் முடியும்.

வைட்டமின் பி :

வைட்டமின் பி ஊட்டச்சத்தானது தைராய்டு சுரப்புகளின் உற்பத்திக்கும் அவர்களின் செயல்பாட்டிற்கும் முக்கிய பங்காற்றுகிறது மேலும் கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கும், ஹைப்போதைராய்டிஸத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த ஊட்டச்சத்து இன்றியமையாதது ஆகும்.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை தவிர்க்க வேண்டும் :

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இவை உடலில் உள்ள குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை அதிகரித்து விடுகின்றன. இதனால் தைராய்டு ஹார்மோன்களில் சமநிலையற்ற தன்மை உண்டாகிறது. இதன் காரணமாகவே தைராய்டு சம்பந்தப்பட்ட கோளாறுகள் உண்டாகின்றன. அதிக அளவு சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளையும் கார்போஹைட்ரேடுகளையும் உட்கொள்ளும் போது வளர்ச்சிதை மாற்றத்தை தடை செய்யும் உடல் நலக் கோளாறுகள் உண்டாகி தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும்.

இறைச்சி உணவுகள்:

தினசரி உணவில் உடலுக்கு தேவையான புரத சத்துக்கள் நிறைந்துள்ளவாறு உணவை உட்கொள்ள வேண்டும். இறைச்சிகளில் அதிக அளவு புரதச்சத்தும், அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளதால் இவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை போதுமான அளவு வழங்குகின்றன. முக்கியமாக கல்லீரலானது தைராய்டு சுரப்பிகளை சரிப்படுத்தும் முக்கிய உணவாக கருதப்படுகிறது. வைட்டமின் எ, ஹார்மோன் சுரப்பிகளை கட்டுப்படுத்தியும், தைராய்டு சுரப்பிகள் சுரப்பதை சரியான அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்வதன் மூலம் உடலின் வளர்ச்சிதை மாற்றம் சரியாக நிகழ்வதை உறுதி செய்கிறது.

கோய்ட்ரோஜன்ஸ்

கோட்ரோஜன்கள் தாவர உணவு வகைகளின் அதிகமாக காணப்படுகின்றன. முக்கியமாக புரோக்கோலி, காலிபிளவர், முட்டைகோஸ், கீரை, வேர்க்கடலைகள் ஆகியவற்றில் இவை அதிகமாக காணப்படுகின்றன..

உணவில் அயோடினை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் :

உலகில் மூன்றில் ஒரு பகுதி மக்களுக்கு அயோடின் குறைபாடு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலின் தைராய்டு சுரப்பதை ஊக்கப்படுத்தும் முக்கிய காரணியாக அயோடின் உள்ளது. இதன் காரணமாக உங்களுக்கு ஹைபோதைராய்டிசம் ஏற்பட்டால் உங்கள் உணவில் அயோடின் அளவை சரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது.


செலினியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் :

தைராய்டு சுரப்பிகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் மற்றொரு தாது செலினியமாகும். கிடைத்த தரவுகளின் படி செலினியமானது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் தைராய்டு சுரப்பிகள் சரியாக வேலை செய்வதற்கும் உதவி புரிகிறது. நட்ஸ், முட்டைகள் போன்ற உணவு வகைகளில் இவை அதிக அளவில் காணப்படுகின்றன.

ஆன்ட்டி நியூட்ரியன்ட்ஸ் தவிர்க்க வேண்டும் :

தாவர உணவு வகைகளில் அதிக அளவில் ஆண்டி நியூட்ரியன்ட்ஸ் காணப்படுகின்றன. இதனால் ஹைப்போதைராடிஸ்ம் உள்ளவர்களுக்கு இது மிகுந்த பாதிப்பை உண்டாக்கும். ஆன்ட்டி நியூட்ரியன்ட்ஸ் அதிகம் நிறைந்த தாவர உணவுகளை உட்கொள்வதை குறைத்துக்கொள்ள வேண்டும். தாவர உணவை ஊறவைத்தும், சமைத்தும் உண்பதின் மூலம், அதில் உள்ள ஆண்டி நியூட்ரியன்ட்ஸ் நம்மால் குறைக்க முடியும்.

தைராய்டு பிரச்சினையை சரி செய்வதற்கு அதன் மூல காரணத்தை அறிந்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டால் மிக எளிதாக சரி செய்து விடலாம். மேலும் உணவுப் பழக்கத்தை சரிப்படுத்துவதன் மூலமே மிக எளிதாக தைராய்டு பிரச்சனையிலிருந்து விடுபட முடியும்.

 Click here to join whatsapp group for daily health tip