Search

ஒரு நாளைக்கு எத்தனை டீ குடிப்பீங்க..? இந்த அளவை தாண்டினால் ஆரோக்கியத்திற்கே ஆபத்தாகலாம்...

உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பிடித்த ஒரு ரிஃப்ரெஷிங் பானம் என்றால் அது டீ தான். சிலருக்கு காபி என்றால் மிகவும் பிடிக்கும். இருப்பினும், டீ (தேநீர்) உண்மையில் உலகம் முழுவதும் பரவலாக நுகரப்படும் ஒரு மலிவு விலை பானமாகும். டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளின் விரிவான பட்டியலை பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.


இதில் வீக்கம் குறைத்தல், இதய நோய் மற்றும் நாட்பட்ட நோய்களை கட்டுப்படுத்துதல், இரத்த சர்க்கரை அளவுகளை பராமரிப்பது உட்பட பல நன்மைகள் அடங்கும். டீ மனதை ஆறுதல் படுத்துவதற்கும் மற்றும் குணப்படுத்துவதற்கான ஒரு பிரபலமான தேர்வாக இருந்தாலும், இதன் அதிகபடியாக நுகர்வு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. டீ குடிப்பதால் ஏற்படக்கூடிய எதிர்மறையான விளைவுகளைப் பற்றி விஞ்ஞானம் என்ன கூறுகிறது என்பதைப் இந்த பதிவில் விரிவாக காண்போம்.

உங்கள் உடலின் இயற்கையான செயல்முறையை பாதிக்கலாம்: நீங்கள் தேர்ந்தெடுக்கும் டீயை பொறுத்து, கஃபின் உட்கொள்ளல் மாறுபடும். பிளாக் டீ, மில்க் டீ மற்றும் கிரீன் டீ ஆகியவற்றில் சராசரியாக 14-61 மில்லிகிராம் கஃபின் அடங்கியுள்ளது. இது 96 மில்லிகிராம் கஃபின் கொண்ட ஒரு கப் காபியுடன் ஒப்பிடும்போது குறைவு தான் என்றாலும், தினசரி டீ குடிக்கும் போது அதில் உள்ள கஃபின் நம் உடலின் இயற்கையான சர்க்காடியன் ரிதத்தை சமநிலையிலிருந்து மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது. நாம் விழித்திருக்கும் மற்றும் தூங்கும் நேரம் உட்பட 24 மணி நேர காலப்பகுதியில் நம் உடல்கள் பின்பற்றும் வழிமுறைகளை நமது சர்க்காடியன் அமைப்பு சமநிலைபடுத்துகிறது. ஒளி, மன அழுத்தம், வேலை மற்றும் காஃபின் போன்றவை நம் சர்க்காடியன் ரிதத்தை சமநிலையிலிருந்து மாற்றும்.

நமது இயற்கையான ரிதத்தை பராமரிப்பது மிக முக்கியம். ஏனென்றால் இது பகலில் அதிக எச்சரிக்கையை உணரவும், இரவில் நன்றாக தூங்கவும், ஒட்டுமொத்த சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது. பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் நாம் அதிகப்படியான கஃபின் கொண்ட தேநீரை அருந்தினால், அது நம் தூக்கத்தை சீர்குலைக்கும். இது நமது சர்க்காடியன் ரிதத்தையும் சீர்குலைக்கும். 


தொடர்ச்சியாக சீர்குலைந்த சர்க்காடியன் அமைப்பு இருதய பிரச்சினைகள், மனநல பிரச்சினைகள், எடை அதிகரிப்பு மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த முறை நீங்கள் இரவுநேர தேநீர் குடிக்கும்போது கிரீன் டீ க்கு பதிலாக மூலகை டீயை பருகலாம்.

உணவுக்குழாயில் புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கலாம்: சூடான தேநீர் குடிப்பது உண்மையில் உணவுக்குழாய் செதிள் உயிரணு புற்றுநோய் அல்லது உணவுக்குழாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். வடக்கு ஈரானிய மக்களை மையமாகக் கொண்ட ஒரு ஆய்வில், உணவுக்குழாய் புற்றுநோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்று, அதிக அளவு சூடான பிளாக் டீ குடிப்பது என கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற ஆய்வுகளும் இதேபோன்ற முடிவுகளைக் கண்டறிந்துள்ளன.

 சூடான காபி மற்றும் சூடான தேநீர் இரண்டும் உணவுக்குழாயில் நீடித்த சேதத்தை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது.
இதற்கான சரியான விளக்கத்தை பெற ஆராய்ச்சியாளர்கள் இன்னும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் பல ஆய்வுகள் இது நமது உணவுக்குழாயின் உள் வெப்பநிலையுடன் தொடர்புடையது என்று நம்புகின்றன. உதாரணமாக, ஒரு கப் டீ 150 டிகிரி பாரன்ஹீட்டில் இருந்தால், நமது உணவுக்குழாய் 127 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலையை எட்டக்கூடும் என்று கூறப்படுகிறது. எனவே கோடையில் ஐஸ் டீ குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

உடலில் இரும்புச்சத்து அளவை குறைக்கலாம்: டீ ஆச்சரியமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் இரத்த சோகை அல்லது வேறு எந்த வகையான இரும்பு தொடர்பான குறைபாடு உள்ளவர்கள் டீ குடிக்கும் முன்பு யோசிக்க வேண்டும் என சில ஆய்வுகள் பரிந்துரைத்துள்ளது. புட் சயின்ஸ் மற்றும் நியூட்ரிசன் நடத்திய ஆய்வில், பிளாக் மற்றும் கிரீன் டீ ஆகியவை உடலில் இரும்பு சத்து கிடைப்பதை 94% வரை கட்டுப்படுத்துவது நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் உட்கொள்ளும் ஒரு பொருளின் உயிர் கிடைக்கும் தன்மை முக்கியமானது. ஏனெனில் இது நம் உடலால் ஒரு ஊட்டச்சத்து எவ்வளவு உறிஞ்சப்படுகிறது என்பதற்கான அளவீடாகும்.

தேயிலையில் காணப்படும் டானின்கள் உடலில் இரும்பு உறிஞ்சுதலில் ஏற்படும் மாற்றங்களுக்கு காரணமாக இருக்கலாம் என்று நியூட்ரிசன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டானின்கள் தேயிலை, ஒயின் மற்றும் சாக்லேட் ஆகியவற்றில் காணப்படும் ஒரு இயற்கை கலவை ஆகும். மேலும் அவை நிலையான நுகர்வுக்குப் பிறகு இரும்பின் உயிர் கிடைக்கும் தன்மையைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்களிடம் இரும்புச்சத்து குறைவாக இருக்கும்போது, நீங்கள் ​​சோர்வு, அமைதியின்மை, வறண்ட சருமம், தலைவலி போன்றவற்றை அனுபவிக்கலாம்.

அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடலாம் : பிளாக் மற்றும் கிரீன் டீ இரண்டும் டையூரிடிக்ஸ் என்று கருதப்படுகிறது. இவை அடிக்கடி சிறுநீர் கழிக்க வழிவகுக்கும். டையூரிடிக்ஸ் இயற்கையாகவே சிறுநீரகங்களில் சோடியத்தின் அளவை அதிகரிக்கிறது. இதனால் உடலில் சோடியம் இயற்கையாகவே தண்ணீருடன் வெளியேறும். டீ சில நேரங்களில் அதிகப்படியான தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்ளும் நபர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது என்றாலும், இது பெரும்பாலும் நீரைத் தக்கவைத்துக்கொள்வதில் சிரமப்படாத ஒருவரில் நீரிழப்பு பிரச்சனையை ஏற்படுத்தும்.

தி பார்மா இன்னோவேஷன் இதழில் வெளியான அறிக்கையின்படி, கிரீன் மற்றும் பிளாக் டீ-யில் உள்ள டையூரிடிக் தன்மை, உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் ஏற்றத்தாழ்வு மற்றும் நீரிழப்பு ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். இது சோம்பல், அதிகரித்த அல்லது ஒழுங்கற்ற இதய துடிப்பு மற்றும் கடுமையான தலைவலி போன்றவற்றை ஏற்படுத்தும்.

மலச்சிக்கலை ஏற்படுத்தலாம்: டீயில் காணப்படும் பல இயற்கை சேர்மங்களில், தியோபிலின் கவனிக்க வேண்டிய பொதுவான ஒன்றாகும். இந்த கலவை காபி மற்றும் டீ இரண்டிலும் காணப்படுகிறது. மேலும் சில நேரங்களில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு காற்றுப்பாதை தசைகளை மென்மையாக்க பயன்படுகிறது. இது அதன் சுவாச நன்மைகளைக் கொண்டிருந்தாலும், இது சில லேசான மற்றும் எரிச்சலூட்டும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். புற்றுநோய் ஆராய்ச்சிக்கான இன்டெர்னல் ஏஜென்சி அமைப்பின் அறிக்கையின்படி, தியோபிலினை உட்கொள்வது இரைப்பை குடல் தொந்தரவுகளுக்கு வழிவகுக்கும். பிற ஆதாரங்களும் தியோபிலின் மலச்சிக்கல் மற்றும் குமட்டலை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது. ஆகவே, நீங்கள் ஏற்கனவே வயிற்றுப் பிரச்சினைகளை அனுபவிக்கும் ஒருவராக இருந்தால், உங்களுக்கு பிடித்த ஒரு கப் டீ உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.


Click here to join whatsapp group for daily health tip

தினசரி உணவில் ஒரு கிராம் உப்பை குறைத்தாலே உயர் இரத்த அழுத்தம் , இதய நோய்களை தவிர்க்கலாம் - ஆய்வு

 உப்பு அதாவது சோடியம் குளோரைடு நமது உணவின் இன்றியமையாத அங்கமாகும். உப்பு நம் உடலில் திரவ அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தசைகளை தளர்த்துகிறது மற்றும் நரம்பு தூண்டுதல்களை பராமரிக்கிறது. உடலின் சரியான செயல்பாட்டிற்கு ஒரு குறிப்பிட்ட அளவு உப்பு அவசியம் தேவை. அதேசமயம் அதிக உப்பு உட்கொள்வதால் சிறுநீரக கற்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த நோய்களால் பலர் பாதிக்கப்படுகிறார்கள். இதை எப்படி தவிர்க்கலாம் என பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் உப்பு மற்றும் இதய நோய் பற்றி புதிய ஆய்வு ஒன்று வெளிவந்துள்ளது. இதில் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை உப்பின் அளவு மூலம் எப்படி குறைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மெடிக்கல் நியூஸ் டுடேயின் அறிக்கையின்படி, உப்புக்கும் இதய நோய்க்கும் உள்ள தொடர்பு குறித்து சீனாவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தினமும் 1 கிராம் உப்பு உட்கொள்ளலைக் குறைப்பதன் மூலம் இதய நோய் அபாயத்தை 4% மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 6% வரை குறைக்கலாம் என்று இந்த ஆய்வு காட்டுகிறது.


உலகிலேயே சீனாவில்தான் உப்பு நுகர்வு அதிகம் என்பது உங்களுக்கு தெரியுமா..? அதனல்தான் சீனா இந்த ஆய்வை மும்மூரமாக மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வில் ஒரு நாளைக்கு 1 கிராம் உப்பு உட்கொள்ளலைக் குறைப்பது உலகளவில் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் என்று கூறப்பட்டுள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, 14 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் தினமும் 2300 மில்லிகிராம் உப்பை உட்கொள்ள வேண்டும். இதை விட அதிகமானால் நோய்கள் ஏற்படலாம்.

உப்பு கிட்டத்தட்ட அனைத்து உணவுப் பொருட்களிலும் சேர்ப்பது வழக்கம். ரொட்டி, தின்பண்டங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளில் அதிக அளவு உப்பு உள்ளது. எனவே உப்பின் அளவை குறைக்க நினைத்தால் முதலில் நொறுக்குத் தீனிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

முடிந்தவரை உணவில் உப்பை குறைக்க முயற்சி செய்யுங்கள். உப்பு இல்லாமல் சில காய்கறிகளை சாப்பிட முயற்சி செய்யுங்கள். இது தவிர, அவ்வப்போது உங்கள் உடல்நலப் பரிசோதனைகளையும் செய்துகொள்ளுங்கள். இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், மருத்துவரை அணுகி உணவு மற்றும் வாழ்க்கைமுறையில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.


Click here to join whatsapp group for daily health tip

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த 7 உணவுகளை தொடவே கூடாதாம்...

 இன்றைய அதிவேக உலகில் பலர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். உயர் இரத்த அழுத்தம் என்பது உங்கள் இரத்த நாளங்களில் இரத்தத்தின் இயல்பான வேகமானது அசாதாரணமான அளவில் அதிகரிக்கும் ஒரு நிலை ஆகும். இதன் விளைவாக, உங்கள் இரத்த நாளங்களின் சுவர்கள் பலவீனமடைந்து, உங்கள் இதயம் வழக்கமான விகிதத்தை விட அதிகமாக ’பம்ப்’ செய்யத் தொடங்குகிறது. இந்த வேகமான ’பம்பிங்’ உங்கள் இதயத்தை அதிகமாக உழைக்க வைப்பதால் மாரடைப்பு மற்றும் பிற மாரடைப்பு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

எலுமிச்சை, ஆரஞ்ச், திராட்சை போன்ற பழங்களின் உதவியுடன் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பூசணி விதைகளும் இரத்த அழுத்தத்தை சீர் செய்ய உதவும் முக்கிய கூறாகும். சரி, நீங்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால் நீங்கள் விலகி இருக்க வேண்டிய 8 வெவ்வேறு உணவுகள் குறித்து பார்க்கலாம்.

உப்பு: உயர் இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளுக்கு வரும்போது, உப்பு மிக அபாயமான ஒரு பொருளாகும். ஒவ்வொரு முறையும் உங்கள் உணவில் சோடியம் உள்ளடக்கத்தை நீங்கள் அதிகரிக்கும்போது, உங்கள் உடலின் அயனி சமநிலையை நீங்கள் தொந்தரவு செய்கிறீர்கள் என்று அர்த்தம். இது பொதுவாக மிகவும் மோசமான நிலையில் உங்களை கொண்டு சேர்த்துவிடும். எனவே, உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, அவர்கள் சோடியம் உட்கொள்ளலை 1,500 மி.கிராமுக்கு குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் (Refined Oil): சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஒரு வகை கொழுப்பைக் கொண்டுள்ளன. இந்த எண்ணெய் பார்ப்பதற்கு சுத்தமாகவும் தெளிவாகவும் தோற்றமளிக்கின்றன. உண்மை என்னவென்றால், இந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களும் வெண்ணெய்யும் ஒமேகா -6 கொழுப்பு வகையால் நிரம்பியவை. எனவே, நீரிழிவு நோயாளிகளுக்கு இதய நோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.

ஊறுகாய்: பெரும்பாலான நிலைகளில், நீங்கள் எதையும் கெடாமல் பாதுகாக்க வேண்டியிருக்கும் போது, அதில் உப்புதான் சேர்க்க வேண்டியிருக்கும். அந்த வகையில் ஊறுகாய்களிலும் உப்புதான் அதிகம். ஊறுகாயில் சேர்க்கப்படும் காய்கறிகள் கெடாமல் புதியதாக இருக்க உப்பை அதிகம் சேர்க்கிறோம். ஆனால் மோசமான பகுதி என்னவென்றால், அவை பெரும்பாலும் ஏராளமான எண்ணெய் அல்லது வினிகரில் தோய்த்து வைக்கப்படுகின்றன. இதனால் அவை நொதித்து, சுவையை பராமரித்து கெடாமல் வைத்திருக்கும். ஆகவே, ஊறுகாய் இரத்த அழுத்தத்திற்கு தீங்கை விளைவிக்கும்.

பாலாடைக்கட்டி (Cheese): பாலாடைக்கட்டி உணவில் சேர்க்கையில் சுவையை மேம்படுத்தும். ஆனால், லேக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவர்களுக்கு பாலாடைக்கட்டி அபாயம் என்கிற உண்மையை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். பொதுவாகவே பாலாடைக்கட்டி அதிகமாக உட்கொள்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல. பாலாடைக்கட்டியில் கால்சியம் மற்றும் புரதம் போன்ற சில ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இருப்பினும் சூப்பர் மார்க்கெட்டுகளில் நீங்கள் காணும் பாலாடைக்கட்டி வகைகள் உப்பு நிரம்பியவை. இது உங்கள் இரத்த அழுத்தத்திற்கு நல்லதல்ல. நீங்கள் அதிக பாலாடைக்கட்டி சாப்பிடும்போது கொழுப்பின் அளவு அதிகரிக்கும். அதன் விளைவாக, இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

மது அருந்துவது கேடு: நீங்கள் மருப்பிரியராக இருந்தால், மது குடிப்பதால் ஒரு ஆரோக்கிய நன்மை கூட இல்லை என்பதை அறிந்து அதை தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், நீங்கள் அதிகமாக மது அருந்தும்போது இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

காஃபி: காலையில் பருக காஃபி ஒரு சிறந்த பானமாகும். அதில் நன்மைகளும் உள்ளன. இருப்பினும், நீங்கள் அதிக அளவு காஃபியை குடிக்கும்போது, உங்கள் இரத்த அழுத்தத்தில் ஏற்றம் காணப்படும். எனவே, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் காஃபியை தவிர்ப்பது நல்லது.

கார்பனேற்றப்பட்ட பானங்கள் (Carbonated drinks): கார்பனேற்றப்பட்ட பானங்கள் ஆரோக்கியமற்றவை மற்றும் உடலுக்கு நிறைய தேவையற்ற சர்க்கரைகளை புகுத்துவதால், அவை உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதுடன் பல்வேறு நோய்களையும் ஏற்படுத்துகின்றன. கார்பனேற்றப்பட்ட பானங்களை குடிக்கும் பழக்கத்தை நீங்கள் வளர்க்கும்போது, உங்கள் வாயின் ஆரோக்கியத்தையும் அழிக்க துணை போகிறீர்கள் என்பது நிதர்சனம். கார்பனேற்றப்பட்ட பானங்களை தவிர்க்கும்போது ஆரோக்கியம் மேம்படுகிறது.

Click here to join whatsapp group for daily health tip

Internship Programme 2022 at MANAGE, Hyderabad

 Internship Programme 2022 at MANAGE, Hyderabad




Walk in Interview -Junior Research Fellow at TNAU, CBE

Junior Research Fellow at TNAU, CBE

Name of the Post :  Junior Research Fellow

Number of Post: 3 (three)

Qualification: B.Sc. (Horti. / Agri.) / B.Tech. (Horti.)

Name of the Employer : The Dean (Horticulture), Horticultural College and Research Institute, TNAU, Coimbatore

Place of Posting: -

Pay (Rs.):Rs.20,000/- P.M.

Name of the Scheme/Project: ICAR-All India Network Research Project on Onion and Garlic Department of Vegetable Science, HC & RI, TNAU, Coimbatore. & ICAR-Revolving Fund scheme – Seed Production in Vegetable Crops on contract basis and production of Vegetable seedlings and grafts Department of Vegetable Science, HC & RI, TNAU, Coimbatore

Place, Date and Time of Interview: The Dean (Horticulture)HC & RI, TNAU, Coimbatore.,06.09.2022, 09.00 a.m.


Click here to join Whatsapp group for Agri Updates


Senior Research Fellow, Technical Assistant, at TNAU, Coimbatore -Walk in Interview


                                      Senior Research Fellow at TNAU, CBE

Name of the Post :  Senior Research Fellow

Number of Post: 1 (one)

Qualification: Minimum M.Sc. (Agri.) in Plant Breeding Bachelor degree from SAUs

Name of the Employer : The Dean Agricultural College and Research Institute, Killikulam

Place of Posting: 

Pay (Rs.):With NET :Rs. 31,000/- P.M. / Without NET -Rs. 25,000/- P.M.

Name of the Scheme/Project: Infusion of durable recessive resistance against late leaf spot in TMV (Gn) 13 groundnut through gamma irradiation

Place, Date and Time of Interview: The Dean,AC & RI, TNAU, Killikulam 30.08.2022,09.00 a.m.

Technical Assistant

Name of the Post :  Technical Assistant

Number of Post: 1 (one)

Qualification: Minimum M.Sc. (Agri.) in Plant Breeding Bachelor degree from SAUsMinimum Diploma in Agriculture

Name of the Employer : The Dean Agricultural College and Research Institute, Killikulam

Place of Posting: -

Pay (Rs.):With NET :Rs. 12,000/- P.M.

Name of the Scheme/Project: Infusion of durable recessive resistance against late leaf spot in TMV (Gn) 13 groundnut through gamma irradiation

Place, Date and Time of Interview: The Dean,AC & RI, TNAU, Killikulam 30.08.2022,09.00 a.m.


Click here to join Whatsapp group for Agri Updates


உங்க தேநீரை ஆரோக்கியமானதாக மாற்ற இந்த பொருட்களில் ஒன்றை அதில் சேர்த்தால் போதுமாம்...!

 ழை வரும்போதெல்லாம் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது தேநீர்தான். இந்த காம்பினேஷனை ஒருபோதும் அடித்துக்கொள்ள முடியாது.

மழை இல்லாவிட்டாலும் அனைவரின் வாழ்க்கையிலும் தேநீர் இன்றியமையாத ஒரு அங்கமாக மாறிவிட்டது. மழைக்காலம் வரும் போதெல்லாம் இருமல், சளி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் உடன் அழைத்து வருகிறது.

மழைக்கால நோய்த்தொற்றுகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழி, உங்கள் வழக்கமான தேநீரில் சில மாற்றங்களைச் செய்வதே ஆகும், இது தேநீரை சுவையாக மாற்றுவது மட்டுமல்லாமல் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இந்த பொருட்களை உங்கள் டீயில் சேர்ப்பதால், தொண்டையில் அரிப்பு ஏற்படுவதைத் தடுப்பதுடன் கடுமையான சளி அல்லது இருமலில் இருந்தும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.


ஏலக்காய்

பச்சை ஏலக்காய் தேநீரில் சேர்க்கப்படும் மிகவும் பொதுவான மசாலா ஆகும். இந்த மசாலா முதலில் ஒரு நசுக்கப்பட்டு பின்னர் தேநீரில் சேர்க்கப்படுகிறது. இது அது வழங்கும் நன்மைகளை பன்மடங்கு அதிகரிக்கிறது மற்றும் டீயை மேலும் நறுமணமாக்குகிறது. ஏலக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, வீக்கத்தை எதிர்த்துப் போராடுகிறது, மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் எடை இழப்புக்கு கூட உதவுகிறது.

இஞ்சி


இஞ்சியையும், இந்தியர்களையும் ஒருபோதும் பிரிக்க முடியாது. அந்த அளவிற்கு இஞ்சி தினமும் நம் உணவுடன் கலந்துள்ளது. உங்களுக்கு பொதுவாக இஞ்சி டீ பிடிக்கவில்லை என்றாலும் மழைக்காலத்திலாவது குடிக்க முயற்சி செய்யுங்கள். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், பொதுவான சளி-இருமல் மற்றும் இரத்த சர்க்கரை அளவையும் குறைக்கும். நீங்கள் இஞ்சியை சிறிய துண்டுகளாக நறுக்கி உங்கள் தேநீரில் சேர்க்கலாம். 5-6 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்கவைத்தப் பின், இஞ்சியானது அதன் அனைத்து சாறுகளையும் தண்ணீரில் வெளியிடும்.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை ஆக்ஸிஜனேற்ற பண்புகளுடன் நிரம்பியுள்ளது மற்றும் பெரும்பாலும் இந்தியாவிற்கு வெளியே தேநீர் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இலவங்கப்பட்டை இயற்கையில் வெப்பமானது மற்றும் உடலை சூடாக வைத்திருக்கிறது, இது பருவமழை மற்றும் குளிர்கால மாதங்களுக்கு ஏற்றதாக அமைகிறது. இதனால்தான் இலவங்கப்பட்டைகிறிஸ்துமஸ் காலக்கட்டத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தேநீரைக் கொதிக்க வைக்கும் போது ஒரு அங்குல இலவங்கப்பட்டையைச் சேர்த்து, டீயில் ஒரு காரமான சுவையையும், கவர்ச்சியான நறுமணத்தையும் சேர்க்கலாம்.

துளசி


துளசி இந்திய தேயிலை தயாரிப்புகளில் கிட்டத்தட்ட ஈடுசெய்ய முடியாத பகுதியாகும். தேநீருடன் துளசியின் சேர்க்கை அத்தகைய கலவையை உருவாக்குகிறது, அது உண்மையில் ஆன்மாவுக்கு திருப்தி அளிக்கிறது. துளசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, மன அழுத்தத்தை குறைக்கிறது, சிறுநீரக கற்களை கரைக்கிறது மற்றும் சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. ஒரு கப் தேநீருக்கு 4-5 துளசி இலைகள் அதன் மேஜிக்கை செய்ய போதுமானது.

அன்னாசி பூ

உங்கள் தேநீர் காரமான சுவையுடன் இருக்க விரும்பினால், நீங்கள் நிச்சயமாக அன்னாசி பூவை முயற்சி செய்ய வேண்டும். இந்த தனித்துவமான இந்திய மசாலா அழகாக இருப்பது மட்டுமல்லாமல், சுவாச பிரச்சனைகளுக்கு சிகிச்சையளித்தல், செரிமானத்திற்கு உதவுதல் மற்றும் பூஞ்சை தொற்றுகளைத் தடுப்பது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. இது தேநீரில் ஒரு தீவிர லைகோரைஸ் சுவையை சேர்க்கிறது மற்றும் இலவங்கப்பட்டை, பச்சை ஏலக்காய், துளசி மற்றும் இஞ்சி ஆகியவற்றுடன் நன்றாக ஜெல் செய்கிறது, அதாவது மசாலா டீ தயாரிக்க இந்த பொருட்கள் அனைத்தையும் சேர்க்கலாம்.


Click here to join whatsapp group for daily health tip

சாமானியர்களுக்கு உதவும் சீட்டு எனும் சேமிப்பு

 இந்தியாவில், அதுவும் தென்னிந்தியாவில் தோன்றிய சிறப்பான நிதி சேமிப்பு திட்டம் தான் சிட்பண்ட்ஸ். இந்த அமைப்பு பண்டமாற்றுக் காலத்திலிருந்து இயங்கிக் கொண்டிருப்பது என்பது வியப்புக்குரியது. இத்தகைய சேமிப்பு திட்டத்தை பற்றி சிட் பண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பின் செயலாளர் சிற்றரசு கூறியதாவது.



 பண்டமாற்று காலத்திலேயே சேமிப்புக்காகவும் சிலரின் அவசர தேவைக்கு உதவுவதற்காகவும் இந்த அமைப்பு வழக்கத்தில் இருந்ததை அறிய முடிகிறது. நாணயம் பணம் புழக்கத்திற்கு வந்த பின்பு சிட் பண்ட் கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பே செயலுக்கு வந்திருப்பதை வரலாற்று ஆவணங்கள் மூலம் அறிய முடிகிறது.

 1894-ம் ஆண்டு ஆவணங்கள் மற்றும் 1934-ம் ஆண்டு திருவாங்கூர் சிட்ஃபண்ட்ஸ் சட்டம் மூலம் இத்தகைய நிதி அமைப்பு சட்டத்தால் முறைமை படுத்தப்பட்டு வந்துள்ளது. 

 சுதந்திரம் அடைந்து மாகாணங்கள் தனித்தனியாக உருப்பெற்ற உடன் 1961-ம் ஆண்டு சிட் பண்ட் சட்டம் தமிழ்நாட்டில் இயற்றப்பட்டது. மேலும் செம்மைப்படுத்தி சீர்படுத்த மத்திய அரசு 1982-ம் ஆண்டு சிட்ஃபண்ட் சட்டத்தை கொண்டு வந்தனர். இது இந்தியா முழுமைக்கான சட்டமாக இருந்தது. இதை அமல்படுத்தும் அதிகாரம் மாநிலங்களுக்கு இருந்தது. மாநில அரசின் பதிவு துறையே இதையும் கவனித்துக் கொள்கிறது, இவ்வேளையை செய்பவரை ரிஜிஸ்டார் ஆப் சீட்ஸ் என அழைக்கப்படுகிறார்.

 சிட் பண்ட் நிறுவனம் பெரும்பாலும் பிரைவேட் லிமிடெட் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது. சிட்டு நிறுவனம் புதிதாக ஒரு சீட்டை ஆரம்பிக்க வேண்டும் என்றால் எவ்வளவு தொகைக்கு சீட் ஆரம்பிக்க உள்ளார்களோ அந்த குறிப்பிட்ட தொகையை வைப்புத் தொகையாக ஆர்பிஐ வங்கியில் செலுத்தி சீட்டு நடத்த அனுமதி பெற வேண்டும் அதற்கு பின்னர் எவ்வளவு நபர்கள் அந்த சீட்டிற்கு தேவையோ அத்தனை நபர்களை சேர்த்த பின்னால் அந்த சீட்டை ஆரம்பிப்பதற்கு அனுமதி பெற்றே சீட்டை ஆரம்பிப்பார்கள். இதனால் நிறுவனங்கள் நடத்துகின்ற சீட்டுகளில் சேர்பவர்களுக்கு பாதுகாப்பு இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

சீட்டு நிறுவனங்கள் சட்டப்படி வட்டிக்கு பணம் கொடுப்பதோ வைப்புத் தொகையாக பணத்தைப் பெற்றுக் கொண்டு வட்டிக் கொடுப்பதோ கூடாது என சட்டம் உள்ளது. இதை சரியாக புரிந்து கொள்ளாமல் வட்டிக்கு பணம் கொடுக்கின்ற நிறுவனங்கள் இழப்புக்கு உள்ளாகும் போது அதை சீட்டு நிறுவனங்கள் என்ற தவறான புரிதலில் இருந்து மக்கள் இப்பொழுது பெருமளவு விழிப்புணர்வு பெற்றுள்ளனர் என்பது வரவேற்கத்தக்கது. ஏழை எளிய மக்கள் முதல் பெரு முதலாளிகள் வரை அனைவருக்கும் உதவும் வகையில் இருப்பதே இதன் சிறப்பு.

 வங்கிகள் அரசு நிதி நிறுவனத்திலிருந்து பணத்தைப் பெற்று பொதுமக்களுக்கு கடன் கொடுத்து உதவுகிறது. ஒரு வகையில் பார்த்தால் சீட்டு கம்பெனிகள் அரசு நிதி நிறுவனத்தில் இருந்து பணம் கடனாக பெறாமல் தாங்கள் வைப்பு நிதியாக அரசு நிதி நிறுவனத்திற்கு செலுத்தி விட்டு மக்களுக்கும் குறிப்பாக ஏழை எளிய மக்கள் பயனடையும்படி நிதி உதவி கிடைக்க செய்வதை பாராட்டப்பட வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு எனும் சிற்றரசு அவர்கள், மத்திய அரசு இந்நிறுவனங்களை ஊக்குவிக்கும் வண்ணம் வரி சட்டங்களை மாற்றி அமைத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இத்தகைய நிதி ஆதார அமைப்பு பெரிதும் உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


Click here to join whatsapp group for daily health tip

சுகர் ஜிவ்வென ஏறுகிறதா? சாப்பிட்ட பிறகு 2 நிமிடம் இதைப் பண்ணுங்க!

 ம் தினசரி பிஸியான வாழ்க்கையில் இப்போதெல்லாம் சாப்பிடுவதே ஒரு பெரிய வேலையாக மாறிவிட்டது. நம் முன்னோர்கள் எவ்வளவு வேலை இருந்தாலும், தவறாமல் உணவருந்திய பிறகுதான், மற்ற வேலைகளை பார்ப்பார்கள். ஆனால், இன்று நாம், மற்ற வேலைகளை பார்த்துவிட்டு, நேரம் கிடைத்தால் தான் சாப்பிடுகிறோம்.

ஒருநாளில் உங்கள் ஆரோக்கியத்துக்காக அவசியம் சில நிமிடங்களை நீங்கள் ஒதுக்க வேண்டும். இங்கு ஒரு ஆய்வு, உங்கள் உணவுக்குப் பிறகு சிறிது நடக்க வேண்டும் என்று கூறுகிறது. அப்படி செய்வதால், டைப் 2 நீரிழிவு நோய் வராமல் நீங்கள் தடுக்கலாம்.

உணவு உண்ட உடனேயே சோம்பேறித்தனமாக இருப்பது வறுமையை வரவழைக்கும் என்று பெரியவர்கள் கூறுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஷடா-பாவலி (Shata- 100, Pavali- Steps) என்பது ஒரு பழங்காலக் கருத்தாகும், எந்த உணவுக்குப் பிறகும் குறைந்தபட்சம் 100 படிகள் மெதுவாக நடக்க வேண்டும்.

இரண்டு நிமிட நடைப்பயிற்சி  உங்கள் இரத்த சர்க்கரை அளவுகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் மற்றும் வகை 2 நீரிழிவு நோயைத் தடுக்கலாம் என்று இப்போது புதிய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

ஏழு ஆய்வுகளின் மெட்டா பகுப்பாய்வு ஸ்போர்ட்ஸ் மெடிசின் இதழில் வெளியிடப்பட்டது.

மிதமான- தீவிர நடைபயிற்சி, போன்றவற்றுடன் ஒப்பிடும்போது நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதன் விளைவுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

ஏழு ஆய்வுகளில் இரண்டில் நீரிழிவு மற்றும் நீரிழிவு இல்லாத பங்கேற்பாளர்கள் அடங்குவர். மீதமுள்ள ஐந்து பேர் சர்க்கரை நோயின் வரலாறு இல்லாத பங்கேற்பாளர்களை உள்ளடக்கியிருந்தனர். அதில் உணவருந்திய பிறகு, சில நிமிடங்கள் மெதுவாக நடப்பது கூட இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க போதுமானது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

குறிப்பாக, சாப்பிட்ட பிறகு 60 முதல் 90 நிமிடங்களுக்குள் நடப்பது (இரத்தத்தில் சர்க்கரையின் அளவு உச்சத்தில் இருக்கும் போது) உட்கார்ந்து அல்லது நிற்பதை விட இரத்தத்தில் சர்க்கரை அளவுகளில் படிப்படியான மாற்றங்களுடன் தொடர்புடையது.

ஹூஸ்டன் மெதடிஸ்ட் மருத்துவமனையில் தடுப்பு இருதய மருத்துவராக கெர்ஷா பட்டேல், நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிறிய காரியமும் ஒரு சிறிய அடியாக இருந்தாலும் பலன் தரும் என்று கூறுகிறார். உணவுக்குப் பிறகு நடைபயிற்சி, மிதமான உடற்பயிற்சி  செய்வதால், சாப்பிட்ட பிறகு இரத்த சர்க்கரையின் அதிகரிப்பைக் குறைக்கலாம் என்று ஆய்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில், இது சிறந்த குளுக்கோஸ் கட்டுப்பாட்டாக இருக்கும், இது நீண்ட காலத்திற்கு, நோயின் சிக்கல்களைக் குறைக்கும். எனினும், உடற்பயிற்சியின் நேரம் முக்கியமானது.

உணவுக்கு பிறகு, ஒன்றிலிருந்து ஒன்றரை மணிநேரத்தில் நடைபயிற்சி செய்வது பயனுள்ளதாக இருக்கும்.  ஏனெனில் அப்போதுதான், இரத்த ஓட்டத்தில் இரத்த சர்க்கரை அளவு உச்சத்தை அடையும்.

அதேநேரம் சாப்பிட்ட பிறகு உடனே தீவிரமாக உடற்பயிற்சி செய்வது சில அஜீரணம் மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சில சமயங்களில் ஒவ்வொரு வாரமும் 150 நிமிட மிதமான தீவிர உடல் செயல்பாட்டை செய்வது கடினமாக இருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில், வீட்டை சுத்தமாக வைத்திருப்பது, சமைப்பது, அல்லது சமையலறையை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்யலாம்.

எல்லாவற்றையும் விட உங்கள் ஆரோக்கியம் மதிப்புமிக்கது. எனவே உங்கள் உடல்நலத் தேவைகளிலும் கவனம் செலுத்த சில வழிகளைக் கண்டறியவும்.

Click here to join whatsapp group for daily health tip

உட்கார்ந்து எழுந்தாலே இடுப்பு கடுமையாக வலிக்கிறதா..? இந்த பிரச்சனை காரணமாக இருக்கலாம்...

சிலர் உட்கார்ந்து எழுந்தாலே இடுப்பை பிடித்துக்கொண்டே எழுவார்கள். காரணம் இடுப்பில் அவ்வளவு வலி இருக்கும். ஆனால் இதை பலரும் சாதாரணமாக கடந்துவிடுவார்கள். உண்மை என்னவெனில் இப்படி நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும்போதோ அல்லது நிற்கும்போதோ இடுப்பு வலி ஏற்படுவது இயல்பானது அல்ல. இது ஒரு தீவிர பிரச்சனையின் அறிகுறியாகவும் இருக்கலாம். தொடர்ச்சியாக வேலை செய்வது அல்லது ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பது அல்லது மோசமான தோரணை இடுப்பு வலியை அதிகரிக்கிறது.



சில நேரங்களில் இந்த வலி இரண்டு இடுப்புக்கு பதிலாக ஒரு இடுப்பில் ஏற்படும். வயது ஏற ஏற இடுப்பு வலி அதிகரிப்பது இயற்கை. சில நேரங்களில் இந்த வலி அதிகமாகி அறுவை சிகிச்சை கூட செய்ய வேண்டியிருக்கும். சில நேரங்களில் காயம் அல்லது திரிபு கூட இடுப்பு வலிக்கு காரணமாகிறது. அதாவது மூட்டுவலி காரணமாக, மூட்டுகளின் குருத்தெலும்பு சேதமடைகிறது. இது இடுப்பு வலிக்கு வழிவகுக்கும். இப்படி இடுப்பு வலிக்கான முக்கியமான சில பொதுவான காரணங்கள் என்ன என்பதை காணலாம்.

மோசமான தோரணை : 

ஹெல்த்லைன் படி, இடுப்பு வலிக்கு பல காரணங்கள் இருக்கலாம். இதில் மோசமான தோரணையின் அமர்வது அல்லது நடப்பது பெரிய காரணம். அலுவலக வேலையாக இருந்தாலும் சரி, லாங் டிரைவ் செய்வதாக இருந்தாலும் சரி, இருக்கை மோசமாக இருந்தால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இடுப்பு மற்றும் முதுகுக்கு சப்போர்ட் இல்லாமல் உட்கார்வதால், இடுப்பு மீது அதிக அழுத்தம் கொடுக்கப்படும். இதன் காரணமாக இடுப்பு வலி பிரச்சனை இருக்கலாம்.



சேதமடைந்த இடுப்பு மூட்டுகள் : 

காலின் பெரிய எலும்பை இடுப்பு மூட்டுகளில் சரியாக இணைக்காத போது இந்த பிரச்சனை ஏற்படுகிறது. எலும்புகளுக்கு இடையே உள்ள குருத்தெலும்பு சேதமடைந்தால் அல்லது சேதமடையும் போது, ​​இடுப்பு வலி பிரச்சனை தொடங்குகிறது. இது நிகழும்போது, ​​சில நேரங்களில் பாதங்களில் கடுமையான வலி ஏற்படலாம். பல சமயங்களில், உட்கார்ந்து எழும் போது, ​​கடுமையான வலியை உண்டாக்கும்.



Click here to join whatsapp group for daily health tip

ஓய்வுபெற்ற கோடீஸ்வரர்களிடமிருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடங்கள்.!

 நீங்கள் கோடீஸ்வரராக விரும்புகிறீர்களா.? அதிக பணத்தில் வாழ்வில் மகிழ்ச்சியை அனுபவிக்க விரும்புகிறீர்களா.? ஆடம்பர மற்றும் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க ஆசையா.? இந்த கேள்விகளுக்கு மாற்று கருத்து இல்லாமல் ஆம் என்ற பதில் தான் பெரும்பாலும் வரும்.



ஆனால் பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் பலர், தங்கள் வாழ்வில் மற்ற எல்லா விஷயங்களுக்கும் பணத்தை ஆடம்பரமாகச் செலவழிப்பதை விட, அதை பாதுகாப்பது மற்றும் சேமிப்பதன் மதிப்பை அறிவார்கள். நீங்கள் நினைப்பது போல எல்லா கோடீஸ்வரர்களும் ஆடம்பர பொருட்கள், தனியார் விமானங்கள், ஆடம்பர அல்லது சொகுசு கார்கள் போன்றவற்றுக்காக தங்கள் பணத்தை செலவழிப்பதில்லை. மாறாக பணத்தை எப்படி, எதற்காக செலவழிக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்,குறிப்பாக ஓய்வு பெற்ற கோடீஸ்வரர்கள். ஓய்வு பெற்ற கோடீஸ்வரர்களிடமிருந்து நீங்கள் கற்று கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை இங்கே பார்க்கலாம்...

அதி ஆடம்பர வாழ்க்கையை தவிர்க்க வேண்டும்:

நீங்கள் இப்போது ஒரு கோடீஸ்வரராக இருந்தாலும் சரி லட்சாதிபதியாக இருந்தாலும் சரி எப்போதுமே மிகவும் ஆடம்பர வாழ்க்கையை வாழாமல் இருப்பது நல்லது. அதிலும் நீங்கள் பணம் சம்பாதிக்கும் தொழில்களில் இருந்து ஓய்வு பெற்று விட்டீர்கள் என்றால் ஆடம்பர வாழ்க்கை என்பதை முற்றிலும் ஒதுக்கி வைப்பது நல்ல முடிவாக இருக்கும். இதுவே பல ஓய்வு பெற்ற கோடீஸ்வரர்களின் கருத்து.

செலவுகளை கண்காணிக்க வேண்டும்:

உங்களிடம் அளவில்லா பணம் இருக்கிறது என்றால் அதை கணக்கு பார்க்காமல் கண்டமேனிக்கு செலவு செய்யவே தோன்றும். இது இயல்பு என்றாலும், உங்கள் செலவுகளைக் கண்காணித்து, நிலையான வரவு - செலவு திட்டத்தை பின்பற்றுவது அவசியம். இந்த பழக்கம் நீங்கள் முக்கியமான ஒன்றை வாங்க திட்டமிடும் போது அல்லது முக்கிய காலகட்டத்தில் நிதி பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க உதவும்.

உங்கள் திறன்களில் முதலீடு..

உங்களிடம் ஒரு குறிப்பிட்ட ஸ்கில், மைன்ட்செட் மற்றும் பிரில்லியன்டாக செயல்படும் திறன்கள் இருந்தால், உங்களுக்கான சிறந்த எதிர்காலத்திற்காக அவற்றில் முதலீடு செய்யலாம். சிறந்த கல்வி பட்டங்கள் பெற மற்றும் நிலையான நிதி நிலைமையுடன் வாழ்க்கையை கழிக்க இது உதவும்.

நெருங்கிய உறவின் ஆதரவு:

பல மில்லியனர்கள் தாங்கள் இந்த அளவு உச்சம் தொட்டதற்கு தங்கள் மனைவி அல்லது பார்ட்னரின் ஆதரவு முக்கிய காரணமாக இருந்ததாக தெரிவித்து உள்ளனர். எனவே கோடீஸ்வரராக வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அல்லது தற்போது கோடீஸ்வரராக இருந்தாலும் உங்களுக்கும் உங்கள் பார்ட்னருக்கும் ஒரே மாதிரியான குறிக்கோள்கள் இருப்பது பணத்தை விட போதுமான ஆதரவு மற்றும் வழிகாட்டலை தரும்.

இலக்குகளில் கவனம்..

வாழ்வில் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதில் எப்போதுமே கவனமாக இருக்க வேண்டும். அதிர்ஷ்டம், செல்வசெழிப்பு மற்றும் மிக மகிழ்ச்சியான கலர்ஃபுல் வாழ்வை வாழ உங்கள் இலக்குகள் மீதான கவனம் பெரிதும் உதவும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஓய்வும் அவசியம்:

நிறைய பணம் சம்பாதிக்க கடினமாக உழைக்கிறீர்கள் என்றால் சில சம்யங்களில் ஓய்வு என்பதும் அவசியமாகிறது. பணத்தை சம்பாதிக்க அல்லது சேமிக்க எவ்வளவு கவனம் செலுத்துகிறீர்களோ உங்கள் வாழ்க்கையை வேடிக்கையாக மற்றும் மகிழ்ச்சியாக வைத்து கொள்வதிலும் கவனம் செலுத்துங்கள். ஏனென்றால் வாழ்வில் சமநிலை என்பது முக்கியமான ஒன்று.

குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்பட என்ன காரணம்..? எப்படி எடையை குறைக்கலாம்..?

 உடல் பருமன் என்பது எளிதாக கடந்து செல்ல கூடிய ஒன்று அல்ல, தீவிரமாக எடுத்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று. ஏனென்றால் காலப்போக்கில் நீரிழிவு, இதய நோய் மற்றும் சில புற்றுநோய்கள் உள்ளிட்ட பிற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். நவீன வாழ்க்கை முறை காரணமாக பல குழந்தைகள் இன்று உடல் பருமன் அல்லது அதிக எடையுடன் காணப்படுகின்றனர்.

இவர்களின் மன மற்றும் உடல் நலனை பாதிக்கும் பல நாள்பட்ட உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயம் உடல்பருமனால் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு தகுந்த உணவு மற்றும் வாழ்க்கை முறை பழக்கங்களை கற்று கொடுப்பது உடல் பருமனை குறைக்க நல்ல வழி. அதே போல சில குழந்தைகள் இப்போதெல்லாம் வயது மீறிய வளர்ச்சியுடன் காணப்படுகிறார்கள் என்பதால், அதிக எடை கொண்ட குழந்தைகளுக்கு அதிக கொழுப்பு இருக்கிறதா என்பதை மருத்துவ சோதனை மூலம் கண்டறிய வேண்டும். குழந்தை பருவத்தில் ஏற்படும் உடல் பருமன் மற்றும் இந்த சிக்கலுக்கான தீர்வுகளை நிபுணர்கள் விளக்குகிறார்கள்.

குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படுவதற்கான காரணம்...

குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்பட வாழ்க்கை முறை தேர்வுகள், உளவியல் சிக்கல்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை பின்னணி உள்ளிட்டவை சில காரணங்கள். உடல் பருமன் கொண்ட நபர்கள் அடங்கிய குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் உடல் பருமனாக இருக்க வாய்ப்புகள் அதிகம். தவிர உடற்பயிற்சியின்மை, பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்பட அதிகம் சாப்பிடுவது உள்ளிட்ட காரணங்களால் உடல் பருமன் ஏற்படுகிறது. ஊட்டச்சத்து மதிப்பு இல்லாத அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு கொண்ட மோசமான உணவுகள், துரித உணவுகள், குளிர்பானங்கள், மிட்டாய்களும் குழந்தைகளின் எடை அதிகரிப்பிற்கு காரணமாக அமையும்.

குழந்தை பருவ உடல் பருமனுடன் தொடர்புடைய உடல்நல அபாயங்கள்..

குழந்தை பருவ உடல் பருமனுடன் நீரிழிவு, இதய நோய் மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட உடல்நல அபாயங்கள் மிகவும் தொடர்புடையவை. மேலும் சில கீழே..


நரம்பு மண்டலம்:

அதிக எடை கொண்டவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 2 மடங்கு அதிகம். ஏனெனில் அதிக எடை இதயத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி ரத்த ஓட்டத்தை பாதிக்கிறது.

சுவாச அமைப்பு:

கழுத்து பகுதியை சுற்றி சேரும் கொழுப்பு காரணமாக காற்றுப்பாதைகள் மிகவும் சிறியதாகி, சுவாசிப்பதை கடினமாக்குகிறது, குறிப்பாக இரவில். இது தூக்கத்தில் மூச்சுத்திணறலை ஏற்படுத்தும், மரணத்திற்கு கூட வழிவகுக்கும். தூக்கத்தில் மூச்சுத்திணறலை உண்டாக்கும் OSA நிலை இளம் குழந்தைகளையும் பாதிக்கலாம்.

இதயம்:

உடல் பருமன் கொண்டவர்களின் இதயம் உறுப்புகளுக்கு ரத்தத்தை பம்ப் செய்ய கடினமாக உழைக்க வேண்டும். இதன் காரணமாக உயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்தும் உயர் ரத்த அழுத்தம் பக்கவாதத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.

குழந்தைகளின் உடல் பருமனை எவ்வாறு குறைக்கலாம்.?

உடல் பருமனான குழந்தைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி டயட்டில் வைக்க கூடாது, ஏனெனில் டயட் அவர்களின் வளர்ச்சிக்கு போதுமான ஆற்றல்களை வழங்காது.

* எடையை குறைக்க வேண்டும் என்பதை விட நல்ல ஆரோக்கிய உணவில் கவனம் செலுத்தினாலே படிப்படியாக உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம்.

* பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் ஆரோக்கியமான தின்பண்டங்களை கொடுக்க வேண்டும். குறைவான ஊட்டச்சத்து மதிப்பை கொண்டுள்ள உணவுகளை அவர்களுக்கு கொடுப்பதை தவிர்த்து, காய்கறி மற்றும் பழங்களை அவர்கள் உணவும் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* குழந்தைகளிடம் உடற்பயிற்சி அல்லது உடல் செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். நடைப்பயிற்சி, சைக்கிளிங், சுறுசுறுப்பான விளையாட்டுகள் போன்ற உடல் செயல்பாடுகளில் அவர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க குடும்ப உறுப்பினர்களும் அவர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும்.

* குறிப்பாக அதிக எடை கொண்ட குழந்தைகளை தனிமைப்படுத்தாமல் இருக்க வேண்டும், இது மனச்சோர்வு மற்றும் தனிமைக்கு வழிவகுக்கும்.


Click here to join whatsapp group for daily health tip

மழை நீரை குடிப்பதும் ஆரோக்கியமற்றதா..? ஆபத்து என எச்சரிக்கும் ஆய்வு..

 

இயற்கையின் கொடையான மழைநீரை முறையாக சேமித்து வைக்காமல், ‘விண்ணின் மழைநீர் மண்ணின் உயிர் நீர்’ என விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். போதாக்குறைக்கு உலகம் முழுவதும் மாறிவரும் காலநிலை மாற்றத்தால், உயர்ந்து வரும் வெப்பம் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்ககூடும் என்ற எச்சரிக்கையும் எழுந்துள்ளது. பனிப்பாறைகள் உருகுவது, கடல் சீற்றம், அதிகரிக்கும் வெப்பநிலை, காற்றில் பசுமை வாயுக்கள் கலப்பு உயருவது, புற ஊதாக்கதிர் வீச்சு போன்ற பிரச்சனைகள் மனித இனத்தை ஏற்கனவே அச்சுறுத்தி வரும் நிலையில், சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

வானத்தில் இருந்து பொழியும் மழை நீரே மிகவும் சுத்தமானது, அதனை முறையாக சேமித்து குடிப்பது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தரும் என மக்கள் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில், மழை நீரை குடிப்பது மிகப்பெரிய ஆபத்து என ஆய்வுக்கட்டுரை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின்படி, மழை நீரில் பிஎஃப்ஏஎஸ் எனப்படும் நச்சு இரசாயனங்கள் அதிக அளவில் கலந்துள்ளதால், பூமியின் அனைத்து பகுதிகளிலும் பொழியும் மழை நீரை குடிப்பது பாதுகாப்பானது கிடையாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Per- and பாலிஃப்ளூரோஅல்கைல் (poly-fluoroalkyl) எனப்படும் பேக்கேஜிங், ஷாம்பு அல்லது ஒப்பனை பொருட்களில் காணப்படும் ரசாயனம் மழைநீரில் காணப்படுவது தெரியவந்துள்ளது. மேலும் ‘நிரந்தர ரசாயனங்கள்’ என அழைக்கப்படும் இவை காலப்போக்கி சிதைவடைவதும் கிடையாது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்ட ஆய்வின் முதன்மை ஆசிரியருமான இயன் கசின்ஸ் கூறுகையில், "நாங்கள் எடுத்த அளவீடுகளின்படி, பூமியில் எந்த பகுதியில் பொழியும் மழை நீரும் குடிப்பதற்கு பாதுகாப்பானதாக இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.



2010 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி, அண்டார்டிகா அல்லது திபெத்திய பீடபூமி போன்ற மனிதர்கள் குறைவாக வசிக்கும் பகுதிகளில் கூட அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அளவை விட மழைநீரில் அதிக கெமிக்கல் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. மழைநீரில் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் பாதுகாப்பு அளவை விட 14 மடங்கு அதிக கெமிக்கல் இருப்பதால், அதனை நேரடியாக குடிப்பது நல்லதல்ல என எச்சரிக்கப்பட்டுள்ளது

மழைநீரை அருந்துவது கருவுறுதல், குழந்தைகளின் வளர்ச்சி தாமதங்கள், உடல் பருமன் அல்லது சில புற்றுநோய்கள் (புரோஸ்டேட், சிறுநீரகம் மற்றும் டெஸ்டிகுலர்), கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் பூமியில் தொடர்ந்து அதிகரித்து வரும் மாசால், கடந்த 20 ஆண்டுகளாக மழை நீரும் அதனை மனிதர்கள் நேரடியாக குடிக்கும் தன்மையை படிப்படியாக இழந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் ஒரே ஒரு ஆறுதல் தரும் செய்தி என்னவென்றால், சுற்றுச்சூழலின் PFAS அளவுகள் கடந்த 20 ஆண்டுகளாக ஒரே மாதிரியாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

இந்த ஆய்வின் மூலம் சுற்றுச்சூழல் மிகப்பெரிய அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மழைநீரை நேரடியாக குடிப்பதை தவிர்த்தாலும் ஆறுகள், ஓடைகள், உணவுப் பொருட்களில் கலந்துள்ள மாசில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.


Click here to join whatsapp group for daily health tip

சமீப ஆண்டுகளாக குழந்தைகளிடையே அதிகரித்து வரும் நீரிழிவு நோய் - அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள்.!

 நீரிழிவு நோய் என்பது வயதானவர்களுக்கு மட்டுமே வரும் என்ற எண்ணத்தில் நீங்கள் இருந்தால் அதை மாற்றி கொள்ளுங்கள். ஏனென்றால் நீரிழிவு நோய் அதிலும் குறிப்பாக டைப் 2 நீரிழிவிற்கு கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவு குழந்தைகள் இரையாகி வருகின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளில் குழந்தைகளில் டைப் 2 நீரிழிவு உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் பாதிக்கப்பட்டு வரும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையால், இந்தியா நீரிழிவு நோயின் தலைநகராக ஏற்கனவே கருதப்பட்டுவரும் நிலையில், இந்திய குழந்தைகளும் டைப் 2 நீரிழிவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.



Canada Journal of Diabetes வெயிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, உலகம் முழுவதும் குழந்தைகளில் டைப் 2 நீரிழிவு நோய் சில ஆண்டுகளாக வலுவான அதிகரிப்பை கண்டுள்ளது. ஆப்பிரிக்கா, அரபு, ஆசியா, ஹிஸ்பானிக், பழங்குடியினர் அல்லது தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த குழந்தைகள் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் அதிக ஆபத்தில் உள்ளதாக அந்த அறிக்கை சுட்டி காட்டியுள்ளது. டைப் 1 நீரிழிவு நோய் என்பது ஒரு தன்னுடல் தாக்க நோயாக இருக்கும் நேரத்தில் டைப் 2 நீரிழிவு நோய் என்பது பொதுவாக உடல் பருமன், மோசமான உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளால் ஏற்படுவது ஆகும்.

குழந்தைகளில் டைப் 1 நீரிழிவு மற்றும் டைப் 2 நீரிழிவு...

டைப் 1 நீரிழிவு நோயானது டைப் 2 நீரிழிவு நோய் போல சமீப காலமாக அதிகரித்து வருகிறது, அதே விகிதத்தில் இல்லாவிட்டாலும், ஆண்டுக்கு 3-5% என்ற வீதத்தில் அதிகரிப்பதாக பிரபல மூத்த குழந்தை நல மருத்துவர், டாக்டர். அபிஷேக் குல்கர்னி கூறி இருக்கிறார். இந்தியாவை பொறுத்த வரை 0-14 வயதுக்குட்பட்ட 1 லட்சம் குழந்தைகளில் 3 பேர் டைப்1 நீரிழிவு நோயால் புதிதாக பாதிக்கப்படுவது கண்டறியப்படுகிறது. எனினும் டைப்1 நீரிழிவு நோய்க்கான பரவல் டேட்டாவானது சில குறிப்பிட்ட மாநிலங்களில் 1 லட்சம் குழந்தைகளில் 18 பேர் என கூறுகிறது. இருப்பினும் தற்போது சீரான தேசிய தரவு இல்லை என்கிறார் அபிஷேக் குல்கர்னி. சிகிச்சை பரிந்துரை யூனிட்ஸ்களுக்கு மாதத்திற்கு 5 முதல் 10 புதிய டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகளில் நீரிழிவு நோயின் பொதுவான அறிகுறிகள்..

குழந்தைகளுக்கு ஏற்படும் நீரிழிவு நோயை தடுக்கலாம். அதற்கு குழந்தைகளில் கவனிக்க வேண்டிய நீரிழிவு நோயின் சில அறிகுறிகள் இங்கே.. அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல் அல்லது சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம், அதிகரித்த பசி உணர்வு, திடீர் எடை இழப்பு, சோம்பல், எரிச்சல் அல்லது நடத்தை மாற்றங்கள், மங்கலான பார்வை, வயிற்று வலி, அடிபட்டால் காயங்கள் மிக மெதுவாக ஆறுவது. மேற்காணும் அறிகுறிகளில் ஏதாவது ஒன்றை குழந்தைகள் வெளிப்படுத்தினால் உடனே மருத்துவரிடம் அழைத்து சென்று குழந்தைகளுக்கு இரு டைப் நீரிழிவு நோய்க்கான பரிசோதனையையும் பெற்றோர்கள் மேற்கொள்ள அறிவுறுத்துகிறார் அபிஷேக் குல்கர்னி.

சிகிச்சை என்ன?

- டைப் 1 நீரிழிவு நோய்க்கு பல தினசரி டோஸ் ஊசிகள் அல்லது இன்சுலின் பம்ப்கள் வழியாக தொடர்ச்சியான இன்சுலின் உட்செலுத்துதல் மூலம் பாசல் போலஸ் இன்சுலின் சிகிச்சை தேவைப்படுகிறது.

- டைப் 2 நீரிழிவு நோயை மெட்ஃபோர்மின், ஜிஎல்பி1 ரிசெப்டர் அனலாக்ஸ் உள்ளிட்டவற்றுடன் உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலம் திறம்பட நிர்வகிக்க முடியும்.

ஆன்டி-டயபடிக் டயட்..

டைப் 1 நீரிழிவு நோய் உள்ள குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வதுடன் குறிப்பாக குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகளை பின்பற்ற வேண்டும். டைப் 2 நீரிழிவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் மேற்கூறிய டயட்டை பின்பற்றலாம். இருப்பினும் உடல் பருமன் மற்றும் அதிக எடையை கட்டுப்படுத்த உணவுமுறையின் அடிப்படையில் மொத்த கலோரி உட்கொள்ளலை குறைக்க வேண்டியிருக்கலாம். தினசரி 45 நிமிட மிதமான தீவிரம் கொண்ட பயிற்சிகள் அல்லது வாரத்தில் குறைந்தது 5 நாட்களுக்கு விளையாட்டு 2 வகை நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. நீரிழிவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆரோக்கியமான உணவு கொள்கைகளை பெற்றோர்களின் கண்காணிப்பில் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் நிபுணர்கள்.

Click here to join whatsapp group for daily health tip

ஹார்ட் அட்டாக் வருவதற்கான முக்கிய காரணங்கள் - ஆய்வில் வெளியான தகவல்..!

 ஸ்டிரோக் அல்லது ஹார்ட் அட்டாக் என்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பிரச்சனையாகும். உலக அளவில் மிக அதிகப்படியான மரணங்கள் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். 

ஸ்டிரோக் ஏற்படும்போது தோள்கள் பலவீனம் அடைவது, முகம் இழுப்பது மற்றும் பேச்சு குளறுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஹார்ட் அட்டாக் ஏற்படும்போது நெஞ்சுப் பகுதியில் வலி, உடலின் மேல் பகுதியில் வலி, மூச்சுத்திணறல் மற்றும் குளிர்ச்சியான வியர்வை, குமட்டல், தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் தென்படும். சைலண்ட் கில்லராக இருக்கும் இந்த இரண்டு நோய்களையும் முறியடிக்க வேண்டும் என்றால் இதன் தன்மை என்ன, எப்படி பாதிக்கும் என்பதை நாம் தெறிந்து கொள்ள வேண்டும்.



ஏன் இது கவலைக்குரிய விஷயம்? : 

இந்த இரண்டு பிரச்சனைகளுமே ஆரம்பகால அறிகுறிகள் எதையும் காட்டாது. லேசான அறிகுறிகள் தென்பட்டாலும் அதை புறக்கணிக்கும் பட்சத்தில் உயிரிழப்பு ஏற்படக் கூடும். சிலர் அறிகுறிகளை உணர்ந்தாலும், அவை வேறு நோய்களுக்கான பாதிப்புகள் என தவறாக புரிந்து கொள்கின்றனர்.

அபாயம் அதிகரிப்பதற்கான காரணங்கள் : 

சமூகத்தில் இருந்து விலகி நிற்பது மற்றும் தனிமை உணர்ச்சி ஆகியவை காரணமாக ஹார்ட் அட்டாக் மற்றும் ஸ்டிரோக் ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்பு 30 சதவீதம் அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

யாருக்கெல்லாம் அபாயம் அதிகம்? : 

ஓய்வு பெறுதல் அல்லது வயது முதிர்வு மற்றும் அன்புக்குரியவர்களை இழப்பது போன்ற காரணங்களால் சமூகத்தில் இருந்து விலகியிருக்க வேண்டிய சூழல் மற்றும் தனிமை உணர்ச்சி ஆகியவை ஏற்படுகின்றன. வயதானவர்கள் மட்டும்தான் என்றில்லை. இப்போதெல்லாம் 18 முதல் 22 வயது வரையிலான இளைஞர்கள் கூட தனிமை உணர்ச்சிக்கு ஆளாகின்றனர்.

சமூக விலகல் மற்றும் தனிமை ஆகியவற்றின் வேற்றுமை : 

இந்த இரண்டும் ஒன்றும்போல தோன்றினாலும் இவற்றுக்கு இடையே வேறுபாடுகள் உண்டு. சிலர் சுய விருப்பத்தின் அடிப்படையில் மற்றவர்களிடம் இருந்து விலகி இருந்தாலும் தன்னைத்தானே மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை செய்து கொள்வார்கள். அதே சமயம், சிலர் சமூகத்துடன் இணைந்து பழகினாலும் கூட தனக்குள் கவலைகளை ஒழித்து வைத்துக் கொள்வார்கள்.

நீங்கள் என்ன செய்ய வேண்டும் : 

சமூக விலகல் மற்றும் தனிமை உணர்வு ஆகிய இரண்டையும் மிகவும் பிரச்சனைக்குரிய விஷயங்களாக அணுக வேண்டும். மருத்துவர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளிடம், அவர்கள் எந்த அளவுக்கு சமூகத்தோடு இணைந்து பழகுகின்றனர் அல்லது தனிமையில் இருக்கின்றனர் என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.

வாழ்வியல் மாற்றங்கள் : 

உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியமானது. ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வதுடன் தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியம் ஆகும். குறிப்பாக, புகைப்பிடித்தல் அல்லது மது அருந்துதல் போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும்.

 Click here to join whatsapp group for daily health tip