Showing posts with label Educationalnews. Show all posts
Showing posts with label Educationalnews. Show all posts

NHIS Family Details Update - களஞ்சியம் App ல் 25.08.2026 க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்

  

NHIS Family Details Update

தற்போது களஞ்சியம் செயலியில் (KALANJIYAM APP) குடும்ப உறுப்பினர்களை இணைக்கும் செயலி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது இதில் பதிவேற்றம் செய்யப்படும் உறுப்பினர்கள் மட்டுமே NHIS 2026 கார்டில் பெயர் சேர்க்கப்படும் என்பதால் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் மிக அவசரமாக தங்களது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை அவர்களின் புகைப்படங்களோடு 25-08-2026க்குள் இதில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
சேலம் மாவட்ட கருவூல அலகு
வழிமுறைகள்
1. KALANJIYAM APP பதிவிறக்கம் செய்யவும். ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப் பட்டுயிருந்தால் KALANJIYAM APP Update செய்ய வேண்டும் 

2. பின்னர் களஞ்சியம் செயலியில் Update Profile பட்டனை அழுத்தி உள்ளே செல்லவும்
3. இதில் Family Member Details / குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் என்பதனை அழுத்தி உள்ளே செல்லவும்

4. இதில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் பட்டியல் இருந்ததால் அதில் புகைப்படத்தை இணைக்க வேண்டும். புதியதாக குடும்ப உறுப்பினர்கள் சேர்க்க விரும்பினால் மேல் பகுதியில் add member என்ற தேர்வினை பயன்படுத்தி வினாக்களுக்கு தங்களிடம் உள்ள உண்மையான தகவல்களை பூர்த்தி செய்து புதிய உறுப்பினரை சேர்க்கலாம் . 

5. புகைப்படத்தை இணைக்க மேலே புகைப்படத்திற்கு அருகில் பேனா படத்தை அழுத்த வேண்டும்

6. அதில் இரண்டு தேர்வுகள் காட்டப்படும் முதலாவது நேரடியாக புகைப்படம் எடுப்பது இரண்டாவது ஏற்கனவே எடுக்கப்பட்ட புகைப்படத்தை Update செய்வது

7. இதில் தங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து புகைப்படத்தை பெறவும் பின்னால் கீழே உள்ள Adjustment பயன்படுத்தி படத்தை தேவையான அளவிற்கு மாற்றி Update செய்யவும்.

**இது மிக மிக அவசரமாக செய்ய வேண்டிய பணி என்பதால் அனைத்து அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 25-08-2026 க்குள் செய்து முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 34 பேருக்கு மருத்துவம் பயில வாய்ப்பு

  


 

hindutamil-prod%2F2026-08-19%2F4lcu36gn%2F1005032

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்ற 34 மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு ஆக.13-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு மூலம் புதுக்கோட்டை மாவட்டம் கைக் குறிச்சியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியில் 7 பேருக்கு எம்பிபிஎஸ் மற்றும் ஒருவருக்கு பிடிஎஸ் என 8 பேருக்கு நிகழாண்டு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதேபோல, கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த 5 மாணவிகளுக்கு எம்பிபிஎஸ், ஒருவருக்கு பிடிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.


இவற்றுடன் சேர்த்து மாவட்டத்தில் மொத்தம் 30 பேருக்கு எம்பிபிஎஸ் படிக்கவும், 4 பேருக்கு பிடிஎஸ் படிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் வீ.ஜோதி மணி கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டு மருத்துவப் படிப்பில் சேர இடம் பெற்ற அரசுப் பள்ளி


மாணவ, மாணவிகள் 34 பேரில் 2 பேரைத் தவிர மற்றவர்கள் அனைவருமே பிளஸ் 2 முடித்துவிட்டு, அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் தனியார் பயிற்சி மையங்களில் படித்து வெற்றி பெற்றுள்ளனர்.


அனைவருமே பிற மாவட்டங்களுக்குச் சென்றுதான் ரூ.2 லட்சத்துக்கும் மேல் செலவிட்டுப் படிக்கின்றனர். எனவே, அரசே மாவட்டந்தோறும் பிரத்யேக நீட் பயிற்சி மையங்களை ஏற்படுத்த வேண்டும். மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உள் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றனர்.


இதுகுறித்து மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம் கூறியதாவது: 2020-ல் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் உள் இடஒதுக்கீடு மூலம் மாவட்டத்தில் 17 பேருக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதேபோல, 2021-ல் 34பேருக்கும், 2022-ல் 26 பேருக்கும், 2023-ல் 19 பேருக்கும் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது.Education


2024-ல் 41 பேருக்கும், 2025-ல் 37 பேருக்கும், 2026-ல் 34 பேருக்கும் என கடந்த 7 ஆண்டுகளில் மொத்தம் 180 பேருக்கு எம்பிபிஎஸ் படிக்கவும், 28 பேருக்குப் பல் மருத்துவம் படிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மட்டும் இதுவரை மொத்தம் 34 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.


தவிர, கால்நடை மருத்துவம், பொறியியல், வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் உயர் கல்வி பயின்று வருகின்றனர். புதுக்கோட்டை அந்த அளவுக்கு கல்வி விழிப்புணர்வு பெற்ற மாவட்டமாக உள்ளது என்றார்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

NEET UG 2026 - Hall Ticket Download - Direct Link

 2025 இளநிலை நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.




மே 3 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது ; தேர்வர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை