Search

இதய நோய்களை தடுக்கும் வேர்க்கடலை

 ஆசியாவில் ‘இஸ்கிமிக் ஸ்ட்ரோக்’ பாதிப்புக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அங்கு வேர்க்கடலை நுகர்வு அதிகமாக இருப்பதே அதற்கு காரணம் என்பதை கண்டறிந்தோம்.



வேர்க்கடலை சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடுகையில், அதனை சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம் அல்லது இதய நோய் ஏற்படும் அபாயம் குறைவு என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

‘‘உணவு பட்டியலில் தினமும் சராசரியாக 4-5 வேர்க்கடலைகளை சேர்ப்பது ‘இஸ்கிமிக் ஸ்ட்ரோக்’கை தடுக்க உதவும் என்று எங்கள் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன’’ என்கிறார், ஆராய்ச்சியாளர், இகேஹாரா. இஸ்கிமிக் ஸ்ட்ரோக் என்பது மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு அல்லது ரத்தம் உறைவது போன்ற பிரச்சினைகளால் ஏற்படும் பக்கவாதமாகும்.

‘‘ஆசியாவில் ‘இஸ்கிமிக் ஸ்ட்ரோக்’ பாதிப்புக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அங்கு வேர்க்கடலை நுகர்வு அதிகமாக இருப்பதே அதற்கு காரணம் என்பதை கண்டறிந்தோம்.

வேர்க்கடலையில் இதய ஆரோக்கியத்துக்கு வலு சேர்க்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதாவது மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து போன்றவை உயர் ரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு போன்ற ஆபத்து காரணிகளைக் குறைப்பதன் மூலம் இதய நோய்களில் இருந்து காக்கின்றன’’ என்கிறார்.

அமெரிக்க இதய அசோசியேஷனின் ஒரு பிரிவான அமெரிக்கன் ஸ்ட்ரோக் அசோசியேஷன் இதழான ‘ஸ்ட்ரோக்’ இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கோடை காலத்தில் தாகத்தை தணிக்கும் வெள்ளரிக்காய் ஜூஸ்





 தேவையான பொருட்கள்:


வெள்ளரிக்காய் - 1
இஞ்சி - சிறிய துண்டு
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
தேன்- 2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
கருப்பு உப்பு - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்

செய்முறை:

வெள்ளரிக்காயை தோலுரித்து, துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

மிக்சியில் நறுக்கிய வெள்ளரிக்காய் துண்டு, இஞ்சி மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி, வடிகட்டி கொள்ளவும்.

வடிகட்டி ஜூஸில் கருப்பு உப்பு, எலுமிச்சை சாறு, தேன் மற்றும் சீரகப் பொடி சேர்த்து கலந்து பரிமாறினால், வெள்ளரிக்காய் இஞ்சி ஜூஸ் ரெடி!!!

Training on "Digital Marketing Skills for Agri-startups" by MANAGE

 MANAGE-Centre for Innovation and Agripreneurship (CIA) is calling applications for the third batch of a 5-Day online training program on “Digital Marketing Skills for Agri-startups” to help Agri-startups develop a sound understanding of digital marketing & implement the same for business enhancement.


The program will cover the following aspects of Digital Marketing:
Web analytics, Social media tools, Marketing through search engines, Search engine optimization, Mobile marketing, Email marketing, Pay per click, Digital display marketing, Content marketing, and other ways of digital marketing.

Applications for the Third Batch are open now. The program will commence in April, 2022. Interested Participants are requested to register themselves. We will not be taking any payments now, however once the payment process starts, we will be contacting the registered applicants.

The program fee is ₹ 2500/- (Rupees Two thousand five hundred only).

You may contact us at 9510691279 or 9642337827 for any further information on the same.

Dr. Saravanan Raj
Director (Agricultural Extension)
National Institute of Agricultural Extension Management (MANAGE)
(An Organization of Ministry of Agriculture & Farmers Welfare, Government of India)
Rajendranagar, Hyderabad- 500 030, INDIA


மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வித்திடும் பழக்கவழக்கங்கள்

 இன்பமும், துன்பமும் கலந்த வாழ்க்கை பயணத்தில் மகிழ்ச்சியான மன நிலையை தக்க வைத்துக்கொள்வதற்கு சில பழக்கவழங்களை கடைப்பிடித்தால் போதும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:


சில சமயங்களில் தற்பெருமை கொள்வது மகிழ்ச்சியை தரும். மனதுக்கும் இதமளிக்கும். ஆனால் அதனை மனதோடு நிலை நிறுத்திக்கொள்ளுங்கள். அது பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஏனெனில் தற்பெருமை உங்கள் தவறுகளை மறக்கடிக்க செய்துவிடும். நீங்கள் செய்வதெல்லாம் சரி என்று எண்ணத் தோன்றும். நாளடைவில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் கெடுத்துவிடும்.

வாழ்க்கை நிலையில்லாதது. எந்த சமயத்தில் எது நடக்கும் என்று கணிக்க முடியாது. எந்த ஒரு சூழலிலும் மன உறுதியை இழக்கக்கூடாது. எதிர்மறையான சிந்தனைகள் மனதில் எழுவதற்கு இடமும் கொடுக்கக் கூடாது. அது மகிழ்ச்சியை கட்டுப்படுத்திவிடும்.

பணம்தான் வாழ்வின் பிரதானம் என்ற எண்ணம் நிறைய பேரிடம் இருக்கிறது. பணக்காரராவதற்காக ஓடி ஓடி உழைத்தாலும் ஒவ்வொருவரும் கோடீஸ்வரராக முடியாது. பணத்தை துரத்தி செல்வது வாழ்க்கையின் பெரும் பகுதியை இழக்க நேரிடும். நெருங்கிய நண்பர்கள், குடும்பம், நிம்மதி என பல விஷயங்களை தியாகம் செய்ய நேரிடும்.

உங்கள் மனதுக்கு பிடித்தமான விஷயங்களை செய்யுங்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று சிந்திப்பதை நிறுத்துங்கள். அவர்கள் எப்படி நம்மை மதிப்பிடுவார்கள் என்று கவலைப்படுவதையும் நிறுத்துங்கள். உங்களை நீங்களே மதிப்பீடு செய்து நிறை, குறைகளை சரிபடுத்துங்கள்.

எளிதில் உணர்ச்சிவசப்படுவதை நிறுத்துங்கள். அது எதிர்மறை சிந்தனை கொண்ட நபராக உங்களை மாற்றிவிடும். பாதுகாப்பற்ற சூழலில் வாழும் உணர்வையும் ஏற் படுத்திவிடும். மகிழ்ச்சியை உணரவே மனம் தடுமாறும்.

கடந்த காலத்தை பற்றி சிந்திப்பதை நிறுத்துங்கள். ஏனெனில் பெரும்பாலானோர் கடந்த காலங்களில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளை அசைபோடுவதில்லை. மனதை வருத்திய விஷயங்களையே நினைத்துப் பார்க்கிறார்கள். அவை தூக்கமில்லாத இரவுகளையும், மன வலிகளையும் மட்டுமே வழங்கும்.

எது நடந்தாலும் அதனை தைரியமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டிருக்க வேண்டும். ஏதேனும் தவறு செய்துவிட்டால் அது பற்றியே சிந்தித்து மனதை காயப் படுத்த வேண்டியதில்லை. அதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகளை பற்றிதான் சிந்திக்க வேண்டும். செய்த தவறில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். இனி அதுபோல் தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

உங்கள் நலனில் அக்கறை கொண்டிருப் பவர்களுடன் மட்டுமே முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நயவஞ்சக எண்ணம் கொண்டிருப்பவர்களிடம் இருந்து விலகியே இருங்கள். அவர்களுடன் நெருக்கத்தை வளர்த்துக்கொள்ளாமல் இருந்தாலே மன அழுத்தத்திற்கு ஆளாக மாட்டீர்கள்.

காதல் தோல்வியை எதிர்கொண்டிருந்தால் மீண்டும் அந்த தருணத்தை ஒருபோதும் நினைத்துப் பார்க்காதீர்கள். ஏனென்றால் அது வெறுப்புணர்வைத்தான் ஏற்படுத்தும்.அதனால் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை.

நீங்கள் பார்க்கும் வேலை உங்களுக்கு மன நிறைவை கொடுக்கவில்லை என்றாலோ, வேலை மீது வெறுப்பு கொண்டாலோ அதிலிருந்து விலகி விடுங்கள். கை நிறைய சம்பளம் கொடுத்தாலும் மகிழ்ச்சியை தரவில்லை என்றால் அந்த வேலையை தொடர்வது அர்த்தமற்றது.

மது, போதைப்பொருள், ஆரோக்கியமற்ற உணவு உள்பட வேறு ஏதேனும் கெட்ட பழக்கவழக்கத்தை கொண்டிருந்தாலும் அதிலிருந்து விடுபடுங்கள். அதன் பிறகு வாழ்க்கையை எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக உணர்கிறீர்கள் என்பது புரியும்.

சிறு வயதிலேயே கண் பார்வை குறைபாடு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்!

 இளம் வயதிலேயே  பார்வை குறைபாடு  ஏற்பட பல காரணங்கள் உள்ளன. கண்பார்வை குறைபாடு என்பது முதியவர்களுக்கு இருக்கும் பிரச்சனையாக இருந்த காலம் போய், இப்போது இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடையே கூட ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. மோசமான வாழ்க்கை முறை, தவறான முறையில் படிப்பது, அதிக நேரம் டிவி பார்ப்பது அல்லது மொபைலைப் பயன்படுத்துவது போன்றவை இதற்கு முக்கியக் காரணங்கள் என்று நம்பப்படுகிறது.


 கண்பார்வை குறைபாட்டிற்கான அறிகுறிகள்

அடிக்கடி தலைவலி, மங்கலான பார்வை மற்றும்  கண்கள் சிவத்தல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இது உங்கள் கண்பார்வையில் குறைபாடு உள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும். அத்தகைய சூழ்நிலையில், இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.

பார்வை குறைபாடு ஏற்படக் காரணம்

பல காரணங்களால் கண்பார்வை குறைபாடு ஏற்படும் நிலையில், நரம்பியல் பிரச்சனைகளும் இதில் அடங்கும். நரம்பியல் பிரச்சினைகள் மங்கலான பார்வை அல்லது சிறு வயதிலேயே கண்பார்வை குறைபாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக நம்பப்படுகிறது. .


இளம் வயதில் பார்வை குறைபாடு 

வாழ்க்கை முறை தவிர, மரபணு ரீதியாக,  இளம் வயதில் பார்வை குறைபாடு ஏற்படலாம். ஒரு குடும்ப உறுப்பினருக்கு அல்பினிசம் நோய் அல்லது ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா இருந்தால், இந்த நிலைமைகள் குழந்தைகளுக்கு பலவீனமான கண்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இதனால், சிறு வயதிலேயே பார்வை மங்குதல், குருட்டுத்தன்மை கூட ஏற்படலாம்.

 இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் கோரிக்கையாகவோ அல்லது சிகிச்சைக்கான மாற்றாகவோ இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.

மூளையின் செயல் திறனை பாதிக்கும் ‘5’ ஆபத்தான உணவுகள்..!!

 சில உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடுவதால், அவை மூளையின் செயல் திறன் மிகவும் பாதிப்பதோடு, ஞாபக மறதி மற்றும் மூளை வீக்கம் போன்றவை ஏற்படும் ஆபத்துக்களையும் அதிகரிக்கின்றன. மேலும், அல்சைமர் (Alzheimer) மற்றும் டிமென்ஷியா போன்ற மன நோய்களின் ஆபத்தையும் அதிகரிக்கும்.



அதிக கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகள்

அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகள் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கின்றன. பிரெட் மற்றும் பாஸ்தா போன்றவை சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளின் வகையின் கீழ் வருகின்றன. இவற்றை உண்ணாதீர்கள். இவை எடை அதிகரிப்பு, வளர்சிதை மாற்றத்தில் கோளாறுகள் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கின்றன.

அதிக நைட்ரேட் உணவு

அதிக நைட்ரேட் உள்ள உணவு மனநலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை சேதப்படுத்துகிறது. உணவிற்கு நிறத்தை கொடுக்க இது பயன்படுகிறது. சலாமி, சாசேஜ் மற்றும் பன்றி இறைச்சி போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

பொரித்த உணவை உண்பது உங்கள் அறிவாற்றல், ஆரோக்கியம் இரண்டையும் பாதிக்கிறது. ஒரு ஆய்வின் படி, பொரித்த பொருட்களை அதிகமாக சாப்பிடுபவர்களது நினைவாற்றல் பலவீனமடையத் தொடங்குகிறது. இவற்றை உட்கொள்வதால் இரத்த நாளங்களில் வீக்கம் ஏற்படுகிறது. எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பதும் மனச்சோர்வின் அபாயத்தை அதிகரிக்கிறது.

சர்க்கரை பொருட்கள்

உடல் சர்க்கரைப் பொருட்களை குளுக்கோஸாக மாற்றுகிறது. இது ஆற்றலை அளிக்கிறது, ஆனால் சர்க்கரையை அதிகமாக உட்கொள்ளும் போது, ​​அது மூளையின் செயல்பாடு, நினைவாற்றல் ஆகியவற்றை பாதிக்கிறது. செயற்கை சர்க்கரையில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை சாப்பிடுவது உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை மிக மோசமாக பாதிக்கிறது.

மது

மது அருந்துவதால் டிமென்ஷியா ஏற்படுகிறது. பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்  செய்த ஆராய்ச்சி ஒன்றில்,  மது அருந்துபவர்களுக்கு டிமென்ஷியா ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

 இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. இதை கடை பிடிக்கும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெறவும்.

சர்க்கரை நோயாளிகள் காபி குடிக்கலாமா? எவ்வளவு குடிக்கலாம்?

சர்க்கரை நோயாளிகள் காபி குடிக்கலாமா? என்ற கேள்வி சர்க்கரை நோயை எதிர்கொள்ளும் ஒவ்வொரு நோயாளியின் மனதிலும் வந்திருக்க வேண்டும். இந்த கேள்வி அவசியமான ஒன்று என்பதால், அதற்கான பதிலை தெளிவாக தெரிந்து கொள்வது அவசியம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் உணவில் கட்டுப்பாடு இருக்க வேண்டியது மிக மிக அவசியம். அதிலும் என்ன சாப்பிட வேண்டும்? என்ன சாப்பிடக்கூடாது? எவ்வளவு சாப்பிட வேண்டும்? என்ற விஷயங்களை தெரிந்து வைத்திருந்தால், எந்த உணவையும் தவிர்க்க வேண்டிய கட்டாயம் இருக்காது. 

அந்தவகையில் காபி குடிக்கலாமா? குடிக்கக்கூடாதா? என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். காபி என்பது பொதுவாக உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது. சில ஆய்வுகளில் காபி குடிப்பதால் சர்க்கரை நோய் எதிர்காலத்தில் வருவதை கூட தவிர்க்கலாம் என கூறுகின்றன. காபியில் நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த இடத்தில் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. சர்க்கரை நோய் வரக்கூடாது என்பதற்காக அதிக காபி குடிக்கலாம் என நினைக்கக்கூடாது. மேற்கூறிய விஷயங்கள் நன்மை என்றால், அதன் தீமைகளையும் தெரிந்து கொள்ளுங்கள். 

ஒரு சில ஆய்வுகளில் காபி குடிப்பதால் இன்சுலின் சுரப்பு குறைவதாகவும் கூறுகின்றன. இதனால் நாளடைவில் டைப் 1 மற்றும் 2 ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாடில்லாமல் இருப்பவர்கள் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதிகமாக காபி குடிப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பிபி ஏற்படும். மேலும், வெறும் வயிற்றில் காபி குடிப்பதும் இதய பிரச்சனைகளை அதிகரிக்கும். குடிக்க வேண்டும் என விரும்புவர்கள் காலை உணவுக்குப்பின் காபியை குடியுங்கள். நீரிழிவு நோயாளிகள் காபியை குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.

வெறும் வயிற்றில் ‘இந்த’ உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு..!!

 காலையில், நம் வயிறு காலியாக இருக்கும் போது, நாம் என்ன சாப்பிட்டாலும், அது நேரடியாக நம் வயிற்றின் உள் அடுக்கை பாதிக்கிறது. இதனால், வயிற்றில் எரிச்சல் உணர்வு, வயிற்று வலி, நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாத உணவுகள் குறித்து வல்லுநர்கள் கூறியிருப்பது என்ன என்பதை பார்க்கலாம். 



நார்சத்து  அதிகம் உள்ள உணவுகள்:

நார்ச்சத்து வயிற்றுக்கு நல்லது. ஆனால் அளவுக்கு மிஞ்சிய வகையிலான அதிக நார்ச்சத்து வயிற்றுக்கு தீங்கு விளைவிக்கும். இது வயிற்று வலி போன்ற சிக்கலகளை ஏற்படுத்தும். எனவே, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சரியாக தேர்ந்தெடுத்து, சீரான வகையில், சரியான அளவில் உண்ணுங்கள்.

கார உணவுகள்:

காலையில் காரமான, மசாலா அதிகம் உள்ள மற்றும் பொரித்த உணவை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில், இது வயிற்று எரிச்சல் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும். இதனுடன், நீங்கள் வயிறு மற்றும் மார்பு பகுதிகளில் நீங்கள் அசௌகரியத்தை உணரலாம்.  

காப்பி அல்லது தேநீர்:

பெரும்பாலானோருக்கு காலையில் வெறும் வயிற்றில் தேநீர் மற்றும் காபி சாப்பிட்டால் தான் வேலையே ஓடும். ஆனால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். இதனால் உங்களுக்கு நெஞ்செரிச்சல் மற்றும் நீர் சத்து இழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

குளிர்ந்த நீர்:

காலையில் வெறும் வயிற்றில் சாதாரண தண்ணீர் அல்லது வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது நன்மை பயக்கும். ஆனால் நீங்கள் குளிர்சாதன பெட்டியில் இருந்து குளிர்ந்த நீரை ஒருபோதும் குடிக்கக்கூடாது. இதன் காரணமாக உங்கள் செரிமான சக்தி குறையத் தொடங்குகிறது.

ஆல்கஹால்:

ஆல்கஹால் வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. இது உங்கள் கல்லீரலில் அதிக அழுத்தம்  ஏற்படுத்தும் என்பதோடு, ஆல்கஹால் உங்கள் இரத்தத்தில் மிக வேகமாக பரவுகிறது. 

பகல் தூக்கம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குமா..!!

 வேலை செய்து சோர்வாக இருக்கும் போது, ​​மதியம் சிறிது ஓய்வு எடுத்தால், புத்துணர்ச்சி ஏற்படும் என்பது உண்மை தான். பகல்நேர தூக்கம் என்பது எல்லா வயதினருக்கும் பொதுவான விருப்பமாக உள்ளது எனக் கூறலாம். ஆனால் அதனால், சில ஆரோக்கிய பாதிப்பும் உண்டு. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில  விஷயங்கள்  உள்ளன.




ஆரோக்கியத்தில் பகல் தூக்கத்தின் தாக்கம்

பகல்நேர தூக்கம் உங்களுக்கு சோர்வு மற்றும் சோம்பலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. ஆனால் சிலருக்கு இந்த பழக்கம் பிரச்சனையை ஏற்படுத்தலாம். இது இரவின் இயற்கையான உறக்கச் சுழற்சியைப் பாதிக்கலாம், அத்தகைய சூழ்நிலையில், இரவில் நல்ல தூக்கம் இருக்காது.

சோம்பேறியாக இருக்காதே

சிலருக்கு, பகல் தூக்கம் என்பது தங்களை புத்துணர்ச்சியடையச் செய்வதற்கான எளிதான வழியாகும். ஆனால் பல ஆராய்ச்சிகளில் இது மந்த நிலை ஏற்பட்டு பாதிக்கலாம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மதியம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தூங்குவது உங்கள் உடலை மந்தமாக மாற்றும்.

ஆயுர்வேதம் சொல்வது என்ன?

ஆயுர்வேதத்தில், பகலில் தூங்குவது நல்லதல்ல என கூறப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வது கபம் மற்றும் பித்த தோஷங்களுக்கு இடையில் சமநிலை இல்லாத நிலைக்கு வழிவகுக்கும், இருப்பினும் ஆரோக்கியமாக இருப்பவர்கள் பகலில்  சிறிது நேரம் தூங்கலாம் என்கின்றனர்.

பகல் தூக்கத்தை தவிர்க்க வேண்டியவர்கள்

நீரிழிவு மற்றும் உடல் பருமன் உள்ளவர்கள் பகலில் தூங்கக்கூடாது, ஏனெனில் உடல் எடை அதிகரிப்பு, காய்ச்சல், நினைவாற்றல் இழப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும்.

ஒரு நாளில் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

மதியம் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் தூங்குவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கத்தைப் பின்பற்ற, அலாரத்தை அமைத்து கொண்டு தூங்கலாம், பகலில் குட்டித் தூக்கம் போடாலாம். ஆனால் நீண்ட நேரம் தூங்குவது நல்லதல்ல.

தூக்கம் வருவதற்குரிய முத்திரைகள்

 முத்திரைகள் செய்யும் பொழுது நமது பண்புகள் மாறிவிடும். அன்பு, கருணை மலரும். கோபம் நீங்கும், மன அழுத்தம் நீங்கும். மன அமைதி கிடைக்கும். நரம்பு மண்டலங்கள் நன்கு இயங்கும். அதனால் நமக்கு நித்திரை கை கூடும். ஒரு மனிதனுடைய உடலில் பஞ்ச பூதங்களும் சமமான விகிதத்தில் இயங்கினால் ஆழ்ந்த நித்திரை கை கூடும். பஞ்ச பூதங்களை சமப்படுத்துவது முத்திரைகளாகும்.


முத்திரைகளை காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் செய்ய வேண்டும். ஒரு முத்திரையை இரண்டு நிமிடம் செய்தால் போதும். சாப்பிட்டிருந்தால் இரண்டு மணி நேரம் கழித்து பயிற்சி செய்யலாம். தரையில் ஒரு விரிப்பு விரித்து அதில் அமர்ந்து முதுகுத்தண்டை நேராக வைத்து செய்யவும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து செய்யவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.


தூக்கம் வருவதற்கு பல விதமான யோகமுத்திரை சிகிச்சையை அளிக்கின்றோம். நம்பிக்கையுடன் பயிலுங்கள். நிச்சயம் நல்ல தூக்கம் வரும். இந்த பயிற்சியினால் எந்த ஒரு பக்க விளைவும் வராது. மாறாக இந்த முத்திரைகளினால் மற்ற பலன்களும் உங்களுக்கு கிடைக்கும்.

பிராண முத்திரை: நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும், கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது வினாடிகள், கூர்ந்து தியானிக்கவும். பின் மோதிரவிரல், சுண்டுவிரல் அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். மற்ற இருவிரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும் இரு கைகளிலும் செய்யவும். பின் கைகளை சாதாரணமாக வைக்கவும்.

பிரமர முத்திரை: நிமிர்ந்து அமரவும், முதுகெலும்பு நேராகயிருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது வினாடிகள் கூர்ந்து தியானிக்கவும். பின் ஆள்காட்டி விரலை மடக்கி நடுவிரல் நுனியை கட்டைவிரல் நுனியோடு அழுத்திப் பிடித்து மற்ற இரு விரல்களையும் நேராக படத்தில் உள்ளதுபோல் வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் செய்யவும்.

சின் முத்திரை: நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது வினாடிகள் கூர்ந்து தியானிக்கவும். பின் ஆள்காட்டி விரல், கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் இருக்கவும்.

அர்த்த பத்மாசனம்: விரிப்பில் நேராக அமரவும். இரு கால்களையும் நீட்டவும். வலது காலை மடக்கி இடது கால் தொடை மீது வைக்கவும். பின் இடது காலை மடித்து படத்தில் உள்ளது போல் கொண்டு வரவும். இந்த ஆசனத்தில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும்.இதேபோல் காலை மாற்றி இரண்டு நிமிடங்கள் இருக்கவும். ஒவ்வொரு காலிலும் இரண்டு நிமிடங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் வலது பக்க, இடது பக்க மூளைக்கு ரத்த ஓட்டம் நன்றாக பாயும். மூளை செல்கள் நன்கு இயங்கும். மன அமைதி கிட்டும்.

மேற்குறிப்பிட்ட பயிற்சியை தினமும் காலை மாலை பயிற்சி செய்யுங்கள். இரவு படுக்கும் பொழுது மட்டும் படுப்பதற்கு முன்பாக பிராண முத்திரையை இரண்டு நிமிடம் செய்துவிட்டு படுக்கவும். 48 நாட்கள் விடாமல் பயிற்சி செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். தூக்கம் வரும்.

யோகக் கலைமாமணி
பெ.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
63699 40440
pathanjaliyogam@gmail.com

தூங்குவதற்கு முன் நீங்க செய்யக்கூடிய இந்த எளிய செயல்கள் உங்க எடையை உங்களுக்கே தெரியாமல் குறைக்குமாம்!

 உடல் எடையை குறைப்பது அவ்வளவு சாதாரண காரியமல்ல, அதற்கு கணிசமான அளவு நேரம், திட்டமிடல் மற்றும் முயற்சி தேவை.

ஒரு விரிவான திட்டமிடப்பட்ட டயட் மற்றும் உடற்பயிற்சி முறை ஆகியவை அந்த கூடுதல் எடையைக் குறைக்கவும் விரும்பிய உடல் அமைப்பைப் பெறவும் உதவுகின்றன. தற்போதைய சூழ்நிலையில், ஒருவரது அன்றாட வாழ்க்கையானது, இது போன்ற விரிவான திட்டமிடப்பட்ட செயல்களுக்கு நேரத்தை ஒதுக்குவதில்லை.

நமக்கு நேரம் கிடைக்கும்போது கூட, ஜிம்மில் கடினமாக உழைத்து வியர்வை சிந்துவதற்குப் பதிலாக சோம்பேறியாகச் சுற்றி ஓய்வெடுக்க விரும்புகிறோம். இருப்பினும், சில எளிய தந்திரங்கள் மூலம் வசதியாக உங்கள் படுக்கையிலிருந்தே எடையைக் குறைக்கலாம். உண்மைதான், நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்களைச் சுற்றிலும் நீங்கள் செய்யக்கூடிய சில எளிய வேலைகள் மூலம் உங்கள் எடையை குறைக்கலாம். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.


அதிகமாகத் தூங்குங்கள்

ஒவ்வொரு இரவும் கூடுதலாக ஒரு மணிநேரம் தூங்குவது அதிக முயற்சி இல்லாமல் 270 கலோரிகளை குறைவாக சாப்பிட உதவும். ஆரோக்கியமற்ற பசியின் மீதான கட்டுப்பாடு கூடுதல் நேர தூக்கத்தால் எளிதாக்கப்படுகிறது, இதனால் உடல் எடையை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தினசரி உணவில் 270 கலோரிகள் குறைவாக இருந்தால், ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 9 பவுண்டுகள் இழக்க நேரிடும்.

தூங்கச் செல்வதற்கு முன் புரோட்டீன் ஷேக்கைக் குடிக்கவும்

படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு கிளாஸ் புரோட்டீன் ஷேக் உட்கொள்வது, நள்ளிரவின் பசியைப் போக்க, நள்ளிரவில் எழுவதைத் தடுக்கிறது. இது தவிர, கார்போஹைட்ரேட்டுகளுடன் ஒப்பிடுகையில் புரதம் அதிக தெர்மோஜெனிக் மற்றும் அதிக கலோரிகளை சிறந்த முறையில் எரிக்க உதவுகிறது.


போர்வை இல்லாமல் தூங்குவது.

குறைந்த வெப்பநிலை உள்ள அறைகளில் தூங்குவது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் ஒரே நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்க உடலை வழிநடத்துகிறது. குறைந்த வெப்பநிலையில் தூங்குவது உடலில் பழுப்பு நிற கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது என்பதும் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பழுப்பு கொழுப்பு என்பது கொழுப்பின் ஒரு நல்ல வடிவம் மற்றும் இது உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

பசியுடன் தூங்க செல்லாதீர்கள்

கலோரி உட்கொள்ளலைக் குறைப்பது எடை மற்றும் அதிகமாக இருக்கும் அங்குலங்களை ஒரே மாதிரியாக குறைக்க உதவுகிறது என்றாலும், படுக்கைக்குச் செல்வதற்கு முன் சரியாக சாப்பிடாமல் இருப்பது உடலை மோசமாக பாதிக்கும். நீங்கள் இரவு உணவைத் தவிர்த்தால், நீங்கள் வழக்கமாக உட்கொள்ளும் கலோரிகளின் அளவு திடீரென்று குறைகிறது, இதன் காரணமாக உடல் பட்டினி நிலைக்குச் செல்லும். இது வளர்சிதை மாற்றத்தை எதிர்மறையாக பாதிக்கும் மற்றும் செரிமான செயல்முறையை திறனற்றதாக மாற்றும்.

மாஸ்க் அணிந்து தூங்குங்கள்

வெளிச்சம் இல்லாத இருட்டான அறைகளில் தூங்குபவர்கள், சற்று வெளிச்சம் உள்ள அறைகளில் உறங்குபவர்களுடன் ஒப்பிடும்போது, உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்பு 21% குறைவாக இருப்பதாக ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே தூங்கும் முகமூடியை அணிவது நல்லது. பிற்பகல் தூக்கத்தின் போது, நீங்கள் தூங்கும் போது தொலைக்காட்சியை ஆன் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்க உதவும் நெல்லிக்காய் சாறு !!

 நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும்..காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.




நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், கண்களின் ரெட்டினாவை பாதுகாக்கும். இதில் வைட்டமின் சி வளமாக இருப்பதால், பார்வை மேம்படுவதோடு, கண்களில் இருந்து தண்ணீர் வருவது, கண் எரிச்சல், கண்கள் சிவப்பது போன்றவை தடுக்கப்படும்.

இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.

நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.

தினமும் நெல்லிக்காய் ஜுஸ் குடித்து வருவதின் மூலம் ரத்தசோகை, குடல் புண், சர்க்கரைநோய், கண் நோய்களிலிருந்து விடுபடலாம்.

கொட்டை நீக்கப்பட்ட நெல்லிகனிகளை தண்ணீர்விட்டு நன்கு அரைத்து வடிகட்டி கிடைக்கும் சாற்றுடன் தேன் மற்றும் இளநீர் சேர்த்துப் பருகலாம்.

நெல்லிக்காயை அரைத்து தலைமுடியில் தடவி குளித்து வந்தால் நரை முடி வருவதை தடுக்கலாம்.

இரவில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா?

 

நமது உடலின் பெரும்பகுதி தண்ணீரால் ஆனது. ஆகையால் தண்ணீரை சரியான அளவிலும் சீரான இடைவெளியிலும் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.

இல்லையெனில் உடலில் நீரிழப்பு மற்றும் பல பிரச்சனைகள் ஏற்படும்.

ஒரு ஆரோக்கியமான நபர் ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர்தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால், இரவு நேரங்களில் தண்ணீர் அருந்தலாமா கூடாதா? அருந்தலாம் என்றால், எவ்வளவு அருந்தலாம்? இந்த கேள்விகள் பலரது மனதில் இருக்கும்.


இரவில் தண்ணீர் குடிக்கலாமா கூடாதா?

இரவில் தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பது அவசியம் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். இது உணவை ஜீரணிக்க எளிதாக்குகிறது. இது தவிர வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் தண்ணீரால் உடலில் உறிஞ்சப்படுகின்றன. தண்ணீர் குடிப்பதன் மூலம், வளர்சிதை மாற்றம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை வெளியேற்றுவதில் எந்த பிரச்சனையும் இருக்காது.


தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

குறைந்த அளவு தண்ணீர் குடிப்பவர்களுக்கு உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பகலில் அதிக தண்ணீர் குடிப்பதும், இரவில் தூங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பும் தண்ணீர் குடிப்பதும் நல்லது. தூங்கும் போது அதிக தண்ணீர் குடித்தால், தூக்கம் வருவதில் சிக்கல் ஏற்படும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.


இவர்கள் அதிக தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்

நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவில் அதிக தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இவர்கள் இரவில் அதிக தண்ணீர் குடித்தால், மீண்டும் மீண்டும் கழிப்பறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். இதனால் இவர்களது உறக்கம் வெகுவாக பாதிக்கப்படலாம். உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான 8 மணிநேர தூக்கம் இவர்களுக்கு கிடைக்காமல் போகலாம்.


இரவில் தண்ணீர் குடிக்கும் முறை?

சாதாரண தண்ணீரைக் குடிப்பதற்குப் பதிலாக, நீங்கள் எலுமிச்சை, கிரீன் டீ, மூலிகை தேநீர் மற்றும் பிற ஆரோக்கியமான பானங்களை குடிக்கலாம். சாதாரண தண்ணீரை அதிகம் குடித்தால், இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்திருக்க வேண்டி வரலாம். இதனால் தூக்கம் வராமல் போகலாம். இரவில் ஒன்று அல்லது 2 கிளாஸ் தண்ணீர் மட்டும் குடிப்பது நல்லது, இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.


இரவில் தண்ணீர் குடிப்பது ஏன் முக்கியம்?

இரவில் உணவுக்குப் பிறகு தண்ணீர் குடிப்பதால், உடல் இயற்கையான முறையில் சுத்தப்படுத்தப்படும். இது நச்சுப் பொருட்களை வெளியேற்றி செரிமானத்திற்கு உதவுகிறது. அசிடிட்டி அல்லது கேஸ் பிரச்சனை உள்ளவர்கள் இரவில் கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும். சளி இருமல் உள்ளவர்களுக்கு லேசான வெதுவெதுப்பான நீர் ஒரு சஞ்சீவியாக உதவும்.

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடித்தால் இந்த பிரச்சனைகள் வரும்...

 பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல உடல் நலத்துக்கும் கேடு விளைவிக்கக்கூடியவை. இந்தியாவில் தினமும் 26 ஆயிரம் டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் சுமார் 10 ஆயிரம் டன்கள் புழக்கக்கத்திற்கு பிறகு சேகரிக்கப்படுவதில்லை. குப்பை கழிவுகளாக மாறுகின்றன என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.



தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளையின் ஆய்வின்படி, ஒரு மனிதன் தனது வாழ்நாள் முழுவதும் சுமார் 20 கிலோ கிராம் மைக்ரோ பிளாஸ்டிக்கை உட்கொள்கிறான். அதற்கேற்ப பெரும்பாலான வீடுகளில் பிளாஸ்டிக்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. பிளாஸ்டிக் பாட்டில்கள், டப்பாக்கள், ஜாடிகள், கொள்கலன்கள், பாத்திரங்கள் என சமையலறையை பிளாஸ்டிக் தான் அலங்கரித்துக்கொண்டிருக்கிறது. அதிலும் அழகிய டிசைன் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை விரும்பி பயன்படுத்தவும் செய்கிறார்கள். பிளாஸ்டிக் பாட்டில்களில் நீரை அடைத்து பருகுவது நல்லதல்ல என்பதை பலரும் ஒப்புக்கொண்டாலும் அதனை அறவே தவிர்க்க முன் வருவதில்லை.


தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பாட்டில் மீது நேரடியாக சூரிய ஒளி படும்போது ஏற்படும் வெப்பம் காரணமாக டையாக்ஸின் என்ற நச்சுப்பொருள் வெளிப்படும். அது தண்ணீரில் கலந்துவிடும். அந்த நீரை உட்கொள்ளும்போது மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

பீபெனைல் ஏ என்பது ஈஸ்ட்ரோஜனை பிரதிபலிக்கும் ஒரு ரசாயனமாகும். இது பிளாஸ்டிக் பாட்டில் தயாரிப்பில் பயன்படுத்தப்படும். நீரிழிவு, உடல் பருமன், கருவுறுதல் பிரச்சினை, முன்கூட்டியே பருவமடைதல் போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆதலால் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை சேமித்து வைத்து குடிக்காமல் இருப்பது நல்லது.

பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரை குடிப்பதால் நோயெதிர்ப்பு அமைப்பு பெரிதும் பாதிக்கப்படும். பாட்டில்களில் உள்ள ரசாயனங்கள் தண்ணீர் மூலம் உடலுக்குள் சென்று நோய் எதிர்ப்பு சக்தியை சீர்குலைத்து விடும்.




பிளாஸ்டிக்கில் பித்தலேட்ஸ் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. அது கலக்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களில் நீரை அடைத்து பருகி வந்தால் கல்லீரல் புற்றுநோய் ஏற்படும். விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும். நியூயார்க் ஸ்டேட் யுனிவர்சிட்டி சமீபத்தில் நடத்திய ஆய்வில், பாட்டில் தண்ணீரில், அதிகப்படியான மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இருப்பது தெரியவந்துள்ளது.

மைக்ரோபிளாஸ்டிக் என்பது 5 மில்லிமீட்டர் அல்லது அதற்கும் குறைவான சிறிய பிளாஸ்டிக் நுண்துகளாகும். இந்த மைக்ரோபிளாஸ்டிக் 93 சதவீதம் பாட்டில் தண்ணீரில் காணப்படுகிறது. இந்த மைக்ரோபிளாஸ்டிக் நுகர்வு ஆரோக்கியத்தை பாதிக்காது என்று உலக சுகாதார நிறுவனம் கூறினாலும், அது கவலை தரும் விஷயமாகும்.

எச்சரிக்கை! இந்த உணவுகளை எப்பவும் இரவு நேரத்துல சாப்பிடாதீங்க..

 ஒருவரது ஆரோக்கியத்திற்கு இரவு நேரத் தூக்கம் மிகவும் இன்றியமையாதது. நல்ல நிம்மதியான இரவு தூக்கத்தைப் பெற வேண்டுமானால் இரவு நேரத்தில் சரியான உணவை உண்ண வேண்டும். ஆனால் தற்போது பலர் இரவு நேரத்தில் பல தவறான உணவுகளை உட்கொண்டு, இரவு நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே நல்ல தூக்கத்தைப் பெற வேண்டுமானால் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.

நாம் உண்ணும் பல உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கக்கூடியவை. ஆனால் அதை தவறான நேரத்தில் உட்கொண்டால் பிரச்சனைகளைத் தான் சந்திக்க நேரிடும். அப்படி இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத சில உணவுகள் குறித்து இப்போது காண்போம்.

வெள்ளரிக்காய்:


 வெள்ளரிக்காய் அதிக நீர்ச்சத்து கொண்ட ஒரு காய்கறி. இதை பகல் வேளையில் சாபிட்டால் பல நன்மைகளைப் பெறலாம். ஆனால் நீர்ச்சத்துள்ள வெள்ளரிக்காயை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது உடலின் நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கும். ஆகவே இரவு நேரத்தில் மறந்தும் வெள்ளரிக்காயை சாப்பிடாதீர்கள்.


வேக வைக்காத சுண்டல்:



 வேக வைக்காத சுண்டலில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இதை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். ஆனால் அதையே இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது உடலை பலவீனப்படுத்தி, பல நோய் தாக்குதலுக்கு வழிவகுக்கும்.

வாழைப்பழம்:


 பழங்களிலேயே விலை குறைவில் அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய பழம் தான் வாழைப்பழம். தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டால், அது உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். ஆனால் வாழைப்பழத்தை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது காய்ச்சல் மற்றும் சளி பிடிக்க வைக்கும்.

தயிர்:


 தயிர் செரிமான மண்டலத்திற்கு நன்மை அளிக்கும் ஓர் உணவுப் பொருள். ஆனால் தயிரை இரவு நேரத்தில் சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக இரவு நேரத்தில் தயிர் சாப்பிட்டால் செரிமான செயல்முறை சரியாக நடைபெறாது. ஆகவே இரவில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

ஆப்பிள்:


 ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. பகல் வேளையில் ஆப்பிள் சாப்பிடுவதால், அதில் உள்ள பெக்டின் என்னும் பொருள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். அதே வேளையில் அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்கும். இரவு நேரத்தில் ஆப்பிள் சாப்பிடுவதால், அதில் உள்ள பெக்டின் எளிதில் ஜீரணமாகாது.

உருளைக்கிழங்கு:


 உருளைக்கிழங்கில் மாவுச்சத்து, வைட்டமின் சி மற்றும் பி6, நார்ச்சத்து, மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளது. பகல் வேளையில் உருளைக்கிழங்கு சாப்பிடுவது உடலின் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இரவில்
உருளைக்கிழங்கு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.

நட்ஸ்:


 நட்ஸ்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ, கொழுப்புக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. நட்ஸ் சாப்பிடுவது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இவற்றை பகல் வேளையில் உட்கொண்டால், இரத்த அழுத்தத்தின் அளவு சீராக இருக்கும். அதுவே இரவு நேரத்தில் உட்கொண்டால், அவற்றில் உள்ள கொழுப்பு உடல் எடையை அதிகரிக்கும்.

இரவில் தூங்கும் முன்பு வெதுவெதுப்பான நீருடன் 2 கிராம்பு… இவ்வளவு நன்மை இருக்கு!

கிராம்பின் முழு நன்மையை பெற இரவில் படுக்கும் முன் 2 கிராம்புகளை மென்று சாப்பிடுங்கள். பின்னர், 1 கிளாஸ் ஹாட் வாட்டர் குடிக்க வேண்டும். இது முகப்பரு உள்ளிட்ட பல பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.



இந்திய சமையலில் அதன் தனித்துவமான சுவைக்காக பயன்படுத்தப்படும் உணவுப் பொருளாக கிராம்பு உள்ளது. இது தவிர, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கிய ஒரு மூலிகையாக, நமது உடலில் மேஜிக் செய்கிறது.

அறிவியல் ரீதியாக Syzygium aromaticum என அழைக்கப்படும் கிராம்பு, ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

மருத்துவ குணங்கள் கொண்ட கிராம்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வயிற்று வலி, பல் வலி, தொண்டை வலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற முடியும்.

தோற்றத்தில் சிறியதாகவும், சுவையில் சற்று கசப்பாகவும் இருக்கும் கிராம்பு, பல குணங்கள் நிறைந்தது.

கிராம்புகளில் யூஜெனால் என்ற தனிமம் காணப்படுவதால், மன அழுத்தம், வயிற்றுக் கோளாறுகள், பார்கின்சன் நோய், உடல்வலி போன்ற பிரச்சனைகள் சீராகிறது.

மேலும், கிராம்புகளில் வைட்டமின் ஈ, வைட்டமின் சி, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, தியாமின், வைட்டமின் டி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் போன்ற அத்தியாவசிய கூறுகள் உள்ளன.

பொதுவாக, கிராம்பு எந்த நேரத்திலும் உட்கொள்ளலாம். ஆனால் படுக்கைக்கு முன் அதை உட்கொண்டால், அதன் பலன் இரட்டிப்பாகும் என சொல்லப்படுகிறது.

கிராம்புகளை எப்படி சாப்பிட வேண்டும்?

கிராம்பின் முழு நன்மையை பெற இரவில் படுக்கும் முன் 2 கிராம்புகளை மென்று சாப்பிடுங்கள். பின்னர், 1 கிளாஸ் ஹாட் வாட்டர் குடிக்க வேண்டும். இது முகப்பரு உள்ளிட்ட பல பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.

கிராம்பு மற்றும் ஹாட் வாட்டர் ஆரோக்கிய நன்மைகள்

  • கிராம்புகளை இரவில் உட்கொள்வது மலச்சிக்கல், அமிலத்தன்மை, வயிற்றுப்போக்கு போன்ற வயிற்று பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும். கூடுதலாக, செரிமான அமைப்பு சரியாக வேலை செய்ய வைக்கிறது.
  • கிராம்புகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. மேலும், முகப்பருவுக்கு உதவும் ஒரு குறிப்பிட்ட வகை சாலிசிலேட்டும் உள்ளது.
  • பற்களில் புழுக்கள் இருந்தால், கிராம்புகளை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து சாப்பிட்டால், பற்களில் புழுக்கள் நீக்க உதவுகிறது. மேலும், பல்வலியைப் போக்கவும் உதவுகிறது.
  • கிராம்புகளை உட்கொள்வதால் வாயில் இருந்து துர்நாற்றம் வீசும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன. இதனுடன், நாக்கு மற்றும் தொண்டையின் மேல் பகுதியில் உள்ள பாக்டீரியாக்களை சுத்தம் செய்ய உதவுகிறது.
  • இது தொண்டை புண் மற்றும் வலியிலிருந்து விடுபட உதவுகிறது.
  • கை, கால் நடுங்கும் பிரச்சனை இருந்தால், படுக்கைக்கு முன் 1-2 கிராம்புகளை வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ளலாம். சில நாட்களில் பலன் தெரியும்
  • நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாக இருந்தால், தினமும் கிராம்புகளை உட்கொள்ளுங்கள்
  • சளி, இருமல், வைரஸ் தொற்று, மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட கிராம்புகளை தினமும் உட்கொள்ள வேண்டும்.