இரவு 6 – 8 மணி நேர தூக்கத்துக்குப் பின் காலை வெறும் வயிற்றில் இந்த பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
எல்லா உயிர்களுக்குமே தண்ணீர்தான் அடிப்படை. நம் உடல் சீராக இயங்கவும், நச்சுக்கள் நம் உடலைவிட்டு வெளியேறவும், உணர்திறன் அதிகம் கொண்ட திசுக்கள் பாதுகாக்கப்படவும் தண்ணீரே அடிப்படையாக இருக்கிறது. எண்ணற்ற நன்மைகளைக் கொண்ட தண்ணீரை, இரவு 6 – 8 மணி நேர தூக்கத்துக்குப் பின் காலை வெறும் வயிற்றில் குடிப்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அவை என்னென்ன என்று இங்கே பார்க்கப் போகிறோம்..
1) நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்தும்: தண்ணீரானது இயற்கையாகவே உடலிலுள்ள நச்சுக்களையும் தேவையற்ற விஷயங்களையும் அகற்றும் தன்மை கொண்டவை. இதனால் நன்கு தண்ணீர் குடிப்பவர்களுக்கு, நோய் எதிர்ப்பு திறன் மேம்பட்டு தொற்று நோய்களுக்கான வாய்ப்பு குறையும்.
2) கலோரி அளவு குறையும்: காலை உணவுக்கு முன்னர் தண்ணீர் குடிக்கும்போது, உணவின் அளவு தன்னால் குறையும். இதனால் உணவில் சேரும் கலோரியின் அளவும் குறைந்துவிடும். காலை உணவிற்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு முன்பு தண்ணீர் குடிப்பது நல்லது.
3) தலைவலி தடுக்கப்படும்: பெரும்பாலான நேரம் நீர்ச்சத்து இழப்பு இருப்பதாலேயே மைக்ரேன் போன்ற சில வகை தலைவலிகள் ஏற்படுகின்றன. காலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் இதிலிருந்து தப்பிக்கலாம்.
4) மலச்சிக்கல் தடுக்கப்படும்: காலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும்போது, குடல் நன்கு சுத்தம் செய்யப்படும். இதனால் குடல் இயக்கம் மேம்பட்டு, செரிமான பகுதியின் செயல்பாடுகள் மேம்படும். மேலும் அந்த நாள் முழுக்க மலச்சிக்கலை தடுக்கவும், செரிமான சிக்கல்களை தடுக்கவும் உதவும்.
5) சரும பொலிவு: சருமத்தில் பருக்கள் வருவது, சருமம் வறண்டு போவது போன்றவை தடுக்கப்பட்டு சருமம் பொலிவாகும். சரும ஆரோக்கியமும் மேம்படும்.
6) உடல் எடை குறைவுக்கு வழிவகுக்கும்: வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும். இது எடை இழப்புக்கு உதவும். 500 மில்லி தண்ணீர் குடிப்பது 10 நிமிடங்களுக்குள் 30% வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும் என்றும், சில சமயங்களில் 30-40 நிமிடங்களுக்குப் பிறகும் அதிகரிக்கும் என்றும் ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.
7) ஆற்றல் அதிகரிக்கும்: காலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும்போது, உடனடியாக ஆற்றல் அதிகரிக்கும். போலவே நாள் முழுக்க உடலில் உணவுகள் நன்கு உட்கிரகிக்கப்படவும் தண்ணீர் உதவும். இவையாவும் ஒட்டுமொத்தமாக உடல்நலனை மேம்படுத்தும்.
8) எடை குறைவு: காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பாக தண்ணீர் குடிக்கும்போது, உடலில் வெப்பம் அதிகரிப்பதால் வளர்சிதை மாற்றங்கள் ஊக்குவிக்கப்படும். இதேபோல உடலில் தேங்கியுள்ள கொழுப்புத் திசுக்களை உடைக்க வெதுவெதுப்பான நீர் உதவுகிறது. இது ஒரு மென்மையான 'Internal Scrub' போலச் செயல்பட்டு, தமனிகளில் உள்ள கொழுப்புப் படிமங்களை நீக்க உதவுவதாகக் கருதப்படுகிறது. மேலும் வெதுவெதுப்பான நீர் வயிறு நிறைந்த உணர்வைத் (Satiety) தருகிறது. இதனால் காலை உணவின் போது அதிகப்படியான கலோரிகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் இந்தப் பழக்கம் நாள்படும்போது உடல் எடை குறையும்.
உடல் எடை குறைய... காலை வெறும் வயிற்றில் இந்தவொரு பழக்கத்தை கட்டாயம் பின்பற்றுங்கள்!
15 நாட்கள் காலை உணவை தவிர்த்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?
தொடர்ந்து 15 நாட்கள் காலை உணவைத் தவிர்ப்பதால் பல உடல் மற்றும் மன மாற்றங்கள் ஏற்படக்கூடும். அவை என்னென்ன தெரியுமா?
காலை உணவு என்பது ஒரு நாளின் மிக முக்கியமான உணவாகும். ஆனால் இப்போதெல்லாம் பலரும் நேரமின்மை, எடை இழப்பு டயட் என பல்வேறு காரணங்களைச் சொல்லி காலை உணவைத் தவிர்க்கிறார்கள். ஆனால் தொடர்ந்து 15 நாட்கள் காலை உணவைத் தவிர்ப்பதால் பல உடல் மற்றும் மன மாற்றங்கள் ஏற்படக்கூடும். அவை என்னென்ன தெரியுமா? பார்க்கலாம் வாங்க!
தொடர்ந்து 15 நாட்கள் காலை உணவைத் தவிர்க்கும்போது, மூளைக்கு போதுமான குளுக்கோஸ் கிடைக்காமல் போகும். இதனால் மனச்சோர்வு ஏற்பட்டு, கவனச்சிதறல் அதிகம் ஏற்படக்கூடும். மூளைக்கு சக்தி இல்லாமல் போவதால், உடல் எப்போதும் சோர்வாக உணரும். சில நேரங்களில் இதனால் தலைவலி, எரிச்சலும் ஏற்படக்கூடும்.
காலை உணவைத் தவிர்ப்பது, எடை இழப்புக்கு உதவுமென பலர் நினைப்பதுண்டு. ஆனால் இது பல எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வுகள் நிரூபித்துள்ளன. குறிப்பாக காலை பணிக்கு செல்பவர்களுக்கு ஆற்றல் குறையும். இதனால் பசி அதிகரிப்பதால், மதியம் அதிக உணவு சாப்பிடும் நிலை உருவாகும். பெரும்பாலும் மதியம் அரிசி உணவுகளையே நாம் உட்கொள்வதால், கலோரி அதிகமான உணவை உட்கொள்ள நேரிடும். இதேபோல இரவும் அதிக பசி எடுக்கும் வாய்ப்புள்ளது. இவையாவும் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
இருப்பினும் ஒருசிலருக்கு காலை உணவைத் தவிர்ப்பதால் எடை இழப்பு ஏற்படலாம். ஆனால் அதிலும் ஆபத்து உள்ளது. அதற்கு காரணம் நம் உடலானது, தான் சேமித்து வைத்திருக்கும் கொழுப்பையும் தசையையும் ஆற்றலுக்காகப் பயன்படுத்தும். 15 நாட்களுக்கு காலை உணவைத் தவிர்ப்பது, கொழுப்பை எரித்து எடை இழப்புக்கு வழிவகுக்கும் என்றாலும்கூட போதியளவு புரதம் கிடைக்காததால் தசை இழப்புக்கும் வழிவகுக்கும். இதனால் ஆரோக்கியமற்ற முறையில் எடை இழப்பு நிகழும். அந்த எடை இழப்பு நீண்டகாலத்துக்கானதாக இல்லாமல் குறுகிய காலத்துக்கானதாகவும் இருக்கும்.
அதேபோல 15 நாட்களுக்கு உணவு கிடைக்காத நிலை இருக்கும் என்பதால், உடல் சர்வைவல் நிலைக்கு சென்றுவிடும். இதனால் கலோரிகள் எரிக்கப்படும் வேகம் குறைந்து, நீண்ட கால அடிப்படையில் எடை குறைப்பது கடினமாகிவிடும். முக்கியமாக காலை உணவைத் தவிர்ப்பது ரத்த சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தானது. எனவே நீரிழிவு நோயாளிகள் மருத்துவ அறிவுரையோடு கட்டுப்படுத்தப்பட்ட இண்டர்மிண்டட் ஃபாஸ்டிங் இருக்கலாம்.
சிலர் காலை உணவைத் தவிர்த்தாலும் வெறும் வயிற்றில் காபி அல்லது தேநீர் குடிப்பார்கள். இதனால் அமிலத்தன்மை, வாயு மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதேபோல நீண்ட காலத்திற்கு காலை உணவைத் தவிர்ப்பது, வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும். மேலும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். இது பெண்களுக்கு PCOS மற்றும் தைராய்டு தொடர்பான பிரச்சனைகளை அதிகரிக்க வழிவகுக்கும் என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
அந்த காலத்திலெல்லாம் 3 வேளை சாப்பிட்டார்களா? நம் உடலுக்கு 3 வேளை உணவு தேவை என்பதெல்லாம் பொய். பசிக்கும்போது சாப்பிட்டால் போதும்’ என சிலர் சொல்லி கேட்டிருப்போம். இது அடிப்படையில் உண்மைதான். ஆனால் அதற்காக எந்தவித புரிதலுமின்றி காலை உணவைத் தவிர்த்துவிடுவது சரியல்ல. நம் உடலில் ஏற்கெனவே என்னென்ன ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ளன, அதையெல்லாம் எப்படி சரிசெய்வது, என்ன உணவுகளை நாம் தவிர்க்க வேண்டும் / தவிர்க்கக்கூடாது என்பதையெல்லாம் நிபுணர் ஆலோசனையோடு அறிந்து வைத்து அதன்பின்னர் உணவுக்கான நேரத்தை வகுத்துக் கொள்ளலாம்.
குழந்தைகள், மாணவர்களுக்கு காலை உணவு மிகவும் முக்கியமானது, ஏனெனில் அது அவர்களின் மூளை வளர்ச்சியையும் படிப்பில் கவனம் செலுத்துவதையும் அதிகரிக்கிறது. போலவே கர்ப்பிணிகளுக்கு கூடுதல் ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்து தேவைப்படும். அதற்கு காலை உணவு கட்டாயம் தேவை. வயதானவர்களுக்கும் காலை உணவு மிக மிக முக்கியமானது. அவர்களின் பலவீனத்தைக் குறைத்து, ஊட்டச்சத்து குறைபாட்டைப் பூர்த்தி செய்ய இது மிகவும் உதவும். இதேபோல நீரிழிவு நோயாளிக்கு, காலை உணவு என்பது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த மிகவும் தேவை. எனவே அதை தவிர்க்க வேண்டாம்.
புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கமே வரவில்லையா? படுத்தவுடன் தூங்க இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
மாறிவரும் உணவுமுறை, வாழ்வியல் மாற்றங்களின் காரணமாக பலரும் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால் உடலுக்கு சரியான ஓய்வு கிடைக்காதபோது, பணியில் சோர்வாகவும் பகல் நேரத்தில் தூக்க கலக்கமாகவும், செய்யும் வேலையில் கவனமின்மையோடும் இருக்க நேரிடும். மட்டுமன்றி தூக்கத்தில் பிரச்சனை வரும்போது, எடை சார்ந்த சிக்கல்களும் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவேதான் உறக்கமின்மையோடு தவிப்பவர்கள், எதனால் உறக்கமின்மை ஏற்படுகிறது என உணர்ந்து, அதை எப்படி தவிர்ப்பது என்பதை அறிய வேண்டும். இதுதொடர்பான விரிவான விவரங்களை வழங்குகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
முதலில் எது தூக்கமின்மை, நமக்கு இருப்பது தூக்கமின்மைதானா என்பதை அறிய வேண்டும். இதனை, இரண்டு கேள்விகளின் மூலம் நம்மால் அறிந்து கொள்ள முடியும். அந்தக் கேள்விகள்: சிலருக்கு படுத்த உடனே உறக்கம் வருவதிலும் / உறக்கம் தொடர்வதிலும் பிரச்சனை இருக்கிறதா? உறக்கம் களைந்து அடுத்த நாள் முழுவதும் சோர்வின்றி புத்துணர்வாக உணர்கிறீர்களா? இந்த இரண்டு கேள்விகளுக்கும் "இல்லை" என்ற பதில் வந்தால், உங்களுக்கு சரியான உறக்கம் கிடைப்பதில்லை / நீங்கள் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றீர்கள் என்பது பொருள்.
அடுத்தபடியாக தூக்கமின்மைக்கான காரணங்களை பார்க்கலாம். ஏற்கனவே இருக்கும் மனநலம் சார்ந்த பிரச்சனைகளின் (பதற்றம், மனத்தாழ்வு நிலை) விளைவாக உறக்கமின்மை ஏற்படக்கூடும். தற்கால சூழ்நிலையில் வரும் திடீர் மாற்றங்களால் உறக்கமின்மை ஏற்படுவதும் உண்டு. ஜெட் லேக், குறட்டை, குழந்தை பிறப்பு, அலர்ஜி, பணியிடம் சார்ந்த அழுத்தம், நெருங்கிய உறவினர்களின் மரணம் போன்றவற்றால் தற்காலிகமாக உறக்கமின்மை ஏற்படக்கூடும். அதேபோல படுக்கைக்கு சென்ற பின்னும் தவறான உறக்கம் சார்ந்த பழக்கவழக்கங்கள் இருந்தால் உறக்கமின்மை ஏற்படக்கூடும் (செல்போன் பார்ப்பது, படுக்கையறையில் டிவி பார்ப்பது போன்றவை).
உறக்கமின்மை அறிகுறிகள் இருப்பவர்களுக்கு நான்கு வகையான பிரச்சனைகள் தோன்றும். அவை, படுத்தவுடன் தூக்கம் வராமல் இருப்பது (படுத்தாலும் நீண்ட நேரம் உறக்கம் ஏற்படாமல் இருப்பது), உறக்கத்தினூடே அதிகமான கனவுகள் மற்றும் இடர்பாடுகள் ஏற்பட்டு சரியான உறக்கம் கிடைக்காதிருத்தல், உறக்கம் சரியான நேரத்துக்கு கிடைத்தாலும் அடுத்த நாள் மிகவும் சோர்வாக இருத்தல், அதிகாலை இரண்டு முதல் நான்கு மணிக்கு கண் விழித்து அதற்குப் பிறகு உறக்கம் கிடைக்காத நிலை போன்றவை.
இவற்றில் உறக்கமின்மையை தோற்றுவிக்கும் காரணிகளை சரிசெய்தால் உறக்கம் தானாக சரியாகிவிடும். சில நேரங்களில் மனத்தாழ்வு நிலை, பதட்ட நோய், அச்ச நோய், பீதி நிலை போன்றவற்றால் உறக்கமின்மை ஏற்படுமாயின் அந்த நோய்களுக்கான முறையான மனநல சிகிச்சை கிடைத்தால் உறக்கமின்மை குணமாகும். அதேபோல பொதுவாக பின் மாலை மற்றும் முன்னிரவு நேரம் தொடங்கி மூளையில் "மெலட்டோனின்" எனும் உறக்கத்திற்கான ஹார்மோன் சுரக்கப்படும். இதில் மெலட்டோனின் சுரப்பு முறையாக நிகழ்வதற்கு குறைவான ஒளி அவசியம். பளீர் என கண் முன் வெளிச்சம் பட்டுக் கொண்டே இருந்தால் மெலட்டோனின் சுரப்பு குறையும். இதனால் உறக்கமின்மை ஏற்படும். எனவே நன்கு இருட்டான இடத்தில் தூங்கினால் எளிதில் உறக்கம் வரும்.
இத்துடன் படுக்கையறையை அமைதியான குறைவான ஒளியுடன் கூடிய இடமாக அமைத்துக் கொள்வது, படுப்பதற்கு வசதியான தலையணை மற்றும் படுக்கை வைத்துக் கொள்வது, படுக்கையறையில் டிவி, ஸ்பீக்கர்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வது, உறங்கச் செல்வதற்கு இரண்டு மணிநேரங்களுக்கு முன்பாவது டிவி/ மொபைல் பார்ப்பதை நிறுத்தி விடுவது போன்றவற்றையும் செய்து வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.
இவை அனைத்துக்கும் பிறகும் படுக்கையறையில் படுத்து 15 நிமிடங்கள் ஆகியும் உறக்கம் வரவில்லையென்றால் வெறுமனே படுத்துக் கொண்டிராமல் எழுந்து வேறு அறைக்கு சென்று விட வேண்டும். அங்கு கட்டாயம் அரை மணிநேரம் முதல் ஒரு மணிநேரம் வரை அமைதியாக இருப்பது, குறைவான ஒளியில் புத்தகம் படிப்பது என்று செலவிட வேண்டும். கட்டாயம் செல் போன் / டிவி பார்க்கக்கூடாது. உறக்கம் வந்ததும் படுக்கையறைக்கு சென்று படுத்துறங்கவும். இந்த வகையில் படுக்கையறையை உறக்கத்துக்கு மட்டும் என்ற வரைமுறைக்கு கொண்டு வர முடியும். இதன் விளைவாக காலப்போக்கில் படுக்கையறைக்குள் சென்று படுத்தால் உறக்கம் தானாக வரும்.
நீரிழிவு நோயாளிகளே.. ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, தினமும் இந்தவொரு உடற்பயிற்சியை செய்ங்க!
சர்க்கரையை ரத்தத்திலிருந்து பிரித்து, உடலின் செல்களுக்குள் கொண்டு செல்லும் 'சாவி' போல இன்சுலின் செயல்படும். அங்கிருந்து சர்க்கரை ஆற்றலாக மாறும். இதுவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு இருக்கும் என்பதால் சர்க்கரை ஆற்றலாகும் சூழல் குறைந்து, சர்க்கரை அளவு ரத்தத்தில் உயர்கிறது.
நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கையும், நீரிழிவுக்கு முந்தைய நிலையிலுள்ளவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க மிக எளிமையான ஒரு உடற்பயிற்சி உள்ளது. அதை அன்றாடம் செய்து வந்தால் நீரிழிவு நோயாளிகளுக்கும், நீரிழிவுக்கு முந்தைய நிலையிலுள்ளவர்களுக்கும் ரத்த சர்க்கரை அளவு சீராக நிர்ணயிக்கப்படும் என்கின்றனர் நிபுணர்கள். அது என்ன பயிற்சி தெரியுமா? நடைப்பயிற்சிதான் அது. நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களின் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை சீராக வைப்பதற்கும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதற்கும் நடைப்பயிற்சி சிறப்பாக உதவுவதாக சொல்கின்றனர் நிபுணர்கள். அது எப்படி, ஏன் என்பது பற்றிதான் இங்கே பார்க்கப்போகிறோம்.
நமது உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவது நாம் உண்ணும் உணவிலுள்ள சர்க்கரை (எ) குளுக்கோஸ்தான். இந்தச் சர்க்கரையை ரத்தத்திலிருந்து பிரித்து, உடலின் செல்களுக்குள் கொண்டு செல்லும் ஒரு 'சாவி' போல இன்சுலின் செயல்படும். அங்கிருந்து சர்க்கரை ஆற்றலாக மாறும்.
இன்னொருபுறம், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு இருக்கும். இது இன்சுலின் உணர்திறன் குறைபாடு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் செல்கள் இன்சுலினுக்கு எதிர்ப்பாகி விடுவதால், சர்க்கரையானது ஆற்றலாக மாறாமல் அப்படியே சேர்ந்துவிடும். இதனால் ரத்த சர்க்கரை அளவுகள் உயரத் தொடங்குகின்றன. இதுவே அன்றாடம் நடைப்பயிற்சி செல்பவர்களுக்கு அவர்களின் தசைகள் ரத்த ஓட்டத்தில் இருந்து குளுக்கோஸை எரிபொருளாக எடுத்துக் கொள்ளும். இதனால் உடனடியாக ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது தடுக்கப்படும். இதனால்தான் நடைப்பயிற்சி மேற்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பயிற்சியாக பார்க்கப்படுகிறது.
எப்போது நடப்பது சிறந்தது? சாப்பாட்டுக்குப் பிறகு சுமார் 15-30 நிமிடங்கள் நடப்பது, குளுக்கோஸ் அதிகரிப்பைக் குறைக்கிறது. 10 நிமிடங்கள் நடந்தால்கூட இது நடக்கும். இதனால் ரத்த சர்க்கரை அளவு உணவுக்குப் பின் உயர்வது தடுக்கப்படுகிறது.
இதேபோல நடைப்பயிற்சியின்போது உடல் தனது ஆற்றல் திறனை அதிகம் பயன்படுத்துவதால், நாள்படும்போது எடைக்குறைப்பு நிகழும். எடை அதிகம் இருப்பது நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கலாம். ஆனால் நடைப்பயிற்சியானது எடை குறைப்பை சாத்தியப்படுத்தி, நீரிழிவுக்கான வாய்ப்பைத் தடுக்கும்.
நடக்க வேண்டும் என்பதற்காக எடுத்தவுடன் 40 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை நடக்க வேண்டாம். 10 நிமிடங்கள் என தொடங்கி பின் அதை நீட்டிக்கொள்ளுங்கள். நீங்கள் அளவுக்கு அதிகமாக நடக்கிறீர்கள் என்பதை உணர்த்த சில அறிகுறிகளும் உள்ளன. அதில் குறிப்பாக தொடர்ச்சியாக சோர்வு அல்லது கால்களில் கனமான உணர்வு, வலி போன்றவை ஏற்படும். இப்படி அதிகம் நடைப்பயிற்சி மேற்கொண்டால், தசைகளுக்கு போதுமான அளவு ஓய்வு கிடைக்காமல் அவை எளிதாக காயமடைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. நீண்ட நேரத்திற்கு சமமற்ற மேற்பரப்புகளில் நடக்கும் பொழுது இடுப்பு குறிப்பாக முட்டி மற்றும் கால்கள் அதிகமாக வலிக்கும். எனவே உங்களால் முடிந்த அளவிற்கு மட்டும் நடங்கள். கொஞ்சம் கொஞ்சமாக தூரத்தையும் நேரத்தையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்.
Click here for more Health Tip
பல் துலக்கிய பின்பும் வாயில் துர்நாற்றம் வர என்ன காரணம்..? இந்த இரண்டு பொருள் உங்க பிரச்சனைக்கு உதவலாம்..!
பற்களுக்கு இடையில் உணவுத் துகள்கள் குவிவதால் பாக்டீரியாக்கள் வளரக்கூடும். நாக்கில் வெள்ளை பூச்சு படிவதும் துர்நாற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும். மேலும், உடலில் நீர்ச்சத்து குறைதல் (நீரிழப்பு) மற்றும் முறையற்ற செரிமானம் காரணமாக இந்தப் பிரச்சினை ஏற்படலாம்.
எளிதான வீட்டு வைத்தியம்: கிராம்பு மற்றும் ஏலக்காய் துர்நாற்றத்தை உடனடியாக போக்க அற்புதங்களைச் செய்கின்றன. உணவுக்குப் பிறகு, ஒரு கிராம்பு அல்லது ஏலக்காயை உங்கள் வாயில் போட்டு மெல்லுங்கள். இவற்றின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லும். கிராம்பு எண்ணெய் ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
வேறு சில தடுப்பு நடவடிக்கைகள்: நாக்கை சுத்தம் செய்தல்: தினமும் பல் துலக்கும் போது நாக்கை சுத்தம் செய்யும் திரவத்தால் சுத்தம் செய்யுங்கள். இது பாக்டீரியா அடுக்கை நீக்கும். நிறைய தண்ணீர் குடிக்கவும்: உங்கள் வாய் வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடிப்பது உமிழ்நீர் உற்பத்தியை அதிகரித்து உங்கள் வாயை சுத்தமாக வைத்திருக்கும்.
இலவங்கப்பட்டை நீர்: இலவங்கப்பட்டை பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளிப்பது, வாய் துர்நாற்றத்தைக் குறைக்கிறது. தயிர்: உணவில் தயிரை உட்கொள்வது உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் வாய் துர்நாற்றத்தைத் தடுக்கிறது.
பல் துலக்குவதை ஒருவேளைக்கு மட்டும் பழக்கப்படுத்தாமல், காலை , மாலை என இரண்டு வேளையும் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். மேற்கண்ட குறிப்புகளைப் பின்பற்றிய பிறகும் பிரச்சனை குணமடையவில்லை என்றால், அது ஈறு நோய் அல்லது வயிறு தொடர்பான பிரச்சனையாக இருக்கலாம். பிறகு நீங்கள் நிச்சயமாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.
Click here for more Health Tip
ஒவ்வொருவருக்கும் இரத்தப் பிரிவு வெவ்வேறாக இருக்க என்ன காரணம் தெரியுமா..? மருத்துவ அறிவியல் தரும் விளக்கம்..!
ஒவ்வொரு துளி இரத்தத்திலும் உடலைப் பற்றிய முக்கியமான தகவல்கள் உள்ளன. நோயெதிர்ப்பு அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது? உடல் தன்னை எவ்வாறு பாதுகாத்துக் கொள்கிறது? இரத்தம் இது போன்ற விஷயங்களைப் பற்றி நமக்குச் சொல்கிறது.
நமது உடல்நலம் பற்றி அறிய, மருத்துவர்கள் முதலில் இரத்த பரிசோதனையை பரிந்துரைக்கின்றனர். ஒவ்வொரு துளி இரத்தத்திலும் உடலைப் பற்றிய முக்கியமான தகவல்கள் உள்ளன. நோயெதிர்ப்பு அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது? உடல் தன்னை எவ்வாறு பாதுகாத்துக் கொள்கிறது? இரத்தம் இது போன்ற விஷயங்களைப் பற்றி நமக்குச் சொல்கிறது. இரத்தக் குழுக்கள் சீரற்ற பெயர்கள் அல்ல. அவை இரத்த சிவப்பணுக்களில் உள்ள சிறப்பு குறிப்பான்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.
இந்த இரத்த வகை எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது? சிவப்பு இரத்த அணுக்களில் சிறிய அடையாளங்கள் உள்ளன. இந்த அடையாளங்கள் ஆன்டிஜென்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றை பேட்ஜ்கள் என்று கருதலாம். இரத்த அணுக்களில் உள்ள முக்கிய அடையாளங்கள்: - ஒரு அடையாளச் சின்னம் - AB அடையாளச் சின்னம் - A மற்றும் B அடையாளச் சின்னங்கள் - எந்த அடையாளச் சின்னமும் இல்லை.
இந்த பேட்ஜ்கள் நான்கு முக்கிய இரத்த வகைகளை தீர்மானிக்கின்றன: A, B, AB, மற்றும் O. உங்கள் உடல் இந்த பேட்ஜ்களை ஒவ்வொரு நாளும் சரிபார்க்கிறது. அது அதன் சொந்த இரத்த அணுக்களைத் தாக்குவதில்லை. ஆனால் வேறு குறியுடன் கூடிய இரத்தம் உள்ளே வந்தால் உடனடியாக எதிர்வினையாற்றுகிறது.
நேர்மறை மற்றும் எதிர்மறை என்றால் என்ன? A மற்றும் B குறிப்பான்களுடன், Rh காரணி எனப்படும் மற்றொரு முக்கியமான குறிப்பான் உள்ளது. உங்களிடம் Rh மார்க்கர் இருந்தால், உங்கள் இரத்தக் குழு நேர்மறை. உங்களிடம் அது இல்லையென்றால், உங்கள் இரத்தக் குழு எதிர்மறை. உதாரணமாக, A நேர்மறை, O எதிர்மறை, AB நேர்மறை மற்றும் B எதிர்மறை போன்ற இரத்தக் குழுக்கள் உள்ளன. இரத்தமாற்றம் மற்றும் கர்ப்ப காலத்தில் இந்த Rh காரணி மிகவும் முக்கியமானது. உடல் அறியப்படாத Rh மார்க்கருடன் இரத்தத்தைக் கண்டறிந்தால், அது வலுவாக செயல்படுகிறது. அதனால்தான் மருத்துவர்கள் எப்போதும் (A, B, AB, O) மற்றும் நேர்மறை அல்லது எதிர்மறை மார்க்கர் இரண்டையும் சரிபார்க்கிறார்கள்.
இரத்தம் ஏன் வேறுபட்டது? இரத்த வகைகள் பெற்றோரிடமிருந்து பெறப்படுகின்றன. இரத்த சிவப்பணுக்களில் எந்த குறிப்பான்கள் உள்ளன என்பதை மரபணுக்கள் தீர்மானிக்கின்றன. அதனால்தான் ஒரே குடும்பத்தில் உள்ள சகோதர சகோதரிகள் கூட வெவ்வேறு இரத்த வகைகளைக் கொண்டிருக்கலாம். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு பெற்றோரிடமிருந்தும் வெவ்வேறு மரபணுக்களின் கலவையைப் பெறுகிறது. ஒரே மாதிரியான இரட்டையர்கள் மட்டுமே பொதுவாக ஒரே மரபணுக்களைக் கொண்டுள்ளனர்.
இரத்தக் குழுக்கள் உடலை எவ்வாறு பாதுகாக்கின்றன? உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு ஒரு பாதுகாவலர் போல செயல்படுகிறது. வேறு ஒரு குழுவின் இரத்தம் உள்ளே நுழைந்தால், நோயெதிர்ப்பு அமைப்பு அதைத் தாக்கக்கூடும். இது ஆபத்தானது. அதனால்தான் மருத்துவமனைகள் இரத்தமாற்றத்திற்கு முன் இரத்தக் குழுவைச் சரிபார்க்கின்றன. குறிப்பான்கள் பொருந்தும்போது, எந்தப் பிரச்சினையும் இல்லை. அவை பொருந்தாதபோது, உடல் புதிய இரத்தத்தை ஊடுருவும் நபராகக் கருதுகிறது. அதனால்தான் மருத்துவ அவசரநிலைகள், அறுவை சிகிச்சைகள், இரத்த தானம் மற்றும் பெற்றோர் ரீதியான பராமரிப்பு ஆகியவற்றின் போது இரத்தக் குழு முக்கியமானதாக கருதப்படுகிறது.
Papaya | பப்பாளி சாப்பிடுவதை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்.. இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..!
எல்லா சீசன்களிலும் நமக்கு எளிதாக கிடைக்கும் ஒரு பழம் பப்பாளி ஆகும். இதில் டயட்ரி ஃபைபர் சத்து, அத்தியாவசிய வைட்டமின்ஸ் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன. இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் கேன்சர் ஏற்படும் அபாயம் குறைவு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மேலும் பப்பாளி பழமானது உடல் எடை மேலாண்மைக்கும் பயனுள்ளதாக இருக்கும். எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், பப்பாளி பழம் அனைவரும் சாப்பிடுவதற்கு ஏற்றது அல்ல என்பது உங்களுக்கு தெரியுமா?. ஆம்... பப்பாளி சாப்பிடுவது சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடும். இந்த பழத்தை யார் எல்லாம் சாப்பிடக் கூடாது என்று இங்கே தெரிந்து கொள்வோம்.
கர்ப்பிணிப் பெண்கள்: கர்ப்பிணிப் பெண்கள் கண்டிப்பாக ஆரோக்கியமான டயட்டை பின்பற்ற வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கர்ப்பிணி பெண்கள் பப்பாளி சாப்பிட கூடாது. ஏனென்றால் இந்த பழத்தில் லேடெக்ஸ் என்ற ஒரு கலவை உள்ளது. இது கருப்பை சுருக்கங்களை (uterine contractions) ஏற்படுத்தி கருக்கலைப்பு அல்லது முன்கூட்டிய பிரசவத்திற்கு வழிவகுக்கும். தவிர பப்பாளியில் உள்ள பப்பேன் என்ற நொதி கருக்கலைவிற்கு காரணமாகி விடக் கூடும்.
சீரற்ற இதய துடிப்பு கொண்டவர்கள்: பப்பாளி இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எனினும் சீரற்ற இதய துடிப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பழம் அவ்வளவு நல்லதல்ல. இதில் சயனோஜெனிக் கிளைகோசைட்ஸ் எனப்படும் அமினோ ஆசிட் மிதமான அளவில் உள்ளது. இது செரிமான அமைப்பில் ஹைட்ரஜன் சயனைடை உருவாக்குகிறது. ஒரு குறிப்பிட்ட அளவில் எடுத்து கொண்டால் பப்பாளி எந்தத் தீங்கும் விளைவிக்காது. இருப்பினும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஒழுங்கற்ற இதயத் துடிப்புகளின் பிரச்சனை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஹைப்போ தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களும் பப்பாளி பழத்தால் இதே போன்ற எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும்.
லேடெக்ஸ் அலர்ஜி: லேடெக்ஸ் அலர்ஜி உள்ளவர்கள் பப்பாளி பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இதில் இருக்கும் கைட்டினேஸஸ் எனப்படும் நொதிகள், லேடெக்ஸ் புரதங்களுடன் கிராஸ்-ரியாக்ட் புரிந்து பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. தும்மல், இருமல், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் கண்களில் நீர் வடிதல் உள்ளிட்டவை அறிகுறிகளாகும். சிலருக்கு பப்பாளியின் வாசனை கூட வராது.
சிறுநீரக கற்கள்: வலுவான ஆன்டிஆக்சிடன்ட்டான வைட்டமின் சி பப்பாளி பழத்தில் அதிகமாக உள்ளது. ஏற்கனவே சிறுநீரக கற்கள் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஊட்டச்சத்தை அதிகமாக உட்கொள்வது நிலைமையை மோசமாக்கும். வைட்டமின் சி அதிகமாக உட்கொள்வதால், கால்சியம் ஆக்சலேட் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயமும் அதிகரிக்கிறது.
ரத்த சர்க்கரை அளவு குறைவாக உள்ளவர்கள்: நீரிழிவு நோயை நிர்வகிக்க பப்பாளி ஒரு சிறந்த வழி. எனினும் குறைந்த ரத்த சர்க்கரை அளவு (ஹைபோகிளைசீமியா) உள்ளவர்களுக்கு இந்த பழம் அவ்வளவு நல்லதல்ல. இந்த பழத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் இயற்கை பண்புகள் உள்ளன. எனவே ஏற்கனவே ஹைபோகிளைசீமியா நிலை உள்ளவர்கள் பப்பாளி பழத்தை சாப்பிட்டால் அவர்களின் ரத்த சர்க்கரை அளவானது ஆபத்தான அளவிற்குக் குறையக் கூடும்.
தினமும் 30 நிமிடங்கள் நடந்தாலே.. நம் உடலில் இத்தனை மாற்றங்கள் நடக்குமா..?
உடலை ஆரோக்கியமாகவும் ஃபிட்னஸாகவும் வைத்திருக்க ஜிம் செல்ல வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட நேரம் நடைபயிற்சி செய்தாலே போதும் என்கிறார்கள் நிபுணர்கள்.
நாம் நடந்த பிறகு நம் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும்? ஒரு எளிய, நிதானமான நடைப்பயணம் பல அதிசயங்களைச் செய்யும்! உங்கள் மனநிலையை அதிகரிப்பதில் இருந்து உங்கள் எலும்புகளை வலுப்படுத்துவது வரை, தினசரி நடைப்பயணம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் எதிர்பார்க்காத வழிகளில் மாற்றும்.
தினமும் 30 நிமிடங்கள் நடப்பது உங்கள் உடலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நாங்கள் உங்களிடம் சொன்னால் நம்புவீர்களா? இதற்காக நீங்கள் நடக்கும் அடிகளை எண்ணவோ அல்லது வியர்வை சிந்தவோ தேவையில்லை. ஒரு எளிய, நிதானமான நடைப்பயணம் பல அதிசயங்களைச் செய்யும்! உங்கள் மனநிலையை அதிகரிப்பதில் இருந்து உங்கள் எலும்புகளை வலுப்படுத்துவது வரை, தினசரி நடைப்பயணம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் எதிர்பார்க்காத வழிகளில் மாற்றும். குறைத்து மதிப்பிடப்படும் நடைப்பயிற்சியின் சில சிறந்த நன்மைகள் இதோ!
உங்கள் எலும்புகள் வலுவடைகின்றன : நடைப்பயிற்சி என்பது எடை தாங்கும் பயிற்சி. அதாவது உங்கள் எலும்புகள் ஈர்ப்பு விசைக்கு எதிராக செயல்பட வேண்டும். இது எலும்பு அடர்த்தியை மேம்படுத்த உதவுகிறது. வயதாகும்போது எலும்புப்புரை மற்றும் எலும்பு முறிவுகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. உங்கள் எலும்புக்கூட்டை உறுதியாகவும் வலுவாகவும் வைத்திருக்க, இதை ஒரு பயிற்சியாக வைத்துப் கொள்ளுங்கள்!
உங்கள் மனநிலையை உற்சாகப்படுத்தும் : கொஞ்சம் எரிச்சலாகவோ அல்லது மன அழுத்தமாகவோ உணர்கிறீர்களா? 30 நிமிட நடைப்பயிற்சி இந்த நிலைமையை மாற்றும்! நடைப்பயிற்சி "நல்ல உணர்வு" ஹார்மோன்கள் என்றும் அழைக்கப்படும் எண்டோர்பின்களின் வெளியீட்டைத் தூண்டுகிறது. இது பதட்டம், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் கூட குறைக்க உதவுகிறது. இதை ஒரு இலவச சிகிச்சை அமர்வாகக் கருதுங்கள்.
நல்ல தூக்கத்திற்கு உதவும் : இரவில் புரண்டு புரண்டு படுக்கிறீர்களா? தினசரி நடைப்பயிற்சி உங்கள் தூக்க சுழற்சியை சீராக்க உதவும். இதனால் தூங்குவது எளிதாகி, ஆழ்ந்த தூக்கம் வரும். நடைபயிற்சி மன அழுத்தத்தைக் குறைத்து, உங்கள் உடலின் இயற்கையான தாளத்தை சீராக்க உதவுகிறது, இதனால் ஆழ்ந்த மற்றும் நிம்மதியான தூக்கம் வரும்.
இனி மதிய வேளையில் தூக்கம் வராது : இது விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் உங்கள் உடலை நகர்த்துவது உண்மையில் அதிக சக்தியைத் தருகிறது. நடைபயிற்சி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. உங்கள் செல்களுக்கு அதிக ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இனி மந்தமான மதியத்திற்கு விடைகொடுங்கள். உங்கள் தினசரி நடைப்பயிற்சி காபியை விட சிறந்ததாக இருக்கலாம்!
நோய்க்கு எதிரான கவசம் : தொடர்ந்து நடப்பது இதய நோய், பக்கவாதம், டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சனைகள் உருவாகும் வாய்ப்புகளைக் குறைக்கும். இது இரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது. கொழுப்பைக் குறைக்கிறது மற்றும் உங்கள் இதயத்தை சிறந்த நிலையில் வைத்திருக்க உதவுகிறது. ஆரோக்கியமான எதிர்காலத்தில் முதலீடு செய்வதற்கான எளிதான வழிகளில் ஒன்று எளிமையான நடைப்பயணமாகும்.
எளிதாக கலோரிகளை எரிக்கலாம் : ஜிம்மிற்குச் செல்லாமல் ஆரோக்கியமான எடையை பராமரிக்க விரும்புகிறீர்களா? கலோரிகளை எரிக்கவும், அதிகப்படியான எடையைத் குறைக்கவும் நடைப்பயிற்சி ஒரு சிறந்த வழியாகும். கூடுதலாக, இது உங்கள் கால்கள், உடலின் மையப்பகுதி மற்றும் இடுப்புகளை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் தீவிரமான உடற்பயிற்சிகளின் தொந்தரவு இல்லாமல் உங்களுக்கு நுட்பமான உடற்பயிற்சி ஊக்கத்தை அளிக்கிறது.
Diabetes Tips | நீரிழிவு நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா..? நிபுணர்கள் சொல்வது என்ன..?
நீரிழிவு நோய் சமீப காலமாக பலருக்கும் ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. வயது வித்தியாசமின்றி அனைவரையும் இந்த நோய் பாதிக்கிறது. நீரிழிவு நோய் வருவது ஒரு பெரிய பிரச்சனை என்றாலும், அது வந்த பிறகு உங்கள் உணவுப் பழக்கத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீரிழிவு நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா? இல்லையா? என்ற கேள்விக்கான பதிலை இப்போது பார்ப்போம்.
கரும்பு அல்லது பனை சாற்றில் இருந்து வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதில் இரும்பு, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற முக்கியமான தாதுக்கள் உள்ளன. அதனால்தான் வெல்லம் சாப்பிடுவது ஆயுர்வேதத்திலும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு வெல்லம் நல்லதா?. நீரிழிவு நோயாளிகள் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வெல்லம் இயற்கையானது என்றாலும், அதில் அதிக கிளைசெமிக் குறியீடு (GI) உள்ளது. இதன் பொருள் இது ரத்த சர்க்கரையை விரைவாக அதிகரிக்கும். எனவே, நீரிழிவு நோயாளிகள் வெல்லம் சாப்பிடுவது ஆபத்தானது.
வெல்லம் சர்க்கரையை விட ஜீரணிக்க சிறிது நேரம் எடுக்கும். ஆனால் அதன் விளைவு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கிறது. எனவே, அதை சாப்பிடுவது ரத்த சர்க்கரையில் திடீர் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். வெல்லத்தில் கலோரிகள் அதிகம். அடிக்கடி உட்கொள்வது எடை அதிகரிக்க வழிவகுக்கும். இது நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.
வெல்லத்தில் அதிக அளவு சுக்ரோஸ் (ஒரு வகை சர்க்கரை) உள்ளது. இது உடலில் விரைவாக குளுக்கோஸாக மாற்றப்படுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, வெல்லம் சாப்பிட யாராவது உங்களுக்கு அறிவுறுத்தினாலும், அதைப் பின்பற்ற வேண்டாம்.
வெல்லத்தை தொடர்ந்து உட்கொண்டால், உடல் குறைவான இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இது கடுமையான நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும் மற்றும் வெளியில் இருந்து இன்சுலின் எடுக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தும். நிபுணர்களின் கூற்றுப்படி, நீரிழிவு நோயாளிகள் வெல்லம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இல்லையென்றால் மிகக் குறைந்த அளவில் சாப்பிடலாம் என்று சொல்லப்படுகிறது. வெல்லம் சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாகத் தோன்றினாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஏற்றதல்ல. எனவே எதையும் சாப்பிடுவதற்கு முன்பு, மருத்துவரை அணுக வேண்டும்.
உங்க குடல் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது..? தெரிஞ்சுக்க இதை படிங்க..!
உங்கள் செரிமான அமைப்பு உணவை பதப்படுத்தும் வேகம், செரிமான ஆரோக்கியத்தின் முக்கிய குறிகாட்டியாகும். இது ஊட்டச்சத்து உறிஞ்சுதல், கழிவு நீக்கம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வைப் பாதிக்கிறது. மந்தமான குடல் செயபாடு வீக்கம், மலச்சிக்கல் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கான அதிக ஆபத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில் அதிகப்படியான குடல் இயக்கம், ஊட்டச்சத்து உறிஞ்சிதலில் கேடு விளைவிக்கும். வழிவகுக்கும். உங்கள் குடல் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
செரிமான செயல்முறை
நீங்கள் உணவை மென்று விழுங்கியவுடன், அது இரைப்பை குடல் பாதை வழியாக நகர்கிறது பின்னர் அது இந்த உறுப்புகள் வழியாக செல்கிறது: வயிற்றில் கலக்கப்பட்டு ஜீரணிக்கப்படுகிறது; ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுகிறது சிறு குடல்; கழிவுகள் வெளியேற்றப்படுவதற்கு முன்பு தண்ணீர் மற்றும் உப்புகளை பிரித்தெடுக்கிறது பெரிய குடல்..
குடல் இயக்கம் என்றால் என்ன?
குடல் இயக்கம் என்பது செரிமான அமைப்பு வழியாக உணவின் இயக்கத்தைக் குறிக்கிறது. இது நமது குடலில் உள்ள டிரில்லியன் கணக்கான பாக்டீரியாக்களால் ஓரளவு கட்டுப்படுத்தப்படும் செயல்முறையாகும். இந்த நுண்ணுயிரிகள் உணவை உடைப்பதிலும், நோயெதிர்ப்பு மண்டல வளர்ச்சியை ஆதரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் குடல் நுண்ணுயிரியை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியமாக்குகிறது.
இந்த பாக்டீரியாக்கள் மற்றும் அவற்றின் துணைப் பொருட்கள் இல்லாமல், உணவை திறம்பட நகர்த்தும் உடலின் திறன் குறைந்து, அசௌகரியம், மலச்சிக்கல் மற்றும் செரிக்கப்படாத பொருட்களின் குவிப்புக்கு வழிவகுக்கும்.

குடல் போக்குவரத்து (Gut Transit) நேரம் என்றால் என்ன?
குடல் போக்குவரத்து நேரம் என்பது உணவு முழு செரிமானப் பாதை வழியாகவும் பயணிக்க எடுக்கும் நேரத்தைக் குறிக்கிறது. இந்த கால அளவு நபருக்கு நபர் மாறுபடும். சராசரியாக, உணவு உடலைக் கடந்து செல்ல சுமார் 23 முதல் 24 மணி நேரம் ஆகும். ஆனால் இதன் வரம்பு 12 முதல் 73 மணி நேரம் வரை இருக்கலாம்.
குடல் செயல்பாட்டு நேரம் மெதுவாக இருக்கும்போது, அது குடல் இயக்கம் குறைவாக இருப்பதைக் குறிக்கிறது. இது பெருங்குடலில் பாக்டீரியா செயல்பாட்டில் மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது. மனிதர்களைப் போலவே, குடல் பாக்டீரியாக்களுக்கும் ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. இருப்பினும், நார்ச்சத்து பெருங்குடலை அடைய அதிக நேரம் எடுத்தால், இந்த நுண்ணுயிரிகள் ஜீரணிக்கும் புரதத்திற்கு மாறக்கூடும். இந்த மாற்றம் தீங்கு விளைவிக்கும் வாயுக்களை உருவாக்கி, வீக்கம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

வீட்டிலேயே உங்கள் குடல் வேகத்தைச் சரிபார்க்கலாம்
7 முதல் 10 நாட்களுக்கு இனிப்பு சோளம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். பின்னர் ஒரு கைப்பிடி அளவு இனிப்புச் சோளம் அல்லது சோளத்தை சாப்பிடுங்கள். நேரம் மற்றும் தேதியைக் குறித்து வைத்துக்கொள்ளவும்.
.அடுத்த சில நாட்களுக்கு உங்கள் மலத்தைக் கவனித்து, சோளத்தின் வெளிப்புற ஓடுகளை நீங்கள் முதலில் கவனிக்கும்போது பதிவு செய்யவும்.
இது உறுதியான மருத்துவ பரிசோதனை இல்லையென்றாலும், இந்த எளிய முறை உணவு முழு செரிமானப் பாதை வழியாகவும் பயணிக்க எடுக்கும் நேரத்தின் நியாயமான மதிப்பீட்டை வழங்குகிறது. சோளம் 12 மணி நேரத்திற்குள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் தோன்றினால், உங்கள் செரிமானம் வேகமாக இருப்பதாக அர்த்தம். 48 மணிநேரம் அல்லது அதற்கு மேல் எடுத்தால், உங்கள் Gut Transit மெதுவாக இருக்கிறது என அர்த்தம்.
வைட்டமின் பி12 உறிஞ்சுதலை எளிமையாக்கும் உணவுகள்.. இவற்றை தவறாமல் சாப்பிடுங்க..!
மேலும், ஆற்றல் உற்பத்தி, நோயெதிர்ப்பு செயல்பாடு, இரத்தம் உறைதல், எலும்புகள் மற்றும் திசுக்களின் பராமரிப்பு ஆகியவற்றில் வைட்டமின்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலானது உணவு மற்றும் பிற மூலங்களிலிருந்து வைட்டமின்களைப் பெறுகிறது. அதிலும் உடலில் இந்த வைட்டமின் குறைபாடு இருந்தால், பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன.
வைட்டமின் பி 12 என்பது நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும், இது உடலில் பல முக்கிய செயல்பாடுகளை செய்கிறது. இந்த வைட்டமின் பி 12 குறைபாடு ஆனது பெரும்பாலும் உணவுப் பழக்கவழக்கங்கள், மருத்துவ நிலைமைகள் அல்லது பி 12 ஐக் குறைக்கும் சில மருந்துகளின் பயன்பாடு ஆகியவற்றால் ஏற்படுகிறது. வயது அதிகரிக்கும் போது, உணவில் இருந்து பி12-ஐ உறிஞ்சும் திறனும் குறைகிறது. அதனால் வயதானவர்களிடம் இந்தக் குறைபாடு அதிகமாக காணப்படுகிறது. அதிலும் இந்த குறைபாடு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது.
வைட்டமின் பி12 ஆனது நரம்பு திசு, மூளை செயல்பாடு, சிவப்பு இரத்த அணுக்கள் ஆகியவற்றிற்கு இது முக்கியமானது. இது குறித்து அனுபவம் வாய்ந்த மருத்துவர் திவ்யா நாஸ் கூறியதாவது, வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் மட்டும் போதாது. நம் உடலும் அதைச் சரியாக உறிஞ்சிக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
தயிர், இட்லி, தோசை போன்ற புளித்த உணவுகள் குடல் பாக்டீரியாவை அதிகரிக்கும். இது வைட்டமின் பி12 ஐ எளிதில் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. எனவே ஒவ்வொரு நாளும் குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் வரை சூரிய ஒளியில் இருப்பது குடல் ஆரோக்கியத்தை சீராக்க உதவும். இதன் விளைவாக, உடல் வைட்டமின் பி12 உறிஞ்சுவதை மேம்படுத்தப்படுகிறது.
வைட்டமின் பி 12 உறிஞ்சுவதை காஃபின் தலையிடுகிறது. எனவே, சாப்பிட்ட உடனேயே டீ, காபி போன்றவற்றை குடிக்காமல் இருப்பது நல்லது. மேலும், கீரை, பருப்பு, பீட்ரூட் ஆகியவை இரத்த சிவப்பணு உற்பத்தியை மேம்படுத்துகின்றன. இதன் விளைவாக, வைட்டமின் பி 12 உடலில் சிறப்பாகப் உறிஞ்சப்படுகின்றன.
பால் பொருட்கள் மற்றும் காளான்களை அதிகம் சமைப்பதால், அதில் உள்ள வைட்டமின் பி12 அழிக்கப்படுகிறது. எனவே அதற்கு பதிலாக, லேசாக சமைக்கவும். ஆரோக்கியமான செரிமான அமைப்பு வைட்டமின் பி12 உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. எனவே நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.
Cervical Cancer | கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 4 விஷயங்கள்!
கடந்த 2022 இல் மட்டும் இந்த புற்றுநோயால் சுமார் 3.5 லட்சம் இறப்புகள் பதிவாகியுள்ளன. கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கருப்பை வாயின் செல்களில் உருவாகிறது. கருப்பையின் கீழ் பகுதியில் பிறப்புறுப்புடன் இது இணைகிறது. இந்த புற்றுநோய் குறித்து பெரும் அச்சுறுத்தல் இருந்தாலும், ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டால் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கலாம் அல்லது திறம்பட சிகிச்சையளிக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அதிக ஆபத்துள்ள ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தான், பெண்களின் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான பொதுவான காரணங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்பது, பாலியல் தொடர்பு மூலம் பரவும் ஒரு பொதுவான தொற்று ஆகும். தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் அறிக்கைகளின்படி, உலகளவில் 70% கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களுக்கு எச்பிவி 16 மற்றும் எச்பிவி 18 ஆகியவை அதிக ஆபத்தை விளைவிப்பதாக தெரிவித்துள்ளது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகள் பெரும்பாலும் புலப்படுவதில்லை. இதனால் அதைக் கண்டறிவது பெண்களுக்கு சவாலான விஷயமாக இருக்கிறது. எனவே, பெண்கள் இந்த புற்றுநோய் பற்றி அறிந்திருக்க வேண்டும் மற்றும் அதன் அபாயத்தைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைப் பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
ஆரம்ப அறிகுறிகளைப் புறக்கணிக்க வேண்டாம்: கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள் பெரும்பாலும் வெளிப்படையாக இல்லை என்றாலும், அசாதாரண ரத்தப்போக்கு (குறிப்பாக உடலுறவுக்குப் பிறகு), தீவிர இடுப்பு வலி அல்லது அசாதாரண வெளியேற்றம் போன்ற அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
வழக்கமான பரிசோதனை: பாப் ஸ்மியர் சோதனைகள் அல்லது எச்பிவி சோதனைகள் போன்ற வழக்கமான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனைகள், கருப்பை வாயில் அசாதாரண சூழல் அல்லது அசாதாரண செல் செயல்பாடுகளைக் கண்டறிய உதவும். குறிப்பாக, 21 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இந்த பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படுகிறது. இதன் வழக்கமான பரிசோதனைகள், புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியவும், உயிரைக் காக்கவும் உதவுகிறது.
எச்பிவி தான் முக்கிய காரணம்: பெரும்பாலான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வழக்குகள், ஹீயூமன் பாப்பிலோமா வைரஸால் (HPV) ஏற்படுகின்றன. இது பாலியல் தொடர்புகளின் போது பரவும் ஒரு பொதுவான தொற்று ஆகும். அனைத்து எச்பிவி தொற்றுகளும் புற்றுநோய்க்கு வழிவகுக்காது என்றாலும், சில தொடர்ச்சியான தொற்றுகள் இதன் ஆபத்தை அதிகரிக்கும். எனவே, எச்பிவி தடுப்பூசியை போட்டுக் கொள்வது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க உதவும்.
வாழ்க்கை முறை தேர்வுகள்: வழக்கமான வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் ஒருவரது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதும் அடங்கும். மேலும், புகைப்பிடிப்பதை விட்டுவிட்டு பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்வதும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும்.
சளி, இருமல், நோய் எதிப்பு சக்தி.. குழந்தைக்கு தரும் பாலில் இந்த ஒரு மசலாவை கலந்து கொடுங்க..
இரவில் குழந்தைக்கு பாலில் இலவங்கப்பட்டை சேர்ப்பது தூக்கம், செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி, ரத்த சர்க்கரை கட்டுப்பாடு, மூளை செயல்பாடு மற்றும் சளி, இருமல் போன்றவற்றுக்கு உதவும்.
உங்கள் குழந்தை போதுமான ஊட்டச்சத்து பெறுகிறதா என்ற கவலை உங்கள் மனதில் அடிக்கடி எழுகிறதா? ஒரு கிளாஸ் பால் உங்கள் குழந்தை தவறவிடும் ஊட்டச்சத்துக்களை ஈடுசெய்யும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?உங்கள் குழந்தைக்கு இரவில் வழக்கமாக ஒரு கிளாஸ் பால் கொடுக்கிறீர்கள் என்றால், அதில் ஒரு எளிய மசாலா பொருளை சேர்ப்பது அவர்கள் குடிக்கும் பாலின் சுவை மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். அது என்ன மசாலா என்று கேட்கிறீர்களா, இலவங்கப்பட்டை தன அது. உங்கள் குழந்தை இரவில் குடிக்கும் பாலில் இந்த அற்புத மசாலாவை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் இங்கே..
நம் அன்றாட சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மசாலா பொருளாக உள்ளது ஒரு லேசான இனிப்பு சுவையை கொண்டுள்ள இலவங்கப்பட்டை. பாலில் இதை சேர்ப்பது உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
- இலவங்கப்பட்டை வழங்கும் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்று, சிறந்த தூக்கத்திற்கு உதவும் அதன் திறன். இந்த மசாலா பொருளில் உள்ள இயற்கை சேர்மங்கள் உடலையும், மனதையும் ரிலாக்ஸாக வைக்கவும், அமைதியான தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. இதை சூடான பாலில் சேர்க்கும் போது நல்ல தரமான தூக்க கிடைக்கும் வகையிலான கலவையை உடலில் உருவாக்கும். பாலின் சூடு மற்றும் இலவங்கப்பட்டையின் இயற்கை தன்மை இரண்டும் சேர்ந்து படுக்கை நேரத்திற்கு ஏற்ற பானமாக அமைந்து நன்கு தூங்க உதவுகிறது.
- இலவங்கப்பட்டையில் இயற்கையாகவே காணப்படும் அழற்சி எதிர்ப்பு பண்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு போன்றவை செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றன. செரிமான கோளாறு அல்லது அஜீரண பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு, இலவங்கப்பட்டை கலந்து ஒரு கப் சூடான பால் கொடுப்பது வயிறு உப்பசம் மற்றும் வாயு தொல்லையை குறைக்க உதவும். செரிமான நொதிகளின் உற்பத்தியை மேம்படுத்த, நம் உடல் உணவின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதை உறுதி செய்ய மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகளை குறைக்க இலவங்கப்பட்டை உதவுகிறது.
- குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள், இலவங்கப்பட்டையில் அதிகம் உள்ளது. இவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை எதிர்த்து போராடி, ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது, இதன் மூலம் நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைகிறது. எனவே வழக்கமான அடிப்படையில் இரவில் உங்கள் குழந்தைக்கு கொடுக்கும்பாலில் இலவங்கப்பட்டை சேர்ப்பதனால், உங்களின் குழந்தையினுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
- ரத்த சர்க்கரை அளவை இலவங்கப்பட்டை ஒழுங்குபடுத்துகிறது. உங்கள் குழந்தையின் ரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கமாக இருந்தால் அல்லது நீரிழிவு அபாயத்தில் இருந்தால் டயட்டில் இலவங்கப்பட்டை சேர்ப்பது ரத்த சர்க்கரை லெவலை கட்டுப்படுத்த உதவும். இரவு நேரம் குடிக்கும் பாலில் சிறிதளவு இலவங்கப்பட்டை சேர்ப்பது ஆரோக்கியமான குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்திற்கு கணிசமாக பங்களிக்கும்.
- மூளை செயல்பாடு மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த மற்றும் அறிவாற்றல் திறன்களை அதிகரிக்க உதவும் சேர்மங்கள் இலவங்கப்பட்டையில் உள்ளன. எனவே படிப்பில் கவனம், மன தெளிவு மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க தேவைப்படும் குழந்தைகளுக்கு இந்த மசாலா மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே குழந்தைக்கு இரவில் கொடுக்கும் பாலில் இதனை சேர்ப்பது குழந்தைகள் தங்களின் அன்றாட நடவடிக்கைகளில் சிறந்த செயல்திறனை பேணுவதற்கு உதவும்.
- குளிர் சீசனில் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி மற்றும் இருமலுக்கு இயற்கை தீர்வாக இலவங்கப்பட்டை இருக்கும். இதில் ஆன்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, எனவே தொண்டை புண் மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெற உதவும். இலவங்கப்பட்டை சேர்க்கப்பட்ட ஒரு கப் சூடான பால் தொண்டை வலியைத் தணிக்கும், இருமலை குறைக்கும். இதனால் உங்கள் குழந்தை இரவில் மிகவும் சௌகரியமாக தூங்க முடியும்.
உங்கள் குழந்தைக்கு இரவில் வழக்கமாக ஒரு கிளாஸ் பால் கொடுக்கிறீர்கள் என்றால், அதில் ஒரு எளிய மசாலா பொருளை சேர்ப்பது அவர்கள் குடிக்கும் பாலின் சுவை மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். அது என்ன மசாலா என்று கேட்கிறீர்களா, இலவங்கப்பட்டை தன அது. உங்கள் குழந்தை இரவில் குடிக்கும் பாலில் இந்த அற்புத மசாலாவை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் இங்கே..
நம் அன்றாட சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மசாலா பொருளாக உள்ளது ஒரு லேசான இனிப்பு சுவையை கொண்டுள்ள இலவங்கப்பட்டை. பாலில் இதை சேர்ப்பது உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
- இலவங்கப்பட்டை வழங்கும் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்று, சிறந்த தூக்கத்திற்கு உதவும் அதன் திறன். இந்த மசாலா பொருளில் உள்ள இயற்கை சேர்மங்கள் உடலையும், மனதையும் ரிலாக்ஸாக வைக்கவும், அமைதியான தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. இதை சூடான பாலில் சேர்க்கும் போது நல்ல தரமான தூக்க கிடைக்கும் வகையிலான கலவையை உடலில் உருவாக்கும். பாலின் சூடு மற்றும் இலவங்கப்பட்டையின் இயற்கை தன்மை இரண்டும் சேர்ந்து படுக்கை நேரத்திற்கு ஏற்ற பானமாக அமைந்து நன்கு தூங்க உதவுகிறது.
- இலவங்கப்பட்டையில் இயற்கையாகவே காணப்படும் அழற்சி எதிர்ப்பு பண்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு போன்றவை செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றன. செரிமான கோளாறு அல்லது அஜீரண பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு, இலவங்கப்பட்டை கலந்து ஒரு கப் சூடான பால் கொடுப்பது வயிறு உப்பசம் மற்றும் வாயு தொல்லையை குறைக்க உதவும். செரிமான நொதிகளின் உற்பத்தியை மேம்படுத்த, நம் உடல் உணவின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதை உறுதி செய்ய மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகளை குறைக்க இலவங்கப்பட்டை உதவுகிறது.
- குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள், இலவங்கப்பட்டையில் அதிகம் உள்ளது. இவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை எதிர்த்து போராடி, ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது, இதன் மூலம் நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைகிறது. எனவே வழக்கமான அடிப்படையில் இரவில் உங்கள் குழந்தைக்கு கொடுக்கும்பாலில் இலவங்கப்பட்டை சேர்ப்பதனால், உங்களின் குழந்தையினுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
- ரத்த சர்க்கரை அளவை இலவங்கப்பட்டை ஒழுங்குபடுத்துகிறது. உங்கள் குழந்தையின் ரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கமாக இருந்தால் அல்லது நீரிழிவு அபாயத்தில் இருந்தால் டயட்டில் இலவங்கப்பட்டை சேர்ப்பது ரத்த சர்க்கரை லெவலை கட்டுப்படுத்த உதவும். இரவு நேரம் குடிக்கும் பாலில் சிறிதளவு இலவங்கப்பட்டை சேர்ப்பது ஆரோக்கியமான குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்திற்கு கணிசமாக பங்களிக்கும்.
- மூளை செயல்பாடு மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த மற்றும் அறிவாற்றல் திறன்களை அதிகரிக்க உதவும் சேர்மங்கள் இலவங்கப்பட்டையில் உள்ளன. எனவே படிப்பில் கவனம், மன தெளிவு மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க தேவைப்படும் குழந்தைகளுக்கு இந்த மசாலா மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே குழந்தைக்கு இரவில் கொடுக்கும் பாலில் இதனை சேர்ப்பது குழந்தைகள் தங்களின் அன்றாட நடவடிக்கைகளில் சிறந்த செயல்திறனை பேணுவதற்கு உதவும்.
- குளிர் சீசனில் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி மற்றும் இருமலுக்கு இயற்கை தீர்வாக இலவங்கப்பட்டை இருக்கும். இதில் ஆன்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, எனவே தொண்டை புண் மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெற உதவும். இலவங்கப்பட்டை சேர்க்கப்பட்ட ஒரு கப் சூடான பால் தொண்டை வலியைத் தணிக்கும், இருமலை குறைக்கும். இதனால் உங்கள் குழந்தை இரவில் மிகவும் சௌகரியமாக தூங்க முடியும்.
காலை உணவிற்கு தெரியாம கூட இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. நாள் முழுவதும் நெஞ்செரிச்சலா இருக்கும்.!
காலையில் வெறும் வயிற்றில் நெஞ்செரிச்சல், வாயு தொல்லை ஏற்படுவதற்கு மோசமான உணவு, வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தம் காரணம். சிட்ரஸ் பழங்கள், காபி, டீ, பிஸ்கட், வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
காலையில் வெறும் வயிற்றில் நெஞ்செரிச்சல், வாயு தொல்லை போன்றவை அடிக்கடி ஏற்படுகிறது. மோசமான உணவு, மோசமான வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தம் போன்ற பல காரணங்கள் வெறும் வயிற்றில் வாயு உருவாவதற்கு காரணமாக இருக்கலாம். சாப்பிடும்போதும், குடிக்கும்போதும் தெரியாமல் காற்றை விழுங்குவது, நீண்ட நேரம் பசியோடு இருப்பது, ஒழுங்கற்ற உணவு முறை, மன அழுத்தம் மற்றும் கவலை போன்றவற்றால் வயிற்றில் வாயு உருவாகும். இது தவிர காலையில் நாம் சாப்பிடும் சில உணவுகள், வயிற்றில் வாயு மற்றும் ஆசிட் உருவாக காரணமாகிறது. மேலும், சில உணவுகள் வயிற்றில் ஆசிட்-ஐ உருவாக்குகின்றன. இதன் காரணமாக, வயிற்றில் ஆசிட் ரிஃப்ளக்ஸை ஏற்படுத்தும்.
வயிற்றில் வாயுத்தொல்லை உள்ளவர்கள் ஆரோக்கியமான உணவை உண்ணவும், உணவை நன்கு மென்று சாப்பிடவும், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். காலையில் வெறும் வயிற்றில் வாயு மற்றும் அசிடிட்டி இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதை பற்றி விரிவாக பார்ப்போம்.
1. தக்காளி மற்றும் சிட்ரஸ் பழங்கள்: சிலர் அதிகாலையில் ஆரஞ்சு சாப்பிடுவதை விரும்புவார்கள். சிலர் காலை உணவாக தக்காளி சாப்பிடுவார்கள். இவற்றையெல்லாம் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், நாள் முழுவதும் வயிற்றில் ஆசிட் உருவாகிக்கொண்டே இருக்கும். உண்மையில், எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி போன்றவை ஆசிட்-ஐ உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. இது வெறும் வயிற்றில் ஆசிட் உற்பத்தியை அதிகரிக்கிறது. இந்த பொருட்களில் சிட்ரிக் ஆசிட் மற்றும் மாலிக் ஆசிட் உள்ளது, இது ஆசிட் உற்பத்தியை அதிகரிக்கிறது.
2. ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்கவும்: சீஸ், பட்டர் போன்றவற்றை காலையில் சாப்பிட்டால் வயிற்றில் ஆசிட் உருவாகும். இந்த பொருட்களில் நிறைய கொழுப்பு உள்ளது. எனவே இந்த கொழுப்பை உடைக்க நிறைய ஆசிட் தேவைப்படும். இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், வயிற்றில் அதிக ஆசிட் உற்பத்தியாகும். எனவே அவற்றைத் காலையில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று தேசிய நீரிழிவு மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்களுக்கான நிறுவனம் கூறியுள்ளது.
3. காபி மற்றும் டீ: நீங்கள் காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிக்கிறீர்களா? அப்படிப்பட்ட தவறை ஒருபோதும் செய்யாதீர்கள், ஏனெனில் அது வயிற்றில் அதிகப்படியான ஆசிட்-ஐ ஏற்படுத்தும். எனவே காபி அல்லது டீ குடிக்கும் முன், முதலில் ஏதாவது சாப்பிடுங்கள், அதன் பிறகு டீ அல்லது காபி குடிக்கவும். டீ மற்றும் காபியில் உள்ள காஃபின் வயிற்றில் ஆசிட் உற்பத்தியை அதிகரிக்கிறது.
4. பிஸ்கட் மற்றும் குக்கீகள்: சிலர் காலை உணவாக ஒரு கப் டீ அல்லது காபி உடன் பிஸ்கட் சாப்பிடுவார்கள். இந்த இரண்டு கலவைகளும் வயிற்றுக்கு மிகவும் மோசமானவை. இவை இரண்டும் வயிற்றில் அசிடிட்டியை அதிகரிக்கும். பிஸ்கட்டில் ரிஃப்பைன்டு சுகர் மற்றும் மாவு பயன்படுத்தப்படுகிறது, அதே நேரத்தில் காஃபின் அசிடிட்டியை உருவாக்கும்.
5. வறுத்த உணவு காலையில் வறுத்த உணவுகளை சாப்பிடவே கூடாது. இதில் சோலே பத்துரா, பூரி சப்ஜி, கச்சோரி, சமோசா ஆகியவை அடங்கும். இதை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் குடல் பிரச்சனைகள் ஏற்படும். அதிகாலையில் அதை ஜீரணிக்க, அதிக என்சைம் மற்றும் பித்தநீர் தேவைப்படுகிறது, ஆனால் இது நடக்கவில்லை என்றால், ஆசிட் உற்பத்தி அதிகரிக்கிறது.
காஃபியுடன் இந்த 5 உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் வேகமாக உடல் எடை குறையும்..!
மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்று பிளாக் காபி. பிளாக் காபி என்பது பால் அல்லது சர்க்கரை சேர்க்காமல் தயாரிக்கப்படும் காபி. பிளாக் காபியை தினமும் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். பிளாக் காபியில் உள்ள காஃபின் கொழுப்பை எரிப்பதை ஊக்குவிக்கிறது மற்றும் உடற்பயிற்சி செய்பவர்களின் செயல்திறனை மேம்படுத்தவும், நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்கவும் உதவுகிறது.
பிளாக் காபியை சில உணவுகளுடன் இணைக்கும்போது உடல் எடையை விரைவாக குறைக்கவும் உதவுகிறது. சரியான உணவுடன் இணைந்து அருந்துவது கொழுப்பை எரிக்கவும், பசியைக் குறைக்கவும் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை ஊக்குவிக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. விரைவான எடை இழப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்காக பிளாக் காபியுடன் சேர்த்து சாப்பிடக்கூடிய 5 உணவுகள் இங்கே.
1. அவகேடோ பழம் : அவகேடோ பழம் ஆற்றல் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இதை பிளாக் காபியுடன் இணைக்கும்போது, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் காஃபின் ஆகியவற்றின் சீரான கலவையை வழங்குகின்றன. இது நமக்கு தேவையான ஆற்றலை வழங்குவது மட்டுமின்றி, பசியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது.
2. முட்டைகள் : பிளாக் காபியுடன் முட்டைகளை சேர்த்து சாப்பிடுவது உடற்பயிற்சி செய்பவர்களின் செயல்திறனை மேம்படுத்தவும், நாள் முழுவதும் உங்களை முழுமையாகவும், திருப்தியாகவும் உணர வைக்கும். எனவே தினமும் இரண்டு முட்டைகளை உங்கள் அன்றாட உணவு பட்டியலில் இணைத்து கொள்ளுங்கள்.
3. கிரேக்க தயிர் : கிரேக்க தயிர் காலை உணவு அல்லது சிற்றுண்டிக்கு திருப்திகரமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். கூடுதல் ஊட்டச்சத்திற்காக நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த பெர்ரிகள் அல்லது சிறிது சியா விதைகளைச் சேர்க்கவும். இதன் மூலம் உங்களுக்கு தேவையான சீரான உணவு கிடைக்கும்.
4. நட்ஸ் மற்றும் விதைகள் : பிளாக் காபியுடன் நட்ஸ் மற்றும் விதைகளை சேர்த்து சாப்பிடுவது பசியைத் தடுக்க உதவுகின்றன மற்றும் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. உங்கள் காலை காபியுடன் ஒரு சிறிய கைப்பிடி அளவு பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகள் மற்றும் ஆளி விதை, சூரிய காந்தி விதைகள் போன்ற விதைகளையும் சேர்த்து கொள்வது நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கவும், நாள் முழுவதும் பசியைக் கட்டுப்படுத்தவும் ஒரு சிறந்த வழியாகும்.
5. பெர்ரி : பெர்ரிகளை பிளாக் காபியுடன் இணைப்பது உங்கள் காலை பானத்தின் சுவையை அதிகரிக்கும். அதே நேரத்தில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு கொழுப்பை எரிக்கவும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் முக்கிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
ஜப்பானியர்கள் ஏன் எப்போதும் ஸ்லிமாகவே இருக்கிறார்கள்? இந்த காரணங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா?
ஜப்பானியர்களின் தோற்றம் உலகளவில் அனைவரையும் கவர்ந்துள்ளது. பொம்மைகளைப் போல அழகாகவும், கொழுப்பு இல்லாத முகத்துடன், பளபளப்பான சருமத்துடனும் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் உண்டு. அவர்களின் வாழ்க்கை முறையின் சில சிறப்பம்சங்களே இதற்கு காரணம் என ஆய்வுகள் கூறுகின்றன. அந்த 5 இரகசியங்களை பின்பற்றுவதன் மூலம் நீங்களும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.
உடற்பயிற்சி மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை: ஜப்பானியர்கள் நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற வழக்கமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். இது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.
மெதுவாக சாப்பிடுதல்: ஜப்பானியர்கள் உணவை மெதுவாக சாப்பிடுகிறார்கள். இது அவர்களின் செரிமானத்திற்கு மிகவும் நல்லது. மென்று சாப்பிடுவதன் மூலம், உடலில் சத்துக்கள் சரியாக சேர்கின்றன. இதனால் கொழுப்பு சேராமல் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
சிறிய அளவிலான உணவுகள்: ஜப்பானியர்கள் சிறிய அளவில் உணவுகளை உண்கிறார்கள் மற்றும் சமச்சீர் உணவைப் பராமரிக்கிறார்கள். சிறிய கிண்ணங்களில் சிறிய அளவிலான உணவுகளை பரிமாறுகிறார்கள். இது செரிமானத்திற்கும் உதவுகிறது.
பதப்படுத்தப்படாத உணவுகள்: ஜப்பானிய உணவு முறையில் புதிய, பதப்படுத்தப்படாத உணவுகள் அதிகம். பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பதால் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைப்பதால் கொழுப்பு மற்றும் சர்க்கரை உட்கொள்ளல் குறைகிறது. பாதுகாப்புகள் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்பதால் கொழுப்பு கல்லீரல் முதல் கொலஸ்ட்ரால் தொடர்பான பிரச்சனைகள் வரை பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம்.
ஆரோக்கிய பானங்கள்: ஜப்பானியர்கள் அதிக கிரீன் டீ அல்லது பிற ஆரோக்கிய பானங்களை அருந்துகிறார்கள். இது கூடுதல் கலோரிகள் சேர்க்காமல் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இது சருமத்திற்கும் உடலுக்கும் நல்லது.
அரிசி பயன்பாடு: ஜப்பானியர்கள் தங்கள் அன்றாட உணவில் அரிசியை சேர்த்துக் கொள்கிறார்கள். சிறிய அளவில் பிசுபிசுப்பான அரிசியை உண்பதன் மூலம் அவர்கள் தங்கள் இளமை மற்றும் உயிர்ச்சக்தியைப் பராமரிக்கிறார்கள்.
வேலை-வாழ்க்கை சமநிலை: ஜப்பானியர்கள் வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையே ஒரு சமநிலையைப் பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். வேலை உடன், அவர்கள் தங்கள் பொழுதுபோக்கு மற்றும் ஆர்வங்களுக்கும் நேரம் கொடுக்கிறார்கள்.
ஆரோக்கியத்தில் கவனம்: ஜப்பானியர்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் வழக்கமான உடல் பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள் மற்றும் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுகிறார்கள்.
சுற்றுச்சூழல் மற்றும் மன ஆரோக்கியம்: ஜப்பானில் தூய்மையான சூழல் நிலவுகிறது. இது மக்களின் உடல் நலத்திற்கு நல்லது. மேலும், ஜப்பானியர்கள் நேர்மறை சிந்தனைக் கொண்டவர்கள். இது அவர்களின் மன ஆரோக்கியத்திற்கு நல்லது.
நீண்ட ஆயுட்காலம்: ஜப்பான் உலகின் மிக உயர்ந்த சராசரி ஆயுட்காலம் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். அவர்களின் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையின் ரகசியம் அவர்களின் தனித்துவமான வாழ்க்கை முறையில் உள்ளது.
ஜப்பானியர்கள் பொதுவாக மிகவும் கட்டுக்கோப்பாக இருக்கிறார்கள். நோய்கள் அவர்களை நெருங்குவதில்லை. அவர்கள் நீண்ட ஆயுட்காலத்துடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பானிய வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் நாமும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Blockages In Heart: இதயத்தில் அடைப்புகள் உள்ளதை வெளிப்படுத்தும் சில முக்கிய அறிகுறிகள்..!
Blockages In Heart | மார்பு இறுக்கமாக இருப்பது போன்ற உணர்வு, மார்பு வலி, மூச்சுத் திணறல் அல்லது உடற்பயிற்சியின் போது தாடை அல்லது கைகளில் குறிப்பாக தோள்பட்டை பகுதிகளில் வலி உள்ளிட்டவை ஏற்பட்டால் உடலில் இருக்கும் ஒரு சிக்கலை இவை குறிக்கலாம்.
தற்போதைய காலக்கட்டத்தில் வயது வித்தியாசமின்றி அனைவருக்குமே இதய ஆரோக்கியம் என்பது மிக முக்கியமானது. இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளின் அறிகுறிகளை சரியாக புரிந்து கொள்வது நம்முடைய அல்லது நமக்கு நெருக்கமானவர்களின் உயிரை காக்கக் கூடும். இதயத்தில் அடைப்புகள் உள்ளதை வெளிப்படுத்தும் சில முக்கிய அறிகுறிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
பிளட் பேனல்ஸ் மற்றும் எலக்ட்ரோ கார்டியோகிராம்கள் (EKGs) போன்ற மேம்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் இதய பாதிப்புகளை கண்டறிய தேவைப்படும் அவசியமான நோய் அறிதல் கருவிகளாக இருந்தாலும், இதயத்தில் ஏதேனும் அடைப்புகள் உள்ளதா? என்பதை கண்டறிய நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய பரிசோதனைகள் உள்ளன. இதய கோளாறு இருப்பதற்கான அறிகுறிகள் உங்கள் உடலில் இருக்கிறதா என்பதை எவ்வாறு கண்டறிவது என்பதை பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெர்மி விளக்கி உள்ளார்.
உங்கள் உடல் என்ன சொல்கிறது என்பதை கவனிப்பதன் முக்கியத்துவம்...
- நம் உடலில் ஏதாவது பாதிப்புகள் இருக்கும்போது உடல் பெரும்பாலும் சிக்னல்களை வெளிப்படுத்துகிறது. எனவே இந்த அறிகுறிகளை கூர்ந்து கவனித்து பாதிப்புகளை வெளிப்படுத்தும் சிக்னல் தான் இது என்பதை புரிந்து கொள்வது இதயத்தில் இருக்கும் அடைப்புகளை கண்டறிவதற்கான சாத்தியமான முதல் படியாகும்.
- உடல் செயல்பாடுகளின் போதோ அல்லது உடல் உழைப்பின் போதோ இதயத்திற்கு அதிக ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம் தேவைப்படுகிறது. உதாரணமாக அடைப்பு இருந்தால், அடைப்புக்குக் கீழே உள்ள பகுதி உரிய ரத்த விநியோகமின்றி பாதிக்கப்படும். இது அசௌகரிய உணர்வு ஏற்பட அல்லது வலி ஏற்பட வழிவகுக்கும். அதேநேரம் நீங்கள் ஓய்வெடுக்கும் போது, இதயத்திற்கான ஆக்ஸிஜன் தேவை குறைகிறது. மேலும் இதனால் உடல் சுறுசுறுப்பாக இயங்கியபோது தோன்றிய அறிகுறிகள் தற்காலிகமாக மறைந்து போகக்கூடும்.
- மார்பு இறுக்கமாக இருப்பது போன்ற உணர்வு, மார்பு வலி, மூச்சுத் திணறல் அல்லது உடற்பயிற்சியின் போது தாடை அல்லது கைகளில் குறிப்பாக தோள்பட்டை பகுதிகளில் வலி உள்ளிட்டவை ஏற்பட்டால் உடலில் இருக்கும் ஒரு சிக்கலை இவை குறிக்கலாம். எனிமும் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த அறிகுறிகள் ஓய்வெடுத்த பிறகும் நீடிக்கிறதா அல்லது குறைகிறதா என்பது தான். இந்த அறிகுறிகள் ஏற்பட காரணம் தமனிகளில் (arteries) ஏற்படும் அடைப்பு இதயத்தின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துவது தான்.
அறிகுறிகள் இல்லாதது இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துமா?
மேற்கண்ட அறிகுறிகள் இருப்பதால் மட்டுமே உங்கள் தமனிகளில் அடைப்புகள் இருக்கிறது என்று அர்த்தமில்லை. ஏனென்றால் பாதிப்புகள் கண்டறியப்பட்ட சிலருக்கு குறிப்பிடத்தக்க அறிகுறிகள் ஏதும் இல்லாமல் இருந்த போதும் அடைப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த நிலை "silent ischaemia" என்று அழைக்கப்படுகிறது. எனவே தான் வயதிற்கு பின்னர் அனைவருமே, குறிப்பாக அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், புகைப்பழக்கம் கொண்டவர்கள், நீரிழிவு நோய் அல்லது இதய நோயின் குடும்ப வரலாறு போன்ற ஆபத்து காரணிகளை கொண்டவர்கள் வழக்கமான அடிப்படையில் சுகாதார பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
வீட்டில் செய்யக்கூடிய எளிய சோதனை
இதயத்தில் இருக்கும் அடைப்பை கண்டறிய வீட்டிலேயே துல்லியமான முடிவை தர கூடிய சோதனை எதுவும் இல்லை என்றாலும், நம்முடைய அன்றாட நடவடிக்கைகளின் போது உடலில் ஏற்படும் எதிர்வினைகளைக் கவனிப்பது நமக்கு மிக முக்கியம். நீங்கள் கவனிக்க வேண்டியவை குறித்து பார்க்கலாம்.
மார்பு அசௌகரியம்
உடற்பயிற்சியின் போது மார்பில் இறுக்கம், அழுத்தம் அல்லது வலி போன்ற எந்தவொரு உணர்வையும் நாம் முக்கியமானதாக கருத வேண்டும். குறிப்பாக இந்த அறிகுறிகள் நாம் ஓய்வெடுக்கும் போது குறைந்துவிட்டால் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும்.
வலி பரவல்
தாடை, இடது கை அல்லது முதுகு வரை வலி பரவுவது இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பதை குறிக்கலாம்.
மூச்சுத்திணறல்
உங்களின் அன்றாட செயல்பாடுகளின்போது வழக்கத்திற்கு மாறாக மூச்சுத்திணறல் ஏற்படுவது உங்கள் இதயம் ரத்தத்தை திறம்பட பம்ப் செய்ய சிரமப்படுவதை குறிக்கலாம்.
சோர்வு
மார்பு வலி இல்லாவிட்டாலும், தொடர்ச்சியாக அல்லது அசாதாரண சோர்வு உங்களுக்கு நீடிக்கிறது என்றால் அது இதய பிரச்சனைகள் இருப்பதை குறிக்கும் நுட்பமான அறிகுறியாக இருக்கலாம்.
மேற்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு இருப்பதை நீங்கள் கவனித்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும். சிகிச்சையை தாமதப்படுத்துவது மாரடைப்பு உள்ளிட்ட கடும் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும். உங்கள் இதயம் மற்றும் தமனிகளின் நிலையை மதிப்பிட EKG, மன அழுத்த சோதனை அல்லது இமேஜிங் ஆய்வுகள் போன்ற சோதனைகள் பரிந்துரைக்கப்படலாம்.
இதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்க சில எளிய வழிமுறைகள்...
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் லீன் ப்ரோட்டீனை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதேநேரம் நிறைவுற்ற கொழுப்புகள், டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட சர்க்கரைகளை எடுத்துக் கொள்வதை கட்டுப்படுத்துங்கள்.
வழக்கமான அடிப்படையில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உங்கள் இதயத்தை பலப்படுத்துகிறது மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான ஏரோபிக் செயல்பாட்டில் ஈடுபடுங்கள்.
நாள்பட்ட மன அழுத்தம் இதயத்தைப் பாதிக்கலாம். தியானம், ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் அல்லது யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
புகைப்பழக்கம் ரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது மற்றும் அடைப்புகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இப்பழக்கம் இருந்தால் நிறுத்துவது உங்கள் இதயத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.
சீரான இடைவெளியில் மேற்கொள்ளப்படும் வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகள் உயர் ரத்த அழுத்தம் அல்லது கொலஸ்ட்ரால் போன்ற ஆபத்து காரணிகளை முன்கூட்டியே கண்டறிய உதவும்.
அறிகுறிகள் இல்லாதது இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துமா?
மேற்கண்ட அறிகுறிகள் இருப்பதால் மட்டுமே உங்கள் தமனிகளில் அடைப்புகள் இருக்கிறது என்று அர்த்தமில்லை. ஏனென்றால் பாதிப்புகள் கண்டறியப்பட்ட சிலருக்கு குறிப்பிடத்தக்க அறிகுறிகள் ஏதும் இல்லாமல் இருந்த போதும் அடைப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த நிலை "silent ischaemia" என்று அழைக்கப்படுகிறது. எனவே தான் வயதிற்கு பின்னர் அனைவருமே, குறிப்பாக அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், புகைப்பழக்கம் கொண்டவர்கள், நீரிழிவு நோய் அல்லது இதய நோயின் குடும்ப வரலாறு போன்ற ஆபத்து காரணிகளை கொண்டவர்கள் வழக்கமான அடிப்படையில் சுகாதார பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
வீட்டில் செய்யக்கூடிய எளிய சோதனை
இதயத்தில் இருக்கும் அடைப்பை கண்டறிய வீட்டிலேயே துல்லியமான முடிவை தர கூடிய சோதனை எதுவும் இல்லை என்றாலும், நம்முடைய அன்றாட நடவடிக்கைகளின் போது உடலில் ஏற்படும் எதிர்வினைகளைக் கவனிப்பது நமக்கு மிக முக்கியம். நீங்கள் கவனிக்க வேண்டியவை குறித்து பார்க்கலாம்.
மார்பு அசௌகரியம்
உடற்பயிற்சியின் போது மார்பில் இறுக்கம், அழுத்தம் அல்லது வலி போன்ற எந்தவொரு உணர்வையும் நாம் முக்கியமானதாக கருத வேண்டும். குறிப்பாக இந்த அறிகுறிகள் நாம் ஓய்வெடுக்கும் போது குறைந்துவிட்டால் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும்.
வலி பரவல்
தாடை, இடது கை அல்லது முதுகு வரை வலி பரவுவது இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பதை குறிக்கலாம்.
மூச்சுத்திணறல்
உங்களின் அன்றாட செயல்பாடுகளின்போது வழக்கத்திற்கு மாறாக மூச்சுத்திணறல் ஏற்படுவது உங்கள் இதயம் ரத்தத்தை திறம்பட பம்ப் செய்ய சிரமப்படுவதை குறிக்கலாம்.
சோர்வு
மார்பு வலி இல்லாவிட்டாலும், தொடர்ச்சியாக அல்லது அசாதாரண சோர்வு உங்களுக்கு நீடிக்கிறது என்றால் அது இதய பிரச்சனைகள் இருப்பதை குறிக்கும் நுட்பமான அறிகுறியாக இருக்கலாம்.
மேற்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு இருப்பதை நீங்கள் கவனித்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும். சிகிச்சையை தாமதப்படுத்துவது மாரடைப்பு உள்ளிட்ட கடும் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும். உங்கள் இதயம் மற்றும் தமனிகளின் நிலையை மதிப்பிட EKG, மன அழுத்த சோதனை அல்லது இமேஜிங் ஆய்வுகள் போன்ற சோதனைகள் பரிந்துரைக்கப்படலாம்.
இதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்க சில எளிய வழிமுறைகள்...
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் லீன் ப்ரோட்டீனை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதேநேரம் நிறைவுற்ற கொழுப்புகள், டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட சர்க்கரைகளை எடுத்துக் கொள்வதை கட்டுப்படுத்துங்கள்.
வழக்கமான அடிப்படையில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உங்கள் இதயத்தை பலப்படுத்துகிறது மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான ஏரோபிக் செயல்பாட்டில் ஈடுபடுங்கள்.
நாள்பட்ட மன அழுத்தம் இதயத்தைப் பாதிக்கலாம். தியானம், ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் அல்லது யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
புகைப்பழக்கம் ரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது மற்றும் அடைப்புகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இப்பழக்கம் இருந்தால் நிறுத்துவது உங்கள் இதயத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.
சீரான இடைவெளியில் மேற்கொள்ளப்படும் வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகள் உயர் ரத்த அழுத்தம் அல்லது கொலஸ்ட்ரால் போன்ற ஆபத்து காரணிகளை முன்கூட்டியே கண்டறிய உதவும்.
6-6-6 Walking Rule: உங்கள் உடற்பயிற்சி வழக்கத்தை 6-6-6 நடைப்பயிற்சி விதியுடன் மாற்றி அமையுங்கள்!
6-6-6 Walking Rule | 6-6-6 நடைப்பயிற்சி விதியானது உங்கள் வாழ்க்கை முறையில் வழக்கமான உடற்பயிற்சியை இணைப்பதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் இணக்கத்தை வழங்குகிறது. வார்ம்-அப் மற்றும் கூல்-டவுன் நடைமுறைகளுக்குப் பின்னால் உள்ள அறிவியலைப் புரிந்துகொள்வதன் மூலம், நிலையான நடைப்பயிற்சியின் நன்மைகள் மற்றும் உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப தீவிரத்தை அமைத்துக்கொள்வதன் முக்கியத்துவம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளலாம்.
பரபரப்பான அலுவலக வேலைகளுக்கு மத்தியில், உடற்பயிற்சிக்கான நேரத்தைக் கண்டுபிடிப்பது சவாலானதாக இருக்கலாம். ஜிம் அல்லது யோகா வகுப்புகளுக்கு செல்ல முடியாதவர்களுக்கு, 6-6-6 என்ற நடைப்பயிற்சி விதி தீர்வை வழங்குகிறது. உங்கள் நடைப்பயிற்சியின் பல்வேறு அம்சங்களில் ஆறாவது எண்ணை உள்ளடக்கிய இந்த எளிதான பின்பற்றக்கூடிய அணுகுமுறை, அதன் எளிமை மற்றும் பிஸியான வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ற ஒன்றாக பிரபலமடைந்து வருகிறது.6-6-6 நடைப்பயிற்சி விதியானது, ஒரு சீரான மற்றும் கட்டமைக்கப்பட்ட நடைப்பயிற்சியை ஊக்குவிக்கிறது. முதலில் 6 நிமிட வார்ம்-அப்புடன் தொடங்கவும். காலை 6 அல்லது மாலை 6 மணிக்குள் 60 நிமிட நடைப்பயிற்சியில் ஈடுபடவும். அடுத்த 6 நிமிடம் ரிலாக்ஸாக இருக்கவும். இந்த சீரான அமைப்பு இதய ஆரோக்கியத்தை ஆதரிப்பது, மன நலனை மேம்படுத்துதல் மற்றும் உடல் செயல்பாடுகளை உங்கள் அன்றாட வழக்கத்தின் நிலையான பகுதியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
6 நிமிட வார்ம்-அப் மற்றும் கூல்-டவுன் ஆகியவற்றின் செயல்திறன்
- 6 நிமிட வார்ம்-அப் உங்கள் உடலியல் தயார் நிலையை படிப்படியாக அதிகரிப்பதன் மூலம் நடைப்பயணத்தின் உடல் தேவைகளுக்கு உங்கள் உடலை முதன்மைப்படுத்துகிறது. இது படிப்படியாக உங்கள் இதயத் துடிப்பை உயர்த்தி, உங்கள் தசைகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் அதிகரித்த பணிச்சுமைக்கு உங்கள் இதய அமைப்பை தயார் செய்கிறது.
- 6 நிமிட கூல்-டவுன் படிப்படியாக ஓய்வெடுக்கும் நிலைக்குத் திரும்ப உதவுகிறது. ரத்த அழுத்தத்தில் திடீர் மாற்றங்களைத் தடுக்கிறது மற்றும் மீட்புக்கு உதவுகிறது. இது உங்கள் இதயத் துடிப்பு மற்றும் சுவாசத்தை படிப்படியாகக் குறைக்க அனுமதிக்கிறது.
- தலைச்சுற்றல் அல்லது லேசான தலைவலி ஏற்படும் அபாயத்தையும் இது குறைக்கிறது. உடற்பயிற்சியின் ஒரு வடிவமாக குறைத்து மதிப்பிடப்படும் நடைப்பயிற்சியை தொடர்ந்து செய்யும்போது பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது.
கார்டியோவாஸ்குலர் ஆரோக்கியம்: நடைப்பயிற்சி என்பது ஒரு ஏரோபிக் செயல்பாடாகும். இது உங்கள் இதய தசையை பலப்படுத்துகிறது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. வழக்கமான நடைபயிற்சி புற தமனி நோய் (பிஏடி) அபாயத்தை குறைப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
6-6-6 நடைப்பயிற்சி விதியானது, ஒரு சீரான மற்றும் கட்டமைக்கப்பட்ட நடைப்பயிற்சியை ஊக்குவிக்கிறது. முதலில் 6 நிமிட வார்ம்-அப்புடன் தொடங்கவும். காலை 6 அல்லது மாலை 6 மணிக்குள் 60 நிமிட நடைப்பயிற்சியில் ஈடுபடவும். அடுத்த 6 நிமிடம் ரிலாக்ஸாக இருக்கவும். இந்த சீரான அமைப்பு இதய ஆரோக்கியத்தை ஆதரிப்பது, மன நலனை மேம்படுத்துதல் மற்றும் உடல் செயல்பாடுகளை உங்கள் அன்றாட வழக்கத்தின் நிலையான பகுதியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
6 நிமிட வார்ம்-அப் மற்றும் கூல்-டவுன் ஆகியவற்றின் செயல்திறன்
- 6 நிமிட வார்ம்-அப் உங்கள் உடலியல் தயார் நிலையை படிப்படியாக அதிகரிப்பதன் மூலம் நடைப்பயணத்தின் உடல் தேவைகளுக்கு உங்கள் உடலை முதன்மைப்படுத்துகிறது. இது படிப்படியாக உங்கள் இதயத் துடிப்பை உயர்த்தி, உங்கள் தசைகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் அதிகரித்த பணிச்சுமைக்கு உங்கள் இதய அமைப்பை தயார் செய்கிறது.
- 6 நிமிட கூல்-டவுன் படிப்படியாக ஓய்வெடுக்கும் நிலைக்குத் திரும்ப உதவுகிறது. ரத்த அழுத்தத்தில் திடீர் மாற்றங்களைத் தடுக்கிறது மற்றும் மீட்புக்கு உதவுகிறது. இது உங்கள் இதயத் துடிப்பு மற்றும் சுவாசத்தை படிப்படியாகக் குறைக்க அனுமதிக்கிறது.
- தலைச்சுற்றல் அல்லது லேசான தலைவலி ஏற்படும் அபாயத்தையும் இது குறைக்கிறது. உடற்பயிற்சியின் ஒரு வடிவமாக குறைத்து மதிப்பிடப்படும் நடைப்பயிற்சியை தொடர்ந்து செய்யும்போது பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது.
கார்டியோவாஸ்குலர் ஆரோக்கியம்: நடைப்பயிற்சி என்பது ஒரு ஏரோபிக் செயல்பாடாகும். இது உங்கள் இதய தசையை பலப்படுத்துகிறது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. வழக்கமான நடைபயிற்சி புற தமனி நோய் (பிஏடி) அபாயத்தை குறைப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
எடை மேலாண்மை: 60 நிமிட விறுவிறுப்பான நடைபயிற்சி, பல கலோரிகளை எரித்து, எடை இழப்பு அல்லது பராமரிப்பிற்கு பங்களிக்கும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் ஆற்றலுக்காக கொழுப்பைப் பயன்படுத்துவதற்கான உடலின் திறனை மேம்படுத்துகிறது.
எலும்பு ஆரோக்கியம்: நடைப்பயிற்சி என்பது எடை தாங்கும் பயிற்சியாகும். இது எலும்பு வளர்ச்சியைத் தூண்டுகிறது மற்றும் பலவீனமான எலும்புகள் என வகைப்படுத்தப்படும் எலும்புப்புரையை தடுக்க உதவுகிறது. இது வயதானவர்களுக்கும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கும் மிகவும் முக்கியமானது.
மனநிலை மேம்பாடு: நடைப்பயிற்சி உட்பட உடற்பயிற்சி, மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வைத் தணிக்கும் இயற்கையான முறையில் மனநிலையை உயர்த்தக்கூடிய எண்டோர்பினை வெளியிடத் தூண்டுகிறது. நடைப்பயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. இது உங்கள் உடலுடன் இணைத்து, உங்கள் மனதையும் தெளிவுபடுத்தும். அத்துடன் உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும். உங்கள் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி பயணத்தை மாற்ற 6-6-6 விதியை பின்பற்றி பயன் பெறுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: இவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக வழங்கப்பட்டவையே. உங்கள் உணவுப் பழக்கம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றங்களை செய்வதற்கு முன், தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும்.)