Search

BOB வங்கி பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

 

BOB வங்கி பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

BOB Capital Markets Ltd ஆனது IT Support Executive, IT programmer, JD- Database, JD – Insti Trader, JD – Institutional Equity Sales பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது நீட்டிக்கப்படுள்ளது. எனவே தகுதியனவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

BOB கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Post Graduate, with preference for MBA /CFA / CA முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

அனுபவம்:

5+ ஆண்டுகள் தகுதி அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதி விவரங்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து careers@bobcaps.in என்ற இணைய முகவரி மூலம் முதலில் 27.09.2023 வரை வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 03.10.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

SDCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.50,000/- சம்பளம் !

 

SDCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.50,000/- சம்பளம் !

SDCL ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள General Manager, Assistant Manager பணிக்கென பல்வேறு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

SDCL காலிப்பணியிடங்கள்:

SDCL நிறுவனத்தில் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி General Manager, Assistant Manager பணிக்கென 04 காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SDCL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 35 முதல் 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SDCL கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பல்கலைக்கழகத்தில் B.E/B.Tech, CA / ICWA / MBA, Post Graduate degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

SDCL ஊதிய விவரம்:

தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.50,000/- முதல் ரூ. 2,80,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SDCL தேர்வு செய்யப்படும் முறை :

திறமையுள்ள நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SDCL விண்ணப்பிக்கும் முறை :

பதிவு செய்யும் நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரி மூலம் (26.10.2023) இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

BEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.40,000/- ஊதியம்!

 

BEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.40,000/- ஊதியம்!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Trainee Engineer I, Project Engineer I பணிகளுக்கென 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Bharat Electronics Limited காலிப்பணியிடங்கள்:

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Visiting Medical Officer பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BEL வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் வயதானது 28 முதல் 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Bharat Electronics Limited கல்வி தகுதி:

பணிபுரிய ஆர்வம் உள்ள நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE, B.Tech பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஊதிய விவரம்:

தேர்வாகும் நபர்களுக்கு ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

Bharat Electronics Limited தேர்வு செய்யப்படும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test, Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

BEL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

CIPET நிறுவனத்தில் Lecturer வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.35,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

CIPET நிறுவனத்தில் Lecturer வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.35,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

CIPET Institute of Petrochemicals Technology ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Lecturer பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Bachelor’s degree / Master’s degree / M.E / M. Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணி குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CIPET காலிப்பணியிடங்கள்:

CIPET வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Lecturer பணிக்கான 2 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lecturer கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s degree / Master’s degree / M.E / M. Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

CIPET வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Lecturer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.30,000/- முதல் ரூ.35,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

CIPET தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு 09.10.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

IT துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க || ஜாக்பாட் வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!

 

IT துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க || ஜாக்பாட் வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!

IBM நிறுவனமானது அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Application Developer: Cloud Full Stack பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IBM காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Application Developer: Cloud Full Stack பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Application Developer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IBM வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Product Manager ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

IBM தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

IFCI Ltd நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – B.Tech./B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள்!

 

IFCI Ltd நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – B.Tech./B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள்!

IFCI Ltd ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Associate Director, Sr Associate பணிகளுக்கென 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


IFCI Ltd காலிப்பணியிடங்கள்:

IFCI Ltd ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Associate Director, Sr Associate பணிகளுக்கென 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IFCI Ltd வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 35 முதல் 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

IFCI Ltd கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Chartered Accountant (CA) or B.Tech./B.E, MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

IFCI Ltd ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நிறுவன விதிமுறைப்படி மாதம் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

IFCI Ltd தேர்வு செய்யப்படும் முறை :

திறமையுள்ள விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

IFCI Ltd விண்ணப்பிக்கும் முறை :

பதிவு செய்யும் நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் மூலம் (12.10.2023) இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

 Click here to join WhatsApp group for Daily employment news

TCS நிறுவனத்தில் B.Sc படித்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே!

 

TCS நிறுவனத்தில் B.Sc படித்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே!

TATA கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (TCS) என்பது மிகப்பெரிய இந்திய பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப (IT) சேவை மற்றும் ஆலோசனை நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. B.Sc தேர்ச்சி பெற்று வேலை தேடும் நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. Property and Casualty Insurance பதவிக்கான தகுதி, அனுபவம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பங்களை செலுத்தும் செயல்முறைகள் குறித்த விவரங்களை விரிவாக காணலாம்.

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இருந்து BACHELOR OF ARTS படித்த மாணவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பணி அனுபவம்:

1 முதல் 10 ஆண்டுகள் வரை முன் பணி அனுபவம் உள்ள மாணவர்கள் TCS பணியமர்த்தல் செயல்முறைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் செப் 30 ஆம் தேதி நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழகத்தில் உள்ள ESIC மருத்துவமனையில் வேலை – சம்பளம்: ரூ.81100//-

 

தமிழகத்தில் உள்ள ESIC மருத்துவமனையில் வேலை – சம்பளம்: ரூ.81100//-

தமிழ்நாடு பிராந்தியத்தில் மருத்துவப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 56 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து தங்களின் பதிவுகளை 30.10.2023 க்குள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழக ESIC மருத்துவமனை காலிப்பணியிடங்கள்:
  • ECG Technician – 6 பணியிடங்கள்
  • Junior Radiographer – 17 பணியிடங்கள்
  • Junior Medical Laboratory Technologist – 15 பணியிடங்கள்
  • OT Assistant – 10 பணியிடங்கள்
  • Pharmacist (Allopathic) – 4 பணியிடங்கள்
  • Pharmacist (Ayurveda) – 2 பணியிடங்கள்
  • Radiographer – 2 பணியிடங்கள்
ESIC கல்வி தகுதி:

ESIC TN அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் Diploma/ Degree in pharmacy முடித்திருக்க வேண்டும்.

Pharmacist வயது வரம்பு:

பணியாளர்களின் மாநில காப்பீட்டுக் கழக தமிழ்நாடு ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:
  • ECG Technician – ரூ. 25500- 81100
  • Junior Radiographer – ரூ.21,700- 69,100
  • Junior Medical Laboratory Technologist – ரூ.21,700- 69,100
  • OT Assistant – ரூ.29200- 92300
  • Pharmacist (Allopathic) – ரூ.29200- 92300
  • Pharmacist (Ayurveda) – ரூ.29200- 92300
  • Radiographer -ரூ. 29200- 92300
விண்ணப்பக் கட்டணம்:

SC/ ST/ PWD/ முன்னாள் ராணுவத்தினர்/ பெண் விண்ணப்பதாரர்கள் : ரூ.250/-
மற்ற அனைத்து வேட்பாளர்களும்: ரூ. 500/-

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Phase-I Written Examination மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாட்டில் வேலை தேடும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.esic.gov.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 30.10.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 Download Notification 2023 Pdf
Apply Online 

உலக இதய தினம் 2023: தண்ணீர் குடிப்பது இருதய நோய்களைத் தடுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

 நம்  உடலில் உயிர் எங்கே இருக்கிறது என்று அதிகாரபூர்வமாக அறிவியல்பூர்வமாக இன்னும் எந்த முடிவையும் யாராலும் சொல்ல முடியவில்லை. ஆனால், இதயம் என்பது  உயிர் வாழ்வதற்கு முக்கியமான ஒன்று என்பது மட்டும் அனைவருக்கும் தெரியும். இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டால், நம் உடலின் இயக்கம் நின்றுவிடும். அந்த இதயத்தை பாதுகாக்கும் முக்கியத்துவத்தை சொல்லும் தினம் தான் இன்று.

அதேபோல   நாம் உயிர்வாழ்வதற்கு தண்ணீர் மிகவும் அவசியமானது, ஏனெனில் நமது ஆரோக்கியத்தின் பல்வேறு அம்சங்களுக்காக நீரேற்றமாக இருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி நாம்  கேள்விப்படுகிறோம். ஆனால் உங்கள் தினசரி தண்ணீர் உட்கொள்ளல் உங்கள் இதய ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா ? தண்ணீரால் இதய நலன் மேம்படும் வழிகளை சொல்கிறோம்.

போதுமான அளவு நீரேற்றமாக இருப்பது சரியான இரத்த அளவை ஊக்குவிப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது மற்றும் இதயத்தின் இயக்க அழுத்தத்தை குறைக்கிறது. தண்ணீர் குடிப்பது இரத்த நாளங்களின் தளர்வு மற்றும் விரிவாக்கத்தை ஆதரிக்கிறது, இதனால் இதயம் உடல் முழுவதும் இரத்தத்தை பம்ப் செய்வதை எளிதாக்குகிறது.

நீரிழப்பு உண்மையில் மன அழுத்தத்தைத் தூண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீரிழப்பு தசைகளில் உள்ள நீர்த்தன்மை மட்டும் மல்லாமல் ரத்தத்தின் நீர்ம அளவையும் பாதிக்கும். அப்போது குறைந்த அளவிலான ரத்தத்தை உடல் முக்க பம்ப் செய்ய இதயம் போராடும். இது இதயத் துடிப்பு அதிகரிப்பதற்கும் இருதய அமைப்பில் கூடுதல் அழுத்தத்திற்கும் வழிவகுக்கும். நிறைய தண்ணீர் குடிப்பது தான் இதற்கான எளிய தீர்வு.

நீரிழப்பு இரத்தத்தை தடிமனாக்குகிறது. அதாவது நீர்சத்து குறைவதால் குறைந்த நீரில் ரத்த அணுக்கள் தேங்கி அடர்த்தியாகும். மேலும் அது உறைவதற்கு அதிக வாய்ப்புள்ளது. மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் அதிகம். போதுமான தண்ணீர் குடிப்பதன் மூலம், உங்கள் இரத்தத்தின் திரவத்தன்மையை பராமரிக்க முடியும்.  இரத்த உறைவு அபாயத்தை குறைக்கலாம்

சரியான சத்தான உணவு என்பது அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்று. அதனுடன், தண்ணீரிலிருந்து வரும் ஊட்டச்சத்துக்கள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுக்கான கேரியராகவும் செயல்படுகின்றன, அவை இதயம் மற்றும் பிற முக்கிய உறுப்புகளை திறம்பட சென்றடைவதை உறுதி செய்கின்றன. இதயத்தின் சரியான செயல்பாட்டிற்கு இந்த ஊட்டச்சத்து முக்கியமானது.

போதுமான நீரேற்றம் இரத்தத்தில் உள்ள கழிவுப்பொருட்களை திறம்பட அகற்றுவதில் சிறுநீரகங்களை ஆதரிக்கிறது. இரத்த ஓட்டத்தில் கழிவுகள் சேரும்போது, ​​​​அது இதயத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். சரியான நீர் உட்கொள்ளல் ஆரோக்கியமான சமநிலையை பராமரிக்கவும் இந்த மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.


பிங்க் உப்பு, கருப்பு உப்பு, கல் உப்பு, கடல் உப்பு... நீங்கள் உணவில் எந்த வகை உப்பை சேர்க்க வேண்டும்..?

 உப்பில்லாத உணவு குப்பையிலே என்ற பழமொழிக்கு ஏற்ப, சரியான அளவில் உப்பு இல்லாத உணவு சுவை குறைவாக இருக்கும். இனிப்புச் சுவை உணவுகளுக்குக் கூட உப்பை கொஞ்சம் சேர்ப்பது சுவையை பல மடங்கு அதிகரிக்கும். உப்பில் பல வகைகள உள்ளன என்பது சிலருக்கு தெரிந்திருக்கலாம். இயற்கையாகவே சில சத்துக்கள் மற்றும் குணமாக்கும் பண்புகள் கொண்ட பல வகையில் உப்பு இருக்கிறது. இதில் இந்துப்பு என்று கூறப்படும் பிங்க் நிற உப்பு, கருப்பு உப்பு, கடல் உப்பு, தூள் உப்பு என்று பல வகைகளில் எதை உணவில் சேர்க்கலாம் என்பது பற்றி பார்க்கலாம்.

உப்பு என்பது சுவைக்காக மட்டுமல்லாமல் உடலில் இருக்கும் நீர்ச்சத்தை சரியான அளவில் வைப்பதிலும், உடல் ரீதியான ஒரு சில செயல்பாடுகள் சீராக இருப்பதற்கும் உதவியாக இருக்கிறது

உப்பு எந்த அளவுக்கு ஆரோக்கியமானதோ, உணவின் சுவைக்கு எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு அதிக உப்பு என்பது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய தன்மையையும் கொண்டுள்ளது. அதிகமாக உப்பு சேர்க்கப்படும் உணவுகளை சாப்பிடும் பொழுது எலெக்ட்ரோலைட் இம்பேலன்ஸ் ஏற்படும்; நரம்புகள் அனுப்பும் சமிக்ஞைகள் பாதிக்கப்படும்; தசைகளில் இருக்கும் ஊட்டச்சத்து குறையும்; உடலில் இருக்கும் நீர்ச்சத்து வற்றும் அபாயம் ஏற்படும்; இதுமட்டும் அல்லாமல் இன்றைய கால கட்டத்தில் உயிர் கொல்லியாக அறியப்படும் ஹைபர்டென்ஷன் என்று சொல்லப்படும் உயர் இரத்த அழுத்தத்திற்கு அதிக உப்பு காரணமாக கூறப்படுகிறது. எனவே எந்த வகை உப்பை உணவில் பயன்படுத்தலாம் என்பதை தெரிந்துகொண்டு பயன்படுத்துவது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

கடல் உப்பு : கடல் உப்பு என்பது இயற்கையாகவே கனிமச்சத்துக்கள் நிறைந்த கடலில் இருந்து நேரடியாக எடுக்கப்படும் ஒரு உப்பு வகையைக் குறிக்கிறது. பொதுவாக நம் சமையலறையில் கல்லுப்பு என்று சொல்லப்படும் சின்ன சின்ன கற்கள் போல வெள்ளை நிறத்தில் இருக்கும் உப்புதான் கடலுப்பு. ஆனால் இந்த கடல் உப்பு, வெண்மை நிறம் பெறுவதற்காக பல விதமான ரசாயனங்கள் மற்றும் கெமிக்கல் பிராசஸ்களுக்கு உட்படுத்தப்படுகின்றது. கடல் நீரை ஆவியாக்கி, அதிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் உப்பில் பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகிய மூன்று முக்கிய கனிமங்களும் இருக்கின்றன. கடல் உப்பு, டேபிள் சால்ட் என்று கூறப்படும் தூள் உப்பை விட மிகவும் ஆரோக்கியமானது.

பிங்க் சால்ட் (இந்துப்பு) : வெளிர் பிங்க் நிறத்தில் காணப்படும் பிங்க் சால்ட் என்று அழைக்கப்படும் இந்துப்பு, இமாலய மலைப் பிரதேசங்களில் கிடைக்கிறது. மலைகளில் இது பாறைகளாக வெட்டி எடுக்கப்பட்டு சந்தைகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. எந்த விதமான ரசாயனங்கள் அல்லது கெமிக்கல் ப்ராஸசிங்கிற்குக்கு உட்படுத்தப்படவில்லை என்பதால், இதில் அதிக சத்துக்கள் உள்ளன மற்றும் உடலுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. வழக்கமாக நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் டேபிள் சால்ட் மற்றும் கல் உப்பை விட, இதை தினசரி உணவில் சேர்த்தால் உடலுக்கு தேவையான சோடியம் மற்றும் இயற்கையான கனிமச் சத்துக்கள் போதுமான அளவு கிடைக்கும். அது மட்டுமல்லாமல் குறைவாக உப்பு சாப்பிட வேண்டும் என்று விரும்புபவர்கள், பிங்க் சால்ட்டை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கருப்பு உப்பு : பிங்க் சாட்டை போலவே ஒரு சில மலைப்பாங்கான இடங்களில் பழுப்பு முதல் கருப்பு நிறங்களில் கனிமங்கள் நிறைந்த, கருப்பு உப்பு கிடைக்கும். இதுவும் ஒருசில மலைப்பிரதேசங்களில் கிடைக்கக்கூடிய உப்பு வகைகளில் ஒன்று. கருப்பு உப்பு ஒரு விதமான வித்தியாசமான வாசனையை கொண்டிருப்பதால் ஒரு சிலருக்கு பிடிக்காமல் போகலாம். அதேபோல ஒரு சிலருக்கு இதை சாப்பிடும் பொழுது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.

டேபிள் சால்ட்: டேபிள் சால்ட் என்பதை நாம் தினசரி சமையலில் பயன்படுத்தக்கூடிய மற்றும் பொதுவாக பலவிதமான பாக்கெட்டில் வரும் உணவுகளில் அதிகமாக பயன்படுத்தக்கூடிய தூள் உப்பை குறிக்கிறது. இது வெள்ளை நிறமாக இருப்பதற்காக பலவித ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. எனவே டேபிள் சால்ட்டை குறைவாக பயன்படுத்த வேண்டும்.

உணவில் உப்பு சேர்ப்பதை தவிர்க்கவே முடியாது. ஆனால் எந்த அளவு சேர்க்கிறோம் என்பது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்காவில் வெளியான டயட்டரி கைடுலைன்கள் அடிப்படையில், ஒரு நாளைக்கு ஒரு நபர் 2300 மில்லி கிராம் அளவிற்கு மேல் உப்பை உட்கொள்ளகூடாது என்று கூறப்படுகிறது. ஆனால் சராசரியாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 3393 மில்லி கிராம் அளவுக்கு சோடியம் உட்கொள்கிறார்கள். தூள் உப்பில், சின்ன சின்ன துகள்களில் சோடியம் அதிகமாக இருக்கிறதுல் எனவே இதற்கு பதிலாக கிரிஸ்டல்களாகவும் கற்கள் போல இருக்கும் உப்பை பயன்படுத்தலாம்.


பணியிடத்தில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பணியாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கும்.. தீர்வுகளும்..!

 ஒரு நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், ஊழியர்கள் அர்ப்பணிப்போடு கடினமாக உழைக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அளவுக்கு அதிகமான பணிச்சுமை மற்றும் ஸ்ட்ரெஸ் ஆகியவை இன்றைய ஊழியர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளாக இருக்கின்றன.

குறிப்பாக பணியாளர்கள் உடல் ரீதியாக களைப்படைவது மட்டுமல்லாமல், மனரீதியாகவும் மிகுந்த நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். இரவு நேர பணியால் ஊழியர்களுக்கு கவலை, ஸ்ட்ரெஸ், மன அழுத்தம் போன்றவை உண்டாகின்றன.

உலக அளவில் மூன்றில் ஒரு ஊழியர் உடல் ரீதியாக மிகுந்த களைப்பு அடைகின்றனர் என்று உலக சுகாதார ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது. அதிலும் அமெரிக்காவில் பணியாற்றும் 77 சதவீத ஊழியர்கள் இந்த பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் ஊழியர்கள் தங்களுக்கான அறிகுறிகளை உணர்வதே கிடையாது.

இது குறித்து வசுதா அகர்வால் கூறுகையில், “பணிச்சுமை காரணமாக உடல் களைப்படையும்போது மிகுந்த சோர்வு, தலைவலி மற்றும் தூக்கமின்மை பிரச்சனைகள் போன்றவை ஏற்படும். கவலை, சோகம், எரிச்சல் உணர்வு போன்ற உளவியல் சார்ந்த பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரிடும். கவனம் செலுத்துதல் மற்றும் முடிவு எடுத்தல் ஆகிய திறன்களில் பிரச்சனை ஏற்படலாம். சிலர் நிலையற்ற தன்மையுடன் காணப்படுவார்கள்.

அதிகமான நேரம் பணி செய்வதை காட்டிலும், தரமான வகையில் பணி செய்ய முன்னுரிமை கொடுப்பது, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சி போன்றவை மூலமாக ஊழியர்கள் புத்துணர்ச்சி அடைய முயற்சி செய்யலாம். தியானம், யோகாசனம் போன்ற பயிற்சிகளை செய்வது நல்ல பலனை தரும்.

வேலைப்பளு மற்றும் அலுவலக நெருக்கடி சார்ந்த விஷயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் குடும்பத்தினருடன் விவாதித்தல் போன்றவை அதிலிருந்து விடுபடுவதற்கு உதவியாக அமையும். இல்லையென்றால் தொழில்முறை மருத்துவ நிபுணர்களை அணுகி இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்” என்று தெரிவித்தார்.

மன அழுத்த பிரச்சனைக்கு தீர்வு என்ன?

வேலைப்பளு காரணமாக ஏற்படுகின்ற மன அழுத்த பிரச்சனைக்கு பல வகைகளில் தீர்வு காண முயற்சி செய்யலாம். மனதிற்கு பிடித்தமான இசையை ரசிப்பது, புத்தகம் வாசிப்பது, இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை பார்வையிடுவது, தொலைதூரப் பகுதிகளுக்கு நண்பர்களுடன் சுற்றுலா செல்வது போன்ற நடவடிக்கைகள் மூலமாக மனதில் உள்ள பாரம் குறையும்.

வேலைப்பளு மற்றும் குறுகிய கால அளவிலான இலக்குகள், மிகுந்த நெருக்கடி போன்றவை நீடித்த பிரச்சினைகளாக இருக்கும் அலுவலகங்களில் இருந்து விலகி வேறொரு நல்ல நிறுவனத்தில் சேர்வதற்கு முயற்சி செய்யலாம்.

TNPL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.1,05,760/- ஊதியம் !

 

TNPL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.1,05,760/- ஊதியம் !

TNPL ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Officer, Assistant Manager (Accounts) பணிகளுக்கென 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPL காலிப்பணியிடங்கள்:

TNPL தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Officer,Assistant Manager (Accounts) பணிகளுக்கு என 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPL வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 29 முதல் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPL கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் CA (or) CMA, பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

TNPL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.1,05,760/- முதல் ரூ.1,27,651/- வரை ஊதியமாக பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPL தேர்வு செய்யப்படும் முறை :

திறமையுள்ள விண்ணப்பதாரர்கள் Deputation மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPL விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF
Application Form Link


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Indian Army வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.56,100/- உதவித்தொகை !

 

Indian Army வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.56,100/- உதவித்தொகை !

Indian Army ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அவ்வங்கியில் Technical Graduate பணிக்கு என 30 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. இப்பணிக்கு திருமணமாகாத ஆண்களிடம் இருந்து தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Indian Army காலிப்பணியிடங்கள்:

Indian Army ஆனது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Technical Graduate பணிக்கு என 30 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Army வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 20 முதல் 27 ஆக இருக்க வேண்டும், வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Indian Army கல்வித் தகுதி:

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Indian Army ஊதிய விவரம் :

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.56,100/- உதவித்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

Indian Army பணிக்கான தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Short listing, Medical Examination, Merit List மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Indian Army விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news