Showing posts with label Educational News Tamil. Show all posts
Showing posts with label Educational News Tamil. Show all posts

8th Pay commission – முதல் கூட்டம் (28.04.2026) சுருக்கம் - முக்கிய கோரிக்கைகள்

 



8வது ஊதியக் குழு – முதல் கூட்டம் (28.04.2026) சுருக்கம்

8வது மத்திய ஊதியக் குழுவுடன் NC-JCM முதல் கூட்டம் நடைபெற்றது.

பணியாளர் தரப்பு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தது.


முக்கிய கோரிக்கைகள்:

மெமோராண்டம் சமர்ப்பிப்பு காலத்தை நீட்டிக்க வேண்டும்

குறைந்தபட்ச ஊதியம் ₹69,000 ஆக நிர்ணயம்

Fitment Factor 3.83 ஆக உயர்த்த வேண்டும்

ஆண்டுதோறும் 6% ஊதிய உயர்வு

30 ஆண்டுகளில் 5 பதவி உயர்வு வழங்க வேண்டும்

அலவன்ஸ்கள் 3 மடங்கு உயர்த்த வேண்டும்

NPS நீக்கி பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வர வேண்டும்

ஓய்வூதியதாரர்களுக்கு One Rank One Pensionபணிநிலைகள் தொடர்பான கோரிக்கைகள்:

தொலைப்பகுதிகளில் பணிபுரியும் ஊழியர்களின் நிலை ஆய்வு

வட்டி இல்லாத கடன்கள்

விடுப்பு சலுகைகள் அதிகரிப்பு


பாதுகாப்பு & நலன்:

விபத்து மரண நிவாரணம் ₹2 கோடி

காப்பீட்டு தொகை உயர்வு

Compassionate appointment வரம்பு நீக்கம்


குழுவின் பதில்:

மேலும் கூட்டங்கள் நடைபெறும்

அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும்

மெமோராண்டம் கால நீட்டிப்பு விரைவில் முடிவு செய்யப்படும்


மொத்தமாக:

இந்த கூட்டம் ஆரம்ப நிலை ஆலோசனையாக இருந்தது.
அடுத்த கூட்டங்களில் ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.





11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றியமைத்தல் - தெரிவு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு சென்னையில் பணிமனை - SCERT Proceedings

 

11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான கலைத்திட்டம், பாடத்திட்டம் மாற்றியமைத்தல் தொடர்பாக தெரிவு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு சென்னையில் பணிமனை - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!!!

பார்வை 2இல் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணையில் 2026-2027ஆம் கல்வியாண்டில் 1 முதல் 3 வகுப்புகளுக்கான கலைத்திட்டம். பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை மாற்றியமைக்குமாறு இந்நிறுவனத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.


இதனடிப்படையில் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்தினை (State Board) பல்வேறு நாடுகள். மாநிலங்கள் மற்றும் பிற வாரியங்களின் கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்துடன் ஒப்பபீடு செய்யும் பணி இந்நிறுவனத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்தொடர்ச்சியாக 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்தினை மீளாய்வு செய்து இறுதி செய்யும் பணிமனை சென்னை-06. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 11.05.2026 முதல் 15.05.2026 வரை நடைபெற உள்ளது.


எனவே இப்பணிமனையில் கலந்துகொள்ள எதுவாக இணைப்பிலுள்ள மேல்நிலை வகுப்பு பாடங்களுக்கான பல்கலைக்கழக மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களைப் பணிவிடுவிப்பு செய்யுமாறு சார்ந்த அலுவலர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்


அடிப்படை விதிகள் அறிவோம் - வருகைப்பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயர் எழுதும் முறை - Proceedings

தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் கிருஷ்ணகிரி முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அவர்களின் செயல்முறைகள்

தகவல்அறியும் உரிமை சட்டம் - 2005 கீழ் திரு.அமாதையன், அஜ்ஜிபட்டி கிராமம், மானியாக அள்ளி அஞ்சல், நல்லம்பள்ளி வழி, தர்மபுரி மாவட்டம் என்பார் சில தகவல்கள் கோரியது - நகவல்கள் வழங்குதல் - சார்பாக,

திரு.அமாதையன், அஜ்ஜிபட்டி கிராமம், மானியாதஅள்ளி அஞ்சல், நல்லம்பள்ளி வழி, தர்மபுரி மாவட்டம் என்பாரது மனு நாள் 06-04-2015

பார்வையில் காணும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 ன்படி தங்களது மறு பரிசீலிக்கப்பட்டதில் தங்களால் கோரப்பட்ட நான்கு வினாக்களுக்கு சார்பாக கீழ்க்கண்ட தகவல்கள் அளிக்கப்படுகிறது.

ஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயர்கள் அவர்கள் பெறுகின்ற சம்பன ஏற்ற முறையில் உள்ள தர ஊதியத்தின் அடிப்படையில், இறங்கு வரிசையில் எழுத வேண்டும். ஒரு குறிப்பிட்ட பணியில் / பதவியில் ஒன்றுக்கு மேற்பட்டவர் ஒரே நாளில் மற்றும் ஒரே நேரத்தில் (முய? பி.பபு பணியில் சேர்ந்திருந்தால் அவர்களது பெயர்கள் பிறந்த தேதி மற்றும் அகர வரிசை ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்படும். ஒரே நாளில் இருவர் பணியில் சேர்ந்திருந்தால் அவர்களில் வயதில் மூத்தவர் முதலிலும், வயதில் இளைவர் அவர்களுக்கு அடுத்தும் எழுத வேண்டும். இருவருக்கும் பிறந்த தேதி ஒன்றாகவே இருக்குமேயானால் அவர்களது பெயர்கள் அகர யரிசை அடிப்படையில் எழுதப்படும். மேலும் வருகை பதிவேட்டில் பெயர் எழுதப்படுவதற்கு பாடம் சம்மந்தமாக முன்னுரிமை ஏதும் வழங்கப்படுவதில்லை.


மேற்கண்ட தகவல்கள் தங்களால் ஆட்சேபிக்கப்படுமேயானால் இக்கடிதம் கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் கீழ்க்கண்ட அலுவலருக்கு மேல்முறையீடு செய்துக்கொள்ளலாம்.

மேல்முறையீட்டு அலுவலர்:-
மேல்முறையீட்டு அலுவலர் மற்றும் முதன்மைக்கல்விஅலுவலர்,'
முதன்மைக்கல்வி அலுவலகம், கிருஷ்ணகிரி,


Teachers Attendance Name List Order - Proceeding





கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் - 895 மாணவர்கள் தேர்வு - Director Proceedings

 மலை சுற்றுலாத் தளங்களில் கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் - 895 மாணவர்கள் தேர்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


மாணவர்களின் தனித்திறன்களை மெருகேற்றுதல் கோடைக்கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் மலைசுற்றுலாத் தளங்களில் நடத்துதல் மாணவர்களின் பெயர் பட்டியல் பெறப்பட்டது மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று வருதல் பெற்றோர் மற்றும் மாணவர்களின் பாதுகாவலர்களிடமிருந்து விருப்பக் கடிதம் பெறுதல் சார்ந்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்பு.





NEET நுழைவுத் தேர்வு நிறைவு - சுலபமா, கடினமா ? மாணவர்கள் கருத்து

 நாடு முழுவதும் இன்று நடைபெற்று வந்த 2026-27-ஆம் கல்வியாண்டு இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நிறைவுபெற்றது.


நாடு முழுவதும் 22.80 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், தமிழ்நாட்டில் 1.4 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்.

நாடு முழுவதும் 552 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. சென்னையில் 43 மையங்களில் நீட் தேர்வு நடந்தது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் நீட் தோ்வில் தகுதி பெறுபவா்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கும் நீட் தேர்வு மூலமே மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அந்தவகையில் 2026 - 27 ஆம் கல்வி ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது.

நீட் தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்கள் தங்களின் அனுபவம் குறித்து பகிர்ந்தனர்.

அதில், ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு நீட் தேர்வு எளிமையாகவே இருந்ததாகவும், ஆனால், முழுவதும் எளிமை என்று கூற முடியது என்றும் குறிப்பிட்டனர்.

குறிப்பாக வேதியியல், இயற்பியல் கடினமாக இருந்ததாகவும், விலங்கியல் எளிமையாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் 552 நகரங்கள் மட்டுமின்றி துபை, அபுதாபி, மஸ்கட், ரியாத், சிங்கப்பூா் உள்ளிட்ட 14 வெளிநாடுகளில் 5,000 மையங்களில் தோ்வு நடைபெற்றது. தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்களை பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர்.

த.வெ.க - ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அளித்துள்ள முக்கிய வாக்குறுதிகள்

 ஆசிரியர் நலன்

1.  சம வேலை! சம ஊதியம்!
தமிழ்நாடு ஆசிரியர் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு, தற்காலிகமாகப் பணியாற்றும் ஆசிரியர்களில் 5 வருடங்களை நிறைவு செய்திருப்பவர்கள், நிரந்தர ஆசிரியர்களாக மாற்றப்படுவார்கள். 

அதுபோல், தற்காலிக ஆசியர்களாகப் அவர்கள் பணியாற்றும் காலத்தில், நிரந்தர ஆசிரியர்களுக்கு இணையாக தற்காலிக ஆசிரியர்களும் "சம வேலைக்கு சம ஊதியம்” பெறுவது உறுதி செய்யப்படும்.

2. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வெளிநாட்டுப் பயிற்சி
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தகுதியை மேம்படுத்தும் விதமாக தேர்வு செய்யப்படும் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும், பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கும் சிங்கப்பூர் மற்றும் பின்லாந்து நாடுகளில் பயிற்சி பெற அழைத்துச் செல்லப்படுவார்கள்.

3. ஆசிரியர் நியமனம்
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களும் நிரப்பப்படும்.

4. ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை திறன்படக் கற்றுக் கொள்ள ஏதுவாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் கல்வி திறன் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

5. கற்பித்தல் அல்லாத பணிகள் நீக்கம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களை கற்றல்-கற்பித்தல் அல்லாத பணிகளில் ஈடுபடுத்தப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்படும்.


அங்கன்வாடிப் பணியாளர்-ஆஷா பணியாளர் நலன்
1. ஊதிய உயர்வு
அனைத்து அங்கன்வாடி பணியாளர்களும் 'கிரேடு - டி' அரசு ஊழியர்களாக மாற்றப்பட்டு, அதன் அடிப்படையில் அவர்களுக்கு மாதம் 18000 ரூபாய் ஊதியம் வழங்கப்படும். அதுபோல், அங்கன்வாடி உதவியாளர்களுக்கும், சுகாதார விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்ளும் ஆஷா பணியாளர்களுக்கும் மாத ஊதியம் 10,000 ரூபாய் என்பது உறுதி செய்யப்படும்.

2 ஓய்வூதியப் பலன்
20 வருடங்கள் பணி நிறைவு செய்துள்ள அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்கள் 15 லட்சம் ரூபாய் ஓய்வூதியப் பலனாகப் பெறுவது உறுதி செய்யப்படும்.


அரசு ஊழியர் நலன்
1. பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துதல்
தி.மு.க அரசு கொண்டுவந்துள்ள தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஒழிக்கப்பட்டு, அரசு ஊழியர்களின் கோரிக்கைக்கேற்ப முழுமையான பழைய ஓய்வூதியத் திட்டம் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படும்.

2. அரசு ஊழியர் நல வாரியம்
அரசு, போலீஸ் பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களின் நலன்களை உறுதிப்படுத்தவும் ரூ.5,000 கோடி ஒதுக்கீட்டுடன் அரசு ஊழியர் நல வாரியம் அமைக்கப்படும்.

3. தற்காலிகப் பணியாளர் பணி நிரந்தரம்
ஆசிரியர், செவிலியர் உள்ளிட்ட அரசுப் பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட தற்காலிகப் பணியாளர்கள் 5 வருடப் பணி அனுபவம் பெற்றதும், அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக நியமனம் செய்யப்படுவார்கள்.

4. பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலில் வெளிப்படைத்தன்மை
அரசு ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல்கள் நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெறுவது உறுதி செய்யப்படும்.


5. 8ஆம் ஊதியக் குழுவின் உடனடி அமலாக்கம்
ஒன்றிய அரசு அறிவித்தவுடன், அரசு ஊழியர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் 8ஆம் ஊதியக் குழுவை மாநிலத்தில் உடனடியாக த.வெ.க. அரசு அமல்படுத்தும்.



2026 சட்டமன்ற தேர்தலுக்கான த.வெ.க-வின் முழு தேர்தல் அறிக்கை



பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடக்கம்.

 பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடக்கம்.


தமிழகத்தில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடக்கம்.


மே 3 முதல் ஜூன் 2 வரை www.tneaonline.org இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பக் கட்டணம் - OC/BC/BCM/MBC@DNC ₹500, SC/SCA/ST ₹250.


அசல் சான்றிதழ் பதிவேற்ற கடைசி நாள் - ஜூன் 6 தேதி ஆகும்.






இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today




TVK தேர்தல் அறிக்கை முக்கிய வாக்குறுதிகள்

 TVK தேர்தல் அறிக்கை முக்கிய வாக்குறுதிகள்


நிகழ்ச்சியில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான த.வெ.க-வின் முழு தேர்தல் அறிக்கை


திருக்குறளை அடிப்படையாக கொண்டு

584244
த.வெ.க. தேர்தல் அறிக்கை திருக்குறளில் உள்ள அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டதாக விஜய் குறிப்பிட்டார்.


  • 60 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனினும் மத்திய, மாநில அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு மட்டும் இந்த தொகை அளிக்கப்படாது.
  • அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின்கீழ் 6 விலையில்லாத சிலிண்டர்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுதோறும் அளிக்கப்படும்.
  • திருமணம் செய்யும் ஏழைப் பெண்களுக்கு 1 சவரன் தங்கம், தரமான பட்டுச் சேலை
  • தமிழகம் முழுவதும் அனைத்துப் பெண்களும் எங்கிருந்து வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பயணிக்க அனைத்துப் பேருந்துகளிலும் இலவசப் பேருந்து வசதி
  • அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர், பாதுகாவலர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம்
  • வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் வரை உதவித்தொகை,
  • 12, ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.2,500 மாதாந்திர உதவித்தொகை
  • தொழில்முனைவோராக விரும்பும் இளைஞர்களுக்கு ரூ.25 லட்சம் பிணையில்லாக் கடனுக்கான உத்தரவாதம்
கல்விக்கான உத்தரவாதம்

100 காமராசர் சிறப்புப் பள்ளிகள்
அனைத்து மாவட்டங்களிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தரமான கல்வியை வழங்கும் உறைவிடப் பள்ளிகள்
ஒவ்வொரு மாணவரின் கல்விக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில், இளங்கலை முதல் பிஎச்.டி வரை ரூ.20 லட்சம் பிணையில்லாக் கல்விக் கடனுக்கான உத்தரவாதம்
ஏஐ மூலம் இலவச போட்டித்தேர்வு பயிற்சி


தவெக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

1.மகளிர் மேம்பாடு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500, 6 விலையில்லா சிலிண்டர்கள், மணப்பெண்களுக்கு 1 சவரன் தங்கம் பட்டுச்சேலை, பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், மாணவர்களின், மகளிர் குழுக்களுக்கு ரூ. 5 லட்சம் வட்டியில்லா கடன்.

2. உலகத்தரக் கல்விகல்வி வழிகாட்டி
உறைவிட வசதியுடன் 100 காமராஜர் சிறப்புப் பள்ளிகள், ரூ.20 லட்சம் வரை உயர்கல்விக் கடன், நவீன கட்டமைப்புடன் அரசுப் பள்ளிகள், ஏஐ மூலம் கட்டணமில்லா போட்டித் தேர்வு பயிற்சிகள்.

3.சுகாதாரமான தமிழ்நாடு
குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு, நவீன கட்டமைப்புடன் கூடிய மருத்துவமனை, ஆண்டுதோறும் கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை,

4. போதைப்பொருள்
போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு

5. சமூகப் பாதுகாப்பு
முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம், 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு. நீண்டகாலம் பட்டா இல்லாதவர்களுக்குப் பட்டா.

6. அரசு ஊழியர் நலன்
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனை, ஐந்தாண்டு பணியிலுள்ள ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம், அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.18,000, சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.10,000 ஊதியம், பணி ஓய்வின் போது ரூ.15 லட்சம்


7. இளைஞர் முன்னேற்றம்
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வரை உதவித்தொகை, ஊதியத்துடன் கூடிய 5 லட்சம் இன்டர்ன்ஷிப், 5 லட்சம் புதிய அரசு வேலைவாய்ப்புகள், தொழில் தொடங்க ரூ. 25 லட்சம் கடன், அரசுத் தேர்வுகளுக்குக் கால அட்டவணை
8. விவசாயிகள் நலன்
நிலமுடைய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 முதலீட்டு உதவி, பயிர்க் கடன்கள் தள்ளுபடி, MSP: நெல் குவிண்டால் ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ.4,500, 5 லட்சம் சோலார் பம்புகள், தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000; 100% பயிர்க் காப்பீடு.

9. மீனவர் நலன்
தடைக்கால நிவாரணம் ரூ.27,000, மீன்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, ரூ.25 லட்சம் விபத்துக் காப்பீடு, மீனவர்களுக்கு நிரந்தர வீடு.

10. தமிழ்நாடு வளர்ச்சி
2036-க்குள் ரூ.15 டிரில்லியன் பொருளாதாரம், ஏஐ அமைச்சகம், ஏஐ பல்கலைக்கழகம், ஏஐநகரம், MSME-களுக்கு ரூ.15,000 கோடி ஆதரவு, மாவட்ட வாரியாக ’மாஸ்டர் பிளான்’: தமிழ்நாட்டில் முதலீடு செய்பவர்களுக்கு 21 நாட்களுக்குள் வணிக உரிமம்.

11. நல்லாட்சி
லஞ்சமில்லா நிர்வாகத்துடன் அரசுச் சேவைகள் அனைத்தும் வீட்டு வாசலில், காலக்கெடுவுடன் கூடிய அரசு சேவைகள், நிதி ஒதுக்கீட்டில் 10% திட்டங்களை மக்களே தீர்மானிக்கும் அதிகாரம். சட்டமன்றத்தில் மக்கள் முறையீட்டுக்காக ஒருநாள்.







இணைப்பு (Merge) செய்யப்பட்ட கணக்குத் தலைப்புகளில் மீளவும் செலவினம் மேற்கொள்ளும் அலுவலர் (DDO) மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை!

 

இணைப்பு (Merge) செய்யப்பட்ட கணக்குத் தலைப்புகளில் மீளவும் செலவினம் மேற்கொள்ளும் அலுவலர் (DDO) மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை!




இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Retirement Details/ Benefits சார்ந்த அரசாணைகள், மாதிரி கடிதங்கள், மற்றும் செயல்முறைகள்

 பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்கள் / பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார்கள் அவர்களுக்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரிய நண்பர்களும்/ பொறுப்பு தலைமை ஆசிரியர்களும்... கேட்ட சந்தேகங்களின் படி... 


Retirement Details/ Benefits சார்ந்த சிறிய தகவல் தொகுப்பு அரசாணைகள்... மாதிரி கடிதங்கள்... மற்றும் செயல்முறைகளுடன்..






இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

3-வது பிரசவத்திற்கும் முழுமையான பேறுகால விடுப்பு - உயர் நீதிமன்றம் - Court Order

 


மூன்றாவது பிரசவத்திற்கு 12 வாரங்கள் மட்டுமே விடுப்பு வழங்கும் தமிழக அரசின் அரசாணையை ஏற்க முடியாது.

முதல் இரண்டு பிரசவங்களில் அனுபவிக்கும் அதே வலியைத்தான், மூன்றாவது பிரசவத்திலும் பெண்கள் அனுபவிக்கின்றனர்..


உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளின் படி, மூன்றாவது பிரசவத்திற்கும் ஓராண்டு முழுமையான பேறுகால விடுப்பு வழங்க வேண்டும்.


விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பெண் ஊழியர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

TET கட்டாயத் தேவை குறித்த முடிவு மாற்றியமைக்கப்படுமா?சீராய்வு மனு ஏற்கப்பட்டது!

 TET கட்டாயத் தேவை குறித்த முடிவு மாற்றியமைக்கப்படுமா?சீராய்வு மனு ஏற்கப்பட்டது!

நீதிபதி தத்தா தலைமையிலான அமர்வு, மறுபரிசீலனை செய்வதற்கான அவசியத்தை ஒப்புக்கொண்டது.

தீர்மானிக்கும் இறுதிப் போர் இனி 'திறந்த நீதிமன்றத்தில்' (Open Court) நடைபெறும்.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) கட்டாயம் என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஒரு முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2025, செப்டம்பர் 1-ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை நீதிபதி தீபங்கர் தத்தா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அந்த முந்தைய தீர்ப்பு நாடு முழுவதும் பணியில் இருக்கும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களிடையே கவலையை ஏற்படுத்தியிருந்தது.

📌 அறையில் (Chamber) நடைபெற்ற முக்கிய விசாரணை

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, நீதிபதி தீபங்கர் தத்தா தலைமையிலான அமர்வு பல்வேறு மாநிலங்கள் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களைத் தனது அறையில் வைத்துப் பரிசீலித்தது. உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் முக்கியத் தரப்பினரின் தகவல்களின்படி, நீதிமன்றம் இந்தச் சீராய்வு மனுக்களை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

📌 இந்த வழக்கு எதைப் பற்றியது?

2025, செப்டம்பர் 1 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு முக்கியத் தீர்ப்பில், NCTE வழிகாட்டுதல்கள் மற்றும் RTE சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே பணியில் சேர்ந்த ஆசிரியர்களும், தங்கள் பணியைத் தொடர TET தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த முடிவால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் வேலைக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனால், பல ஆசிரியர் அமைப்புகளும் மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்தன.

அடுத்து என்ன நடக்கும்?



சீராய்வு மனு ஏற்பு மற்றும் 'திறந்த நீதிமன்ற' விசாரணையின் முக்கியத்துவம்

உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய நிலைப்பாடு சட்டச் செயல்பாட்டில் ஒரு புதிய திருப்பத்தைக் கொண்டு வந்துள்ளது. சீராய்வு மனுவை ஏற்றதன் மூலம், செப்டம்பர் 1, 2025 உத்தரவை மறுபரிசீலனை செய்யப் போதுமான காரணங்களும் அவசியமும் இருப்பதை நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

பொதுவாக, சீராய்வு மனுக்கள் நீதிபதிகளின் அறையிலேயே (Chambers) தீர்மானிக்கப்படும். ஆனால், இந்த விவகாரத்தைத் 'திறந்த நீதிமன்றத்திற்கு' (Open Court) மாற்றியது, இந்தச் சிக்கலின் உணர்திறனையும் அதன் பரந்த தாக்கத்தையும் நீதிமன்றம் உணர்ந்துள்ளதைக் காட்டுகிறது. மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடந்த இந்தச் செயல்முறை இனி பொது நீதிமன்றத்திற்கு வரும், அங்கு இரு தரப்பினரும் தங்கள் வாதங்களையும் எதிர்வாதங்களையும் முன்வைக்க முழு வாய்ப்பு அளிக்கப்படும். இது ஆசிரியர்களுக்குப் புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது.

📌 புதிய வாதங்கள் மற்றும் சட்டச் சிக்கல்கள் மறுஆய்வு

திறந்த நீதிமன்ற விசாரணை நடைபெற உள்ளதால், இந்த விவகாரம் மீண்டும் தீவிர சட்ட விவாதத்தின் மையப்புள்ளியாக மாறும். இருதரப்பு மூத்த வழக்கறிஞர்களும் சட்ட நுணுக்கங்கள் மற்றும் கள எதார்த்தங்களை மையமாக வைத்து விரிவான வாதங்களை முன்வைப்பார்கள்.

ஆசிரியர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், RTE சட்டம் மற்றும் பணியில் இருக்கும் ஆசிரியர்களின் அரசியலமைப்பு உரிமைகள் குறித்த விளக்கங்களை முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலை செப்டம்பர் 1 உத்தரவு மாற்றப்படுமா அல்லது முழுமையாக ரத்து செய்யப்படுமா என்பதைத் தீர்மானிக்கும் முக்கியக் கட்டமாக இருக்கும்.

📌 ஆசிரியர்களுக்குக் கிடைத்த இடைக்கால நிம்மதி மற்றும் தார்மீக வெற்றி

TET தகுதி இல்லாமல் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு, இந்தச் சீராய்வு மனு ஏற்பு ஒரு குறிப்பிடத்தக்க தார்மீக மற்றும் சட்ட வெற்றியாகக் கருதப்படுகிறது. முந்தைய தீர்ப்பு அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிய நிலையில், இந்த முன்னேற்றம் ஓரளவு நிம்மதியையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது.

📌 விரிவான எழுத்துப்பூர்வ உத்தரவுக்காகக் காத்திருப்பு

வாய்மொழி அவதானிப்புகள் முக்கியமானவை என்றாலும், விரிவான எழுத்துப்பூர்வ உத்தரவு வெளியான பின்னரே இந்த விவகாரத்தில் முழுமையான தெளிவு கிடைக்கும். உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வ உத்தரவு பதிவேற்றம் செய்யப்பட்ட பிறகு, சீராய்வு மனுவை ஏற்றதற்கான காரணங்கள் மற்றும் திறந்த நீதிமன்ற விசாரணைக்கான நிபந்தனைகள் தெளிவாகத் தெரியும்.

தற்போது, வழக்கின் அடுத்தகட்ட நகர்வைத் தீர்மானிக்கப் போகும் அந்த அதிகாரப்பூர்வ ஆவணத்திற்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.

EPFO குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர்கிறது

 571568

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) சந்தாதாரர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியம் விரைவில் உயர்கிறது தற்போது வழங்கப்பட்டு வரும் குறைந்தபட்ச EPFO ஓய்வூதியம் ரூ.1,000 என்பது ரூ.7,500 ஆக உயர்த்தப்பட வாய்ப்பு பிஎஃப் தொகையை வங்கி ஏடிஎம்களில் பெறும் வசதியை அறிமுகம் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு - பள்ளிக் கல்வி இயக்குநர் நிராகரிப்பு!

 573478

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதன் காரணமாக,  TET தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க இயலாது - பதவி உயர்வு கோரி 10 நபர்கள் விண்ணப்பித்த நிலையில் பள்ளிக் கல்வி இயக்குநர் நிராகரிப்பு!

DSE - HS HM Promotion - Download here






இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

புதிய ஓய்வூதியத் திட்டம் - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

 புதிய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு 8 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை வகுத்து அறிவிக்கக் கோரி தமிழ்நாடு பழைய ஓய்வூதிய திட்ட மீட்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் நந்தகோபால் வழக்கு



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

சுற்றுச்சூழல் மேலாண்மை டிப்ளமோ படிப்பு: சென்னை பல்கலைக்கழகத்தில் அறிமுகம்

 சென்னை பல்​கலைக்​கழக நிலத்​தி​யல் (ஜி​யாலஜி) துறை​யின் தலை​வர் எம்​.சுரேஷ் காந்தி வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை பல்​கலைக்​கழக கிண்டி வளாகத்​தில் இயங்கி வரும் நிலத்​தி​யல் துறை, நீடித்த ஆதார திட்​ட​மிடல் மற்​றும் மேலாண்​மைக்​கான புவி அறி​வியல் முறை​கள் என்ற புதிய டிப்​ளமா படிப்பை (Diploma in Geoscientific Methods for Sustainable Resource Planning and Management ) வரும் கல்வி ஆண்​டில் (2026-2027) அறி​முகப்​படுத்​துகிறது.

சுயநிதி அடிப்​படை​யில் தொடங்​கப்​படும் இந்த படிப்​பானது வளர்ந்து வரும் துறை​யான சுற்​றுச்​சூழல் மற்​றும் ஆதார மேலாண்​மை​யில் ஆராய்ச்சி திறன்​களை வலுப்​படுத்​த​வும் மாணவர்​களின் வேலை​வாய்ப்​புத்​திறனை மேம்​படுத்​தும் நோக்​கிலும் தொடங்​கப்​படு​கிறது.

இந்த ஓராண்டு கால படிப்​பில் பிஎஸ்​சி, எம்​எஸ்சி பட்​ட​தா​ரி​கள் சேரலாம். மேலும் பிடெக் சுற்றுச்சூழல் பொறியியல், சிவில் இன்​ஜினீயரிங், பிடெக் ஜியோ-இன்​பர்​மேட்​டிக்​ஸ், தொலை​யுணர்வு மற்​றும் பயன்​பாட்டு அறி​வியல் பட்​ட​தா​ரி​களும் சேர தகு​தி​யுடைய​வர் ஆவர்.

படிப்​புக்கு மொத்​தம் 18 கிரெடிட் வழங்​கப்​படும். மொத்​தம் 6 பாடங்​கள். 120 மணி நேர வகுப்​பறை பாடம் மற்​றும் களப்​பணி, செய்​முறை பணி ஆகிய​வற்றை உள்​ளடக்​கியது. இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.




இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க