Showing posts with label Educational News Tamil. Show all posts
Showing posts with label Educational News Tamil. Show all posts

Anna University Recruitment 2026 – Project Assistant & Scientist வேலைவாய்ப்பு! ₹75,000 சம்பளம் | Apply Now

          

Anna University Recruitment 2026 – Project Assistant & Project Scientist வேலைவாய்ப்பு

🎓 தமிழ்நாட்டின் முன்னணி கல்வி நிறுவனமான Anna University தற்போது Project Assistant, Project Associate மற்றும் Project Scientist உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 18 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் Offline (Post மூலம்) விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலை Chennai, Tamil Nadu பகுதியில் வழங்கப்படுகிறது.

Quick Info (வேலை சுருக்கம்)

  • Organization: Anna University
  • Post Name: Project Assistant, Project Associate, Project Scientist
  • Total Vacancy: 18
  • Job Location: Chennai, Tamil Nadu
  • Salary: ₹24,000 – ₹75,000 per month
  • Apply Mode: Offline (Post மூலம்)
  • Application Start Date: 17 March 2026
  • Last Date to Apply: 28 March 2026

    கல்வித் தகுதி (Educational Qualification)

    Project Scientist

    • PhD + 4 வருட அனுபவம்

    Project Associate – II

    • ME / M.Tech / M.Sc (தொடர்புடைய துறையில்)

    Project Associate – I

    • BE / B.Tech / M.Sc / M.Com / MBA
    • 3 வருட அனுபவம்

    Project Assistant

    • B.Com / BCA / B.Sc / BBA

    📊 காலியிட விவரம் (Vacancy Details)

    PostVacancy
    Project Scientist7
    Project Associate-II7
    Project Associate-I2
    Project Assistant2
    Total18

    💰 சம்பளம் (Salary Details)

    PostSalary
    Project Scientist₹75,000 per month
    Project Associate-II₹60,000 per month
    Project Associate-I₹31,000 per month
    Project Assistant₹24,000 per month

    இந்த வேலை Anna University Research Project Jobs ஆக இருப்பதால் நல்ல சம்பளமும் அனுபவமும் கிடைக்கும்.


    🎯 வயது வரம்பு (Age Limit)

    • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.
    • முழு விவரங்களை Notification-ல் பார்க்கலாம்.

    📝 தேர்வு முறை (Selection Process)

    விண்ணப்ப கட்டணம் (Application Fee)

    • Application Fee: இல்லை
    • அனைவரும் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.

    📅 முக்கிய தேதிகள் (Important Dates)

    • Application Start: 17 March 2026
    • Last Date to Apply: 28 March 2026

    கடைசி தேதிக்கு முன் விண்ணப்பத்தை அனுப்புவது அவசியம்.


    📮 விண்ணப்பிக்கும் முறை (How to Apply)

    Anna University Project Recruitment 2026-க்கு விண்ணப்பிக்க கீழ்க்கண்ட படிகளை பின்பற்றவும்:

    Official Website:
    https://www.annauniv.edu/

    Official Notification: Click Here

    Application Form: Click here

    1️⃣ Anna University அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து Application Form-ஐ Download செய்யவும்.
    2️⃣ Application Form-ஐ Print எடுக்கவும்.
    3️⃣ தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
    4️⃣ Notification-ல் கூறப்பட்டுள்ள ஆவணங்களை இணைக்கவும்.
    5️⃣ விண்ணப்பத்தை கீழே உள்ள முகவரிக்கு Post மூலம் அனுப்பவும்.


    📍 விண்ணப்ப முகவரி

    The Director
    Centre for Climate Change and Disaster Management
    Anna University
    Chennai – 600025
    Tamil Nadu




இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 - நடைமுறைகள் - தேர்தல் ஆணையம்

         

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் - 2026
இந்திய தேர்தல் ஆணையம் 15.03.2026 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலின் அட்டவணையை அறிவித்துள்ளது. அதன்படி வாக்குப்பதிவு அட்டவணை பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.






இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

ஏப்.1-ம் தேதி உள்ளூர் விடுமுறை

         பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு


பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நெல்லை மாவட்டத்திற்கு ஏப்.1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலங்கள் செயல்படாது. விடுமுறையை ஈடுசெய்ய ஒரு குறிப்பிட்ட நாளில் வேலை நாளாக அறிவிக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு விரைவில் விடுமுறை அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.






இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

MSHM TO BEO பதவி உயர்வு வழக்கு

         


 

MSHM TO BEO பதவி உயர்வு ஆனது,ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் II முடித்த MSHM களை வைத்து தான் நடத்த வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.  தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 786/11/2026 நாள் 26.02.2026 Challenge செய்யப்பட்டுள்ளது. வழக்கு எதிர்வாதவுரை தாக்கல் செய்ய ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. வழக்கில் தடை ஆணை வழங்கப்படவில்லை .

407577





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

SSLC பொதுத் தேர்வு - சொல்வதை எழுதுபவராக 6-8 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களையே நியமனம் செய்ய வேண்டும் -DGE

         SSLC பொதுத் தேர்வு - சொல்வதை எழுதுபவராக 6-8 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களையே நியமனம் செய்ய வேண்டும் - சம்பந்தப்பட்ட பாடத்தை போதிப்பவராக இல்லாமல் அப்பாடத்தைப் பற்றி அறிந்தவராக இருக்க வேண்டும் - அ.தே.இ!

408951



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணைகள் வெளியீடு.

         

396327

  மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2027 – மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம், 1948-இன் கீழ் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்கள் நியமனம் – அறிவிக்கை வெளியிடப்பட்டது – அரசு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.


Census, 2027- Appointment of Census Officers under the Census Act, 1948 - Notification - Published - Orders Issued.

👇👇👇👇

Download here





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேர்தல் நடத்தை விதிகள் (மார்ச் 2026)

         


 முக்கிய அறிவிப்பு: தேர்தல் நடத்தை விதிகள் (மார்ச் 2026) 


​தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) உடனடியாக அமலுக்கு வரும். குழு உறுப்பினர்கள் மற்றும்  அரசு ஊழியர்கள் கீழ்க்கண்ட விதிகளைத் தவறாமல் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


*​1. வாட்சாப் குழு உறுப்பினர்களுக்கான பொது விதிகள்:


*​தவறான செய்திகள் (Fake News):


 உறுதிப்படுத்தப்படாத செய்திகள், போலியான கருத்துக்கணிப்புகள் அல்லது எடிட் செய்யப்பட்ட வீடியோக்களைப் பகிர வேண்டாம்.


*​வெறுப்புப் பேச்சு:


 சாதி, மத ரீதியான மோதல்களைத் தூண்டும் விதமாகவோ அல்லது தனிநபர்களின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலோ பதிவிடக் கூடாது.


*​AI விழிப்புணர்வு:


 டீப்-பேக் (Deepfake) எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள்/குரல் பதிவுகளைப் பகிர்வது கடுமையான குற்றமாகும்.


*​2. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சிறப்பு விதிகள்:

அரசுப் பணியாளர் நடத்தை விதிகளின்படி (Conduct Rules), அரசு ஊழியர்கள் முற்றிலும் நடுநிலை வகிக்க வேண்டும்:


*​அரசியல் சார்பு:


 எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாகப் பிரச்சாரம் செய்யவோ, சின்னங்களைப் பயன்படுத்தவோ கூடாது.


*​சமூக ஊடகக் கட்டுப்பாடு:


அரசியல் பதிவுகளை Like, Share அல்லது Forward செய்வது கூட விதிமீறலாகக் கருதப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம்.


*​நடுநிலைமை:


 தேர்தல் பணியில் ஈடுபடும்போது எவ்வித பாரபட்சமுமின்றி செயல்பட வேண்டும்.


*​3. குழு நிர்வாகிகளுக்கான (Admins) பொறுப்பு:


​குழுவில் பகிரப்படும் ஆட்சேபனைக்குரிய பதிவுகளுக்கு நிர்வாகிகளே பொறுப்பாவார்கள்.

​தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்க குழுவின் அமைப்புகளை (Only Admins) மாற்றிக்கொள்ளலாம்.

விதிமீறல் பதிவுகள் கண்டறியப்பட்டால் அவற்றை உடனடியாக நீக்க வேண்டும்.


*​4. புகார் அளிக்க:


​தேர்தல் விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் c-VIGIL செயலி அல்லது தேர்தல் ஆணையத்தின் கட்டணமில்லா எண்ணிற்குப் புகார் தெரிவிக்கலாம்.

​"நமது ஜனநாயகம் காப்போம் - விதிகளுக்கு உட்பட்டு நடப்போம்"





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அகத் தணிக்கை மேற்கொள்ளும் பொருட்டு 31.05.2026 வரை ஓய்வு பெற உள்ள தலைமையாசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

பகுதி நேரமாக பிஎச்டி முடித்தவர்கள் உதவி பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் தானா?

         hindutamil-prod%2F2026-03-16%2Fqx1r9903%2F17

பகுதி நேர​மாக பிஎச்டி முடித்​தவர்​கள் கல்​லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகு​தி​யானவர்​கள்​தானா என்​பது தொடர்​பாக, உயர் ​கல்​வித் துறை புதிய அரசாணை வெளி​யிட வேண்​டும் என்று, அரசு கல்​லூரி ஆசிரியர் சங்​கம் வலி​யுறுத்​தி​யுள்​ளது.

இதுதொடர்​பாக, தமிழ்​நாடு அரசு கல்​லூரி ஆசிரியர் சங்க பொதுச் செய​லா​ளர் சோ.சுரேஷ் வெளி​யிட்​டுள்ள செய்​திக் ​குறிப்பு: கடந்த மார்ச் 13-ம் தேதி உயர்​கல்​வித் துறை​ வெளி​யிட்ட அரசாணை​யில் (எண் 40) பகு​திநேர முனை​வர் பட்​டம் (பிஎச்​டி) பெற்​றவர்​கள் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகு​தி​யானவர்​களாகக் கருதப்​பட​வில்லை என குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

இந்த அரசாணை மீதான ஆட்​சேபத்தை அரசு கல்​லூரி ஆசிரியர் சங்​கம் தெரி​வித்​திருந்​தது. இந்​நிலை​யில், உயர்​கல்​வித் துறை அதி​காரி​களிடம் விளக்​கம் கேட்​ட​போது, பகுதி நேர முனை​வர் பட்​டம் பெற்​றவர்​கள் உதவிப் பேராசிரியர்​கள் பணிக்கு தகு​தி​யானவர்​கள்​தான் என உறு​தி​யாக தெரி​வித்​தனர்.

எனவே, ஏற்​கனவே வெளி​யிடப்​பட்ட அரசாணை​யில் உரிய மாற்​றம் செய்து புதிய அரசாணை வெளி​யிட​வேண்டும். உரிய நேரத்​தில் விளக்​கம் அளித்து உதவிப் பேராசிரியர் தேர்​வர்​களிடையே ஏற்​பட்​டிருந்த பதற்​றத்தை தணித்த உயர்​கல்​வித் துறை அதி​காரி​களுக்கு நன்​றியைத் தெரி​வித்​துக்​கொள்​கிறோம். இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்​.






இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

“ஆரம்பக் கல்வியில் மனப்பாட முறைக்குக் பதிலாக பின்லாந்து மாடல்” - அன்பில் மகேஸ் சிறப்பு பேட்டி

         

hindutamil-prod%2F2026-03-14%2Foz5guheg%2F1114545323

தமிழக பள்ளிக் கல்வியில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் 2026-27-ம் கல்வியாண்டு முதல் அமலாகிறது. இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ், பிரத்யேக நேர்காணல் அளித்துள்ளார்.

புதிய பாடத் திட்டம் குறித்த கேள்விகளுக்கு அமைச்சர் கூறியதாவது:

Q

மாணவர்களுக்கு 1, 2-ம் வகுப்புகளில் எழுத்துகளை திணிக்காமல் பின்லாந்து போல், நிதானமான கற்றல்முறையைக் கொண்டு வருகிறீர்கள். ‘என் பிள்ளை உடனே ஆங்கிலம் பேச, எழுத வேண்டும்’ என துடிக்கும் பெற்றோர் மனநிலையை எப்படி மாற்றப் போகிறீர்கள்?

A

மொழிக் கற்றலில் முதலில் கேட்டல், பேசுதல் திறன்களும், பின்னரே வாசித்தல், எழுதுதல் திறன்களும் பயிற்றுவிக்கப்பட வேண்டும். ஆரம்ப வகுப்புகளில் அடித்தளம் உறுதியானால் அனைத்து பாடங்களையும் புரிந்து கற்கும் திறன் வளரும். பிள்ளைகள் ஆங்கிலத்தை எளிதாக பேசவும், எழுதவும் உரிய பயிற்சிகள் தரப்படும் என்பதை பெற்றோருக்குப் புரியவைப்போம்.

Q

புதிய பாடத்திட்டம் சமூக நீதி, சமத்துவத்தை எப்படி பிரதிபலிக்கிறது? விளிம்பு நிலை மாணவர்களின் கற்றலை மேம்படுத்த என்ன அம்சங்கள் உள்ளன?

A

புதிய பாடத்திட்டம் சமூக நீதி, சமத்துவக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. செயல்பாடுகள் அடிப்படையிலான கற்பித்தல், குழுகற்றல் போன்ற வழிமுறைகள் மூலமாக சமமான கற்றல் உறுதிசெய்யப்படுகிறது. விளிம்புநிலை மாணவர்களின் கற்றல் அடைவு கண்காணிக்கப்பட்டு, கூடுதல் கவனம் தேவைப்படுவோருக்கு உடனடி குறைதீர் கற்றல் வழங்கப்படும்.

Q

மனப்பாடத் தேர்வு முறைக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட உள்ள திறன்சார் மதிப்பீடு எவ்வாறு அளவிடப்படும்?

A

மனப்பாடம் மாணவர்களுக்கு அழுத்தத்தைத் தருவதுடன், உண்மையான புரிதலை அளவிட உதவாது. எனவே, புதிய சூழலில் சிந்தித்து செயல்படுதல், பிரச்சினை தீர்க்கும் திறன், படைப்பாற்றல் போன்ற வாழ்வியல் திறன்களைக் கொண்டே மதிப்பீடு செய்யப்படும்.

Q

புதிய பாடத்திட்டத்தில், புத்தகவாசிப்புக்கும், டிஜிட்டல் திரைக்கல்விக்கும் இடையே சமநிலை எப்படி பேணப்படும்? கிராமப்புறங்களில் இணையவசதி சிக்கல்களுக்கு இடையே இதைச் சாத்தியப்படுத்து வது எப்படி?

A

வாசிப்பு மற்றும் எழுதுதல் அடிப்படை திறன்களாகும். அவை பாடப்புத்தகங்கள் வழியே உறுதிசெய்யப்படும். டிஜிட்டல் தளங்கள் கற்றலை மேம்படுத்தும் துணைக் கருவியாக இருக்கும். நேரில் காண முடியாத கடினமான கருத்துகளை விளக்க மட்டுமே அவை பயன்படுத்தப்படும். இணைய வசதி கிடைக்காத கிராமப்புறங்களிலும், ஆசிரியர் கையேடுகளில் வழங்கப்பட்ட கற்பித்தல் வளங்களை பயன்படுத்தி கற்றல் தொடரப்படும்.


Q

சிபிஎஸ்இயுடன் ஒப்பிடும்போது, இந்த புதிய பாடத்திட்டம் மென்மையாக இருக்கிறது. இதனால் நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தேர்வுகளில் நமது மாணவர்களின் பின்தங்கவாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறதே?

A

நமது பாடத்திட்டம் சர்வதேச தரத்துக்கு இணையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மனப்பாடம் இன்றி திறன் அடிப்படையில் புரிந்து கற்பதால், நீட் உட்பட எந்தவொரு போட்டித் தேர்வையும் தமிழக மாணவர்கள் தன்னம்பிக்கை யுடன் எதிர்கொள்வார்கள். இவற்றை அமல்படுத்தவும், வகுப்பறை செயல்பாடுகளை கட்டமைக்கவும் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.

Q

தற்போதைய சூழலில் பாலியல் கல்விக்கான தேவையுள்ளது. மாணவர்களுக்கு ‘குட் டச்’, ‘பேடுடச்’ விழிப்புணர்வுடன், வயதுக்கேற்ற அறிவியல்பூர்வமான பாலியல் கல்வி வழங்கப்படுமா?

Educational Resources

A

தொடக்க வகுப்பிலிருந்தே மாணவர்களுக்கு வயதுக்கேற்ற விழிப்புணர்வு படிப்படியாக வழங்கப்படுகிறது. புதிய பாடத்திட்டத்தில் குழந்தைகள் தங்களைப் பற்றி நேர்மறையாக எண்ணவும், பாதுகாப்பு உணர்வு பெறவும் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதனுடன் வளரிளம் பருவத்தினருக்கு உடல் மாற்றங்கள், பாலின சமத்துவம்,உணர்வு மேலாண்மை போன்றவை குறித்து செயல்பாடுகள் மற்றும் கலைகள் மூலமாக கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக பிரத்யேகபயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்.

Q

பழைய பாடத்திட்டத்தில் 3-ம் வகுப்பு முடித்து, புதிய பாடத்திட்டத்தில் 4-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு முன்கள நடவடிக்கை என்ன? 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டப் பணிகள் எந்த நிலையில் உள்ளன?

A

மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்படாதவாறு இரு பாடத்திட்டங்களை இணைக்கும் பிரிட்ஜ் கோர்ஸ் பயிற்சி அளிக்கப்படும். 6 முதல் 12-ம் வகுப்புக்கான பாடத்திட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Q

புதிய பாடத்திட்டம் முழுவதும் மாநிலக் கல்விக் கொள்கையை மட்டுமே சார்ந்ததா? அல்லது மத்திய அரசின் நிதியைப் பெறுவதற்காக தேசிய கல்விக் கொள்கையின் சில அம்சங்களையும் ஏற்றுள்ளீர்களா?

A

மாநில கல்விக் கொள்கை-2025 அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இருமொழிக் கொள்கை, சமத்துவம், பண்பாடு, சமூக மற்றும் எதிர்கால தேவைகளை இலக்காக கொண்டு நமது மாநிலத்தின் சூழலுக்கேற்ப இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

Q

பாடத்திட்டம் அமலுக்கு வந்தபின்மதிப்பாய்வு நடத்தப்பட்டு, மாவட்டவாரியான தரவுகள் பொதுமக்களுக்கு வெளியிடப்படுமா?

A

மாணவர்களின் கற்றல் அடைவு குறித்து 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில அளவிலான ஆய்வு நடத்தப்படும். இதன் முடிவுகள் பொதுமக்கள் பார்வைக்காக இணையளத்தில் பதிவேற்றப்படும். மேலும், அந்தத்தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு கற்றல் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க