மாவட்ட சட்ட சேவைகள் பிரிவில் அலுவலக உதவியாளர், சட்ட ஆலோசகர் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலா?

 கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவரா நீங்கள்? உங்களுக்கான வேலைவாய்ப்பு செய்தி இதோ.. மாவட்ட சட்ட சேவைகள் பிரிவில் கீழ் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு செயல்படுகிறது. இங்கு சட்ட ஆலோசகர் உட்பட அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அக்டோபர் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார். இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு நடத்தப்படுகிறது.

பணியின் விவரங்கள்

பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்

தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் 1

துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் 2

உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் 1

அலுவலக உதவியாளர்/ எழுத்தர் 1

மொத்தம் 5

தகுதிகள்

தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு குறைந்தபட்சம் குற்றவியல் சட்டத்தில் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 30 குற்ற வழக்குகளை கையாடு இருக்க வேண்டும். கணினி திறன் அவசியம்.

துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 20 குற்ற வழக்குகளில் வாதாடி இருக்க வேண்டும்.

உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு 3 ஆண்டுகள் வரை குற்ற வழக்குகள் கையாண்டதில் அனுபவம் தேவை. ஆய்வு மற்றும் வரைவு திறன் அவசியம்.

அலுவலக உதவியாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 40 w.p.m வேகத்தில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்ச கணினி திறன் அவசியம்.

சம்பள விவரம்

தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு மாதம் ரூ.70,000 சம்பளமாக வழங்கப்படும்.

துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு மாதம் ரூ.40 ஆயிரம் வழங்கப்படும்.

உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.

அலுவலக உதவியாளர் பதவிக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

கடலூர் மாவட்ட சட்ட சேவைகள் பிரிவில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து பணியிடங்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுவதால், தெரிவு செய்யப்படும் நபர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

கடலூரின் மாவட்ட நீதிமன்றத்தின் https://cuddalore.dcourts.gov.in/ என்ற இணையதளத்தில் இதற்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 2 புகைப்படம், கல்வித்தகுதி, அனுபவம் மற்றும் இதர ஆவணங்களின் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் தபால் வழியாகவோ அல்லது நேரடியாகவோ சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்படும் நிலையில், ஆர்வமுள்ளவர்கள் அக்டோபர் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நேர்காணல் நவம்பர் 8-ம் தேதி நடைபெறும். அறிவிப்பைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

அனுப்ப வேண்டிய முகவரி

தலைவர்/ தலைமை மாவட்ட நீதிபதி,

மாவட்ட சட்ட சேவைகள் (District Legal Services Authority),

மாவட்ட நீதிமன்ற வளாகம்,

கடலூர் - 607 001.

கடலூர் மாவட்ட சட்ட சேவைகள் பிரிவில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து பணியிடங்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுவதால், தெரிவு செய்யப்படும் நபர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


முக்கிய நாட்கள்

விவரம் தேதிகள்

விண்ணப்பிக்க கடைசி நாள் 25.10.2025

நேர்காணல் 08.11.2025 காலை 10 மணி

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு உடனே விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை அலுவலகத்தில் அறிந்துகொள்ளலாம்.

0 Comments:

Post a Comment