ரூ. 35,000 வரை சம்பளம்... ஐஐடி மெட்ராஸில் வேலைவாய்ப்பு ... முழு விவரம் இதோ

  Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

சென்னை ஐ.ஐ.டி தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி அலுவலகத்தில் டெவலப்பர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
காலி பணியிடங்கள் விவரம்: Full-stack developer பணியிடத்திற்கு ஒரு காலி பணியிடம் உள்ளது.
கல்வித் தகுதி: A bachelor’s & Post Graduate degree in Computer Science, Information Technology படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் கட்டாயம்.
ஊதியம்: இதற்கு சம்பளமாக மாதம் ரூ. 30,000 - 35,000 வழங்கப்பட உள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://careers.icsr.in/about.php என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: இது விண்ணப்பிப்பதற்கு ஜூலை 18-ஆம் தேதி கடைசி தேதி ஆகும்.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Job Fair 2025: மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் - இந்த நகல் மட்டும் இருந்த கையில் வேலை உறுதி..

  Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19.07.2025 நாளை ( சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,("St. Ann's college of arts and science") திண்டிவனம் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில்150ற்கும் மேற்பட்ட முன்னனி தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளது.



வயது: 18 வயது முதல் 35 வயது வரையிலான வேலை தேடுபவர்கள் கலந்து கொள்ளலாம்.

கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி முடித்தவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம்.

150க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான 15000க்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் ஆண் பெண் இரு பாலரும் கலந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 9499055906 / 9080515682 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  


TNPSC Group 4 Exam: நேரடி கேள்விகள் கம்மி... கட் ஆப் குறைய வாய்ப்பா?

  Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

TNPSC Group-4 Exam Cut Off marks: 2025-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 3,935 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வினாத்தாள் விநியோகம் செய்யப்பட்டு தேர்வு நடந்தது. இந்த நிலையில் தேர்வு எழுதியவர்கள் பகிர்ந்து கொண்டதை பார்க்கலாம்.
இதுகுறித்து தேர்வர் முத்துசாமி கூறுகையில், நான் மூணு வருஷமா தேர்வு எழுதிட்டு வர்றேன். குரூப் 4 எக்ஸாம் பொறுத்தவரைக்கும் மொத்தம் 200 மார்க் கேள்விகள் கேட்கப்படும். அதுல ‌100 மார்க் தமிழ் பாடத்திலையும், கணித பாடத்தில் 25 மதிப்பெண்ணும், பொது அறிவில் 75 மதிப்பெண்ணும் கேட்கப்படும். சமீபத்திய காலங்களில்    தமிழ்நாடோட வளர்ச்சி நிர்வாக முறைகளை பற்றிய கேள்விகள் அதிகம் இடம்பெறுவதாக தெரிவித்தார்.
மேலும் அவர், இந்த ஆண்டு தேர்வில் கூட தமிழக அரசு சமீபத்தில வெளியிட்ட பொருளாதார ஆய்வு அறிக்கைகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டது. பொது அறிவுதாள் தான் கடினமாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், அதற்கு நேர்மாறாக நடந்திருக்கு. இந்த முறை தமிழ்ல கேள்விகள் கொஞ்சம் கஷ்டமா கேட்டு இருக்காங்க. குரூப் 2வ விட குரூப் 4 தமிழ்ல கேள்விகள் கடினமா இருந்ததாகவும் தெரிவித்தார்.

கணக்கு பாடத்துல கேள்விகள் கஷ்டமாவும், ஈசியாவும் இருந்துச்சு.  கலவையான உணர்வு கிடைத்தது. பொது அறிவு ஓரளவுக்கு யூகிக்கிற அளவுல தான் இருந்தது. தமிழ்ல கேள்விகள் கடினமா இருந்ததால இந்த முறை கட் ஆஃப் மார்க் குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

இதற்கு முந்தைய தேர்வுகளில் எல்லாம் நேரடியான கேள்விகள் கேட்கப்படும்.  ஆனால் தற்போது நிறைய ஸ்டேட்மெண்ட் கேள்விகள் கேட்கப்படுகிறது. அதாவது ஏ,பி,சி,ஆப்ஷன் அந்த மாதிரி இல்லாமல். எந்தக் கூற்று சரி போன்ற பதில்கள் கொஞ்சம் குழப்பமடையும் வகையில் கேட்கப்படுகிறது. இது ஒரு விதத்தில் நல்லது என்றாலும் ஏற்கனவே நீண்ட ஆண்டுகளாக படித்தவர்களுக்குத் தான் இது எளிமையானதாக இருக்கும். எனவே நாம் படிக்கும் போதே நல்ல தெளிவாக ஒவ்வொரு விஷயத்தையும் புரிந்து கொண்டு படிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மாதம் ரூ.18,000 மேல் ஊதியம்... மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

  Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தனியார் மற்றும் பொது இடங்களில், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒருங்கிணைந்த ஆதரவையும் உதவியையும் வழங்குவதே ஒருங்கிணைந்த சேவை மையங்களின் நோக்கமாகும். மருத்துவம், சட்டம், ஆற்றுப்படுத்துதல் மற்றும் உளவியல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் உடனடி, அவசர மற்றும் அவசரமற்ற நிலையில் எளிதாக அணுகி பெற்றிடவும், பெண்களுக்கு எதிரான எந்தவொரு வன்முறைக்கும் எதிராக போராடவும் இம்மையம் வழிவகுக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வன்கொடுமையினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மருத்துவ வசதி அளித்தல், சட்ட பூர்வ நடவடிக்கைக்கு உதவி செய்தல் மற்றும் மனரீதியான ஆலோசனைகள் வழங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் கீழ்காணும் பணியிடம் காலியாக உள்ளதால் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவி - வழக்கு பணியாளர் (Case Worker). காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை - 1 தகுதி - சட்டப்படிப்பு/ முதுநிலை சமூகப் பணி, பெண் வன்கொடுமை தொடர்பாக 3 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஊதியம் - மாதாந்திர தொகுப்பூதியம் அடிப்படையில் ரூ.18,000/- ஆகும்.

மேற்படி வழக்கு பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் தங்களது சுயவிபரங்களை 18.07.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், புதுக்கோட்டை என்னும் முகவரிக்கு அனுப்புமாறு குறிப்பிடப்பட்டுள்ளது . மேலும் குறிப்பிட்ட தேதிக்கு பிறகு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 1 - ( Set - 8 ) Lesson Plan

       Education News (கல்விச் செய்திகள்)
SET : 8


Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - ( Set - 8 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 1 - ( Set - 8 ) Lesson Plan - T/M - Download here


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

புதுவையில் அனைத்து படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு

      Education News (கல்விச் செய்திகள்) 

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.


அரசு பள்ளி கல்வி இயக்ககம் சார்பில் காமராஜர் பிறந்த நாளையொட்டி, மாணவர் நாள் விழா கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட முதல்வர் ரங்கசாமி காமராஜர் பிறந்த நாள் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசியது: ”காமராஜர் ஊழலற்ற ஆட்சியை கொடுத்தார். கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார். நாட்டின் அனைத்து தலைவர்களுக்கும் வழிகாட்டியாக வாழ்ந்தார்.


காமராஜர் வழியில் புதுச்சேரியில் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அரசு செயல்பட்டு வருகிறது. எத்தனையோ திட்டங்களை பிள்ளைகளுக்கு அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு பல சலுகைகளை வழங்குகிறது. கல்விக்காக அரசானது ஆண்டுக்கு ரூ.1,350 கோடியை ஒதுக்குகிறது. இதில் பள்ளிக் கல்விக்காக ரூ.950 கோடியை செலவிடுகிறது.



அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டு படித்து வருகின்றனர். பிற படிப்புகளுக்கும் 10 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அது இந்த கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்தப்படும். லேப் டாப் வழங்கவில்லை என்ற குறை இருக்கின்றது. இன்னும் ஒரு மாதத்துக்குள் லேப் டாப் வழங்கப்படும். பள்ளி கல்வி மட்டுமின்றி உயர்கல்வி கொடுப்பதிலும் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. எல்லோரும் படிக்க வேண்டும். அதற்கு அடிப்படை கல்வி. அந்த கல்வியை கொடுப்பது அரசின் கடமை. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், உலகம் முழுவதும் செல்ல வேண்டும்.


அதற்கான வாய்ப்பை நாம் உருவாக்கி தர வேண்டும். அதன் மூலம் பல விஞ்ஞானிகள், கண்டுபிடிப்புகள் வர வேண்டும் என்பது பிரதமரின் எண்ணம். அதற்குரிய வாய்ப்புகளை நம்முடைய பிள்ளைகளுக்கு உருவாக்கி தர வேண்டும் என்பதும் நம்முடைய அரசின் எண்ணம். பள்ளி கல்வி சிறப்பாக இருந்தால் வாழ்க்கையில் உயர முடியும். பள்ளிகளில் மாணவர்களுக்கு சரலமாக பேசும் பழக்கம் வர வேண்டும் என்பதை அரசு உணர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றது. தேவையான கல்லூரிகளை கொண்டு வரவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


நல்ல நூல்களை படித்தால் நல்ல சிந்தனையாளராக வர முடியும். அதன்மூலம் மற்றவர்களுக்கு உதவ முடியும். எனவே பிள்ளைகள் நல்ல நூல்களை வாசிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். நன்றாக படித்த வாழ்க்கையில் முன்னேற வேண்டும்” என்று முதல்வர் ரங்கசாமி கூறினார். இவ்விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜான்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

ஜுலை 28 - உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

      Education News (கல்விச் செய்திகள்)

 Local%20holiday

ஜுலை 28இல் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

மேல்மருவத்தூர் ஆடிப்பூர விழாவையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஜூலை 28 இல் விடுமுறை


உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் செய்யும் விதமாக ஆகஸ்ட் வேலை நாளாக செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

ஆடி அமாவாசையன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலங்களுக்கு விடுமுறை : மாவட்ட ஆட்சியர் உத்தரவு,

       Education News (கல்விச் செய்திகள்)

Local%20holiday

இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா வெளியிட்டுள்ள அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு 24.07.2025 வியாழக்கிழமை அன்று அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அதற்கு பதிலாக ஆகஸ்ட் 09.08.2025 இரண்டாவது சனிக்கிழமை அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை (Lumpsum) மட்டுமே வழங்க, தனியாக ஆணை வெளியிடுவதற்கு ஏதுவாக புதிய படிவத்தில் விவரங்கள் அனுப்ப பள்ளிக் கல்வித் துறை கூடுதல் செயலாளர் உத்தரவு!

       Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250716_135630


பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை (Lumpsum) மட்டுமே வழங்க, தனியாக ஆணை வெளியிடுவதற்கு ஏதுவாக புதிய படிவத்தில் விவரங்கள் அனுப்ப பள்ளிக் கல்வித் துறை கூடுதல் செயலாளர் உத்தரவு!

DSE - Incentive Instructions - Download here


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

கடன் மற்றும் முன்பணம் (Loan & Advances) மூலம் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் மற்றும் கணினி வாங்க விரும்புவோர் விவரம் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

       Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250716_193623

கடன் மற்றும் முன்பணம் (Loan & Advances) மூலம் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் மற்றும் கணினி வாங்க விரும்புவோர் விவரம் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

👇👇👇

DSE - Loan & Advances Instructions

Download here



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

TNPSC - குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு - குரூப் 2 (ஏ) தேர்வு முறையில் மாற்றம்

       Education News (கல்விச் செய்திகள்)

IMG-20250715-WA0023

சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 645 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப் 2 மற்றும் குரூப் 2(ஏ) தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. குரூப் 2 (ஏ)-வுக்கான தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, “சார்-பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகளில் 645 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2(ஏ) தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 15-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.


இதற்கான முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறும். தேர்வுக்கு ஆகஸ்ட் 13-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை யுபிஐ வசதி மூலமாக செலுத்தலாம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானது ஆகும்.


அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் காலிப் பணியிடங்கள் பெறப்படு்ம பட்சத்தில் கலந்தாய்வுக்கு முன்பாக மேலும் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மேலும், தேர்வர்களின் நலன் கருதி குரூப்-2 (ஏ) முதன்மைத் தேர்வு முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.


முதல்நிலைத் தேர்வை பொறுத்தவரையில் குரூப்-2, குரூப்-2 (ஏ) இரு தேர்வுகளுக்கும் பொதுவான தேர்வுதான். பொது அறிவு மற்றும் கணிதம் தொடர்பான 100 கேள்விகள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பாடத்தில் 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண். இதில் வெற்றிபெறுவோர் அடுத்த கட்ட தேர்வான முதன்மைத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.


முதன்மைத்தேர்வானது குரூப்-2 பணிகளுக்கும், குரூப்-2(ஏ) பணிகளுக்கும் தனித்தனியே நடத்தப்படும். குரூப்-2 பணிகளுக்கான முதன்மைத் தேர்வில், பொது அறிவு பகுதியில் 300 மதிப்பெண்களுக்கு விரிவாக விடையளிக்க வேண்டும். குரூப்-2 (ஏ) பணிகளுக்கு பொது அறிவு பகுதியில் 150 கேள்விகள், கணிதம் பகுதியில் 50 கேள்விகள் என அப்ஜெக்டிவ் முறையில் 200 கேள்விகள் இடம்பெறும். மொத்த மதிப்பெண் 300.


இது கணினி வழியில் நடத்தப்படும். முன்பு பொது அறிவு பகுதியில் பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் தொடர்பான 60 வினாக்கள் இடம்பெற்றிருந்தது. தற்போது புதிய தேர்வுமுறையில் மொழிப் பாடம் தொடர்பான அந்த பகுதி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. மேலும், விரிவாக பதில் எழுதக்கூடிய கட்டாய தமிழ் மொழித் தகுதித்தாள் தேர்வு குரூப்-2, குரூப் 2-(ஏ) இரு முதன்மைத் தேர்விலும் பொது தேர்வாக இடம்பெறும். இதில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். இந்த தேர்வில் எடுக்கும் மதிப்பெண் ரேங்க் பட்டியல் தயாரிக்க எடுத்துக்கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.


தேர்வர்கள் ஏமாற்றம்: ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2 (ஏ) தேர்வில் குறைந்தபட்சம் 2,000 காலியிடங்களாவது வரும் என டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது வெறும் 645 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது அவர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது. அரசு துறைகளில் லட்சக்கணக்கான காலியிடங்கள் இருப்பதால அரசு ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து கூறி வரும் நிலையில், குரூப்-2 , குரூப்-2(ஏ) தேர்வில் 645 காலியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட இருப்பதால் தேர்வர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

DSE - BT Vacancy List AS ON 15-07-2025 ( All District & All Subject )

      Education News (கல்விச் செய்திகள்)

பள்ளிக் கல்வித்துறையில் 15.7.2025 நிலையில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம் :

Tamil BT Vacancy List - Download here

English BT Vacancy List - Download here

Maths BT Vacancy List - Download here

Science BT Vacancy List - Download here

SOCIAL SCIENCE BT Vacancy List - Download here


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!