Search

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க கடனுதவி...!இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்..

 ராமநாதபுரம் மாவட்டத்தில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், தொழில் தொடங்க தொழில் மையத்தின் மூலம் இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.

இது குறித்து ஆட்சியர் தெரிவிக்கையில் ராமநாதபுரம் மாவட்டம் தொழில் மையத்தின் மூலமாக படித்த வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் தொழில் தொடங்கி வேலை வாய்ப்பு பெற UYEGP என்கிற தமிழக அரசின் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக தொழில் தொடங்க ரூ.15 லட்சம் வரையிலும் வங்கிக்கடன் பெறாமல் இதிலிருந்து 25% அல்லது ரூ.3.75 லட்சம் வரை அரசு மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பிப்பவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும், பொதுபிரிவினருக்கு வயது 18 முதல் 45 வரையிலும், மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினத்தவர்கள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் ராணுவ வீரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு வயதானது 18 முதல் 55 வரையிலும் இருக்க வேண்டும் என அறிவித்துள்ளார்.

இதில் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க www.msmeonline.tn.gov.in/uvegp என்ற இணையதளத்தினை பயன்படுத்தவும், மேலும், இத்திட்டதில் கடன் பெற்று தொழில் தொடங்க விரும்புவோர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் நேரில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment