Search

உங்கள் குழந்தைகள் அடிக்கடி கண்களை கசக்கிக்கொண்டே இருக்கிறார்களா..? அதற்கு காரணம் இதுதான்..!

 இன்றைய வாழ்க்கைச் சூழலில் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக கண் வறட்சி பிரச்சினை மாறி வருகிறது. இது கண்களுக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தும். காலைப் பொழுதில் எழுந்த உடனே கண்களில் மணல், மணலாய் அழுக்கு வெளியேறும் மற்றும் எரிச்சல் உணர்வு ஏற்படும்.

அன்றைய நாள் முழுவதும் இந்த பிரச்சினை தீவிரமடையும். இதன் காரணமாக குழந்தைகளுக்கு பார்வை மங்கலாக மாறலாம். ஆனால், கண் வறட்சி என்பது நீண்டகால பார்வை பிரச்சினைகளை ஏற்படுத்தாது. கண் வறட்சிக்கு பல காரணங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் வானிலை வறட்சியின் காரணமாக கண்களிலும் எரிச்சல் ஏற்படுகிறது.

இத்துடன் புகைமூட்டம் அல்லது மாசுபாடு போன்ற காரணங்களாலும் வறட்சி ஏற்படலாம். சிலருக்கு அலர்ஜி காரணமாகவும் கண்களில் எரிச்சல் ஏற்படும். உங்கள் குழந்தைகளின் கண் நலன் காப்பதற்கு கண் மருத்துவரை அணுகி நீங்கள் சிகிச்சை அளிக்கலாம். அதே சமயம், வீட்டிலேயே சில எளிய தீர்வுகளை முயற்சி செய்யலாம்.

குழந்தைகளுக்கு கண் வறட்சி ஏற்பட காரணம் என்ன? குழந்தைகளின் அன்றாட பணிகள் அல்லது நடவடிக்கைகளில் கண்களில் வறட்சி ஏற்பட காரணமாக அமைகின்றன. நீண்ட நேரம் வாசிப்பது, கம்ப்யூட்டர் பார்ப்பது, வீடியோ சாதனங்களில் விளையாடுவது மற்றும் தூசு நிறைந்த இடத்தில் விளையாடுவது போன்ற காரணங்களால் கண்களில் அரிப்பு மற்றும் எரிச்சல் உணர்வு ஏற்படலாம்.

0 Comments:

Post a Comment