EL Surrender - சரண் செய்த விபரங்களை eSR Part 1 - ல் 30.09.2025 க்குள் பதிவேற்றம் செய்ய உத்தரவு - Treasury Letter

 ஈட்டிய விடுப்பினை சரண் செய்த நாள் மற்றும் இதர விபரங்களை eSR Part 1 - ல் 30.09.2025 க்குள் பதிவேற்றம் செய்ய உத்தரவு


அரசுப்பணியாளர்கள் 01.10.2025 முதல் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து பணப்பலன்களை பெற்றுக்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது.  பார்வை 2 ல் காணும் காணொளி காட்சியில் தெரிவித்துள்ளபடி , பட்டியல் தயாரிப்பதற்கு முன்பு 


அனைத்துப் பணியாளர்களின் ஈட்டிய விடுப்பு இருப்பினையும் , Physical SR ய் உள்ளவாறு IFHRMS லும் பதிவேற்றம் செய்யவேண்டும்.


 2. பணியாளர்களின் கடைசியாக ஈட்டிய விடுப்பினை சரண் செய்த நாள் மற்றும் இதர விபரங்களை eSR Part 1 - ல் பதிவேற்றம் செய்யவேண்டும். இப்பணியினை 30.09.2025 க்குள் கொள்ளப்படுகிறார்கள்.



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  







 விரைந்து முடிக்குமாறு கேட்டுக் மேலும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பணப்பலன்கள் கோரும் பணியாளர்கள் தங்கள் விண்ணப்பத்தினை களஞ்சியம் செயலி ( Kalanjiyam Mobile App ) வழியாக விண்ணப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .



ஒற்றைப் பெண் குழந்தைக்கு உதவித்தொகை: சிபிஎஸ்இ தகவல்

       Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

ஒற்றைப் பெண் குழந்தைக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.


இது குறித்து சிபிஎஸ்இ சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு:


மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சாா்பில் ஒற்றைப் பெண் குழந்தைக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பை முடித்து பிளஸ் 1 பயிலும் மாணவிகள் இணையதளத்தில் அக். 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


தகுதிபெறும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகையாக வழங்கப்படும். பெண் குழந்தைகளிடம் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை மேற்கண்ட தளத்தில் அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

சென்னையில் குழந்தைகள் உதவி மையத்தில் வேலைவாய்ப்பு; 20 பணியிடங்கள் - 12-ம் வகுப்பு தேர்ச்சி முதல் விண்ணப்பிக்கலாம்

       Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


சென்னை மாவட்டத்தில் அரசு துறையில் பணி வாய்ப்பை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது. குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் அமைக்கப்பட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கான மாவட்ட குழந்தைகள் உதவி மையம் மற்றும் ரயில்வே கியோஸ்-ல் உள்ள திட்ட ஒருங்கிணையாளர், மேற்பார்வையாளர், ஆற்றுப்படுத்துநர் மற்றும் வழக்குப் பணியாளர் ஆகிய பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரங்கள்

பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்

திட்ட ஒருங்கிணைப்பாளர் 1

மேற்பார்வையாளர் 8

ஆற்றுப்படுத்துநர் 1

வழக்குப் பணியாளர் 10

மொத்தம் 20

வயது வரம்பு

சென்னை மாவட்ட குழந்தைகள் உதவி மையத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 42 மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

திட்ட ஒங்கிணைப்பாளர் பதவிக்கு சமூகப் பணி, சமூகவியல், குழந்தைகள் மேம்பாடு, மனிதபொது உரிமைகள் நிர்வாகம், உளவியல், மனநல மருத்துவம், சட்டம், பொது சுகாதாரம், சமூக வளம் ஆகிய பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது மேலாண்மை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

திட்ட உருவாக்கம், செயல்படுத்தல் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை ஆகியவற்றில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சமூக நலம் ஆகியவற்றில் அனுபவம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மேற்பார்வையாளர் பதவிக்கு சமூகப்பணி, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், சமூகவியல், சமூக அறிவியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஆற்றுப்படுத்துநர் பதவிக்கு சமூகப் பணி, சமூகவியல், உளவியல், பொது சுகாதாரம் ஆகியவற்றில் பட்டப்படிப்பு அல்லது தொடர்பியல் துறையில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வழக்குப் பணியாளர் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல தகவல் தொடர்பு திறன் அவசியமாகும். அவசர உதவி எண்களில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

சம்பள விவரம்

திட்ட ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு மாதம் ரூ.28,000, மேற்பார்வையாளர் பதவிக்கு ரூ.21,000, ஆற்றுப்படுத்துநர் பதவிக்கு ரூ.23,000, வழக்குப் பணியாளர் ரூ.18,000 வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை

இப்பணியிடங்கள் தற்காலிகமானது. இப்பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியில் சேரும் நாளான்று காவல்துறை சரிபார்ப்பு சான்றிதழ் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை

சென்னை மாவட்டத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு https://chennai.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் பணிக்கான ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து புகைப்படத்துடன் ஒட்டி அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும். சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்றொப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

சென்னை - தெற்கு எண் : 1, புதுத்தெரு, வணிக வளாகம் GCC,

முதல் மாடி, ஆலந்தூர், RTO office அருகில். சென்னை - 600 016.


விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.10.2025

குழந்தைகள் உதவி மையத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு கடைசி தேதிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். காலக்கெடுப்பிற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. விண்ணப்பிக்கும் நபர்களின் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள். எனவே ஆர்வமுள்ளவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஐஐடி மெட்ராஸில் வேலைவாய்ப்பு; 37 காலிப்பணியிடங்கள் - டிகிரி முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம்

       Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
ஐஐடி மெட்ராஸில் ஆசிரியர்கள் அல்லாத பிரிவில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மொத்தம் 37 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவில் முதலிடத்தில் இருக்கும் கல்வி நிறுவனமான ஐஐடி மெட்ராஸில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களில் குரூப் A, B, C பிரிவில் துணை பதிவாளர், சீனியர் தொழில்நுட்ப அதிகாரி, நிர்வாக பொறியாளர், தொழில்நுட்ப அதிகாரி, உதவி பதிவாளர், உதவி நிர்வாக பொறியாளர், ஜூனிய இன்ஜினியர், ஜூனியர் உதவியாளர் ஆகிய பதவிகளில் மொத்தம் 37 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பொறியியல் பட்டதாரிகளுக்கு நல்ல வாய்ப்பாக அமைகிறது.
ஐஐடி மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2025
பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்
துணை பதிவாளர் 1
மூத்த தொழில்நுட்ப அதிகாரி 8
நிர்வாக பொறியாளர் 1
HVAC அதிகாரி 1
தொழில்நுட்ப அதிகாரி 1
உதவி பதிவாளர் 3
உதவி நிர்வாக பொறியாளர் 1
ஜூனியர் பொறியாளர் 9
ஜூனியர் உதவியாளர் 12
மொத்தம் 37
வயது வரம்பு
இப்பணியிடங்களில் துணை பதிவாளர், மூத்த தொழில்நுட்ப அதிகாரி ஆகிய பதவிகளுக்கு அதிகபடியாக 50 வயது வரை இருக்கலாம்.
நிர்வாக பொறியாளர் பதவிக்கு 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
HVAC அதிகாரி, தொழில்நுட்ப அதிகாரி, உதவி பதிவாளர், உதவி நிர்வாக பொறியாளர் ஆகிய பதவிகளுக்கு 45 வயது வரை இருக்கலாம்.
ஜூனியர் பொறியாளர் மற்றும் ஜூனியர் உதவியாளர் பதவிகளுக்கு அதிகபடியாக 27 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி
துணை பதிவாளர் பதவிக்கு முதுகலை பட்டப்படிப்புடன் 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அரசு, அரசு ஆராய்ச்சி நிறுவனம், பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் உதவி பதிவாளராக பணியாற்றி இருக்க வேண்டும்.
மூத்த தொழில்நுட்ப அதிகாரி பதவிக்கு சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றில் இளங்கலை அல்லது முதுகலை பொறியியல் பட்டப்படிப்புகளை பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 முதல் 8 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
நிர்வாக பொறியாளர் பதவிக்கு எலெக்ட்ரிக்கல் பொறியாளர் உடன் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
HVAC அதிகாரி பதவிக்கு மெக்கானிக்கல் பொறியியலில் பட்டப்படிப்புடன் 15 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தொழில்நுட்ப அதிகாரி பதவிக்கு பிசியோதெரபியில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.
உதவி பதிவாளர் பதவிக்கு முதுகலை பட்டப்படிப்வு அவசியம். மேனேஜ்மெண்ட், நிதி மற்றும் கணக்கு ஆகியவற்றில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
உதவி நிர்வாக பொறியாளர் பதவிக்கு எலெக்ட்ரிக்கல் பொறியியலில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
ஜூனியர் பொறியாளர் பதவிக்கு சிவில், எலெக்ட்ரிக்கல், குளிர்பதனம் மற்றும் ஏர் கண்டிஷனிங் ஆகியவற்றில் இளங்கலை பொறியியல் அலல்து 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஜூனியர் உதவியாளர் பதவிக்கு கலை, அறிவியல் பாடங்களில் வணிகத்துடன் சேர்ந்து 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்
ஐஐடி மெட்ராஸில் உள்ள இப்பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் நிலை 3 முதல் தொடங்கி நிலை 12 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
.தேர்வு செய்யப்படும் முறை
ஐஐடி மெட்ராஸ் உள்ள இப்பணியிடங்களுக்கு கல்வித்தகுதி மற்றும் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தகுதிக்கு ஏற்ப தெரிவு செய்யப்பட்டு, தேர்வு அல்லது நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். தேர்வு அல்லது நேர்காணல் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே நடைபெறும். தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும்
விண்ணப்பிக்கும் முறை
ஐஐடி மெட்ராஸில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் https://recruit.iitm.ac.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஜூனியர் பொறியாளர் மற்றும் ஜூனியர் உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு ரூ.600 செலுத்த வேண்டும். அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
முக்கிய நாட்கள்
விவரம் தேதிகள்
விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள் 27.09.2025
விண்ணப்பிக்க கடைசி நாள் 26.10.2025
தேர்தல் மற்றும் நேர்காணல் பின்னர் அறிவிக்கப்படும்
ஐஐடி மெட்ராஸில் உள்ள பணி செய்ய ஆர்வமாக எதிர்பார்த்துகொண்டு காத்துகொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் அக்டோபர் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆன்லைன் விண்ணப்பத்தின்போது தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்வது அவசியமாக உள்ளது.
.
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group


(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் 1,588 பேருக்கு பயிற்சி - அக்டோபர் 18 வரை விண்ணப்பிக்கலாம்

       Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

பட்டப்படிப்பு, டிப்ளமோ முடித்தவர்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) பயிற்சி பெற அருமையான வாய்ப்பு அமைந்துள்ளது. விழுப்புரம், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, சென்னை MTC, மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஆகிய மண்டலங்களில் தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது. 2025-ம் ஆண்டில் மொத்தம் 1,588 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. மாத உதவித்தொகையுடன் 1 வருடம் பயிற்சி அளிக்கப்படும்.

பொறியியல் பாடப்பிரிவில் பட்டப்படிப்பு, டிப்ளமோ, பொறியியல் அல்லாத பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி 2025

மண்டலம்பொறியியல் பட்டப்படிப்புபொறியியல் டிப்ளமோஇதர பட்டப்படிப்பு
விழுப்புரம்1004090
கும்பகோணம்72136300
சேலம்4745
மதுரை205137
திருநெல்வேலி662293
சென்னை MTC12323719
தமிழ்நாடு SETC303030
மொத்தம்458561569

கல்வித்தகுதி

  • மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், சிவில், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் பொறியியல் பட்டப்படிப்பு முதல் வகுப்பில் தேர்ச்சி மற்றும் பொறியியல் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
  • பிஏ, பி.எஸ், பி.காம், பிபிஏ, பிபிஎம், பிசிஏ உள்ளிட்ட கலை, அறிவியல், வணிகம் உள்ளிட்டவற்றில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும், 2021, 2022, 2023, 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு தொழிற்பயிற்சி விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்படும்.

தொழிற்பயிற்சி உதவித்தொகை

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 1 வருடம் தொழிற்பயிற்சி வழங்கப்படும். பட்டப்படிப்பு தகுதிகளுக்கு ரூ.9,000 மற்றும் டிப்ளமோ தகுதிகளுக்கு ரூ.8,000 உதவித்தொகை வழங்கப்படும்

தேர்வு செய்யப்படும் முறை

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி இடங்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் நபர்களின் கல்வித்தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு நேரடி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைப்பு விடுக்கப்படும். சான்றிதழ் சரிப்பார்ப்பு திருச்சி மண்டல அலுவலகத்தில் நடைபெறும். தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை கிடையாது.


விண்ணப்பிக்கும் முறை
பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ தகுதிப்பெற்றவர்கள் https://nats.education.gov.in/ என்ற தொழிற்பயிற்சி இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். விருப்ப மண்டலத்தைத் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள TA / DA ஆகியவை வழங்கப்படாது. இதற்கான அறிவிப்பு செப்டம்பர் இரண்டாம் வாரம் வெளியான நிலையில், அக்டோபரில் 18-ம் தேதி பெறப்படும். இதற்கான தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் அக்டோபர் 29-ம் தேதி வெளியாகும். நவம்பர் இரண்டாம் வாரம் சான்றிதழ் சாரிபார்ப்பு நடைபெறும். அறிவிப்பைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.


முக்கிய நாட்கள்

விவரம்தேதிகள்
விண்ணப்பிக்க கடைசி தேதி18.10.2025
தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு29.10.2025
சான்றிதழ் சரிபார்ப்புதோராயமாக நவம்பர் மாதம் இரண்டாம் வாரம்

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் 7 மண்டலங்களில் உள்ள தொழிற்பயிற்சி இடங்களுக்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணிக்கான அனுபவத்தை தொழிற்பயிற்சியின் மூலம் பெறலாம். ஏற்கனவே தொழிற்பயிற்சி பெற்றவர்கள் அல்லது 1-2 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க இயலாது.

.



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Ennum Ezhuthum - Term 2 Training Dates For Teachers - SCERT Proceedings

       Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


எண்ணும் எழுத்தும் பயிற்சி - 2025 2028 ஆம் கல்வியாண்டு - எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவம் 1 முதல் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஒன்றிய அளவிலான பயிற்சி வழங்குதல்- 


தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயிற்சியில் கலந்து கொள்ள தெரிவித்தல் பங்கேற்பாளர்களை பணி விடுவிப்பு செய்தல் அறிவுரை வழங்குதல் தொடர்பாக இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி 07.10.25 - 10.1025 இந்த நாட்களுக்குள் ஏதாவதுஒரு நாள் ஒன்றிய அளவில் நடைபெறும்


Click Here to Download - Ennum Ezhuthum - Term 2 Dates Training For Teachers - SCERT Proceedings - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

கூட்டுறவு சங்கங்களுக்கு அதன் உறுப்பினர்களுக்கு Divident வழங்க பதிவு துறை அதிகாரியின் கடிதம்

       Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


IMG_20250927_231319

கூட்டுறவு சங்கங்களுக்கு அதன் உறுப்பினர்களுக்கு Divident வழங்க பதிவு துறை அதிகாரியின் கடிதம்

instructions reg dividend.pdf

👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஈட்டிய விடுப்பினை சரண் செய்த நாள் மற்றும் இதர விபரங்களை eSR Part 1 - ல் 30.09.2025 க்குள் பதிவேற்றம் செய்ய உத்தரவு.

       Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


Surrender Leave Salary - திண்டுக்கல் மாவட்டக் கருவூலரின் கடிதம்...

IMG-20250927-WA0003_wm

அரசுப்பணியாளர்கள் 01.10.2025 முதல் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து பணப்பலன்களை பெற்றுக்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது.  பார்வை 2 ல் காணும் காணொளி காட்சியில் தெரிவித்துள்ளபடி , பட்டியல் தயாரிப்பதற்கு முன்பு 

1. அனைத்துப் பணியாளர்களின் ஈட்டிய விடுப்பு இருப்பினையும் , Physical SR ய் உள்ளவாறு IFHRMS லும் பதிவேற்றம் செய்யவேண்டும்.

 2. பணியாளர்களின் கடைசியாக ஈட்டிய விடுப்பினை சரண் செய்த நாள் மற்றும் இதர விபரங்களை eSR Part 1 - ல் பதிவேற்றம் செய்யவேண்டும். இப்பணியினை 30.09.2025 க்குள் கொள்ளப்படுகிறார்கள்.

 விரைந்து முடிக்குமாறு கேட்டுக் மேலும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பணப்பலன்கள் கோரும் பணியாளர்கள் தங்கள் விண்ணப்பத்தினை களஞ்சியம் செயலி ( Kalanjivan Mobile App ) வழியாக விண்ணப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

அன்புக் கரங்கள் திட்டம் - வழிகாட்டி புத்தகம் வெளியீடு!

       Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250927_124536

அன்புக் கரங்கள் திட்டம் - வழிகாட்டி புத்தகம் வெளியீடு!

 Anbu Karangal Guide Book - Download here


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு 3-ம் சுற்று கலந்தாய்வு அக். 6 முதல் தொடக்கம்

       Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்​கான மூன்​றாம் சுற்று கலந்​தாய்வு அக். 6-ம் தேதி தொடங்​கு​கிறது. தமிழகத்​தில் அரசு மற்​றும் தனி​யார் கல்​லூரிகளில் உள்ள அரசு, நிர்​வாக ஒதுக்​கீட்டு எம்​பிபிஎஸ், பிடிஎஸ் இடங்​களுக்​கான கலந்​தாய்வை மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககம் (டிஎம்இ) நடத்​துகிறது.


அதன்​படி, இரண்டு சுற்று கலந்​தாய்வு முடி​வில் காலி​யாக​வுள்ள இடங்​கள், மாணவர்​கள் சேராத​தால் ஏற்​படும் காலி​யிடங்​கள் மற்​றும் கூடு​தலாக சேர்க்​கப்​பட்​டுள்ள இடங்​களுக்​கான மூன்​றாம் கட்ட கலந்​தாய்வு அக்​.6-ம் தேதி ஆன்​லைனில் தொடங்​க​வுள்​ளது. அரசு நிர்​ண​யித்த கட்​ட​ணத்​தை​விட கூடு​தலாக வசூலிக்​கும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களின் அங்​கீ​காரம் ரத்து செய்​யப்​படும் என்று அரசு அறி​வித்​துள்​ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஆசிரியர் தகுதித் தேர்வு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்.

       Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

supreme%20court

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) தொடர்பான விவகாரம் மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு (Review Petition) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இந்த சீராய்வு மனு, ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அல்லது வழங்கிய தீர்ப்பு குறித்து மறுபரிசீலனை செய்யக் கோரும் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக, ஒரு தீர்ப்பில் பிழைகள் இருப்பதாகவோ, அல்லது புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவோ உணரும்போது, சம்பந்தப்பட்ட தரப்பினர் சீராய்வு மனு தாக்கல் செய்வது வழக்கம்.


தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனங்களில், தகுதித் தேர்வின் பங்கு மிக முக்கியமானது. கடந்த காலங்களில், ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்ட விதிகள், தேர்ச்சி மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து பல வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளன.


தற்போதைய சீராய்வு மனுவின் பின்னணி குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும், இது ஆசிரியர்கள், ஆசிரியர் பணிக்கு காத்திருப்போர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை, ஆசிரியர் நியமனங்களில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் இந்த சீராய்வு மனு, தகுதித் தேர்வு தொடர்பான முந்தைய தீர்ப்பில் உள்ள குறிப்பிட்ட அம்சங்கள் குறித்து மீண்டும் ஒரு முறை விரிவாக விவாதிக்கும் வாய்ப்பை உருவாக்கும்.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )