எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு 3-ம் சுற்று கலந்தாய்வு அக். 6 முதல் தொடக்கம்

       Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்​கான மூன்​றாம் சுற்று கலந்​தாய்வு அக். 6-ம் தேதி தொடங்​கு​கிறது. தமிழகத்​தில் அரசு மற்​றும் தனி​யார் கல்​லூரிகளில் உள்ள அரசு, நிர்​வாக ஒதுக்​கீட்டு எம்​பிபிஎஸ், பிடிஎஸ் இடங்​களுக்​கான கலந்​தாய்வை மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககம் (டிஎம்இ) நடத்​துகிறது.


அதன்​படி, இரண்டு சுற்று கலந்​தாய்வு முடி​வில் காலி​யாக​வுள்ள இடங்​கள், மாணவர்​கள் சேராத​தால் ஏற்​படும் காலி​யிடங்​கள் மற்​றும் கூடு​தலாக சேர்க்​கப்​பட்​டுள்ள இடங்​களுக்​கான மூன்​றாம் கட்ட கலந்​தாய்வு அக்​.6-ம் தேதி ஆன்​லைனில் தொடங்​க​வுள்​ளது. அரசு நிர்​ண​யித்த கட்​ட​ணத்​தை​விட கூடு​தலாக வசூலிக்​கும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களின் அங்​கீ​காரம் ரத்து செய்​யப்​படும் என்று அரசு அறி​வித்​துள்​ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment