“ஆரம்பக் கல்வியில் மனப்பாட முறைக்குக் பதிலாக பின்லாந்து மாடல்” - அன்பில் மகேஸ் சிறப்பு பேட்டி

         

hindutamil-prod%2F2026-03-14%2Foz5guheg%2F1114545323

தமிழக பள்ளிக் கல்வியில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் 2026-27-ம் கல்வியாண்டு முதல் அமலாகிறது. இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ், பிரத்யேக நேர்காணல் அளித்துள்ளார்.

புதிய பாடத் திட்டம் குறித்த கேள்விகளுக்கு அமைச்சர் கூறியதாவது:

Q

மாணவர்களுக்கு 1, 2-ம் வகுப்புகளில் எழுத்துகளை திணிக்காமல் பின்லாந்து போல், நிதானமான கற்றல்முறையைக் கொண்டு வருகிறீர்கள். ‘என் பிள்ளை உடனே ஆங்கிலம் பேச, எழுத வேண்டும்’ என துடிக்கும் பெற்றோர் மனநிலையை எப்படி மாற்றப் போகிறீர்கள்?

A

மொழிக் கற்றலில் முதலில் கேட்டல், பேசுதல் திறன்களும், பின்னரே வாசித்தல், எழுதுதல் திறன்களும் பயிற்றுவிக்கப்பட வேண்டும். ஆரம்ப வகுப்புகளில் அடித்தளம் உறுதியானால் அனைத்து பாடங்களையும் புரிந்து கற்கும் திறன் வளரும். பிள்ளைகள் ஆங்கிலத்தை எளிதாக பேசவும், எழுதவும் உரிய பயிற்சிகள் தரப்படும் என்பதை பெற்றோருக்குப் புரியவைப்போம்.

Q

புதிய பாடத்திட்டம் சமூக நீதி, சமத்துவத்தை எப்படி பிரதிபலிக்கிறது? விளிம்பு நிலை மாணவர்களின் கற்றலை மேம்படுத்த என்ன அம்சங்கள் உள்ளன?

A

புதிய பாடத்திட்டம் சமூக நீதி, சமத்துவக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. செயல்பாடுகள் அடிப்படையிலான கற்பித்தல், குழுகற்றல் போன்ற வழிமுறைகள் மூலமாக சமமான கற்றல் உறுதிசெய்யப்படுகிறது. விளிம்புநிலை மாணவர்களின் கற்றல் அடைவு கண்காணிக்கப்பட்டு, கூடுதல் கவனம் தேவைப்படுவோருக்கு உடனடி குறைதீர் கற்றல் வழங்கப்படும்.

Q

மனப்பாடத் தேர்வு முறைக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட உள்ள திறன்சார் மதிப்பீடு எவ்வாறு அளவிடப்படும்?

A

மனப்பாடம் மாணவர்களுக்கு அழுத்தத்தைத் தருவதுடன், உண்மையான புரிதலை அளவிட உதவாது. எனவே, புதிய சூழலில் சிந்தித்து செயல்படுதல், பிரச்சினை தீர்க்கும் திறன், படைப்பாற்றல் போன்ற வாழ்வியல் திறன்களைக் கொண்டே மதிப்பீடு செய்யப்படும்.

Q

புதிய பாடத்திட்டத்தில், புத்தகவாசிப்புக்கும், டிஜிட்டல் திரைக்கல்விக்கும் இடையே சமநிலை எப்படி பேணப்படும்? கிராமப்புறங்களில் இணையவசதி சிக்கல்களுக்கு இடையே இதைச் சாத்தியப்படுத்து வது எப்படி?

A

வாசிப்பு மற்றும் எழுதுதல் அடிப்படை திறன்களாகும். அவை பாடப்புத்தகங்கள் வழியே உறுதிசெய்யப்படும். டிஜிட்டல் தளங்கள் கற்றலை மேம்படுத்தும் துணைக் கருவியாக இருக்கும். நேரில் காண முடியாத கடினமான கருத்துகளை விளக்க மட்டுமே அவை பயன்படுத்தப்படும். இணைய வசதி கிடைக்காத கிராமப்புறங்களிலும், ஆசிரியர் கையேடுகளில் வழங்கப்பட்ட கற்பித்தல் வளங்களை பயன்படுத்தி கற்றல் தொடரப்படும்.


Q

சிபிஎஸ்இயுடன் ஒப்பிடும்போது, இந்த புதிய பாடத்திட்டம் மென்மையாக இருக்கிறது. இதனால் நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தேர்வுகளில் நமது மாணவர்களின் பின்தங்கவாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறதே?

A

நமது பாடத்திட்டம் சர்வதேச தரத்துக்கு இணையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மனப்பாடம் இன்றி திறன் அடிப்படையில் புரிந்து கற்பதால், நீட் உட்பட எந்தவொரு போட்டித் தேர்வையும் தமிழக மாணவர்கள் தன்னம்பிக்கை யுடன் எதிர்கொள்வார்கள். இவற்றை அமல்படுத்தவும், வகுப்பறை செயல்பாடுகளை கட்டமைக்கவும் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.

Q

தற்போதைய சூழலில் பாலியல் கல்விக்கான தேவையுள்ளது. மாணவர்களுக்கு ‘குட் டச்’, ‘பேடுடச்’ விழிப்புணர்வுடன், வயதுக்கேற்ற அறிவியல்பூர்வமான பாலியல் கல்வி வழங்கப்படுமா?

Educational Resources

A

தொடக்க வகுப்பிலிருந்தே மாணவர்களுக்கு வயதுக்கேற்ற விழிப்புணர்வு படிப்படியாக வழங்கப்படுகிறது. புதிய பாடத்திட்டத்தில் குழந்தைகள் தங்களைப் பற்றி நேர்மறையாக எண்ணவும், பாதுகாப்பு உணர்வு பெறவும் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதனுடன் வளரிளம் பருவத்தினருக்கு உடல் மாற்றங்கள், பாலின சமத்துவம்,உணர்வு மேலாண்மை போன்றவை குறித்து செயல்பாடுகள் மற்றும் கலைகள் மூலமாக கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக பிரத்யேகபயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்.

Q

பழைய பாடத்திட்டத்தில் 3-ம் வகுப்பு முடித்து, புதிய பாடத்திட்டத்தில் 4-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு முன்கள நடவடிக்கை என்ன? 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டப் பணிகள் எந்த நிலையில் உள்ளன?

A

மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்படாதவாறு இரு பாடத்திட்டங்களை இணைக்கும் பிரிட்ஜ் கோர்ஸ் பயிற்சி அளிக்கப்படும். 6 முதல் 12-ம் வகுப்புக்கான பாடத்திட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Q

புதிய பாடத்திட்டம் முழுவதும் மாநிலக் கல்விக் கொள்கையை மட்டுமே சார்ந்ததா? அல்லது மத்திய அரசின் நிதியைப் பெறுவதற்காக தேசிய கல்விக் கொள்கையின் சில அம்சங்களையும் ஏற்றுள்ளீர்களா?

A

மாநில கல்விக் கொள்கை-2025 அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இருமொழிக் கொள்கை, சமத்துவம், பண்பாடு, சமூக மற்றும் எதிர்கால தேவைகளை இலக்காக கொண்டு நமது மாநிலத்தின் சூழலுக்கேற்ப இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

Q

பாடத்திட்டம் அமலுக்கு வந்தபின்மதிப்பாய்வு நடத்தப்பட்டு, மாவட்டவாரியான தரவுகள் பொதுமக்களுக்கு வெளியிடப்படுமா?

A

மாணவர்களின் கற்றல் அடைவு குறித்து 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில அளவிலான ஆய்வு நடத்தப்படும். இதன் முடிவுகள் பொதுமக்கள் பார்வைக்காக இணையளத்தில் பதிவேற்றப்படும். மேலும், அந்தத்தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு கற்றல் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித்தொகை: 6,695 மாணவா்கள் தோ்வு!

         

தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித்தொகை: 6,695 மாணவா்கள் தோ்வு!


தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட பயனாளிகளை தோ்வு செய்வதற்கான தோ்வில் இறுதியாக 6,695 பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளதாக தமிழக அரசுத் தோ்வுகள் இயக்ககம் இறுதிப் பட்டிலை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.


இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8- ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை (என்எம்எம்எஸ்) வழங்கப்படுகிறது.


தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித்தொகை: 6,695 மாணவா்கள் தோ்வு!


தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட பயனாளிகளை தோ்வு செய்வதற்கான தோ்வில் இறுதியாக 6,695 பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளதாக தமிழக அரசுத் தோ்வுகள் இயக்ககம் இறுதிப் பட்டிலை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.


இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8- ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை (என்எம்எம்எஸ்) வழங்கப்படுகிறது.

இத்தோ்வில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் கடந்த பிப். 18 - ஆம் தேதி வெளியிடப்பட்டது. இருப்பினும், மாணவா்களின் பிறந்த தேதி, இனப்பிரிவு உள்ளிட்ட திருத்தங்களுக்கு கடந்த பிப். 18 முதல் 24- ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்தத் திருத்தங்கள் நிறைவு பெற்று தற்போது தோ்வானவா்கள் இறுதிப் பெயா் பட்டியல் பள்ளிகளின் பெயா்களோடு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகம் முழுவதும் 6,695 மாணவா்கள் தகுதி பெற்று தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்த ஊக்கத்தொகைக்கான தெரிவுப்பட்டியலை இணையதளத்தில் (மற்ற தோ்வுகள் பிரிவில்) தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தோ்வு முடிவுகள் என்ற பக்கத்தில் காணலாம்.


மேலும், இந்தப் பட்டியல் பள்ளிக் கல்வி இயக்ககத்தால் பிற தகுதிகள் சாா்ந்த பரிசீலனைக்கும் உள்பட்டதாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அரசு ஊழியர்களே, ஆசிரியர்களே அலட்சியம் வேண்டாம்! GBM 2.0 - உங்கள் IFHRMS விவரங்களைச் சரிபார்க்க கடைசி வாய்ப்பு!

         


 அரசு ஊழியர்களே, ஆசிரியர்களே அலட்சியம் வேண்டாம்! GBM 2.0 - உங்கள் IFHRMS விவரங்களைச் சரிபார்க்க கடைசி வாய்ப்பு!

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தற்போது ஒரு மிக முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. கருவூலத் துறையிலிருந்து (Treasury Department) ஜிபிஎம் 2.0 (GBM 2.0) தொடர்பான பணிகளை மிக விரைவாக முடிக்குமாறு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு GBM 2.0 அப்டேட்: தமிழ்நாடு அரசு கருவூலத் துறை மூலம் ஜிபிஎம் 2.0 (GBM 2.0 - Global Beneficiary Master) திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் 11 இலக்கத் தனித்துவ ஐடி உருவாக்கப்படுகிறது. IFHRMS போர்ட்டலில் உள்ள பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் PF விவரங்களில் உள்ள பிழைகளைச் சரிசெய்வது குறித்த முழுமையான வழிகாட்டி பற்றி பார்ப்போம்.

*ஜிபிஎம் 2.0 (GBM 2.0) என்றால் என்ன?*

ஜிபிஎம் 2.0 என்பதன் முழு வடிவம் Global Beneficiary Master என்பதாகும். எளிமையாகச் சொன்னால், இது ஒரு அரசு ஊழியரின் தனிப்பட்ட தரவுத் தொகுப்பு (Personal Data). உங்கள் வங்கி கணக்கு எண் (Bank Account), ஆதார் (Aadhaar), பான் கார்டு (PAN Card), மொபைல் எண் (Mobile) மற்றும் மின்னஞ்சல் (E-mail) முகவரி போன்றவை உங்களுக்கு மட்டுமே உரியதாக இருக்க வேண்டும். ஒரு ஊழியரின் தரவு மற்ற ஊழியரோடு எந்த இடத்திலும் மேட்ச் ஆகக்கூடாது என்பதை உறுதிப்படுத்தவே இந்த Data Cleansing பணி நடைபெறுகிறது. இந்தத் தரவுகள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு எனத் தனியாக 11 இலக்க GBM ID உருவாக்கப்படும்.


*உங்களுடைய GBM ID மற்றும் தரவுகளைச் சரிபார்ப்பது எப்படி?*

உங்களுக்கு GBM ID உருவாகிவிட்டதா அல்லது உங்கள் தரவுகளில் ஏதேனும் பிழைகள் (Errors) உள்ளதா என்பதை அறிய கீழ்வரும் படிநிலைகளைப் பின்பற்றவும்.

IFHRMS போர்ட்டலில் Initiator Login செய்யவும்.

Other Application என்பதற்குச் சென்று, அதில் GBM 2 என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

அடுத்து Beneficiary -> DTO Beneficiary Details என்பதை கிளிக் செய்யவும்.

அதில் உள்ள Know Your Option பகுதிக்குச் செல்லுங்கள்.

உங்கள் பெயர், GBM ID, ஆக்டிவ் ஸ்டேட்டஸ் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்கள் திரையில் தோன்றும்.


*உங்களுடைய GBM ID-ல் ஏதேனும் தவறுகள் இருக்கிறதா எப்படி பார்ப்பது?*

E-Service -> Human Resource -> GBM Report Viewer மூலம் ஒரு எக்செல் (Excel) கோப்பைத் தரவிறக்கம் செய்யவும்.

அதில் Exception Value மற்றும் Exception Remark என்ற பகுதியில் உங்கள் தரவுகளில் உள்ள பிழைகள் பட்டியலிடப்பட்டிருக்கும்.


*உங்களுடைய GBM ID-ல் எப்படி திருத்தம் செய்வது?*

அரசு தரப்பில் இந்தத் திருத்தங்களை மேற்கொள்ள சில முக்கியமான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.


*பெயர் மற்றும் பிறந்த தேதி*

உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவை பணிப் பதிவேடு (SR), IFHRMS ப்ரொபைல், மற்றும் CPS/GPF அக்கவுண்ட் ஸ்லிப் ஆகிய மூன்றிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். பெயரின் இனிஷியல் (Initial) எப்போதும் பெயருக்குப் பின்னால் தான் இருக்க வேண்டும். அனைத்தும் ஆங்கிலப் பெரிய எழுத்துக்களில் (CAPITAL LETTERS) இருக்க வேண்டும்; நடுவில் புள்ளி (Full Stop) வைக்கக்கூடாது.


பணியேற்ற தேதி (DOJ)

உங்கள் SR புத்தகத்தில் உள்ள பணியேற்ற தேதியும், IFHRMS மற்றும் CPS/GPF ஸ்லிப்பில் உள்ள தேதியும் சரியாகப் பொருந்த வேண்டும்.



PF வகை (PF Type)

சிலருக்கு CPS/GPF ஆப்ஷன் செலக்ட் செய்ய முடியாமல் மறைந்திருக்கும் (Hide). இதற்கு ஒரு சிறிய ட்ரிக் உள்ளது: Employee Category-க்குச் சென்று 'Government Servant' என்பதை மாற்றிவிட்டு, மீண்டும் 'TN Government' எனத் தேர்ந்தெடுங்கள். இப்போது அந்த ஆப்ஷன் காண்பிக்கப்படும்.


மொபைல் எண்

கணவன், மனைவி இருவருமே அரசு ஊழியர்களாக இருந்தால், இருவருக்கும் தனித்தனி மொபைல் எண்களைப் பதிவு செய்ய வேண்டும். ஒரே எண்ணைப் பகிரக்கூடாது.


*GBM ID திருத்தம் செய்ய தேவையான ஆவணங்கள் என்ன?*

நீங்கள் செய்யும் ஒவ்வொரு திருத்தத்திற்கும் உரிய ஆதாரங்களை 1 MB அளவிற்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பெயர் / பிறந்த தேதி மாற்றம் (SR புத்தகத்தின் முதல் பக்கம்)

பணியேற்ற தேதி மாற்றம் (SR புத்தகத்தின் 58-வது பக்கம்)

தந்தை பெயர், ஆதார் கார்டு, பான் கார்டு நகல் அவசியம்

CPS / GPF எண் திருத்தம் (அலாட்மெண்ட் நம்பர் (Allotment Number) நகல்)

இந்த விவரங்கள் அனைத்தையும் சரியாகப் புதுப்பித்துவிட்டால், உங்களுக்கு வர வேண்டிய சம்பளம் மற்றும் இதர பணப் பலன்கள் எந்தத் தடையுமின்றி உங்கள் வங்கி கணக்கிற்கு வந்து சேரும். இல்லையெனில், அவை நிறுத்தி வைக்கப்பட (Hold) வாய்ப்புள்ளது. எனவே இந்த GBM 2.0 பணிகளை விரைந்து முடியுங்கள்.





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க