SMC : தேர்ந்தெடுக்கப்பட்ட 1878 பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்குப் பயிற்சி வழங்குதல் மற்றும் நிதி விடுவித்தல் - SPD Proceedings

      Education News (கல்விச் செய்திகள்

IMG_20250714_123434

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பள்ளி மேலாண்மைக் குழு ஆற்றல்படுத்துதல் கல்வியாண்டு 2025-2026 - தேர்ந்தெடுக்கப்பட்ட 1878 பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்குப் பயிற்சி வழங்குதல் மற்றும் நிதி விடுவித்தல் - SPD Proceedings ...

 அரசு தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பானது 2024 ஆகஸ்ட் மாதம் முதல் நான்கு கட்டங்களாக நடத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது . பார்வை -2 இன்படி , பள்ளி மேலாண்மைக் குழுக்களை ஆற்றல் படுத்துவது சார்ந்து முதற்கட்டமாக 3812 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு தொடர் பயிற்சிகள் வழங்குவது குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.


3812 பள்ளிகளில் இரண்டு விதமான பயிற்சி உத்திகள் கையாளும் வகையில் 1934 பள்ளிகள் ஒரு குழுவாகவும் ( Part A ) மீதமுள்ள 1878 பள்ளிகள் மற்றொரு குழுவாகவும் ( Part ) வகைப்படுத்தப்பட்டு தொடர்பயிற்சிகள் நடத்திட திட்டமிடப்பட்டு வருகிறது.

பள்ளி மேலாண்மைக் குழுக்கள் சிறப்பாகச் செயல்படவும் , பெற்றோர் செயலி வழியாக பள்ளியின் முக்கியத் தேவைகளை அறிந்து தீர்மானங்களை உள்ளீடு செய்து தேவைகள் பெற ஏதுவாக உறுப்பினர்களுக்குப் பயிற்சி அவசியமாகிறது.

இணைப்பு 1 இல் கொடுக்கப்பட்டுள்ள குழு B யினை சேர்ந்த 1878 அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக் குழு

SMC_Members_training_through_SMC_RPs.pdf

👇👇👇👇

Download here


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பட்டதாரி ஆசிரியர் - மாவட்டம் விட்டு மாவட்டம் - நாளை யாருக்கு?

   Education News (கல்விச் செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் - மாவட்டம் விட்டு மாவட்டம் - நாளை ( 15.7.2025 ) யாருக்கு ?


 அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2025 26 ஆம் கல்வி ஆண்டுக்குரிய பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள ஏதுவாக ( மாவட்டம் விட்டு மாவட்டம் ) முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்களில் , வரிசை எண் : 1 முதல் 250 வரை உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் 15.07.2025 அன்று காலை 09.00 மணிக்கு வருகை புரிய தக்க வகையில் அறிவுரை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

IMG_20250714_161001_wm


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Hi-tech labs - பள்ளிகளில் ஜூலை 15-ல் செயல்பாட்டுக்கு வருகின்றன

      Education News (கல்விச் செய்திகள்

தமிழ்நாட்டில் 6,990 நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஜூலை 15-ல் செயல்பாட்டுக்கு வருகின்றன


தமிழ்நாட்டில் உள்ள 6,990 அரசு நடுநிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டு வரும் 'உயர் தொழில்நுட்ப' ஆய்வகங்களை, காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 6,990 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 'உயர் தொழில்நுட்ப' ஆய்வகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வகத்தில் தலா 10 கணினிகள், எல்சிடி புரஜெக்டர், கேமரா, தொடுதிரை, மும்முனை மின்சாரம், தடையில்லா மின்சாரம் வழங்க பேட்டரியில் இயங்கும் மின்கலம், 100 எம்பிஎஸ் வேகம் கொண்ட இணையதள வசதி உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்த ஆய்வகங்கள் அமைய உள்ளன.


இந்த ஆய்வகத்துக்கென்று பொறுப்பாசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டு, அவருக்கான பணிகள் பட்டியலிட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க வேண்டும் என பொறுப்பாசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகத்தில் உள்ள ஒவ்வொரு கணிணிக்கும் அடையாள எண் கொடுக்கப்பட்டு, அந்த கணினியின் செயல்பாட்டை சென்னையிலிருந்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


சென்னையிலிருந்து ஆசிரியர் ஒருவர் கற்பிக்கும் பாடத்தை இணையதள வசதி மூலம் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் உள்ள நடுநிலைப்பள்ளி மாணவர்கள் உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் இருந்து கேட்டு புரிந்துகொள்ள முடியும். மாணவர் கணினி வழியே சந்தேகங்களையும் கேட்கலாம். இது தவிர இணையம் மூலம் அந்தந்த வகுப்புக்குரிய பாடங்களை கற்றுக்கொள்ளலாம்.


இவ்வாறு பல்வேறு வசதிகள் கொண்ட உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளன்று சென்னையில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்து மாணவர்களிடம் உரையாட உள்ளார். இதையடுத்து, ஆய்வகப் பணிகளை விரைந்து முடிக்க பள்ளிகளுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

SLAS - 2025 - ஆய்வு அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் வெளியீடு!

      Education News (கல்விச் செய்திகள்

IMG_20250711_174146 

SLAS - 2025 - ஆய்வு அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் வெளியீடு!



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

3, 5, 8-ம் வகுப்புக்கான SLAS தேர்வு மதிப்பீடு - கற்றல் நிலையை மேம்படுத்த உத்தரவு

      Education News (கல்விச் செய்திகள்

அரசுப் பள்ளிகளில் 3, 5, 8-ம் வகுப்புகளுக்கான ஸ்லாஸ் தேர்வு முடிவுகளின்படி மாணவர்கள் கற்றல் நிலையை மேம்படுத்தும் பணிகளை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.


இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் அனைத்து மாவட்ட முதன் மை, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: ”அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு பாட கற்றல் இடைவெளியை கண்டறிய பிப்ரவரி 4, 5, 6-ம் தேதிகளில் மாநில கற்றல் அடைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து ஒவ்வொரு பள்ளியிலும் மாநில அடைவு ஆய்வில் அந்தப் பள்ளி பெற்ற தரநிலை ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் எந்த தர வரிசையில் உள்ளது என்ற விவரத்தை பெற்றோர்கள், எஸ்எம்சி உறுப்பினர்கள், பொது மக்கள் மற்றும் மாணவர்களின் பார்வைக்கு எளிதில் புலப்படும் வகையில் தலைமை ஆசிரியரின் அறையில் இடம்பெற செய்ய வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் பள்ளி தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் 3, 5, 8-ம் வகுப்புக்கு எந்த தரநிலையில் உள்ளது என்ற விவரத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும்.

தாங்கள் பணிபுரியும் பள்ளியானது மாவட்டத்தில் தலை சிறந்த பள்ளி என ஆய்வறிக்கையில் இடம்பெறத்தக்க வகையில் ஒவ்வொரு ஆசிரியரும் தங்களின் அனுபவங்களை கொண்டு நல்ல முடிவுகளை கொண்டு வருவதில் ஈடுபாடுடன் இருத்தல் வேண்டும். கற்றலில் பின்னடைவு உடைய மாணவர்களை அடையாளம் கண்டறிந்து அவர்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளை தலைமை ஆசிரியர்கள் எடுக்க வேண்டும்.

மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை வாரத்தில் 3 நாட்கள் அலுவலர்கள் நேரடியாக பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஒன்றியத்தில், மாவட்டத்தில் குறைந்த தரநிலையுடன் பின்தங்கிய பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்க ளுக்கு சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். சிறந்த முறையில் மாணவர்களை முன்னேற்ற நிலைக்கு கொண்டு செல்லாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் உரிய விளக்கம் பெற வேண்டும்” என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

‘ப’ வடிவ இருக்கை அறிவிப்புக்கு வித்திட்ட ‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’ மலையாளப் படம்!

      Education News (கல்விச் செய்திகள்

1369169

மாணவர்​களுக்கு சரிசம​மான கற்​றலை உறு​தி​செய்​யும் வித​மாக பள்ளி வகுப்​பறை​களில் ‘ப’ வடி​வில் இருக்​கைகள் அமைக்​கப்பட வேண்​டுமென பள்​ளிக்​கல்​வித் துறை உத்​தர​விட்​டுள்​ளது.


இதுகுறித்து பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன் அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்: வகுப்​பறை​யில் வசதி​யான இருக்கை ஏற்​பாடு கற்​றலை மேம்​படுத்​து​வ​தி​லும், மாணவர்​களை ஆசிரியர் நன்கு தொடர்பு கொண்டு உரை​யாட​வ​தி​லும் முக்​கியப் பங்​காற்​றுகிறது. இதை கருத்​தில் கொண்டு அமைச்​சர் அன்​பில் மகேஸ் பள்​ளி​களில் ‘ப’ வடிவ இருக்கை வசதியை ஏற்​படுத்த அறி​வுறுத்​தி​யுள்​ளார்.


இந்த அமைப்​பில் ஒவ்​வொரு மாணவரும் ஆசிரியர் மற்​றும் கரும்​பல​கையை தெளி​வாகப் பார்க்க முடி​யும். வகுப்​பறை​யில் உள்ள அனைத்து மாணவர்​களை​யும் ஆசிரியர்​கள் எளி​தில் தொடர்பு கொள்ள இயலும். மேலும், மாணவர்​களின் செயல்​பாடு​களை ஆசிரியர்​கள் துல்​லிய​மாக கண்​காணிக்க முடி​யும்.

இதுத​விர கலந்​துரை​யாடல்​கள், கேள்வி பதில் அமர்​வு​கள், கருத்​துகளை பகிர்ந்து கொள்​ளுதல் ஆகிய​வற்​றுக்கு ‘ப’ வடிவ இருக்கை வசதி சமவாய்ப்பை வழங்​கு​கிறது. அதே​போல் தொழில்​நுட்ப செயல்​முறை விளக்​கங்​கள், குழு விவாதங்​களுக்​கும் இந்த முறை மிக​வும் உகந்​த​தாக இருக்​கும். மாற்​றுத்​திறன் மாணவர்​களுக்கு சற்று வசதி​யாக அமை​யும்.


இந்த இருக்கை வசதி​யின்​படி ஒவ்​வொரு மாணவரும் முன்​புற வரிசை​யில் இருப்​பார்​கள். இதன்​மூலம் ஆசிரியர் பாடம் நடத்​தும்​போது வகுப்​பில் உள்ள எவரும் மறைக்​கப்​ப​டா​மல் சிறந்த கற்​றல் நடை​பெறு​வதை உறுதி செய்ய முடி​யும். குறிப்​பாக ஆசிரியரின் நேரடிக் கண்​காணிப்​பில் இருப்​ப​தால் மாணவர்​களுக்கு கற்​றலில் கவனச் சிதறல் ஏற்​ப​டாது.

பொது​வாக பாடப்​பொருள் தொடர்​பாக ஆசி​யர்​களிடம் சந்​தேகங்​கள் எழுப்​ப​வும், கருத்து பரி​மாற்​றம் செய்​வும் சில மாணவர்​கள் தயங்​கு​வது வழக்​கம். இது​போன்ற மாணவர்​கள் இனி எவ்​வித தயக்​க​மும் இல்​லாமல் அச்​சமின்றி கற்​றலில் ஆர்​வத்​துடன் பங்​கேற்க முடி​யும். எனவே, அனைத்து முதன்​மை, மாவட்​டக்​கல்வி அலு​வலர்​களும் தங்​கள் கட்​டுப்​பாட்​டில் உள்ள தலைமை ஆசிரியர்​களுக்கு மாணவர்​களின் எண்​ணிக்கை மற்​றும் வகுப்​பறை​யின் அளவைப் பொருத்து இந்த ‘ப’ வடிவ இருக்கை வசதி​யைச் செய்ய அறி​வுறுத்த வேண்​டும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.


இதற்​கிடையே சமீபத்​தில் கேரளா​வில் வெளி​யான ஸ்தா​னார்த்தி ஸ்ரீகுட்​டன் எனும் படத்​தில் பள்ளி வகுப்​பறை​யில் அரைவட்ட வடி​வில் இருக்​கைகள் போடப்​பட்டு ஆசிரியர்​கள் பாடம் நடத்த வேண்​டும் என்ற கருத்து வலி​யுறுத்​தப்​பட்​டது. பெரும் வரவேற்பை இந்த நடை​முறை கேரளா​வில் சில பள்​ளி​களில் சோதனை முறை​யில் அமல்​படுத்​தப்​பட்​டது. தொடர்ந்து பஞ்​சாப், ஜம்​மு- காஷ்மீர் ஆகிய மாநிலங்​களும் இந்த வகுப்​பறையை அமல்​படுத்த முன்​வந்​தன. அந்த வரிசை​யில் தமிழகத்​தி​லும் பள்​ளி​களில் இந்த நடை​முறையை பின்​பற்ற பள்​ளி​கல்​வித்​ துறை உத்​தர​விட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

SSC - 1,340 இளநிலை பொறியாளா் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 21 வரை அவகாசம்

      Education News (கல்விச் செய்திகள்

dinamani%2Fimport%2F2022%2F12%2F22%2Foriginal%2Fexam

மத்திய அரசில் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள இளநிலை பொறியாளா் பிரிவில் 1,340 காலிப் பணியிடங்களுக்கான தோ்வுக்கு வரும் ஜூலை 21 வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்திய பணியாளா் தோ்வாணையம் (எஸ். எஸ்.சி.) அறிவித்துள்ளது.

இதுகுறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:


மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் கட்டுமானப் பொறியியல் (சிவில்), இயந்திரவியல் (மெக்கானிக்கல்), மின்னியல் (எலக்ட்ரிக்கல்) பிரிவில் 1,340 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான தோ்வுக்கு வரும் ஜூலை 21-க்குள் https://ssc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான தோ்வுகள் வரும் அக்டோபா் மாதம் கணினி வாயிலாக நடைபெறவுள்ளன. தமிழகத்தில் சென்னை, வேலூா், கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி ஆகிய மையங்களில் இத் தோ்வு நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பல்வேறு படிப்புகளுக்கு இணைத்தன்மை இன்மை (Non-Equivalence) வழங்கி உயர் கல்வித் துறை அரசாணை வெளியீடு!

      Education News (கல்விச் செய்திகள்

IMG_20250713_094915

பல்வேறு படிப்புகளுக்கு இணைத்தன்மை இன்மை (Non-Equivalence) வழங்கி உயர் கல்வித் துறை அரசாணை வெளியீடு!

Public Services - Equivalence of Degrees - Non - Equivalence of Degrees offered by various Universities / Educational Institutions to the similar Degrees Recommendations of 33rd Equivalence Committee - Approved - Orders - Issued

G.O.Ms.No.136 - Non-Equivalence.pdf

👇👇👇👇

Download here


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

NEET - UG SCHEDULE - 2025

      Education News (கல்விச் செய்திகள்

NEET - UG SCHEDULE - 2025

IMG-20250713-WA0005_wm

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பள்ளி வகுப்பறைகளில் 'ப' வடிவில் இருக்கைகள் வசதி: உத்தரவை நிறுத்தி வைத்ததா? தமிழக அரசு

      Education News (கல்விச் செய்திகள்

44190604-scholls33

'ப' வடிவில் இருக்கைகள் அமைக்கப்பட்டால், ஒவ்வொரு மாணவரும் கரும்பலகையையும், ஆசிரியரையும் தெளிவாக பார்க்க முடியும் என்று கூறப்பட்டது.


கேரளாவில் பள்ளி வகுப்பறைகளில் கடைசி இருக்கை மாணவர் என்ற வார்த்தை இருக்கக் கூடாது என்ற நோக்கில், 'ப' வடிவில் வகுப்பறைகளில் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கேரளாவைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் அதனை அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.


அதன்படி, இதுபோல் இருக்கைகள் அமைக்கப்பட்டால், ஒவ்வொரு மாணவரும் கரும்பலகையையும், ஆசிரியரையும் தெளிவாக பார்க்க முடியும். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எளிதான அணுகுமுறை உருவாகும். ஆசிரியர்கள் மாணவர்களை உன்னிப்பாக கண்காணிக்க முடியும். ஆசிரியர்கள் கூறுவதை மாணவர்கள் கேட்பதில் இருக்கும் சிரமம் குறையும் என கல்வித்துறை தெரிவித்திருந்தது.


மேலும் இருக்கைகள் அமைக்கப்படுவது போல, அதற்கேற்ற காற்றோட்ட வசதி, ஒளி வசதி ஆகியவற்றையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.


இந்தநிலையில், பள்ளி கல்வித்துறையின் இந்த உத்தரவு, சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஒரு தரப்பினர் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், இன்னொரு தரப்பினர் இந்த கல்வித்துறையின் அறிவிப்பை குறை கூறினர். மாணவர்கள் நீண்ட நேரம் பக்கவாட்டில் பார்வையை செலுத்த வேண்டி இருக்கும். இதனால் மாணவர்களுக்கு கழுத்து வலி, பெண் குழந்தைகளுக்கு இடுப்பு வலி, ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.


இதையடுத்து, உத்தரவு பிறப்பித்த அதே நாளிலேயே 'ப' வடிவில் மாற்றி அமைக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்கப்படிவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வந்தது. வல்லுனர்களிடம் உரிய ஆலோசனை பெறும் வரை திட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


இந்தநிலையில், பள்ளி வகுப்பறைகளில் 'ப' வடிவில் இருக்கைகள் வசதி உத்தரவை நிறுத்தி வைப்பதாக சமூகவலைதளங்களில் சிலர் தவறான தகவலை பரப்பு வருவதாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

English Notes of Lessons for-VI,VII,VIII , IX & X (14-07-2024 to 18-07-2024)

      Education News (கல்விச் செய்திகள்

English Notes of Lessons for-VI,VII,VIII , IX & X (14-07-2024 to 18-07-2024) the July 3rd week for Government of Tamil Nadu State Board Shool Teachers

Notes of Lesson for the Sixth English -the July 3rd week- The Apple Tree and the Farmer (Supplementary-1) - Download here

Notes of Lesson for 7th English July 3rd week-The Red -Headed League (Supplementary-1) - Download here

Notes of lesson for the 8th English July the 3rd week-Jim Corbett, A Hunter Turned Naturalist (Supplementary-1) - Download here

Notes of Lesson for the 9th-English July the 3rd week- The Fun They Had (Supplementary-1) - Download here

and 

Notes of Lesson for the 10th-English July the 3rd week-Zigzag (Supplementary-1) - Download here


Warm regards,


Sethuraman Ramalingam, B.T., Asst, 

Ariyalur (DT)- 

Thank you…

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ஜூலை 14 உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

   Education News (கல்விச் செய்திகள்)


மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு 14.07.2025 திங்கட்கிழமை அன்று, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் 14.07.2025 அன்று பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட மாணவ / மாணவியர்கள். ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறைக்குப் பதிலாக 19.07.2025 சனிக்கிழமை மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் வேலை தினமாக அறிவிக்கப்படுகிறது.


14.07.2025 அன்று மதுரை மாவட்டம். திருப்பரங்குன்றம் வட்டத்திற்குட்பட்ட சார்நிலை கருவூலம் அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

ஜூலை 15 - இல் கல்வி வளர்ச்சி நாள் விழா : சிறந்த பள்ளிகளைத் தேர்வு செய்ய உத்தரவு

 பள்​ளி​களில் காம​ராஜர் பிறந்​த​நாள் விழா கொண்​டாடு​வது மற்​றும் சிறந்த பள்​ளி​களை தேர்வு செய்​வதற்​கான வழி​காட்​டு​தல்​களை பள்​ளிக்​கல்வி துறை வெளி​யிட்​டுள்​ளது.


இதுகுறித்து முதன்மை கல்வி அலு​வலர்​களுக்கு பள்​ளிக்​கல்வி துறை இயக்​குநர் கண்​ணப்​பன், தொடக்க கல்வி இயக்​குநர் நரேஷ் ஆகியோர் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: தமிழகத்​தில் முன்​னாள் முதல்​வர் காம​ராஜர் பிறந்​த​நாளான ஜூலை 15-ம் தேதி ஆண்​டு​தோறும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்​டாடப்​படு​கிறது. இதையொட்​டி, சிறந்த பள்​ளி​களை தேர்வு செய்து நிதி வழங்​கப்​படும். இந்த பள்​ளி​கள் மாணவர்​களை அதிக அளவில் சேர்த்​திருக்க வேண்​டும். மாணவர்​கள் இடைநிற்​றலை தவிர்த்​ததுடன், ஆசிரியர்​களின் கற்​பித்​தல் திறன் சிறப்​பாக இருக்க வேண்​டும். கலை, இலக்​கி​யம், நாடகம் போன்ற துறை​களில் மாணவர்​களை நன்கு ஊக்​கப்​படுத்தி இருக்க வேண்​டும். பெற்​றோர் ஆசிரியர் கழகம், எஸ்​எம்சி குழு ஆகியவை சிறப்​பாக செயல்​பட்​டிருக்க வேண்​டும். புர​வலர்​களை​யும் அதிக அளவில் சேர்த்​திருக்க வேண்​டும். இந்த திட்​டம் மூலம் பெறும் நிதியை கொண்டு பள்​ளி​களில் குடிநீர், கழிப்​பறை​கள், ஆய்​வகம், நூலக மேம்​பாடு, சுற்​றுச்​சுவர் போன்ற அத்​தி​யா​வசிய தேவை​களை பூர்த்தி செய்ய வேண்​டும்.


இதுதவிர, இந்த ஆண்டில் அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். காமராஜரின் அரும்பணிகள் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை போட்டிகள் நடத்தி,பரிசுகள் வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். இதற்காக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.