தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005ன்படி சில தகவல்கள் வழங்குதல்- சார்ந்து. (2022) அடிப்படை விதி 49 (1) (II) க் கீழ் பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிடத்தில் அப்பள்ளியின் மூத்த ஆசிரியர் என்ற காரணத்தினால் அன்றாட பணிகளுடன் கூடிய கூடுதல் பொறுப்பு தலைமை ஆசிரியராக பணிபுரிந்த காலங்களுக்கு கூடுதல் பொறுப்புப்படி வழங்க விதிகளில் இடமில்லை என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
வரும் கல்வி ஆண்டிற்கான வருமான வரி படிவம் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.
வருமான வரி பூர்த்தி செய்து படிவமாக கொடுக்கும் ஆசிரியர்கள் இதனை பதிவிறக்கம் செய்து கொடுக்கலாம். மேலும் ஆசிரியர்கள் இதனை உத்தேச வருமானம் வரி கணக்கு செய்ய இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்
இதனை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
*09.12.2024 முதல் 23.12 .2024 வரை 6 - 8 வகுப்புகளுக்கு.
*16.12.2024 முதல் 23.12.2024 வரை 1- 5 வகுப்பு வரை..
*24.12.2024 முதல் 01.01.2025 வரை இரண்டாம் பருவம் தேர்வு விடுமுறை..
*02.01.2025 - மூன்றாம் பருவம் ஆரம்பம்.
அரசுப் பள்ளிகளுக்கான புதிய திருத்திய பள்ளிக்கல்வி நாட்காட்டியை பள்ளிக் கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ளது இதனை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
சிஐஎஸ்சிஇ வாரியத்தின் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 13-ல் தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் குழுமம் (சிஐஎஸ்சிஇ) வெளியிட்டுள்ள அறிவிப்பு: சிஐஎஸ்சிஇ பாடத்திட்டத்தில் பயிலும் 10-ம் வகுப்பு (ஐசிஎஸ்இ), 12-ம் வகுப்பு (ஐஎஸ்சி) பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 18 முதல் மார்ச் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 13 முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பாட வாரியாக விரிவான கால அட்டவணை, வழிகாட்டு நெறிமுறைகள், மறுமதிப்பீடு உட்பட பொதுத் தேர்வு குறித்த கூடுதல் விவரங்கள் வாரியத்தின் இணையதளத்தில் (https://cisce.org) வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு இணையவழி விளையாட்டுகளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: "தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இணையவழி விளையாட்டுகளுக்கு அடிமையாதல் மற்றும் அதனால் வரும் தீய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ், ஆங்கில மொழியில் கட்டுரைப் போட்டி நடத்துமாறு தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இப்போட்டி, மாணவர்கள் மைதான விளையாட்டுகளை விட இணையவழி விளையாட்டுகளுக்கு ஏன் ஈர்க்கப்படுகிறார்கள், இளைஞர்கள் மீதான இணையவழி விளையாட்டுகளின் தாக்கங்கள் என்ன என்பன உட்பட தலைப்புகளில் 2 மொழிகளிலும் நடத்தப்படும். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு தமிழ் வழி, ஆங்கில வழி என தனித்தனியாக முதல் பரிசு ரூ.10,000, 2ம் பரிசு ரூ.6,000, 3ம் பரிசு ரூ.4,000, ஆறுதல் பரிசாக 6 மாணவர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும்.
அதன்படி பள்ளி, வட்டாரம், கல்வி மாவட்ட அளவில் போட்டிகளை நடத்தி தமிழ், ஆங்கில வழியில் வெற்றி பெற்ற மாணவர் பட்டியலை இயக்குநரகத்துக்கு டிச.10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். எனவே, இப்போட்டிகளை உரிய காலத்தில் நடத்தி தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலை முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுப்ப வேண்டும்” என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.60,000/- சம்பளத்தில் Young Professional வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!
Mineral Exploration and Consultancy Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Young Professional பணிக்கென காலியாக உள்ள 25 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Young Professional பணிக்கென காலியாக உள்ள 25 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / CA / CMA / M.Sc / MA / MBA / MBBS / ME / M.Tech / MSW / PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.60,000/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.