இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE! VERSION 0.0.79

 

இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE! VERSION 0.0.89


*🔖VERSION 0.0.89*

*🔖Whats New?*

*👉Bug Fixes and Performance Improvement*

App Update  செய்ய Direct Link👇

 https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.itk


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு பாடநூல்கள் விநியோகம்: பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரம்

 1252732

1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடநூல்களை பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 44 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில்1 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார்75 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கான பாடநூல்கள் அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள்கழகம் மேற்கொண்டு வருகிறது.

அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு குறைந்த விலையிலும் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.




அதன்படி வரும் (2024-25) கல்வியாண்டுக்காக மொத்தம் 4.18 கோடி பாடநூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. அதாவது, அரசு, அரசு உதவி பள்ளி மாணவர்களுக்கு வழங்க 2.9 கோடி புத்தகங்கள், தனியார் பள்ளிகள் விற்பனைக்காக ரூ.1.2 கோடி புத்தகங்கள் ஆகும். தற்போது பாடநூல்களை பள்ளிகளுக்கு விநியோகம் செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் ஜூன் முதல் அல்லது 2-வது வாரத்தில் திறக்கப்பட உள்ளன.





பள்ளிகள் திறந்தவுடன் முதல் வாரத்துக்குள் 1 முதல் 7-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முதல் பருவ பாடப் புத்தகங்களும் ,8 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான முழு புத்தகங்களும் வழங்கப்படும். அதற்கேற்ப தயார் நிலையில் இருக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




தற்போதைய சூழலில் அச்சிடப்பட்ட பாடநூல்கள் குடோன்களில் இருந்து அந்தந்த மாவட்டக் கல்விஅலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கிருந்து பள்ளிகளுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.




இதுதவிர தனியார் பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்கள் விற்பனை கடந்த மே 15-ம் தேதிதொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், அடையாறு பாடநூல் விற்பனை கிடங்கு ஆகியவற்றில் புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம். இதேபோல், தமிழ்நாடு காதிக நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட நோட்டுப் புத்தகங்களும் முழுமையாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது’’என்றனர்.


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

2024–25-ம் கல்வியாண்டில் சிபிஎஸ்இ-யில் தமிழ் பாட தேர்வு கட்டாயம்: பள்ளி கல்வித்துறை தகவல்

 1252688

சிபிஎஸ்இ உட்பட அனைத்துவித பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் வரும் கல்வியாண்டில் கட்டாயம் தமிழ் பாடத்தேர்வு எழுத வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் அனைத்து விதமான பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி, 2015–16-ம் கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயப் பாடமானது. 2016–17-ம் கல்வி ஆண்டில் 2-ம் வகுப்புக்கும், அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் ஒவ்வொரு வகுப்பாக படிப்படியாக அமலானது. அதன்படி 2023–24-ம் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக நடைமுறைக்கு வந்தது.


தொடர்ந்து வரும் 2024–25-ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் தமிழ் பாடம் கட்டாயமாகிறது. இது மாநில பாடத்திட்ட பள்ளிகளுக்கு மட்டுமின்றி, தமிழகத்தில் செயல்படும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட அனைத்து விதமான பள்ளிகளுக்கும் பொருந்தும்.


இந்த மாணவர்கள் பொதுத்தேர்விலும் தமிழை ஒரு தேர்வாக கட்டாயம் எழுத வேண்டும். இதற்கான தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதற்கிடையே பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி சிபிஎஸ்இ பள்ளிகளில் மட்டும் சுமார் 6 ஆயிரம் பேர் வரை தமிழ் தாய் மொழி அல்லாத மாணவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.


இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலர் ஜெ.குமரகுருபரன் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதர கல்வி வாரியங்களின் கீழ் இயங்கும் பள்ளிகள் மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்வதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

சுகர் முதல் மாரடைப்பு வரை.. தொப்பை இருந்தால் இத்தனை பாதிப்புகள் வருமா..?

 
சிலருக்கு உடல் நிறை குறியீடு (BMI) குறைவாக இருந்தாலும், அவர்களது உடல்வாகுக்கு கொழுப்புகள் அனைத்தும் அடிவயிற்றுப் பகுதியில் சேகரமாகும். இதனால் தொப்பை வயிறோடு இருப்பார்கள். இவர்கள் பார்ப்பதற்கு குண்டாக இல்லையென்றாலும், இவர்களது உள்ளுறுப்புகளில் கொழுப்புகளின் சதவிகிதம் அதிகமாக இருக்கும். இது டைப்-2 டயாபடிஸ் உள்ளிட்ட வளர்சிதை கோளாறுகளையும் இதய நோய்கள் வரும் ஆபத்தையும் அதிகரிக்கும்.

இதற்கு முக்கிய காரணம் பீட்ஸா, பர்கர் போன்ற மேற்கத்திய உணவுகளே எனப் பலர் கூறினாலும், அதிக கார்போஹைட்டரேட், அதிக தானியம், குறைவான புரதம் கொண்ட இந்திய உணவுகளை குற்றஞ்சாட்டுகிறார்கள் சில ஊட்டச்சத்து நிபுணர்கள்.

அடிவயிற்றுப் பகுதியை சுற்றிலும் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை நாம் பொதுவாக தொப்பை என அழைக்கிறோம். இது நம் ஆரோக்கியத்திற்கு பல வகைகளில் கேடு செய்வதோடு அழகியல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறது. உங்களுக்கு தொப்பை இருந்தால், இந்த 5 விஷயங்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.


நாள்பட்ட நோய்கள் வருவது அதிகரிக்கும் : நம் அடிவயிற்றில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் அழற்சி ரசாயனங்களை வெளியேற்றுவதன் காரணமாக டைப்-2 டயாபடீஸ், இதய நோய்கள், குறிப்பிட்ட சில வகையான புற்றுநோய்கள் போன்ற நாள்பட்ட நோய்கள் தாக்கும் அபாயம் அதிகரிக்கிறது. உள்ளுறுப்பு கொழுப்புகள் உடலின் முக்கியமான உறுப்புகளான கணையம், கல்லீரல் ஆகியவற்றை பாதிப்பதோடு இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வளர்சிதை நோய்க்குறி வரும் ஆபத்தையும் அதிகரிக்கிறது.

இதய நோய் வரும் அபாயம் : தொப்பைக்கும் இதய நோய்க்கும் நெருங்கிய தொடர்புள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. இது இதய தமனியில் அடைப்புகள் உருவாக காரணமாக இருக்கிறது. இதன் காரணமாக ஹைபர்டென்சன், மாரடைப்பு, பெருந்தமனித்தடிப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் வரும் ஆபத்து அதிகமாகிறது. உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைக்ளைசைரடு அளவு அதிகமாகவும் நல்ல கொலஸ்ட்ரால் அளவு குறைவாக இருந்தாலும் தொப்பை வரக்கூடும்.

மனநல ஆரோக்கியத்தை பாதிக்கும் : உள்ளுறுப்பு கொழுப்புகள் இன்சுலின் எதிர்ப்பிற்கும் ரத்தத்தில் கொழுப்புகள் அதிகமாவதற்கும் காரணமாக இருக்கிறது. இதை கவனிக்காமல் இருந்தால் ரத்த சர்க்கரை அளவு அதிகமாகி டைப்-2 டயாபடீஸ் வரக்கூடும். இது ஹார்மோன் சமநிலையையும் பாதிக்கிறது.

சுவாச செயல்பாடை பாதிக்கும் : ஒருவருக்கு தொப்பை இருந்தால், அவரது அடிவயிற்றுப் பகுதி அதிக எடையோடு இருக்கும். இது மூச்சுவிடுவதில் சிரமத்தையும், தூக்கத்தில் மூச்சுத்திணறலையும் உண்டாக்கும். முக்கியமாக நீங்கள் இரவு தூங்கும் போது, மார்பு மற்றும் அடிவயிற்றை சுற்றியுள்ள கொழுப்புகள் நுரையீரல் சுருங்கி விரிவதை தடுத்து சுவாசிப்பதை சிக்கலாக்குறது. இது தீவிர சுவாசப் பிரச்சனைகள் வருவதற்கு காரணமாக அமையும்.

சுவாச செயல்பாடை பாதிக்கும் : ஒருவருக்கு தொப்பை இருந்தால், அவரது அடிவயிற்றுப் பகுதி அதிக எடையோடு இருக்கும். இது மூச்சுவிடுவதில் சிரமத்தையும், தூக்கத்தில் மூச்சுத்திணறலையும் உண்டாக்கும். முக்கியமாக நீங்கள் இரவு தூங்கும் போது, மார்பு மற்றும் அடிவயிற்றை சுற்றியுள்ள கொழுப்புகள் நுரையீரல் சுருங்கி விரிவதை தடுத்து சுவாசிப்பதை சிக்கலாக்குறது. இது தீவிர சுவாசப் பிரச்சனைகள் வருவதற்கு காரணமாக அமையும்.


🔻 🔻 🔻 

தொழில் முனைவோருக்கு அரிய வாய்ப்பு; பயன்படுத்திக் கொள்ள திருச்சி ஆட்சியர் அழைப்பு

 தமிழ்நாடு அரசு, அகமதாபாத்தில் இயங்கி வரும் இ.டி.ஐ.ஐ., என்ற நிறுவனத்துடன் இணைந்து, ஓராண்டு தொழில் முனைவோர் பயிற்சிக்கான பட்டய படிப்பு வழங்க உள்ளது. சென்னை இ.டி.ஐ.ஐ., தலைமையகத்தில் ஆண்டுக்கு 500 பேருக்கு பயிற்சி வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூபாய் ஒரு லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்டய படிப்புக்கான பாடத்திட்டம், மாணவர் சேர்க்கை விதிமுறைகள், மாணவர்கள் தேர்ச்சி குறித்து அந்நிறுவனமே முடிவு செய்யும். ஆங்கில மொழியில் பயிற்சி இருக்கும் என்பதால், ஆங்கில புலமை இல்லாதோருக்கு சிறப்பு பயிற்சியும் வழங்கும்.


21 முதல் 30 வயதுக்குட்பட்ட இளநிலை பட்டதாரிகள் சேரலாம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு உள் ஒதுக்கீடு செய்யப்படும். நுாறு சதவீதம் கல்வி உதவித் தொகை பெற வழி உள்ளது. இதில் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் பங்கு பெறலாம். 


இதுகுறித்த கூட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (22.05.2024) அன்று மாலை 04:00 மணிக்கு நடைபெறவுள்ளது. கூடுதல் தலைமை செயலாளர் உமாசங்கர் இப்பயிற்சி குறித்து உரையாற்றவுள்ளார்கள். இக்கூட்டத்தில் உயர்கல்வி நிறுவன பிரதிநிதிகள், குறு, சிறு தொழில் சங்கங்கள் உட்பட பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். தொழில் ஆர்வலர்கள் இதில் பங்கேற்கலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

திருச்சி வாழை ஆராய்ச்சி நிறுவன வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

 தமிழகத்தில், திருச்சியில் அமைந்துள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR NRCB) டிகிரி படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை திட்ட உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Junior Project Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.Sc Agriculture or any plant science degree படித்திருக்க வேண்டும்.

வயது தகுதி: 21 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகள் படி வரம்பில் குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 15,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://nrcb.icar.gov.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் ஸ்கேன் செய்து கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி: nrcbrecruitment@gmail.com

விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.05.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://nrcb.icar.gov.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்வையிடவும்.



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை துவக்கம்.. விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ

 அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2024ஆம் ஆண்டு பயிற்சியில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பத்தாம் வகுப்பு / எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 10.05.2024 முதல் 07.06.2024 முடிய விண்ணப்பங்கள் பதிவு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்விற்கான தரவரிசைப்பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்குப் பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.

விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் அரசு தொழிற்ப்பிற்சி நிலையம் :


விழுப்புரம் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் திண்டிவனம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற் பிரிவு விபரங்கள் தெரிந்துகொள்ளwww.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தினை பார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் பொழுது தங்களது அசல் ஆவணங்களான மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், முன்னுரிமை கோருவதற்கான சான்றிதழ் மற்றும் இடப்பெயர்வு சான்றிதழ் ஆகியன பதிவேற்றம் செய்யப்படவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

உதவித்தொகையுடன் (On the Job Training)தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750/- உதவித்தொகை மற்றும் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, பாடப் புத்தகம், மூடு காலணி, சீருடை, சீருடைக்கான தையற்கூலி, வரைபடக்கருவிகள், ஆடவர் தங்கும் விடுதி மற்றும் இலவச பஸ்பாஸ் ஆகியவை வழங்கப்படுகிறது.

மேலும், பயிற்சியின் போது பிரபல தொழிற் நிறுவனங்களில் On the Job Training ஆனது உதவித்தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழிற் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்துதரப்படும். இந்த இணையதள வழியிலான கலந்தாய்வில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

விண்ணப்பக்கட்டணம் ரூ.50/- ஐ விண்ணப்பதாரர் Debit card/ Credit Card / Net Banking/ UPI வாயிலாக செலுத்தலாம் இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் : 07.06.2024. மேலும், விபரங்களுக்கு 9380114610, 8072217350, 9789695190 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்பழனி தெரிவித்துள்ளார்.


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு இதோ!

 டி.என்.பி.எஸ்.சி தேர்வு மூலம் மொத்தம் 118 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

காலி பணியிடங்கள் மற்றும் பதவிகள் :

கல்லூரி உடற்கல்வி மற்றும் விளையாட்டு இயக்குனர், மேலாளர், உதவி மேலாளர், துணை மேலாளர், உதவி பொது மேலாளர், தமிழ் நிருபர், ஆங்கில நிருபர், கணக்கு அலுவலர், உதவி இயக்குனர், முதுநிலை அலுவலர், வேளாண் உதவி அலுவலர், நிதியாளர், என 20 வகையில் கீழ் 118 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
வயதுவரம்பு:

ஒவ்வொரு வேலை வாய்ப்பிற்கும் வயதுவரம்புகள் வேறுபடும். 21 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். மேலும் பணிவாரியாக உச்ச வயதுவரம்பு மாறுபடும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஒருமுறைப்பதிவு மூலம் பதிவுக்கட்டணமாக ரூ.150/- ஐ செலுத்தி. பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒருமுறைப்பதிவு, பதிவு செய்த நாள் முதல் ஐந்தாண்டுகள் வரை செல்லுபடியாகும். கணினி வழியில் பதிவு செய்யும் பொழுது, பத்தாம் வகுப்பு (SSLC) பதிவு எண், சான்றிதழ் எண், தேர்ச்சி பெற்ற ஆண்டு, மாதம், பயிற்று மொழி மற்றும் சான்றிதழ் வழங்கிய குழுமம் ஆகிய தகவல்களை சரியாகப் பதிவு செய்ய வேண்டும்.பிறந்ததேதியை பத்தாம் வகுப்பு (SSLC) அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு(HSC) மதிப்பெண் பட்டியலுடன் சரி பார்க்க வேண்டியது அவசியம். தேர்வுக் கட்டணச் சலுகை கோராத தேர்வர்கள் எழுத்துத் தேர்விற்கு தேர்வுக் கட்டணமாக ரூ. 200 கணினி வழி விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது செலுத்த வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 14.06.2024 கடைசி தேதி ஆகும். டிகிரி மற்றும் பொறியியல் படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்கள். மேலும் பணிவாரியான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் உடைய விபரங்களை தெரிந்து கொள்ள https://www.tnpsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தை காணவும்.

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News




🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

College Guidance: படித்த உடன் வேலை வேண்டுமா..? நியூட்ரிஷன் அண்ட் டயட்டீஷியன் பற்றி தெரிஞ்சுக்கோங்க...

 மனிதனின் அத்தியாவசியத் தேவைகளில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. ஊட்டச்சத்தான உணவு இல்லாமல் மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியாது அப்படிப்பட்ட உணவும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் அதிகப்படியான உணவு மனிதனுக்குப் பல பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

மனித வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் உணவினை எவ்வளவு உட்கொள்ள வேண்டும், எது சத்தான உணவு? ஆரோக்கிய வாழ்விற்கு எவ்வளவு உண்ண வேண்டும் இந்தத் தெளிவினை நாம் பெற வேண்டுமானால் ஒரு ஊட்டச்சத்து நிபுணரை நாம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
இந்த ஊட்டச்சத்து நிபுணர் படிப்புக்கு 12ஆம் வகுப்பில் என்ன பிரிவு எடுத்துப் படிக்க வேண்டும், இதற்கான தகுதிகள் என்னென்ன, ஊட்டச்சத்து நிபுணர் படித்த பிறகு அரசாங்க வேலைவாய்ப்புகள் என்ன, தனியார்துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் என்ன என்பதைத் தனியார் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் நித்யா விளக்குகிறார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், “தற்போதைய காலகட்டத்தில் மாணவர்கள் அதிகம் விரும்பும் பிரிவாக ஊட்டச்சத்து நிபுணருக்கான பாடப்பிரிவு உள்ளது. அறிவியல் மற்றும் கணினி அறிவியல் பாடப் பிரிவினை எடுத்துப்படிக்கும் மாணவர்கள் அதிகம் விரும்பும் பாடமாக ஊட்டச்சத்து நிபுணர் பாடப்பிரிவு உள்ளது.


ஊட்டச்சத்து நிபுணருக்கான பாடப்பிரிவினை மாணவர்கள் தேர்ந்தெடுத்துப் படிப்பதால் மாணவர்களுக்கு அதிகத் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. இந்தப் பிரிவினைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் மாணவர்கள் தானும் தன்னை சார்ந்தவர்களும் வயது மற்றும் உடல் எடை ஏற்ப எவ்வளவு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ன உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்கின்றனர் மற்றும் அதைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் மாணவர்கள் இந்த துறை தான் என்று அல்லாமல் பல துறைகளில் பணி புரிவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஊட்டச்சத்து நிபுணர் படிப்புடன் ஆசிரியர் படிப்பு படித்தால் ஆசிரியராகப் பணிபுரியலாம். இவர்கள் ராணுவப் பள்ளியில் கூட பணி புரிவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணி புரிவதற்குக் கூட வாய்ப்புகள் உள்ளது அதற்கான தகுதிகள் இருந்தால்.


இதேபோன்று வேளாண் துறைகளில் ஆராய்ச்சி பிரிவில் பல்வேறு விதைகளைப் பதப்படுத்துவது மற்றும் புதிய விதைகளைக் கண்டறிந்து ஆராய்ச்சி செய்வது மேலும் மருத்துவத்துறையில் ஊட்டச்சத்து நிபுணராக நோயாளிகளுக்கு எந்தெந்த உணவு உட்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கும் பணியினையும் மேற்கொள்ளலாம்.

மேலும் ஊட்டச்சத்து நிபுணர்கள் விளையாட்டு வீரர்களுக்கு ஆலோசனை வழங்குதல், அவர்களுக்கான உணவுகளை அட்டவணைப்படுத்திக் கொடுப்பது, மேலும் உடற்பயிற்சிக் கூடத்தில் உணவுக் கட்டுப்பாட்டு ஆலோசகராக என பலவிதங்களில் பணிபுரியலாம்.
இதேபோன்று அரசாங்க பணி என்று வரும்போது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தில் உணவு தர ஆய்வாளர் பணிக்கும் சேரலாம். இந்தப் பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தேர்வு எழுதி இந்தப் பணியில் சேரலாம்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அலுவலர் மற்றும் அங்கன்வாடி அலுவலர் போன்று பலஅரசுப்பணிகள் ஊட்டச்சத்து நிபுணர் பயின்றோருக்கான வேலைவாய்ப்பாக உள்ளது என அவர் தெரிவித்தார்.


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

College Guidance : உலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்தில் குறைந்த கட்டணத்தில் பட்டப் படிப்பு... விண்ணப்பிக்க முந்துங்கள்...

 தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழ்நாடு அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் முதுகலை பட்டப் படிப்பு (MA. Tamil) மற்றும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்பு (Five Years Integrated Post Graduate M.A. Tamil) மற்றும் தமிழ் முனைவர் பட்ட வகுப்பு (PhD) ஆகியன இந்நிறுவனத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 2024-25ஆம் கல்வியாண்டில் தற்போது ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்ட வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

மேற்கண்ட படிப்பில் பயில விரும்புவோர் சேர்க்கைத் தொடர்பான விதிமுறைகள்/தகவல்கள் மற்றும் விண்ணப்பத்தை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து தெரிந்துக் கொள்ளலாம் அல்லது நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

இருபாலருக்கெனத் தனித்தனியே கட்டணம் இல்லா தங்கும் விடுதி வசதி உள்ளன. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரில் (அ) தபால் மூலம் இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன் இணைத்து இயக்குநர் (கூ.பொ.) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி. சென்னை-600113 (தொலைபேசி 044-22542992) என்ற முகவரியில் 07.06.2024 - வெள்ளிக்கிழமைக்குள் அனுப்ப வேண்டும். மேலும் தகவல்பெற மேற்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் அல்லது நிறுவன வலைத் தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News