தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு 2026-2027ஆம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய இணைப்புக் கட்டணம் தொகை செலுத்த கோருதல் - சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

  

தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு 2026-2027ஆம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய இணைப்புக் கட்டணம் தொகை செலுத்த கோருதல் - சார்ந்து. 15.09.2026க்குள்


மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களைத் தலைவராகவும், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்கள், பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்கள், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் ஆகியோரைத் துணைத் தலைவர்களாகக் கொண்டு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தினுள் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் இயங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தொடக்க / நடுநிலை /உயர்நிலை / மேல்நிலை / மெட்ரிக்குலேஷன் மற்றும் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து இணைப்புக் கட்டணத் தொகையினை முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலம் பெற்று பெறப்பட்டத் தொகையை ஒரே வங்கி வரைவாக தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

எனவே, மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) தங்கள் ஆளுகையின் கீழுள்ள அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலிருந்து கீழ்க்கண்டவாறு 2026-2027ஆம் ஆண்டிற்குரிய இணைப்புக்கட்டணத் தொகையினை சென்னையில் (Payable at Chennai) "The Secretary & Treasurer, Tamilnadu State Parent Teacher Association, Chennai-6" 15.09.2026-க்குள் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

1032761


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment