சொந்த வீட்டிலேயே வாடகைக்கு இருந்து கொண்டு வரி மிச்சப்படுத்தும் ஸ்மார்ட் யுக்திக்கு வருமான வரித்துறை இப்போது ஒரு பெரிய செக் வைத்துள்ளது எனலாம். ஏனெனில் இதுவரை அப்பாவிடமோ அல்லது மனைவியிடமோ ஒரு வாடகை ஒப்பந்தம் போட்டு, ஹெச்.ஆர்.ஏ (HRA) கிளைம் செய்து வந்த காலம் மெல்ல மாறி வருகிறது.
ஏப்ரல் 2026 முதல் அமலுக்கு வரவுள்ள புதிய வரைவு விதிகள் படி, நீங்கள் யாருக்கு வாடகை கொடுக்கிறீர்கள் என்பதை மட்டும் சொன்னால் போதாது. அந்த வீட்டு உரிமையாளருக்கும், உங்களுக்கும் என்ன உறவுமுறை என்பதையும் இனி வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இதற்கென படிவம் 124 (Form 124) என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போலி வாடகை ரசீதுகளை ஒழித்து கட்டவும், வரி ஏய்ப்பை தடுக்கவும் வரித்துறை கையில் எடுத்துள்ள இந்த ஆயுதம், நேர்மையாக வரி செலுத்துவோருக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? 2026-ல் உங்கள் ஹெச்.ஆர்.ஏ கிளைம் தள்ளுபடி ஆகாமல் இருக்க, நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய மாற்றங்கள் என்ன? விரிவாகப் பார்ப்போம்.
புதிய வரைவு விதி 205 பெற்றோருக்கோ, துணைவருக்கோ அல்லது உறவினர்களுக்கோ வாடகை கொடுப்பதை தடை செய்யவில்லை. இது ஒரு சட்டப்பூர்வ வரி சேமிப்பு திட்டமே. ஆனால் அந்த வாடகை ஒப்பந்தம் உண்மையானதாக இருக்க வேண்டும். இதற்கு முன்பெல்லாம் வீட்டு உரிமையாளரின் பான் எண்ணை மட்டும் கொடுத்தால் போதுமானதாக இருந்தது. ஆனால் இனி வாடகை வரம்பானது ஒரு குறிப்பிட்ட வரம்பை தாண்டினால், வீட்டு உரிமையாளர் உங்களுக்கு என்ன உறவு என்பதையும், படிவம் 12BA மூலம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இது வரி ஏய்ப்பை தடுக்க கொண்டு வரப்பட்ட திட்டமே தவிர, தடை அல்ல.
உதாரணத்திற்கு 36 வயதான அனிதா என்பவர், தனது தாய்க்கு சொந்தமான சென்னை வீட்டில் வசிக்கிறார். முறையான வாடகை ஒப்பந்தம் செய்துள்ளார். மாதம் 20,000 வாடகையை வங்கி கணக்கு மூலம் செலுத்துகிறார். தாயாரோ தனது மகளிடம் இருந்து வரும் வாடகையைத் தனது வருமான வரித் தாக்கலில் வருமானம் என காட்டுகிறார். அனிதா தனது தாயுடனான உறவை வெளிப்படுத்தினாலும், அனைத்து ஆவணங்களும் உண்மையாக இருப்பதால், அவரது ஹெச். ஆர்.ஏ கிளைம் கோரிக்கை நிராகரிக்கப்படாது.
புதிய விதிகளின் படி அனிதா 12BA - தனது வீட்டு உரிமையாளர் தாய் என்ற விவரத்தை குறிப்பிட வேண்டும். நீங்களும் உங்கள் உறவினர்களுக்கு வாடகை கொடுக்க திட்டமிட்டால், கட்டாயம் வாடகை ஒப்பந்தம் இருக்க வேண்டும். வாடகையை வங்கி பரிமாற்றம் மூலம் செய்தல், வீட்டு உரிமையாளரின் வருமான வரி தாக்கல் இருந்தால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. புதிய விதிமுறைகள் உறவினர்களுக்கிடையிலான பணப்பரிமாற்றத்தை முடக்கவில்லை, மாறாக அதைத் தெளிவுபடுத்துகின்றன. ஆக உண்மையான வாடகை பரிமாற்றங்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது.
புதிய வரைவு விதிகளின் சாராம்சம் மிகவும் தெளிவானது. நீங்கள் முறையாக வாடகை செலுத்தினால் உங்களுக்கு பயமில்லை. ஆனால், வரியை சேமிக்க திட்டமிட்டால் கடும் அபராதம் காத்திருக்கிறது. வருமான வரிச் சட்டம் 270A-ன் படி, தவறான தகவல்களை அளித்து வரி ஏய்ப்பு செய்தால், அதாவது குறைவான வருமானம் காட்டினால் செலுத்த வேண்டிய வரி தொகையில் 50% அபராதம். அதுவே போலி ரசீதுகள், பணப்பரிமாற்றம் இல்லாத வாடகை ஒப்பந்தங்கள் போன்ற போலியான ஆவணங்களை சமர்ப்பித்தால், வரித் தொகையில் 200% வரை அபராதம் விதிக்கப்படலாம்.
எவையெல்லாம் ஆபத்தான செயல்கள்?
• உண்மையில் வசிக்காத ஒரு வீட்டிற்கு வாடகை ரசீது சமர்ப்பித்தல்.
• பணத்தை அனுப்பி விட்டு, அதை மீண்டும் ரகசியமாகத் திரும்ப பெறுதல்.
• முறையான வாடகை ஒப்பந்தம் அல்லது வங்கிப் பரிமாற்றம் இல்லாமல் இருப்பது.
• நீங்கள் கொடுக்கும் வாடகையை, வாங்கும் உரிமையாளர் (பெற்றோர்/உறவினர்) தனது வரித் தாக்கலில் காட்டாமல் இருப்பது.
நிபுணர்கள் கூறுவது என்ன?
உண்மையில் வாடகை முறையாக செலுத்தப்பட்டு, சரியான ஆவணங்கள் இருந்து, அது சந்தை நிலவரப்படி இருந்தால், அந்த ஹெச்.ஆர்.ஏ (HRA) சலுகையை சட்டப்படி யாரும் தடுக்க முடியாது. இந்த விதி குடும்ப உறுப்பினர்களுக்குள் நடக்கும் வாடகை ஒப்பந்தங்களை ஒழிப்பதற்காக கொண்டு வரப்படவில்லை. மாறாக யார் யாருக்கு பணம் கொடுக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்தவும், வெறும் வாய்மொழி பேச்சாக இல்லாமல், ஆவண ரீதியாகப் பரிமாற்றங்களை உறுதிப்படுத்தவும் வேண்டும். அப்படி இருந்து விட்டால் அது உங்கள் பெற்றோரோ அல்லது உறவினரோ அல்லது துணையோ யாராக இருந்தாலும், கவலைப்படத் தேவையில்லை.
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க
0 Comments:
Post a Comment