ஆவடி கனரக தொழிற்சாலையில் ஜூனியர் மேனேஜர் வேலை; டிகிரி போதும் - அக்டோபர் 11-ம் வரை விண்ணப்பிக்கலாம்

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


ஆவடி தொழிற்சாலை
ஆவடியை தலைமை இடமாக கொண்டு ராணுவ வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனம் (AVNL) செயல்படுகிறது. மொத்தம் 5 உற்பத்தில் யூனிட்களில் சுமார் 12,000 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். ராணுவத்தின் T-72, T-90, MBT அர்ஜூன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாகனங்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது இதன் கனரக வாகன தொழிற்சாலையில் Integrated Material Management பிரிவில் உள்ள 20 ஜூனியர் மேனேஜர் பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது.

பணியின் விவரங்கள்

பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்

கனரக வாகன தொழிற்சாலை ஜூனியர் மேனேஜர் 20

இவை பொதுப்பிரிவு - 10, ஒபிசி - 5, எஸ்சி - 3, எஸ்டி - 1, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் - 1 என நிரப்பப்படுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம். மத்திய அரசு விதிமுறைகளின்படி, வயது வரம்பில் தளர்வு உள்ளது.

கல்வித்தகுதி

ஜூனியர் மேனேஜர் பதவிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பொறியியல்/ தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பு முதல் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் அல்லாத ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் 2 ஆண்டு எம்பிஏ முடித்திருக்க வேண்டும். ஏதெனும் ஒரு பிரிவில் எம்பிஏ தேர்ச்சி போதுமானது.

சம்பள விவரம்
ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் உள்ள இப்பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.30,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செய்யப்படும் முறை

இப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படும் காரணத்தினால், விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணல் மூலம் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதார்களின் கல்வித்தகுதியில் 85 சதவீதம், நேர்காணலில் 15 சதவீத மதிப்பெண்கள் என வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் நபர்கள் 1 வருடத்திற்கு பணியமர்த்தப்படுவார்கள். தேர்வு குழு நிர்ணம் செய்வதே இறுதி முடிவாகும். தெரிவு செய்யப்பட்டவர்கள் பட்டியல் இணையதளத்தில் வெளியிட்பட்டு, நேர்காணல் அழைப்பு கடிதம் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள் https://ddpdoo.gov.in/ என்ற இணையதளத்தில் இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து, சாதரண தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். இதற்கு கட்டணமாக ரூ.300 SBI Collect => PSU (Public Sector Undertaking) மூலம் ஆன்லைன் வழியாக நிறுவனத்தை தேர்வு செய்து செலுத்த வேண்டும். விண்ணப்பத்துடன் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதையும் இணைக்க வேண்டும். விண்ணப்பித்து கவர் மீது பதவியின் பெயர் மற்றும் Post Bag No. 01 என்பதை குறிப்பிட வேண்டும். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

அனுப்ப வேண்டிய முகவரி
Chief General Manager,
Heavy Vehicles Factory, Avadi, Chennai – 600 054

முக்கிய நாட்கள்

விவரம்தேதிகள்
தபால் சென்றடைய வேண்டிய கடைசி நாள்11.10.2025
நேர்காணல்பின்னர் அறிவிக்கப்படும்

விண்ணப்பதார்களின் முழுமையான நிரப்பப்படாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும். தேவையான ஆவணங்கள் இணைக்கப்படாத விண்ணப்பமும் நிராகரிக்கப்படும். எனவே, வயது, கல்வித்தகுதி, அனுபவம், தொடர்பு விவரங்கள் ஆகியவற்றை முறையாக அளிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment