Search

ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் 320 காலிப்பணியிடங்கள்: உடனே விண்ணப்பியுங்கள்

 பொதுத்துறை நிறுவனமான ஆவடி  கனரக வாகன தொழிற்சாலை நிர்வாகம் காலியாக உள்ள பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 320 தொழில்பழகுனர் (Apprentices) பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் மட்டுமே இப்பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.   ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பணியிடங்கள் பற்றிய விவரங்கள்:

பட்டதாரி தொழிற்பழகுநர் (Graduate Apprentices) பணியின் கீழ் 110 இடங்களும் , பட்டய படிப்பு தொழிற்பழகுநர் (Technician (Diploma) Apprentices) பணியின் கீழ்  110 இடங்களும்,பொறியியல் சாராத பட்டதாரி தொழிற்பழகுநர் (Non Engineering Graduate Apprentices  ) பணியின் கீழ் 100 இடங்களும் நிரப்பப்பட உள்ளது.

2019, 2020, 2021, 2022 மற்றும் 2023  ஆகிய வருடங்களில் தொடர்புடைய துறைகளில் பட்டய படிப்பு/ பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்படும் முறை: அந்தந்த பதவிகளுக்கு அறிவிக்கப்பட்ட கல்வித் தகுதியில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் உத்தேச இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். எழுத்து, வாய்மொழி போன்ற எந்தவித தேர்வும் நடத்தப்படாது. எனவே, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பபதாரர் கல்வி தொடர்பான அனைத்து விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

பயிற்சி காலம்: ஓராண்டு.

அரசு அறிவித்த நெறிமுறைகளின் படி, பயிற்சி பெறுபவர்களுக்கு மாதாந்திர ஊதியம் அளிக்கப்படும்.

விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.  portal.mhrdnats.gov.in , nats.education.gov.in   என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.  விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் 16/12/2023 ஆகும். ஆள்சேர்க்கை அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்



🔻🔻🔻

0 Comments:

Post a Comment