Search

திண்டுக்கல்லில் குதூகலமாக குளியல் போட குதிரை குளிப்பாட்டி நீர்வீழ்ச்சி ஓடை..! எங்க இருக்குன்னு தெரியுமா?

 திண்டுக்கல்லில் வெள்ளிமலை நீர்வீழ்ச்சி போன்ற எத்தனையோ நீர்வீழ்ச்சிகள் இருந்தாலும் எளிமையான முறையில் இயற்கை சுற்றுச்சூழலில் பாதுகாப்பான முறையில் சிறிய அளவிலான நீர்வீழ்ச்சியில் குத்தாட்டம் போட்டு குளிக்கும் குதூகலம் கிடைப்பது எளிதில்லை.

இப்படிப்பட்ட சிறிய அளவிலான நீர்வீழ்ச்சி ஓடை எங்க இருக்குன்னு பார்த்தோம்னா திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் அணையில் தான் அமைந்திருக்கிறது. இந்த காமராஜர் அணையின் கரையோரமாக மலையை நோக்கி 2 கிலோ மீட்டர் கடந்து வந்த பிறகு மலையிலிருந்து வரும் குதிரை குளிப்பாட்டி ஓடை நீர்வீழ்ச்சிதான் இந்த குதூகலம் மிக்க இடம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு இந்த இடம் இருப்பது தெரியாது. ஏனென்றால் ஆத்தூர் காமராஜர் அணையின் கரையோரமாக வந்து ஓடையை கடந்து , சிறிய புதர் போல காட்சியளிக்கும் தட்டைகளின் நடுவே சிறிய வழித்தடம் ஒன்று இருக்கும் அதனை கடந்து வந்தால் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கன்னிமார் கோவில் அமைந்திருக்கும்.

திண்டுக்கல்லில் வெள்ளிமலை நீர்வீழ்ச்சி போன்ற எத்தனையோ நீர்வீழ்ச்சிகள் இருந்தாலும் எளிமையான முறையில் இயற்கை சுற்றுச்சூழலில் பாதுகாப்பான முறையில் சிறிய அளவிலான நீர்வீழ்ச்சியில் குத்தாட்டம் போட்டு குளிக்கும் குதூகலம் கிடைப்பது எளிதில்லை.

இப்படிப்பட்ட சிறிய அளவிலான நீர்வீழ்ச்சி ஓடை எங்க இருக்குன்னு பார்த்தோம்னா திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் அணையில் தான் அமைந்திருக்கிறது. இந்த காமராஜர் அணையின் கரையோரமாக மலையை நோக்கி 2 கிலோ மீட்டர் கடந்து வந்த பிறகு மலையிலிருந்து வரும் குதிரை குளிப்பாட்டி ஓடை நீர்வீழ்ச்சிதான் இந்த குதூகலம் மிக்க இடம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு இந்த இடம் இருப்பது தெரியாது. ஏனென்றால் ஆத்தூர் காமராஜர் அணையின் கரையோரமாக வந்து ஓடையை கடந்து , சிறிய புதர் போல காட்சியளிக்கும் தட்டைகளின் நடுவே சிறிய வழித்தடம் ஒன்று இருக்கும் அதனை கடந்து வந்தால் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கன்னிமார் கோவில் அமைந்திருக்கும்.

இந்தக் கன்னிமார் கோவிலில் சுற்றுவட்டாரத்தில் விவசாயம் செய்யும் பொதுமக்கள் விசேஷ நாட்களில் பொங்கல் வைத்து பூஜை செய்து வழிபாடு நடத்துவது வழக்கமான ஒன்று. இவ்வாறு கோவிலுக்கு தரிசனம் செய்ய வருபவர்களும் இந்த குதிரை குளிப்பாட்டி நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படும் இந்த ஓடையில் குளித்துவிட்டு தான் கோவிலில் வந்து பூஜை செய்து வழிபடுவதாக கூறுகின்றனர்.

மேலும் இந்த குதிரை குளிப்பாட்டி நீர்வீழ்ச்சி ஓடை மலைகளின் நடுவே அமைந்திருப்பதால் வாரத்திற்கு நான்கு ஐந்து முறையாவது தினமும் சிறிதளவாவது மழை பெய்து கொண்டே நான் இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

இதுகுறித்து திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் வேலை பார்க்கும் மேட்டுப்பட்டி சேர்ந்த சரவணன் கூறுகையில், “இந்தக் இந்தக் குதிரை குளிப்பாட்டி நீர்வீழ்ச்சி என்பது ஆபத்து விளைவிக்கும் இடத்தில் இருப்பதால் இந்த குதிரை குளிப்பாட்டி நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் ஓடையை குதிரை குளிப்பாட்டி இடம் என்று அழைப்போம்.

இந்த நீர்வீழ்ச்சி இங்கு இருப்பது திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் தாலுகாவில் உள்ள காமராஜர் அணையின் கரையோரத்தில் இருப்பது பெரும்பாலும் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, இது ஒரு அருமையான பொழுதுபோக்கு இடமாக திகழ்கிறது, உள்ளூரிலே இருக்கும் பல்வேறு பொழுதுபோக்கு இடங்களில் இதுவும் ஒன்று.

எங்களுக்கு இன்று விடுமுறை நாட்கள் என்பதால் நாங்கள் ஒரு 15 நபர்கள் ஒன்றாக கூடி இங்கு வந்து குளித்து குதூகலமாக பொழுது கழித்துக் கொண்டிருக்கிறோம், இது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்கள் தரும் இடங்களை அனைவரும் பார்த்து மகிழ வேண்டும்” என்று தெரிவித்தார்.

0 Comments:

Post a Comment