அரசு கல்லூரிகளில் 574 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


dinamani%2F2025-03-02%2Ff04wx5th%2Ftngov

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள கௌரவ விரிவுரைவாளர் பணிகளுக்கு 574 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் கௌரவ விரிவுரைவாளர் பணி


தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள கௌரவ விரிவுரைவாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இது பற்றிய விபரம் வருமாறு:


பணி: Guest Lecturers


காலியிடங்கள்: 574


சம்பளம்: மாதம் ரூ.25,000


தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பிரிவில் குறைந்தது 55 சதவீதம் மதிப்பெண்களுடன் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 50 சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.


மேலும் சம்மந்தப்பட்ட பாடத்தில் நெட், செட் தேர்வு எழுதி தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும் அல்லது யுஜிசி விதிமுறைப்படி பிஎச்.டி முடித்திருக்க வேண்டும்.


வயது வரம்பு: 1.7.2025 தேதியின் படி 57-க்குள் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: தமிழக கல்லூரி கல்வி இயக்குநரகத்தால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வு, முதுநிலை பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு பற்றிய விபரம் மின்னஞ்சலில் தெரிவிக்கப்படும்.


விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு ரூ.100 மட்டும். இதர பிரிவினர்களுக்கு ரூ.200. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: www.tngasa.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 4.8.2025


மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

இனி பள்ளிகளுக்கு மே மாதம் லீவு இல்லை... கோடை விடுமுறையில் மாற்றம்... கேரள அரசு முடிவு?

  Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)



பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு முடிந்ததும் ஆண்டு விடுமுறை விடப்படுகிறது. வழக்கமாக கோடைக்கால மாதமான ஏப்ரல், மே மாதங்களில் விடப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் இம்மாதங்களில்தான் ஆண்டு விடுமுறை விடப்படுகிறது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் கோடைகாலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகி வருவதால் விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி திறக்கும் போது பல சிக்கல்கள் எழுகின்றன.

இந்த நிலையில் பள்ளிகளின் ஆண்டு விடுமுறையை ஏப்ரல் - மே மாதங்களுக்கு பதிலாக வேறு மாதத்திற்கு மாற்ற கேரள மாநில அரசு திட்டமிட்டு வருகிறது. ஏப்ரல் - மே மாதங்களுக்கு பதிலாக ஜூன் - ஜூலை மாதத்திற்கு மாற்ற பரிசீலித்து வருவதாக அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வரும் நிலையில், அம்மாநில கல்வி அமைச்சர் சிவன்குட்டி இதுதொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், "கேரளாவில் பள்ளி ஆண்டு விடுமுறையானது இப்போது ஏப்ரல் மே மாதங்களில் விடப்படுகிறது. இந்த காலகட்டத்தில் நிலவும் வெப்பமான சூழல் மாணவர்களுக்கு சிரமத்தைத் தருகிறது.

அதேநேரம் ஜூன், ஜூலை மாதங்களில் மாநிலத்தில் மழைப்பொழிவு மாதம் என்பதால் அந்த காலங்களில் பள்ளிகளுக்கு மழையின் காரணமாக விடுமுறை அளிக்க வேண்டியிருக்கிறது. இதனால் கல்வி தடைபடுகிறது.

எனவேதான் பள்ளி ஆண்டு விடுமுறையை ஏப்ரல் - மே மாதங்களுக்கு பதிலாக மழை பெய்யும் ஜூன் - ஜூலை மாதங்களுக்கு மாற்றுவது குறித்து பொது விவாதம் துவங்கப்பட்டுள்ளது. அதேநேரம், மே - ஜூன் மாதமும் பரிசீலனையில் உள்ளது. பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை இந்த விஷயத்தில் தெரிவிக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

முதன் முறையாக வேலைக்கு போறீங்களா.? EPFO- மூலம் ரூ.15000 ஊக்கத்தொகை உங்களுக்கு கன்பார்ம்!!

   Education News (கல்விச் செய்திகள்)
    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
 முதன் முறையாக வேலைக்கு போறீங்களா.? EPFO- மூலம் ரூ.15000 ஊக்கத்தொகை உங்களுக்கு கன்பார்ம்!!


இத்திட்டத்திற்காக ரூ.99,446 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1, 2025 முதல் ஜூலை 31, 2027 வரையிலான காலகட்டத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.


இது, வேலைவாய்ப்பு உருவாக்குதல், வேலை பெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துதல் மற்றும் சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டுள்ளது. "Employment Linked Incentive (ELI) Scheme" என்ற ஒரு புதிய திட்டத்தை ஜூலை 1, 2025 அன்று அறிவித்துள்ளது. இந்தத் திட்டம், பிரதமர் நரேந்திர மோடியின் "பிரதம மந்திரி ரோஜ்கர் மேளா" திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இத்திட்டத்திற்காக ரூ.99,446 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1, 2025 முதல் ஜூலை 31, 2027 வரையிலான காலகட்டத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.ELI திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:இந்த ELI திட்டம், இரு முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது.



முதல்முறையாக EPFO-வில் பதிவுசெய்து, மாதத்திற்கு ₹1 லட்சத்திற்குள் சம்பாதிக்கும் புதிய ஊழியர்களுக்கு ரூ.15000 வழங்கப்படும். பணியாளர் EPFO-வில் சேர்ந்த பிறகு, தொடர்ந்து 6 மாதங்கள் வேலை செய்த பின்னர் முதல் தவனை வழங்கப்படும். 12 மாதங்கள் வேலை செய்த பின்னர், ஒரு கட்டாய நிதி கல்வியறிவு படிப்பை வெற்றிகரமாக முடித்த பிறகு வழங்கப்படும்.

இந்தத் திட்டம் புதிய ஊழியர்களை முறைசார்ந்த வேலைவாய்ப்புக்குள் கொண்டு வந்து, அவர்களுக்கு ஆரம்பகால நிதி ஊக்கத்தை அளிப்பதையும், நிதி சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 1.92 கோடி புதிய ஊழியர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

1st Standard - Term 1 Exam - Time Table 2025

 

வகுப்பு  முதல் பருவ கால அட்டவணை 2025 - 2026

  • How to Download Quarterly Exam 2025 Question Papers | Step by Step Guide - PDF Download Here


Date & Day

Class - 1

 

Time

10:00 – 12:00

 

20.09.2024

Friday

 

Tamil

 

23.09.2024
Best online courses

Monday

 

English

 

24.09.2024

Tuesday

 

 

Language

(Minority)

 

25.09.2024

Wednesday

 

Maths

 


 

6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான உடற்கல்வி பாடப்புத்தகம் வெளியிடப்பட்டது ஏன்?

 44440726-untitled-6

மாணவர்கள் தேசிய, சர்வதேச அளவில் நடத்தப்பெறும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்க இந்த பாடத்திட்டம் வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு உடற்கல்வியை கற்பிப்பதற்கான பாடப்புத்தகத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் விளையாட்டுப் போட்டிகளை கற்றுத் தருவதற்கும், உடற்கல்விக்கும் பாடப்புத்தகங்கள் இல்லை என உடற்கல்வி ஆசிரியர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். மேலும் 2017-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் பாடப்புத்தகங்கள் மாற்றி அமைக்கப்பட்டபோது, உடற்கல்விக்கான பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு, கருத்துகள் பெறப்பட்டது. அதன் பின்னர் பாடப்புத்தகங்கள் வரும் என உடற்கல்வி ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் 2024-25ம் கல்வியாண்டு வரையில் உடற்கல்விக்கு என தனியாக பாடப்புத்தகம் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் 2025-ம் ஆண்டில் புதிய பாடத்திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு உடற்கல்வியை எவ்வாறு சொல்லிக் கொடுப்பது என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடத்தப்பெறும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கவும், பதக்கங்களை வெல்லவும், சாதனை உணர்வை மேம்படுத்தவும், தங்களின் உடல் வலிமையை எண்ணிப் பெருமை கொள்ளவும் இந்த பாடத்திட்டம் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உடற்கல்வியை கற்றுத் தருவதற்கு, உடலைப் பற்றிய கல்வியறிவு, விளையாட்டுக்கல்வி, பாதுகாப்புக்கல்வி ஆகியவற்றை தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர்கள் விளையாட்டுகள், பயிற்சிகள், ஆசனங்கள் மற்றும் மூச்சுப் பயிற்சிகளில் மாணவர்களை ஈடுப்படுத்தும் போது, அவர்களின் உடல்நிலை, சூழல் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்; பின்னர் செயல்பாடுகளை கற்றுக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தகவலுடன், விளையாட்டுகளை கற்றுத்தரும் முறைகள் இந்த பாடத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


6 - 10th Physical Education Text Book - Download here

11 & 12th Physical Education Text Book - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான உடற்கல்வி பாடப்புத்தகம் வெளியீடு!

 IMG_20250803_204102

11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான உடற்கல்வி பாடப்புத்தகம் (ஆங்கில வழி) வெளியீடு!

👇👇👇👇

11 & 12th PET New Textbook.pdf

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

New SG Teachers Training - Day Wise Timetable & Schedule

 புதிதாக நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் பயிற்சி அட்டவணை

New%20SG%20Teachers%20Training%20-%20Day%20Wise%20Schedule%20copy

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

Mutual Transfer Application கொடுக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை

 மனமொத்த மாறுதல் விண்ணப்பம் அளிக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை

Mutual Transfer Application கொடுக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை

1) ஒன்றியத்திற்குள் மனமொத்த மாறுதல் எனில் ஒரே படிவத்தில் இருவரின் விவரம் முழுவதும் பூர்த்தி செய்து தனிநபர்கள் கையொப்பம் இட்டு தலைமை ஆசிரியர்களிடம் கையொப்பம் பெற்று மூன்று காப்பிகள் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்

2) ஒன்றியம் விட்டு ஒன்றியம் மனமொத்த மாறுதல் எனில் ஒரே படிவத்தில் இருவரின் விவரம் முழுவதும் பூர்த்தி செய்து தனிநபர்கள் கையொப்பம் இட்டு தலைமை ஆசிரியர்கள் கையொப்பம் பெற்று அந்தந்த வட்டாரக்கல்வி அலுவலர்களிடம் மொத்தம் 6 படிவத்தில் கையொப்பம் பெற்று 3 காப்பிகளை தேவையான இணைப்புகளுடன் அவரவரின் வட்டாரக்கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!! நன்றி

எண்ணும் எழுத்தும் திட்ட முன்னேற்றம் - ஆய்வு வழிமுறைகள் வெளியீடு.

          Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250802_094759

எண்ணும் எழுத்தும் திட்டம் - 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் அடிப்படைக் கற்றலை மேம்படுத்துதல் - கற்றல் இடைவெளி குறைப்பு மாணவர் முன்னேற்றக் கண்காணிப்பு , மாணவர் பயிற்சி புத்தகம் , ஆசிரியர் கையேடு பயன்பாடு , பள்ளிப் பார்வை மற்றும் செயல்திறன் குறியீடுகள் ( KPIs ) ஆகிய கல்விசார் செயல்பாடுகள் செம்மையாக நடைபெறும் பொருட்டு கூர்ந்தாய்வு செய்தல் - சார்நிலை அலுவலர்கள் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


EE Inspection Guidelines - DEE Proceedings - Download here


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

          Education News (கல்விச் செய்திகள்)

Dr. Radhakrishnan Award-Registrstion - Extension upto 06.08.2025

 2025 ஆம் ஆண்டிற்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்காக 386 ஆசிரியர்களை தெரிவு செய்யும் பொருட்டு EMIS இணையதளம் வாயிலாக 20.07.2025 முதல் 03.08.2025 வரை இணையவழி விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. மேலும் பார்வை 3 ல் காணும் கடிதப்படி அவ்விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது.


 இந்நிலையில் தற்போது வரை EMIS இணையதளத்தில் மிகவும் குறைவான விண்ணப்பங்கள் முழுமையான அளவில் எண்ணிக்கையிலேயே செய்யப்பட்டுள்ளன. எனவே தலைமையாசிரியர்கள் மற்றும் பதிவேற்றம் ஆசிரியர்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க 06.08.2025 வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது.


மேலும் இவ்விவரத்தினை அனைத்து சார் நிலை அலுவலர்களும் தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கு தெரிவித்து சுற்றறிக்கை அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.

IMG-20250802-WA0013


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் முன்னேற்றம் எப்படி? - ஆய்வுக்கு தொடக்கக் கல்வித் துறை உத்தரவு

  Education News (கல்விச் செய்திகள்)

1371679

அரசுப் பள்ளிகளில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென தொடக்கக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.


இது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் அடிப்படை கற்றலை மேம்படுத்தும் நோக்கில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.


இதுதவிர மாநில அடைவு ஆய்வு மற்றும் அடிப்படை கற்றல் நிலை மதிப்பீடுகளின் அடிப்படையில் கற்றல் இடைவெளியை குறித்து, ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் வகுப்பு நிலைக்கு ஏற்ப தமிழ், ஆங்கிலம் வாசித்தல் திறன் மற்றும் அடிப்படை கணிதத் திறன்களை முழுமையாக கற்றுக் கொள்வதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


இந்த திட்டத்தின் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக்காக கண்காணிப்பு அதிகாரிகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். அவ்வாறு பள்ளிகளில் கல்வி சார்ந்த செயல்பாடுகளை ஆய்வு மேற்கொள்ளும் போது வகுப்பறை நடைமுறைகள், ஆசிரியர்கள் மாணவர்கள் வேலை புத்தகம், ஆசிரியர்கள் வேலை புத்தகம் பயன்படுத்தும் விதம், மாணவர்களின் பங்கேற்பு நிலை, தனிப்பட்ட கற்றல் வழிகாட்டல் வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யவேண்டும்.


மேலும், மாதாந்திர மற்றும் காலாண்டு மதிப்பீடுகள் மூலம் மாணவர்களின் முன்னேற்றம் பதிவு செய்யப்பட வேண்டும். பயிற்சி மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா என்பதையும் உறுதிசெய்ய வேண்டும். எனவே, தங்கள் எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் மாதாந்திர அடிப்படையில் பயணத் திட்டங்களை தயாரித்து ஆய்வு செய்யவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

Guest Lecturer Jobs: ரூ.25,000 சம்பளத்தில் அரசு வேலை!! முதுகலை பட்டதாரிகளே - வாய்ப்பை தவற விடாதீர்கள்...

 தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில், விரைவில் கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.25,000 சம்பளத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் வாய்ப்பு பெறவுள்ளனர்.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதோடு Ph.D, அல்லது UGC NET / SLET / SET ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும், பொதுப் பிரிவினருக்கு 55% மதிப்பெண்கள், மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 50% மதிப்பெண்கள் பெற்றிருப்பது போதுமானது.


வயது வரம்பு 01.07.2025 தேதியின்படி அதிகபட்சம் 57 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வுகள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில், மற்றும் கல்வித் தகுதிகளை கருத்தில் கொண்டு நடைபெறும். விண்ணப்பதாரர்கள் முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து, அதற்கேற்ப https://tngasa.org/ என்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் ரூ.200 ஆகும். SC/ST பிரிவினருக்கு ரூ.100 மட்டுமே கட்டணமாகவே செலுத்த வேண்டும். கட்டணம் ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க துவங்கிய தேதி 21.07.2025 ஆகும். கடைசி தேதி 04.08.2025 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் பொழுது, விண்ணப்பதாரர்கள் தங்களுக்குப் அருகாமை மண்டலங்களையும், அதற்குள் அதிகபட்சமாக 3 மாவட்டங்களையும் தேர்வு செய்யலாம். சென்னை, கோயம்புத்தூர், மதுரை, தர்மபுரி, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்ஆகிய மண்டலங்களில் உள்ள காலிப் பணியிடங்களை ‘Vacancy Positions’ பகுதியில் சென்று சரிபார்க்கலாம்

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter

மத்திய அரசு பணியில் சேர பயிற்சி வகுப்புகள்!! தஞ்சை இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க...

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக TNPSC & TNUSRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் அதிக அளவில் பங்கு பெற்று பயனடைந்து வருகின்றனர்.

தற்போது TNUSRB SI தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் SSC CGL,SSC CHSL, SSC MTS, RRB NTPC, RRB TECHNICIAN பணிக்காலியிட அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களுக்கான ஒன்றிய அரசுப் போட்டித் தேர்வு முகமைகளால் அதிக அளவிலான தேர்வு அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

அதிக அளவிலான தமிழக மாணவர்கள் பயனடையும் வகையில் மத்திய மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் முப்படைகளுக்கான ஆட்சேர்ப்பு போட்டித் தேர்வு முகமைகளால் வெளியிடப்படும் அனைத்து போட்டித் தேர்விற்கும் பொதுவாக உள்ள பாடங்களான பொது அறிவு (வரலாறு, புவியியல், பொருளாதா ரம், அறிவியல், அரசியல் அறிவியல்.) நுண்ணறிவு, திறனறிவு. காரணவியல், மொழி அறிவு (ஆங்கிலம்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு தொடர்ச்சியாக தினமும் பயிற்சி வகுப்புகளை நடத் தினமும் திட திட்டமிடப்பட்டுள்ளது.

இத்தேர்விற்கு தயாராகி வரும் போட்டித் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 30.07.2025 (புதன்கிழமை) முதல் தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை ஆகிய வார நாட்களில் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் நடைபெறவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத் தினை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04362-வழிகாட் 237037 என்ற அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரி வித்துள்ளார்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter

TNPSC தேர்வாளர்களே நோட் பண்ணிகோங்க!! சென்னையில் இலவச பயிற்சி தொடக்கம்...

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வுக்கான (Group 2 & 2A) அறிவிப்பு கடந்த ஜூலை 15-ஆம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 645 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான இந்தத் தேர்வுக்கு, மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.

இத்தேர்வுக்கான தயாரிப்பை இலவசமாக மேற்கொள்ள, சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்  ஆகஸ்ட் 1 முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. இது, அரசு வேலைக்கான தேடல்களில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களுக்கு மிக முக்கியமான வாய்ப்பாகும்.

பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும். இதில் சேர விரும்புவோர், தாங்கள் தேர்வுக்கு விண்ணப்பித்த application form copy, ஆதார் அட்டை நகல், மற்றும் ஒரு பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் கொண்டு நேரிலேயே சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுக வேண்டும்.பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும். இதில் சேர விரும்புவோர், தாங்கள் தேர்வுக்கு விண்ணப்பித்த application form copy, ஆதார் அட்டை நகல், மற்றும் ஒரு பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் கொண்டு நேரிலேயே சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுக வேண்டும்.

இந்த இலவசப் பயிற்சி திட்டம் மூலம், தேர்வுக்கான பாடத்திட்டம், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள், பேச்சுத்திறன் மேம்பாடு, நேர்காணல் பயிற்சி உள்ளிட்ட முழுமையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். பயிற்சியாளர்கள் தேர்வை வெற்றிகரமாக முடிக்க தேவையான ஆயத்தங்களைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு, தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் decgc.coachingclass@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார்.

6 - 8th Slow Learners Action Plan ( Tamil , English, Maths )

         Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250802_141049

6 - 8th Slow Learners Action Plan ( Tamil , English, Maths )

குறிப்பு : 

1 . 6,7 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் மெதுவாகக் கற்பவர்களை அடிப்பண்ட மதிப்பீடு ( Bascine Asaesument ) மலம் தனியாகப் பிரித்தல் வேண்டும் ( தமிழ் ஆங்கிலம் கணிதம் . என ஒவ்வொரு பாடத்திற்கும் 25 மதிப்பெண்கள் கொண்ட விளாத்தான் ] 

2.பின் தங்கியுள்ள மாணவர்கள் தனி வரும்பில் அமரவைக்கப்பட்டு தினமும் தமிழ் ஆங்கிலம் காணிதம் ஆகிய பாடங்களுக்கு ஒவ்வொன்றிற்கும் 1.30 மணி நோய் வீதம் ஒதுக்கப்பட வேண்டும் 

3.பாட அட்டவணையில் மூன்று பாடவேளுைக்கான ஆசிரியர்கள் ஒதுக்கப்பட வேண்டும் . 

4. வகுப்பறையில் , கற்பயர்களை மையப்படுத்திய சூத்தியை எதுவாக்கப்பட வேண்டும் . 

5. தமிழ் பாடத்திற்கு ஒரு தனி குறிப்பேடு மாாமரிக்கப்பட வேண்டும் . 

6. மதியம் இரண்டாவது பாமர்வு ரீஇடைவேளைக்குப் பிறுதி பாட இணைச் செயல்பாடுகளுக்கு முதுக்கப்பட வேண்டும் .

District Action Plan - Tamil - Tiruppur District - Download here

District Action Plan - English - Tiruppur District - Download here

District Action Plan - Maths - Tiruppur District - Download here


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter