அக்சென்ச்சர் நிறுவன வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!

 சென்னை உள்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இயங்கி வரும் முன்னணி மென்பொருள் நிறுவனமான அக்சென்ச்சர் (Accenture) நிறுவனத்தில் அப்ளிகேஷன் சப்போர்ட் இன்ஜினியர் (Application Support Engineer) பணிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இந்தியாவின் முன்னணி .டி நிறுவனங்களில் ஒன்றான அக்சென்ச்சர் நிறுவனம், சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை மற்றும் கோவையில் அக்சென்ச்சர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது

இந்நிலையில் அக்சென்ச்சர் நிறுவனத்தில் அப்ளிகேஷன் சப்போர்ட் இன்ஜினியர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அப்ளிகேஷன் சப்போர்ட் இன்ஜினியர் பணிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது தொடர்புடைய துறையில் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்

மேலும், React.js, Redux, Node.js மற்றும் GrapQl உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். Debugging toolsகளான Chrome DevTools மற்றும் React Developer Tools-ல் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். எச்.டி.எம்.எல் (HTML), சி.எஸ்.எஸ் (CSS) மற்றும் ஜாவா ஸ்கிரிப்ட் (Java Script) உள்ளிட்ட வெப் டெவலப்மென்ட் கான்செப்ட்டுகள் தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் React.js பயன்படுத்தி பிரச்சனைகளை தீர்க்க முடிந்தவராக இருக்க வேண்டும். அதோடு React.js-ல் குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அக்சென்ச்சர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. ஆனால், தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படும் வரை விண்ணப்பங்கள் திறந்திருக்கும். தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னர் விண்ணப்பங்கள் மூடப்படும். எனவே ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

விமானப் படை வேலை வாய்ப்பு; 304 பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் தகுதி; உடனே விண்ணப்பிங்க!

 இந்திய விமானத்துறையில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு அருமையான வாய்ப்பு. விமானப்படைக்கான பொது நுழைவுத் தேர்வுக்கான (AFCAT) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பு AFCAT க்கான இரண்டாம் கட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பாகும். மொத்தம் 304 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. விமானப் படையில் வேலை பார்க்க விரும்புபவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.


பணியிடங்களின் விவரம்

AFCAT Entry 

காலியிடங்களின் எண்ணிக்கை: 304

Flying – 29 (ஆண்கள் – 18, பெண்கள் - 11)

Ground Duty (Technical) – 156 (ஆண்கள் – 124, பெண்கள் - 32)

Ground Duty (Non-Technical) – 119 (ஆண்கள் – 95, பெண்கள் - 24)

வயதுத் தகுதிFlying பணியிடங்களுக்கு 20 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பிற பணியிடங்களுக்கு 20 முதல் 26 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

 

கல்வித் தகுதி : Flying பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும். 12 ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடங்கள் படித்திருக்க வேண்டும்.

Ground Duty (Technical) பணியிடங்களுக்கு ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் அல்லது சம்பந்தப்பட்ட பிரிவுகளில் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 56,100 – 1,77,500

தேர்வு செய்யப்படும் முறைஇந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு https://afcat.cdac.in என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.06.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://afcat.cdac.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.




🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

நீங்க என்ஜினீயரா? சென்னை மெட்ரோவில் பணிபுரிய வாய்ப்பு: உடனே விண்ணப்பிங்க!

 சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் காலியாக உள்ள எக்ஸிகியூடிவ் டிரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் காலியாக உள்ள எக்ஸிகியூடிவ் டிரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு 18 காலி பணியிடங்கள் உள்ளன. பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் போன்ற துறைகளில் 70 சதவீத மதிப்பெண்களுடன் பி.. அல்லது பி.டெக் முடித்து கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்மாதம் ரூ.30 ஆயிரம்

வயது வரம்பு9-6-2024ஆம் தேதியின்படி 28 வயதுக்குள் இருத்தல் வேண்டும். எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறைகேட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்பொதுப்பிரிவினருக்கு ரூ.500, பிற பிரிவினருக்கு ரூ.100. கனரா வங்கி மூலமாக ஆன்லைனில் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்29-07-2024 ஆகும்.



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news