சென்னை ஐ.ஐ.டி.யில் இலவச படிப்பு; பதிவு செய்து விட்டீர்களா?

 ..டி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளை, பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிபுரியும் வல்லுநர்களிடையே ஆக்கப்பூர்வமான சிந்தனையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட கணிதப் பாடத்தின் மூலம்அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்’ (OOBT)க்கான பதிவுகளுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 9 ஆகும். நான்கு நிலைகளுக்கும் OOBT படிப்பு ஆகஸ்ட் 10 அன்று தொடங்கும். இந்தப் பாடத்திட்டம் ஆன்லைனில் அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கும்.

'OOBT'
திட்டமானது நான்கு நிலைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் 10 வாரங்கள் கால இடைவெளியில் பணிகள் மற்றும் தீர்வுகளுடன் நீடிக்கும். ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக், பணிபுரியும் வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களைத் தவிர ஒரு மில்லியன் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களைச் சென்றடைய திட்டமிட்டுள்ளது.

இத்தகைய படிப்புகளின் முக்கியத்துவத்தை விளக்கி, ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “புதுமையான அணுகுமுறை மூலம் நிஜ உலகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில்அவுட் ஆஃப் தி பாக்ஸ்சிந்தனை மிகவும் முக்கியமானது. கணிதத்தில் அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ் சிந்தனையைப் பயன்படுத்துவது படைப்பாற்றலை வளர்க்கிறது மற்றும் நிலையான சூத்திரங்கள் மற்றும் முறைகளுக்கு அப்பால் சிந்திக்க ஊக்குவிக்கிறது, இது புதிய அணுகுமுறைகள் மற்றும் தனித்துவமான தீர்வுகளுக்கு வழிவகுக்கிறதுஎன்றார்.

மேலும் பேராசிரியர். வி. காமகோடி, “தனிமனிதர்கள் அனுமானங்களை கேள்வி கேட்கவும், மாற்று வழிகளை ஆராயவும், பல்வேறு கண்ணோட்டங்களில் தீர்வுகளை மதிப்பிடவும் கற்றுக்கொள்வதால், அவுட்-ஆஃப்-பாக்ஸ் சிந்தனை விமர்சன சிந்தனை திறன்களை வளர்க்கிறது. பல தொழில்நுட்ப மற்றும் அறிவியல் முன்னேற்றங்கள் புதுமையான கணித சிந்தனையின் விளைவாகும். அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ் சிந்தனையை ஊக்குவிப்பது பொறியியல் முதல் மருத்துவ அறிவியல் வரையிலான துறைகளில் முன்னேற்றங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும். நம் நாட்டின் வளர்ச்சிக்கும் செழுமைக்கும் வித்தியாசமாக சிந்திக்க இளம் மனங்களை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானதுஎன்றார்.

ஆர்வமுள்ளவர்கள் இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் உள்ள மையங்களில் நடத்தப்படும் விருப்பத்தேர்வு, நேரில் நடத்தப்பட்ட தேர்வுக்கு பெயரளவிலான கட்டணத்தில் பதிவு செய்யலாம். பயில்வோர் அவர்களின் தேர்வுத் திறனின் அடிப்படையில் ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் வழங்கும் தரச் சான்றிதழைப் பெறுவார்கள். பாடநெறிக்கான நேரில் நடத்தப்பட்ட தேர்வு டிசம்பர் 2024 இல் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ஒரு கொத்து கறிவேப்பிலையில் இத்தனை மருத்துவ குணங்களா..? இனிமேலும் ஒதுக்கி வைக்காதீங்க..!

 கறிவேப்பிலை பல நூற்றாண்டுகளாக நமது சமையலறையில் முக்கிய பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுவையை அதிகரிக்க மட்டுமல்ல, பல்வேறு மருத்துவ குணங்களும் இதில் நிறைந்துள்ளன. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிரம்பிய கருவேப்பிலை நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும் பராமரிக்க உதவுகிறது.

கறிவேப்பிலையை தினமும் உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும். கருவேப்பிலை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு காண்போம்.,

News18

ஊட்டச்சத்து நிறைந்தது:

கறிவேப்பிலையில் வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் ஈ, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவுகிறது.

ஆக்ஸிஜனேற்ற பண்புகள்: கறிவேப்பிலையில் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து உடலைப் பாதுகாக்கவும், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.

செரிமான ஆரோக்கியம்: கறிவேப்பிலையில் கார்மினேடிவ் பண்புகள் உள்ளன, அவை செரிமானத்திற்கு உதவுவது மட்டுமின்றி அமிலத்தன்மையையும் குறைக்கின்றன. மேலும் அஜீரணம் மற்றும் வீக்கம் போன்ற இரைப்பை குடல் பிரச்சனைகளைத் தணிக்கின்றன.

முடி மற்றும் தோல் ஆரோக்கியம்: கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, மயிர்க்கால்களை வலுப்படுத்துகிறது மற்றும் சரும அழகை மேம்படுத்துகிறது.

அழற்சி எதிர்ப்பு விளைவுகள்: கருவேப்பிலை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன, அவை கீல்வாதம் மற்றும் பிற அழற்சி கோளாறுகள் போன்ற அழற்சி பிரச்சனைகளை நிர்வகிக்க உதவும்.

எடை இழப்புக்கு உதவுகிறது: கறிவேப்பிலை குறைந்த கலோரி, அதிக நார்ச்சத்து கொண்ட உணவாகும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அடிக்கடி கறிவேப்பிலையை சாப்பிடலாம். கூடுதலாக, கறிவேப்பிலையின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் பண்புகள் கொழுப்பை எரிப்பதற்கு உதவுகிறது.இதனால் உடலில் தேவையின்றி தேங்கியுள்ள கொழுப்புகள் கரைந்து உடல் எடை சீராகும்.

குறிப்பு :

  • கறிவேப்பிலை பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கினாலும் இதனை அதிகமாக சேர்த்து கொண்டால் ஒரு சில பக்க விளைவுகள் உண்டாகவும் வாய்ப்புகள் உள்ளது. அதுகுறித்து இங்கு காண்போம்.,

  • ஒவ்வாமை : சில நபர்களுக்கு கறிவேப்பிலை ஒவ்வாமையை ஏற்படுத்தும், அதாவது அரிப்பு, சொறி அல்லது வீக்கம் போன்ற அறிகுறிகளை அனுபவிக்கலாம்.

    • வயிறு பிரச்சனை : அதிக அளவு கறிவேப்பிலையை உட்கொள்வது சில நபர்களுக்கு வயிற்று உப்புசம் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

    • நோயாளிகள், மருந்து சாப்பிடுபவர்கள் மருத்துவர் அறிவுரைப்படி கறிவேப்பிலையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ஒரே ஒரு வெற்றிலையில் இத்தனை நன்மைகளா..? சாப்பிட்டதும் வெற்றிலை போட இதுதான் காரணமா..!

 

வெற்றிலைகள் நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை கொண்டுள்ளன. ஆன்மீக விழாக்கள், சடங்குகள், பூஜைகள் முதல் திருமணம் வரை பல மங்களகரமான நிகழ்வுகளில் தவறாமல் இடம்பெறும் முக்கிய ஒன்றாக வெற்றிலை இருக்கிறது.

தற்காலத்தில் பலருக்கும் வெற்றிலையின் மகிமை தெரிவதில்லை. ஆன்மீக நிகழ்வுகள் அல்லது திருமணங்கள் முடிவில் வெற்றிலையை கொடுத்து போட சொன்னால் கூட, ஏதோ தீய விஷயத்தை செய்ய சொல்வது போல விலகி ஓடுவதை பார்க்க முடிகிறது. உண்மையில் ஆயுர்வேதத்தின்படி வெற்றிலைகள் மருத்துவ குணங்கள் நிறைந்தவை மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்க கூடியவை என்ற உண்மை பலருக்கும் தெரிவதில்லை.

சாப்பிட்டு முடித்த பிறகு பொதுவாக வெற்றிலை, பாக்கு போட்டு கொள்வது நம்முடைய முன்னோர்களின் பழக்கம். இன்று கூட பலரும் இந்த பழக்கத்தை கடைபிடித்து பல நன்மைகளை பெறுகிறார்கள். வெற்றிலை மற்றும் பாக்கு இரண்டும் சேர்ந்து கொடுக்கும் நறுமணம் மற்றும் சக்திவாய்ந்த சுவை மவுத் ஃப்ரஷ்னராக செயல்படுகிறது. தவிர வெற்றிலையில்அயோடின், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் பி2 போன்ற பல சத்துக்கள் நிரம்பி இருப்பதாக கூறப்படுகிறது.

News18

வெற்றிலையின் சக்திவாய்ந்த சுவையை அனுபவிக்க மற்றும் அதன் அற்புதமான பலன்களைப் பெற paan shots-ஐ சாப்பிடலாம். ஏனென்றால் வெற்றிலை இயற்கையாகவே சூடான விளைவை தர கூடியது. ஆனால் பான் ஷாட்ஸ்களில் குல்கண்ட், தேங்காய் மற்றும் பெருஞ்சீரகம் விதைகள் சேர்க்கப்படுவதால் உடலை குளிரூட்டும். எனவே கோடை வெப்பத்திற்கு மத்தியில் வெற்றிலையின் பலன்களை பெற நீங்கள் பான் ஷாட்களை எடுத்து கொள்ளலாம்.

தினசரி சாப்பிட்டு முடித்த பின் வெற்றிலை மெல்லுவதால் கிடைக்கும் நன்மைகள்:

  • வெற்றிலைகளில் செரிமான நொதிகளின் (digestive enzymes) உற்பத்தியை அதிகரிக்கும் காமபவுண்ட்ஸ் உள்ளன. இது உணவை மிக சிறப்பாக உடைக்க உதவுகிறது. இதனால் வயிற்று உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பொதுவான செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

  • வெற்றிலைகளில்பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே இவை வாய்வழி தொற்று ஏற்படும் அபாயத்தை குறைக்கவும், சுவாசத்தை புத்துணர்ச்சியாக வைக்கவும் உதவும். வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் உமிழ்நீர் உற்பத்தி அதிகரிக்கிறது, இது இயற்கையாகவே உங்கள் வாயை சுத்தப்படுத்துகிறது மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உருவாவதை தடுக்கிறது.

  • தினசரி வெற்றிலையை எடுத்து கொள்வது வளர்சிதை மாற்ற செயல்முறையைத் தூண்டும். இது உணவை மிகவும் திறம்படச் செயலாக்க உடலுக்கு உதவுவதோடு, எடை மேலாண்மைக்கு உதவும்.

    • வெற்றிலையில் நறுமண கூறுகள் (aromatic components) அடங்கி உள்ள நிலையில் ஏலக்காய் மற்றும் கிராம்பு போன்ற கூடுதல் பொருட்களுடன் இணைந்து இது வலிக்கு அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது மற்றும் வாய் துர்நாற்றத்தை குறைக்க உதவுகிறது. மேலும் உணவுகளை எடுத்து கொண்ட பின் வாய் மற்றும் சுவாசத்தை ஃபிரெஷ்ஷாக வைத்து கொள்ள வெற்றிலை உதவும்.

    • வெற்றிலையில் உள்ள இயற்கையான சில கலவைகள் நம்முடைய மனதிலும், உடலிலும் அமைதியான விளைவுகளை ஏற்படுத்துகின்றன, ரிலாக்ஸை ஊக்குவித்து மன அழுத்தம் குறைய உதவுகின்றன மற்றும் நன்றாக தூங்க உதவுகின்றன.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

வாரந்தோறும் 150 நிமிடங்கள் உடற்பயிற்சி போதும்.. உங்களுக்கு நோய்களே வராது - WHO அறிக்கை..!

 

உடற்பயிற்சி செய்வது உடலுக்கும், மனதுக்கும் பல விதங்களில் நன்மை அளிக்கிறது. மேலும் உடற்பயிற்சி செய்யாதவர்களை விட தினந்தோறும் உடற்பயிற்சி செய்பவர்கள் இளமையாக தோற்றமளிப்பதாகவும் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக மக்கள் தொகையில் 30%க்கும் அதிகமானோர் ஆரோக்கியமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) நிர்ணயித்த பரிந்துரைக்கப்பட்ட அளவுகளின்படி, மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதில்லை என்று கூறியுள்ளது.

40% க்கும் அதிகமான இந்தியர்கள் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதில்லை என்றும் இதன் காரணமாக உயிருக்கு ஆபத்தான நோய்களின் ஆபத்தில் உள்ளனர் என்றும் லான்செட் ஆய்வு கண்டறிந்துள்ளது. WHO கூற்றின் படி, ஒவ்வொரு வாரமும் 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும், அது முடியாதபட்சத்தில் குறைந்தது 75 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என கூறியிருந்தது.

போதுமான உடற்பயிற்சி இல்லாததால் 2000 ஆம் ஆண்டில் 23.4% ஆகவும், 2010 ஆம் ஆண்டில் 26.4% ஆகவும் இருந்த உலகளாவிய பாதிப்பு, 2022 ஆம் ஆண்டில் 31.3% ஆக அதிகரித்துள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், இது பெண்களிடையேயான பாதிப்பு 5 சதவீதம் ஆக அதிகத்திருந்தது. இந்நிலையில் உலக சுகாதார சபை (WHA) 2010 ஆம் ஆண்டிலிருந்து 2030 ஆம் ஆண்டுக்குள் போதுமான உடற்பயிற்சி இல்லாத சதவீதத்தை முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2010 ஆம் ஆண்டிலிருந்து 2030 ஆம் ஆண்டுக்குள் 15% ஆக குறைக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது.

போதுமான உடற்பயிற்சிகள் இல்லாததற்கு கோவிட் லாக்டவுன் காரணமா?

கோவிட்-19 லாக்டவுன்கள் போதுமான உடற்பயிற்சிகள் இல்லாததற்கு வழிவகுத்தது, மேலும், பொது சுகாதாரத்தை மோசமாக பாதித்தது. கோவிட் கட்டுப்பாடுகளானது, மக்களை தங்கள் வீடுகளுக்குள் அடைத்து வைத்தது மட்டுமல்லாமல், வழக்கமான உடற்பயிற்சிக்கான வாய்ப்புகளையும் குறைந்துவிட்டன, அதாவது, ஜிம்கள், ஸ்விம்மிங் பூல் ஆகியவை மூடப்பட்டன, மேலும், ஜாக்கிங், வாக்கிங் போன்ற வழக்கமான நடைபயிற்சிகளை சீர்குலைத்தது. லாக்டவுனால் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றம் நாள் முழுவதும் உட்கார்ந்து வேலைபார்க்கும் வாழ்க்கை முறைக்கு, பல தீங்கு விளைவிக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

போதுமான உடற்பயிற்சிகள் இல்லாதது நாள்பட்ட நோய்கள் உட்பட பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தி ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கிறது.

உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிக்க தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியமாகும். ஜாக்கிங், வாக்கிங் , சைக்கிள் ஓட்டுதல் அல்லது விருப்பமான விளையாட்டில் ஈடுபடுதல் போன்ற எளிய செயல்பாடுகள், உட்கார்ந்து வேலைபார்க்கும் வாழ்க்கை முறையுடன் தொடர்புடைய அபாயங்களைக் கணிசமாகக் குறைத்து, நீண்ட, ஆரோக்கியமான மற்றும் நிறைவான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது.

போதுமான உடற்பயிற்சி செய்யாதது இதய ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே வழக்கமான உடற்பயிற்சி செய்வதால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல், இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைப்பது போன்ற ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க உதவுகிறது.

போதுமான உடற்பயிற்சி இல்லாதது, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது. மேலும், இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுத்து, இதய செயலிழப்பை ஏற்படுத்தும்.
பெண்களும் வழக்கமான உடற்பயிற்சிகளில் குறிப்பிடத்தக்க வகையில் பயனடைகிறார்கள். வழக்கமான உடற்பயிற்சிகள் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இது பெண்களுக்கு முக்கியமானது. மாதவிடாய் சுழற்சிகள், கர்ப்பம் மற்றும் மாதவிடாய் காலத்தில் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் இயற்கையாகவே நிகழ்கின்றன. எனவே வழக்கமான உடற்பயிற்சியானது ஹார்மோன்களை உறுதிப்படுத்த உதவுகிறது, இதுமட்டுமல்லாமல், மனநிலை மாற்றங்கள், சோர்வு மற்றும் எரிச்சல் போன்ற அறிகுறிகளையும் குறைக்கிறது.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

TNSED SCHOOLS APP - New Version Update Now - 22.02.2025


TNSED SCHOOLS APP UPDATE NEW VERSION 0.3.0

Updated date - 22.02.2025


👉👉 Bug Fixes & Performance Improvements.


👇👇👇👇👇👇

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis 


UPDATE NEW VERSION 0.3.0



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

DEE - BT Teachers District Transfer Seniority List - Subject Wise Pdf

 
தொடக்க கல்வி துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களின் கலந்தாய்வு முன்னுரிமை பட்டியல் வெளியீடு...

BT Tamil State List - Download here

BT English  State List - Download here

BT Maths State List - Download here

BT Science  State List - Download here

BT Social  State List - Download here



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC குரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி

 

TNPSC குரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2, 2ஏ முதல் நிலை தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தெரிவித்ததாவது: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ-இல் அடங்கிய 2,327 காலியிடங்களுக்கான தோ்வு அறிவிப்பு, கடந்த 20 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கு அடுத்த மாதம் 19 ஆம் தேதி கடைசி நாளாகும். இத்தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு சேலம், ஏற்காடு சாலை, கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 26 ஆம் தேதி காலை 10 மணி அளவில் தொடங்கப்படவுள்ளது.

இப் பயிற்சி வகுப்பு ஏற்கெனவே போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது. மேலும், பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுவதோடு மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படவுள்ளன.

சென்ற ஆண்டு பல்வேறு தோ்வுகளுக்கு இந்த அலுவலகத்தில் நடத்தப்பட்ட இலவசப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு 297 போ் அரசுப்பணியினை பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடத்தப்படவுள்ள குரூப் 2 அடங்கிய பணிகளுக்காக இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள தகுதியும் விருப்பமும் உள்ள தோ்வா்கள் இரண்டு பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்.

மேலும், இப்பயிற்சி வகுப்பு குறித்தான விவரங்களைப் பெற அலுவலக வேலைநாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 04272401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

எனவே, சேலம் மாவட்டத்தைச் சாா்ந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலை தோ்வுக்கு தயாராகும் தோ்வா்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

NIT திருச்சியில் JRF காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.37,000

 

2024ல் National Institute of Technology Tiruchirappalli வேலைவாய்ப்பு. பின் வரும் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன Junior Research Fellow (JRF).

அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 2. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். National Institute of Technology Tiruchirappalli வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 10.07.2024 வரை. இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.37,000 வரை சம்பளம் பெறலாம். மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன் தங்களின் கல்வி, வயது வரம்பு சரிபார்த்து, அதிகாரப்பூரவ அறிவிப்பை முழுமையாக படித்த பின் விண்ணப்பிக்கவும். M.E/M.Tech தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்: Junior Research Fellow (JRF)

காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 2

தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் M.E/M.Tech தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 37,000/- வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (10.07.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

10.07.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புஇங்கே பதிவிறக்கம் செய்யவும்



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news