அரசுப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் - 24 மணி நேரமும் பதிவு செய்யப்படும் - பள்ளிக் கல்வித் துறை

 

1268714

அரசுப் பள்ளிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கணினி ஆய்வகங்களை ஆசிரியர்கள் தங்கள் சொந்தப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது. அனைத்து செயல்பாடுகளும் மானிட்டரில் 24 மணி நேரமும் பதிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.


இது குறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணை விவரம்: தமிழகத்தில் 2022-2023, 2023-24-ம் கல்வியாண்டில் தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் (Smart Class) ஏற்படுத்தவும் மற்றும் 2021-22, 2022-23, 2023-24-ம் கல்வியாண்டுகளில் நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் (HiTech Lab) அமைப்பதற்குமான பணிகள் தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.


தொடர்ந்து டிஜிட்டல் வடிவிலான கற்றல் கற்பித்தல் (Digital Contem) வளங்களை தயாரித்து திறன்மிகு வகுப்பறைகள் மூலம் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது மாணவர்களுக்கு சிறந்த கற்றல் சூழலை வழங்குவதுடன், ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை வகுப்பறையில் சிறப்பாக செய்வதற்கு உறுதுணையாகவும் இருக்கும்.


இதற்கிடையே, நடப்பு கல்வியாண்டில் (2024-25) முதல்கட்டமாக 6 மாவட்டங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒன்றியங்களில் உள்ள 493 பள்ளிகளில் 634 திறன்மிகு வகுப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், ஆரம்பப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளும், நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களும் நடப்பு கல்வியாண்டில் இருந்து முறையாக செயல்படுத்துவதற்கும் மற்றும் பராமரிப்பு செய்வதற்கும் உரிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்படுகின்றன.


அதன்படி திறன்மிகு வகுப்பறையை கையாள பள்ளிக்கு ஒரு ஆசிரியரை சார்ந்த தலைமை ஆசிரியர் நியமிக்க வேண்டும். கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளுக்காக மட்டுமே திறன்மிகு வகுப்பறையை தினமும் பயன்படுத்த வேண்டும். பொறுப்பாசிரியர் இல்லாமல் திறன்மிகு வகுப்பறையை மாணவர்கள் கையாளுவதை தவிர்க்க வேண்டும்.


தினமும் ஒரு மணி நேரம் திறன்மிகு வகுப்பறையை பயன்படுத்துவதை ஆசிரியர்கள் உறுதிசெய்ய வேண்டும். மேலும், டிஜிட்டல் பாடப்பொருட்கள் காணொலிகளாக தனித்தனியே இடம் பெற்றிருக்கும். அதேநேரம் பாதுகாப்புக்காக கணினியில் உள்ள யுஎஸ்பி போர்ட்கள் (USB Port) முடக்கப்பட்டுள்ளன. எனவே கணினியில் பென் டிரைவ் போன்ற எந்த தகவல் சேமிப்பானையும் இணைக்கக்கூடாது. பணியாளர்கள் தங்கள் சொந்த செயல்பாடுகளுக்கு கணினி மற்றும் இணையதள வசதியை பயன்படுத்தக் கூடாது.


அனைத்து செயல்பாடுகளும் 24 மணி நேரமும் மானிட்டரில் பதிவு செய்யப்படும். அனைத்து தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் நாற்காலி, மேஜைகள் போன்ற பொருட்கள் சேதமடையக்கூடாது. ஆய்வகத்துக்குள் எந்தவொரு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லவோ, அங்கு வைத்து சாப்பிடவோ அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பின்பற்றி செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்படும்- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

 
சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின் போது ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம். சி.சண்முகையா ஒட்டப்பிடாரத்தில் வட்டார கல்வி அலுவலக கட்டிடம் கட்ட அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார்.


இதற்கு பதிலளித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-


தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் வட்டார கல்வி அலுவலக கட்டிடம் கட்ட ஊரக வளர்ச்சி துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.


மேலும், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான வசதிகள் செய்யப்படும்.


ரூ.7500 கோடியில் 16 ஆயிரம் புதிய வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதில் ரூ. 2,487 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள், பள்ளி சுற்றுச்சுவர், ஆய்வகங்கள் உள்பட 3603 வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.


3,601 வகுப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு கூடுதலாக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பள்ளி மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.


🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் பள்ளிகளில் பராமரிப்பு – சார்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 அரசு / பஞ்சாயத்து / நகராட்சி / மாநகராட்சி தொடக்கப்பள்ளி / நடுநிலைப் பள்ளிகள் - பள்ளி வங்கிகணக்குகள் -ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் பள்ளிகளில் பராமரிப்பு – சார்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 



8th pay Commission - ஊதியம் எவ்வளவு உயரும் என்பது பற்றிய கணக்கீடு

 



எட்டாவது ஊதியக்குழு, ஊதிய நிர்ணய பெருக்குக் காரணி (Fitment Factor) 1.91. 2.28, 3.0 என பலவித கருத்துகள் இருந்தாலும், ஊதிய நிர்ணய பெருக்குக் காரணி (Fitment Factor) 1.91 க்கு குறையாது என பல்வேறு மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன. இதன் அடிப்படையில் ஊதியம் எப்படி நிர்ணயம் செய்யப்படும் மற்றும் ஊதியம் எவ்வளவு உயரும் என்பதை கீழ்க்கண்ட மாதிரி கணக்கீடு மூலம் அறியலாம்.

01.01.2026 அன்று ஒருவர் 100 பைசா அடிப்படை ஊதியம் பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அன்றைய தேதியில் அகவிலைப்படி சுமார் 66% ஆக இருக்கலாம்.



அதாவது 01.01.2024 ல் 50%, 01.07.2024 ல் 54%, 01.01.2025 ல் 58%, 01.07.2025 ல் 62%, 01.01.2026 ல் 66% என்ற வகையில் அகவிலைப்படி உயரக்கூடும்.

அப்படியென்றால் 01.01.2026 அன்று அடிப்படை ஊதியம் 100 பைசா பெறுபவர், 66% அகவிலைப்படியுடன் சேர்த்து 166 பைசா ஊதியம் பெறுவார்.



எட்டாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி அரசு 15% ஊதியம் கூடுதலாக தருவதாக வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் ஊதிய நிர்ணயக் காரணி எப்படி அமையும் என்பதைக் காண்போம்.

ஊதிய நிர்ணயக் காரணி உருவாகும் விதம் :

01.01.2026 அன்று அடிப்படை ஊதியம்

100 பைசா

01.01.2026 அன்று அகவிலைப்படி (66%)

66 பைசா

மொத்த ஊதியம்

166 பைசா

– 1.66 ரூபாய்.

அதாவது, 166 பைசா

எட்டாவது ஊதியக்குழுவில் அரசு தரும் கூடுதல் ஊதியம் 15%

1.66 x 15% = 0.249

இதை அருகில் உள்ள இரண்டு இலக்க எண்ணுக்கு முழுமை படுத்தினால் 0.25 ஆகும். மொத்த ஊதியம் 1.66 ரூபாய் + 15% அரசு தரும் கூடுதல் ஊதியம் 0.25 = 1.91 ரூபாய். இந்த 1.91 தான் எட்டாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், ஊதியம் நிர்ணயம் செய்ய பயன் படுத்தப்படும் ஊதிய நிர்ணய பெருக்குக் காரணி ஆகும்.

Fitment Factor – 1.91 

தன் அடிப்படையில் ஊதியம் எவ்வளவு உயரும் என்பது பற்றிய ஒரு கணக்கீடு:

ஊதியக்குழு நடைமுறை படுத்தப்படும் முன்பு ஊதியம் : (01.01.2026 ல்)
அடிப்படை ஊதியம்
ரூ.90,000
66% அகவிலைப்படி
ரூ.59,400
மொத்த ஊதியம்
ரூ.1,49,400.

01.01.2026 அன்று நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் :
01.01.2026 அன்று அடிப்படை ஊதியம் - ரூ. 90,000
பெருக்குக்காரணி 1.91 மூலம், நிர்ணயம் செய்யப்படும்,

ஊதியம் (ரூ.90,000 × 1.91)
அகவிலைப்படி
மொத்த ஊதியம்
- ரூ.1,71,900
ரூ.0
- ரூ.1,71,900
(01.01.2026 முதல் 30.06.2026 வரை மட்டும் அகவிலைப்படி 0 என கணக்கிடப்படும்.)

வித்தியாசம்( 1,71,900 - 1,49,400) = ரூ.22,500.

(எட்டாவது ஊதியக்குழு நடைமுறை படுத்தப்பட்டதால் ரூ. 22,500 கூடுதலாக கிடைத்தது.)


அரசு தரும் 15% ஊதிய உயர்வு என்பது 01.01.2016 முதல் 31.12.2025 வரை அத்தியாவசிய நுகர்வு பொருள்கள் விலை உயர்வின் சராசரி ஆகும். அரசு தரும் ஊதிய உயர்வு, 15% முதல் 20% வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. ஒருவேளை அரசு 20% ஊதிய உயர்வு அளித்தால், இன்னும் கூடுதல் தொகை ஊதியத்தில் கூடுதலாக கிடைக்கும்.


இது ஒரு மாதிரி கணக்கீடு தான். நிதிநிலை பொறுத்து அரசு தரும் ஊதிய உயர்வு தான் கிடைக்கும் என்றாலும், 15% ஐ விட குறைவாக இதற்கு முன் வழங்கியதில்லை என்பதால், மேற்கண்ட மாதிரி கணக்கீட்டின் அடிப்படையில் ஊதிய உயர்வு கண்டிப்பாக இருக்கும் என நம்பலாம்.


மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடைகைப்படி மற்றும் இதரப்படிகள், அடிப்படை ஊதியத்தில் 10%, 8%, 5% என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. மாநில அரசுகள், இதற்கென அமைக்கப்படும் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் வழங்கும்.


ஆண்டு ஊதிய உயர்வு வழக்கம்போல் 3% ஊதியம் உயர்த்தி வழங்கப்படலாம். இதன் அடிப்படையில் Pay Matrix அட்டவணை வெளியிடப்படும் என கூறப்படுகிறது.


Click Here to Download - 8th pay Commission - Fitment Factor - Full Calculation - Pdf


🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

திறன் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

 

1269202

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களில் திறன் குறைந்தவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்தில் , அரசுப் பள்ளிகளில் எழுதும் திறன் , வாசிக்கும் திறன் மற்றும் அடிப்படை கணிதத் திறன் குறைவான மாணவர்களை கண்டறிந்து அவர்களின் திறனை மேம்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதன் அடிப்படையில் அனைத்து வகை அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் எழுதும் திறன் வாசிக்கும் திறன் மற்றும் அடிப்படை கணிதத் திறன் குறைவான மாணவ/மாணவிகளின் விவரங்கள் கண்டறியப்பட்டு பயிற்சிகள் இக்கல்வியாண்டிலும் வழங்கப்பட வேண்டும்.

இது தொடர்பான விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தும்படி அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 1 - ( Unit - 3 ) June 4th Week Lesson Plan - T/M & E/M

 

Ennum Ezhuthum Lesson Plan | 2024 - 2025

Ennum Ezhuthum Empty Format - Download here

Term I Lesson Plan

June - 2024

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - Full Lesson Plan - Download here

Ennum Ezhuthum - 4  Std -  Term 1 - Full Lesson Plan - Download here

Ennum Ezhuthum - 5th Std -  Term 1 - Full Lesson Plan - Download here

Unit - 3

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - ( Unit - 3 ) June 4th Week Lesson Plan - T/M & E/M - Download here


Ennum Ezhuthum - 4th & 5th Std -  Term 1 - ( Unit - 3 ) June 4th Week Lesson Plan - T/M & E/M - Download here


Unit - 2

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - ( Unit - 2 ) June 3rd Week Lesson Plan - T/M - Download here


Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - ( Unit - 2 ) June 3rd Week Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum - 4th & 5th Std -  Term 1 - ( Unit - 2 ) June 3rd Week Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4th & 5th Std -  Term 1 - ( Unit - 2 ) June 3rd Week Lesson Plan - E/M - Download here

Unit - 1

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - ( Unit - 1 ) June 1st Week Lesson Plan - Download here

Ennum Ezhuthum - 4th & 5th Std -  Term 1 - ( Unit - 1 ) June 1st Week Lesson Plan - Download here

Term III Lesson Plan

Std 1,2,3th Ennum Ezhuthum - TERM 3 - Full Lesson Plan - Download here




🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

பொதுத்தேர்வு - மாவட்ட தேர்ச்சி சராசரியை விட குறைவாக பெற்ற பள்ளிகள் - விளக்கம் அளிக்க உத்தரவு.

 IMG_20240623_211015

பள்ளிக்கல்வி - பொதுத்தேர்வு மார்ச் / ஏப்ரல் 2024 - நாமக்கல் 05.06.2024 அன்று முதன்மைக்கல்வி அலுவலர் மாவட்டம் , - தலைமையில் நடைபெற்ற தேர்ச்சி பகுப்பாய்வு கூட்டம்- மாவட்ட தேர்ச்சி சராசரியை விட குறைவாக பெற்ற பள்ளிகள் - விளக்கம் கோருதல்- சார்பு நாமக்கல் CEO செயல்முறைகள் 

HSC EXAM MARCH APRIL 2024 LOW PERFORMANCE- EXPLANATION-REG👇

Download here


🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNSED Mobile App இல் பதிவேற்றம் செய்ய வேண்டிய Noon Meal Parents Consent format - pdf file

IMG_20240624_061151

 

EMIS- TNSED Mobile App இல் Consent படிவம் பதிவேற்றம் செய்ய தேவைப்படுவதால் கீழ் காணும் format ஐ download செய்து மாணவர்களின் பெற்றோர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும்....

அதில் மாணவர்கள் சத்துணவு சாப்பிட விருப்பம் தெரிவித்தல் சார்ந்த விபரம் இடம் பெற்றுள்ளது

 Noon Meal Parents Consent format - pdf file

👇👇👇👇

Download here

உங்க குழந்தை அடிக்கடி வயிறு வலிக்குதுனு சொல்றாங்களா..? இதுதான் காரணம்.. உடனே செக் பண்ணுங்க.!

 உணவு மூலம் பரவும் வைரஸ்கள் மற்றும் கணிக்க முடியாத பருவமழை காரணமாக பெங்களூரில் உள்ள குழந்தைகளிடத்தில் குடல் சார்ந்த பிரச்சனைகள் அதிகரித்துள்ளன. பாதிக்கப்பட்ட குழந்தைகளிடத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு, பசியின்மை, நீரிழப்பு, உடல் வலி, சோர்வு, வயிற்று வலி போன்ற அறிகுறிகள் தென்படும்.

குடல் பாதையில் ஏற்படும் தொற்று காரணமாகவே வயிற்றுப்போக்கு உண்டாகிறது. இதற்கு பல வகையான பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிகள் காரணமாக இருக்கின்றன. குறிப்பாக பருவமழையின் போது உணவு மூலம் பரவும் நோய்கள் காரணமாக இரைப்பை குடல் பிரச்சனைகள் அதிகரிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மழைக்காலங்களில் ஈரப்பதமும், மாய்ஸ்சரைசரும் அதிகரிப்பதால் உணவு மற்றும் தண்ணீரில் ஒட்டுண்ணிகள், பாக்டீரியா போன்றவை பல்கி பெருகுகின்றன. மாசடைந்த தெரு உணவுகள், மிச்சமான உணவுகளை ஒழுங்காக ஸ்டோர் செய்யாமல் இருப்பது, தூய்மையற்ற தண்ணீர் காரணமாக காலரா, டைபாய்டு, இரைப்பை குடல் அழற்சி போன்ற நோய்கள் வருவது அதிகரிக்கின்றன.

குழந்தைகளிட்த்தில் இரைப்பை குடல் சார்ந்த பிரச்சனைகள் அதிகரிக்க என்ன காரணம்?

  • முதற் காரணம் டயட். சர்க்கரை, கொழுப்பு அதிகமுள்ள மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை குழந்தைகள் அதிகமாக உட்கொள்கிறார்கள். இதனால் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் ஆகியவற்றை போதுமான அளவு எடுத்துக்கொள்ளாததன் காரணமாக மலச்சிக்கல் பிரச்சனை குழந்தைகளுக்கு வருகிறது.

  • ரோடோவைரஸ் மற்றும் நோரோவைரஸ் போன்றவையும் இரைப்பை குழல் அழற்சியை உண்டாக்கி வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலியை வரவழைக்கின்றன. அதேப்போல் கெட்டுப்போன உணவு அல்லது மாசடைந்த தண்ணீர் மூலம் பரவும் சால்மோனெல்லா அல்லது ஈ-கோலி பாக்டீரியாவாலும் இதேப்போன்ற அறிகுறிகள் குழந்தைகளிடத்தில் காணப்படுகின்றன. சில சமயங்களில் வேர்க்கடலை, முட்டை, ஷெல்ஃபிஷ் போன்ற உணவுகள் அலர்ஜியை உண்டாக்குவதாலும் குடல் சார்ந்த பிரச்சனைகள் வருகின்றன.

  • மன அழுத்தம், படபடப்பு போன்ற உளவியல் காரணிகளும் குழந்தைகளின் செரிமான ஆரோகியத்தில் குறிப்பிடத்குந்த தாக்கத்தை செலுத்துகின்றன. குழந்தைகள் தங்களது மனரீதியான பிரச்சனைகளை வயிற்று வலி, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற உடலியல் அறிகுறிகள் மூலமே வெளிப்படுத்துகிறார்கள். குறிப்பிட்ட சில மருந்துகளை தவறுதலாக கொடுக்கும் போது கூட இதுபோன்ற பிரச்சனைகள் வருகிறது.

  • எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) மற்றும் அடிவயிற்று வலி ஆகியவை குழந்தைகளிடத்தில் பரவலாக காணப்படுகின்றன. நீரிழப்பு மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் மலச்சிக்கல் மற்றும் குடல் சார்ந்த பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. செரிமான ஆரோக்கியத்தை பராமரிப்பதில் நீர்ச்சத்து எவ்வுளவு முக்கியமானது என்பதை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.

    • அல்சர், க்ரோன் போன்ற குடல் அழற்சி நோய்கள் தீவிர இரைப்பை குடல் அறிகுறிகள் வருவதற்கு காரணமாக இருக்கின்றன. தைராய்டு கோளாறுகள் அல்லது டயாபடீஸ் போன்ற நாள்பட்ட பிரச்சனைகளும் செரிமான செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குழந்தைகளின் இரைப்பை குடல் பிரச்சனைகளுக்கு மூலக் காரணம் என்ன என்பதை கண்டறிந்தால் மட்டுமே அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள முடிவதோடு இதுபோன்ற பிரச்சனைகள் இனி வராமல் தடுக்க முடியும்.


    • 🔻 🔻 🔻 

பெண்களை அதிகமாக தாக்கும் 5 புற்றுநோய்கள்.. தடுக்கும் வழிகள் என்ன..?

 

கேன்சர் என்பது உலக அளவில் மில்லியன் கணக்கான நபர்களை பாதிக்கும் ஒரு மோசமான உயிர்கொல்லி நிலை ஆகும். இது ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. பல வகை புற்றுநோய்கள் உள்ளதால் இதன் அறிகுறிகள் மற்றும் விளைவுகள் பல உள்ளன.

பெண்களைக் காட்டிலும் ஆண்கள் பொதுவாக அவர்களுடைய மரபணு காரணமாக புற்று நோய்க்கு அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்று அறிவியல் ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. எனினும் இந்தியாவில் இந்த நிலை நேர்மாறாக இருக்கிறது. இங்கு பெண்கள் அதிக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் போன்ற மகப்பேறு சம்பந்தப்பட்ட புற்று நோய்களால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு மரபணு, சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள் போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளது.

இந்த புற்று நோய்களுக்கான அறிகுறிகளை அறிந்து வைத்திருப்பது நோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவதற்கும், அதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்கும், நோயிலிருந்து மீண்டு வருவதற்கும் மிக மிக முக்கியம். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இந்த புற்றுநோய்க்கான அறிகுறிகள் பற்றி தெரிவதில்லை. எனவே இந்த பதிவில் பெண்களை அதிக அளவில் தாக்கக்கூடிய புற்றுநோய்கள் மற்றும் அதன் அறிகுறிகள் என்னென்ன என்பது பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ளலாம்.

  • கருப்பை புற்றுநோயானது அண்டகங்களில் துவங்குகிறது. இது குடும்ப வரலாறு, வயது மற்றும் BRCA1 மற்றும் BRCA2 போன்ற மரபணு மாற்றங்களால் ஏற்படுகிறது. வயிற்று உப்புசம், இடுப்பு குறி பகுதியில் வலி மற்றும் மலம் கழிக்கும் வழக்கத்தில் மாற்றங்கள் போன்றவை இந்த புற்றுநோயின் சில அறிகுறிகள்.

  • கருப்பை வாய் புற்றுநோய் என்பது கருப்பை வாயில் இருந்து தொடங்குகிறது. இது பொதுவாக பாலியல் உறவின் போது பரவும் ஹியூமன் பாபிலோமா வைரஸ் (human papillomavirus - HPV) காரணமாக ஏற்படும் தொற்றின் விளைவாக உண்டாகும் புற்றுநோய். பிறப்புறுப்பு பகுதியில் இருந்து அசாதாரணமான ரத்தக்கசிவு, உடலுறவின் பொழுது வலி மற்றும் பிறப்புறுப்பில் இருந்து வழக்கத்திற்கு மாறாக திரவங்கள் வெளியேறுதல் போன்றவை இந்த புற்றுநோயின் அறிகுறிகள்.

  • வுல்வார் (Vulvar) புற்றுநோய் என்பது பெண்களின் பிறப்புறுப்பு பகுதி மற்றும் சிறுநீர் கழிக்கும் பகுதிக்கு இடையே உள்ள ஒரு தோலில் ஏற்படும் புற்றுநோய் வகையாகும். இது HPV தொற்று, புகைப்பிடித்தல் மற்றும் புற்றுநோய்க்கு முந்தைய நிலைமைகள் காரணமாக ஏற்படுகிறது. வுல்வா பகுதியில் தொடர்ச்சியான அரிப்பு, எரிச்சல் மற்றும் அசாதாரணமான வளர்ச்சிகள் இந்த புற்றுநோய்க்கான அறிகுறிகள்.

  • எண்டோமெட்ரியம் எனப்படும் கருப்பையின் ஓரங்களில் துவங்கும் புற்றுநோய். இது யூட்டரின் அல்லது எண்டோமெட்ரியல் புற்றுநோய் (Uterine/Endometrial Cancer) என்று அழைக்கப்படுகிறது. உடற்பருமன், வயது, ஹார்மோன் சிகிச்சை மற்றும் குழந்தையின்மை போன்றவை இந்த புற்றுநோய்க்கான சில அபாய காரணிகளாக அமைகின்றன. பிறப்பு உறுப்பில் அசாதாரணமான ரத்த கசிவு, வழக்கத்திற்கு மாறான உடல் எடை குறைவு, இடுப்பு குழி பகுதியில் வலி போன்றவை இந்த புற்றுநோயின் அறிகுறிகள்.

  • யோனி புற்றுநோய் என்பது HPV தொற்றுஃ புகைப்பிடித்தல் மற்றும் கருவறையில் இருக்கும் பொழுது diethylstilbestrol (DES) -க்கு வெளிப்படுத்துதல் காரணமாக ஏற்படுகிறது. பிறப்புறுப்பு பகுதியில் இருந்து அசாதாரணமான ரத்த கசிவு, பிறப்பு உறுப்பில் வழக்கத்திற்கு மாறான திரவ வெளியேற்றம், உடலுறவின்பொழுது வலி போன்றவை யோனி புற்றுநோயின் அறிகுறிகள்.

புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவதற்கு பெண்கள் வருடத்திற்கு ஒருமுறை Pap சோதனை மற்றும் HPV சோதனை போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

இப்போது இந்த புற்று நோய்களிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதற்கான ஒரு சில குறிப்புகளை தெரிந்து கொள்வோம்…

  • கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைப்பதற்கு மறக்காமல் HPV தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.

  • ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது புற்றுநோயை தடுப்பதற்கு மட்டுமல்லாமல் உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை கொண்டுள்ளது. சரிவிகித உணவை சாப்பிடுவது, ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது, தினமும் உடற்பயிற்சி செய்வது, புகையிலையை தவிர்ப்பது மற்றும் மது அருந்துவதை குறைத்துக் கொள்வது போன்றவை ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் அடங்கும்.

  • உங்களுடைய வயது மற்றும் அபாய காரணிகளின் அடிப்படையில் அடிக்கடி புற்றுநோய் சோதனைகளை மேற்கொள்வது உதவக் கூடும்.

  • உங்கள் குடும்பத்தில் இதற்கு முன்பு யாருக்காவது மகப்பேறு சம்பந்தப்பட்ட புற்றுநோய்கள் ஏற்பட்டு இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஈடுபடுவது அவசியம்.


🔻 🔻 🔻 

தினமும் பால் கலந்த டீ குடிப்பதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா..?

 பாலைக் கொண்டு தயாரிக்கப்படும் டீ, இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள பல கலாச்சாரங்களில் ஒரு முக்கியப் பொருளாக மாறியுள்ள சுவையான மற்றும் நறுமணமுள்ள பானமாகும். காபியை விட டீயை விரும்பி குடிப்போர் எண்ணிக்கை ஏராளம்.

அதுவும் இந்தியர்கள் சரியான டீ பிரியர்கள். காலையில் எழுந்ததும் பெரும்பாலானோர் ஒரு கப் டீ குடிக்காமல் அவர்களுக்கு நாள் நகரவே நகரத்து. ஆனால் நீங்கள் பால் டீயை தினசரி குடிக்கும்போது உங்கள் உடலுக்கு என்ன நடக்கும் என்பதை பற்றி பார்ப்போம். ஹங்கிரி கோலாவின் மூத்த ஊட்டச்சத்து நிபுணர் இப்சிதா சக்ரபர்த்தி கூறுகையில், பாலில் உள்ள கால்சியம், உங்கள் எலும்புகளை கொஞ்சம் வலுவடைய செய்யும். தேநீரில் உள்ள காஃபின் உங்களை அதிக விழிப்புடனும், கவனத்துடனும் உணர வைக்கும்.

தேயிலையில் ஆன்டிஆக்ஸிடென்ட்களால் நிறைந்துள்ளது, அவை உங்கள் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும் சிறிய கவசங்கள் போன்றவை. இருப்பினும், சிலருக்கு பால் மற்றும் தேநீர் குடலில் நன்றாக கலக்காது. இதனால் வயிற்று உப்புசம், வாயு மற்றும் அஜீரணத்திற்கு வழிவகுக்கும். பால் டீ-க்களில் சர்க்கரை மற்றும் கலோரிகள் நிரம்பியுள்ளன. இந்த அதிகப்படியான இனிப்பு உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும் மற்றும் டைப் 2 நீரிழிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

News18

டீ-யில் காஃபைன் மட்டுமின்றி, தியோஃபில்லைனும் உள்ளது. அளவுக்கு அதிகமாக டீயை ஒருவர் வெறும் வயிற்றில் குடிக்கும் போது, அது உடலில் வறட்சியை ஏற்படுத்தி, தீவிரமான மலச்சிக்கல் பிரச்சனையை உண்டாக்கும். டீ அல்லது கஃபி குடிப்பதாக இருந்தால், அதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே ஒரு க்ளாஸ் தண்ணீர் பருகுங்கள். இது ஆசிட் அளவை குறைத்து செரிமானத் தொல்லையை போக்கும்.

பால் டீயில் உள்ள காஃபின் உடலை எவ்வாறு பாதிக்கிறது, குறிப்பாக தினமும் குடிக்கும்போது?

தினமும் குடிக்கும்போது, ​​அது உங்களுக்கு விரைவான பிக்-மீ-அப்பை வழங்குவதோடு, சிறப்பாக கவனம் செலுத்தவும் உதவுகிறது. ஆனால் அதிகப்படியான காஃபின் கவலை, அமைதியின்மை மற்றும் தூக்குமின்மைக்கு வழிவகுக்கும் என்று சக்ரபர்த்தி கூறியுள்ளார்.

  • பால் டீயில் உள்ள பொருட்கள் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கலாம்: பால் டீயில் உள்ள பொருட்கள் உங்கள் செரிமானத்தை பாதிக்கலாம்.

  • கால்சியம் மற்றும் வைட்டமின் டி: இந்த பால் ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான எலும்புகளுக்கு அவசியம் மற்றும் உங்கள் வளர்சிதை மாற்றம் சீராக இயங்க உதவுகிறது.

  • ஆன்டிஆக்ஸிடென்ட்: இவை உங்கள் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.

தினசரி பால் டீ குடிக்கும்போது எடை அதிகரிப்பு அல்லது பிற சிக்கல்களுக்கு பங்களிக்குமா?

தினசரி பால் டீ குடிப்பது என்பது ஆரோக்கியமான எடை பராமரிப்பை கடினமாக்கும் என்று சக்ரபர்த்தி ஒப்பு கொள்கிறார்.

கூடுதலாக, அதிகப்படியான காஃபின் அதிகமாக கழிப்பறைக்குச் செல்ல தூண்டுகிறது. பால் டீயில் உள்ள குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் அல்லது கலவைகள் செரிமானம் அல்லது வளர்சிதை மாற்றத்தை பாதிக்கலாம். பால் டீயில் இருந்து வெளியேறும் சர்க்கரை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீர்குலைத்து, அவற்றை விரைவாக மேலும் கீழும் செல்லச் செய்யும். காலப்போக்கில், இது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் நீரிழிவு நோய்க்கு பங்களிக்கும், என்று நிபுணர் பரிந்துரைக்கிறார். பால் டீயில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் கலவையானது உங்கள் உடலில் குறிப்பாக வயிற்றைச் சுற்றி கொழுப்பைச் சேமிக்க ஊக்குவிக்கும்.

தினமும் பால் டீ குடிப்பவர்கள் மனதில் கொள்ள வேண்டியது என்ன?

பால் டீ ஒரு சுவையான மற்றும் மகிழ்ச்சியான பானமாக இருக்கலாம், ஆனால் நீங்கள் அதை எவ்வளவு அடிக்கடி குடிக்கிறீர்கள் மற்றும் எந்த வகையைத் தேர்வு செய்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

உடல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க, சக்ரபர்த்தி பின்வருவனவற்றைப் பரிந்துரைக்கிறார்:

  • டீயை அதிகமாக குடிக்காதீர்கள்.

  • முடிந்தவரை குறைவான சர்க்கரை மற்றும் கிரீமி இல்லாத பால்களை தேர்ந்தெடுக்கவும்.

  • உங்களை ஹைட்ரேட்டாக வைத்திருங்கள்: இதற்கு தினசரி நீங்கள் நிறைய தண்ணீர் அருந்துவதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

  • உங்களுக்கு ஏதேனும் செரிமான கோளாறுகள் இருந்தால் பால் டீ குடிப்பதை குறைக்கவும் அல்லது வேறு வகையை முயற்சிக்கவும்.


🔻 🔻 🔻 

வாந்தி.. தொண்டை புண்.. வயிற்றில் புற்றுநோய் இருப்பதை வெளிப்படுத்தும் 5 அறிகுறிகள்.!

 

நாம் சொல்கிறபடி உடல் இயங்காது. திடீரென பல வித்தியாசமான வழிகளில் நடந்து கொள்ளும். ஆனால் எல்லா அடிவயிற்று அறிகுறிகளும் புற்றுநோயின் ஆபத்தை குறிக்குமா..? இது இரைப்பை புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது. வயிற்றுடைய செல் பிரிவு கட்டுப்படுத்த முடியாமல் போகும்போது நாம் சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாகாமல் போகலாம்.

வயிற்றுப் புற்றுநோய் எங்கு வேண்டுமானாலும் வரலாம் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். சில சமயங்களில் தும்மல் மற்றும் இருமலின் போது கூட ரத்தம் வெளியேறும். இதுபோன்ற சமயங்களில் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும்.

இரைப்பை உணவுக்குழாய் இணையும் பகுதியில் தான் வயிற்றுப் புற்றுநோய் ஆரம்பமாகிறது. இது எளிமையாக உணவுக்குழாய் என அழைக்கப்படுகிறது. குழல் வடிவத்தில் இருக்கும் இதன் வழியாகவே நாம் சாப்பிடும் உணவுகள் செல்கிறது. இந்த குழாய் வழியாக உணவுகள் இரைப்பையை சென்றடைகின்றன. இது உணவுக்குழாய் என்று அழைக்கப்படுகிறது. வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகள் சில நேரங்களில் வெளிப்படையாக தெரிவதில்லை.

குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே புற்றுநோயின் அறிகுறிகளை உடல் வெளிப்படுத்த தொடங்குகிறது. ஆனால் நாம்தான் அதை கண்டுகொள்வதில்லை. இதுகுறித்த விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே நம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகள் என்னவென்று இப்போது பார்ப்போம் வாருங்கள்.

  • வாந்தி எடுக்கும் போது ரத்தம் கலந்து வந்தால், எக்காரணம் கொண்டும் அதை புறக்கணிக்காதீர்கள். சில சமயங்களில் தும்மல் மற்றும் இருமலின் போது கூட இரத்தம் வெளியேறும். இதுபோன்ற சமயங்களில் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும்.

  • வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் சாப்பிடும் உணவு ஒழுங்காக செரிமானமாகவில்லை என்று தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். அப்போதுதான் கடினமான சூழ்நிலை ஏற்பட்டாலும் கூட ​​அதை எளிதாக சமாளிக்க முடியும்.

  • தொண்டை புண்ணும் வயிற்று புற்றுநோயின் அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது. ஆகையால் எந்தச் சூழ்நிலையிலும் இதை புறக்கணிக்காதீர்கள். நிலைமை மோசமாகும் முன் உடனே மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.

  • வயிற்றில் புற்றுநோய் இருந்தால், மலம் கருப்பு நிறத்தில் வெளியேறும். ஆகையால் மலத்தின் நிறத்தில் எப்போதாவது மாற்றம் ஏற்பட்டால், காலம் தாழ்த்தாமல் உடனடியாக அதை சரிசெய்யும் முயற்சியை எடுங்கள்.

  • வயிற்றுப் புற்றுநோய் அல்லது வேறு இடங்களில் புற்றுநோய் இருந்தாலோ முதலில் உடல் எடை குறையத் தொடங்கும். தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி உங்கள் சந்தேங்கங்களை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
    உங்கள் உடலை முழுமையாக பரிசோதித்து பார்த்த பிறகே சரியான நிலவரத்தை கண்டறிய முடியும். புற்றுநோய் தொடர்பாக ஏதாவது அறிகுறிகள் இருந்தால் நீங்களாக எதையும் முடிவு செய்யாமல் தகுந்த மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்னரே முடிவெடுக்க வேண்டும்.

🔻 🔻 🔻 

TNPSC குரூப் 2, 2A மெயின்களுக்கு எங்கே, எதைப் படிக்க வேண்டும்?

 
TNPSC குரூப் 2, 2A மெயின்களுக்கு எங்கே, எதைப் படிக்க வேண்டும்?

அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

Tnpsc Group 2 Prelims Syllabus General Tamil PDF

 Tnpsc Group 2 Prelims Syllabus General Tamil PDF

அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

TNPSC Group 4 வினாக்கள் புத்தகத்தில் எங்கு இருந்து கேட்கப்பட்டது! விரிவான PDF

 TNPSC Group 4 வினாக்கள் புத்தகத்தில் எங்கு இருந்து கேட்கப்பட்டது! விரிவான PDF

அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Download PDF File Below 👇👇👇

Click here to download pdf file



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news