பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: ஸ்கிரைப் நியமனத்தில் மாற்றம்

 

 

hindutamil-prod%2F2026-03-22%2Fh0ee9sdz%2F1545421212

பத்​தாம் வகுப்பு பொதுத்​தேர்வு எழுதும் மாணவர்​களுக்​கான ஸ்கிரைப் நியமன விதி​முறை​களில் தேர்​வுத் துறை சில திருத்​தங்​களை செய்​துள்​ளது. சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களை இந்த பணிக்கு நியமிக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தேர்​வுத் துறை இயக்​குநர் க.சசிகலா அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்: பத்​தாம் வகுப்பு பொதுத்​தேர்வு கடந்த மார்ச் 11-ம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. இந்த வகுப்​புக்​கான கணிதம், அறி​வியல், சமூக அறி​வியல் ஆகிய பாடங்​களுக்கு தேர்​வர்​களின் முகப்​புத் தாள்​கள் முதன்மை விடைத்​தாள்​களு​டன் தைக்​கப்​பட்​டுள்​ளதை தேர்​வுக்கு முன்​னரே உறுதி செய்ய வேண்​டும்.

இதுத​விர, சொல்​வதை எழுதுபவர் (ஸ்​கிரைப்) நியமனங்​களில் தேர்வு நடை​பெறும் பாடத்தை பயிற்று​விக்​கும் ஆசிரியர்​களை நியமிக்​கக்​கூடாது. அதே​போல, பத்​தாம் வகுப்பு பொதுத் தேர்​வின் அறை கண்காணிப்பு பணியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிற்​று​விக்​கும் ஆசிரியர்​கள்​தான் நியமிக்​கப்பட வேண்​டும். தேர்​வர்​களுக்கு வழங்​கப்​படும் கோடிடப்​ப​டாத கூடு​தல் விடைத்​தாள்​களை போது​மான அளவு பெற்று வைத்​துக் கொள்ள வேண்​டும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. பத்​தாம் வகுப்பு பொதுத் தேர்​வு​கள் ஏப்​ரல் 6-ம் தேதி​யுடன் நிறைவடைய​ உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment