தமிழகம் முழுவதும் 654 அரசு உதவிபெறும் பள்ளிகளில் ரூ.42 கோடியில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்

 

 

hindutamil-prod%2F2026-02-21%2Fvy4zjhty%2F15

அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்​நிலை மற்​றும் மேல்​நிலைப் பள்​ளி​களில் பயிலும் மாணவர்​களின் கல்​வித் தரத்தை உயர்த்​தும் பொருட்டு பள்​ளிக்​கல்​வித் துறை மூலம் பல்​வேறு சிறப்​புத் திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன.

அரசுப் பள்​ளி​களில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களிடம் பிரச்​சினை​களைத் தீர்க்​கும் திறனை வளர்க்​க​வும், குழு​வாக இணைந்து செயல்​படக்​கூடிய திறனை கற்​றுக் கொள்​ள​வும், படைப்​பாற்​றலை வளர்க்​க​வும் முதல்​கட்​ட​மாக ரூ.6.09 கோடி மதிப்​பீட்​டில் 15 இயந்​திர​வியல் ஆய்​வகங்​கள் நிறு​வப்​பட்டு உள்​ளன.

கற்​றல், கற்​பித்​தல் மற்​றும் திட்​ட​மிடல் போன்ற செயல்​முறை​களை மேம்​படுத்​து​வதற்கு தகவல் தொழில்​நுட்​பம் ஒரு முக்​கிய ஊக்​கி​யாக உள்​ளதைக் கருத்​தில் கொண்​டு, அரசு நடுநிலை, உயர்​நிலை மற்​றும் மேல்​நிலைப் பள்​ளி​களில் ரூ.519.73 கோடி மதிப்​பீட்​டில் 8,209 உயர் தொழில்​நுட்ப ஆய்​வகங்​களும், அரசு தொடக்க, உயர்​நிலை மற்​றும் மேல்​நிலைப் பள்​ளி​களில் ரூ.455.32 கோடி மதிப்​பீட்​டில் 22,931 திறன்​மிகு வகுப்​பறை​களும் நிறு​வப்​பட்டு மாணவர்​களின் பயன்​பாட்​டில் உள்​ளன.

இந்​நிலை​யில், அரசுப் பள்​ளி​களைப் போல, அரசு உதவி​பெறும் பள்​ளி​களில் பயிலும் மாணவர்​களுக்​கும் வழங்​கும் நோக்​கில், முதற்​கட்​ட​மாக தமிழகம் முழு​வதும் 654 அரசு உதவி​பெறும் மேல்​நிலைப் பள்​ளி​களில் ரூ.41.85 கோடி மதிப்​பீட்​டில் 654 உயர் தொழில்​நுட்ப ஆய்​வகங்​கள் நிறு​வப்​பட்​டுள்​ளன.

அடை​யாறு குமார ராஜா முத்​தையா மேல்​நிலைப் பள்​ளி​யில் நேற்று நடை​பெற்ற விழா​வில், 654 உயர் தொழில்​நுட்ப ஆய்​வகங்​களை பள்​ளிக்​கல்வி அமைச்​சர் அன்​பில் மகேஸ் திறந்​து​வைத்​தார்.

தொடர்ந்து அப்​பள்​ளி​யில் நிறு​வப்​பட்​டுள்ள உயர் தொழில்​நுட்ப ஆய்​வகத்தை பார்​வை​யிட்​டார். இந்த உயர் தொழில்​நுட்ப ஆய்​வகங்​கள் காணொலி, ஒலி மற்​றும் டிஜிட்​டல் கருவி​கள் மூலம் கற்​பித்​தல் மற்​றும் கற்​றலை எளிமை​யாக்​கிப் பாடப் புத்தக உள்​ளடக்​கத்தை விரை​வாக​வும், ஆர்​வ​மாக​வும் கற்​றுக்​கொள்ள உதவும்.

மேலும் 6 முதல் 9-ம் வகுப்​பு​களுக்​கான செயற்கை நுண்​ணறிவு (AI), இயந்​திர​வியல் மற்​றும் குறி​யிடல் (Coding) தொடர்​பான டிஎன் ஸ்பார்க் (TN SPARK) போன்ற திட்​டங்​களை செயல்​படுத்​த​வும் துணைபுரி​யும்.

தொடக்க விழா​வில், எஸ்​எஸ்ஏ மாநில திட்ட இயக்​குநர் எம்​.ஆர்த்​தி, கூடு​தல் இயக்​குநர் எஸ்​.உ​மா, பள்​ளிக்​கல்வி இயக்​குநர் எஸ்​.கண்​ணப்​பன், பெற்​றோர் ஆசிரியர் கழக மாநில துணைத் தலை​வர் பி.​வி.பி.​முத்​துக்​கு​மார், மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​ கபீர்​ உள்​ளிட்​டோர்​ கலந்​து​கொண்​டனர்​.

0 Comments:

Post a Comment