அரையாண்டு தேர்வுக்கான வினாத் தாள்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும்

 அரை​யாண்​டுத் தேர்வு வினாத்​தாள்​கள் பள்​ளி​களுக்கு நேரடியாக வழங்​கப்​படும் என்று தொடக்​கக் கல்​வித் துறை தெரி​வித்​துள்​ளது. தமிழகத்​தில் பள்ளி மாணவர்​களுக்​கான அரை​யாண்​டுத் தேர்​வு​கள், டிச.10 முதல் 23-ம் தேதி வரை நடை​பெறவுள்​ளது.


இதற்​கான வினாத்​தாள் தயாரிப்பு பணி​கள் தற்​போது நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில், 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்​களுக்​கான வினாத்​தாளை பதி​விறக்​கம் செய்​வதற்​கான வழி​காட்​டு​தல்​களை தொடக்​கக் கல்​வித் துறை வெளி​யிட்​டுள்​ளது.


அதன் விவரம் வருமாறு: 1 முதல் 5-ம் வகுப்பு வரை​யான வினாத்​தாள்​களை எமிஸ் தளத்​தில் டிச.3-ம் தேதி வரை மாவட்​டக் கல்வி அலு​வலர்​கள் பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம். அதன்​பின்​னர் பள்ளிகளில் குழந்​தைகளின் எண்​ணிக்​கைக்கு ஏற்ப அவற்றை பிரதி எடுக்க வேண்​டும்.


தொடர்ந்து வினாத்தாள்களை வகுப்பு, பாடம், பயிற்று மொழி வாரியாக பிரித்து, உறையிட்ட கவரில் வைத்து தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்பாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.




தலைமை ஆசிரியர்கள் அவற்றை பாதுகாப்பாக வைத்து, தேர்வு நடைபெறும் நாளில் வினாத்தாளை எடுத்து பயன்படுத்த வேண்டும். இதேபோல், 6 முதல் 8-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு https://exam.tnschools.gov.in என்ற இணையதளத்தில் வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்படும்.



தேர்வு நடை பெறும் நாளுக்கு முந்தைய தினம் காலை 9 மணியில் இருந்து பள்ளிகள் நேரடியாக வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். வழிகாட்டுதல்களை பின்பற்றி தேர்வை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment