தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: ஆசிரியர்கள் ஆக.3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

 856030-drradhakrishnanaward

தமிழக அரசின் டாக்​டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு ஆசிரியர்​கள் ஆக. 3-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம் என்று பள்​ளிக் கல்​வித் துறை தெரி​வித்​துள்​ளது. மறைந்த குடியரசுத் தலை​வர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5-ம் தேதி ஆண்டு​தோறும் ஆசிரியர் தின​மாக கொண்​டாடப்​படு​கிறது. இந்​நாளில் சிறந்த ஆசிரியர்​களை தேர்வு செய்து ‘டாக்​டர் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கி தமிழக அரசு கவுரப்​படுத்தி வரு​கிறது.


இந்த விருது பெறு​பவர்​களுக்கு ரூ.10,000 ரொக்​கம், வெள்​ளிப் பதக்​கம் மற்​றும் பாராட்​டுச் சான்​றிதழ் வழங்​கப்​படும். அதன்​படி நடப்​பாண்டு மாநில நல்​லாசிரியர் விருதுக்கு தகு​தி​யானவர்​களை தேர்வு செய்​வதற்​கான வழி​காட்டு நெறி​முறை​களை பள்ளிக்கல்​வி இயக்​குநர் ச.கண்​ணப்​பன் வெளி​யிட்​டுள்​ளார்


அதன்விவரம் வருமாறு: நடப்பாண்டு (2025-26) 342 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 38 தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்திய பள்ளிகள், சமூக பாதுகாப்புத்துறை பள்ளிகள், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களில் தலா 2 பேர் என மொத்தம் 386 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுக்கு விருப்பமுள்ள ஆசிரியர்கள் எமிஸ் தளம் வழியாக ஆக. 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.



அதிலிருந்து தகுதியானவர்களை தேர்வு செய்ய முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் 6 பேர் கொண்ட மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட வேண்டும்.



இதையடுத்து விண்ணப்பித்த ஆசிரியர்கள் மாவட்டத் தேர்வுக்குழுவின் முன் நேர்காணலுக்கு வரவழைக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படுவர். அதன்பின் மாவட்ட தேர்வுக் குழுவினர் தகுதியான ஆசிரியர்களின் பட்டியலை பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையிலான மாநில தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு ஆக. 14-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.


அவற்றை ஆராய்ந்து மாநில தேர்வுக்குழு இறுதிப்பட்டியலை தயாரிக்க வேண்டும். விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பதுடன், எவ்வித குற்றச்சாட்டுக்கும், ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாதவராக இருக்க வேண்டும். இதுதவிர அரசியல் கட்சிகளுடன் தொடர்புடையவர்கள் மற்றும் தேசிய விருது பெற்றவர்களின் பெயர்களை பரிந்துரைக்ககூடாது.



அதேபோல், வகுப்பறையில் கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டுமே விருது வழங்கப்படும். அலுவல் பணிகளை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கக்கூடாது. பள்ளி மாணவர்களின் இடைநிற்றலைக் குறைத்தல் போன்ற பணிகளில் ஈடுபாடு கொண்டவராக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

0 Comments:

Post a Comment