Search

ஷாம்பூ பயன்படுத்தும்போது இந்த தவறை பண்ணாதீங்க.. முடி உதிர்வை தடுக்க நிபுணரின் ஆலோசனை.!

 

முடி உதிர்தல், நரைத்த முடி அல்லது உயிரற்ற முடி மற்றும் சிக்கல் போன்ற பிரச்சனைகளால் கிட்டத்தட்ட எல்லா வயதினரும் சிரமப்படுகின்றனர். பெண்கள் மட்டுமின்றி இளைஞர்கள் மற்றும் முதியோர்கள் மத்தியிலும் இது பெரிய அளவில் காணப்படும் பிரச்சனையாக மாறி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், முடி உதிர்வு பிரச்சனைகள் குறித்து சில தீர்வுகளை பற்றி பார்ப்போம். அந்த தீர்வுகளை பின்பற்றுவதன் மூலம், முடி தொடர்பான பிரச்சனையிலிருந்து நிரந்தரமாக விடுபடலாம்.

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இதற்காக நீங்கள் ஷாம்பூ மற்றும் பிற முடி சிகிச்சை தயாரிப்புகளை வாங்க வேண்டியதில்லை. உங்கள் சமையலறையில் இருக்கும் சில பொருட்களை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

ஷாம்பூ மற்றும் எண்ணெயை தவறாக பயன்படுத்துதல்:

கடந்த 8 ஆண்டுகளாக முடி சிகிச்சைத் துறையில் பணியாற்றி வரும் ஆர்.கே அகாடமி மற்றும் சலூனின் உரிமையாளரும் நிபுணருமான ராஜ்குமார் கூறுகையில், பெண், ஆண், குழந்தை, முதியோர் உட்பட முடி உதிர்தல் பிரச்சனை இருப்பவர்கள் சரியான முறையில் ஷாம்பூ மற்றும் எண்ணெய் பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும். ஷாம்பு போடுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன், தலையில் எண்ணெய் தடவி, முடி வேர்கள் வரை மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருந்த பிறகு, அடுத்த ஒரு மணி நேரம் உங்கள் தலைமுடியை டவல் அல்லது துணியால் மூடி வைக்கவும். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு, ஷாம்பூ பயன்படுத்தி உங்கள் தலைமுடியை நன்றாக கழுவுங்கள்.

முடியை மென்மையாகவும், மிருதுவாகவும், சேதமடையாமலும் பராமரியுங்கள்:

மிருதுவான, மென்மையான மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு, நீங்கள் சமையலறையில் வைத்திருக்கும் சில பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்று ராஜ்குமார் கூறியுள்ளார். வெந்தயத்தை இரவில் ஒரு பாத்திரத்தில் ஊறவைத்து, காலையில் சிறிது வெங்காயம் சேர்த்து நன்றாக அரைக்கவும். இப்போது இந்த பேஸ்ட்டை தலைமுடியில் ஒரு மணி நேரம் தடவி விடவும். ஒரு மணி நேரத்திற்கு பிறகு, குளிர்ந்த நீரில் மட்டுமே தலைமுடியைக் கழுவவும். ஷாம்பூ போட்டு குளித்த பிறகு இந்த செயல்முறையை செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாரம் இருமுறை இதைச் செய்வைத்தால், உங்கள் தலைமுடி மென்மையாகவும், மிருதுவாகவும், சேதமடையாமல் இருப்பதையும் நீங்கள் காண்பீர்கள்.

வீட்டிலேயே ஸ்பா செய்யுங்கள்:

சலூன்களில் ஸ்பாவிற்கு நிறைய பணம் செலவழிக்கப்படுகிறது, இதனால், அதை நீங்களே வீட்டில் செய்யலாம். இதற்கு கற்றாழையில் உள்ள ஜெல், உருளைக்கிழங்கு சாறு, சிறிது கருப்பட்ட வாழைப்பழம் மற்றும் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இப்போது அதை முடியின் நுனியில் இருந்து வேர்கள் வரை நன்கு தடவி ஒரு மணி நேரம் விடவும். ஒரு மணி நேரத்திற்கு பிறகு, நன்கு ஷாம்பூ போட்டு கழுவவும். இதனால் உங்கள் தலைமுடி பளபளப்பாக மாறியிருப்பதை நீங்கள் காண்பீர்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment