Search

தேர்வு இல்லாமல் வங்கி வேலை.. மாதம் ரூ.20,000 வரை சம்பளம்.. முழு விவரம்!!

உலகில் பல வகையான வேலை வாய்ப்புகள் இருந்தாலும் சிலருக்கு வங்கியில் வேலை செய்ய வேண்டும் என்பது விருப்பமாக உள்ளது. அதற்காக பலர் பயிற்சிகளை மேற்கொண்டு போட்டித் தேர்வுகளை எழுதுகின்றனர். அப்படி வங்கியில் வேலை பெற விரும்புவோருக்கு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. 

செண்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, அலுவலக உதவியாளர், ஆசிரியர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் entralbankofindia.co.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : அலுவலக உதவியாளர் : இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு 35 வயதுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.

உதவியாளர் : உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

ஆசிரியர் : ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு 65 வயதுக்கும் குறைவாக இருக்க கூடாது.

சம்பளம் : 

அலுவலக உதவியாளர் : அலுவலக உதவியாளர் பதிவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.12,000 ஊதியம் வழங்கப்படும்.

உதவியாளர் : உதவியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.8,000 ஊதியம் வழங்கப்படும்.


ஆசிரியர் : இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.20,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : 

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்காணலுக்கு பிறகு தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி? : 

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தேவையான ஆவணங்கள் அடங்கிய விண்ணப்பத்தை செண்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் தலைமை அலுவலகத்திறு அனுப்பி வைக்க வேண்டும்.



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment