Search

ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; 41 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

 

புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகுகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், ஓட்டுனர் மற்றும் இரவுக் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 41 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.01.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 25

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :  இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 18 வயது முதல் 

32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ.15,700 – 58,100

பதிவறை எழுத்தர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 5

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :  இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 18 வயது முதல் 32 

வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ.15,900 – 58,500

ஓட்டுனர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 இலகு ரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :  இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 18 வயது முதல் 32 

வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ.19,500 – 71,900

இரவுக் காவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 7

கல்வித் தகுதி : எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :  இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 18 வயது முதல் 

32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ.15,700 – 58,100

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://pudukkottai.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து பூர்த்தி 

செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களின்

 முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.01.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://pudukkottai.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் 

பக்கத்தைப் பார்வையிடவும்.


🔻🔻🔻

0 Comments:

Post a Comment