Search

பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டால் இந்த தவறை மட்டும் செய்திடாதீங்க!.. மருத்துவர் அட்வைஸ்!

 தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மருத்துவர் சுரேஷ்குமார் அறிவுரை வழங்கியுள்ளார்.

தீபாவளி என்றாலே கொண்டாட்டம் கோலாகலம்தான். புத்தாடை , இனிப்பு, பட்டாசு என அனைத்து நிகழ்வுகளும் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இருக்கும். இந்நிலையில், பட்டாசுகள் வெடிக்கும் போது என்னதான் கவனமாக இருந்தாலும் எதிர்பாராத விதமாக சில தீக்காயம் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது.

இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். இது குறித்து மதுரை ராஜாஜி மருத்துவமனையின் ஒட்டுறுப்பு மற்றும் மறு சீரமைப்பு அறுவை சிகிச்சை துறை தலைவர் மருத்துவர் ப.சுரேஷ் குமார் நமது நியூஸ் 18 தமிழுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார்.

🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment