Search

மீம்ஸ் கிரியேட்டரா நீங்க? மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் சூப்பர் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!

அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இந்த காலிப்பணியிடங்கள் வெளியாதார முறையில் (Out Sourcing) நியமனம் செய்யப்பட உள்ளதாகவும், முற்றிலும் தற்காலிகமானது என்றும்,  தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடம்: மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

திடக்கழிவு மேலாண்மை & சுகாதாரம்  (Solid Waste Management & Sanitation Expert) :

பணியிடங்கள் :  2

மாதாந்திர ஊதியம் - ரூ. 35,000

திரவக்கழிவு மேலாண்மை (Liquid Waste Management Expert)

பணியிடம் : 1

மாதாந்திர ஊதியம் - ரூ. 35,000

இந்த இரண்டு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், இளங்கலை சுற்றுச்சூழல் பொறியியல் பட்டம் / பொறியியல் (Civil ) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், 1- 2 பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.

திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தல் (Planning, Convergence & Monitoring) : 

பணியிடம்:  1;

மாதாந்திர ஊதியம் - ரூ. 35,000

பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசால் இணைக்கப்பட்ட / அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது பல்கலைகழகத்தில் B.Tech/MBA/MSc. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தகவல், கல்வி மற்றும் தொடர்பு (IEC Consultants) :

பணியிடங்கள் - 2;

மாதாந்திர ஊதியம் - ரூ. 35,000

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், புகழ்பெற்ற/ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் மக்கள் தொடர்பு / ஊடக பிரிவில் முதுகலை பட்டம் அல்லது அதற்கு சமமான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் 2,3 வருட பணி அனுபவம் இருத்தல் வேண்டும். அரசாங்க அதிகாரிகள், கல்வியார்கள், சமூக ஊடகங்களில் செல்வாக்கு உள்ளவர்களுடன் தொடர்பு கொள்வது. தேவைப்படும் சூழலில் பணிபுரியும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். கணினியில் MS Word, Power Point. Adobe Photoshop தெரிந்திருக்க வேண்டும்.

வீடியோ தயாரித்தல், மீம் தயாரித்தல், சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் உருவாக்குதல் போன்றவற்றில் அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முன்மாதிரியாக எழுதும் நிறன். ஒருயொருக்கொருவருடன் தொடர்பு கொள்ளுதல், விளக்கவுரை அளிக்கும் திறன், தமிழ் கலாச்சரங்களை புரிந்துகொள்ளுதல் ஆகியவை பெற்றிருத்தல் வேண்டும். இப்பனிக்கு மாத ஊதியம் ரூ.25,000/- வழங்கப்படும்.

மேற்காணும் அனைத்துப் பணிகளுக்கும் வயது 30-க்குள் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

சுயவிவரக் குறிப்புகளுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ இணை இயக்குனர்/திட்ட இயக்குனர்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட ஆட்சியரகம் அரியலூர்  என்ற முகவரிக்கு 15.10.2023 -க்குள் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

பேற்படி பணிகள் மற்றும் இதர சந்தேகங்களை அலுவலக வேலை நாட்களில் அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் நேரில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஆள்சேர்க்கை அறிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news 

0 Comments:

Post a Comment