Search

அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

 

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, நாமக்கல் அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலில் தொடங்க உள்ள அர்ச்சகர் பயிற்சி பள்ளிக்கு ஆசிரியர், விடுதி காப்பாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.08.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

தமிழ் ஆசிரியர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் முதுகலைப் பட்டம் மற்றும் பி.டி அல்லது பி.எட் படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டு அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 20,600 – 65,500

ஆகம ஆசிரியர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு வேத ஆகம பாடசாலையில் ஆசிரியராக 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். அல்லது 5 ஆண்டுகள் அர்ச்சகராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். மற்றும் 4 ஆண்டு படிப்பிற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 20,600 – 65,500

விடுதிக் காப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 20,600 – 65,500

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 11,600 – 36,800

சமையலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். உணவு தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 11,600 – 36,800

தூய்மை பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 11,600 – 36,800

வயதுத் தகுதி: 01.07.2023 அன்று 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://namakkalanjaneyar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.

முகவரி: உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயில், நாமக்கல் – 637001.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.08.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் https://namakkalanjaneyar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment