Search

எட்டாம் வகுப்பு முடித்தவரா? ரூ.20,000/- சம்பளத்தில் காத்திருக்கும் அரசு வேலை!

 

எட்டாம் வகுப்பு முடித்தவரா? ரூ.20,000/- சம்பளத்தில் காத்திருக்கும் அரசு வேலை!

கோயம்புத்தூர் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தில் காலியாக உள்ள சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் அமைப்பின் அலுவலகத்தில் பணிபுரிய ஒப்பந்த அடிப்படையில் துணை ஊழியர்களை ஈடுபடுத்துவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 05.06.2023 முதல் 16.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கோயம்புத்தூர் மாவட்ட காலிப்பணியிடங்கள்:
  • Office Assistant/Clerks – 2 பணியிடங்கள்
  • Receptionist – cum- Data Entry Operator (Typist) – 01 பணியிடம்
  • Office Peon (Mushi/Attendant) – 01 பணியிடம்

என மொத்தம் 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து எட்டாம் வகுப்பு அல்லது டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

LADCS சம்பள விவரம்:
  • Office Assistant/Clerks – ரூ.20,000/-
  • Receptionist – cum- Data Entry Operator (Typist) – ரூ.20,000/-
  • Office Peon (Mushi/Attendant) – ரூ.14,000/-
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதிகள், திறன்கள், பயிற்சி மற்றும் அனுபவம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து CHAIRMAN/PRINCIPAL DISTRICT JUDGE, District Legal Services Authority, ADR Building, District Court Campus, Coimbatore – 641018 என்ற முகவரிக்கு 1.06.2023 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment