வாசிப்புத்திறனை மேம்படுத்தும் செயல்பாடுகள்: பள்ளிக் கல்வித் துறை அரசாணை சொல்வது என்ன?

 Education News (கல்விச் செய்திகள்) 

1363328

அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக பாட விவரங்கள் வடிவமைத்து போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.


இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணை விவரம்: ”அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து புத்தகங்களையும் மாணவர்கள் வாசிக்கும் வகையில் கதை சொல்லும் அமர்வுகள், வாசிப்பு சவால்கள், புத்தக கழகங்கள் ஆகியவற்றின் மூலம் அறிவுத் தேடல் மற்றும் கருப்பொருள் வாசிப்பு வாரம் செயல்படுத்தப்படும்.


இது தவிர வாரந்தோறும் தேசத் தலைவர்கள், அறிவியல் அறிஞர்கள், விளையாட்டு வீரர்கள், சுற்றுச்சூழல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றில் பேச்சுப் போட்டி, கதை சொல்லுதல், நடித்துக் காட்டுதல், குழு விவாதம், பட்டிமன்றம் போன்றவை நடத்தப்பட்டு மாணவர்களின் வாசிப்புத் திறன்கள் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த சட்டப் பேரவை கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிட்டார்.


இதை செயல்படுத்தும் வகையில் மாணவர்களின் அறிவுத் தேடல் மற்றும் வாசிப்புத் திறன்களை மேம்படுத்த பருவம், மாதம், வாரம், வகுப்பு வாரியாக உள்ள பொருண்மைகளுக்கான விவரங்களை மாநில கல்வியியல் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் வடிவமைக்க வேண்டும்.


மேலும், பள்ளிகளில் இந்த திட்டத்தை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநரகம் வாயிலாக அமல்படுத்தவும் அனுமதி வழங்கக் கோரி தொடக்கக் கல்வித் துறை கருத்துரு வழங்கியது. அதையேற்று அதற்கான அனுமதியை வழங்கி ஆணையிடுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து 1 முதல் 8ம் வகுப்பு வரை 3 பருவங்களிலும் என்னென்ன தலைப்புகளில் வாசிப்பது, கதை சொல்லுவது, விவாதிப்பது, கலந்துரையாடுவது என்பது குறித்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.


அதில் தமிழக அரசின் சின்னங்கள், நெகிழியைத் தவிர்ப்போம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பனை மரத்தின் சிறப்பு, தேசத் தலைவர் ஜவஹர்லால் நேரு, இயற்கை அளித்த கொடை, உடலை உறுதி செய், நேர்மையின் சிறப்பு, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு காமராஜர் ஆற்றிய பணிகள், எனக்குப் பிடித்த நண்பன் என பல்வேறு தலைப்புகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பணியாளர்களின் E-SR சரிபார்த்தல் பணி தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

   Education News (கல்விச் செய்திகள்) 

IMG_20250528_160117

சென்னை நந்தனம் கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இணை இயக்குனர் அவர்களால் 14.05.2025 நடத்தப்பட்ட Google meet ல் E - SR Cleansing தொடர்பான ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு கீழ்காணும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

பணியாளர்களின் E-SR சரிபார்த்தல் பணி தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

DSE - ESR Circular & Weekly Format.pdf

👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பக்ரீத் பண்டிகை தேதி அறிவிப்பு

   Education News (கல்விச் செய்திகள்) 
பக்ரீத் பண்டிகை 07-06-2025 (சனி ) அன்று கொண்டாடப்படும் என அறிவிப்பு.

IMG-20250528-WA0008

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Research Associate வேலை – சம்பளம்: ரூ.58,000/- || நேர்காணல் மட்டுமே!

 பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Research Associate வேலை – சம்பளம்: ரூ.58,000/- || நேர்காணல் மட்டுமே!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Research Associate பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Pondicherry University காலிப்பணியிடங்கள்:

Research Associate பணிக்கென காலியாக உள்ள 1 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Research Associate கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் PhD தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Pondicherry University வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Research Associate ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.58,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

Pondicherry University தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.06.2025 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification pdf



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பாரதியார் பல்கலைக்கழகத்தில் Project Assistant காலிப்பணியிடங்கள் – கல்வி தகுதி குறித்த முழு விவரங்களுடன்!

 பாரதியார் பல்கலைக்கழகத்தில் Project Assistant காலிப்பணியிடங்கள் – கல்வி தகுதி குறித்த முழு விவரங்களுடன்!

பாரதியார் பல்கலைக்கழகமானது Project Assistant பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.23,600/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Bharathiar University காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Assistant பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.

Project Assistant கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழக வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Project Assistant ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.23,600/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bharathiar University தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.06.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

IIT Madras-ல் Junior Research Fellow வேலைவாய்ப்பு 2025 – மாத சம்பளம்: ரூ.37,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 IIT Madras-ல் Junior Research Fellow வேலைவாய்ப்பு 2025 – மாத சம்பளம்: ரூ.37,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

IIT Madras ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IIT Madras காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow கல்வி தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / M.Sc / ME / M.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IIT Madras வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Junior Research Fellow ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.37,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIT Madras தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.06.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Assistant வேலை – சம்பவம்: ரூ.25,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

 அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Assistant வேலை – சம்பவம்: ரூ.25,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Assistant பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

Project Assistant பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 09.06.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TN அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கான SBIன் 5 வகையான Salary Packages cum Family Account Plan!

 TN அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கான SBIன் 5 வகையான Salary Packages cum Family Account Plan!


_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

IMG-20250527-WA0009

பொதுத்துறை வங்கிகளுடனான தமிழ்நாடு அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படியான காப்பீட்டுச் சலுகைகளுக்கென பாரத மாநில வங்கியானது (State Bank of India) தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கான மாநில அரசு ஊதியத் தொகுப்பில் (TN STATE GOVERNMENT Employees SALARY PACKAGE - SGSP) ஊழியர்களின் மாத ஊதியத்தின் அடிப்படையில் 5 திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.


முன்னதாக Salary Accountல் இருப்போருக்கு தற்போது SGSP கணக்காக மாற்றப்பட்டிருக்கும். எனினும் உறுதி செய்து கொள்ளவும்.


Salary Accountல் இல்லாதவர்கள் ஏப்ரல் மாத Pay Slip உடன் வங்கிக் கிளையை அணுகவும்.


மேலும், Gold Packageக்கு மேல் (Net Salaray Rs.25,000க்கு மேல்) உள்ளோர் SBI RISHTEY திட்டத்தின் மூலம் பெற்றோர் - வாழ்க்கைத்துணை - பிள்ளைகள் என 4 நபர்களுக்கான தனி கணக்குகளை தொடங்கலாம் / மாற்றிக்கொள்ளலாம். இதன் மூலம் அவர்களுக்கும் Zero Balance Accountவுடன் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு ரூ.5 இலட்சம் விபத்துக் காப்பீடு (Death) கிடைக்கும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பொதுத் தோ்வுகளில் மாணவா்கள் தோல்வி: அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு ‘நோட்டீஸ்’

 869380

தமிழகத்தில் நிகழாண்டு நடைபெற்ற பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வுகளில் 73,820 அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் தோ்ச்சி பெறாத நிலையில், அது தொடா்பாக முதுநிலை ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்டு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ‘நோட்டீஸ்’.


தமிழகத்தில் நிகழாண்டு நடைபெற்ற பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வுகளில் 73,820 அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் தோ்ச்சி பெறாத நிலையில், அது தொடா்பாக முதுநிலை ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்டு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ‘நோட்டீஸ்’ வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டு, தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில் பிளஸ் 2 வகுப்பில் 95 சதவீதம் பேரும், பிளஸ் 1 வகுப்பில் 92 சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றனா்.


அதேவேளையில் இந்தத் தோ்வுகளில் ஒரு லட்சத்து 218 மாணவா்கள் தோல்வி அடைந்துள்ளனா். அதில் 73,820 போ் (71.5%) அரசுப் பள்ளி மாணவா்கள்.


இந்நிலையில், திருச்சி, கரூா், வேலூா் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களின் ஆசிரியா்களிடம் அது தொடா்பாக விளக்கம் கேட்டு ‘17ஏ’ ‘நோட்டீஸ்’ வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.


குறிப்பாக, அரசு மாதிரிப் பள்ளிகளில் ஏதேனும் மாணவா்கள் தோல்வி அடைந்திருந்தால் அவரின் வகுப்பு மற்றும் பாட ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்கும் கெடுபிடிகள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.


இந்த விவகாரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் பொதுச் செயலா் பொ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:


‘எமிஸ்’ உள்பட கற்றல் சாராத பணிகள், நலத் திட்டங்கள், கலைத் திருவிழாக்களுக்கு தனி அலுவலா்கள் நியமிக்காமல் ஆசிரியா்களுக்கு கூடுதல் பணிகளாக வழங்கப்படுகின்றன. ஆனால், தற்போது தோ்ச்சி அடையாத மாணவா்களுக்காக ஆசிரியா்களை பொறுப்பாக்கி விளக்கம் கேட்பது நியாயமில்லை. இதில் ஆசிரியா்களை மட்டும் குற்றவாளியாக்குவதை ஏற்க முடியாது.


சமுதாயத்தின் பல்வேறு சூழல்களிலிருந்து மாணவா்களை நெறிப்படுத்தும் பணிகளை அரசுப் பள்ளி ஆசிரியா்கள் செய்து வருகின்றனா். பள்ளிகள் புள்ளிவிவரங்களாக, இயந்திரகதியாக மாறக் கூடாது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியா்களுக்கு மன உளைச்சல்களை உண்டாக்கும் இத்தகைய செயல்களை பள்ளிக் கல்வித் துறை கைவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

வருமான வரி தாக்கல் செய்ய அவகாசத்தை நீட்டித்தது வருமானவரித்துறை

 வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 15ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்தது வருமானவரித்துறை...

IMG-20250527-WA0008



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

SPD அவர்களின் தலைமையில் நடைபெற்ற நேற்றைய இணைய வழி கூட்டத்தில் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் மூலம் பெறப்பட்ட அறிவுரைகள் விவரம்.

 Education News (கல்விச் செய்திகள்)

869380

SPD அவர்களின் தலைமையில் நடைபெற்ற  நேற்றைய இணைய வழி கூட்டத்தில் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் மூலம் பெறப்பட்ட அறிவுரைகள் விவரம்.


*மாநில அடைவுத் திறன் தேர்வில் மாநிலத்தின் மொத்த நிலை குறித்து பகுப்பாய்வு (ANALYSIS) செய்யப்பட்டது.*


1. ஒவ்வொரு ஆண்டும் மாநில அடைப்பு திறன் தேர்வு  நடப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

2. நடுநிலைப் பள்ளிகளில் உள்ள HITECH-LAB  மூலம் மாணவர்களின் கற்றல் திறன் அறியப்படும்.


3. மாநில அடைவுத்திறன் தேர்வு மதிப்பெண்கள் மாநில, மாவட்ட, கல்வி மாவட்ட, ஒன்றிய, பள்ளி அளவில் எமிஸ் இணையதளத்தில் 27.5.25 அன்று வெளியிடப்படும் . 


4. மாநில அடைவுத்திறன் தேர்வின் விபரங்களை அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பள்ளியளவில் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும்,


 ஒன்றிய அளவில் வட்டார கல்வி அலுவலர்களும் முழு அளவில் தங்களது ஒன்றியத்தின் நிலையை தெரிந்து வைத்திருக்க வேண்டும். 


5. தங்கள் பள்ளி மற்றும் ஒன்றியத்தின் நிலையை அறிந்து கொண்ட பின்னர் வரும் கல்வியாண்டில் இதனை மேம்படுத்துவதற்கான செயல் திட்டத்தினை  (action plan) ஒன்றிய அளவில் தயார் செய்ய வேண்டும்,  இதனைத் தொடர்ந்து மாவட்ட அளவிலும் தயார் செய்து ஜூன் முதல் வாரத்தில் நடைபெறக்கூடிய கூட்டத்தில் சமர்ப்பித்து விளக்க வேண்டும்.


6     மாநில அடைவுத்திறன் விபரங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து ஒவ்வொரு மாதமும் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறக்கூடிய கூட்டத்தில் முதல் தலைப்பாக இதன் முன்னேற்ற விபரத்தை மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் மூலமாக ஆய்வு செய்ய வேண்டும்.


7. ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர் அறையில் மாநில அடைவுத் திறன் சார்பான பள்ளி செயல்பாட்டின் (Report card) நகல் காட்சிப்படுத்தப்பட வேண்டும்,  ஆய்வு அலுவலர்கள் பள்ளி பார்வையின் போது இதனை உறுதிப்படுத்தி அதன் முன்னேற்றத்தினை உறுதி செய்ய வேண்டும்.


8. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆய்வு அலுவலர்கள் ஆகியோர் கற்றல் விளைவுகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டும்.


9. 6-8 வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவை மேம்படுத்துவதற்காக THIRAN ( Targeted Help for IMPROVING REMEDIATION & ACADEMIC NURTURING ) திட்டம் அடுத்த ஆறு மாதங்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. ஆசிரியர்களுக்கு கையேடுகள் மற்றும் மாணவர்களுக்கு கட்டகங்கள் வழங்கப்பட உள்ளது.


10. மேலும்THIRAN திட்டம் முழு அளவில் செயல்படுத்த மாவட்ட அளவில் பதினைந்து பேர் கொண்ட குழு முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட உள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )