காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் SSP (Summer Sequential Programme) முறையில் எம்.பில்., பயின்று ஊக்க ஊதியம் பெற்ற அனைத்து ஆசிரியர்களின் ஊதியத்தை மறு நிர்ணயம் செய்ய உத்தரவு.

831191


காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் SSP (Summer Sequential Programme) முறையில் எம்.பில்., பயின்று ஊக்க ஊதியம் பெற்ற அனைத்து ஆசிரியர்களின் ஊதியத்தை மறு நிர்ணயம் செய்யவும், ஏற்கனவே வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை சட்டப்படி வசூலிக்கவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

 SSP M.Phil.,- Download here


 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

“பள்ளி வளாகங்களில் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதியில்லை” - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி

வகுப்பு நடைபெறும் நேரத்தில் எந்தக் காரணத்துக்காவும் யாரும் பள்ளிக்குள் நுழைவதோ, மாணவ, மாணவியரை நேரடியாகச் சந்திப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் பள்ளி வளாகங்களில் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதியில்லை’ என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கல்விக் கூடங்கள் காட்சிக் கூடங்கள் அல்ல. அரசியலின் மேடை அல்ல. அடுத்த தலைமுறைகளை உருவாக்கும் அறிவுப் பண்ணையாகும். இனிவரும் காலங்களில் பள்ளி வளாகங்களில் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதியில்லை.

அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளைத் தவிர்த்து, பிறந்தநாள் விழாக்களோ அரசு சாராத நிகழ்வுகளோ நடத்தக் கூடாது. எந்த அரசியல் கட்சியினரும், எந்தத் தனியார் அமைப்பினரும் நேரடியாக மாணவர்களைச் சந்திக்க அனுமதியில்லை.

மாணவச் செல்வங்கள் வகுப்பறையில் அமர்ந்து கற்கும் ஒவ்வொரு நொடியும், அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, இந்த நாட்டின் வருங்காலத்தை வடிவமைக்கும் பொன்னான நேரமாகக் கருதப்படுகிறது. அந்த நேரம் வெறும் பாட நேரமல்ல; கனவுகள் விதைக்கப்படும் நேரம், சிந்தனைகள் செழுமையாக்கும் நேரம், அறிவு பெருகும் நேரம், வருங்காலத் தமிழகம் தன் எண்ணங்களை வண்ணமயமாக செதுக்கும் நேரம்.


எனவே, வகுப்பு நடைபெறும் நேரத்தில் எந்தக் காரணத்திற்காகவும் யாரும் பள்ளிக்குள் நுழைவதோ, மாணவ, மாணவியரை நேரடியாகச் சந்திப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். மாணவர்களின் கவனமும், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும் எவ்வித இடையூறுமின்றித் தொடர்வதே நம் முதன்மைப் பொறுப்பு.

​பள்ளி வளாகங்கள் விழாக்களின் கூடாரமாக அல்ல, அறிவுத் தெளிவின் விழிப்புணர்வின் சிந்தனை மண்டபமாக மிளிர வேண்டும். புகழ் பரப்பும் இடமாக அல்ல, எதிர்காலத்தைப் படைக்கும் இடமாகத் திகழ வேண்டும்.

​எண்ணங்களைத் துளிர்விட்டு, கனவுகளுக்கு இறக்கை கட்டி, எண்ணுவதையெல்லாம் நனவாக்கும் ஆற்றலைப் பெறும் நம் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் இன்னும் இன்னும் உயரப் பறக்கட்டும்.

அறிவிலும், பண்பிலும், சாதனைகளிலும் உலகம் வியக்கும் உயரங்களை எட்டட்டும். அரசுப் பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் உரிய ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் கல்விச் சூழலை உறுதிசெய்யும் வகையில் விரிவான நெறிமுறைகள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விரைவில் வெளியிடப்படும். அன்பு மாணவச் செல்வங்களே... நல்லதைப் படியுங்கள். நன்றாகப் படியுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமைச்சர் கீர்த்தனா சமீபத்தில் அரசுப் பள்ளி ஒன்றுக்கு சென்று, மாணவியிடம் ஆங்கிலத்தில் பேசச் சொல்லி நடந்துகொண்ட விதம் பெரும் சர்ச்சையானது. அதேபோல், அரசுப் பள்ளிகளில் புகுந்து மாணவர்களிடம் ஆய்வு செய்வது, முதல்வர் விஜய்யின் படத்தை மாட்டுவது என தொடர்ந்து வெளிவரும் ரீல்ஸ்கள் தவெகவின் பெயரை டேமேஜ் செய்து வந்ததும் கவனிக்கத்தக்கது.

 

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

NHIS - 2026 - குடும்ப உறுப்பினர்களை IFHRMS ல் பதிவேற்றம் செய்தல் தொடர்பான அறிவுரைகள்!

831748

NHIS - 2026 - குடும்ப உறுப்பினர்களை IFHRMS ல் பதிவேற்றம் செய்தல் தொடர்பான அறிவுரைகள்!

நண்பர்களே 24.06.2026 இல் அரசு அறிவித்துள்ளபடி அனைத்து பணியாளர்களும் புதிய காப்பீட்டு திட்டத்தின் கீழ் வருகின்றனர். ஜீலை 2026 மாதத்தில் இருந்து அனைத்து பணியாளர்களின் (Special Time Scale தவிர) ஊதியத்தில் இருந்தும் 375 + 15 390 ரூபாய் பிடித்தம் மேற்கொள்ளப்படும்.

தற்போது புதிய நடைமுறையாக IFHRMS இணைய தளத்தின் மூலமாக நாம் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களின்

👇👇👇

NHIS 2026 - Family Members instructions - Download here 

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பொது ‘டெட்’ தேர்வு அறிவிப்பு வெளியாவதில் தாமதம்: டிஆர்பி மீது ஆசிரியர்கள் அதிருப்தி

hindutamil-prod%2F2026-01-29%2F0ibpeopd%2F03FEBTH-TRB

பொது ‘டெட்’ தேர்​வுக்​கான அறி​விப்பு வெளி​யி​டா​மல் டிஆர்பி கால​தாமதம் செய்து வரு​வதாக இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்​தவர்​கள், பி.எட் பட்​ட​தா​ரி​கள் அதிருப்​தி​யில் உள்​ளனர்.

மத்​திய அரசின் இலவச கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​படி ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணி​யாற்​றும் இடைநிலை ஆசிரியர்​களுக்​கும், பட்​ட​தாரி ஆசிரியர்​களுக்​கும் தகு​தித்​தேர்வு (‘டெட்’) தேர்ச்சி கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்​சில் (என்​சிடிஇ) விதி​முறை​யின்​படி, ஆண்​டுக்கு 2 தடவை கட்​டா​யம் ‘டெட்’ தேர்வு நடத்​தப்பட வேண்​டும். இந்த விதி​முறை​யின்​படி, மத்​திய அரசு பள்​ளி​களுக்​கான ‘சி-டெட்’ தேர்வு ஆண்​டுக்கு 2 தடவை திட்​ட​மிட்​டபடி நடத்​தப்​படு​கிறது.

ஆனால், தமிழகத்​தில் ‘டெட்’ தேர்வு நடத்​தும் ஆசிரியர் தேர்வு வாரியமோ (டிஆர்​பி) இந்த விதி​முறையை இது​வரை எந்த ஆண்​டிலும் அமல்​படுத்​தல்​லை. ஆண்​டுக்கு ஒரு ‘டெட்’ தேர்வு நடத்​தப்​பட்​டாலே பெரிய விஷய​மாகப் பார்க்​கப்​படு​கிறது. கடைசி​யாக ‘டெட்’ தேர்வு கடந்த 2025-ம் ஆண்டு நவம்​பரில் நடத்​தப்​பட்​டது.

ஆசிரியர் தேர்வு வாரி​யம் வெளி​யிட்ட 2026-ம் ஆண்​டுக்​கான வரு​டாந்​திர தேர்வு அட்​ட​வணை​யின்​படி, இந்த ஆண்​டுக்​கான முதலா​வது பொது ‘டெட்’ தேர்​வுக்கு கடந்த மே மாதம் அறி​விப்பு வெளி​யிடப்​பட்டு ஜூலை மாதத்​தில் தேர்வு நடத்​தப்​பட்​டிருக்க வேண்​டும். 2-வது தேர்​வுக்​கான அறி​விப்பு அக்​டோபர் மாதம் வெளி​யிடப்​பட்டு டிசம்​பரில் தேர்வு நடத்​தப்பட வேண்​டும். ஆனால், முதலா​வது தேர்​வுக்​கான அறி​விப்​பு​கூட இன்​னும் வெளி​யிடப்​பட​வில்​லை.

இதற்​கிடையே, பணி​யில் உள்ள ஆசிரியர்​களுக்​கான சிறப்பு ‘டெட் தேர்வு ஜூலை 4,5-ம் தேதி​களில் தேர்வு நடத்​தப்​பட்​டது. இந்​தத் தேர்​வுக்கு பணி​யில் இல்​லாத ஆசிரியர்​கள் அனு​ம​திக்​கப்​பட​வில்​லை. தற்​போது பள்​ளி​களில் பணிபுரி​யாத இடைநிலை ஆசிரியர்​கள், பட்​ட​தாரி ஆசிரியர்​கள், இந்த ஆண்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்​றும் பி.எட் முடித்​தவர்​கள் பொது ‘டெட்’ தேர்​வுக்​கான அறி​விப்பை எதிர்​பார்த்​துக் கொண்​டிருக்​கிறார்​கள்.

இதுகுறித்து இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்​றும் பி.எட் முடித்​தவர்​கள் கூறும்​போது, “என்​சிடிஇ விதி​முறை​யின்​படி, ‘சி-டெட்’ தேர்வு ஆண்​டுக்கு 2 தடவை திட்​ட​மிட்​டபடி நடத்​தப்​படு​கிறது. ஆனால், டிஆர்பி மட்​டும் ஆண்​டுக்கு ஒரு டெட் தேர்​வை​கூட நடத்த கால​தாமதம் செய்​வது ஏன் என்று தெரிய​வில்​லை. எனவே, இனி​யும் கால​தாமதம் செய்​யாமல் பொது ‘டெட்’ தேர்​வுக்​கான அறி​விப்பை உடனே வெளி​யிட வேண்​டும். அதே​போல் தேர்வு முடிவை​யும் விரைந்​து வெளி​யிட வேண்​டும்​” என்​றனர்​. 

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

15.07.2026 அன்று அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

15.07.2026 அன்று அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

832825

பார்வை 1இல் கண்டுள்ள அரசாணையில் தமிழ்நாட்டில் கல்லாமை இருளை நீக்கப் பள்ளிகள் பல திறந்து கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டுக் கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான ஜுலை திங்கள் 15 ஆம் நாளினை " கல்வி வளர்ச்சி நாள்" என அரசு அறிவித்தும் அந்நாளில் காமராஜர் திருவுருவப்படத்தை அலங்கரித்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட அரசால் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இவ்வாண்டு அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, ஓவியப்போட்டி போன்ற போட்டிகளை நடத்தி வெற்றிப்பெற்ற மாணவ/ மாணவியருக்கு பரிசு வழங்கி ஊக்குவிக்குமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியருக்கு அறிவுறுத்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும் தெரிவிக்கப்படுகிறது. 

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பள்ளிகளில் கல்வி சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகள் மட்டுமே நடைபெற வேண்டும் - பள்ளிக் கல்வித் துறையின் விரிவான அறிவுரைகள் வெளியீடு!

834859

பள்ளிகளில் கல்வி சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகள் மட்டுமே நடைபெற வேண்டும் - பள்ளிக் கல்வித் துறையின் விரிவான அறிவுரைகள் வெளியீடு!

DSE, DEE & DPS Co-Proceedings - Download here 

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

127 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்து 125 கணினி பயிற்றுநர் நிலை - 1 பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை வெளியீடு!

 பள்ளிக்கல்வி அரசு/ நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில், கணினிப்பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருப்பதால், ஒரு கணினி ஆசிரியர் பணியிடம் கூட அனுமதிக்கப்படாத பள்ளிகளுக்கு உபரியாக உள்ள 127 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்து 125 கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களை தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. (13.03.2026)


127 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்து 125 கணினி பயிற்றுநர் நிலை - 1 பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை வெளியீடு!


NHIS 2026 அரசு பணியாளர்களுக்கு e_Card - New Update

NHIS 2026 to Tamilnadu Government Employees:


தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2026 இன் படி பயனாளிகளுக்கான NHIS Identity Card அவர்களது IFHRMS ID  விபரங்களில் இருந்து e_Card ஆக வழங்கப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

( G.O.Ms.No.122 Finance (Health insurance) Department  Dated 24.6.2026 (Para No. 14 , Page no 24)

இது தொடர்பாக 01.07.2026 அன்று நடைபெற்ற இயக்குனரக ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து பணியாளர்களுக்கும்   e_ ID CARD வழங்கப்பட ஏதுவாக அனைத்து பணியாளர்களின் e_SR-ல் அவர்களது   குடும்ப உறுப்பினர்கள் விவரத்தினை 13-07-2026 - க்குள் முழுமையாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

NHIS 2026 - ஆதார், புகைப்படம், மாற்றுத்திறனாளிகள் வகை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விவரங்களை IFHRMS ல் பதிவேற்றம் செய்ய உத்தரவு - Government Letter

NHIS 2026 - ஆதார், புகைப்படம், மாற்றுத்திறனாளிகள் வகை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விவரங்களை IFHRMS ல் பதிவேற்றம் செய்ய கருவூலகங்கள் மற்றும் கணக்குகள் துறை உத்தரவு!



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

PRASHAST App 2.0 for Health Screening of Students During the Academic Year 2026-2027 Regarding - SPD Letter



Samagra Shiksha - Inclusive Education Implementation of PRASHAST App 2.0 for Health Screening of Students during the Academic Year 2026-2027 Regarding.

PRASHAST is a school-based disability screening tool designed to help identify students who may require further assessment for disabilities recognized under the Rights of Persons with Disabilities (RPwD) Act, 2016. It serves as an initial screening and referral mechanism to facilitate timely identification and support.

The PRASHAST App also includes a Teacher Sensitization Module, designed to support teachers in effectively conducting the PRASHAST screening process



 

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அரசுப் பள்ளிகளில் பாடநூல்கள் முழுமையாக விநியோகம் - பள்ளிக்கல்வித் துறை விளக்கம்



தமிழக பள்ளிக் கல்வியில் அரசுப் பள்ளிகளில் 4, 5 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள் முழுமையாக விநியோகிக்கப்பட்டுள்ளன. சில மாவட்டங்களில் பயிற்சிக் கையேடுகள் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், அந்தப் பிரச்னையும் சரி செய்யப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் மெட்ரிக். பள்ளிகள் கடந்த ஜூன் 4-ஆம் தேதி திறக்கப்பட்டு கற்றல்-கற்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதிய கல்வியாண்டின் முதல் நாளில் இருந்தே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள் விநியோகிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 4, 5 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவா்களில் பலருக்கு சில பாடங்களுக்கான விலையில்லா பாடநூல்கள் விநியோகிக்கப்படவில்லை என்றும், அதனால் அந்த மாணவா்கள் அருகில் உள்ள மாணவா்களின் புத்தகங்களைப் பாா்த்து கற்றலில் ஈடுபடுகின்றனா் என்ற தகவல் வெளியானது. இந்தத் தகவலை பள்ளிக்கல்வித் துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: புதிய பாடத்திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கு வடிவமைக்கப்பட்ட பாடநூல்கள் எவ்வாறு முழுமையாக விநியோகிக்கப்பட்டதோ, அதேபோன்று 4, 5 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கான பாடநூல்களும் அந்தந்த மாவட்டங்களுக்கு உரிய எண்ணிக்கையில் அனுப்பி வைக்கப்பட்டு, விநியோகமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் (சமக்ர சிக்ஷா) சாா்பில் வழங்கப்படும் பயிற்சிக் கையேடுகளின் விநியோகத்தில் மட்டுமே சற்று பற்றாக்குறை இருந்தது. அந்தப் பிரச்னையையும் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று விருதுநகா், விழுப்புரம், பரமக்குடி ஆகிய கல்வி மாவட்டங்களில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளில் பயிலும் சில மாணவா்களுக்கான பாடநூல்கள் பற்றாக்குறை இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து கல்வி மாவட்டங்களின் அருகில் உள்ள பாடநூல் கழகத்தின் கிடங்குகளில் இருந்து பாடநூல்கள் வரவழைக்கப்பட்டு அந்தப் பிரச்னையும் தீா்க்கப்பட்டது. எனவே, அரசுப் பள்ளிகளில் 4, 5 வகுப்பு மாணவா்களுக்கு சில பாடங்களுக்கான பாடநூல்கள் வழங்கப்படவில்லை என வெளியான தகவல் தவறானது.

பள்ளிக் கல்வியின் எமிஸ் தளத்தில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே பாடநூல்கள் அச்சிடப்படுவதால் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

மேலும், நிகழ் கல்வியாண்டில் ஜூன் மாதத்துக்குப் பிறகு 1 முதல் 5 வரையிலான வகுப்புகளில் புதிதாக சோ்க்கை பெற்ற மாணவா்களின் விவரங்கள் பெறப்பட்டு அவா்களுக்கான பாடநூல்களும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை வியாழக்கிழமைக்குள் (ஜூலை 9) முழுமையாக வழங்கப்பட்டு விடும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.


 

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Census 2027 - சுய கணக்கெடுப்பு (Self-Enumeration) குறித்த தகவல்கள்

 தமிழ்நாட்டில் ஜூலை 17, 2026 முதல் ஜூலை 31, 2026 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான சுய கணக்கெடுப்பு (Self-Enumeration) நடைபெறுகிறது



இதன் மூலம் பொதுமக்கள் நேரில் வருபவர்களுக்காகக் காத்திருக்காமல், தங்கள் இல்லம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக சுயமாகப் பதிவு செய்து கொள்ள முடியும்.

✅சுய கணக்கெடுப்பு செய்யும் முறை:

அதிகாரப்பூர்வ தளம்: 




 (Census of India Self-Enumeration Portal).


📝பதிவு செய்தல்: உங்கள் கைப்பேசி எண்ணைப் பயன்படுத்தி லாகின் (Login) செய்யவும்.


✍️தகவல் பதிவு: உங்கள் அடிப்படை விவரங்கள் மற்றும் குடியிருப்பு விவரங்கள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்


🌸சரிபார்ப்பு (Validation): சுய கணக்கெடுப்பு முடிந்ததும் உங்களுக்கு ஒரு SE ID (சுய கணக்கெடுப்பு எண்) கிடைக்கும்.


🌹அதிகாரி வருகை:

 ஆகஸ்ட் மாதம் 

வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு (HLO) 01-08-2026 முதல் 30-08-2026 வரை

உங்கள் பகுதிக்கு நேரில் வரும் கணக்கெடுப்பு அதிகாரியிடம் இந்த SE ID-ஐ காண்பித்து தகவல்களைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

தமிழ்நாட்டில் புதிய கேந்திரிய வித்யாலயா (KV) பள்ளி துவக்கம். மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவு

 
தேனி மாவட்டம்


கேந்திரிய வித்யாலயாப் பள்ளி நடப்பாண்டிலிருந்து (2026-2027) செயல்பட உள்ளது-மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
826131



தேனி நகராட்சியில் கேந்திரிய வித்யாலயாப் பள்ளி (KV School) அமைக்க மத்திய அரசின் அனுமதி வழங்கப்பட்டதுடன், இப்பள்ளிக்கான முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

தேனி மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயாப் பள்ளி அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் அருகில் நிரந்தரமாகப் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதுவரை, தற்காலிகமாக தேனி-அல்லிநகரம் நகராட்சி தொடக்கப்பள்ளி கட்டிடத்தில் செயல்பட உள்ளது. நடப்பாண்டிலிருந்து (2026-2027) 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு பிரிவுடன் செயல்படத்தொடங்கும். பின்னர். தேவைக்கேற்ப மற்றும் உரிய நிர்வாக ஒப்புதலின் அடிப்படையில் படிப்படியாக விரிவுப்படுத்தப்படும்.

மேலும், நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை 30 நாட்களுக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி.


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க