திருப்பூர் Sainik School Recruitment 2026 | 17 Posts | 10th Pass Job | Apply Offline!

          

10th Pass இருந்தாலே போதும்! திருப்பூர் Sainik School வேலைவாய்ப்பு 2026 – Apply பண்ணுங்க!

திருப்பூர் மாவட்டம் அமராவதி நகரில் செயல்பட்டு வரும் Sainik School-ல் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 17 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இது ஒரு நல்ல வேலை வாய்ப்பு

Quick Info – முக்கிய தகவல்கள்

  • நிறுவனம்: Sainik School, Amaravathinagar
  • பணியிடம்: Tiruppur, Tamil Nadu
  • மொத்த காலியிடங்கள்: 17
  • விண்ணப்ப முறை: Offline (Post)
  • கடைசி தேதி: 📅 31.03.2026
  • தேர்வு முறை: Written + Skill + Interview

     காலியிட விவரம் (Vacancy Details)

    👉 General Employee (MTS)

    • பணியிடங்கள்: 13
    • கல்வி: 10ம் வகுப்பு
    • சம்பளம்: ₹18,000 – ₹56,900

    👉 PEM / PTI cum Matron (Female)

    • பணியிடங்கள்: 1
    • கல்வி: 12ம் வகுப்பு
    • சம்பளம்: ₹25,000 (Consolidated)

    👉 Ward Boys

    • பணியிடங்கள்: 3
    • கல்வி: 10ம் வகுப்பு
    • சம்பளம்: ₹22,000 – ₹25,000

      கல்வித்தகுதி (Eligibility)

      ✔ 10ம் வகுப்பு (MTS, Ward Boys)
      ✔ 12ம் வகுப்பு (PTI cum Matron)

       வயது வரம்பு

      • 21 முதல் 50 வயது வரை (01.05.2026 அடிப்படையில்)

      👉 Age Relaxation:

      • OBC – 3 வருடம்
      • SC/ST – 5 வருடம்

      💰 💵 விண்ணப்ப கட்டணம்

      • General / OBC – ₹500
      • SC / ST – ₹200

      🧪 📌 தேர்வு முறை (Selection Process)

      Written Exam
      ✔ Skill Test
      ✔ Interview


      📝 📌 எப்படி விண்ணப்பிப்பது? (How to Apply)

      1. 👉 Official website-ல் இருந்து Application Form download செய்யவும்
      2. 👉 Print எடுத்துக் கொள்ளவும்
      3. 👉 Form-ஐ முழுமையாக நிரப்பவும்
      4. 👉 தேவையான documents attach செய்யவும்
      5. 👉 கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பவும்

      📍 முகவரி:
      Principal,
      Sainik School, Amaravathinagar,
      Pin – 642102,
      Udumalpet Taluk, Tiruppur District, Tamil Nadu


      Link DescriptionLink
      Official Notification PDFClick here
      Official WebsiteClick here





இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

Anna University Coimbatore Recruitment 2026 , Project Assistant Jobs | ₹25,000 Salary!

  Anna University Coimbatore-ல் வேலை வாய்ப்பு! Project Assistant Recruitment 2026 – Apply பண்ணுங்க!

Anna University, Coimbatore campus-ல் Project Assistant பதவிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 காலியிடங்கள் மட்டுமே இருப்பதால் தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்க வேண்டும்.

 Quick Info – முக்கிய தகவல்கள்

  • நிறுவனம்: Anna University, Coimbatore
  • பதவி: Project Assistant
  • மொத்த காலியிடங்கள்: 3
  • சம்பளம்: ₹25,000 / மாதம்
  • பணியிடம்: Coimbatore, Tamil Nadu
  • விண்ணப்ப முறை: Offline (Post)
  • Apply Start Date: 18.03.2026
  • Last Date: 📅 30.03.2026

📌 📋 காலியிட விவரம் (Vacancy Details)

  • Project Assistant – 3 Posts

👉 ஒவ்வொரு post-க்கும் தனித்தனி qualification உள்ளது.

🌐 Official Website: https://www.annauniv.edu

APPLICATION FORM: CLICK HERE

OFFICIAL NOTIFICATION: CLICK HERE

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

SSLC பொதுத் தேர்வு - சொல்வதை எழுதுபவராக 6-8 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களையே நியமனம் செய்ய வேண்டும் -DGE

 SSLC பொதுத் தேர்வு - சொல்வதை எழுதுபவராக 6-8 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களையே நியமனம் செய்ய வேண்டும் - சம்பந்தப்பட்ட பாடத்தை போதிப்பவராக இல்லாமல் அப்பாடத்தைப் பற்றி அறிந்தவராக இருக்க வேண்டும் - அ.தே.இ!

408951




இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பள்ளி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான ஸ்மார்ட் மொபைல் செயலி!

  Census Mate:


பள்ளி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான ஸ்மார்ட் மொபைல் செயலி!


அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். 


ஆண்டுதோறும் நாம் மேற்கொள்ளும் குடியிருப்பு வாரியான கணக்கெடுப்பு மற்றும் 5+ பதிவேடு தயாரிக்கும் பணியை எளிமையாக்க, "Census Mate" செயலி இப்போது புதிய வசதிகளுடன் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது.

இந்தச் செயலியின் சிறப்பம்சங்கள்:


 *டிஜிட்டல் கணக்கெடுப்பு:* 

கையில் பேப்பர், பேனா இன்றி மொபைலிலேயே முழு கணக்கெடுப்பையும் விரைவாக முடித்துவிடலாம்.


 *எளிமையான உள்ளீடு:* 

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்க மிக எளிமையான தரவு உள்ளீடு (Data Entry) வசதி.


 *தானியங்கி கணக்கீடுகள்:* 

மக்கள் தொகை சுருக்கம் மற்றும் இதர கணக்கீடுகள் அனைத்தும் தானாகவே துல்லியமாக நடைபெறும்.


 *விரிவான அறிக்கைகள்:* 


குடியிருப்பு வாரியான சுருக்கம் (Habitation-wise) மற்றும் EER (Education Enrolment Register) விவரங்களை ஒரு சொடுக்கில் பெறலாம்.


 *ஒருங்கிணைந்த PDF:* 

மக்கள் தொகை பட்டியல் மற்றும் அறிக்கைகள் அனைத்தையும் ஒரே கோப்பாக (Integrated PDF) பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.


 *அடுத்த ஆண்டுக்கான வசதி:* 

தகவல்களைத் தானாகவே அடுத்த ஆண்டிற்கு மேம்படுத்திக் கொள்ளும் (Auto-increment) வசதி இருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் புதிதாகத் தரவுகளை உள்ளிடத் தேவையில்லை.


இனி உங்கள் கணக்கெடுப்புப் பணியை டென்ஷன் இன்றி ஸ்மார்ட்டாக மாற்றிடுங்கள்!


இப்போதே *தரவிறக்கம் செய்ய:* 

https://play.google.com/store/apps/details?id=com.chalkpiecediary.censusmate


கணினியிலும் இப்பணியைச் செய்ய வின்டோஸ் செயலியும், தயாரிக்கப்பட்டு மைக்ரோசாப்ட் ஸ்​டோரில், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.. இணைப்பு ஓரிரு நாள்களில் பகிரப்படும்..


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ஏப்.23ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை

 சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ஏப்.23ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை.


தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 23ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவு.


கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய இடங்களில் வரும் ஏப்ரல் 9ம் தேதியும், மேற்குவங்கத்தில் ஏப். 23, 29 தேதிகளிலும் விடுமுறை வழங்க உத்தரவு.


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடு

 


 

தமிழக பள்ளிக் கல்வியில் தொடா் நீட்டிப்பு பெற்று வந்த ஆசிரியா், ஆசிரியரல்லாத 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வியில் தொடா் நீட்டிப்பு பெற்று வந்த ஆசிரியா், ஆசிரியரல்லாத 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


நுழைவுத் தேர்வுத்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:


பள்ளிக் கல்வித் துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகமாக உள்ள பணியிடங்கள் தொடருவதன் அவசியம் குறித்து ஆராய துறையின் செயலா் தலைமையில் குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டது.

இதையடுத்து இந்தக் குழுவின் கூட்டம் கடந்த ஆண்டு ஆக.26-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து, இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் அரசுக்கு கடிதம் அனுப்பினாா். அதில், பள்ளிக் கல்வியில் இணை இயக்குநா் பணியிடம் (நாட்டு நலப் பணித் திட்டம்)-1, முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கான நோ்முக உதவியாளா்கள்-31, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள்-219, உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள்-107, முதுநிலை ஆசிரியா்கள்- 6,451, உடற்கல்வி இயக்குநா் (நிலை-1)- 26, பட்டதாரி ஆசிரியா்கள்- 664 என ஆசிரியா் மற்றும் ஆசிரியரல்லாத 7,499 தற்காலிக பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாகத் தொடரலாம்.

அதேபோன்று, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநா் பணியிடம்-1, அலுவலக உதவியாளா்கள்-119, கண்காணிப்பாளா்கள்-35 ஆகியவை உள்பட ஆசிரியரல்லாத 351 தற்காலிக பணியிடங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்கலாம். மேலும் தொழிற்கல்வி ஆசிரியா் மற்றும் ஆசிரியரல்லாத 560 பணியிடங்களை குழுவால் ஒழிவடையும் பணியிடங்களாக (வேனிஸிங் போஸ்ட்) அறிவிக்கப்பட்டு, இப்பணியிடங்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்கலாம் மற்றும் பணிபுரிபவா்கள் ஓய்வு பெறும் போது சரண் செய்யலாம். இவற்றுக்கான ஒருங்கிணைந்த அரசாணை வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து 7,499 தற்காலிக பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாகவும், 351 பணியிடங்களுக்கு கடைசியாக தொடா் ஆணை வழங்கப்பட்டு, இந்த ஆணை முடிவடையும் நாளுக்கு அடுத்த நாள் முதல் பத்தாண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்கியும், 560 பணியிடங்களை ஒழிவடையும் பணியிடங்களாக அறிவித்து, அவற்றுக்கு 10 ஆண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்கியும், பணிபுரிபவா்கள் ஓய்வு பெறும்போது இந்த பணியிடங்களை சரண் செய்ய அனுமதி வழங்கலாம் எனவும் முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பொதுத் தேர்வு விடைத்தாள் நகலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பக்கத்திற்கு ₹2 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் - தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு.

         தகவல் பெறும் உரிமைச் சட்டம் 

விடைத்தாள் நகல்

உச்ச நீதிமன்றம் , உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் படி திருத்தப்பட்ட தாள் தகவல் ஆகும்.


பொதுத் தேர்வு விடைத்தாள் நகலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பக்கத்திற்கு ₹2 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் - தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு.

Google drive மூலம் உத்தரவு நகலை open செய்யலாம் 👇👇👇

https://drive.google.com/file/d/1B_twDk9q3aFLABxh3njlAPtAdGW0n5ta/view?usp=drivesdk




இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி படிப்பு தொடங்க அனுமதி

         

கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்​து​வ​மனை​யில், எம்.ஏ. கிளினிக்​கல் சைக்​காலஜி என்ற புதிய படிப்பை வரும் கல்வி ஆண்​டில் தொடங்க, தமிழக அரசு அனு​மதி வழங்​கி​யுள்​ளது.

இது தொடர்​பாக, சுகா​தா​ரத்​துறை செயலர் பி.செந்​தில்​கு​மார் வெளி​யிட்​டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்​து​வ​மனை​யில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் எம்.ஃபில். கிளினிக்​கல் சைக்​காலஜி என்ற படிப்பு நடத்​தப்​பட்டு வரு​கிறது.

இந்த படிப்​புக்கு பதிலாக எம்.ஏ. கிளினிக்​கல் சைக்​காலஜி என்ற பெயரில் புதிய படிப்பை வழங்​கு​மாறு இந்​திய மறு​வாழ்​வுக் கவுன்​சில், கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்​து​வ​மனையை அறி​வுறுத்​தி​யது.

ஆண்டுக்கு 18 மாணவர்கள்

அதன் பேரில், வரும் கல்வி ஆண்டு (2026-2027) எம்.ஏ. கிளினிக்​கல் சைக்​காலஜி படிப்பை தொடங்​கும் வகை​யில், மருத்​துவ கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் மூல​மாக, கீழ்ப்பாக்கம் மனநல மருத்​து​வ​மனை இயக்​குநரின் கருத்​துரு அரசுக்கு வரப்​பெற்​றது.

அக்​கருத்​துருவை ஏற்று கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்​து​வ​மனை​யில் 2026-27-ம் கல்வி ஆண்​டில் எம்.ஏ. கினிக்​கல் சைக்​காலஜி படிப்பை தொடங்​க​வும், ஆண்​டு​தோறும் 18 மாணவர்​களை சேர்த்​துக் கொள்​ள​வும் அனு​மதி அளித்து அரசு ஆணை​யிடு​கிறது.

இப்​பு​திய படிப்​புக்கு இந்​திய மறு​வாழ்​வுக் கவுன்​சில் மற்​றும் தமிழ்​நாடு டாக்​டர் எம்​ஜிஆர் மருத்​துவ பல்​கலைக் கழகத்​திடம் உரிய அனு​மதி பெறப்பட வேண்​டும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.




இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க