புதிய வரைவு பாடத்திட்டம் டிசம்பரில் தயாராகும்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

 மாநில கல்விக் கொள்கை அடிப்​படையி​லான புதிய வரைவு பாடத்திட்​டம் டிசம்​பரில் தயா​ராகும் என பள்​ளிக்​கல்​வி அமைச்​சர் அன்​பில் மகேஸ் தெரி​வித்​தார்.


தமிழ்​நாடு மாநிலக் கல்விக் கொள்​கை 2025-ன்​படி, தற்​போதைய பாடத்​திட்​டங்​களை மாற்​றியமைத்து புதிய பாடத்​திட்​டங்​களை உரு​வாக்க, அமைச்சர் அன்​பில் மகேஸ் தலை​மை​யில் உயர்​நிலைக் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதில் இஸ்ரோ தலை​வர் வி.​நா​ராயணன் உட்பட 13 பேர் உள்​ளனர்.


அதே​போல, பள்​ளிக்கல்விக்கு புதிய கலைத்​திட்​டத்தை வடிவ​மைக்க சுற்​றுச்​சூழல் விஞ்​ஞானி சுல்​தான் அகமது இஸ்​மா​யில் தலை​மை​யில் பாடத்​திட்ட வடிவ​மைப்​புக் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதில், பஞ்​சாப் மொஹாலி இந்​திய அறி​வியல் கல்​வி, ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் விஞ்​ஞானி த.வி.வெங்​கடேஸ்​வரன், வரலாறு மற்​றும் தொல்​லியல் வல்​லுநர் கா.​ராஜன் உட்பட 14 பேர் உள்​ளனர்


இந்நிலையில், உயர்நிலைக் குழு, கலைத்திட்ட வடிவமைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் தலைமை வகித்தார். உயர்நிலைக் குழு துணைத் தலைவரான பள்ளிக்கல்வித்துறை செயலர் பி.சந்திரமோகன் மற்றும் நிதித் துறை செயலர் உதயச்சந்திரன், கலைத்திட்ட வடிவமைப்புக் குழு தலைவர் சுல்தான் அகமது இஸ்மாயில், இஸ்ரோ தலைவர் நாராயணன், மாநில திட்டக்குழு உறுப்பினரும், மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் - செயலருமான இரா.சுதன், பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ், மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குநர் லதா மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.



விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், இந்திய கணித அறிவியல் நிறுவன முன்னாள் பேராசிரியர் இரா.ராமானுஜம், அமெரிக்க கலிபோர்னியா பல்கலைக்கழக மூலக்கூறு வரைகலை, கணக்கீட்டு வளமைய இயக்குநர் விஞ்ஞானி ஏ.இரா.அழகியசிங்கம், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இணைய வழி யாக பங்கேற்றனர்..


கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது: மாணவர்களுக்கு தியரியைவிட செய்முறை பாடம் அதிகம் இருக்க வேண்டும் என்பதே பலரது விருப்பமாக உள்ளது. மாணவர்கள் வெறுமனே பாடங்களை மனப்பாடம் செய்யாமல், நன்கு புரிந்து படித்திருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் மதிப்பீடு அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.



புதிய பாடத்திட்டத்தை ஒன்றாக செயல்படுத்தாமல், முதலில் 1, 2, 3-ம் வகுப்புகள், அடுத்து 4 முதல் 10, பின்னர் பிளஸ் 1, பிளஸ் 2 என படிப்படியாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகால வளர்ச்சி, ஏஐ உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிகளை எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும். இதற்கான வரைவு பாடத்திட்டம் டிசம்பரில் தயாராகும். இவ்வாறு கூறினார்.



இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறும்போது, “புதிய பாடத்திட்டத்தை உருவாக்க தமிழக அரசு எடுத்துள்ள முயற்சி பாராட்டுக்குரியது. மாணவர்கள் படிப்பில் மட்டுன்றி கலை, விளையாட்டு, வாழ்வியல் திறன், தகவல் தொடர்புத் திறன், விருந்தோம்பல், சகிப்புத்தன்மை என அனைத்திலும் சிறந்து விளங்கும் கல்வி வேண்டும்” என்றார்.

12th Maths - 2019 To 2025 - All Public Creative Question Answer ( Updated Upto June 2025 )

 Yellow%20Learning%20Materials%20For%20Kids%20Facebook%20Cover%20Photo_20250217_200944_0000

12th Maths - 2019 To 2025 - All Public Creative Question Answer ( Updated Upto June 2025 ) - Mr S.Puratchivendhan - Download here

TNTET Paper 1 & 2-2025 Book Proof & Doubted Questions

 IMG_20251127_083016

TNTET Paper 1 & 2-2025 Book Proof & Doubted Questions - Download here

Paper II 
Question 39 - Download here
Question 77 - Download here

ஆசிரியர் நண்பர்களே, வணக்கம்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள PDF-கள், தற்போது TRB வெளியிட்டுள்ள பேப்பர்–2 ஆசிரியர் தகுதி தேர்வு Objection Tracker-க்கு பயன்படுத்துவதற்காக சிறப்பாக தயாரிக்கப்பட்டவை.

இந்த PDF-களை அனைத்து ஆசிரியர் குழுக்களிலும் பகிர வேண்டுகிறேன்.
தற்போது 79, 80, 81 மதிப்பெண்கள் பெற்றுள்ளவர்கள், இந்த Objection Tracker மூலம் 82, 83 மதிப்பெண்களுக்கு உயர வாய்ப்பு உள்ளது.

அவர்களுக்கு இது ஒரு முக்கியமான உதவியாக இருக்கும்.
நாம் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு, அனைவரின் முன்னேற்றத்திற்கும் துணை நிற்போம்.

நன்றி.

TNTET 2025 - தேர்வு முடிவு​கள் விரை​வில் வெளி​யீடு?

 தமிழகத்​தில் 4.24 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட ஆசிரியர்​கள் எழு​தி​யுள்ள 'டெட்' தேர்​வுக்​கான ‘கீ ஆன்​ஸர்’ டிஆர்பி இணை​யதளத்தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதைத்​தொடர்ந்​து, தேர்வு முடிவு​கள் விரை​வில் வெளி​யிடப்​படலாம் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.


மத்​திய அரசின் இலவச கட்​டாய கல்வி உரிமைச் சட்​டத்​தி்ன்​படி பள்​ளி​களில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணி​யாற்​றும் இடைநிலை ஆசிரியர்​களும் பட்​ட​தாரி ஆசிரியர்​களும் டெட் எனப்​படும் ஆசிரியர் தகு​தித்​தேர்​வில் கட்​டா​யம் தேர்ச்சி பெற வேண்​டும். இதைத்தொடர்நது டெட் தேர்வு கடந்த நவ.15 மற்​றும் 16-ம் தேதி நடந்தது.


இந்​நிலை​யில் இந்தத் தேர்​வுக்கான உத்​தேச விடைகளை (கீ ஆன்ஸர்) ஆசிரியர் தேர்வு வாரி​யம் இணை​யதளத்​தில் வெளி​யிட்​டுள்​ளது. இதுதொடர்​பாக வாரி​ய தலை​வர் ஜெயந்தி வெளி​யிட்​ட செய்​திக்​குறிப்​பு:


டெட் தேர்​வு​களுக்​கான உத்​தேச விடைக்​குறிப்​பு​கள் வினாக்​களு​டன் https://trb1.ucanapply.com என்ற இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. இவை மீது ஆட்​சேபணை​கள் தெரிவிக்க விரும்​புவோர் டிச.3 மாலை 5.30 மணிக்​குள் ஆன்​லைனில் பதிவுசெய்ய வேண்​டும். அங்​கீகரிக்​கப்​பட்ட பாடப்​புத்​தகங்​கள் (standard Text Books) ஆதா​ரங்​கள் மட்​டுமே சான்று ஆவண​மாக ஏற்​றுக்​கொள்​ளப்​படும். கைடு​கள் ஏற்​கப்​ப​டாது. மேலும், பாட​வல்​லுநர்​கள் முடிவே இறு​தி​யானது. இவ்​வாறு கூறி​யுள்ளார்.


டெட் தேர்​வுக்​கான உத்​தேச விடைகள் வெளி​யிடப்​பட்​டிருப்​ப​தால் விரை​வில் தேர்வு முடிவு​களும் வெளி​யிடப்​படலாம் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதற்​கிடையே, டெட் தேர்​வுக்​கான தேர்ச்சி மதிப்​பெண் ஒடிசா உள்​ளிட்ட இதர மாநிலங்​களில் இருப்​ப​தைப் போல் 50 சதவீத​மாக குறைக்க வேண்​டும் என கோரிக்கை எழுந்​துள்​ளது.


இதுதொடர்பாக பல்வேறு ஆசிரியர் சங்​கங்களும் அமைச்சர் அன்​பில் மகேஸிடம் வலி​யுறுத்​தியுள்ளன. இதை ஏற்று தேர்ச்சி மதிப்​பெண் குறைக்​கும்பட்​சத்​தில் முதலில் அது தொடர்​பான அரசாணை வெளி​யிடப்​படும். அதைத்​தொடர்ந்து தேர்வு முடிவு​கள் வெளி​யாகும்.


ஆந்​தி​ரா, தெலங்​கானா மாநிலங்​களில் டெட் தேர்ச்சி மதிப்​பெண் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினருக்கு 50 சதவீத​மாக​வும், எஸ்​சி, எஸ்டி பிரி​வினருக்கு 40 சதவீத​மாக​வும் உள்​ளது. ஹரி​யா​னா​விலும் ஒடி​சாவிலும் அனைத்து பிரி​வினருக்​கும் 50 சதவீதமாக உள்ளது.


தமிழகத்​தில் பொது பிரிவுக்கு 60, பிசி, எம்​பிசி, எஸ்சி வகுப்பினருக்கு 55, எஸ்டி (இந்த ஆண்டு மட்​டும்) 40 சதவீதம் என நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

அரசுப் பள்ளிகளில் ‘காக்கா முட்டை’ திரைப்படம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘காக்கா முட்டை’ திரைப்படத்தை ஒளிபரப்ப உத்தர விடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட் டுள்ள சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.

அதன்படி நடப்பு மாதம் ‘காக்கா முட்டை’ எனும் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. 2014-ம் ஆண்டு இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம், சென்னையில் குடிசைவாழ் பகுதியில் வசிக்கும் 2 சிறுவர்கள் பற்றிய கதையாகும்.

இந்த படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான இணைப்பு லிங்க் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்குரிய பாடவேளைகளில் படத்தை திரையிட வேண்டும். இந்தப் பணிகளை கண்காணித்து ஒருங்கிணைக்க பள்ளிகளில் பொறுப்பாசிரியர்களை நியமிக்க வேண்டும்.

படம் திரையிடும் முன்பு அந்த படத்தை பொறுப்பு ஆசிரியர் பார்க்க வேண்டும். அதன்பின் கதைச் சுருக்கத்தையும், படத்தின் அடிப்படை பின்னணியையும் மாணவர்களுக்கு விளக்க வேண்டும்.

மாநில அளவில் நடைபெறும் சிறார் திரைப்பட விழாவில் சிறந்து விளங்கும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். இதற்கான அறிவுறுத்தல்களை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

TRUST EXAM - முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள் வெளியீடு!

 IMG_20251126_173754


TRUST EXAM - முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள் வெளியீடு!

Revised TRUST 2025 Instructions-.pdf

👇👇👇👇

Download here

Gratuity Rules 2025: விதிகளில் மாற்றம், இனி எவ்வளவு கிராஜுவிட்டி கிடைக்கும்? கணக்கீடு இதோ

 Gratuity Rules 2025: பணியில் இருக்கும் அனைவருக்கும் மாத சம்பளம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு ஓய்வூதியம், கிராஜுவிட்டி போன்றவையும் முக்கியமாகும். பணியில் இருக்கும்போது பொதுவாக இதன் முக்கியத்துவம் புரிவதில்லை. பணியில் இருந்து ஓய்வுபெறும்போதுதான் இதன் அவசியமும், முக்கியத்துவமும் நமக்கு விளங்குகிறது. 


Gratuity Rules: பணிக்கொடை விதிகளில் மாற்றம்

இந்தியாவில் பணிக்கொடை விதிமுறைகள் 2025 இல் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு பெரிதும் பயனளிக்கும். இவற்றை பற்றி இந்த பதிவில் விளக்கமாக காணலாம்.


நவம்பர் 21, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்தப் புதிய விதிகளின் காரணமாக பணிக்கொடை இப்போது முன் எப்போதையும் விட நேரடியானதாக, விரைவானதாக, எளிதானதாக மேம்பட்டுள்ளது. ஒழுங்கமைக்கப்பட தொழில்கள், கிக் தொழிலாளர்கள், ஃபிக்ஸ்ட் டர்ம் தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என அனைவரது நிதி நிலையிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும்.


பணிக்கொடை என்றால் என்ன?

பணிக்கொடை என்பது ஊழியரின் நீண்டகால வேலை மற்றும் விசுவாசத்திற்காக அவரது நிறுவனம் நன்றி தெரிவிக்கும் வகையில் அவருக்கு கொடுக்கும் ஒரு தொகையாகும். ஒரு ஊழியர் ஓய்வு பெறும்போது, ​​ராஜினாமா செய்யும்போது அல்லது தனது சேவைக் காலத்தை முடிக்கும்போது இந்த மொத்தத் தொகை அவருக்கு அளிக்கப்படுகின்றது. புதிய தொழிலாளர் குறியீடுகள் அமலுக்கு வந்தது முதல், பணிக்கொடை இப்போது சமூகப் பாதுகாப்புக் குறியீட்டின் கீழ் வருகிறது. இது முழு செயல்முறையையும் எளிதாக்கியுள்ளது. ஊழியர் வேலை மாறும்போது அல்லது ஓய்வு பெறும்போது அவருக்கு நிதி பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்வதே இதன் குறிக்கோளாகும்.


முன்னர், பணிக்கொடையை பெற குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியான சேவை தேவைப்பட்டது. 2025 விதிகள் இந்த அம்சத்தை முற்றிலுமாக மாற்றியுள்ளன. ஃபிக்ஸ்ட் டர்ம் ஊழியர்கள் இப்போது ஒரு வருட சேவைக்குப் பிறகு பணிக்கொடைக்கு தகுதியுடையவர்களாகிறார்கள். இது ஒப்பந்த தொழிலாளர்கள், கிக் தொழிலாளர்கள், ஸ்டார்ட் அப் ஊழியர்கள் போன்றவர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.


Gratuity Calculation: பணிக்கொடை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?


பணிக்கொடையை கணக்கிடுவதற்கான சூத்திரம் அப்படியே உள்ளது. 



பணிக்கொடை கணக்கீட்டு சூத்திரம் = (அடிப்படை + டிஏ) × (15/26) × மொத்த சேவை ஆண்டுகள். 



இங்கே, 15/26 என்பது வருடத்திற்கு 15 நாட்கள் சம்பளத்தைக் குறிக்கிறது, ஏனெனில் ஒரு மாதம் 26 வேலை நாட்களைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.


ரூ.25000 சம்பளத்தில் கிராஜுவிட்டி எவ்வளவு கிடைக்கும்?


ஓரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.25,000 என்றால், அவருக்கு எவ்வளவு கிராஜுவிட்டி கிடைக்கும்?




பணிக்கொடை சூத்திரம் எளிமையானது: (அடிப்படை + DA) × (15/26). இதன் பொருள், ஒரு மாதத்திற்கு 26 வேலை நாட்கள் இருப்பதாகக் கருதி, ஒவ்வொரு முழு வருட சேவைக்கும் நிறுவனம் ஊழியருக்கு 15 நாட்கள் சம்பளத்தை வழங்குகிறது. இந்த சூத்திரத்தைப் பயன்படுத்தி, ரூ.25,000 சம்பளம் வாங்கும் நபரின் பணிக்கொடையை கணக்கிட்டால், அது 



(25000) × (15/26) = ரூ.14,423.



5 ஆண்டுகளுக்கு கிராஜுவிட்டியைக் கணக்கிடுவது எளிது. ரூ.25,000 அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் 1 வருட கிராஜுவிட்டி தோராயமாக ரூ.14,423 ஆகும். 5 ஆண்டுகளுக்கு, இதை 5 ஆல் பெருக்கவும். கிராஜுவிட்டி தொகை தோராயமாக ரூ.72,115 ஆக இருக்கும். 7, 10 அல்லது 12 வருட சேவைக்கும் இதே முறை பொருந்தும்.



இந்தக் கணக்கீட்டில் சில காரணிகள் ஊழியர்களுக்கு சாதகமாக உள்ளன. உதாரணமாக, ஊழியர் ஒரு வருடத்தில் ஆறு மாதங்களுக்கு மேல் வேலை செய்தால், அது ஒரு முழு ஆண்டாகக் கணக்கிடப்படும். இருப்பினும், ஒருவர் ஆறு மாதங்களுக்கும் குறைவாக வேலை செய்தால், அது ஒரு வருடமாகக் கணக்கிடப்படாது. குறுகிய கால வேலைகளுக்கும் ஊழியர்கள் ஒரு விகிதாசார கிராஜுவிட்டியைப் பெறுவார்கள். அதாவது ஒரு ஊழியர் திட்டமிட்டதை விட முன்னதாகவே ஒரு வேலையை விட்டு வெளியேறினாலும், அவர் கிராஜுவிட்டி சலுகைகளை இழக்க மாட்டார்.

வரிச் சலுகைகளும் முன்பை விட சிறப்பாக உள்ளன. தனியார் துறை ஊழியர்களுக்கு, ரூ.20 லட்சம் வரையிலான கிராஜுவிட்டிக்கு இப்போது முற்றிலும் வரி விலக்கு கிடைக்கும். மத்திய அரசு ஊழியர்களுக்கு, இந்த வரம்பு ரூ.25 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய காலக்கெடு மற்றும் வரிச் சலுகைகள்


புதிய கிராஜுவிட்டி செலுத்தும் விதி ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க நிவாரணமாக வந்துள்ளது. ஏனெனில் நிறுவனங்கள் இப்போது கிராஜுவிட்டி தொகையை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும். முன்பு, தாமதங்கள் பெரும்பாலும் மாதங்கள் வரை நீடித்தன. ஆனால் இப்போது, தாமதமானால், நிறுவனங்கள் 10% வருடாந்திர வட்டியை செலுத்த வேண்டியிருக்கும். அதாவது பணிக்கொடை கிடைக்க தாமதம் ஏற்பட்டால், அது ஊழியர்களுக்கு அதிக வரருவாயை அளிக்கும்.





TNTET 2025 - உத்தேச விடைக் குறிப்பு TRB வெளியீடு - Key Answer Direct Link

 IMG_20251125_214851_wm


ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண் .03 / 2025 , நாள் 11.08.2025 . ன்படி 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - 115.11.2025 அன்றும் தாள் II 16.11.2025 அன்றும் நடைபெற்றது. 

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I -ல் 92412 தேர்வர்கள் தேர்வெழுதினர் . தாள் II -ல் 331923 தேர்வர்கள் தேர்வு எழுதினர் . தாள் I மற்றும் தாள் II -ற்கான உத்தேச விடைக்குறிப்பு மற்றும் விடைக்குறிப்புகள் மீதான ஆட்சேபணைகள் தெரிவிக்க Objection Tracker URL 
https://trb1.ucanapply.com ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. 

உத்தேச விடைக்குறிப்புகளின் மீது ஆட்சேபணைகள் தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் 25.11.2025 முதல் 03.12.2025 பிற்பகல் 5.30 மணி வரை உரிய ஆட்சேபணையினை பதிவு செய்திடல் வேண்டும்.

 ஆட்சேபணைகள் தெரிவிக்கப்படும் விடைக்குறிப்புகளுக்கான சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஏற்கப்படமாட்டாது . தபால் அல்லது பிறவழி முறையீடுகள் அவை நிராகரிக்கப்பட்டதாகக் கருதப்படும் . அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் ( Standard Text Books ) ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும் . கையேடுகள் ( Guides , Notes ) ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது . மேலும் , பாட வல்லுநர்களின் முடிவே இறுதியானது எனவும் அறிவிக்கப்படுகின்றது.

TNTET 2025 - உத்தேச விடைக் குறிப்பு TRB வெளியீடு - Key Answer Direct Link

Download here

TNTET 2025 - Paper I & II - TRB Official Key Answer Published

 IMG_20251125_224838


TNTET 2025 - Paper I & II - TRB Official Key Answer 

TNTET 2025 - Paper I - TRB Official Key Answer 

 👉Question With Answer Key - Download here

TNTET 2025 - Paper II - TRB Official Key Answer 

 👉Maths & Science - Question With Answer Key -  Download here

👉Social - Question With Answer Key -   Download here

பத்தாம் வகுப்பு தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்த இயலாத பள்ளிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள நடைமுறையினைப் பின்பற்றி கட்டணத்தினைக் கருவூலத்தில் செலுத்தலாம்!!!

 IMG_20251125_132721

பத்தாம் வகுப்பு தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்த இயலாத பள்ளிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள நடைமுறையினைப் பின்பற்றி கட்டணத்தினைக் கருவூலத்தில் செலுத்தலாம்!!!

👇👇👇👇

Fees Payment Precedure.pdf👇

Download here

பட்டியல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட பட்டியல்

 தமிழ்நாடு அரசு, அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்கான பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு நிதியுதவி வழங்குவது முதல் ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்துவது வரை பல திட்டங்களின் பட்டியலை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரங்களை இங்கே பார்க்கலாம்.


அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை


அரசின் திட்டங்கள் அனைத்தையும் சிறப்பாகச் செயல்படுத்தும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயத்துடன் வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகளின் உயர்கல்விச் செலவினத்திற்கான உதவித் தொகை ரூ.50,000/- ஆக உயர்த்தப்பட்டு, 2023-24 ஆம் ஆண்டில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதியான 28 மாணவ, மாணவியர்களுக்குக் கல்வி உதவித் தொகையாக ரூ.12,95,000/- வழங்கப்பட்டது.


ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை திட்டம்


ஆசிரியர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்வதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென, தலா ரூபாய் 1,50,000/- ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 38 மாவட்டத்திற்கும் ஆசிரியர் நல நிதியிலிருந்து ரூபாய் 57 இலட்சம் அனுமதித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.


ஆசிரியர்களுக்குக் கைக்கணினிகள்


79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.81 கோடி செலவில் கைக்கணினிகள் (Tablet) வழங்கப்பட்டுள்ளன.


2021-22 ஆம் ஆண்டில் 97 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு இணைய வழியாகத் தேர்வுகள் நடத்தப்பட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 2023-24 ஆம் ஆண்டில் 33 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 / கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பணியிடங்களுக்குக் கணினி வழியாக போட்டித்தேர்வு நடத்தப்பட்டு, 3,043 முதுகலை ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுப் பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது.



ஆசிரியர் தகுதித் தேர்வு


ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கான தேர்வுகள் இணையவழியில் 14.10.2022 முதல் 19.10.2022 வரை நடத்தப்பட்டு, 21543 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றனர்; தாள் 2-க்கான கணினி வழித் தேர்வுகள் 3.2.2023 முதல் 15.02.2023 வரை நடத்தப்பட்டு, அதில் 16090 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்களின் மறுபிரதி சான்றிதழ்கள் 17.7.2023 முதல் இணைய வழியில் இ-சேவை மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரி 2025 வரை 9113 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.




3192 பட்டதாரி ஆசிரியர் / வட்டார வள் மைய பயிற்றுநர் பணியிடங்களுக்கு பணிநாடுநர்களை தெரிவு செய்வதற்கான தேர்வு 4.2.2024 அன்று நடத்தப்பட்டு, தகுதியான பணிநாடுநர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 2,768 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்குப் பணிநாடுநர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்வு 21.7.2024 அன்று நடத்தப்பட்டுள்ளது. 2025 டிசம்பர் மாதத்திலும் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடைப்பெற்றுள்ளது.



கல்விச் சுற்றுலா


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளி அளவில் கல்வி மற்றும் இணைச் செயல்பாடுகளான மன்றச் செயல்பாடுகள், நூல் வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்கப்படுத்திட உலக அளவிலும், தேசிய / மாநில அளவில் புகழ்பெற்ற இடங்களுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல ஆண்டு தோறும் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்தார்கள்.




இத்திட்டத்தின் கீழ், மாணவர்கள் மலேசியா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், ஹாங்காங், ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 2024-25 ஆம் கல்வியாண்டில் கனவு ஆசிரியர் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 52 ஆசிரியர்கள் 23.10.2024 முதல் 28.10.2024 வரை பிரான்சு நாட்டிற்குச் சர்வதேசக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். 325 ஆசிரியர்கள் டேராடூனுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.




கணினி அறிவியல் பாட தனிக் கட்டணம் ரத்து




2022-23 ஆம் கல்வியாண்டு முதல் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாகப் பயிலும் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் தனிக் கட்டணம் ரூ.200/- இரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுதோறும் ஏறத்தாழ 3.5 இலட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர்.




தரமுயர்த்தப்பட்டுள்ள பள்ளிகள்


மாணவர்களின் நலனுக்காக 2023-24 ஆம் கல்வியாண்டில், 4 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 6 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டன. 4,989 இடைநிலை ஆசிரியர், 5,154 பட்டதாரி ஆசிரியர் மற்றும் 3,876 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 14,019 ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் நியமனம் செய்யப்பட்டனர்.



பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்



பள்ளிகளில் கட்டமைப்புகளை மேம்படுத்திட உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின்கீழ் 2022-23 மற்றும் 2023-24ஆம் கல்வியாண்டுகளில் 614 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.1087.76 கோடியும், 2,455 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.800 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2,455 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும், 391 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள் மற்றும் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், 2024-25 ஆம் கல்வியாண்டில் 440 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட ரூ.745.27 கோடியும், பராமரிப்புப் பணிகளுக்கென ரூ.200 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 526 ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.284 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.



வானவில் மன்றம்

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகியவற்றில் ஆர்வத்தையும் திறனையும் தூண்டும் வகையில் நடமாடும் அறிவியல் ஆய்வகத் திட்டம் (வானவில் மன்றம்) ரூ.11.69 கோடி செலவில் 33.50 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.



பேராசிரியர் அன்பழகன் விருது



கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி எனப் பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருது வழங்கும் திட்டம் 2023-24 ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

நவம்பர் 2025 மாத சிறார் திரைப்படம் `காக்கா முட்டை` திரையிடுதல் - DSE செயல்முறைகள்!

 IMG_20251125_173850


நவம்பர்  2025 மாத சிறார் திரைப்படம் `காக்கா முட்டை` திரையிடுதல் - DSE செயல்முறைகள்!

DSE - November Month 2025 Movie Screening Instructions - Download here

NILP - புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் - கற்போருக்கான தேர்வு நாள் அறிவிப்பு

 புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் - கற்போருக்கான தேர்வு நாள் - 14.12.2025 - ஞாயிறு

 புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-27 - 2025-26ஆம் ஆண்டு செயல்பாடுகள் -இரண்டாம் கட்டம் கற்போருக்கு 14.12.2025 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - சார்பு .  பள்ளிக் கல்வி பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் செயல்முறைகள் 

IMG-20251124-WA0019_wm

பள்ளிக் கல்வித் துறையில் எண்ணற்ற பல திட்டங்கள் நிறைவேற்றம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

 IMG_20251123_152848

பள்ளிக் கல்வித் துறையில் எண்ணற்ற பல திட்டங்கள் நிறைவேற்றம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

👇👇👇☝

Press Release - Download here

நிரப்பிக் கொடுத்த SIR படிவத்தின் நிலை என்ன? படிவம் வரவேயில்லையே, ஏன்? என்ன செய்யலாம்?

 நிரப்பிக் கொடுத்த SIR படிவத்தின் நிலை என்ன? படிவம் வரவேயில்லையே, ஏன்? என்ன செய்யலாம்?

_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_


நிரப்பிக் கொடுத்த SIR படிவம் online மூலம் தேர்தல் ஆணையத்திடம் சென்று சேர்ந்துவிட்டதா என்பதை நாமே உறுதி செய்து கொள்ளலாம். அதற்கு,


https://voters.eci.gov.in/login


என்ற தளத்தில் நாம் முன்னதாக Voter IDயுடன் இணைத்துக் கொடுத்த Mobile எண் மூலம்,


* Registered Mobile No.


* Captcha


* Request OTP


என்று வரிசையில் சென்றால், வரும் OTPயை அளித்து,


* Verify & Login


என்பதை அழுத்தவும். அதன்பின் வரும் திரையில், SERVICES என்ற தலைப்பின்கீழ் உள்ள,


* Fill Enumeration Form


என்பதை அழுத்தினால் தோன்றும் திரையில்,


* Select State -> Tamil Nadu


என்பதைத் தேர்வு செய்து,


* Enter EPIC Number in 2025


என்ற கட்டத்தில் தற்போது உள்ள Voter ID எண்ணைக் கொடுத்து,


* Search


பொத்தானை அழுத்தவும்.


நிற்க. இதுவரை நாம் பார்த்தது SIR படிவத்தை நேரில் பெற இயலாதவர்கள் Online நிரப்புவதற்கான வழிமுறை. இதில் சென்றுதான் நாம் எழுதி நிரப்பிக் கொடுத்த படிவம் Onlineல் ஏற்றப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்ய முடியும்.


நீங்கள் நிரப்பி வழங்கிய படிவத்தை BLO தனது EC App மூலம் தேர்தல் ஆணையத்திடம் Onlineல் சமர்ப்பித்து இருந்தால்

* Your form has already been submitted with Mobile No. . . . . . .

என்ற செய்தி நீல நிறத்தில் தோன்றும். ஒருவேளை தற்போதுவரை அவர் Onlineல் பதிவேற்றவில்லை எனில், நேரடியாக Onlineல் நிரப்புவதற்கான பக்கம் தோன்றும்.




தாங்கள் முன்னரே படிவத்தைப் பெற்று நிரப்பி BLOவிடம் அளித்துள்ளதால், அதில் மேற்கொண்டு எதுவும் செய்யாது Logout செய்து வெளியேறிவிட்டு, BLOவிடம் Onlineல் பதிவேற்ற நினைவூட்டுங்கள். அது போதும்.



இதுவரை SIR படிவமே தங்களுக்குக் கிடைக்கவில்லை எனில், அந்தப் பக்கத்தில் கேட்கப்படும் விபரங்களை நிரப்பி ஆதார் OTP மூலம் நீங்களே Submit செய்துவிடலாம். 



ஒருவேளை 2025 ஜனவரி சரிபார்ப்பில் குடியிருப்பு மாற்றம் உள்ளிட்டவற்றால் தங்களது பெயர் நீக்கப்பட்டிருந்தால் தற்போது SIR படிவம் வந்திருக்காது. மேலும், மேற்கூறிய இப்பக்கத்தில் Login செய்யவும் முடியாது. எனவே, 09.12.2025 வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. 09.12.25 - 08.01.26 காலகட்டத்தில் Form6 & தேர்தல் ஆணையம் கூறியுள்ள 11 ஆவணங்களில் ஒன்றுடன் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். (இது குறித்து பின்னர் பதிவிடுகிறேன்)


படிவத்த நேர்ல போயீலாம் வாங்க முடியாது; நான் Onlineலயே நிரப்பிக்கிறேனு' இருப்போர் 3 விடயங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

Voter IDயுடன் Mobile எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் Login செய்ய முடியும்.




2. Voter ID & ஆதார் இரண்டிலும் பெயர் எழுத்து & Space மாறாமல் ஒன்றாக இருக்க வேண்டும்.




3. ஆதாருடன் இணைக்கப்பட்ட Mobie எண் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.




'ஓ. . . இதுக்குப் பேருதான் அ-வா!?' என்பதைப் போல தலைக்குள் பல்பு எரிந்தால், BLOவைத் தேடிப்புடுச்சு படிவத்தை வாங்கி நிரப்பிக் கொடுத்திடுங்க. கண்டுக்காம கடந்து போயிடாதீங்க.




SIR வாக்குக்கு மட்டுமானதாகத் தோன்றவில்லை; வாழ்க்கைக்கானதாகத் தெரிகிறது. ஆதாரைவிட, நாளையிது அத்தியாவசியமாக மாற்றப்பட வாய்ப்புள்ளதால் அலட்சியம் வேண்டாம் மக்கா!


செல்வ.ரஞ்சித் குமார்