Education News (கல்விச் செய்திகள்)
Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளில் மூலம் இந்த கார்டுக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். சிறார் மாணவர்களுக்கு பெற்றோரின் ஒப்புதல் முக்கியம். மாணவர்கள் பெயர், வயது, பிறந்த தேதி, பாலினம் ஃபோட்டோ மற்றும் UDISE+ Unique Student Identifier (PEN) உள்ளிட்ட அடிப்படை விவரங்களை கொண்டு இந்த அபார் கார்டு சேவை தொடங்கப்படுகிறது. ஆதார் அடிப்படையில் சரிபார்ப்பு செய்யப்படும்.
டிஜிட்டலாக மாணவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதால், எந்தவித சிக்கலும் இல்லாமல் அதை பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல, இது ஒரு வாழ்நாள் அடையாள அட்டையாக இருப்பதால், மாணவர்கள் ஆரம்ப கல்வியை தொடங்குவது முதல் உயர் படிப்பு வரையில் இந்த ஒரே கார்டை பயன்படுத்தி கொள்ளலாம்.
சான்றிதழ்களை (Physical Certificates) எடுத்து செல்வதையும், இது குறைக்க இருக்கிறது. இது ஆதார் கார்டு ų (verification) செய்யப்பட்டு மாணவர்களுக்கு கொடுக்கப்படுவதால், இதில் எந்தவித சிக்கலும் இருக்காது. இது வரும் நாட்களில் அனைத்து மாநிலங்களிலும்ஆதார் அடிப்படையில் சரிபார்ப்பு செய்யப்படுவதால் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. பள்ளி ஆவணங்களில் இடம்பெற்றுள்ள மாணவர்கள் பெயர் ஆதாரில் இடம்பெறுள்ள பெயருடன் பொருந்தி போகாமல் உள்ளன. இதனால், ஆதாருடன் இணைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. மேலும், கிராமப்புறங்களில் 18.47% சதவிகித பள்ளிகள் மட்டுமே இணைய வசதியை கொண்டுள்ளன. மேலும், விளிம்பு நிலையில் உள்ள லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் போதிய ஆவணங்கள் இருப்பதில்லை. அத்தியாவசிய பொது சேவைகளுக்கு ஆதார் அடையாளத்தை கட்டாயமாக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆண்டிற்கு சுமார் 10 லட்சம் மாணவர்கள் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் கல்வியை விட்டு வெளியேறி வரும் நிலையில், அபார் காரட்டை கட்டாயமாக்கியிருப்பது மேலும் சில மாணவர்கள் மேல்நிலை கல்வியில் இருந்து விலக்கி வைப்பதாக முடியும் என்று கல்வியலாளர்கள் எச்சரிக்கின்றனர். மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த 12 நம்பர்களை வைத்து அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாறுவது, ஆவணங்களை சமர்ப்பிப்பது போன்றவற்றை செய்து கொள்ள முடிவதால், மாணவர்களும் இதற்கு மாறலாம்.
சிக்கல்கள்: அபார் (APAAR) அடையாளச் சான்று பெறுவது கட்டாயமில்லில் என்று மத்திய கல்வி அமைச்சகம் ஏற்கனவே விளக்கமளித்திருந்த நிலையில், அபார் திட்டத்தின் பலன் 100% சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று சிபிஎஸ்இ வாரியம் அனைத்து பள்ளிகளுக்கும் பலமுறை சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. அதன்தொடர்ச்சியாக, தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அபார் அடையாள கார்டை (APAAR IDENTITY CARD) கட்டாயதாக்கியுள்ளது.
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )



